புரிதல்?

387 views
Skip to first unread message

Siva Siva

unread,
Aug 27, 2010, 10:58:19 PM8/27/10
to santhavasantham
ஓர் ஐயம்.

இணையத்தில் பலரும் 'புரிதல்' என்ற ஒரு சொல்லை 'understanding' என்ற பொருளில் பிரயோகிப்பதைக் காண்கிறேன். இது சரியா?
இலக்கியங்களில் இப்பொருளில் என்ன சொல்லை ஆண்டிருக்கிறார்கள்?

உணர்தல், உணர்ச்சி, ,,, போன்ற சொல்லைப் பிரயோகிக்கவேண்டுமோ?

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

உணர்ச்சி uṇarcci - Consciousness, perception, understanding, knowledge, feeling; உணர்கை.

Hari Krishnan

unread,
Aug 27, 2010, 11:48:17 PM8/27/10
to santhav...@googlegroups.com


2010/8/28 Siva Siva <naya...@gmail.com>
I am not going to apologise for writing in English.  An answer to this valid question needs the use of both English and Tamil. 
 
The English verb takes a noun form, with the addition of -ing.  In other words, the verb in the present continuous can also be used as a noun.  This kind of usage is termed as Present Participle.  (I am not for the present going into the Gerund.)  People in Tamil Nadu (or may be all Tamils in general) have a peculiar habit of thinking in English and writing in Tamil.  This may be due to the fact of their education through English medium.  I now remember one  housekeeping assistant, applying for leave and being refused, arguing with the Asst. Executive Housekeeper, 'Mam mam mam....what is this mam....I am asking asking and you saying no no always, what is meaning mam' (என்னம்மா இது நான் லீவ் கேக்க கேக்க நீங்க மாட்டேன் மாட்டேன்னு சொன்னா என்ன அர்த்தம்).
 
If that Housekeeping boy thought in Tamil and spoke in English, our contemporary Tamil writers have a habit (as I said above) of thinking in English and writing in Tamil.  And that results in reinventing the wheel.  And when they reinvent, they rediscover it the wrong way.  புரிதல் is the direct translation of the word, present participle, understanding.  Because they are trying to express the word 'understanding' in Tamil, they are in trouble waters, not knowing how to express this kind of verb transformed noun in Tamil.  That is how abortions like புரிதல் take place.  In reality புரிதல் means செய்தல்.  தொழில்புரிதல், சாதனைபுரிதல் are a few examples. 
 
This expression, in its proper form in Tamil should read as புரிந்துகொள்ளல்.  என் புரிதலின்படி என்பதை, நான் புரிந்துகொண்டிருக்கும்படி என்றும், அந்தப் புரிதல் தவறானது என்பதை, அப்படிப் புரிந்துகொள்வது தவறானது என்றும் தேவைக்கேற்ப வடிவங்களை மாற்றி எழுதவேண்டும். 
 
விட்டுடுங்க.  நாமல்லாம் பழம்பஞ்சாங்கம்.  கெழம்.  வயசாயிடுச்சு.  புரிதல் தமிழ்தான் இளமை ததும்பும் இதழைச் சுவைக்கத் துடிப்பவர்கள் (இதழ்னா மேகஸீன்னு புரிந்துகொள்ளுங்க தேவரே!  உதடுகள்னு புரிந்துகொள்ளாதீங்க)  நாடுவது.  புரிதல் என்று எழுதுபவர்கள் மார்க்கண்டேயர்கள்.  புரிந்துகொள்ளல் என்று எழுதினால் வயசாயிடுச்சுன்னு அர்த்தம்.  இன்னா, புர்தா?
 
--
அன்புடன்,
ஹரிகி.

Kaviyogi Vedham

unread,
Aug 28, 2010, 1:07:34 AM8/28/10
to santhav...@googlegroups.com
ஆகா! ஹரீ!என்ன அழகான சிருங்காரமான முத்தப்புரிதலுடன் விளக்கம்.. இப்போதுதான் புரிதல் ங்கிறதோட முழு விளக்கமும் புரிந்தது.  என்ன விசால அறிவுப்புரிதல்!வாழ்க ஹரீ!..
 யோகியார்

2010/8/28 Hari Krishnan <hari.har...@gmail.com>

Parthasarathy Krishnan

unread,
Aug 28, 2010, 2:29:21 AM8/28/10
to santhav...@googlegroups.com
Dear friends,
May I have a few words as a person had chosen Linguistics as optional in MA Tamil over 30 years ago.
 
தமிழும் ஆங்கிலம் போல் உடை உடுத்திக் கொண்டது சற்று கவலை தருகிறது.
தமிழ் சமஸ்க்ருதத்தை எதிர் கொண்டு சமாளித்ததற்கு அடிப்படை காரணமே வினைச் சொல்லில் வடமொழியைப புக விடாமல் செய்தததுதான். (மறைந்த பேராசிரியர் நாகநந்தி இதை பலமுறை அழுத்தம் திருத்தமாகக் கூறியிருக்கிறார்.
வினைச் சொல்லாக வரும் எல்லா வட சொல்லுக்கும் தமிழில் ஏராளமான சொற்கள் உண்டு. பட்டியல் இன்னொரு சமயம் வரும்.
புரி என்ற சொல் தமிழில் எப்போது தோன்றியது தெரியவில்லை. ஆனால் புரி என்பது "புரி நூல் மார்பின் திரிபுரி வார்சடை" என்று மணிமேகலையில் வந்துள்ளது. அதற்கு முன் சங்க இலக்கியத்தில் (சங்க இலக்கியங்கள் அல்ல) தெய்புரிப் பழங்கயிற்றினார் என்ற புலவரின் பாடல் குறுந்தொகையில் இடம் பெற்றுள்ளது.
புரி என்பது பெயர்ச் சொல்லாக இருப்பதால் வினைச் சொல் பயன்பாட்டில் வந்ததா  எனத் தெரியவில்லை. புலவர்களைத்தான் கேட்க வேண்டும.
தல் என்ற விகுதி அல்லது பின்னொட்டு தொழிற் பெயரைக் குறிப்பது. இது வினைச் சொல்லுடன் இணைந்து வருகிறது. ஆனால் புரி என்ற சொல் செயல் என்ற பொருளில் திருக்குறளில் வந்துள்ளது.
"இவர் புரிந்து" (இன்பத்துப் பால்)
ஆனால் understanding என்ற ஆங்கில சொல்லுக்கான  பொருளில் வருவது வேறாக இருந்திருக்கிறது.
காட்டாக, செய் + தல், பார் + தல் ... இப்படி வரும்.  
கேட்டல், உணர்தல், உள்ளுதல் என்பன போன்ற சொற்கள் இதற்கு மாற்றாக வந்துள்ளன எனக் கருதுகிறேன்.
"கேட்டனை ஆயின் விட்டது செய்ம்மே" (புறம்) (புரிஞ்சுதா... என்ற தொனியில் வரும்)
இதல்லாம் சரி, பயணிக்கிறான் என்ற சொல் கூட தவறான வடிவம் தான். தமிழுக்கு ஒட்டாது. பயணம் என்பது வட சொல் (செலவு என்பதே தமிழ்) கிறான் என்பது தமிழ் ஒட்டு.
தமிழில் இப்போது ஆங்கிலமயமாக்கப் படுகிறது. இதை எதிர்க்கவோ, மாற்ற முயல்வதோ இயலாது.
இன்றைக்கு இதழ்கள் பயன்படுத்தும் தமிழ் வேறாகத்தான் இருக்கிறது. பார்ப்போம், காலம்தான் அதை சரி செய்யும், எந்த மொழியாக இருந்தாலும்.
 
