கவிமாமணி பூவை அமுதன் கவிதைகள்

292 views
Skip to first unread message

Chandar Subramanian

unread,
Jul 25, 2012, 8:29:26 PM7/25/12
to santhav...@googlegroups.com
கவிமாமணி பூவை அமுதன் கவிதைகள்
 

சந்த வசந்தத்தில் அடுத்தபடியாக அறிமுகமாகும் கவிஞர் கவிமாமணி பூவை அமுதன் அவர்கள். மிகப் பிரபலமான இவர், சந்தவசந்தக் கவிஞர்களுக்கு ஏற்கனவே பரிச்சயமானவர் என்றாலும், அவர் கவிதைகளைத் தொடராக இணையத்தில் அளிக்க எண்ணியுள்ளேன்.
 
பூவை அமுதன் பற்றிய குறிப்பு:
 
ஏறக்குறைய 350 நூல்களுக்கு மேல் எழுதியுள்ள பூவை அமுதன் அவர்களின் நூல்களில் பரிசு பெற்றவைகளின் விவரம் வருமாறு:
 
1. நமது உள்ளம் (உளவியல் நூல்)
தமிழக அரசு - 1970
2. பல்லவ நாட்டுச் சிறுவர்கள் (சிறுவர் நாவல்)
கோவை எல்லப்பா ரெங்கம்மாள் அறக்கட்டளை - 1994
3. முத்து நம் சொத்து (சிறுவர் நாடகம்)
ஆனந்தாச்சாரி அறக்கட்டளை - 1995
4. கிராமத்துப் பையன் (சிறுவர் நாடகம்)
ஏ வி எம் அறக்கட்டளை - 1995
5. உயிர் உறவு (எயிட்ஸ் விழிப்புணர்வுக் காப்பியம்)
திருப்பூர் தமிழ்ச் சங்கம் - 1999
6. விழுந்ததும் எழுந்ததும் (கவிதைத் தொகுப்பு)
பாரத ஸ்டேட் வங்கி - 2002
7. உணர்வுகள் (கவிதைத் தொகுப்பு)
பாரத ஸ்டேட் வங்கி - 2005
8. அமுத ஊற்று (கவிதைத் தொகுப்பு)
கல்லாடன் கல்வி அறக்கட்டளை - 2007
 
குறிப்பிடத்தக்கவை:
 
- தெய்வமகள் (புதினம்) சென்னைப் பல்கலைக் கழகப் பட்ட வகுப்புப் பாடநூல்
- உயிர் உறவு, கவி முரசு, விழுந்ததும் எழுந்ததும் (கவிதைத் தொகுப்புகள்) கல்லூரிகளில் பாடல்நூல்
 
பெற்ற விருதுகள்:
 
1. பாரதி பணிச் செல்வர் - அ.இ.த. எழுத்தாளர் சங்கம்
2. திருக்குறள் உரைச்செம்மல் - உலகத் திருக்குறள் மையம்
3. வள்ளியப்பா இலக்கிய விருது - வள்ளியப்பா இலக்கிய வட்டம் (27/11/99)
4. சாதனையாளர் விருது - 'முகம்' இதழ் (21/11/99)
5. கவிஞர் திலகம் - தாய்மண் இலக்கியக் கழகம் (26/12/99)
6. குழந்தை இலக்கிய மாமணி - குழந்தை எழுத்தாளர் சங்கம் (27/11/99)
7. கண்ணதாசன் விருது - கவியரசர் கண்ணதாசன் இலக்கிய மன்றம் (18/12/2000)
8. சிறுவர் இலக்கிய சீர்மணி - சிறுவர் இலக்கியச் சிறகம் (21/4/2009)
9. கவிமாமணி - பாரதி கலைக்கழகம் (20/12/2009)
10. திருக்குறள் மாமணி - திருவள்ளுவர் இலக்கியக் கழகம் (2005)
11. பாரதி புரஸ்கார் பட்டயம் - பாரதி யுவகேந்திரா (2003)
12. திருக்குறள் மாமணி - உலகத் திருக்குறள் வாழ்வியல் நெறிச் சங்கம் (30/7/2007)
முகவரி:
 
கவிமாமணி பூவை அமுதன் அவர்கள்
(எஸ் ஆர் கோவிந்தராஜன் MA BT)
மனை எண் 142, இரண்டாம் தெரு
பாஸ்கர் காலனி, சென்னை 600092
தொலைபேசி: 9884449989

--
அன்புடன்
சந்தர் சுப்ரமணியன்
www.MovingMoon.com

Chandar Subramanian

unread,
Jul 25, 2012, 8:32:21 PM7/25/12
to santhav...@googlegroups.com
செம்மொழிக் கவியின்பம் - வாழ்த்தி யருள்க
 
நாவேந்திப் புலவரெலாம் நல்லறங்கள் மொழிவதனால்
.. நாடோறும் வளரும் தமிழே!
நஞ்சனையார் வஞ்சனையால் நலிவுறவே செய்தாலும்
.. நலம்பெருகித் திகழும் தமிழே!
 
மூவேந்தர் மூச்செனவே முத்தமிழாய் இத் தரணி
.. முழுமையுமாய் ஒளிர்ந்த தமிழே!
முறைதவறும் போதரசர் மூளையிலே தெளிவேற்ற
.. முன்புலவர் மொழிந்த தமிழே!
 
பூவேந்தும் தேனினிமை புகன்றிடுவோர் வாய்மொழியாய்ப்
.. புத்துணர்வைப் பொழியும் தமிழே!
புதுமைநலம் தினம்பெருக பழைமைவளம் மனம் குளிரப்
.. புவனமெலாம் உலவும் தமிழே!
 
பாவேந்தர் தன்மானப் பண்பாட்டுப் பாக்களினால்
.. பண்டைநிலை கண்ட தமிழே!
பண்படவே பயின்றிடுவோர் பாப்புனைவில் தேர்ச்சியுறப்
.. பற்றுடனே வாழ்த்தி யருளே!

Kavingar Jawaharlal

unread,
Jul 26, 2012, 12:25:21 AM7/26/12
to santhav...@googlegroups.com
அன்புச் சந்தர்! என் இனிய நண்பர் பூவையாரின் கவிதைகளை இடுவது எனக்குப் பெரு மகிழ்வைத் 
தருகிறது.

2012/7/26 Chandar Subramanian <chandarsu...@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
 
 



--
பொற்கிழிக்கவிஞர்
டாக்டர். ச.சவகர்லால்
கைபேசி : +91- 9790846119


Ka Thamizhamallan

unread,
Jul 26, 2012, 1:26:47 AM7/26/12
to santhav...@googlegroups.com
அன்பார்ந்த சந்தர் அவர்களுக்கு
பூவைஅமுதன் படைப்புகளை இடு முயல்வது பாராட்டத்தக்கது.
க.தமிழமல்லன்


26 ஜூலை, 2012 9:55 am அன்று, Kavingar Jawaharlal <kavingar....@gmail.com> எழுதியது:
அன்புச் சந்தர்! என் இனிய நண்பர் பூவையாரின் கவிதைகளை இடுவது எனக்குப் பெரு மகிழ்வைத் 
தருகிறது.


2012/7/26 Chandar Subramanian <chandarsu...@gmail.com>
செம்மொழிக் கவியின்பம் - வாழ்த்தி யருள்க
 
நாவேந்திப் புலவரெலாம் நல்லறங்கள் மொழிவதனால்
.. நாடோறும் வளரும் தமிழே!
நஞ்சனையார் வஞ்சனையால் நலிவுறவே செய்தாலும்
.. நலம்பெருகித் திகழும் தமிழே!
 
மூவேந்தர் மூச்செனவே முத்தமிழாய் இத் தரணி
.. முழுமையுமாய் ஒளிர்ந்த தமிழே!
முறைதவறும் போதரசர் மூளையிலே தெளிவேற்ற
.. முன்புலவர் மொழிந்த தமிழே!
 
பூவேந்தும் தேனினிமை புகன்றிடுவோர் வாய்மொழியாய்ப்
.. புத்துணர்வைப் பொழியும் தமிழே!
புதுமைநலம் தினம்பெருக பழைமைவளம் மனம் குளிரப்
.. புவனமெலாம் உலவும் தமிழே!
 
பாவேந்தர் தன்மானப் பண்பாட்டுப் பாக்களினால்
.. பண்டைநிலை கண்ட தமிழே!
பண்படவே பயின்றிடுவோர் பாப்புனைவில் தேர்ச்சியுறப்
.. பற்றுடனே வாழ்த்தி யருளே!



--
அன்புடன்
சந்தர் சுப்ரமணியன்

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
--
பொற்கிழிக்கவிஞர்
டாக்டர். ச.சவகர்லால்
கைபேசி : +91- 9790846119

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:

Subbaier Ramasami

unread,
Jul 26, 2012, 7:59:40 AM7/26/12
to santhav...@googlegroups.com
பூவை அமுதன் எனது இனிய நண்பர். நல்ல கவிஞர்.  பழகுதற்கு இனியவர்.  இத்தனை புத்தகம் எழுதியும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாதவர். அவர் கவிதைகளைச் சந்தர் இங்கே இடுவதில் மகிழ்ச்சி.

இலந்தை

2012/7/25 Chandar Subramanian <chandarsu...@gmail.com>

Subbaier Ramasami

unread,
Jul 26, 2012, 8:02:22 AM7/26/12
to santhav...@googlegroups.com
நாவேந்திப் புலவர்-  வாய்ஜாலத்தால் வீண் ஜம்பமடிக்கும் புலவர்கள்
நாவேந்தி, புலவரெல்லாம் - தமிழை நாவில் சுமந்து பாராட்டும் புலவர்கள்

இலந்தை



2012/7/25 Chandar Subramanian <chandarsu...@gmail.com>
செம்மொழிக் கவியின்பம் - வாழ்த்தி யருள்க

Siva Siva

unread,
Jul 26, 2012, 8:08:47 AM7/26/12
to santhav...@googlegroups.com
நீங்கல் சொல்லவரும் கருத்து எனக்குப் புரியவில்லை.

தமிழைத் தம் நாவில் ஏந்திப் புலவர்கள் எல்லாம்...... என்றுதானே பொருள்படும். அங்கே 'ப்' மிகும்தானே?

2012/7/26 Subbaier Ramasami <elan...@gmail.com>

Chandar Subramanian

unread,
Jul 26, 2012, 8:28:19 PM7/26/12
to santhav...@googlegroups.com
செம்மொழிக் கவியின்பம் - புத்தாண்டு நன்னாள்
 
புத்தாண்டுத் தமிழருக்குத் தைமுதல் நாள்
.. பூரிப்பாய்க் கதிரவன்முன் பொங்கல் வைப்போம்!
புத்தரிசி பானையிலே பொங்கும் போது
.. பொங்கலோ பொங்கல் என்றே நன்றி பொங்க
சத்தான விளைபொருளை வயல்கொழிக்கச்
.. சார்பான ஒளிவெப்பக் கதிரோன் தன்னை
முத்துப்போல் மழைத்துளிகள் ஈந்த வானை
.. மொத்தமுமாய் இயற்கையினைப் போற்றுகின்றோம்!
 
மாந்தருடன் வயல்வெளியில் சேர்ந்து ழைத்த
.. மாடுகளை நன்றியுடன் மறுநாள் போற்றி,
மாந்ததற்கு மகிழ்ச்சியினை மனத்துள் பொங்கும்
.. மாட்டுப்பொங் கல்நாளில் கொண்டாட் டத்தில்
நீந்துகின்ற மக்களுடன் உறவும் சேர
.. நெடுஞ்சாலை தனில் வண்டி மாடும் ஓடும்!
பூந்துளிர்போல் வளர்ந்துள்ள கன்னிப் பெண்ணும்
.. பொங்கிடும்நாள் மறுநாளாம் கன்னிப் பொங்கல்!
 
கன்னிபொங் கல்காணும் பொங்கல் என்று
.. காரணங்கள் பலவாக மூன்றாம் பொங்கல்
இன்பமுடன் கொண்டாடும் தமிழர் பண்பில்
.. இல்லத்தில் காணவரும் உறவை நட்பை
அன்போடு வரவேற்று விருந்த ளிப்போம்
.. அகம்மகிழக் காணுதற்கும் வெளியே செல்வோம்!
தன்னுள்ளம் கவர்ந்தவரை ஓரக் கண்ணால்
.. தாக்குதற்கும் பருவத்தேர் ஓடும் நன்னாள்!

Chandar Subramanian

unread,
Jul 27, 2012, 8:43:18 PM7/27/12
to santhav...@googlegroups.com
செம்மொழிக் கவியின்பம் - தை பிறந்தால்...
 
சிற்றூரில் பேரூரில் தமிழினத்தார்
.. சிறப்பாகக் கொண்டாடும் தைப்பொங் கல்நாள்
உற்றதமிழ்ப் புத்தாண்டாய் உவக்கின் றோம்நாம்
.. உழுதுலகுக் குயிர்தருவார் நல்லு ழைப்பால்
பெற்றதனா லாம்விளைவைக் கண்டுவந்து
.. பெருமகிழ்வாய் பொங்கலெனும் விழாவெடுப்போம்!
கற்றோரும் மற்றோரும் கதிரோன் முன்னே
.. களிப்போடு படைத்திடுவார் பால்வெண் பொங்கல்!
 
கரும்புடனே இஞ்சிமஞ்சள் வெல்லம் எல்லாம்
.. கலயத்துப் பொங்கலுடன் இனிய காட்சி
தரும்விதத்தில் இல்லத்தில் பெறும் மகிழ்ச்சி
.. தாலியேற்றுச் சென்றமகள் துணைவனோடு
பெரும்மகிழ்ச்சி வெள்ளத்தில் உள்ளம் நீந்த
.. பெற்றோரின் விழிக்குளத்து வெள்ளம் காண்போம்!
வரும்மகிழ்ச்சி வதுவைக்குக் காத்திருப்போர்
.. வயதங்கே தைதைதை எனக் குதிக்கும்!
 
வழிபிறக்கும் தையிலென்று வரவேற்போடும்
.. வந்ததே தை சீர்செய்யச் செலவுக் கென்று
விழிபிதுங்கி நிற்போரும் வீணே காலம்
.. விரைகிறதே ஆண்டுகளாய் வயதும் என்றே
அழுகின்ற மௌனத்துக் காட்பட் டோரும்
.. அவதியுறும் நிலையில் துன்பத்தை மீறிக்
குழந்தைபெற மகள்வருகைக் குதூகலிப்பில்
.. குறைமறந்து குதிப்போரும் கொண்ட தையே!

Kavingar Jawaharlal

unread,
Jul 28, 2012, 9:47:32 AM7/28/12
to santhav...@googlegroups.com
பாடல் நன்று.

2012/7/28 Chandar Subramanian <chandarsu...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
 
 

--
பொற்கிழிக்கவிஞர்
டாக்டர். ச.சவகர்லால்
கைபேசி : +91- 9790846119


Chandar Subramanian

unread,
Jul 28, 2012, 8:54:19 PM7/28/12
to santhav...@googlegroups.com
செம்மொழிக் கவியின்பம் - செம்மொழிப் பொங்கல்
 
பூமிவிளை பொருள்களினால் பொலிவை ஏற்கும்
.. புத்தாண்டு தைமுதல்நாள் பொங்கல் வைப்போம்!
நாமுழைத்துப் பெறுமின்பம் நாட்டு மக்கள்
.. நலமுறவே செய்துமன நிறைவை ஏற்போம்!
தேமதுரத் தமிழொலியே விண்ணை முட்டி
.. திசையெங்கும் பொங்கலொலி எழுப்பிச் சேர்ந்து
பூமணத்துப் பொழிலிடையே இயற்கை யன்னைப்
.. புகழ்பாடி மகிழ்ச்சியிலே திளைப்போம் நாமே!
 
கதிரவனின் ஒளிவெப்பம் காற்று வானம்
.. கரத்தளிக்கும் அமுதமெனும் மழையும் ஓடும்
நதிநீரும் வெள்ளத்தைத் தேக்கும் ஏரி
.. நன்செயென்றும் புன்செயென்றும் உயிர்கள் வாழ
அதிவளங்கள் அளிக்கிற அன்னை பூமி
.. அகங்குளிர உழைப்பேற்கும் உழவர் வாழ்க!
கதிமாறிப் போயுலகில் எங்கோ வாழ்ந்தும்
.. கனித்தமிழர் மறவாப்பண் பாட்டுப் பொங்கல்!
 
