Re: சாமிக்கல்

147 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Feb 5, 2016, 11:03:50 AM2/5/16
to வல்லமை, mint...@googlegroups.com, housto...@googlegroups.com, dorai sundaram, ponvenk...@gmail.com, Santhavasantham, panb...@googlegroups.com, pira...@googlegroups.com
இருவாய்/இருவாச்சி எனப்படும் பறவை பற்றிப் பின்னர் பார்ப்போம். முதலில், இருவாய்ச்சி/இருவாய் என்று முல்லைமலரின் ஜாதிகளில் ஒன்றுக்கான பழம்பெயருக்கான காரணத்தை அறியலாம். அப்பொழுது இருவாய்க் குருவியின் பெயர்க்காரணம் விளங்கும். இருவாச்சி (இருவாய்ச்சி/இருவாய்) - முல்லை மலர்களில் ஓர் இனம்.

 வை (=வய்) என்றால் கூர்மை. இதனால் வசி/வாசி/வாய் என்ற பெயர்கள் adze-axeக்கு உண்டு. வய் (= வை)தொல்காப்பியத்தில் உள்ள சொல். வை n. Sharpness, keenness, point; வையே கூர்மை. (தொல். சொல். 387.) வையிலை நெடுவேல் (இளம்பூரணர் உரை மேற்கோள்). வை பழங்காலத்தில் வய் என வழங்கியது. கண்/காண் போல, வய்/வாய் ஒரேபொருளில் வரும். வேப்பங்காய் போல காசுகள் இருப்பதைக் குறுந்தொகையும், கொங்குநாட்டில் சங்ககால வெள்ளிக் காசுகளும் இருப்பதை தமிழாசிரியர், கணியர் போளுவாம்பட்டி ஐ. இராமசாமி எனக்கு காட்டி விளக்க்கியுள்ளனர். காய்: காசு. இன்னொன்று: மை (மய்) - மய் - மசி (ink) வருகிறது அல்லவா. மய் > மசி/மாசு. மாசு ‘கறுப்பான blemish'. துய் (மலரில் உள்ள பொடி) > தூசு. வய் - வசி/வாசி என ஆகிறது. தேங்காய் மட்டையை உரிக்கும் வசி.

இருவாசி/இருவாய்ச்சி: சிந்து சமவெளியில் கிடைக்கும் ஆயுதம்:
மரங்களின் உயரத்தில் வாழும் இருவாய்/இருவாச்சி பறவைகள் அவற்றின் அலகால் பெயர் பெறுபவை.
அதேபோல், முல்லைச் சாதிகளில் இருவாய்/இருவாட்சி/இருவாட்சி அதன் நீண்ட இதழின் கூர்மையான முனையால் பெயர்பெறுபவை (Belle of India - jasminum elongata). முல்லை வகைக்கும், ஹார்ன்பில் பறவைக்கும் பெயர்க்காரணம் விளங்க தமிழர் இருவாச்சி என வழங்கிய ஆயுதத்தைக் காண்க.

ஒருபுறம் மாத்திரம் கூர்நுனி இருப்பின் வசி/வாசி/வாச்சி. இருபுறமும் கூர்மையாக இருப்பது இருவாய்/இருவாய்ச்சி (வாய்/வய் - கூர்மை. ;வய்யே கூர்மை என்பது தொல்காப்பியம்.)  இருவாச்சி படமும், இருவாச்சி முல்லைப் பூவிதழும், இருவாய்/இருவாச்சி (ஹார்ன்பில்) அலகும் ஒப்பிட்டால் பண்டைத் தமிழர் பெயர் கொடுத்த திறனைப் புரிந்துகொள்ளமுடியும். வய்யே கூர்மை என்னும் தொல்காப்பியச் சூத்திரத்தால் வசிதல் - துளைத்தல், பிளத்தல், வளைத்தல் என்ற பொருள்கொண்ட வினைச்சொல் சங்க இலக்கியத்தில் பரக்கக் காண்கிறோம். தோய்த்தல் என்னும் நொதிப்பது என்ற பொருளுடைய வினைச்சொல் தோசை என வருகிறது. அதேபோல், வை(வய்) > வசி/வாசி. இது தமிழினின்றும் வடமொழிக்குச் சென்ற த்ராவிடச்சொல்.



