பாகி
 
 
2010/8/28 Kaviyogi Vedham <kaviyog...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta



--
Paaki





Kaviyogi Vedham

unread,
Aug 28, 2010, 2:43:20 AM8/28/10
to santhavasantham
பலே பலே நல்ல பின்னூட்டு!அருமையாய் இலக்கண சுத்தமாய்ச் சொன்னாய் வாழ்க!பாகி!
 யோகியார்

யோகியார். வேதம்.(Yogiyar vedham)
Anaivarum vaazhga vaLamudan!--..
Thalaivar,
Sidhdhar Babaji YogaSram, 2/682,
 10th cross st,Renga Reddy garden, Neelankarai, Chennai-600041
அனைவரும் வாழ்க வளமுடன் நம் குரு சித்தர் பாபாஜி அருளால்!
சித்தர் ஸ்ரீ லஹரி பாபாஜி யோகாஸ்ரமம்,2/682Renga Reddy Garden நீலாங்கரை,(Opp. Hotchips new HOTEL)-சென்னை-41(போன் 64565979)-
*****************************
 

SUBBAIER RAMASAMI

unread,
Aug 28, 2010, 7:34:09 AM8/28/10
to santhav...@googlegroups.com

புரிதல் என்றால் செய்தல் என்று பொருள். எ.கா: தயை புரிதல்

புரிதல் என்றால் தெரிந்துகொள்ளுதல் என்ற பொருளில் பலரும் பயன்படுத்துகிறார்கள்.

வழக்கில் ஏறிவிட்டது. புரிந்துகொண்டால் சரி.

 

இலந்தை



2010/8/27 Siva Siva <naya...@gmail.com>

Siva Siva

unread,
Aug 28, 2010, 9:34:29 AM8/28/10
to santhav...@googlegroups.com
இவ்வினாவைப் பற்றிய விளக்கங்களும் உரையாடல்களும் பல உதாரணங்களோடு சுவைபடச் செல்கின்றன.

OTL-ல் 'sphur' என்று வேர்ச்சொல்லைச் சுட்டியிருந்தனர்.

சமஸ்கிருத அகராதியில்:
स्फुर् sphur - ........ -5 To spring or break forth, shoot out, spring up, rise forth; धर्मतः स्फुरति निर्मलं यशः Ku.3.68. -6 To start into view, become visible or manifest, appear clearly, become displayed; मुखात् स्फुरन्तीं को हर्तुमिच्छति हरेः परिभूय दंष्ट्राम् Mu.1.8; रचितरुचिरभूषां दृष्टिमोषे प्रदोषे स्फुरति निरवसादां कापि राधां जगाद Gīt.11. -7 To flash, scintillate, sparkle, glitter, gleam, shine; स्फुरतु कुचकुम्भयोरुपरि मणिमञ्जरी रञ्जयतु तव हृदयदेशम् Gīt.1; (तया) स्फुरत्प्रभामण्डलया चकाशे Ku.1.24; R.3.6;5.51; Me.15,27. -8 To shine, distinguish oneself, become eminent; जातस्तु गण्यते सो$त्र यः स्फुरत्यन्वयाधिकम् Pt.1.27. -9 To flash on the mind, rush suddenly into memory.


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

2010/8/28 SUBBAIER RAMASAMI <elan...@gmail.com>

புரிதல் என்றால் செய்தல் என்று பொருள். எ.கா: தயை புரிதல்

புரிதல் என்றால் தெரிந்துகொள்ளுதல் என்ற பொருளில் பலரும் பயன்படுத்துகிறார்கள்.

வழக்கில் ஏறிவிட்டது. புரிந்துகொண்டால் சரி.

 

இலந்தை



2010/8/27 Siva Siva <naya...@gmail.com>
ஓர் ஐயம்.

இணையத்தில் பலரும் 'புரிதல்' என்ற ஒரு சொல்லை 'understanding' என்ற பொருளில் பிரயோகிப்பதைக் காண்கிறேன். இது சரியா?
இலக்கியங்களில் இப்பொருளில் என்ன சொல்லை ஆண்டிருக்கிறார்கள்?

உணர்தல், உணர்ச்சி, ,,, போன்ற சொல்லைப் பிரயோகிக்கவேண்டுமோ?

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

உணர்ச்சி uṇarcci - Consciousness, perception, understanding, knowledge, feeling; உணர்கை.




--
http://nayanmars.netne.net/
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Pas Pasupathy

unread,
Aug 28, 2010, 11:20:11 AM8/28/10
to santhav...@googlegroups.com
இந்தச் சொல் ‘க்ரியா’ அகராதியில் இந்தப் பொருளில் ஏற்கனவே
வந்துவிட்டது. ‘பெருகிவரும் வழக்கு’ என்று 1992-இல் குறிப்பிடப் படுகிறது.

2010/8/28 Siva Siva <naya...@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta



--

SUBBAIER RAMASAMI

unread,
Aug 28, 2010, 12:46:46 PM8/28/10
to santhav...@googlegroups.com

நர்மதாவின் தமிழ் அகராதியில் கொடுக்கப்பட்டுள்ள பொருள்

புரிதல்- செய்தல், விரும்புதல், உண்டாக்கல், கொடுத்தல், வருந்திடல், கண்டுபிடித்தல், சொல்லுதல், ஒத்துக்கொள்ளுதல், அசைத்தல்

to make, to desire, to produce, to give, to suffer, to investigate, to say, to accept, to shake

       

     



2010/8/28 Pas Pasupathy <pas.pa...@gmail.com>

VETTAI ANANTHANARAYANAN

unread,
Aug 28, 2010, 2:48:07 PM8/28/10
to santhav...@googlegroups.com
ஸம்ஸ்க்ருதத்தில் பயிலும் ஸ்புரித்தல் ஒரு எண்ணம் மனத்தில் உதயமாவதைக் குறிக்கும். அது புரிந்து கொள்ளலைக் குறிக்காது என நினைக்கிறேன்.
 
அனந்த்

2010/8/28 Siva Siva <naya...@gmail.com>

Kandaya Sothithasan

unread,
Aug 28, 2010, 2:06:25 AM8/28/10
to santhav...@googlegroups.com
இருக்கலாம் புரிதல் அறிதல் உணரதல் தெரிதல் என பல சொற்கள் வழங்குகின்றன.

27-8-10 அன்று, Kaviyogi Vedham <kaviyog...@gmail.com> எழுதியது:

> --
> நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப்
> பெறுகிறீர்கள்:
> இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
> இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
> santhavasanth...@googlegroups.com.
> இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
> http://groups.google.com/group/santhavasantham?hl=ta


--
உலகத்திற்கு வேண்டுமென்றால் நீங்கள் ஒரு ஆளாக இருக்கலாம்; ஆனால் யாராவது
ஒருவருக்கு. நீங்களே உலகமாக இருக்கலாம்.


DR.K.SOTHITHASAN

Kaviyogi Vedham

unread,
Aug 29, 2010, 1:33:55 AM8/29/10
to santhav...@googlegroups.com
அப்படிப்போடு ராசா!.. ரொம்ப இலக்கண சுத்தமாகப் புரிந்துகொண்டு எழுதியுள்ளாய்.. பாராட்டத்தக்கது. வாழ்க!
 யோகியார்

2010/8/28 srirangammohanarangan v <ranga...@gmail.com>
புரிந்த விளக்கம்
 
புரிதல் -- செய்தல்; செய்கை என்பதனோடு சம்பந்தமுள்ள விதத்தில் சாதாரணமாகப் பயன்படுத்தப் படுகிறது.
 
understanding என்பது மனோகாரியம். மனத்தினால் செய்யும் செயல்.
 
இதற்கும் இந்தச் சொல்லைப் பயன்படுத்தலாமா? ஏதோ எதேச்சையாகத் தற்காலத் தமிழில் இந்த விதமான பயன்பாடு வந்துவிட்டது. ஆனால் தமிழ் இலக்கியத்தில் இதற்கு ஏதேனும் ஆதரிக்கும் விதமாக இலக்கியப் பயன்பாடு இருக்கிறதா?
 