மணம்காண இருக்கின்ற மக்கள் நெஞ்சில்
.. மலர்கின்ற கற்பனையில் மகிழ்ச்சிப் பொங்கல்
மணம்கொண்டோர் மருமருக்க ளாக மாறி
.. மறுவீட்டில் புது உறவில் அன்புப் பொங்கல்!
குணமுள்ள துணையோடு மனைய றத்தில்
.. குறைநிறைகள் தாண்டியேதம் மக்கள் சொந்தம்
இணங்கிவரும் நட்புடனே குலவும் பொங்கல்!
.. இனியகவி பொங்க உணர்வேற்றும் தானே!
 
சிந்தைநலச் சிறப்புடையோர் மாட்டுப் பொங்கல்!
.. செந்தமிழைச் செம்மொழியாய்க் காணும் பொங்கல்!
சொந்த இனம் நாடுநலம் செழிக்கத் தொண்டு
.. சோர்வின்றிச் செய்தவர்க்கு வெற்றிப் பொங்கல்!
நந்தமிழர் ஆட்சிமுறை பெரியார் கொள்கை
.. நம்மறிஞர் அண்ணாவின் தடத்தில் சென்று
இந்தியநா டிதற்கேற்ற எடுத்துக் காட்டாய்
.. இயங்கிடநாம் பெருமிதத்தில் பொங்கு வோமே!

Chandar Subramanian

unread,
Jul 29, 2012, 8:40:48 PM7/29/12
to santhav...@googlegroups.com
செம்மொழிக் கவியின்பம் - தாய்ப்பால்
 
தன்னினத்தைத் சாய்ப்பதற்கு வெட்டுக் கத்தி
.. தன்பிடியாய் அதேமரத்துக் கிளையின் கொம்பு
தன்மொழியைச் சிதைப்பதற்குச் சிலர் துணிந்து
.. தகுதியிலாப் புனைவுகளைப் புதுமை என்பார்!
அன்னியரின் மொழிச்சொற்கள் திணித்து வைப்பார்;
.. அவியலுக்குக் கவிதையெனும் பெயரும் சூட்டிப்
புன்னகைப்பார்! பொன்னைவிட மின்னும் போலி
.. புதுமெருகும் ஒதுங்கிவிடச் சிரிக்கும் உண்மை!
 
வெண்திரையில் கரும்புள்ளி கவனம் ஈர்க்கும்!
.. வெண்மதிமேல் குவிமேகம் வெளிச்சந் தின்னும்!
புண்சீழாம் செங்குருதிச் சீர்கேட் டாலே
.. புரையோடும் பெருங்குற்றம் புடைத்து வீழ்த்தும்!
கண்ணைப்பொய் மயக்குவதைப் பழக்கம் நீக்கும்!
.. கனிச்சுவையில் காரமிட்டுச் சுவைப்பார் உண்டோ?
பண்ணிசையே பாடுபொருள் மாற்று மானால்
.. பாழாகும் பாடலுடன் படைத்தோன் பேரும்!
 
வண்ணங்கள் ஓவியத்தின் பொலிவைக் கூட்டும்
.. வளர்கவிதை உணர்வுகளின் தெளிவைக் காட்டும்
எண்ணங்கள் பிறமொழியின் சொற்கூட்டங்கள்
.. என்றானால் பலவீட்டுப் பிச்சைச் சோறே!
விண்ணூற்றாம் மழைநீரின் வெள்ளந்தன்னில்
.. விழிமிடத்தின் மண்நிறமும் சுவையும் சேரும்!
தண்டமிழ்த் தாய் மொழிப்பாலில் கலப்பைச் சேர்ப்போர்
.. தம்சேய்க்கு நோய்சேர்க்கத் தயங்கா தோரே!

Kavingar Jawaharlal

unread,
Jul 30, 2012, 6:12:08 AM7/30/12
to santhav...@googlegroups.com
நல்ல கவிதை.

2012/7/30 Chandar Subramanian <chandarsu...@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
 
 

Chandar Subramanian

unread,
Jul 31, 2012, 8:42:40 PM7/31/12
to santhav...@googlegroups.com
கதி மாறும் கவிதை
 
பிழையாக எழுதியதைச் சுட்டிக் காட்ட,
.. பெருங்கோபம் கொள்பவனும் கவிஞன் தானா?
அழைப்பதற்கோர் அடைமொழியைத் தானே சொல்லி
.. ஆனந்தப் படுவதன்றிப் பிழையை மாற்றான்!
தழைத்துள்ள மொழியறிவை வளர்த்துக் கொள்ளல்
.. தகும்தானே! அப்போதே கறந்த பாலை
வழியத்தான் காய்ச்சியது கெட்டுப் போனால்
.. வடிகட்டிக் குடிப்பாரா? கொட்டு வாரா?
 
கவித்துவத்தை நாம்கறந்த பாலாய்க் கொண்டால்
.. காட்டுமதில் மொழிக்கலப்போ பிழையோ நன்றோ?
செவிக்கினிய சொற்களினால் பொருள் பொருந்தச்
.. செய்யாமல் நயபாவ எழிலுமின்றி
அவியலெனக் காட்டுதலே புதுமை என்றே
.. அதிமேதைத் தனமாக அகந்தை யோடு
குவிக்கின்றேன் கட்டுகோப் பெதற்காம் என்பார்
.. குழப்புதலும் கவித்திறத்தின் புதுமை யாமோ?
 
இலக்கணம் என்பதன்பொருளே அழகு தானே?
.. இதைமறுப்போர்க் கேற்பட்ட இன்னல் யாதோ?
பலமொழியார் பாராட்டும் குறளைத் தந்தான்
.. பாட்டனவன் ஈரடியால் உலக ளந்தான்
நலம்கூடும் கருத்தெதனைப் புதிதாய்ச் சொல்ல
.. நான்வேண்டேன் இலக்கணக் கட்டுப்பாடென்பான்!
சில ஆண்டு கடந்தாலும் என்றோ வந்த
.. சேதிசொல்லும் உரைநடையும் புதுப்பா தானே?

Subbaier Ramasami

unread,
Aug 1, 2012, 7:05:21 AM8/1/12
to santhav...@googlegroups.com

அப்போதே கறந்த பாலை
வழியத்தான் காய்ச்சியது கெட்டுப் போனால்
.. வடிகட்டிக் குடிப்பாரா? கொட்டு வாரா? 

மிக அருமையான உவமை

இலந்தை


2012/7/31 Chandar Subramanian <chandarsu...@gmail.com>

Kavingar Jawaharlal

unread,
Aug 1, 2012, 7:42:08 AM8/1/12
to santhav...@googlegroups.com
நல்ல கவிதை 

2012/8/1 Subbaier Ramasami <elan...@gmail.com>

Chandar Subramanian

unread,
Aug 1, 2012, 8:40:52 PM8/1/12
to santhav...@googlegroups.com
சிறுமையும் பெருமையும்
 
முத்திரையால் மதிப்புயர்ந்த ஐந்து ரூபாய்
.. முழுரூபாய் அரைரூபாய் பெரிதானாலும்
அத்தனையும் தனக்கடக்கம் எனச் சிரிக்கும்!
.. அழகான உடலமைப்புக் குள்ளே மூளை
சொத்தாக விளங்குவது தோற்றம் கொண்டா?
.. சுன்னத்தை அழகாகச் சுழித்திருந்தும்
பத்தென்ப(து) ஒன்றுமுழு எண்ணால் தானே!
.. பதவிக்குப் பெருமைமதி வெளிச்சம் தானே?
 
கத்துவதை உச்சயிசைப் பாட்டென் போரைக்
.. கலைஞானம் உள்ளவராய்க் கணித்தல் குற்றம்!
மெத்தசுகம் வேண்டுமெனில் உழைப்பை நாட
.. மேனிக்குச் சுளுகென்போன் மேன்மை யோனா?
சுத்தியலைச் செய் இரும்பு வலிமை தந்தால்
.. தூக்கியதைப் பயன்படுத்த மரம்தான் காம்பு!
சத்தமின்றி ஓடுகின்ற காலம் காட்டும்
.. சாதனைத்தில் மணிமுள்ளே குட்டை தானே!
 
உருவுகண்டே எள்ளாமை வேண்டும் என்பார்
.. உண்மைக்கு விசுவரூபம் தேவை யில்லை!
இரும்பென்றால் துருப்பிடிக்கும் என்று தானே
.. எடுத்துக்கூர் தீட்டிடுவார் பயன்படுத்த!
அரும்சுவையாம் உணவுவகை என்றாலும் நம்
.. அளவுக்கு மீறினது வழி திரும்பும்!
பெருமைக்குத் தோற்றந்தான் ஏதென் பாரின்
.. பெருமூளை அடக்கத்தைக் கருதல் நன்றே!

Chandar Subramanian

unread,
Aug 2, 2012, 8:53:38 PM8/2/12
to santhav...@googlegroups.com
அழகு
 
விட்டுக் கொடுத்தவர் கெட்டுப் போனதாய்ப்
பட்டுணர்ந் தோர்கள் பகரவே மாட்டார்
வீம்பென் றாலது விடமுடை பாம்பு!
விவேகம் சீறும் காளைக்குத் தாம்பு!
கண் அவனாகக் கருதிடும் மனைவியைப்
பெண் ஒளி விளக்காய்ப் பேணலே சிறப்பு!
மனநலம் மிக்க மனைவியைத் தக்க
மணம்கொளும் முன்னே மனமொன் றியவரின்
வினைகளே இன்ப துன்பத்தின் வித்தாம்!
கட்டிக் கொண்டவர் கட்டப் பட்டவர்
காதல் முன்னோ கடிமணம் பின்னோ
மோதல் இன்றேல் சாதனை தானே!
வேதனை யிருவர் விவேகமும் தடுக்கலாம்!
எதிர்ப் பார்ப்பென்பது இல்லறம் நல்லறம்
எனிலதில் ஏற்றத் தாழ்வுக் கிடமிலை!
வண்டியை யிழுப்பதில் சண்டித் தனமிலா
மாடுகள் தாமே வீடுபோய்ச் சேரும்!
மதித்தல் என்பது மனநலச் செயலே!
துதித்தல் என்பது பரிவின் விழைவே!
எதையும் சமமென ஏற்றிடும் பக்குவம்
சதையும் நகமுமாய்க் கதையை வளர்க்கும்
அதிகம் என்பது ஆபத்துக் கருகில்
அளவுடன் அமைவதே அழகாய் விளங்கும்
வண்ணப் பூச்சை வாரி யிரைத்த
சித்திரம் சிறப்பெனில் ஒத்துக் கொள்வோமா?
பெண்ணின் பெண்மையும் ஆணின் திண்மையும்
வண்ணம் அளவாய் வரைந்த நல்லோவியம்!
கண்ணில் வலம் இடம் காரணம் வைத்துப்
பார்வையின் சிறப்பைப் பகுத்தறி வாரோ?
வரம்பில் நிற்பதே வழங்கும் சிறப்பை!
இரும்போ துரும்போ எதற்கும் எல்லை
உண்டெனக் கொண்டிடில் உளநிறை வாமே!

Chandar Subramanian

unread,
Aug 3, 2012, 8:47:44 PM8/3/12
to santhav...@googlegroups.com
கார்மேகக் காட்சி
 
உயர்வானில் கருமேகத் திரட்சி நெஞ்சில்
.. உருவாக்கும் சிந்தனைகள் வெவ்வேறாகும்
செயலேதோ நடக்கின்ற தோற்றம் காட்டும்
.. சிறுகுன்றின் மேல்மாட்டுமந்தை யென்பார்
புயலடித்ததால் பிய்ந்த குடிசைத் தோற்றம்
.. பூஞ்சோலைக் கிருள்மாலை போர்த்த காட்சி
துயர்தோய்ந்த குடும்பத்தார் உழைத்தலுத்துத்
.. துணியின்றித் துயில்காட்சி அவலம் என்பார்!
 
மார்பினிலே வேல்பாயப் போர்களத்தில்
.. மாண்டுகிடக்கும் மறவர் மனைவி மக்கள்
போர்வையெனக் கவிழ்ந்தபடி உடல்கள் மீது
.. பொங்கிவரும் கண்ணீரைச் சொரிந்தெழுந்தே
பாரந்தப் பகைவரது தலைகள் கொய்யப்
.. பாய்ந்துசெல என்மகனும் உள்ளான் என்றே
ஆர்த்தெழுந்து துடிக்கின்ற காட்சி என்றும்
.. அருங்கவிஞர் பாப்புனைய வைக்கத் தோன்றும்!
 
இரண்டுருளும் கருமேகம் பூமி நோக்கி
.. எப்போது பெருமழையாய்க் கொட்டும் என்று
மருண்டபடி மந்தைகளைக் கொட்டில் சேர்க்க
.. மனம்விரைய அதட்டியவா றோட்டிச் செல்லும்
சிறுவர்கள் பரபரப்பாய் இயங்குதற்குச்
.. சேர்ந்ததுவோ வான் திரைஅக் காட்சி என்றே
புருவத்தின் குடையாகக் கைவிரல்கள்
.. பொருந்திடவே வான்நோக்கி நின்றேன் நானே!

Kavingar Jawaharlal

unread,
Aug 4, 2012, 12:56:58 AM8/4/12
to santhav...@googlegroups.com
அருமை நண்பர் பூவை அமுதன் ஒரு சாதனையாளர் .நல்ல சிந்தனையாளர். வரும் அவர் கவிதைகள் சிந்தனைக்குத் தீனி.பாராட்டுகள்.

2012/8/4 Chandar Subramanian <chandarsu...@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
 
 

Chandar Subramanian

unread,
Aug 4, 2012, 9:08:49 PM8/4/12
to santhav...@googlegroups.com
உண்மை வளர்க்கும் தண்மை
 
காணுதற்குக் கண்ணிருத்தல் போலே - இல்லறம்
பேணுதற்குப் பெண்ணிருப்ப தாலே
பூணுதற்கு நல்லொழுக்கம் அணியாம் - என்றும்
பொதுநலத்துக் குதவிடுவோன் மணியாம்
மனிதநேயம் தனைவளர்த்தல் சிறப்பு - அறத்தின்
மாண்புணர்ந்து பெருக்குதல் நல் பொறுப்பு
ஏந்துபுகழ் நிலைத்தலே நம் இருப்பு! - பிறரை
இழிவு செய்யும் மடமைக்கு நம் மறுப்பு!
கவிதை செய நல்லுணர்வே தூண்டும்! - புதுமை
கருத்துணர்த்தும் முறைமையிலே வேண்டும்!
செவிக்கு விருந் தளிப்பதிலே உண்மை - கூடச்
சிறப்பிருந்தால் சிந்தை சேரும் தண்மை.

Chandar Subramanian

unread,
Aug 5, 2012, 8:52:11 PM8/5/12
to santhav...@googlegroups.com
காலக் கணிப்பு
 
நில்லாமல் செல்லும் காலம் - நொடி
நிகழ்வுகளில் ஒன்றல் சீலம்
கல்லாமல் கடத்தும் காலம் - அது
கருத்துணர்வில் அழிக்கும் கோலம்
சொல்லாமல் விரையும் காலம் - அது
சுணக்கமிலாச் செயலின் மூலம்
வல்லாண்மை என்னும் காலம் - அதில்
வழுவாமை வெற்றி ஆளும்!
 
காலத்தின் நேர்மை கண்டு - நாம்
கடனாற்றின் நன்மை உண்டு
சீலத்தில் சிறந்தோர் என்போர்ச் - செயும்
சீர்பணி காலம் வெல்லும்
வேல்நுனிக் கூர்மை என்றால் - அதை
வீசுவோன் குறியே நன்றாம்
ஞாலத்தின் வரலாறெல்லாம் - பின்
நடப்போர்க்குப் பாடம் சொல்லும்
 
வளங்களை வகுக்கும் காலம் - ஒரு
வரையறை ஒழுங்கில் நீளும்
களங்களில் பொலிவை ஏற்றும் - அதன்
கதியிலே வளரும் மாற்றம்
காலத்தைச் சோதிடத்தால் - சிலர்
கணிப்பதுகண்கட்டு வித்தை
ஞாலத்தை வென்ற கவிஞன் - ச்சீ
சோதிடந் தனையிகழ் என்றான்!

Chandar Subramanian

unread,
Aug 6, 2012, 8:36:45 PM8/6/12
to santhav...@googlegroups.com
மாறா மதிப்பீடு
 
படைப்பவன் தினமும் படிப்பவனானால்
.. பதிந்திடும் பண்புகள் பலவும்!
.. பலர்க்கிது தெரிந்தும் பதித்திட மனத்தில்
.. பற்றிட மறுப்பது நலமோ?
 