பிற பின்!
நா. கணேசன்

அருண்குமார் பங்கஜ் என்பவர் அரிய வட்டெழுத்துக் கல்வெட்டுடன் கூடிய சாமிக்கல் என்று கல்வெட்டுக் குறிப்பிடும் நடுகல்லை வெளியிட்டுள்ளார்.

"கடைவெண் மலைக் கோட்டு
வேட்டுவரு இருவாய்
தொளுக் கொண்டு பட்டான்
கம்பாடரு மகன் சாமிக்கல்"

தடயம் - தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் விழுப்புரம் சி.வீரரரகவன், மங்கையர்க்கரசி நூலில் வெளியிடப்பட்டுள்ள சாமிக்கல் கல்வெட்டு.

நா. கணேசன்

pbalakrishnan1

unread,
Feb 5, 2016, 11:22:11 AM2/5/16
to santhav...@googlegroups.com
பேச்சு வழக்கில் வாச்சாத்து என்பர். 
- அரிமா இளங்கண்ணன் 



Sent from my Samsung Galaxy smartphone.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Feb 5, 2016, 1:50:01 PM2/5/16
to சந்தவசந்தம், vall...@googlegroups.com, mint...@googlegroups.com, housto...@googlegroups.com, doraisu...@gmail.com, ponvenk...@gmail.com, panb...@googlegroups.com, pira...@googlegroups.com

On Friday, February 5, 2016 at 8:22:11 AM UTC-8, pbalakrishnan1 wrote:
>பேச்சு வழக்கில் வாச்சாத்து என்பர். 
> - அரிமா இளங்கண்ணன் 

நன்றி, கவிஞர் அரிமா இளங்கண்ணன் அவர்களே. இதன் இன்னொரு பெயர் கணிச்சி. கணித்தல் = கூர்முனையால் துளைத்தல்.
எனவே, கணிகர் = கூர்மையான எழுத்தாணியால் எழுதுவோர். இந்திய பாஷைகளில் வழங்கும் கர்ணீகர், குலகர்ணி என்பதெல்லாம் இந்தக் கணித்தல் எனும் தாதுவேரில் பிறக்கும் பெயர்ச்சொற்கள். கர்ணீகரில் ஜெயங்கொண்டார், வள்ளலார், அ. கந்தசாமிப்பிள்ளை, ஔவை துரைசாமிப்பிள்ளை, ... எனப் பெரும்புலவர்கள் உண்டு.

சங்க இலக்கியத்தில் வசி எனுஞ்சொல் வினையாகவும், பெயராகவும் வழங்குதலான் இதிலிருந்து வசி/வாசி வடசொல் ஆகியுளது என உறுதிபெறச் சொல்லலாம். வடக்கே, வஶி/வாஶி என ஆகிறது. சிந்து நாகரீகத்தில் இந்த வசி/வாசி பற்றி எழுதிய அறிஞர் கட்டுரையும், அப்போது அவருக்கு எழுதிய மறுமொழியும் அனுப்புகிறேன்.

அன்புடன்
நா. கணேசன்


N. Ganesan

unread,
Feb 6, 2016, 8:19:23 AM2/6/16
to வல்லமை, mintamil, Santhavasantham, housto...@googlegroups.com, panb...@googlegroups.com


On Saturday, February 6, 2016 at 1:11:19 AM UTC-8, ruthraa e.paramasivan wrote:
அன்புள்ள திரு கணேசன் அவர்களே

கர்நாடகாவில் அரசாங்க சின்னமாய் அந்த "கண்ட பேரண்ட பட்சி"யாய்
காட்சிப்படுகிறதே அந்த "இருவாய்"க்குருவியின் சின்னம் தான் அது என்றால் நம் தமிழ் தொன்மையில் தான் கன்னட மொழி மரபு இருந்திருக்குமோ என்று எனக்கு ஒரு ஐயப்பாடு.