என்றால்
 
உண்டு என்பதே விடை. புரிதல் என்ற வினைச்சொல் புறச்செய்கை என்பதற்கு மட்டும் பயன்படுத்தப் படாமல், மனத்தின் செயலான விருப்பம், தியானம், இறைஞ்சுதல் ஆகியவற்றிற்கும் பயன்படுத்தப் பட்டிருக்கிறது.
 
உதாரணங்கள் பல என்று சொல்லலாம்படி இருக்கின்றன.
 
 
முதல் உதாரணம் --
 
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.(5)
 

Parthasarathy Krishnan

unread,
Aug 29, 2010, 2:09:58 AM8/29/10
to santhav...@googlegroups.com
'ஸ்புரிதல்' என்ற சொல்லிலிருந்து புரிதல் வந்தது என்பது போன்ற விளக்கம் எல்லாமே வடமொழியிலிருந்து வந்தது என்ற எண்ணத்தை உருவாக்கும் முயற்சியோ என எண்ணத் தோன்றுகிறது.
 
இங்கே ஒரு கருத்தைச் சொல்ல விரும்புகிறேன்: (இதுவும் பேராசிரியர் நாகநந்தி சொன்னத்துதான்)
மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்ட தமிழன் தண்ணீருக்குப் பெயர் கண்டுபிடித்திருக்க மாட்டானா? அதனால் தான் "ஈர்" என்ற வேர்ச்சொல்லைக் கொண்டு நீர் என்ற சொல்லை உருவாக்கினான். இந்த நிலையில், தண்ணீருக்கு ஜலம், அப்பு, தீர்த்தம் எனப் பல பெயர்கள் கொண்ட வடமொழி கூடுதலாகத்  தமிழிலிருந்து நீர் என்ற சொல்லையும் எடுத்துக் கொண்டது. இந்நிலையில், தமிழின் சொல்லான நீர் வடமொழியிலிருந்து வந்தது என்று இடைக்காலத்தில் சொல்லிவந்தார்கள்.
இது போல் பல உள்ளன. வழு வழுப்பாகக் கடலில் கிடைக்கும் பொருளுக்கு "ப வழம்" என்று பெயர் வைத்தான் தமிழன். அதை பிரவாளம் என்று மாற்றி வடமொழி பயன்படுத்துகிறது.
இதழ் தரும் முத்தம் போல் முத்தும் கடலில் கண்டான் தமிழன். அது ஸம்ஸ்க்ருதத்தில் 'முக்த" என ஆயிற்று. 
இவற்றையும் வடமொழியிலிருந்து வந்ததாகச் சொல்ல முயன்றார்கள்.
 
இப்படி எல்லாம் சொல்வது பொறி விளங்காயிலிருந்து  வெல்லம் தயாரித்தது போல் ஆகும்.
ஒரு பெரியவரின் பெயரை அவரது பேரனுக்கு வைக்கிறார்கள். அந்தக் குழந்தை பேசத் தெரிந்ததும், தாத்தாவின் பெயரைக் கேட்டுத் தெரிந்து கொள்கிறது. அப்போது சொல்லும்: "என் பெயரைத் தானே தாத்தாவுக்கு வைத்திருக்கிறார்கள்?". இது எப்படி இருக்கு? அது போல்தான் பல சொற்கள் வடமொழியிலிருந்து வந்தன என்று கூறுவதும்.
பாகி
 
 
 
2010/8/29 Kaviyogi Vedham <kaviyog...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta



--
Paaki





nahupoliyan

unread,
Aug 31, 2010, 4:24:05 PM8/31/10
to சந்தவசந்தம்
'புரி' பற்றி விவாதம் என்று தெரிகிறது. ஆனால் இதில் என்ன குழம்புவதற்கு
என்று புரியவில்லை. இப்படித்தான் பல விஷயங்களிலும்: சில விஷயங்கள்
நமக்குத் தெரியும் என்றாலும் அதை நன்றாகத் தெரிந்துகொள்ள
எடுத்துக்கொள்ளும் முயற்சியின் பலனாய்த்தான் அது நமக்குப் புரியும். இது
எனக்குப்புரிகிறது. உங்களுக்குப்புரியவில்லையென்றால் தயை புரிந்து
கூறவும். இதற்கெல்லாம் போய்ச் சொல்லாலே போர் புரிந்து கெடவேண்டாம்.
அர்த்தம் புரிந்து பணி புரிந்து காதல் புரிந்து சிறப்பீரே.

நகுபோலியன்

பி.கு. சபாஷ் ஹரி கி., சபாஷ் பார்த்தசரதியாரே, 'ஆஷ்டுக்குஷ்டி வேஷ்டியத்
திங்கறது, ஓஷ்டு ஒஷ்டு' என்கிற [சாமிநாததேசிக?] அநுகூல
சத்துருக்களால்தான் சம்ஸ்கிருததுக்கு அவதி வந்தது!

ஸ்புரித்தல் -க்கும் புரிதலுக்கும் தொடர்பே இல்லை. ஸ்புர்=sparkle [and
its hence-derived nuances].
-----------------------------------------------------------------------------------------

On Aug 29, 11:09 am, Parthasarathy Krishnan <paakila...@gmail.com>
wrote:


> 'ஸ்புரிதல்' என்ற சொல்லிலிருந்து புரிதல் வந்தது என்பது போன்ற விளக்கம் எல்லாமே
> வடமொழியிலிருந்து வந்தது என்ற எண்ணத்தை உருவாக்கும் முயற்சியோ என எண்ணத்
> தோன்றுகிறது.
>
> இங்கே ஒரு கருத்தைச் சொல்ல விரும்புகிறேன்: (இதுவும் பேராசிரியர் நாகநந்தி
> சொன்னத்துதான்)
> மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்ட தமிழன் தண்ணீருக்குப் பெயர்
> கண்டுபிடித்திருக்க மாட்டானா? அதனால் தான் "ஈர்" என்ற வேர்ச்சொல்லைக் கொண்டு
> நீர் என்ற சொல்லை உருவாக்கினான். இந்த நிலையில், தண்ணீருக்கு ஜலம், அப்பு,
> தீர்த்தம் எனப் பல பெயர்கள் கொண்ட வடமொழி கூடுதலாகத்  தமிழிலிருந்து நீர் என்ற
> சொல்லையும் எடுத்துக் கொண்டது. இந்நிலையில், தமிழின் சொல்லான நீர்
> வடமொழியிலிருந்து வந்தது என்று இடைக்காலத்தில் சொல்லிவந்தார்கள்.
> இது போல் பல உள்ளன. வழு வழுப்பாகக் கடலில் கிடைக்கும் பொருளுக்கு "ப வழம்"
> என்று பெயர் வைத்தான் தமிழன். அதை பிரவாளம் என்று மாற்றி வடமொழி
> பயன்படுத்துகிறது.
> இதழ் தரும் முத்தம் போல் முத்தும் கடலில் கண்டான் தமிழன். அது ஸம்ஸ்க்ருதத்தில்
> 'முக்த" என ஆயிற்று.
> இவற்றையும் வடமொழியிலிருந்து வந்ததாகச் சொல்ல முயன்றார்கள்.
>
> இப்படி எல்லாம் சொல்வது பொறி விளங்காயிலிருந்து  வெல்லம் தயாரித்தது போல்
> ஆகும்.
> ஒரு பெரியவரின் பெயரை அவரது பேரனுக்கு வைக்கிறார்கள். அந்தக் குழந்தை பேசத்
> தெரிந்ததும், தாத்தாவின் பெயரைக் கேட்டுத் தெரிந்து கொள்கிறது. அப்போது
> சொல்லும்: "என் பெயரைத் தானே தாத்தாவுக்கு வைத்திருக்கிறார்கள்?". இது எப்படி
> இருக்கு? அது போல்தான் பல சொற்கள் வடமொழியிலிருந்து வந்தன என்று கூறுவதும்.
> பாகி
>