உடைபடும் கிளையும் உடனடி துளிர்த்தே
.. உதவிடும் கருத்தினில் நிலவும்!
.. உயர்த்திடும் உண்மை உறுதியில் நன்மை
.. உண்டெனக் கொண்டிடல் பலமே!
 
கொடுத்திடும் குணத்தைக் கெடுப்பவன் அடையும்
.. குதூகலம் வஞ்சகம் மடமை!
.. குறும்பினை விரும்பிக் குதர்க்கமாய் உரையில்
.. குறுக்கிடல் இழிவெனப் படுமே!
 
விடுத்தவர் மறைய அடுத்தவன் சதியில்
.. விபத்தெனச் சிக்குதல் கொடுமை!
.. விலைகொடுத் துயர்வை விரும்பியே பெற்று
.. வீரனாய் நடிப்பதும் கெடுமே!
 
விதிமுறை மீறிடும் சதிசெயல் யாவையும்
.. விளம்பர வெளிச்சமா மறைக்கும்?
.. வேற்றுமை வளர்ப்பவர் நாட்டிலே உயர்ந்திடும்
.. விந்தையா தீமைகள் குறைக்கும்?
 
நதியினில் பெருகிடும் நீரினைப் பதுக்கிடும்
.. நஞ்சினர் நெஞ்சிலா மேன்மை?
.. நலிந்தவர் உழைப்பினை நரியாய் உறிஞ்சிடும்
.. நயவஞ் சகர்க்கா ஆண்மை?
 
நிதிகொடுத் துயர்வை நேர்மை யிலாவழி
.. நேயமாய்ப் பெறுவது கொடுமை!
.. நீதி பொதுவென நினையா மனத்தினர்
.. நெருக்கமாய் நிற்பவர் அடிமை!
 
சதிசெயல் ஊழலில் சேர்த்திடும் பெரும்பணம்
.. சத்தமற் றிருக்க வோ நாடு?
.. சந்ததி வாழ்ந்திடச் சொந்தநா டேய்த்திடும்
.. சழக்கரால் நேர்ந்திடும் கேடு!

Chandar Subramanian

unread,
Aug 7, 2012, 8:33:46 PM8/7/12
to santhav...@googlegroups.com
நூல்கள்
 
கைப்பிடித்து நடக்கின்ற உறவைப் போலக்
.. கட்டிலிலே திறந்தபடி பக்கம் காணப்
பைக்குள்ளே பத்திரமாய் இருக்கும் சொத்தாய்ப்
.. பலவின்பப் பொருளடக்கி அமைதி யாக
வைப்புநிதி எனமதிக்கும் மாண்பை ஒத்து
.. வைத்திருக்கப் பிறர்போற்றும் பெருமை யோடு
தைத்திடவே அறிவுறுத்தும் சான்றோர் ஞானத்
.. தடங்களைநாம் தொடர்ந்திடவே துணையாம் நூலகள்!
 
படித்தறிந்து பண்புகளை வளர்த்துக் கொள்ளும்
.. பயிற்சியினால் பார்போற்றும் பாங்கில் வாழ
முடியுமென்னும் சான்றுகளாய் முன்னோர் சென்ற
.. முறைமைகளின் தடம்பற்றிச் செல்ல வெல்ல
அடிப்படையாம் பொதுஅறிவை வளர்த்துக் கொள்ள
.. ஆர்வமுடன் பொருள்விளங்கப் படிக்கும் நூல்கள்
படிப்படியாய் எண்ணம்சொல் செயல்கள் யாவும்
.. பக்குவமாய்ப் பண்படுத்திச் சிறப்பைச் சேர்க்கும்!
 
பன்னாட்டு நல்லறிஞர் கருத்து வாழ்வு
.. பலதுறையில் வல்லுநர்கள் புலமை மேன்மை
பொன்மொழிகள் குறிக்கோள்கள் ஆய்வு நோக்கு
.. புதிர்களுக்குப் பொருத்தமுற விடைகள் வாழ்வின்
இன்பங்கள் இன்னல்கள் தாக்கம் நீக்கம்
.. என்றெங்கே என்னென்ன மாற்றம் சீற்றம்
வென்றபினும் நொந்தழியும் சிந்தை விந்தை
.. விதம்பலவாம் நிதம்படிக்க உதவும் நூல்கள்!

Chandar Subramanian

unread,
Aug 8, 2012, 9:08:58 PM8/8/12
to santhav...@googlegroups.com
வாசிப்பு
 
செலவழித்துத் தேடுபொருள் தாரா இன்பம்
.. சேர்க்கின்ற அறிவமுதின் திரட்டாய் உன்னுள்
பல அழியாப் பொருள்களுடன் பண்பை யூட்டிப்
.. பக்கத்தில் துணையிருந்து தக்க நேரம்
நலம்விளைக்கும் வளநிதியே! உளம்விரும்பும்
.. நன்மைதரும் அறிவுநூலே! மனமே மாறிச்
சிலபோதே உனைத்தீண்டா திருந்தாலும் நீ
.. சினவாமல் என்சிந்தை உறவா வாயே!
 
தாள்மீது விழிபாய்ச்சித் தகவல் சேர்த்துத்
.. தரமாக எழுதிடவும் மேடை யேறி
நாளெல்லாம் பேசிடவும் நற்கருத்தால்
.. நாடுபுகழ் நல்லறிஞனாக என்னைத்
தோள்சுமக்கப் பொன்னாடை பூவா ரத்தால்
.. துவளாமல் வாழ்த்தொலிகள் முழங்கக் கேட்கும்
ஆளாக்கி வைத்துமகிழ் வூட்டும் நூலே!
.. அறிவாழி, அறவாழி, என்வாழ்வேநீ!
 
கன்னிமரா நூலகத்தில் அறிஞர் அண்ணா
.. கைப்படாத நூலொன்றும் இல்லை என்பார்!
சொன்னயமும் பொருள்நயமும் சொட்டும் வண்ணம்
.. சொக்கவைக்கும் உவமைகளை எழுத்தில் பேச்சில்
பன்மணிசேர் மாலையாக அள்ளி வீசிப்
.. பாசநேரம் பரிமளிக்க அறிவோ டாற்றல்
மின்னலதன் கீற்றாய்ப்பொன் ஒளியைப் பாய்ச்சும்
.. மேனிலையுண் டாக்குபவை நூல்கள் தாமே!
 
பிணியுற்றுப் படுக்கையிலே இருந்த போதும்
.. பெருமிதமாய் தம்கையில் படித்த நூலைப்
பணிவோடு மருத்துவர்முன் நீட்டிக் காட்டிப்
.. படித்திடுவேன் இருநாளில் முற்றும் பின்னர்
துணிந்திடுவேன் அறுவைக்கே என்றார் அண்ணா!
.. தூயவர்க்கு நூற்படிப்பில் ஆர்வம் என்னே!
அணிமணிகள் அலங்காரம் சிறப்பே அல்ல!
.. அறிவுடையோர்க் கழகென்றும் நூல்வா சிப்பே!

Chandar Subramanian

unread,
Aug 9, 2012, 8:31:33 PM8/9/12
to santhav...@googlegroups.com
பயிற்சியும் பாராட்டும்
 
தடுக்கிவிழும் இடமெல்லாம் கவிஞர் கூட்டம்
.. தழைத்திருக்கும் எல்லாம் மூலிகைகள் தாமோ?
அடுக்கிவைத்தச் சொற்களெலாம் தேடிச் சேர்க்கும்
.. அரும்முயற்சி ஆரம்பம் வளர்ந்தால் நன்று
தொடுத்தகவி சிறப்பென்றே சொல்ல வைக்கத்
.. தொடர்பயிற்சி இயல்பாகித் தொடுமே வெற்றி!
மிடுக்குநடை வாய்க்கவரும் மொழியின் தேர்ச்சி
.. மெருகூட்டும் என்பதைத்தான் மறக்க லாமா?
 
நிலம்சேரும் மழைநீரால் பயிர்கள் வாழும்
.. நெடுவானைத் தொடுமரங்கள் பெயர்ந்தும் வீழும்
பலவானும் பால்குடித்துப் புரையால் சாவான்
.. படிக்கின்ற கருத்துள்ளப் பதிவாய் வாழச்
சிலவேனும் சொந்தமதி செடியின் பூவாய்ச்
.. சுகம்தரவே மணம்பரப்பும் விதமாய் வேண்டும்!
கலப்புமொழிக் கவிதையது புதிய போக்காய்க்
.. காட்டுதலில் முனைப்புறுவான் கற்றுக் குட்டி!
 
கலயத்தைக் காலியாக வைத்தி டாமல்
.. கருத்துகளால் நிரப்பிக்கற் பனையைச் சேர்த்து
நலமாகச் சமைப்பதுவே கலையாம் பாட்டாம்!
.. நாட்டவரும் கேட்டுப்பா ராட்டு வார்கள்!
குலம்பார்த்துப் பாராட்டிக் கொடுப்போர் கொண்ட
.. குணங்கேட்டைக் கொள்கைஎனல் கொடுங்கூற் றாகும்!
வலம்வருங்கால் ஒருகூட்டம் பின்னே செல்லும்
.. வரலாற்றை வற்புறுத்திப் படைத்தல் தீதே!

Subbaier Ramasami

unread,
Aug 9, 2012, 9:47:00 PM8/9/12
to santhav...@googlegroups.com
எளிமையாகவும் ஆற்றொழுக்காகவும் கவிதை படைக்கும் அமுதனின் கவிதைகளைப் படித்து ரசித்து வருகிறேன்.

இலந்தை

2012/8/1 Chandar Subramanian <chandarsu...@gmail.com>

Chandar Subramanian

unread,
Aug 10, 2012, 9:19:12 PM8/10/12
to santhav...@googlegroups.com
அவலக் கூத்து
 
புதுக்கவிதை எனச்சொல்லி யாப்பைத் தள்ளும்
.. புன்செயலில் நமையெல்லாம் விருத்தம் என்னும்
மதுவினிலே மனமொன்றி மயங்க வைத்த
.. மாக்கவிஞன் கம்பனுக்கா பெருமை சேர்ப்பார்?
எதுவொன்றும் அளவுடனே அமைந்தால் தானே
.. இனிதாகும்; ஒலிஒளிக்கும் அளவுண் டன்றோ?
முதுமைதனில் இளவயதில் வளர்ச்சிக் கோலம்
.. முறைதவறல் முன்னேற்றம் எனச்சொல் வோமா?
 
உண்பதிலும் உடுப்பதிலும் ஒழுங்கை நாடும்
.. உணர்வுடையோர் உள ஒழுங்கைச் சிதைக்க லாமா?
கண்பதிவில் கவர்ச்சியெனல் அறிவின் மாட்சி
.. காட்டுதலில் நேர்மையுடன் கணித்த லாமே!
நண்பகலில் கோடையிலே நடக்கும் போழ்தில்
.. நடுங்குடுடல் பிணியிணைப்பைப் பேசும் தானே!
புண்படவே ஏசிடுவோர் நாவும் நாளும்
.. புன்மையுற நேர்ந்திடுதல் விந்தை யாமோ?
 
பகற்கனவை நனவென்பார் பலித்தல் கூடும்
.. பாடுபடா துண்ணுமுடல் ஏய்க்க ஓடும்
நகமழுக்கில் தோயாமல் நலங்கள் நாடும்
.. நஞ்சனையார் வஞ்சனையை யிகழும் ஏடும்!
சுகதுக்கம் பொதுவென்றால் உழைப்போர் மட்டும்
.. சோர்வினிலே கிடந்தழிதல் யாரின் சூச்சி?
தகவுடையார் மிகவுடைய தமிழ்நா டென்பார்
.. தக்கவழி காட்டியென யாரைச் சொல்ல?

Chandar Subramanian

unread,
Aug 11, 2012, 9:18:45 PM8/11/12
to santhav...@googlegroups.com
போலிகள்
 
வரலாற்றைப் படைப்பவர்கள் வேண்டி யோரின்
.. வாழ்வை மட்டும் பதியாது மேன்மைப் பண்புக்(கு)
உரியவர்கள் அனைவரது சிறப்பும் கூறும்
.. உண்மையுள்ள உணர்வுடனே எழுத வேண்டும்
தரமான உருவாக்கம் என்றால் மாற்றார்
.. தகுதியையும் மறைக்காமல் குறிக்க வேண்டும்
நிரம்பியுள்ள பொருள்போலி எனத்தெரிந்தால்
.. நிறைமதியோர் குறைகளைய முன்னே நிற்க!
 
தன்னலத்துப் பேராசைப் பெருக்கம் ஓர்நாள்
.. தடம்மாறி தடுக்கிவிழத் தானே செய்யும்!
பொன்பொருளைத் தவறான வழியை நாடிப்
.. பொதிபொதியாய்ச் சேமித்து வைக்கத் தானே
பண்பாட்டுக் காரராக ஒழுக்கம் தன்னைப்
.. பேணாது தம்குடிக்கே இழிவைச் சேர்ப்பர்
முன்னிலையில் நல்லோர்கள் நகைத்தும் நாணா
.. முறைதவறிப் பெருங்குழியில் வீழ்ந்தே சாவார்!
 
போலிகளைப் போற்றிடுவோர் புனித வேடப்
.. பொருத்தத்தில் பொல்லாங்கை மறைக்கப் பார்ப்பர்
கோலெடுத்துக் கூத்தாட வைக்கக் காண்போம்
.. குறுமதியோர் செயலுக்குப் பேச்சுத் தாளம்
வாலசைந்தால் தலைக்குந்தான் அசைவுண் டாக்கும்
.. வழிதவறும் வளர்ச்சிக்குத் தான் தப் பாட்டம்
காலத்தின் ஓட்டத்தில் கயவர் நெஞ்சம்
.. காட்டுகிற கடும்வளர்ச்சிக் கொடுமை என்னே!

Chandar Subramanian

unread,
Aug 12, 2012, 8:52:08 PM8/12/12
to santhav...@googlegroups.com
நிரம்பிய ஏரி நிரப்பிய மகிழ்ச்சி
 
சிக்கராய புரத்துமலை மேலே ஏறிச்
.. செம்பரம்பாக் கத்தேரிக் கலங்கல் கண்டு
மிக்கமகிழ் வுற்றநாளை நினைத்தா லின்பம்!
.. மேற்கினிலே சூரியன்செங் கருமை மேகம்
பக்கத்தே யிருந்தொளியைப் பாய்ச்சி ஏரிப்
.. பரப்பின்மேல் பொன்வண்ணம் பூசிக் கொண்டு
தக்க இடம் எனநினைத்தே தண்ணீர்க் குள்ளே
.. தாவாமல் மிகமெதுவாய் அமிழ்ந்த காட்சி!
 
குன்றடுத்துத் தெரிகின்ற பெரிய ஊராம்
.. குன்றத்தூர் சேக்கிழாரின் பிறந்த ஊராம்
சென்றவ்வூர்த் தெருக்களிலே நடந்து நானும்
.. சிந்தமகிழ் வுற்றநாளை நினைக்கும் நெஞ்சு!
பின்புறத்தில் கீழ்த்திசையில் தெரியும் சிற்றூர்
.. பெருமைமிகு கோவூரின் பசுமைத் தோற்றம்
தென்புறத்தில் மலைமேலே கோயில் நன்று
.. தெரிகிறதே அதைத்திருநீர் மலை என்பார்கள்!
 
சுற்றிலும் என்கண்களுக்கு வயல்கள் தோப்பு
.. சூளைகளின் புகையிடையே மலையம்பாக்கம்
பற்றோடு மொழிவளர்த்தோர் தம்மூர்ப் பேரைப்
.. பைந்தமிழில் வழங்கியதை மகிழ்வேன் எண்ணி
சற்றேதான் தொலைவில்பூ விருந்த வல்லி
.. சார்ந்துள்ள ஊரேசெங் கழுநீர்க் குப்பம்
கற்றவரும் சான்றோரும் வாழ்ந்த ஊர்கள்
.. காற்றுவந்தென் உடல்தழுவும் மகிழ்ச்சி என்றும்!

Chandar Subramanian

unread,
Aug 13, 2012, 9:05:35 PM8/13/12
to santhav...@googlegroups.com
குளத்து நீரில்...
 
தண்ணீரை எடுக்கப் பெண் ஒருத்தி வந்தாள்
.. தரைவளர்ந்த தென்னைமரம் குளத்து நீராம்
கண்ணாடி தன்னில்தன் குலையைக் காட்டக்
.. கண்டதும் தன்முந்தானை போர்த்திக் கொண்டாள்
எண்ணத்தில் சிலிர்ப்பேற நிமிர்ந்தாள் பின்னே
.. இளங்காளை சிரிப்போடு நின்றி ருந்தான்
கண்மூடிக் குடந்தன்னைக் கவிழ்த்தாள் நீரில்
.. கலங்கிய நீரிலவன் அசைந்தான் ஆடி!
 