கண்டபேரண்டம் என்பது ஒரு கற்பனைப் பறவை. சுமேரியாவில் தொடங்கியது.  Bactria-Margiana Archaeological Complex https://en.wikipedia.org/wiki/Bactria%E2%80%93Margiana_Archaeological_Complex
வழியாக சிந்து சமவெளிக்கு, அதன் முடிவில் வருவது. சரபம் என்னும் வடிவை அடக்கிய கண்டபேரண்ட பக்ஷி என்னும்
புராணங்கள் எழுந்துள்ளன.

-----------------------

ஆனால், இருவாச்சி/இருவாய் என்னும் பறவை யினங்கள் மேற்குத் தொடர்ச்சி மலையில் மிகுதி.
மேற்குத்தொடர்ச்சி மலை என்னும் சஹ்யாத்ரியை எல்லையாகக் கொண்ட கேரளாவின்
மாநிலப் பறவை இந்த இருவாய்/இருவாய்ச்சி. இருபுறமும் கூர்மையான வாய்/வய் கொண்ட
adze-axe-னினால் பெயர் பெறும் பறவை இது. முந்தைய மடலில் இருவாச்சி எனும் முல்லை ஜாதியின்
கூர்மையான நுனி கொண்ட பூவிதழ்களைக் காட்டியுள்ளேன். இருவாச்சி/இருவாய் ஆய்தமும்,
இருவாச்சி முல்லையும் ஒப்பிட்டால் புரிந்துகொள்ளலாம்.

அடுத்து, இருவாச்சி குருவியை - ஹார்ன்பில்லை - குலச்சின்னமாகக் கொண்ட வேட்டுவர் பற்றி
விளக்க சாகாடை (காடை), பனங்காடை குருவிகளை குலச் சின்னங்களாகக் கொண்ட வெள்ளாளர்
பற்றி குறிப்பிடுகிறேன்.

ஒரு வினா:
பஃறுளி - பறுளி ஆறு என்கின்றனர் குமரி மாவட்டத்தில். அஃது - அது, இஃது - இது.
பல் (தந்தம்) கொண்ட, யானையோடு விலங்கியலில் பல மில்லியன் ஆண்டுகளுக்கு
முன் தொடர்பிருந்த விலங்கு பஃறி = பன்னி/பன்றி. பல்+தி = பஃறி, பன்னி/பன்றியிலும்
உள்ள சொல் பல் (=தந்தம்). சலாகை என்னும் மூத்த ஒருத்தலில் தந்தம் உண்டு பஃறிக்கு.
அதுதான் வராக அவதாரம். சில்/சிறு > சின்னம் “icon", அஃது, இஃது, உஃது, பஃறி, பஃறுளி (=பல் துளி)
... போல சில் + ந (n-pratya) = சிஃனம் என வடமொழியில் உள்ள தமிழ்ச்சொல்லா?
பஃறி/பஃனி = பன்னி என ஆகிவிட்டது. சிஃநம் = சின்னம், தமிழின் ஆய்தம் இன்னும்
வடமொழி வைத்துள்ளதோ?

चिह्नcihnan.impression
चिह्नcihnan.mark
चिह्नcihnan.tag  [ computer ]
चिह्नcihnan.sign
चिह्नcihnan.symbol
“@” चिह्न“@” cihnan.at sign - symbol '@'  [ computer ]

நா. கணேசன்
 

அன்புடன் ருத்ரா


N. Ganesan

unread,
Feb 7, 2016, 11:43:53 AM2/7/16
to வல்லமை, mint...@googlegroups.com, housto...@googlegroups.com, doraisu...@gmail.com, panb...@googlegroups.com, pira...@googlegroups.com, ponvenk...@gmail.com, Santhavasantham, thangam r, anantha krishnan, abiba...@gmail.com, Asko Parpola, George Hart