> 2010/8/29 Kaviyogi Vedham <kaviyogi.ved...@gmail.com>


>
>
>
>
>
> > அப்படிப்போடு ராசா!.. ரொம்ப இலக்கண சுத்தமாகப் புரிந்துகொண்டு எழுதியுள்ளாய்..
> > பாராட்டத்தக்கது. வாழ்க!
> >  யோகியார்
>

> > 2010/8/28 srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
>
> >  *புரிந்த விளக்கம்*


>
> >> புரிதல் -- செய்தல்; செய்கை என்பதனோடு சம்பந்தமுள்ள விதத்தில் சாதாரணமாகப்
> >> பயன்படுத்தப் படுகிறது.
>
> >> understanding என்பது மனோகாரியம். மனத்தினால் செய்யும் செயல்.
>
> >> இதற்கும் இந்தச் சொல்லைப் பயன்படுத்தலாமா? ஏதோ எதேச்சையாகத் தற்காலத் தமிழில்
> >> இந்த விதமான பயன்பாடு வந்துவிட்டது. ஆனால் தமிழ் இலக்கியத்தில் இதற்கு ஏதேனும்
> >> ஆதரிக்கும் விதமாக இலக்கியப் பயன்பாடு இருக்கிறதா?
>
> >> என்றால்
>
> >> உண்டு என்பதே விடை. புரிதல் என்ற வினைச்சொல் புறச்செய்கை என்பதற்கு மட்டும்
> >> பயன்படுத்தப் படாமல், மனத்தின் செயலான விருப்பம், தியானம், இறைஞ்சுதல்
> >> ஆகியவற்றிற்கும் பயன்படுத்தப் பட்டிருக்கிறது.
>
> >> உதாரணங்கள் பல என்று சொல்லலாம்படி இருக்கின்றன.
>
> >> முதல் உதாரணம் --
>
> >> இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
> >> பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.(5)
>
> > --
> >  நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப்
> > பெறுகிறீர்கள்:
> > இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
> > இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
> > santhavasanth...@googlegroups.com.
> > இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
> >http://groups.google.com/group/santhavasantham?hl=ta
>
> --

> Paaki- Hide quoted text -
>
> - Show quoted text -

Hari Krishnan

unread,
Aug 31, 2010, 11:23:23 PM8/31/10
to santhav...@googlegroups.com


2010/9/1 nahupoliyan <n.balasu...@gmail.com>

பி.கு. சபாஷ் ஹரி கி., சபாஷ் பார்த்தசரதியாரே, 'ஆஷ்டுக்குஷ்டி வேஷ்டியத்
திங்கறது, ஓஷ்டு ஒஷ்டு' என்கிற [சாமிநாததேசிக?] அநுகூல
சத்துருக்களால்தான் சம்ஸ்கிருததுக்கு அவதி வந்தது!


 நகுபோலியனாரே.

நம்பர் 1: பார்த்தசாரதி அப்பா பெயர்.  கிருஷ்ண‌ன் என்ப‌து எழுதிய‌வ‌ர் பெயர்.  பேசாம‌. பாகி என்றே சொல்லிவிட‌லாம்.  அவ‌ரும் பாகியானா‌க‌த்தான் இருக்க‌ விரும்புகிறார்.  (பாகி+யான்.)

ந‌ம்ப‌ர் 2: ஆஷ்டு குஷ்டி. பார‌திதாச‌ருடைய‌து.  அனுகூல‌ ச‌த்ருவா இல்ல‌ பிர‌திகூல‌ மித்திர‌னா....நிம்மதி நிம்ம‌தி உங்க‌ள் சாய்ஸ் உங்க‌ள் சாய்ஸ்.....

Message has been deleted

N. Ganesan

unread,
Oct 27, 2017, 12:29:00 AM10/27/17
to சந்தவசந்தம்
2010-ல் ஓடிய இழையைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

2010/8/28 Siva Siva <naya...@gmail.com>
ஓர் ஐயம்.

இணையத்தில் பலரும் 'புரிதல்' என்ற ஒரு சொல்லை 'understanding' என்ற பொருளில் பிரயோகிப்பதைக் காண்கிறேன். இது சரியா?
இலக்கியங்களில் இப்பொருளில் என்ன சொல்லை ஆண்டிருக்கிறார்கள்?

உணர்தல், உணர்ச்சி, ,,, போன்ற சொல்லைப் பிரயோகிக்கவேண்டுமோ?

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

இப்போது ‘புரிதல், புரிந்துகொள்ளல்’ என்றால் to understand, understanding என்ற பொருள்.
பழைய காலங்களில் செய்தல் என்பதே முதன்மையாக இருந்தாலும், நினைத்தல், ஆராய்தல் என்ற மனோகாரியங்களும்,
புகழ்தல் என்ற வாய்வாக்குக் காரியமும் இல்லாமல் இல்லை.

(மனத்தில்) விளங்குதல், தெரிதல், உணர்தல், ஓர்தல்.

ஓர்தல் என்ற சொல்லை இன்றைய “புரிதல்” என்ற பொருளில் திருப்புகழில் உள்ளதாகத் தெரிகிறது.
மதன குரு ஓராத அ(ன்)னையர் கொடு வசை பேச ... காம
வேதனையைப் புரிந்து கொள்ளாத தாய்மார்கள் கொடிய வசை
மொழிகளைப் பேசி நகையாடவும்,
ஓர்தல் = புரிதல் (understanding) 

இந்தத் திருப்புகழில், திருக்குறள் போல, புரிதல் = சொல்லுதல் என்ற பொருளும் பொருந்துகிறது.
புகழ் நல(ம்) மெத்தப் புரிந்து = புகழை மிகப் பேசி.

------------

மனம், வாக்கு, காரியம் என்பதில் செய்தல் = புரிதல் ஏராளமான இடங்களில் உள்ளது.
ஆனால், மனத்தில் ஆராய்ந்து, நினைத்துப் புரிந்துகொள்ளல் என்னும் இடங்களைப்
பார்ப்போம். புரிதல் == எப்பொழுதும் சொல்லுதல் என்ற பொருளும் உண்டு.

நா. கணேசன்


On Saturday, August 28, 2010 at 2:53:56 AM UTC-7, Srirangam V Mohanarangan wrote:
புரிந்த விளக்கம்
 
புரிதல் -- செய்தல்; செய்கை என்பதனோடு சம்பந்தமுள்ள விதத்தில் சாதாரணமாகப் பயன்படுத்தப் படுகிறது.
 
understanding என்பது மனோகாரியம். மனத்தினால் செய்யும் செயல்.
 
இதற்கும் இந்தச் சொல்லைப் பயன்படுத்தலாமா? ஏதோ எதேச்சையாகத் தற்காலத் தமிழில் இந்த விதமான பயன்பாடு வந்துவிட்டது. ஆனால் தமிழ் இலக்கியத்தில் இதற்கு ஏதேனும் ஆதரிக்கும் விதமாக இலக்கியப் பயன்பாடு இருக்கிறதா?
 
என்றால்
 
உண்டு என்பதே விடை. புரிதல் என்ற வினைச்சொல் புறச்செய்கை என்பதற்கு மட்டும் பயன்படுத்தப் படாமல், மனத்தின் செயலான விருப்பம், தியானம், இறைஞ்சுதல் ஆகியவற்றிற்கும் பயன்படுத்தப் பட்டிருக்கிறது.
 
உதாரணங்கள் பல என்று சொல்லலாம்படி இருக்கின்றன.
 
 
முதல் உதாரணம் --
 
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.(5)
 
இங்கே புரிதல் -- விரும்புதல் என்பது முதற்பொருளாகவும், புரிதல் -- எப்பொழுதும் சொல்லுதல் என்பதி இரண்டாவது பொருளாகவும் பரிமேலழகரால் சொல்லப் பட்டிருப்பதை அவர்தம் உரையில் காணலாம்.
 
புகழ் புரிந்தார் மாட்டு -- இறைவனது மெய்மை சேர்ந்த புகழை விரும்பினாரிடத்து.
 