இடுப்பணிந்த ஆடையினை மடித்துக் கட்டி
.. இருந்ததனால் மறையாத கால்ந டுங்கத்
திடுக்கிட்டாள் பின்னவனின் துடுக்குப் பேச்சு!
.. தேங்காய் நான்பறிக்க வந்தேன் என்றான்!
வெடுக்கென்று சிரிப்புவர அடக்கப் பார்த்தாள்
.. விழுந்துவிடும் முத்துமெனக் கேதான் என்றான்
அடுத்தகணம் பூத்தமுகம் உயர்த்தி நோக்க
.. அம்புவிழி அவனிதயம் துளைத்த தம்மா!
 
நீர்நிறைந்த குடந்தன்னை இடையில் வைத்து
.. நீந்திசெலும் அன்னமவள் பின்னே சென்றான்
கார்குழலில் தாமரையைச் செருகி விட்டான்
.. கனமான குடமிடைக்கு வலிக்கும் என்றான்
பார்வையவள் திருப்பாமல் தலையில் வைத்த
.. பாரம்பூ தானென்று தொட்டால் பின்னே
போராடும் நெஞ்சுக்குப் பொறுமை ஏற்றிப்
.. "போய்வாநீ! ஊர்பார பொழுதில்" என்றான்
 
நெஞ்செடுத்து போனவள்பின் நின்றான் மூச்சும்
.. நின்றுவிட்ட தோவென்று தொட்டான் மார்பை
கொஞ்சிடவா கொஞ்சிடவா வந்தான் அங்கே
.. குறிப்பறிந்து நடப்பதற்கு நேரம் நேரும்
வஞ்சியவள் வஞ்சனையே இல்லா நெஞ்சாள்
.. வாடியபூ முகம்சுருக்கித் திரும்பிப் பார்த்தாள்
துஞ்சிவிடும் ஊர்நேரம் வாய்க்கும் என்று
.. தூக்கியகை அசைத்தபின்னே நடந்தாள் முன்னே!
 
மாலையிருள் புணரவரும் போதை நோக்கி
.. மனம்விரைய அத்தினமோ மெதுவாய்ச் செல்ல
சோலையென்று சொலக்கூடா தோப்பின் பக்கம்
.. சுற்றுமுற்றும் பார்த்தபடி தனியே சென்று
மூலையிலோர் பெருமூங்கிற் புதரின் பக்கம்
.. மூளையினக் குழப்பியவா றிருந்த நேரம்
சீலையொலி எழுப்பாத படி நடந்து
.. சேர்ந்தாளைச் சேர்த்தணைத்தான்! இல்லை பேச்சு!

Chandar Subramanian

unread,
Aug 14, 2012, 8:56:36 PM8/14/12
to santhav...@googlegroups.com
பொடியன் நானே!
 
மாற்றாரை மதிக்கின்ற மாந்த நேயம்
.. மறுப்பினையும் நாகரிக மாக்கும் பேச்சு
வீற்றிருந்த பதவிக்கு மாண்பைச் சேர்க்கும்
.. வினைவலிமை மனம்காட்டும் தூய்மை வாய்மை
நேற்றிருந்த பெருமைகளை வெளிப்ப டுத்தும்
.. நினவாற்றலுடன் கவரும் கருத்து வீச்சு
தூற்றிடுவோ ருந்தொடர்ந்து கேட்கும் பேச்சின்
.. துணையிருந்த அண்ணாகைப் பொடியன் நானே!
 
எளியவரின் மனமேற்கப் புரியும் சொற்கள்
.. எள்ளிநகை யாடலிலும் துள்ளும் யின்பம்
புளியேப்பக் காரர்களின் புரட்டும் போக்கும்
.. புரியவைத்துத் தெளிவூட்டும் விரிந்த நோக்கு
துளியளவும் அகந்தைதனைக் கொள்ளா உள்ளம்
.. தொண்டரெலாம் அண்ணாவென் றழைக்கும் பாசம்
ஒளியேற்ற விரலிடுக்கில் அளவாய் நின்று
.. உறிஞ்சியபின் பொருள்பெருக்கும் பொடியன் நானே!
 
எழுத்தாலும் பேச்சாலும் எழுச்சி மூட்ட
.. எடுத்தபொடி அடுத்தபடி வேகம் கூட்டும்
அழுத்தமுடன் பெரியாரின் கொள்கைக் கொத்தே
.. ஆட்சியினை நடத்தியவர் மூக்குச் சொத்தாய்
நுழைந்தபெரும் பெருமைக்கே இருப்பானேன்நான்!
.. நுண்மதியின் சுறுசுறுப்பின் பொறுப்பும் ஆனேன்!
அழுக்கேற்றுவேன் எனினும் உடன்பிறப்பின்
.. அகந்தூய்மை செய்த அண்ணா பொடியன் நானே!

Chandar Subramanian

unread,
Aug 15, 2012, 8:35:19 PM8/15/12
to santhav...@googlegroups.com
ஆசையும் அவசரமும்
 
அவள்:
கதிரை அறுத்துச் சேர்த்துக்கட்டி
களத்துமேடு கோன்டு போயி
காவலுக்குப் போற மச்சான் காளிமுத்து - சூடா
கறியுஞ்சோறும் தின்னுட்டுப் போ மனசு ஒத்து
 
அவன்:
அப்பன் ஆத்தா அறியாமே
அக்கம் பக்கம் தெரியாமே
அவசரமா தூக்கி வந்த செல்லக்கண்ணு - தின்ன
ஆசையிருக்கு நேரமில்லே போடி பொண்ணு
 
அவள்:
தாலி கட்டப் போற ஆளு
தவிக்கணுமா இத்தனை நாளு
வேலி ஓரம் கொஞ்சம் குந்த லாகாதா - மனசு
வைச்சிப்புட்ட என் கவலை போகாதா?
 
அவன்:
கொஞ்சம் பேச நின்னுப் புட்டா
கொஞ்சிக் கெஞ்ச வருவே கிட்டே
கஞ்சிக் கில்லா பய வருவான் செல்லக்கண்ணு - இருட்டுக்
காலம் நெல்லைக் கசக்கிப் போவான் சொன்னேன் பொண்ணு
 
அவள்:
குளத்திலே நீ குளிச்சிருந்தே
குந்தியிருந்து நானும் பார்த்தேன்
கிளுகிளுப்பு கூடிப் போச்சு மச்சானே - எவன்
கிறுக்கு இந்தச் சிறுக்கிக்கின்னே வச்சானோ?
 
அவன்:
அத்தைமகன் தனக்குத் தான்னு
பித்தா ஒருத்தி காத்திருக்கா
சத்தியமா நீ தாண்டி எனக்குப் பத்தினி - எந்தச்
சந்தேகமும் வேணாம் இப்போ ஒத்து நீ
 
அவள்:
ஒத்திக்கத்தான் ஒளிஞ்சு வந்தேன்
எத்தனை நாள் காத்திருப்பேன்
செத்துப் போயிடுவேண்டா நானும் மச்சானே - வந்து
கொத்திப்போடா மொத்தம் உனக்கு நான் தானே
 
அவன்:
நெஞ்சா நினைவா நீ இருக்கே
நேரம் வரும்காத்திருக்கேன்
கொஞ்சம் கிளி அஞ்சிடாமே இருந்துக்கோ - நெல்லைக்
கொண்டு சேர்த்துக் காசு சேர்ப்பேன் பொறுத்துக்கோ
 
அவள்:
எந்த நிலமை எனக்குமிப்போ
வந்திருக்கு தெரிஞ்சுக்கோடா
சொந்த மாமன் புள்ளை அங்கே நிற்கிறான் - வந்துநீ
பந்தக்காலே சுருக்கா நட்டு வைக்கிறே

Kavingar Jawaharlal

unread,
Aug 16, 2012, 6:52:09 AM8/16/12
to santhav...@googlegroups.com
நல்ல கவிதைகள்.

2012/8/16 Chandar Subramanian <chandarsu...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
 
 

Subbaier Ramasami

unread,
Aug 16, 2012, 5:43:49 PM8/16/12
to santhav...@googlegroups.com
பூவை அமுதன் படம் இத்துடன் இணைத்திருக்கிறேன்



2012/8/11 Chandar Subramanian <chandarsu...@gmail.com>
POOVAI AMUDHAN.jpg
POOVAI AMUDHA2.jpg

Subbaier Ramasami

unread,
Aug 16, 2012, 5:46:05 PM8/16/12
to santhav...@googlegroups.com
நல்ல படப்பிடிப்பு

பக்கத்தே யிருந்தொளியைப் பாய்ச்சி ஏரிப்
.. பரப்பின்மேல் பொன்வண்ணம் பூசிக் கொண்டு
தக்க இடம் எனநினைத்தே தண்ணீர்க் குள்ளே
.. தாவாமல் மிகமெதுவாய் அமிழ்ந்த காட்சி! 



அருமையான காட்சி
2012/8/12 Chandar Subramanian <chandarsu...@gmail.com>

Subbaier Ramasami

unread,
Aug 16, 2012, 5:49:20 PM8/16/12
to santhav...@googlegroups.com
மடைதிறந்த வெள்ளம்- 

இலந்தை

2012/8/13 Chandar Subramanian <chandarsu...@gmail.com>

Chandar Subramanian

unread,
Aug 16, 2012, 8:20:39 PM8/16/12
to santhav...@googlegroups.com
உலக அமைதி
 
உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே
கலகம் அமைதியைக் கலைக்கும் குலைக்கும்
நிலவிடும் அன்பால் நீதியும் நியாயமும்
நிலைபெறும் என்பது நிச்சய உண்மை!
ஆக்குதல் அறிவின் ஆண்மைஎன் றானால்
போக்குதல் என்னும் புன்மையே போய்விடும்!
நல்லவர் வாழ்க்கையை வல்லவர் மாய்த்திடும்
தீத்திறம் ஒழிந்திடில் வாய்ப்பது நன்மையே!
செல்வமும் சிறப்பும் எல்லோர்க் கும்பொது
வல்லமை என்றால் வளர்ச்சியில் வேண்டும்
கூட்டிடும் செயல்களைக் காட்டலே ஆற்றல்
வையமோர் உடலெனில் வாழ்பல நாடுகள்
நாடி நரம்புகள் தசை எலும்பாகும்!
குருதியின் ஓட்டமே உறுப்புகள் இயக்கம்
ஒருநாட் டுதவியைப் பலநாடும் பெற
ஒருவன் ஆட்சியில் திகழுமே அமைதி
அதனதன் உயர்வை அனைவரும் மதித்தே
உதவவும் பெறவுமாய்ப் பொதுமை வளர்ப்போம்!
நிறமினம் என்னும் நிலைமைகள் தாண்டிப்
பரவிட வேண்டும் பண்புயர் பரப்பு!
சுட்டு விரலில் சுளுக்கென் றாலும்
சுகக்கே டென்றே அகம்துயர் உறுமே!
வையம் வாழும் மானிட சாதியில்
வாழ்வும் தாழ்வும் பொதுவென்றானால்
ஐயம் இன்றி அமைதியின் ஆட்சியில்
புவனம் தழுவப் பொங்குமே இன்பம்!
எம்மதம் சாரினும் நன்மதி விழைவெனில்
நிம்மதி வாழ்வினில் நிலவிடும் அமைதியே!
அழிக்கும் அலைகளை ஆக்கும் ஆற்றலாய்ச்
செழிப்புறச் செய்திடில் தழைக்கும் அமைதியே
வாழ்க மானுடம்! வாழ்க மானுடம்!

Chandar Subramanian

unread,
Aug 17, 2012, 8:37:54 PM8/17/12
to santhav...@googlegroups.com
ஊருக்கு நல்லது
 
ஊருக்கு நல்லது சொல்வோன் - மன
உறுதியாய்ச் செயல்படும் உழைப்பினால் வெல்வான்!
பேருக்கும் புகழுக்கும் ஓடும் - இழி
பிறவியின் நெஞ்சமா பொதுநலம் நாடும்?
 
உழைப்பினால் பிழைப்பதே ஆண்மை - எனும்
உணர்வுகொண்டியங்குவோன் வாழ்க்கையே மேன்மை
விழைவுகள் ஒழுங்குறல் அடக்கம் - விதை
வீறுதான்! பாறையில் விழ எது முளைக்கும்?
 
யாருக்கும் பகை என நில்லான் - எனில்
யாவுமே சொந்தமாய் வளைப்பதில் வல்லான்!
வேருக்கு நீர்விடச் சொல்வான் - செடி
விடும் இலை காய்கனி தனக்காகக் கொள்வான்
 
உறவென நடிப்பது வஞ்சம் - பிறர்
உடைமையைக் கவர்வதில் துடித்திடும் நெஞ்சம்
மறந்திட நினைப்பது நன்றி - திரை
மறைவினில் வாழ்க்கையில் ஒழுக்கமே யின்றி
 
படிப்புநற் பண்புக்குத் தூரம் - எனப்
பார்க்கின்றோம் நடத்தையில் இது என்ன கோரம்?
நடிப்புக்குத் தானிங்கே ஆரம் - பொல்லா
நாநடை நளினம் நடத்திடும் சோரம்!
 
பகுத்தறிவு காட்டுவதே உண்மை - அந்தப்
பலத்தினால் பாதையை மாற்றலோ நுண்மை?
மிகுந்ததைப் பகுத்தீதல் இரக்கம் - வஞ்சம்
மெலிந்தோர யிகழவோ நெஞ்சினில் சுரக்கும்?

Chandar Subramanian

unread,
Aug 18, 2012, 8:59:43 PM8/18/12
to santhav...@googlegroups.com
சட்டமும் சத்தமும்
 
சத்த மின்றியும் சட்டம் செயல்படும்
சத்தமாய்க் கத்துதல் சாதிக்கும் யுக்தியோ?
சட்டம் உடைந்த சுவர்படமாகச்
சத்தம் போடுவோர் சரியவும் கூடும்!
மௌனமும் உண்மையின் வலிமையை வாய்வழி
அமைதியாய் அழுத்தமாய் அம்பல மாக்குமே!
சிந்தனையின் திறன் செயலில் தெளிவாம்!
சத்த மிடுங்கால் சிந்தனை வருமோ?
ஓங்கிக் குத்தி ஒலியை எழுப்பினால்
தூங்குவோர் எழலாம்! துணிந்துபொய் சொல்லத்
துணைபலம் உள்ளோர் வழக்கு மன்றில்
நாணாப் பொய்யராய் நற்பெயர் பெறுவரோ?
சட்ட உண்மையைச் சாதிக்கவும் ஒலி
சத்தமாய் எழுப்பலாம் சிற்சில நேரம்!
சம்பா தனைக்காய்ச் சத்தம் போட்டு
நம்பவே நடிப்பது நாகரிகமா?
சக்தி யினாலும் சத்தம் போடுவான்!
சட்டம் மீறுதல் தண்டனைக் காட்படும்!
சத்தம் சீறலாய்ச் சரிவில் சாய்க்கும்
சட்டம் மதித்தல் சத்திய சாதனை
சத்தம் எழுப்பும் சந்தேகத்தையே!
சந்தேகம் நம் தேகத் தீமையே!
சத்தம் அறிவின் சத்துரு வாகும்!
சட்டம் அறிவு சார்ந்த ஆயுதம்!
சட்டம் பொதுவாய்ச் சமத்துவம் காக்கும்!
சத்தம் வேகமாய் அமைதியைப் போக்கும்!
சத்தம் எழுப்புதல் பலவீனம் தான்!
சத்தம் தடுத்திடச் சட்டமே உண்டு!

Chandar Subramanian

unread,
Aug 19, 2012, 9:13:28 PM8/19/12
to santhav...@googlegroups.com
பருவம்
 
இயல்பாகப் பழுக்காத ஒன்றை நாமும்
.. எழுமாசை மிகுதியினால் முன்ன தாகச்
செயற்கைவழி பலவந்தப் படுத்தும் போது
.. சேராது சாறோடு சத்தும் ஒத்து!
சுயமாக அறிகின்ற சொந்த புத்தி
.. சொலக் கேட்டுத் தெரிந்துகொள் வதினும் மேலாம்
முயலாமல் வெற்றியை நாம் எட்டல் இல்லை
.. முன்னேற்றம் இயல்பென்றால் மகிழ்ச்சி எல்லாம்!
 