காய்: காசு. இன்னொன்று: மை (மய்) - மய் - மசி (ink) வருகிறது அல்லவா. மய் > மசி/மாசு. மாசு ‘கறுப்பான blemish'. துய் (மலரில் உள்ள பொடி) > தூசு. வய் - வசி/வாசி என ஆகிறது. தேங்காய் மட்டையை உரிக்கும் வசி. பை(பய்) = பசுமை/பச்சை. பைந்தமிழ் = பசிய தமிழ். பய் : பயிர்; பய்>  பாசி, துய் > தூசி, மய் > மாசு; வய் > வாசி. முய்-/மொய்- நெருங்குதல். எனவே, கலியாணங்களில் முய் வைத்தல் - நெருக்கடிக்கு உறவு/நட்புக்கு உதவிப்பணம்.
முய்- > முசு (முசுவு) : Busy ஆக இருக்கிறான் என்பதற்கு வழங்கும் பழமையான கொங்கு வழக்கு (பார்க்க: பழமைபேசி வலைச்சுவடி).

இருவாசி/இருவாய்ச்சி: சிந்து சமவெளியில் கிடைக்கும் ஆயுதம்:
மரங்களின் உயரத்தில் வாழும் இருவாய்/இருவாச்சி பறவைகள் அவற்றின் அலகால் பெயர் பெறுபவை.
அதேபோல், முல்லைச் சாதிகளில் இருவாய்/இருவாட்சி/இருவாட்சி அதன் நீண்ட இதழின் கூர்மையான முனையால் பெயர்பெறுபவை (Belle of India - jasminum elongata). முல்லை வகைக்கும், ஹார்ன்பில் பறவைக்கும் பெயர்க்காரணம் விளங்க தமிழர் இருவாச்சி என வழங்கிய ஆயுதத்தைக் காண்க.

ஒருபுறம் மாத்திரம் கூர்நுனி இருப்பின் வசி/வாசி/வாச்சி. இருபுறமும் கூர்மையாக இருப்பது இருவாய்/இருவாய்ச்சி (வாய்/வய் - கூர்மை. ;வய்யே கூர்மை என்பது தொல்காப்பியம்.)  இருவாச்சி படமும், இருவாச்சி முல்லைப் பூவிதழும், இருவாய்/இருவாச்சி (ஹார்ன்பில்) அலகும் ஒப்பிட்டால் பண்டைத் தமிழர் பெயர் கொடுத்த திறனைப் புரிந்துகொள்ளமுடியும். வய்யே கூர்மை என்னும் தொல்காப்பியச் சூத்திரத்தால் வசிதல் - துளைத்தல், பிளத்தல், வளைத்தல் என்ற பொருள்கொண்ட வினைச்சொல் சங்க இலக்கியத்தில் பரக்கக் காண்கிறோம். தோய்த்தல் என்னும் நொதிப்பது என்ற பொருளுடைய வினைச்சொல் தோசை என வருகிறது. அதேபோல், வை(வய்) > வசி/வாசி. இது தமிழினின்றும் வடமொழிக்குச் சென்ற த்ராவிடச்சொல்.











































adze-axe படம் மேலே. இதன் தொல்லியல் வரலாற்றை -
தமிழ் வடமொழிக்குத் தரும் பெயரை ஆராய்வோம்.
முல்லைப்பூ ஜாதிகளில் இந்தக் கணிச்சியால் பெயர்பெறுவது
இருவாச்சி மலர். மிக அழகானது, நறுமணம் மிக்கது.
”Belle of India" jasmine - இருவாச்சி/இருவாய்/இருவாட்சி (முல்லை இனம்),
இருவாட்சி (”Belle of India" jasmine) சமூலத்தை (root) பாலில் அரைத்து பாலில் கலந்து சாப்பிட கண் பார்வை அதிகரிக்கும். இருவாட்சி iruvāṭci n. <இரண்டு+வாய். (MTL)
ஆளுடைய பிள்ளையார் திருவுலா மாலை (11-ஆந் திருமுறை):
"புன்னாகந் தன்னைப் புணர இருவாச்சி
தன் அயலே முல்லை தலை எடுப்ப மன்னிய"