புரிதல் -- எப்பொழுது சொல்லுதல்.
 
இரண்டாவது உதாரணம் --
 
விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்தொழுகு வார் (143)
 
தீமை புரிந்து ஒழுகுவார் -- பாவம் செய்தலை விரும்பி ஒழுகுவார் என்பது பரிமேலழகரின் உரை. இங்கு விரும்புதல் என்னும் மனத்தின் நிகழ்வு மட்டுமே புரிந்து என்பதற்குப் பொருளாகக் கூறப்பட்டிருக்கிறது.
 
’புரிதல்’ என்பதே மனத்தின் நிகழ்ச்சியாகிய ’விரும்புதல்’ என்னும் பொருளில் ஆளப்பட்ட இடங்களும் இலக்கியத்திலும், இலக்கணத்திலும் உண்டு. 
 
தொல்காப்பியம்,  மெய்ப்பாட்டியலில் சூத்திரம் 257 --
 
“புகுமுகம் புரிதல் பொறிநுதல் வியர்த்தல்
நகுநய மறைத்தல் சிதைவுபிறர்க் கின்மையொடு
தகுமுறை நான்கே ஒன்றென மொழிப.”
 
இதில் ‘புகுமுகம் புரிதல்’ என்பதற்கு “ஒருவனும் ஒருத்தியும் எதிர்ப்பட்ட வழித் தன்னை அவன் நோக்குதற்கண் விரும்பும் உள்ள நிகழ்ச்சி” என்று உரை வரைகிறார் பேராசிரியர். மேலும் விளக்குவதற்காக அவர் கூறுவது, “புரிதல் என்பது மேவுதல் என்றவாறு; அஃதாவது, தலைமகன் காண்டலைத் தலைமகள் வேட்டல் என்றவாறாம்”.
 
சங்க இலக்கியமும் ’புரிந்த’ என்பதற்கு புறச்செய்கை, மனத்தின் நிகழ்வு என்ற இரு பொருளிலும் ஆண்டிருக்கிறது.
 
புரிந்த -- புறச்செய்கை
 
“பெண்கொலை புரிந்த நன்னன் போல” (குறுந்தொகை 292)
 
புரிந்த -- உள்ள நிகழ்ச்சி
 
“வன்புலக் காட்டு நாட்டதுவே அன்பு கலந்து நம்வயிற் புரிந்த கொள்கையொடு” (நற்றிணை 59)
 
குறுந்தொகை ’புரிந்த’ என்பதை உள்ள நிகழ்ச்சிச் சொற்களுடன் ஒரு கோவையாக்கியே ஆட்சி செய்கிறது இந்த இடத்தில் --
 
“நன்று புரிந்து எண்ணிய மனத்தை ஆகி” (குறுந்தொகை 400)
 
ஆனால் இந்தக் காரணங்களால் தறகாலத் தமிழில் புரிதல் என்பதற்கு understanding என்ற பொருளில் ஆட்சி ஏற்பட்டதா என்றால் இல்லை.
 
இப்படித் தங்களுக்கு இலக்கிய, இலக்கணங்களின் பக்கபலம் உண்டு என்பதே தற்காலத் தமிழ் எழுத்தாளர்களுக்குப் பெரிதும் தெரியாது.
 
இருந்தாலும் ‘புரிதல்’ என்பது தற்காலத் தமிழின் தாந்தோணியான சொல்லாட்சி என்று நினைத்து ஒதுக்குவோர் ‘புரிந்துகொள்ளுதல்’ என்று பயன் படுத்தலாம்.
 
‘புரிதல்’ என்பதையே பயன் கொள்ள நினைப்போர் இவ்வாறு இலக்கிய, இலக்கண ஆதாரம் தமக்குச் சார்பாகச் சொல்லிக்கொள்ளவும் உண்டு என்பதை உணர்ந்து நிம்மதி அடையலாம். 
 
--அவரவர் ‘புரிதல்’ அவரவர் பயனே -- :--)))) 
 
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 
 
 

N. Ganesan

unread,
Oct 27, 2017, 12:51:08 AM10/27/17
to சந்தவசந்தம்
"போகியாய் இருந்து யிர்க்குப் போகத்தைப் புரிதல் ஓரார்
 யோகியாய் யோக முத்தி உதவுதல் அதுவும் ஓரார்
 வேகியா னாற்போற் செய்த வினையினை வீட்டல் ஓரார்
 ஊகியா மூட ரெல்லாம் உம்பரின் ஒருவன் என்பர்."
  - சிவஞானசித்தியார், 1. 2 - 22

ஓரார் = உணரார். விளங்கிக்கொள்ளார். = those who do not understand

ramaNi

unread,
Oct 27, 2017, 8:54:53 AM10/27/17
to சந்தவசந்தம்
To sum up:
சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி
puri-
4 v. tr.
1. To desire;
விரும்புதல். புகுமுகம் புரிதல் (தொல். பொ. 261).
2. To meditate upon;
தியானித்தல். இறைவன் . . . புகழ் புரிந்தார் (குறள், 5).

3. To do, make;
செய்தல். தினைத்துணையு நன்றி புரிகல்லா (நாலடி, 323).

4, To create;
படைத்தல். எவ்வுலகும் புரிவானை (சிவப். பிரபந். வெங்கைக்க. 65).

5. To bring forth, produce;
ஈனுதல். பொன்போறார் கொன்றைபுரிந்தன (திணைமாலை. 109).

6. To give;
கொடுத்தல். பெருநிதி வேட்டன வேட்டனபுரிந்தாள் (உபதேசகா. சிவவிரத. 257).

7. To experience, suffer;
அனுபவித்தல். புண்டரிகை போலுமிவ ளின்னல் புரிகின்றாள் (கம்பரா. சூளா. 1).

8. To gaze at, watch intently;
உற்றுப்பார்த்தல். பயத்தாலே புரிந்து பார்க்கிறபோது (திவ். திருநெடுந். 21, வ்யா. பக். 174).

9. To investigate, examine;
விசாரணை செய்தல். அறம் புரிந்தன்ன செங்கோ னாட்டத்து (புறநா. 35).

10. To say, tell;
சொல்லுதல். அந்தணாளர் புரியு மருமறை (தேவா. 865, 5).

11. To exercise, perform;
நடத்துதல். அரசு புரிந்தான்.

12. To accept;
மேற்கொள்ளுதல். போக்குவரவு புரிய (சி. போ. 2).

1. [ M. puriyuka.] To be twisted; to curl;
முறுக்குக்கொள்ளுதல். சுகிர்புரிநரம்பின் (மலைபடு. 23).

2. To turn;
திரும்புதல். மற்றையருகே புரியில் (திவ். இயற். திருவிருத். 42, வ்யா. பக். 247).

3. To abound;
மிகுதல். வனப்புப் புரிந்த தகையினான் (பரிபா. 7, 51).

4. To shake;
அசைதல். தார்புரிந்தன்ன (பதிற்றுப். 66, 13).

puri-
4 v. intr. sphur.
1. To shine; to be manifest;
விளங்குதல். சோதிபுரிந்திடுமதுவே (சி. சி. 2, 82).
2. To be understood;
பொருள்விளங்குதல். நீ சொல்வது நன்கு புரிகின்றது.

*****
சங்கச் சொல்லடைவு அகராதி

விரும்புதல் ; தியானித்தல் ; செய்தல் ; படைத்தல் ; ஈனுதல் ; கொடுத்தல் ; நுகர்தல் ; உற்றுப்பார்த்தல் ; விசாரணைசெய்தல் ; சொல்லுதல் ; நடத்துதல் ; மேற்கொள்ளுதல் ; முறுக்குக்கொள்ளுதல் ; திரும்புதல் ; மிகுதல் ; அசைதல் ; விளங்குதல் ; பொருள் விளங்குதல் .
1. விரும்புதல்: "புகு முகம் புரிதல் பொறி நுதல் வியர்த்தல்" (தொல்:24:13). 2. உண்டாக்குதல்: "பிணி எனப்படுவது சார்பின் பிறிது ஆய் இயற்கையின் திரிந்து உடம்பு இடும்பை புரிதல்" (மணி:30:99). 3. செய்தல்: "பொய் இல் நாயகம் பூண்டபின் இனி அது புரிதல் நொய்யது ஆகும்" (யுத்:3:54).