முதிர்காலப் பக்குவத்தில் கதிர றுப்பார்
.. முற்றிவிடின் விழுந்துவிடும் உழைப்பே வீணாம்
எதிர்நோக்கும் காலத்தில் தெளிவு தேவை
.. என்றாலும் புதிர் இயறகை விதியும் மாறும்!
நதிநீர்போல் திரும்பாமல் ஓடும் காலம்
.. நழுவவிட்டால் அதுநம்மை நலிவில் தள்ளும்!
விதிமுறைகள் மீறாது விரையும் காலம்
.. வீண்செய்து பின் ஓலம் இட்டென் செய்ய?
 
காலம்பொன் போன்றதென்று மதிப்பாய்ச் சொல்வோம்
.. கையிலதைத் தக்கவைத்துக் கொள்ளல் ஆமா?
காலத்தைக் கருத்தாகக் கடைபிடித்துக்
.. கடனாற்றல் வாழ்க்கைக்கு வெற்றிச்  சேர்க்கும்
வேலாயு தம்கூர்மை சிதைந்திருக்க
.. விளங்காதவன் அதனை வீசல் வீணே
ஞாலத்தின் ஓட்டத்தில் பருவம் காணும்
.. நியதிக்கு மீறுவதும் நியாயம்தானா?

Kavingar Jawaharlal

unread,
Aug 19, 2012, 10:28:18 PM8/19/12
to santhav...@googlegroups.com
படங்களும் பாடல்களும் அருமை 

2012/8/20 Chandar Subramanian <chandarsu...@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
 
 

Chandar Subramanian

unread,
Aug 20, 2012, 8:45:34 PM8/20/12
to santhav...@googlegroups.com
சமத்துவம் செழிக்க...
 
ஒதுங்காமல் ஒதுக்காமல் ஒன்று சேரும்
.. உணர்வாலே உருவாகும் சமத்து வந்தான்!
பதுங்கலின்றிப் பாய்தலின்றிப் பயன்கொடுக்கும்
.. பணிசெய்தால் வரும்பலன்கள் மக்கட் கானால்
பொதுவான் நண்மைசமத் துவமாய்ப் பூக்கும்!
.. புவிஉயிர்கள் ஒன்றையொன்று சார்ந்தே வாழும்
எதுவும்தான் பெரிதென்றும் என்னால் ஆகும்
.. எல்லாமும் எனும் அகந்தை இழிவில் வீழ்த்தும்!
 
திறமையெனல் அவரவர்க்கு வெவ்வேறாகும்!
.. தெரிந்துகொள்ளும் பெரியமனம் போற்றும் வாழ்த்து!
பெருங்குணத்தால் பிறக்குதவப் பெருமை சேரும்
.. பெறுகிறவர் துயர்நீங்கப் பார்த்தல் இன்பம்!
வறுமைஎன்ப துள்ளத்தில் நினைப்பில் வேண்டாம்!
.. வாழவைத்து வாழ்பவரே வள்ளம் என்போர்
உரமுடலில் உள்ளத்தில் உயர்ந்திருந்தால்
.. ஓருயிர்க்கும் கேடுசெய்யார் மனித தெய்வம்!
 
தாழ்வுமனம் பொறாமையுடன் எரிச்சல் கொள்ளும்!
.. தன்னைப்போல் பிறர்வாழ நினைப்பான் மேலோன்
சூழ்ந்துவரும் இன்பதுன்பம் எதுவென்றாலும்
.. சொல்செயலில் தூய்மையுள்ளோன் எதிலும் எங்கும்
பாழ்நிலையைக் கண்டவுடன் பதைத்தொழிப்பான்
.. பண்பாட்டால் சமத்துவமாம் பயிர்செழிக்கும்!
ஊழ்வினையென் றேசாமல் உதவி வாழ்ந்தால்
.. உறவாகும் சமத்துவத்தேர் ஓடும் நன்றே!

Chandar Subramanian

unread,
Aug 21, 2012, 8:44:31 PM8/21/12
to santhav...@googlegroups.com
வழிகள்
 
பொய்யில் வாழ்வோர் புரட்டே விதிவழி
கையில் காசுளோர் களிக்கச் சதிவழி
மெய்ப்பா டென்பது உணர்வின் துணைவழி
மென்மையும் வன்மையும் எண்ணம் பெறும்வழி
நன்மையோ தீமையோ நடத்தை தரும்வழி
அன்பும் அறமுமே அமைதியாம் நல்வழி!
 
தையில் படைப்போம் தனிவழி என்கிறார்
தனிவழி எனினும் இனிப்பதே தகுவழி
இனிபின் தொடர்வோர் இன்புறப் புகும்வழி
மாற்றம் தூயதாய் மாறிடும் வழியிலே
ஏற்றம் இருப்பின் போற்றுவர் அனைவரும்!
ஆற்றும் செயல்களோ தூற்றும் நிலைபெறின்
மாற்றம் (ஏ)மாற்றமே எனப்புவி சாற்றுமே!
 
தனிவழி இரகசிய வழியெனில் இழிவது
தகுந்தவர் தொடர்ந்திட வரும்பயன் நேர்வழி
புதுவழி எதுவெனின் பொதுநலம் மிகும்வழி
புவிவிழி மகிழ்வுடன் போற்றிப் பாடிடும் வழி!
 
நல்வழி நாடிடும் நாள்களே சிறந்தவை
விதிப்பயன் வழியிலே வெல்லலாம் எனல்புகல்
விதிமுறைப் படிச்செயின் வெற்றியாவதை மொழி!
செல்வழி சிறந்திடச் சிந்தையில் இழிவொழி!
அல்வழி உந்திடும் ஆவலை நீகழி!
 
எவ்வழி நல்வழி அவ்வழி நம்வழி
செவ்விதின் உரைத்தவை செயல்திறன் நுழைவழி
ஊக்கம் பெருக்கலே ஆக்கம் பெறும்வழி
பூக்களின் வாழ்நாள் பொழுது சிறிதே!
ஆக்கும் மணமும் அழகும் பெரிதே!
நோக்க மிலாத வாழ்க்கை வெறிதே
ஏக்கமும் தாக்கமும் நீக்குதல் மதியே!

Chandar Subramanian

unread,
Aug 22, 2012, 8:48:37 PM8/22/12
to santhav...@googlegroups.com
வெற்றி எல்லை!
 
பிறப்பிடத்தை வைத்துப்பேர் வருவதில்லை!
.. பெரும்பண்பே உயரிடத்தில் சேர்த்து வைக்கும்!
சிறப்பொருவர் விலைகொடுத்துப் பெறுவ தொன்றாய்ச்
.. சேர்த்திருக்கும் செல்வம்பேர் சீரழிக்கும்!
பறக்கின்ற பழங்கந்தல் கலச உச்சிப்
.. பற்றிக்கொண் டுயரத்தில் படபடக்கும்!
துறவிக்குத் துயில்கொள்ளத் துணையைத் தேடும்
.. துணிவென்றால் அவர்மடந்தான் தூய்மையாமோ?
 
தோகைமயில் ஆடுவதில் அழகு தோன்றும்
.. தோல்சுருக்கக் கிழவிநடம் துன்பம் சேர்க்கும்
வாகையினைச் சூடிவந்தோர் பணிவு நன்றாம்!
.. வாலிபத்தில் முடிநரைத்தல் வனப்பாகாதே!
ஈகையினால் வறியவனாய் ஈதல் துன்பம்
.. இணைந்தவரின் குணமறிந்தோர் இயக்கும் இன்பம்
போகுமிடம் தெரியாத புறப்பா டென்றால்
.. போயழுதால் வீணாண பொழுதா மீளும்?
 
எச்சரிக்கை விழிப்பிருந்தும் ஏமாற்றம்தான்
.. எப்படியோ வந்தணைத்தோர் இழப்பில் தள்ள
அச்சத்தில் அதன்விதியை நம்பிக் கொள்வான்
.. ஆனைக்கும் அடிசறுக்கும் எனத்தெ ளிந்தால்
உச்சியிலே இடிவிழுமென் றெண்ணிக் கைகள்
.. உயர்த்தியவாறொருநாளும் வெளியே செல்லான்!
துச்சமெனத் துன்பத்தைத் துப்பிச் செல்ல
.. துணித்தவரே துயர்கொள்வார் தொடுவார் வெற்றி!

VETTAI ANANTHANARAYANAN

unread,
Aug 23, 2012, 2:02:23 AM8/23/12
to santhav...@googlegroups.com
அலையலையாக வரும் அழகான கவிதைகள் யாவையும் படித்து வரினும்,  தனித்தனியாகப் பின்னூட்டம் தர இயலாமல் போகிறது.  கவிஞருக்கு நன்றி, வாழ்த்து.

அனந்த் 

2012/8/22 Chandar Subramanian <chandarsu...@gmail.com>

Chandar Subramanian

unread,
Aug 23, 2012, 9:41:47 PM8/23/12
to santhav...@googlegroups.com
தீர்வு
 
உணர்விருந்தால் தானதனை உடலம் என்போம்
.. உயிரிருந்தும் உணர்வின்றேல் சடலம் தானே!
மணமில்லை என்றாலும் மலர் வனப்பு
.. மகிழ்வூட்டும் மனம்பெற்ற மனிதனுக்குப்
பணத்துக்குத்தான் இயக்கம் எனும்நிலையில்
.. பழக்கத்தைக் கொண்டுவிட்டால் அவனை மாந்தர்
குணக்கேடன் எனக்கூறி ஒதுக்க வேண்டும்
.. குப்பையவன் செல்வமுடன் அவனுந் தானே!
 
கண்ணென்றால் இரக்கத்தைக் காட்ட வேண்டும்
.. கருதுமுளம் நலம்தீது கணிக்க வேண்டும்
திண்மையெனில் செயலாற்றல் துலங்க வேண்டும்
.. திருவாக்கும் அறிவாற்றல் திறமை வேண்டும்
வன்மையது விளம்பரத்தில் வனப்பிழக்கும்
.. வாழ்க்கைவழி வரலாற்றை வரைய வேண்டும்
உண்மையெனில் உலகொப்ப விளங்க வேண்டும்
.. உளஊற்றின் கனிவைத்தான் உலகம் ஒப்பும்!
 
இளைத்தவரை வன்முறையால் சாகடிக்கும்
.. இழிந்தவர்மேல் சினங்கொள்ளா இதயம் கல்லே!
முளைத்துவளர் பகைமுள்ளின் முனைமுறிக்கும்
.. முனைப்பின்றி இனப்பெருமை பேசி இங்கே
திளைக்கின்றார் தன்மானம் உடையோர் என்றே
.. திருடனுக்கும் முகம் அழகாய் இருப்பதுண்டு!
களைவளர்ந்து பயிரைவிட பசுமைத் தோற்றம்
.. காட்டுவதைக் கண்டுழவர் மகிழ்வதுண்டோ?
 
பாதரசப் பளபளப்பில் பதுங்கும் நஞ்சு
.. பார்த்தவுடன் புரிவதில்லை; பண்பட்டோர்நூல்
ஓதிவைத்த உண்மைகளை உளறல் என்போர்
.. ஊர்கொடுக்க உளம்மறைப்பார்! உணரும் நெஞ்சம்
சூதுதமைச் சுட்டெரிக்கு முன்பே நீங்கிச்
.. சொந்தமதித் தெளிவில்சூழ் நிலையை வெல்வார்!
தீதிழைப்போர் விதியனுப்பும் தூதர் என்றே
.. திடமாக நம்புவோர்க்குத் தீர்வே இல்லை!

Chandar Subramanian

unread,
Aug 24, 2012, 10:04:29 PM8/24/12
to santhav...@googlegroups.com
விரும்பினால்
 
விருப்பத்தை அளந்துரைக்கக் கருவி இல்லை
.. வெறுப்புணர்வை உறுப்பியக்கம் வெளிப்படுத்தும்!
இருப்புவைத்துச் செலவழிக்கப் பணமா அன்பு?
.. இல்லையென்ப தியலாமை காட்டும் போக்கு!
பொறுப்புள்ளோர் எவ்வுயிர்க்கும் அளவில் அன்பு
.. பொங்கிடவே விருப்பமுற்றால் எங்கும் நன்மை!
குறிப்புணரும் நல்லவர்கள் துலாக்கோல் போலக்
.. குறைநிறையை மதிப்பிடவே விரும்புவார்கள்!
 
விருப்பம்போல் பதவித்தேர் ஓட்டம் எங்கும்
.. விருப்பம்போல் வலுத்தவரின் ஆட்டம் நன்றா?
தரித்திரர்கள் விருப்பமெல்லாம் பசிக்குத் தீனி!
.. தன்மானம் விரும்பிடுவோர் தரத்தில் தாழார்!
விரும்பியது வெற்றியென்றால் போதை ஏறும்!
.. விரைகின்ற காலத்தை விரய மாக்கும்!
விருப்பம் போல் சாய்வதற்கு நேர்மை நெஞ்சம்
.. விரும்பாது நடுநிலையே நல்லோர் நாட்டம்!
 
கோடாமை எனும்கொள்கை கொண்டோர் வாழ்வில்
.. கொடுமைகளே சூழ்ந்திடினும் காற்றின் போக்கில்
ஆடாது கற்றூணாய் நிலைத்தே நிற்பார்
.. அப்பாவி என்றவரை இகழ்வார் பொல்லார்!
கூடாத ஆசைகளைக் குவித்துக் கொண்டு
.. கூன்மனத்தார் உடல்நிமிர்த்தி நிற்கும் போதும்
வாடாத புகழவர்க்கு வாய்த்திடாது!
.. வரலாற்றுப் பொன்னேடும் விரும்பிடாதே!
 
இருக்கின்ற குடும்பத்தில் அவரவர்க்கும்
.. எழுகின்ற விருப்பம் வெவ்வேறே என்றால்
சுரக்கின்ற பாசந்தான் பொறுப்பாய் எந்த
.. சூழ்நிலைக்கும் உறவுகளை இறுக்கி வைக்கும்
பெருத்துள்ளோர் வசதியெல்லாம் இல்லார் தம்மைப்
.. பேணுதற்கே எனவிரும்பி வாழ்தல் பேறே!
விருப்பம்போல் நடந்துபிறர் நலத்தைத் தீய்த்து
.. வேரறுக்க விரும்புவது கொடுமை தானே!

Chandar Subramanian

unread,
Aug 25, 2012, 9:16:54 PM8/25/12
to santhav...@googlegroups.com
விடியல்
 
நல்லவர்க்கும் அல்லவர்க்கும் விடியும் போழ்து
நாள்கணக்கில் திங்களென ஆண்டாய் ஓடும்
செயல்முறையில் செயல்திறனின் மாந்தருக்குச்
சிறப்பென்றும் இழிவென்றும் பெயர் கொடுக்கும்!
வல்லவர்கள் வாழ்முறையால் வரலாறாகி
வருவோர்க்குச் சான்றாக நிற்பார் என்றும்
பொல்லாங்கில் புகழ்பூக்க அன்றன்றைக்குப்
புதுவிடியல் எழிற்பொழிலில் திகழும் பூமி!
சென்ற இருள் குவியவரும் முன்னே நேரச்
செலவழிப்பில் இயன்றவரை நலங்கள் செய்யின்
நின்றுவளர் பயன்பாட்டில் நிரம்பும் நெஞ்சம்
நிமிடங்கள் அத்துணையும் வைரம் பொன்னாம்
தின்றுவளர்ந்திருப்பதற்கா உயிர்சுமப்போம்?
திட்டமிடத் தானுடலில் திடமாய் நெஞ்சம்!
நன்றியினை எதிர்பார்த்தா வானம் பூமி
நலம் கொழிக்க உலவிடுமே புவியும் காற்றும்!
கதிர் இருளைக் கொன்றவெற்றிப் படையலாகக்
காண்கின்றோம் விடியலெனும் வெளிச்சப் பாய்ச்சல்
புதிர் எங்கோ போய் ஒளிய இருளும் அந்திப்
போதினிலே மீண்டிங்கே பொருள் மறைக்கும்
நிதம் இந்தப் போராட்டம் இயற்கை காட்டும்
நெஞ்சிருளை அகற்றிடவே ஒளியைக் கூட்டும்!
விதம்பலவாய் இருந்தாலும் நீதி நேர்மை
விதிமுறைகள் மீறுமெனில் விபத்து தானே!

Chandar Subramanian

unread,
Aug 26, 2012, 8:30:23 PM8/26/12
to santhav...@googlegroups.com
உள்ளும் புறமும்
 
குடியரசு நாட்டினிலே சாலை யோரம்
.. குடிசையின்றி நெடுவானக் கூரையின் கீழ்
மடிபவர்க்கும் வாக்குரிமை கொடுத்தோம் என்பார்
.. மகாத்துமாவைப் படமாக்கி வைத்துக் கொண்டு!
நடிக்கின்றோம் நாமிந்த நாட்டு மக்கள்
.. நாதியற்றோர் வேதனைக்கு விடிவாய்க் கண்ணீர்
வடிக்கின்றோம் எழுதுகின்றோம் பேசு கின்றோம்
.. வாய்ப்பந்தல் யாருக்கு நிழல் கொடுக்கும்?
 