அதேபோல, adze-axe போன்ற அலகினால் ஹார்ன்பில்ஸ் புள்ளும் அதே பெயர் அடைந்துள்ளது:
இருவாய்/இருவாச்சி (Hornbill) பறவைகள்:
http://www.hornbills.in/   (எல்லாத் தகவல்களும் உள்ள வலைதளம்)

சில இருவாய் இனங்களில் அலகின் மேல் புடைக்கும்
சொண்டு (Casque) இல்லை:  கேரளாவின் மாகாணப்புள்ளான மலபார் இருவாய் புள்ளுக்கு
சொண்டு இல்லை. https://en.wikipedia.org/wiki/Malabar_grey_hornbill 
ஆனால், மற்ற இனங்களுக்கு புடைப்பாக உள்ள சொண்டு உண்டு.
சொண்டு என்றால் உதடு, எனவே இருவாய்ப் புள்ளுக்கு சொண்டுக்குருவி
எனப்பெயரும் உண்டு. மலைமொங்கான், இரட்டைச் சொண்டன்,
தெலுங்கில் கொம்முக்குருவி (= கொம்புக்குருவி), ஆங்கிலத்திலும்
அலகின் மேல் உள்ள Casque கொம்பு (ஹார்ன்). கொம்பு சூடிய
சொண்டின் மேல் இருப்பதால் கொம்முக்குருவி என்பர் தெலுங்கர்.

பொள்ளாச்சி வால்பாறையில் மலை இருவாச்சி:

சொண்டில்லா இருவாய்/இருவாச்சி
Malabar hornbill - State bird of Kerala
Ocyceros griseus -India-6-4c.jpg

சொண்டுள்ள இருவாய்ப் புள்
Great Hornbill of the Western Ghats.
Photographed at Valparai, Pollachi. Observe the Casque on its beak (it is called சொண்டு in Tamil):
A large brightly-colored bird perched in a tree

These great treasures of Wildlife are dying out in India at an alarming rate.
I discovered the role of Gharial in Linga development in Indian religion in Indus seals to
Early Iron Age in Tamil Nadu (Anthropomorphic Axe sculptures at Mottur, Udayarnaththam, Siddhannavasal, etc.,
See 16th Word Sanskrit Conference Proceedings held in Bangkok, Thailand, 2015).

கல்பட்டார் கட்டுரை:
எழும்பூர் அருங்காட்சியகத்தில் இருவாய் (புள்) கண்காட்சி:

பல மரங்கள் மேலைத்தொடர்ச்சி மலையில் வாழ
இருவாய் பறவைகள் தாம் காரணம். மரங்களும்,
இந்த அரிய பறவைகளும் அழிந்துவருகின்றன,
காடுவெட்டிகளால்.


மழைக்காடுகளின் மரணம்:

நா. கணேசன்
 


இருவாச்சி/இருவாட்சி என்னும் முல்லை இனம்: இருவாச்சி ஆயுதத்துடன் முல்லைப்பூவின் இதழை ஒப்பிடுக.

’Belle of India" Jasmine:

 






















இருவாய்/இருவாசி என்னும் ஆயுதம் போல் இருப்பதால் இருவாய்ச்சி/இருவாட்சி (முல்லை).

மௌவல் - மனைமல்லிகை:
மௌவல் - மனைமல்லிகை ‘Jasminum Sessiflorum'

நாளை, மயிலை என்று சங்க இலக்கியம், சிலம்பு கூறும் முல்லை இனத்தின்
தாவரவியல் பெயர் பார்ப்போம். கல்கி திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தில்
எழுத்தராய்ப் பணிபுரிந்தவர். ‘மயிலைக்காளை’ கதை எழுதினார்.
மயிலைக்காளை என்றால் என்ன? - என அறிந்தால் மயிலை என்னும்
முல்லை இனத்தை இனங்காண்டல் எளிது.
Reply all
Reply to author
Forward
0 new messages