*****
 

N. Ganesan

unread,
Oct 27, 2017, 9:44:03 AM10/27/17
to Santhavasantham

புரிதல் (’understanding', ஓர்ப்பு)

’ஆசிரியர் புரியும்படி மாணவர்க்குப் பாடம் சொல்கிறார்.’
‘இதைப் புரியாமல் செய்துவிட்டான்’, ... இந்தத் தொடர்களில் புரிதல் = உணர்தல், விளங்குதல், தெரிதல், ஓர்தல் என்ற பொருளில் சாதாரணமாகப் பயன்படுத்துகிறோம். இந்தப் ‘புரிதல், புரிந்துகொள்ளல்’ என்றால் to understand, understanding என்ற பொருள்.
பழைய காலங்களில் செய்தல் என்பதே முதன்மையாக புரிதலுக்கு இருந்தாலும், நினைத்தல், ஆராய்தல் என்ற மனோகாரியங்களும்,
புகழ்தல் என்ற வாய்வாக்குக் காரியமும் இல்லாமல் இல்லை.

(மனத்தில்) விளங்குதல், தெரிதல், உணர்தல், ஓர்தல்.
----------------------------------

மா என்றால் மாவு ‘flour' என்ற பொருள்கொண்ட சொல்லைப் பத்துப்பாட்டில் காண்கிறோம்: கவலைக் கிழங்கின் மா. மா என்பதன் மற்ற பொருள்கள் இன்று வழக்கற்றாலும், மா = மாவு  மாத்திரம் நம்மோடு இருக்கிறது. (இட்லிமா, உப்புமா, அரிசிமா, வடைமாவு, ... முதலில் ‘wet flour', பின்னர் மாகு/மாசு ‘wet flour' ஈரப்பசை இல்லாததற்கும் ஆகிறது. மாசு, மாவு = தூள்.). அதே போல, புறநானூற்றிலே தான் முதன்முதலாக, புரிதல் = உணர்தல், ஓர்தல் (understanding) என்பதன் தொடக்கம் இருக்கிறது.

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை வெள்ளைக்குடி நாகனார் பாடிய புறப்பாட்டு.
"கேண்மதி - என்னுடையன சில வார்த்தையைக் கேட்பாயாக;
அறம் புரிந்தன்ன செங்கோல் நாட்டத்து முறை வேண்டு பொழுதின் -
அறக் கடவுள் மேவி ஆராய்ந்தாற் போன்ற செங்கோலா னாராயும்
ஆராய்ச்சியையுடைய நீதியைக் கேட்கவேண்டுங் காலத்து;”

இங்கே, அறக்கடவுள் ஓர்ந்து/உணர்ந்து நீதிவழங்கலைப் புரிதல் என்கிறார் வெள்ளைக்குடி நாகனார்.
புரிதல் = to examine/investigate thru' mind. இந்த மனோகார்யத்தின் விளைவுதான்
understanding. அவருக்கு இத்துறையில் நல்ல புரிதல் இருக்கிறது = He has a good
understanding of the subject.

புரிதல் என்னும் மனத்தினால் செய்யும் செயலுக்கு மனம் விரும்புதல் என்ற பொருளும், மனம் வேறுபடுதல் என்ற பொருளும் கலித்தொகையிலே உண்டு.
”11 நல்குநர் புரிந்து நலனுணப் பட்டோ
     ல்குநர் போகிய வூரோ ரன்னர்

எ - து; மனம் விரும்பி யருளின கணவரால் நலத்தை நுகர்ந்து விடப்பட்ட மகளிர் குடியிருப்பார் போகிய பாழூரை ஒப்பர், அந்நிலையை ஓர்ந்துபார்; எ - று.

12 கூடினர் புரிந்து குணனுணப் பட்டோர்
சூடின ரிட்ட பூவோ ரன்னர்

எ - து; மனம் விரும்பிக் கூடின கணவராற் றங் குணத்தை நுகர்ந்து விடப்பட்ட மகளிர், முடிப்பார் முடித்துப்போகட்ட பூவை ஒப்பர், அந்நிலையை ஓர்ந்துபார்; எ - று.”

“27 புரிந்துநீ எள்ளுங் குயிலையு மவரையும் புலவாதி
நீலித ழுண்கணாய் 3நெறிகூந்தல் பிணிவிட
(2) நாள்வரை நிறுத்துத்தாஞ் சொல்லிய பொய்யன்றி
(3) மாலைதாழ் வியன் மார்பர் துனைதந்தார்
(4) காலுறுழ் கடுந்திண்டேர் கடவினர் விரைந்தே

எ - து: அதுகேட்ட தோழி, என்று, மனம் வேறுபட்டு நீலப்பூப்போலும் ”

”புரிதலென்னுஞ்சொல், மனம் வேறுபடுதலென்னும் பொருளிலும் வருமென்பது (அ) ‘‘புரிந்து’’ கலி. 33 : 27. என்பதனுரையாலும் துணியப்படும். (ஆ) ‘‘நெறியறி செறிகுறி புரிதிரி பறியா வறிவனை (கலி. 39 : 46.) என்புழி, ‘புரி திரிபு’ என்பதற்கு, ‘வேறுபட்டுத் தப்புதல்’ என்று பொருளெழுதியிருப்பதும் இங்கே அறிதற்பாலது.’’
இ. வை. அனந்தராமையர், கலித்தொகை உரையில் நச்சினார்க்கினியரை மேற்கோள் காட்டியுள்ளார். மனோகாரியங்களாகிய விரும்புதலோ, வேறுபடுதலோ “புரிதல்” என்னு வினையால் கலித்தொகையில் பயில்கிறது காண்க.

புரிதல் = சொல்லுதல் என்னும் பொருளில்
-----------------------------

(i) அந்தணாளர் புரியும் அரு மறை (தேவா. 865, 5)

(ii) ’இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு’ (குறள்)
இங்கே, புரிதல் = சொல்லுதல் என்ற வாக் கார்யம்.

(iii) இந்தத் திருப்புகழில், திருக்குறள் போல, புரிதல் = சொல்லுதல் என்ற பொருளும் பொருந்துகிறது.
புகழ் நல(ம்) மெத்தப் புரிந்து = புகழை மிகப் பேசி.

புரிதல் - இடையறாது எப்பொழுதும் நினைத்தல், எண்ணுதல்.
--------------------------------------
(விளக்கம்: பெரியபுராணப் பேருரைகாரர் சிவக்கவிமணி (CKS, கோயம்புத்தூர்))

விரிதரு புலியுரி விரவிய வரையினர்
திரிதரு மெயிலவை புனைகணை யினிலெய்த
எரிதரு சடையின ரிடைமரு தடைவுனல்
புரிதரு மனனவர் புகழ்மிக வுளதே. - தேவாரம்

புரிதரு மனன் = எண்ணுகிற மனம்.
புரிதல் - இடைவிடாது நினைத்தல்

“பொருந்திய காதலிற் புக்குப் போற்றி வணங்கிப் புரிவார்” (பெரிய புராணம்)
புரிவார் - புரிதல் - இடைவிடாது நினைத்தல்; புரிவார் முற்றெச்சம். புரிவாராகி; "புரிந்து கேட்கப்படும்" (பதிகம்). புரிதல் - வலம்வருதல் என்ற குறிப்பும் பட நின்றது.

“புரிந்தவர் - புரிந்த அவர் என்றது புரிந்தவர் என 
நின்றது. புரிதல் - இடைவிடாது நினைத்தல். விரும்புதலுமாம். ”

புரிதல் - இடைவிடாது நினைத்தல். ‘புகழ் புரிந்தார்' என்ற குறளிற் காண்க. 