ஏட்டுக்குத் தகுந்தபடி கேட்டை நன்றே
.. என்றெழுதி பணம்பண்ணல் ஈனம் தானே!
பாட்டுக்குத் தக்கபடி அமைதல் பண்ணா?
.. பண்ணியல்பால் பாவத்தை மாற்றல் பாட்டா?
வீட்டுக்குள் குப்பைகளே குவிந்திருக்க
.. வெளிச்சுவரில் சுண்ணவண்ண வெளிச்சம் ஏய்ப்பு!
நாட்டுக்குப் பெயர்நீட்ட விளம்பரங்கள்
.. நாற்றிசையும் தன்மான வேட்டு வைப்பா?
 
தகுதியுள்ள தன் இனத்தான் உயர்வைப் பெற்றால்
.. தாங்காது மனங்கொதிப்போன் தமிழன் தானா?
பகுதிஎது விகுதிஎது அறியான் தன்னை
.. பைந்தமிழ்க்குக் காவலனாய்ப் பறையடித்தால்
மிகுதியுமாய் அகந்தையென்னும் சேற்றில் ஆழ்வான்
.. முற்றிவிட்டால் முருங்கையதும் குப்பை தானே?
வெகுமதியைப் பெறுவதற்கு வீசும் சொற்கள்
.. வெற்றோலிகள் எனக்கற்றோர் அறிவார் அன்றோ?

Kavingar Jawaharlal

unread,
Aug 27, 2012, 1:39:52 AM8/27/12
to santhav...@googlegroups.com
சந்தர்!நல்ல பணி செய்கிறீர்கள் .மகிழ்ச்சி.

2012/8/27 Chandar Subramanian <chandarsu...@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
 
 

Chandar Subramanian

unread,
Aug 27, 2012, 8:45:29 PM8/27/12
to santhav...@googlegroups.com
கவிக்கனல்
 
உலகத்தை பாதிக்கும் அவலம் எல்லாம்
.. உண்மையுள்ள நற்கவிஞன் மனம்கிழிக்கும்
நலம்நாடும் அறிவாற்றல் கொண்டோர் ஆக்கும்
.. நான்குவரிக்கவியெனினும் கனல்பறக்கும்
மலரதுவும் கனல்மணக்கும் என்றே சொன்னான்
.. மாக்கவிஞன் பாரதிதான் மரபின் மன்னன்
சிலர்பலவாய் மொழிக்கலப்பைச் செருகி வைத்துச்
.. செப்புகவி காகிதப்பூ செயற்கை வாசம்!
 
வல்லெழுத்துச் சொற்களினால் வார்த்தெடுத்து
.. வரும்சினத்தில் கொட்டுகவி கனலை வீசும்!
சொல்லுக்குச் சூடேற்றும் பொருள்பொதிந்த
.. சூழலிலே சுழல்மனத்தால் இயக்கப் பெற்ற
கல்லாரின் பேச்சுமொழிக் கவிதை கூட
.. கனல்பறக்கும் கருத்துகளைக் கொட்டும் வெட்டும்
பொல்லாத கண்ணேறு கொடிதென்கின்றார்
.. பொன்மனத்தார் சினக்கவியும் பொசுக்கும் தீயாம்!
 
நெஞ்சினிலே கவிக்கனலாய்ப் பொங்கும் போது
.. நேரடியாய்ப் பேரிடியாய்த் தாக்கம் உண்டாம்
வஞ்சிக்கப் பட்டதனால் வாழ்விழந்தோர்
.. வழிகாணாச் சுழித்தோடும் காட்டாறாக
விஞ்சிவரும் வேகமுடன் விடிவுக் காக
.. வினையாற்றத் தூண்டுகவி சமைக்கும் தீயாம்!
கொஞ்சிநிற்கும் எளியவரைக் கேலி செய்யும்
.. கெடுமதியைச் சுடும்கவிகள் தேவை யாம்தீ!
 
வழக்குரைத்த காதையிலே இளங்கோ கொட்டும்
.. வார்த்தைகளே கண்ணகிவாய்க் கனலைக் கக்கும்
முழக்கமென நெருப்பாறு பாயக் கண்டோம்
.. முடிசரிந்து மன்னவனும் வீழக் கண்டோம்!
வழக்கியவன் செங்கோலை இழித்துப் பேசும்
.. வகையில்தீ வழிந்ததனால் மதுரை சாம்பல்!
கொழுப்பேறிக் கொழுந்தனவன் துகிலுரித்தான்
.. கொதித்தமனப் பாஞ்சாலி சபதம் தீப்பா!
 
சீவகனின் எழுச்சியைச்சுந்தரனார் பாடல்
.. செருமுகத்தில் வீரமெனும் கனலைக் கொள்ள
மேவிடவே படைவீரர் புடைத்து நின்றார்!
.. மேலவர்கள் சினம்படைக்கும் கவிதைச் செந்தீ!
கூவியழைத்துப் பகையை எதிர்க்கும் தீரர்
.. குரல்வலிமை வஞ்சினமாய்க் கவிகொதிக்கும்!
நாவுக்கு விருந்தாகும் சொல்லால் சுட்டு
.. நல்லவற்றை ஒழிக்கும்தீக் கவிவேண்டாமே!
 
திருட்டுவகை பலவாகித் தீய்க்கும் நாட்டை
.. தீட்டும்பாவூட்டுமுணர்வோட்டும் கேட்டை!
மிரட்டுகிற மதம்சாதி பேதம் நீங்க
.. மேலான மருந்தாக கவிதை ஓங்க
புரட்டுப்பொய் சூதுவஞ்சம் ஏய்ப்பு நோய்கள்
.. புன்மையெலாம் பொசுக்கிவிட புதுமை பூக்க
வரட்டுவேதாந்தமெனும் மயக்கம் தீர
.. வருங்கால நலம்சமைப்போம் கவித்தீயாலே!

Chandar Subramanian

unread,
Aug 28, 2012, 9:11:40 PM8/28/12
to santhav...@googlegroups.com
இறவாப் புகழ்
 
உரம்நிறை உள்ளமே உயர்ந்ததை எண்ணும்
அரிதென மலைக்கும் அச்சம் விலக்கும்
பெரிதோ சிறிதோ பிறர்நலம் பேண
உரிதாய் இருத்தல் உயர்செயல் ஆகும்
சரி எனும் முடிவில் சலனமே இலையெனில்
முறையுடன் முயன்றால் முடிதரும் முடிவு!
 
நற்பணி ஆற்றிட முற்படும் உறுதியில்
பற்பல தடைகளும் பயந்தடி பணியும்
செயற்படு முன்னே சிந்தனை தெளிவுறின்
வயப்படும் வெற்றி! வாய்த்திடும் வாழ்த்து!
நம்செயல் நல்கிடும் நன்மையால் மற்றவர்
தம்மனம் மகிழ்வது நம்மன நிறைவாம்!
 
செல்வமும் பதவியும் சேர்த்திடும் சிறப்பினும்
நல்லவர் நெஞ்சில் இடம்பெறல் உயர்வாம்
பிறந்தவர் இறவாப் புகழ்பெறத் தேவைகள்
சிறந்த எண்ணமும் செயலில் நேர்மையும்!
விதியின் பயனாய்ச் சதியைச் சகிப்பது
மதியின் மயக்க கதியினால் தானே!
எதையும் ஆய்ந்தபின் ஏற்பதோ தவிர்ப்பதோ
விதிஎனக் கொள்ளலே இதய வீறாம்!

Chandar Subramanian

unread,
Aug 29, 2012, 8:32:54 PM8/29/12
to santhav...@googlegroups.com
நேசித்த நெஞ்சம்
 
நேசித்த நெஞ்சம் மறக்காது - மனம்
நேர்மையை யிழந்திடில் சிறக்காது
பூசைக்கு மென்மலர் ரோஜாவும் - முள்
பொருந்திடும் காவலைத் துறக்காது
- நேசித்த நெஞ்சம்...
 
வாசித்த பாடந்தான் மறக்காது - மனம்
வருந்திடும் போதிலும் மறுக்காது
யாசித்துப் பெறுவதோ உயிர்க்காதல் - அது
என்றைக்கும் என்றைக்கும் இறக்காது
- நேசித்த நெஞ்சம்...
 
அழுகையிலும் எனக்கு ஒரு சுகமே - அதை
அளித்தவன் நினைவினில் கனக்கும் அகமே
தொழுதிடுவேன் இன்பச் சுமையினையும் - ஒரு
துணையென வைத்ததை வெறுக்காது
- நேசித்த நெஞ்சம்...

Chandar Subramanian

unread,
Aug 30, 2012, 9:03:05 PM8/30/12
to santhav...@googlegroups.com
ஊமை நாடகம்
 
கதிரவன் முகம் நோக்கிக் காத்திருந்தாய் - சூரிய
காந்தி மலரே நீ பூத்திருந்தாய்!
 
உன் ஊமை நாடகத்தை
என் என்று அவன் கண்டான்
சொல்லாமல் ஏன் பேதை பார்த்திருந்தாய்?
 
தெப்பக் குளத்தில் அவன்
வெப்பம் தணிந்திடவே
தாமரை மேல் கரம் நீட்டக்
களித்திருந்தான் - நீ
எப்படி எல்லாம் பாவம்
இதயம் திறந்து வைத்தாய்
ஏனவனோ நீர்மகளோடு
இனித்திருந்தான் - அவன் இனி திருந்தான்!
 
உன் மடமை நாடகத்தை
என் என்று அவன் கண்டான்?
சொல்லாமல் என் பேதை காத்திருந்தாய்?
 
தனக்குத்தான் அவன் என்று
தரைமீது தவம் செய்யும்
தாங்காத ஏமாற்றம் துக்கமடைந்தாய் - ஆசை
மனத்துக்குள்ளே நீயிட்ட
மாலையே சுருக்காச்சு
மகிழ்வாக நீரிலவன் பக்கமிருந்தான்!
 
உன் மடமை நாடகத்தை
என் என்று அவன் கண்டான்?
சொல்லாமல் என் பேதை காத்திருந்தாய்?

Chandar Subramanian

unread,
Aug 31, 2012, 8:43:22 PM8/31/12
to santhav...@googlegroups.com
நீயாக...
 
நீயாக எனைத்தேடி வரவேண்டும் - என்றன்
நெஞ்சத்தில் முழுநிலவாய்ப் பால் ஒளியைத் தரவேண்டும்
ஓயாமல் உன் உறவைப் பெறத் தூண்டும் - என்றன்
உள்மனத்தில் உன்மனமும் ஐக்கியமுறவே வேண்டும்
- நீயாக எனைத்தேடி வரவேண்டும்!
 
கடலாம் எனக்கூட கருணை நதியாகி - தடைல்
கடந்திங்கே தனியாய் நீ வரவேண்டும்
உடலென்ன உயிரென்ன எவைபோனால் என்ன
ஒன்றுக்குள் ஒன்றாக இணைவோம் மீண்டும்
- நீயாக எனைத்தேடி வரவேண்டும்!
 
பிரித்தறிய முடியாத அணுவாய் வாழ்வோம் - பெரும்
பேதமுள்ள உலகமிது நாம் ஏன் தாழ்வோம்
சரித்திரமாய் மாறிடுவோம் சேர்ந்தே சாய்வோம் - காதல்
சங்கமத்தை உண்மை அன்பு ஒன்றே தூண்டும்
- நீயாக எனைத்தேடி வரவேண்டும்!

Chandar Subramanian

unread,
Sep 2, 2012, 8:48:37 PM9/2/12
to santhav...@googlegroups.com
எங்கும்... எப்போதும்...
 
கண்கள் விழித்திருந்தேன் - புவி
காட்சி மறந்திருந்தேன்
எங்கும் தனித்திருந்தேன் - உன்னை
எண்ணி இனித்திருந்தேன்
 
உண்ண வெறுத்திருந்தேன் - வேறு
உடையும் மறுத்திருந்தேன்
உன்னை மதித்திருந்தேன் - கொடிய
உறுத்தலிலும் துதித்திருந்தேன்
- கண்கள் விழித்திருந்தேன்...
 
சுமைகள் மறந்திருந்தேன் - எந்தச்
சுவையும் துறந்திருந்தேன்
இமைகள் துறந்திருந்தேன்
இமைகள் திறந்திருந்தேன் - வானில்
இணைந்தே பறந்திருந்தேன்!
- கண்கள் விழித்திருந்தேன்...

Chandar Subramanian

unread,
Sep 3, 2012, 8:36:26 PM9/3/12
to santhav...@googlegroups.com
ஒற்றைக் குயிலே...
 
ஒற்றைக் குயிலே பாடாயோ? - உன்றன்
உயிர்த்துணை எங்கே தேடாயோ?
 
உள்ளம் கவரும் உன் பாடல் எல்லாம் ஒழிந்ததோ?
இன்பம் நாடாயோ?
- ஒற்றைக் குயிலே பாடாயோ?
 
தென்றலே மென்மையை ஏன் பகைத்தாய்? - வண்ணத்
தேன்மலர் நீயுமே கூடாயோ?
தீயுடன் பஞ்சுக்கு ஏன் உறவு? - உன்
துயருக்கு விடிவெது தேடாயோ?
- ஒற்றைக் குயிலே பாடாயோ?
 
வெண்ணிலா விஷத்தைச் சிந்துவதேன்? - என்றன்
வேதனை கூறிட ஓடாயோ?
கண்ணிலார் வண்ணங்கள் அறியாரே - நெஞ்சு
கனவிலும் அமைதியைக் கூடாதோ?
- ஒற்றைக் குயிலே பாடாயோ?

Chandar Subramanian

unread,
Sep 4, 2012, 9:09:59 PM9/4/12
to santhav...@googlegroups.com
நஞ்சும் எனக்கமுதம்!
 
தென்றலுக்கு நெருப்பை ஏன் தந்து விட்டாய்?
தீயில் என்னை வாட்டிடவோ என்னைத் தொட்டாய்?
நெஞ்சத்தில் நீயிட்ட நஞ்சும் எனக்கமுதம் - என்
நினைவினில் நீ நிற்பதை ஏன் மறந்துவிட்டாய்?
- தென்றலுக்கு நெருப்பை ஏன் தந்து விட்டாய்?
 
என்னை இருள் சூழ்ந்திடவோ
.. எங்கோ சென்றாய்? - நீ
இருட்டினிலே குருடனைத்தான்
.. ஏங்க விட்டாய்
என் மனத்தில் வாழ்ந்திடவோ
.. உறவைக் கொண்டாய்? - அடி
இறந்தவன் மேல் இடி போட்டு
.. நீதான் கெட்டாய்
- தென்றலுக்கு நெருப்பை ஏன் தந்து விட்டாய்?
 
நீயும் நானும் சேர்ந்திருந்த
.. நேரம் கொஞ்சம் - உன்னைத்
தேன் நிலவென்றேன் - நீயோ
.. பாழிருளில் தள்ளிவிட்டாய்!
 
பாயுமின்பப் பௌர்ணமிக் கேன்
.. என்மேல் வஞ்சம்? - அடி
பகலினிலும் கனவுலகில் தவிக்க விட்டாய்
.. நெஞ்சத்தில் நீயிட்ட நஞ்சும் எனக்கமுதம் - என்
நினைவினில் நீ நிற்பதை ஏன் மறந்து விட்டாய்?
- தென்றலுக்கு நெருப்பை ஏன் தந்து விட்டாய்?

Kavingar Jawaharlal

unread,
Sep 5, 2012, 6:33:45 AM9/5/12
to santhav...@googlegroups.com
அருமையான பாடல்கள்.

2012/9/5 Chandar Subramanian <chandarsu...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
 
 

Chandar Subramanian

unread,
Sep 5, 2012, 8:53:46 PM9/5/12
to santhav...@googlegroups.com
நெகிழ்வு
 
எல்லாமும் எதனாலே நடக்கின்றதோ - மனம்
ஏனென்று புரியாமல் துடிக்கின்றதோ?
மதிவிதிக்கின்றதோ?
எது சிதைக்கின்றதோ? - இங்கே
வேடமிட்டே எல்லாமும் நடிக்கின்றதோ?
- எல்லாமும் எதனாலே நடக்கின்றதோ?
 
மலை கொண்ட கல்லெல்லாம்
சிலை செய்யவோ? - உன்றன்
மனம் எண்ணும் எல்லாமும் முடிகின்றதோ?
இலைகூட பூஜைக்கு ஏற்கின்றதே - பூத்து
இருந்தாலும் சில வீணாய் மடிகின்றதே!
 
மரம் விட்ட காயெல்லாம் கனியாகுமோ? - அவை
மண்ணுக்குள் விதையாகிச் செடியாகுமோ?
விரல் ஐந்தும் ஒருகையில் பல தோற்றமே - அந்த
வேஏறுமை பொருள்பற்றும் பிடிமாற்றுமா?
 
மதி விதிக்கின்றதொ?
எது சிதைக்கின்றதோ? - இங்கே
வேடமிட்டே எல்லாமும் நடக்கின்றதோ?
- எல்லாமும் எதனாலே நடக்கின்றதோ?

Chandar Subramanian

unread,
Sep 6, 2012, 8:53:12 PM9/6/12
to santhav...@googlegroups.com
ஏனடி ஏன்?
 
மெழுகே அழியவோ நீ பிறந்தாய்? - அன்பே
அற்றவர் யாருக்கோ மனம் திறந்தாய்
விதியே அழகென ஏற்றிருந்தாய்? - நேரம்
வேடமாய் மாறுமே ஏன் மறந்தாய்?
- மெழுகே அழியவோ நீ பிறந்தாய்?
 
நெருப்பை உறவாடிக் கொண்டிருந்தாய் - உன்னை
நெருங்கிட ஆவியை நீ துறந்தாய்
விருப்பம் ஒளிவிட நீ உயர்ந்தாய் - அந்த
வேதனை கரைத்திட நீ சிறந்தாய்
- மெழுகே அழியவோ நீ பிறந்தாய்?
 
முற்றுமாய் உயிர்த்திரி ஒளிர்ந்திடவே - உன்னை
முற்றுகை யிட்டிட நீ பறந்தாய்
சத்தியம் அவனுக்காய்க் காத்திருந்தாய் - இந்தச்
சரித்திரம் வளரவோ நீ கரைந்தாய்!
- மெழுகே அழியவோ நீ பிறந்தாய்?

Chandar Subramanian

unread,
Sep 16, 2012, 8:25:52 PM9/16/12
to santhav...@googlegroups.com
எனக்கொரு காதலி
 
எனக்கொரு காதலி இருக்கின்றாள்! - அவள்
என்மனம் அவளென உரைக்கின்றாள்!
உன்னை நடத்திட நான் என்பாள்! - என்றன்
உண்மை நிழல் அவள்தான் என்பாள்!
 
களித்திடும் செயல்முறைக் கூட்டுகிறாள் - இருட்
கவலையில் ஓளியினைக் காட்டுகிறாள்!
புளிப்பையும் இனிப்பையும் பகுக்கின்றாள்! - மனம்
புண்கொளா வழிகளை வகுக்கின்றாள்!
- எனக்கொரு காதலி இருக்கின்றாள்!
 
நெஞ்சில் நினைவு தூய்மையுற - செயல்
நிகழ்வினால் பிறரும் நேயமுற
அஞ்சிடும் வினைவெகு சேய்மைசெல - நா
அசைத்திட ஒலிதரும் வாய்மை பல
- எனக்கொரு காதலி இருக்கின்றாள்!
 
அவள்பெயர் நீங்களும் அறிந்ததுவே - என்
அகவொளி அவளால் பிறந்ததுவே!
எவர்க்கும் அவள்துணை சிறந்ததுவே - உயிர்
எனக்கவள் அவள் பெயர்தான் அறிவே!
- எனக்கொரு காதலி இருக்கின்றாள்!
 
அறிவெனும் காதலி என்வழியை - நலம்
ஆக்கிட அண்டிடேன் ஒரு பிழையை
செறிவெனும் நிறைவினில் நடைமுறையே - பிறர்
சிறப்பெனச் செப்பிடப் பகழ் வரவே!
- எனக்கொரு காதலி இருக்கின்றாள்!

Chandar Subramanian

unread,
Sep 17, 2012, 8:45:28 PM9/17/12
to santhav...@googlegroups.com
ஒரு தாயின் வாழ்த்து
 
அழுதுகொண்டே பிறந்தாய் பெற்றோர் நெஞ்சில்
.. அமுதமழைப் பொழிந்தெம்மைச் சிரிக்க வைத்தாய்!
உழுதவரின் வயல்பசுமை உறுதல் கண்டே
.. உவப்புறுமந் நிலையிலவர் உள்ளம் பொங்க
பொழுதெல்லாம் மணக்கின்ற பூவாய் வந்தாய்!
.. பூமிபெற்ற பொன்பொருள் எல்லாமுங் கூட
குழந்தையுனக் கீடாகக் கூறப் போமா?
.. குலக்கொடிநீ முழுநிலவுக் கொடி தந்தாயோ?
 
தவழ்ந்தெழுந்து தடுமாறித் தத்தித் தத்தித்
.. தாய்மடியில் விழுந்து அவளின் தாடை தட்ட
புவனமிதையே பெற்ற பூரிப்புற்றேன்
.. பூங்கையின் விரல்விரித்துப் பொத்து வாய்வாய்
கவனமுடன் கேட்பதுபோல் கண்கள் பூத்துக்
.. காதுமடல் விரித்தென்றன் கொஞ்சல் கேட்பாய்
அவனியிலே நான் தாயாய் உயர்வை யுற்றேன்
.. அருங்குழவி மழலைத்தேன் அமுதைப் பெற்றேன்!
 
தாய்மண்ணின் தனிப்பெருமை யாவும் காக்கும்
.. தகுதிகளில் தக்கபடிப் பயிற்சி ஏற்கும்
வாய்ப்புனக்குத் தருகின்ற சூழல் இங்கே
.. வளர்ந்திருக்க வேண்டுமதை நல்லோர் செய்வார்
போயெங்கும் பொருள்தேடி அலையாமல் நீ
.. பொன்னாடாய் உள்நாட்டை முன்னேற்றத்தான்
நோய்நொடிகள் அண்டாமல் காப்பேன் உன்றன்
.. நுண்ணறிவால் வழிகாட்டியாக வாழ்க!
 
விண்ணுலவும் கதிர்நிலவு காற்று மேகம்
.. விளைவிக்கும் செடிகொடிகள் மரங்கள் குன்றம்
மண்ணகத்தை வளமாக்கும் ஏரி ஆறு
.. மண்டியுள செழிப்பெல்லாம் பொதுமை யாகும்
கண்டிப்பாய் வருங்காலம் பிறந்தோர் யாரும்
.. கடுமுழைப்பின் பலன்கண்டு வாழ்வர் என்னும்
உண்மைநிலை யுருவாகக் குழந்தை நீயும்
.. உத்தமனாய்ப் பிறர்க்குதவ உயர்ந்தே வாழ்க!

Chandar Subramanian

unread,
Sep 18, 2012, 8:49:02 PM9/18/12
to santhav...@googlegroups.com
ஒழிக்கப்பட வேண்டியது எது?
 
விருத்தத்தில் புகழ்பெற்ற கம்பனுக்கு
.. விழாக்களை நாம் எடுக்கிறோம் கவியரங்கில்
வருத்தத்தை வளர்க்கின்ற நிலைதான் இன்று
.. வரப்பில்லா வயலாகப் புதுமை யென்று
புகுத்துவதாய் மரபுதனை மறுத்தும் மாய்த்தும்
.. புறபோக்குத்தனமாக உரையொடிப்பார்!
மிகுத்துவரும் மீறல்கள் மாற்றம் என்று
.. மேல்மட்டம் பறைகொட்டிச் செக்கிழுக்கும்!
 
அளவில்லா எண்ணங்கள் அகத்தே தோன்ற
.. அளவுக்கு மீறாத அமைப்பில் சொற்கள்
வளமாக வெளிப்பட்டால் வனப்பாய்ப் பூக்கும்
.. வண்ணத்தால் கவிதையென மதிப்பை ஏற்கும்!
களமெதுவாய் இருந்தாலும் கட்டுக்கோப்பில்
.. கறைதோன்றாக் காட்சியதே கலையாய் ஆகும்!
குளத்துக்கும் ஆற்றுக்கும் கரைகள் உண்டு
.. கூறுகவிக் கில்லையென்றால் கறையாகாதோ?
 
இப்படித்தான் கவியிருக்க வேண்டும் என்றார்
.. எப்படியும் இருந்திடலாம் என்பார் இன்று!
எப்படியோ இருக்கட்டும் எடுத்துச் சொல்லும்
.. இயல்பினிலே ஒலி ஒழுங்கும் ஒழிதல் நன்றா?
தப்பிதமாய்க் கவித்துவத்தில் தலையைக் கண்டால்
.. தமிழ்ச்சொற்கள் பிறமொழிக்குள் தவிக்கும் கோரம்!
ஒப்புகின்ற பொருள்விளங்கச் செய்யும் பாங்கில்
.. ஒத்துழையாமை இயக்கம் தலைஏன் காட்டும்?
 
தனக்காக வாகவிதை எழுதுகின்றான்?
.. தள்ளுபடியாகும் சொல் தமிழா பாட்டில்?
மனம்போன செயலுக்கு மதியெதற்கு?
.. மரபென்றால் தொன்றுதொட்டுத் தொடரும் நல்ல
சுனைநீராய்த் தூய்மையுடன் சுவைக்கக் கண்டும்
.. துப்பிடுமாறுள்ளதையா ஒப்ப வேண்டும்?
தினமாற்றும் வினைவிளைவில் புதுமையோடு
.. திகழ்கின்ற பொதுமரபைப் போற்றுவோமே!

Kavingar Jawaharlal

unread,
Sep 19, 2012, 5:56:47 AM9/19/12
to santhav...@googlegroups.com


2012/9/19 Chandar Subramanian <chandarsu...@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
 
 

Kavingar Jawaharlal

unread,
Sep 19, 2012, 5:57:31 AM9/19/12
to santhav...@googlegroups.com
நல்ல கவிதைகள் 

2012/9/19 Kavingar Jawaharlal <kavingar....@gmail.com>

Chandar Subramanian

unread,
Sep 19, 2012, 8:47:08 PM9/19/12
to santhav...@googlegroups.com
நடக்குமா?
 
மண்வளரும் செடிகளிலே
மலர்ந்திருக்கும் பூக்களவை
மணம் வீச வண்டுகளால்
மகரந்தம் இனம் பெருக்கும்
கண் அவனுக்கென்பவளின்
கனிவு மனம் ஆசை யெனும்
கனலணைக்கும் குலம் பெருக்கும்
கலையெனவே இனித்திருக்கும்
 
பண்ணறிந்தா பறவையினம்
பலவிதமாய் இசை எழுப்பி
தன் துணையின் அன்புறவால்
பலநிறமாய் வளர்க்குமினம்?
எண்ண எண்ண விந்தைமிக
ஏராளமாய் உயிர்வகைகள்
பண்ணுகிற விழைவுகளின்
பொழிவுகளோ எழில்வையம்?
 
பிள்ளைபெற வில்லையென்று
பெண்டாட்டிதனை ஒதுக்கும்
பேதையர்தம் ஆண்மையுண்மை
மறைத்திடுதல் சாதனையோ?
உள்ளமதைக் கொள்ளையிடும்
உறவுகளின் உண்மைநிலை
உணர்வடங்கிப் போன்பின்னும்
ஒட்டிக் கொண்டே இருந்திடுமோ?
 
கள்ளமணக் கற்பனையால்
கவர்ச்சிதரும் காரணங்கள்
கட்டுகின்ற போலியர்க்கா
கருத்தழியும் காலம் வரும்
வெள்ளையுடை வெளிச்சமிடும்
வேடதாரி வஞ்சகரின்
விருப்பங்கள் பரப்பளவு
விரிவடைந்தா விடம் சொரியும்?
 
மதியிருந்தும் இழிசெயலை
மனமறிந்தே புரிந்திடுவோர்
மண்புமிகு தலைவரென
மதிப்பிடுவோர் மானிடரோ?
விதிப்பயனே எனப்பிறரின்
வேதனையை இழித்திடுவோர்
வீரநடை போட்ட்டிடவோ
விளக்குமிந்த நாட்டுவளம்?
 
சதியதனைச் சரியெனவே
சாதிப்போர் முகத்திரையைச்
சந்தியிலே கிழித்தெரியும்
சந்ததியர் தோன்றுவரோ?
கதியற்றுக் கிடப்போரைக்
காத்திடவே கருணையுள்ள
காவலர்கள் ஆவலுறும்
காலந்தான் வாய்த்திடுமோ?

Chandar Subramanian

unread,
Sep 20, 2012, 8:36:31 PM9/20/12
to santhav...@googlegroups.com
காலம் வருமா?
 
இயல்பாகப் பழுக்காத ஒன்றை நாமும்
.. இறுக்கியதை முன்னதாகப் பழுக்க வைக்கச்
செயற்கையிலே பலவந்தப் படுத்தும் போது
.. சேராது சத்தோடு சாறும் நன்றாய்!
சுயமாக அறிகின்ற சொந்த புத்தி
.. சொலக்கேட்டுத் தெரிந்தொள்வதற்கும் மேல்தான்!
முயலாமல் வெற்றிமுடி எட்டல் இல்லை!
.. முன்னேற்றம் இயல்பென்றால் மகிழ்ச்சி எல்லை!
 
முதிர்காலப் பக்குவத்தில் கதிர் அறுப்பார்
.. முற்றிவிட்டால் உதிர்ந்துவிடும் உழைப்பின் வெற்றி!
எதிர்நோக்கும் காலத்தில் தெளிவு தேவை
.. என்றாலும் புதிராகச் சரிவும் நேரும்!
நதிநீர்போல் திரும்பாமல் ஓடும் காலம்
.. நழுவவிட்டுத் திகைப்போரை நலிவில் ஆழ்த்தும்
விதிமுறைகள் மீறாமல் விரையும் காலம்
.. வீணாகப் போக்காத விவேகம் நன்று!
 
மனிதநிலை மாறவைக்கும் எண்ணம் யாவும்
.. மண்ணாகப் போகவேண்டும் இருக்கும் ஒன்றின்
புனிதத்தை இழிவாக்கும் புத்தி சக்தி
.. பொசுங்கியவை சாம்பலாகி மறைய வேண்டும்!
இனிப்பாகவே பேசி இழிவைச் சேர்ப்போர்
.. இல்லையென்னும் நிலை எல்லாத் துறையும் வேண்டும்!
தனியொருவன் தலைநிமிர்ந்து வாழும் தன்மை
.. தரத்தோடு நிலவவரும் காலம் என்றோ?

Chandar Subramanian

unread,
Sep 21, 2012, 8:41:43 PM9/21/12
to santhav...@googlegroups.com
நாம் செய்வோமா?
 
சிறப்புற்றோர் சிந்தனையைச் செயல்படுத்தச்
.. சிலரேனும் வாய்ப்பந்தல் தவிர்த்துழைத்தால்
அறப்பணியாய் அறிவார்ந்த தொண்டாய் ஓங்கும்
.. அவர்வழியே சிலரேனும் உண்மையான
திறத்தோடும் மறத்தோடும் உணர்வினோடும்
.. திருப்பங்கள் காண்பதற்கு விருப்பம் கொள்வோம்
மறக்க முடியாதபடி மாந்தர் நேயம்
.. மலர்வதற்கு மனம் கொண்டு நாம்வாழ்வோமே!
 
புயல்வேகத்துடன் பெருமை பேசிக்கொண்டே
.. புறநானூற்றுக்காலம் புதுக்குவோமோ?
அயலவனை விஞ்சிய நம் அறிவைப் பற்றி
.. ஆர்ப்பரித்துப் பேசியிங்கே ஆனதென்ன?
செயல்மறந்து வாழ்த்திகொண்டிருக்கத்தானா
.. சிறந்தபணியாற்றியேநம் முன்னோர் சென்றார்?
வயல்கண்ட செழுமையெலாம் எங்கே காணோம்?
.. வளர்கின்ற வரலாற்றை வடிப்போமா நாம்?
 
பாரதிக்கு விழாவெடுத்துப் புகழைச் சேர்ப்போம்
.. பாரதியின் கவியை மனப்பாடம் செய்வோம்
பேருரத்துக் கூவியே நம் மூச்சே என்போம்
.. பெருமைகளை முத்தமிழில் மொய்க்கச் செய்வோம்
பாரதியின் சீர்திருத்தக் கொள்கை தம்மைப்
.. பயன்பாட்டு நடைமுறைக்குக் காட்டி வாழ்வோர்
ஊருக்குள் பெருகியுள்ளார் எனும்கணக்கின்
.. உண்மைநிலை உயர்ந்திடவே செய்வோமா நாம்?