முறைபுரிந்த முன்னுணர்வு மூளவழத் தொடங்கினார் 
"முறைபுரிந்த முன் உணர்வு - முறை - விதி; முறைப்படி; புரிதல் - இடைவிடாது நினைத்தல்; "புகழ்புரிந்தார் மாட்டு" (குறள்); 1932 பார்க்க; முன் உணர்வு - முன்னை நிலையின் நினைவு; மூள - இங்குவந்து பொருந்த - மிகுந்து தாக்க. "பாலனாயதொண்டு செய்து பண்டுமின்றும்" (பிள். தேவா.) ஈசர் கழல் முறை புரிந்த முன்னுணர்வு மூள - பிள்ளையார் முருகப்பெருமா னவதாரமன்று என்று காட்ட இஃதும் ஒரு நல்ல ஆதரவாம்; "பண்டுதிரு வடிமறவாப் பான்மையோர்" (1953) என்றதும் ஆண்டுரைத்தவையும் பிறவும் காண்க."

திருப்பதிகந் திருக்கடைக்காப் புச்சாத்திச் சிறப்பின்மிகு
விருப்பினா லவர்தமக்கு விருந்தளித்து மேவுநாள்
அருப்புறுமெய்க் காதல்புரி யடியவர்க டம்மோடும்
பொருப்புறுகைச் சிலையார்சேர் பதிபிறவுந் தொழப்போவார்;
அருப்புறு மெய்க்காதல் - புரி - அருப்புறுதல் - அரும்புபோல அவ்வப்போது புதிதின் மலர்தல்: உறு - உவமவுருபு; அரும்பு - அருப்பு - என எதுகை நோக்கி வலிந்து வந்தது. காதல் - அன்பின் செறிந்தவிளைவு; ஈண்டு அதனால் விளையும் செயல்களுக்காயிற்று. புரிதல் - இடைவிடாது நினைத்தலும் சொல்லுதலும் செய்தலுமாம்.
அடியவர்கள் தம்மோடும்- அடியவர் - அயரா அன்புசெய்யும் மெய்ஞ்ஞானிகள் -"அன்பரொடு மரீஇ" (12 சூத் - சிவஞானபோதம்).

இடைக்காலத்திலே, ஓர்ப்பு = understanding என்ற பொருளிலே மிகவும் பயன்பட்டுள்ளது. ஓர்ப்பு < ஓர்தல் என்னும் வினையடியாக. மலையாளத்தில் ஓர்மை என்னும் சொல்லாக இருக்கிறது[1].

ஆனால், 19,20-ஆம் நூற்றாண்டுகளிலே புரிதல், புரிந்துகொள்ளல் என்னும் ஆட்சி பெருகியுள்ளது. இதன் தொடக்கம் புறநானூற்றுப் பாடலில் (வெள்ளைக்குடி நாகனார்), பெரியபுராணம் போன்றவற்றில் இருக்கிறது.

நா. கணேசன்

[1]

“மிகப் பொருத்தமான காலகட்டத்தில் எழுந்த தமிழ்த் தேசியம் குறித்த ஓர்மை, அதே சமத்தில் தோன்றிய திராவிட அரசியலால் சிதைந்து போனதா? வகுப்புவாதம் மற்றும் இனவெறுப்பை முன்னிறுத்தாமல் பண்டைய இலக்கியப் பரிச்சயங்களின் வழியாக வடித்த தமிழ்த் தேசிய நிலைப்பாட்டுடன் தமிழரசுக் கழகம் என்ற கட்சியை வழிநடத்திப் பிறகு அந்நிலைப்பாட்டிலிருந்து விலகிப் போன ம.பொ.சிவஞானம் பற்றி உங்களது கருத்து என்ன?”

”தென்குமரியை மீட்க அங்கு சென்று குரல்கொடுத்த, போராடிய ஒரே தமிழகத் தலைவர் ம.பொ.சி. தமது ‘தமிழன் குரல்’ இதழில் தொடர்ந்து எழுதிவந்தவர் அவர். அவர் நடத்திய இதர இதழ்கள் தமிழ் முரசு, செங்கோல். இந்திய ஒன்றியத்திற்குள் சுதந்திரச் சோஷலிசத் தமிழ்க் குடியரசு அமைய வேண்டும் என்று தொடர்ந்து பேசியும், எழுதியும் வந்தார். தமிழிலக்கிய ஓர்மையின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட தமிழ்த் தேசிய அரசியல் ம.பொ.சி.யுடையது.
[...]
ஆந்திர, கருனாடக, கேரள காங்கிரசுக்கு இருந்த இன ஓர்மை அப்போது தமிழ்நாடு காங்கிரசுக்கு இல்லை. அதனால் தமிழர் இழந்த மண் அதிகம். “

N. Ganesan

unread,
Oct 27, 2017, 11:43:33 PM10/27/17
to சந்தவசந்தம்
இப்பொழுது, புரிதல் = தெரிதல், விளங்குதல், உணர்தல், ஓர்தல், Underdtanding என்று மிகப் பரவலாக வழங்கும் சொல்லுக்கு “ஓர்தல்” என்ற வினைச்சொல்லும், ஓர்ப்பு என்னும் பெயர்ச்சொல்லும் இடைக்காலத்தே பரவலாகப் பயன்பட்டுள்ளன. ஓர்ப்பு என்னும் சொல்லை, ஓர்மை என்றும் பாவிக்கின்றனர். 

’அவன் செய்தியின் கனத்தை ஓர்ந்தான்.” = அவன் செய்திக்கனத்தைப் புரிந்துகொண்டான்/உணர்ந்துகொண்டான்/யோசனைசெய்தான்.

ஓர்ப்பு ‘understanding'
-------------------------
தீர்ப்பாரை யாமினி யெங்ஙனம் நாடுதும் அன்னைமீர்,
ஓர்ப்பாலிவ் வொண்ணுதல் உற்றநன் னோயிது தேறினோம்,
போர்ப்பாகு தான்செய்தன் றைவரை வெல்வித்த, மாயப்போர்த்
தேர்ப்பாக னார்க்கிவள் சிந்தை துழாய்த்திசைக் கின்றதே - நம்மாழ்வார் பாசுரம்

இறையனார் அகப்பொருள் - களவு:

“தலைமகன் குணம் நான்கு

       தமியராதல் என்பது, தம் உணர்வினர் அல்லராதல். தம்
உணர்வினர் அல்லராதல் என்பது என்னோ எனின், தலைமகற்கு அறிவு,
நிறை, ஓர்ப்பு, கடைப்பிடி என்பன குணம்.

   அறிவு என்னோ எனின்,

       ‘எப்பொரு ளெத்தன்மைத் தாயினு மப்பொருள்
        மெய்ப்பொருள் காண்ப தறிவு’ [குறள் - 355]

என்றாராகலின், எப்பொருளாயினும் அப்பொருட்கண் நின்று
அம்மெய்ம்மையை உணர்வது அறிவு.

      நிறை என்பது என்னோ எனின், காப்பன காத்துக் கடிவன கடிந்து
ஒழுகும் ஒழுக்கம்.

      ஓர்ப்பு என்பது ஒரு பொருளை ஆராய்ந்து உணர்தல் என்பது.
கடைப்பிடி என்பது கொண்டபொருள் மறவாமை.

      இந்நான்கையும் தலைமகற்கு வேட்கையான் மீதூரப்பட்டுப், புனல்
ஓடுவழிப்   புற்சாய்ந்தாற்போலச் சாய்ந்து கிடப்பது.

                 தலைமகள் குணம் நான்கு

       இனித் தலைமகட்கு நாண், மடம், அச்சம், பயிர்ப்பு என்பன குணம்;”

ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந் தியார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை. - குறள்

ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு. - குறள்

ஓர்த்தல் - understanding.பரிமேலழகர்: அளவைகளானும் பொருந்துமாற்றானும் தெளிய 
ஆராய்ந்து (குறள் - 357).

மூன்று கடன்கழித்த பார்ப்பானும் ஓர்ந்து
முறைநிலை கோடா அரசுஞ் - சிறைநின்று
அலவலை இல்லாக் குடியும்இம் மூவர்
உலகம் எனப்படு வார். - திரிகடுகம்

ஓர்தல் என்ற சொல்லை இன்றைய “புரிதல்” என்ற பொருளில் திருப்புகழில் உள்ளதாகத் தெரிகிறது.
மதன குரு ஓராத அ(ன்)னையர் கொடு வசை பேச ... காம
வேதனையைப் புரிந்து கொள்ளாத தாய்மார்கள் கொடிய வசை
மொழிகளைப் பேசி நகையாடவும்,
ஓர்தல் = புரிதல் (understanding).

"போகியாய் இருந்து யிர்க்குப் போகத்தைப் புரிதல் ஓரார்
 யோகியாய் யோக முத்தி உதவுதல் அதுவும் ஓரார்
 வேகியா னாற்போற் செய்த வினையினை வீட்டல் ஓரார்
 ஊகியா மூட ரெல்லாம் உம்பரின் ஒருவன் என்பர்."
  - சிவஞானசித்தியார், 1. 2 - 22

ஓரார் = உணரார். விளங்கிக்கொள்ளார். = those who do not understand

ஒல்லுமாறு இயலுமேல், உடன்பிறப்பின் பயன் ஓரான்;
கொல்லுமால், அவன் இவனை; குறிக்கோடி, கோடாதாய்! - கம்பர்

அழப்போகான், அஞ்சான், அலறினால் கேளான்,
எழப்போகான் ஈடு அற்றார் என்றும் – தொழப் போகான்,
என்னே இக் காலன்!ஈடு ஓரான், தவம் முயலான்,
கொன்னே யிருத்தல் குறை - ஏலாதி

20-ம் நூற்றாண்டில் முக்கியமான சமூகப் பிரச்சினை பற்றி எழுந்த கவிதையை
மகாகவி ருத்ரமூர்த்தி எழுதினார். இலங்கையில் ஓர்தல், ஓராமை வழக்கில்
உள்ளதைப் புலப்படுத்தும் கவிதை:
”"நில்!" என்றான் ஓரான் 
"நிறுத்து!" என்றான் மற்றோரான். 
"புல்" என்றான் ஓராள் 
"புலை" என்றான் இன்னோராள் 
"சொல்" என்றான் ஓராள் 
"கொளுத்து" என்றான் வேறோராள். 

கல்லொன்று வீழ்ந்து 
கழுத்தொன்று வெட்டுண்டு 
பல்லோடு உதடுபறந்து சிதறுண்டு 
சில்லென்று செந்நீர் தெறிந்து 
நிலம் சிவந்து 
மல் லொன்று நேர்ந்து 
மனிசர் கொலையுண்டார். 

ஊரெல்லாம் கூடி இழுக்க உகந்த தேர் 
வேர் கொண்டதுபோல் வெடுக்கென்று நின்றுவிடப் 
பாரெல்லாம் அன்று படைத்தளித்த அன்னையோ 
உட்கார்ந் திருந்துவிட்டாள் ஊமையாத் தான்பெற்ற 
மக்களுடைய மதத்தினைக் கண்டபடி. 

முந்த நாள் வான முழுநிலவைத் தொட்டுவிட்டு 
வந்தவனின் சுற்றம் 
அதோ மண்ணிற் புரள்கிறது! ”

Memorandum of Understanding - ஓர்மை ஒப்பந்தம், ஓர்ப்பொந்தம்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Oct 28, 2017, 11:56:24 AM10/28/17
to சந்தவசந்தம்
ஞானசம்பந்தர் மதுரை பாண்டியன் அரண்மனையிலும், கோவிலிலும் பாடிய சொல்லில் “Understanding" என்பதன் தமிழ்ப் பதத்தைப் பயன்படுத்துகிறார்:

பூமகற்கும் அரிக்கும் ஓர்வு அரு புண்ணியன்(ன்) அடி போற்றிலார்
சாம் அவத்தையினார்கள் போல்-தலையைப் பறித்து, ஒரு பொய்த்தவம்
வேம் அவத்தை செலுத்தி, மெய்ப் பொடி அட்டி, வாய் சகதிக்கு நேர்
ஆம் அவர்க்கு எளியேன் அலேன்-திரு ஆலவாய் அரன் நிற்கவே.   9

ஓர்வு = ஓர்ப்பு = understanding
பூமகற்கும் அரிக்கும் ஓர்வு அரு புண்ணியன்
= Siva, who is hard to understand by Brahma and Vishnu.

எனவே,
Memorandum of Understanding = ஓர்மை ஒப்பந்தம், ஓர்வொப்பந்தம், ஓர்ப்பொப்பந்தம்.

“மிகப் பொருத்தமான காலகட்டத்தில் எழுந்த தமிழ்த் தேசியம் குறித்த ஓர்மை, அதே சமத்தில் தோன்றிய திராவிட அரசியலால் சிதைந்து போனதா? வகுப்புவாதம் மற்றும் இனவெறுப்பை முன்னிறுத்தாமல் பண்டைய இலக்கியப் பரிச்சயங்களின் வழியாக வடித்த தமிழ்த் தேசிய நிலைப்பாட்டுடன் தமிழரசுக் கழகம் என்ற கட்சியை வழிநடத்திப் பிறகு அந்நிலைப்பாட்டிலிருந்து விலகிப் போன ம.பொ.சிவஞானம் பற்றி உங்களது கருத்து என்ன?”

”தென்குமரியை மீட்க அங்கு சென்று குரல்கொடுத்த, போராடிய ஒரே தமிழகத் தலைவர் ம.பொ.சி. தமது ‘தமிழன் குரல்’ இதழில் தொடர்ந்து எழுதிவந்தவர் அவர். அவர் நடத்திய இதர இதழ்கள் தமிழ் முரசு, செங்கோல். இந்திய ஒன்றியத்திற்குள் சுதந்திரச் சோஷலிசத் தமிழ்க் குடியரசு அமைய வேண்டும் என்று தொடர்ந்து பேசியும், எழுதியும் வந்தார். தமிழிலக்கிய ஓர்மையின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட தமிழ்த் தேசிய அரசியல் ம.பொ.சி.யுடையது.
[...]
ஆந்திர, கருனாடக, கேரள காங்கிரசுக்கு இருந்த இன ஓர்மை அப்போது தமிழ்நாடு காங்கிரசுக்கு இல்லை. அதனால் தமிழர் இழந்த மண் அதிகம். “


"கொல்" என்றான் ஓராள் 
"கொளுத்து" என்றான் வேறோராள். 

கல்லொன்று வீழ்ந்து 
கழுத்தொன்று வெட்டுண்டு 
பல்லோடு உதடுபறந்து சிதறுண்டு 
சில்லென்று செந்நீர் தெறிந்து 
நிலம் சிவந்து 
மல் லொன்று நேர்ந்து 
மனிசர் கொலையுண்டார். 

ஊரெல்லாம் கூடி இழுக்க உகந்த தேர் 
வேர் கொண்டதுபோல் வெடுக்கென்று நின்றுவிடப் 
பாரெல்லாம் அன்று படைத்தளித்த அன்னையோ 
உட்கார்ந் திருந்துவிட்டாள் ஊமையாத் தான்பெற்ற 
மக்களுடைய மதத்தினைக் கண்டபடி. 

முந்த நாள் வான முழுநிலவைத் தொட்டுவிட்டு 
வந்தவனின் சுற்றம் 
அதோ மண்ணிற் புரள்கிறது! ”

Memorandum of Understanding - ஓர்மை ஒப்பந்தம், ஓர்ப்பொப்பந்தம்

நா. கணேசன்
Reply all
Reply to author
Forward
0 new messages