Chandar Subramanian

unread,
Sep 21, 2012, 8:43:05 PM9/21/12
to santhav...@googlegroups.com
ஒரு தகவல்:
 
கவிமாமணி பூவை அமுதனின் 80-ஆம் அகவை நிறைவை ஒட்டி பாரதி கலைக்கழகம், நாளை (23/9) வாழ்த்தரங்கம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.

Chandar Subramanian

unread,
Sep 22, 2012, 9:05:12 PM9/22/12
to santhav...@googlegroups.com
பிழையா, பேறா?
 
ஊர்வம்பை வளர்ப்பதற்கு விருப்பம் உள்ளே!
.. உத்தமராய் நடிப்பதற்கு வெளியே வேடம்!
சேரிடத்துக் கேற்றாற்போல் சிந்தை மாற்றிச்
.. சேறுகண்டு சாறு என்று சொல்வர் உண்டு!
யாரிடத்தும் யாசிக்கத் தன்மானத்தை
.. எப்போதும் தொலைத்திழிவில் மகிழ்வோர் கூடப்
பேரெடுத்தோர் வரிசையிலே நிற்கக் கண்டும்
.. பிழைசேர்த்த பெருமையினைப் பேறென்போமா?
 
வாய்ப்பந்தல் பொய்நிழலில் குளிர வைப்போர்
.. வாழிடமே பாழிடந்தான் எனத்தெரிந்தும்
தாய்போலப் பரிவுடையார் என்று பின்னே
.. தாளமிடும் கூட்டத்தைத் தன்னலத்தின்
பேய்ப்பிடித்தே ஆட்டுவதாய் எண்ணிக் கொண்டே
.. பேசாமல் குற்றத்தைப் பெருக்கலாமா?
காய்சினத்தீயது புரட்டர் தோலுரித்துக்
.. காட்டாமல் இருப்பதுவும் புரட்சி யாமோ?
 
புதுமைஎனப் போலிகளைப் புகழும் போக்கைப்
.. புறம்சொல்லிப் பிழைப்போர்மேல் இரக்க நோக்கை
துதிப்பதற்கு மட்டுமேகை தூக்கும் பேர்க்கும்
.. துளியளவும் உழைப்பின்நீர் சிந்தா தோர்க்கும்
மதிப்பளிப்போர் பெரியமனம் படைத்தோர் என்னும்
.. மாசுடையார் செல்லாத காசாய்ப் போகக்
கதிமாற்றும் விதியாக்கச் செய்கை விட்டுக்
.. காலத்தை வீணாக்கல் மடமை தானே?
 

Chandar Subramanian

unread,
Sep 23, 2012, 8:41:32 PM9/23/12
to santhav...@googlegroups.com
மறப்பார் யாரோ?
 
நாடுகாக்க வந்தவராய் வரலாற் றேட்டில்
.. நாம்காணும் தலைவர்தாம் உண்மைக் கொள்கைப்
பீடுடனே மக்களுக்குப் பணியை ஆற்றிப்
.. பெருமையடைந்தவராகச் சொல்லப் போமோ?
காடுமேடு வளைத்தவற்றைக் காத்துக் கொள்ள
.. கட்சிஒன்றை பற்றி நிற்கக் காண்கின்றோமே!
கூடிநிற்கும் தொண்டருக்குக் கையசைப்பே
.. குதூகலத்தைக் கொடுக்குமென்ப தவரின் கொள்கை!
 
சிந்திக்கும் பழக்கமின்றிச் சினமடக்கிச்
.. சீரழியும் பாட்டாளிக் கூட்டம் என்றும்
வந்தனை செய்தேவாடும் அவலம் தீர்க்க
.. வழிகாட்டி முன்நடந்து மாற்றம் கண்ட
அந்தவர லாறெல்லாம் காந்தி காலம்
.. அதன்பின்னெ வந்ததேசபச்சோந்திக் கோலம்
மந்தைகளாய் இருப்பவர்க்கு வந்து சேரும்
.. மரியாதை ஐந்தாண்டுக் கொருநாள் தானே!
 
எப்படியோ சிலநாள்கள் பசியைப் போக்கி
.. இருந்திடவும் வழிவாய்த்த தென்று தானே
தப்பேன்றோ சரியென்றோ வாக்கை விற்கும்
.. தராளம் வறியவரின் நெஞ்சில் ஊறும்
அப்படியே அவர்வாழ்க்கை இருந்தால் தானே
.. அடுத்தமுறை பதவித்தேர் ஏறிப்போவார்
இப்படியே எந்நாட்டில் குடிகள் ஆட்சி
.. இருக்கின்ற தெனும் வியப்பில் அதிர்ச்சி யுண்டோ?

Chandar Subramanian

unread,
Sep 24, 2012, 9:19:34 PM9/24/12
to santhav...@googlegroups.com
செய்வாயா?
 
ஆங்கிலேயர்க் கடிமையாக இருந்த நாளில்
.. ஆர்வமுடன் இளைஞரணி தலைவர் பின்னே
ஓங்கியபே ருணர்வோடு கிளர்ந்தெழுந்தார்
.. ஒன்றுபட்டு நாட்டுரிமைக்காக நின்றார்!
நீங்கியதே அடிமைவாழ்வே எனுங்கொண்டாட்டம்
.. நீடிக்கும் நிலையுளதா? ஏழைவாழ்வுக்(கு)
ஏங்குகிறார் கொள்ளையராய்ச் சொந்த நாட்டார்
.. ஏய்ப்பூழல் கொடுஞ்சுரண்டல் தொடர்கின்றாரே!
 
திரைப்படங்கள் மிகைப்படுத்தும் ஆட்டம் பாட்டம்
.. திசைமாற்றி வைக்க இங்கே ஒழுக்கம் ஓட்டம்
நரைமறைத்து நடிகனவன் இளையபெண்ணை
.. நளினமின்றித் தீண்டிவிளையாடக்கண்டு
முறைதவறி நடப்பதற்கு துறுதுறுக்கும்
.. மூளையில்லார் கூட்டத்தில் இளைஞர் முந்தி!
குறைகண்டால் சீற்றமுடன் களைவதற்குக்
.. கூரறிவின் செயல்திறனைக் காட்டுவாயா?
 
பெற்றவர்கள் கற்றவனாய்ப் பொலிவுண்டாக்கப்
.. பெரும்பாட்டின் அருமையினை அறிவா யாநீ?
மற்றவர்போல் நீயின்றி உன்னைச் சான்றாய்
.. மதித்துப்பின் தொடர்ந்திடவே பல்லாற்றானும்
பற்றுமொழி நாட்டின்முன்னேற்றம் என்றே
.. பணியாற்றும் அணியொன்றைக் காண்பாயா நீ?
முற்றுமிந்த நாடுனைப்போல் இளைஞர் தம்மை
.. முன்னிறுத்தி முன்னேற வழிகாண்பாயா?

Kavingar Jawaharlal

unread,
Sep 25, 2012, 12:45:23 AM9/25/12
to santhav...@googlegroups.com
அருமையான பாடல்.

2012/9/25 Chandar Subramanian <chandarsu...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
 
 

Ramamoorthy Ramachandran

unread,
Sep 25, 2012, 4:02:54 AM9/25/12
to santhav...@googlegroups.com
25/09/2012 pulavar ramamoorthy,<rawm...@gmail.com>
kavimaamani poovai amudhan pallandu vazhgha.
enbathaik kadantha poovai amudhanar innum innum
anbudai chutraththodum aasaiser natpinodum
thenpudai manathinodum dhidamvaayntha udalinodum
inburtu nooraith thottu innumpal landuvaazhgha.

2012/9/25 Kavingar Jawaharlal <kavingar....@gmail.com>

Chandar Subramanian

unread,
Sep 25, 2012, 8:41:35 PM9/25/12
to santhav...@googlegroups.com
சென்னை பாரதி கலைக் கழகம் 23/9/12 அன்று நடத்திய கவிமாமணி பூவை அமுதன் அவர்களின் எண்பதாண்டு நிறைவு விழாவில் வாசிக்கப்பட்ட வாழ்த்துக் கவிதைகள்:
 
1) வாசல் எழிலன் வழங்கிய பாராட்டுக் கவிதை
 
பொன்னைப் போலே ஒளிரும் உள்ளம்
.. புவியைப் போலே தாங்கும் எண்ணம்
மண்ணைப் போலே தாங்கும் நெஞ்சம்
.. மழையைப் போலே வழங்கும் நோக்கம்
விண்ணைப் போலே பரந்த கொள்கை
.. வித்தைப் போலே எழுந்திடும் ஆர்வம்
கொண்ட கவிஞர் பூவை அய்யா
.. கோலம் புகழ்ந்திட வாழ்த்துவோமே!
 
சாதனை பலவாய்ச் செய்வதற்கே
.. சங்கத் தமிழைப் பருகு கின்றார்
வேதனை போக்கும் விருப்பத் தாலே
.. வெல்லும் கவிதை அருந்து கின்றார்
தீதினை ஒழிக்க வேண்டு மென்றே
.. தேனாய் நூல்கள் ஆக்குகின்றார்
நாதனாம் பூவை அமுதனாரை
.. நாடே போற்றச் செய்வோம் நாமே!
 
இலக்கினைக் கொண்டே வாழுகின்ற
.. இளமை நெஞ்ச மாக்குவதற்கே
இலக்கிய நூல்கள் இயம்புகின்ற
.. இனிய நீதிக் கருத்தை எல்லாம்
கலக்கமே இல்லாக் கவிதை ஆக்கிக்
.. கனியாய் நமக்குத் தருவதாலே
இலக்கிய தூதர் இவர்தான் என்றே
.. எவரும் கூறி வாழ்த்த லாமே!
 
2) குமரிச் செழியன் வழங்கிய பாராட்டுக் கவிதை
 
இமயம் போலே எழுவதற்கே
.. இவரும் போற்றும் எழுச்சிக் கவிதை
சமயம் சாதி சாத்திரக் குப்பைச்
.. சடங்குகளெல்லாம் ஒழிவதற்கே
இமையாய்ப் போற்றும் கதைகள் நாளும்
.. இனிதாய் வாழ நாடகம் என்றே
அமுதன் அய்யா தருவதாலே
.. அன்னைத் தமிழாய் வாழ்த்து வோமே!
 
எழுத்தை மூச்சாய்க் கொண்டிருந்தே
.. என்றும் கருத்துரை செய்தே வாழும்
பழுத்த இலக்கிய வாதி நல்ல
.. பண்ணைப் போற்றும் பரிதியின் சோதி
செழித்தே என்றும் நிற்க போற்றும்
.. சிந்தை வளத்தைப் பெருக்க எங்கும்
வழியைக் காட்டக் அமுதன் அய்யா
.. வாழ்க இன்னும் எண்பதாண்டே!

Chandar Subramanian

unread,
Sep 26, 2012, 8:46:10 PM9/26/12
to santhav...@googlegroups.com
சிந்திப்போமா?
 
பொழுதெல்லாம் புழுதியிலே கிடப்போனுக்குப்
.. பூமணமும் ஒவ்வாமை நோயுண்டாக்கும்
அழுதிருப்போன் போல் முகத்தை வைத்திருப்போன்
.. அகமகிழ்ச்சி நிறைந்தவனாய் இருக்கக்கூடும்!
விழுதுகளே சிலமரத்தை வேர்போல் தாங்கும்
.. விடியாத இருளினிலும் விளக்கம் தோன்றும்!
முழுதுணர்ந்தோர் சிறுபிழையில் சிக்கக் கூடும்
.. மூளியில்லா முழுமையெனல் முயற்கொம்பே தான்!
 
கழுதையது மிக அதிகம் பொதிசுமுக்கும்
.. கனவேகக் குதிரையும்தான் குழியில் தள்ளும்!
பழுதுகளும் பாராட்டப் பலரைச் சேர்க்கும்
.. படித்தவர்க்கும் பணம்பெருகக்குணங்கள் சாகும்!
உழுபவர்கள் அழுதாலும் கண்ணீர் இல்லை
.. ஊரேய்ப்போர் தன்னலத்துக்(கு) அழுதும் ஏய்ப்பார்!
பழுப்பதற்குள் பறித்துவிடப் பதைப்போர் உண்டு
.. பண்பாட்டில் மண்ணிடுவோர் பாரை ஆள்வார்!
 
இயற்கையிலே உள்ளஒவ்வொன்றும் தத்தம்
.. இயல்பினிலே பலவாறாய்ச் சார்ந்து வாழச்
செயற்பாட்டில் மனிதன் ஏன் சேர்ந்து வாழும்
.. சிந்தனைசெய் மனமிருந்தும் சிதைவே எங்கும்!
வயலுழுவோன் வாடுகின்றான் உழைத்துழைத்து
.. வயிற்றுக்குச் சோறிடுவோன் வாய்க்குத் தாகம்!
முயற்சியின்றி ஒருசிலரே முடிமன்னர்போல்
.. முன்னேற்றம் காண்பதுவா? சிந்திபோமா?

Chandar Subramanian

unread,
Sep 28, 2012, 8:48:45 PM9/28/12
to santhav...@googlegroups.com
யாரை? எங்கே?
 
தூக்கிவிடக் காசள்ளிக் கொடுத்தால் தங்கள்
.. தோள்களிலே சுமந்துயர வைக்கும் மக்கள்
வாக்கருமை நன்குணர்ந்தாலன்றிப் பொல்லா
.. வஞ்சகர்கள் பதவித்தேர் ஏற அஞ்சார்!
போக்கற்றோர் தவறுகளைப் புரிந்தே செய்யும்
.. புன்மைநிலை அறிவாற்றல் அழிக்க வானால்
ஆக்குதற்காம் அறிவாற்றல் அழிக்க வானால்
.. அவலங்கள் பெருக்கத்திற் களவும் உண்டோ?
 
உண்பதற்கும் உடுப்பதற்கும் உறைவதற்கும்
.. ஓயாமல் உழைப்போன் இல்லத்தில் கண்ணீர்!
கண்மூடித் தூங்கி விடாக் கவலை வாட்ட
.. காட்டுகிற பணம் ஆசைத் தீயை மூட்டும்
எண்ணத்தில் அன்றையநாள் தேவை நிற்கும்
.. ஏமாற்றப் பின்விளைவின் திரையாய் வஞ்சம்!
மண்செழிக்கப் பாட்டாளி உழைப்புத் தேவை
.. மாண்புகளின் தேரிழுத்தல் பின்நாள் சேவை!
 
ஏற்றிவிட்டோர் தலைகுனித்து நிற்கும் நேரம்
.. இருமாந்து விம்மிஎழும் நெஞ்சில் போதை
காற்றிலேறிக் கலசத்தில் தங்கும் கந்தல்
.. கட்டிவைத்த கொடிபோல அசைந்து காட்டிப்
போற்றுதலை எதிர்பார்த்தல் அகந்தை தானே?
.. பூசைப்பூ வாடியபின் போவதெங்கே?
நேற்றின்று நாளைவாக்குறுதி எல்லாம்
.. நினைவிருந்தும் கேட்பதெனில் யாரை, எங்கே?

Chandar Subramanian

unread,
Sep 29, 2012, 8:38:02 PM9/29/12
to santhav...@googlegroups.com
நாள் என் செய்யும்?
 
மானத்தைப் பெரிதாக மதித்த காலம்
.. மலர்ந்திடுமா மீண்டுமெனும் எதிர்பார்ப் பேக்கம்
போனதையே பெருமையாகப் பேசிக் கோன்டு
.. பொழுதோட்டும் போக்கினிலா புதுமை பூக்கும்?
ஏன்நாமும் முன்னைவிட சிறப்புற் றோங்கி
.. இருக்கின்றோம் அறிவியலில் பெருமை தானே?
ஊன்பொதிக்கா உயிர்பெற்றோம்? ஊருக்கென்றும்
.. ஒருநன்மை செய்யாக்கால் நாளென் செய்யும்?
 
மனம் பெருத்தோர் வாழ்ந்திருந்த காலம் அன்று!
.. மாசாசை மலைபோன்று வளரவில்லை
பணம்பெருத்தோர் பேராசைப் பெருக்கினாலே
.. பஞ்சையரின் உயிர்வாழ்வு பாழாய்ப் போகக்
குணம்கொண்டோம் தாம்மட்டும் பதுங்கிக் கொள்ள
.. குற்றங்கள் திறமைகளாய் மதிக்கும் போக்கில்
கணத்துக்குக் கணமழிவில் உலகம் சாயக்
.. கடனாற்றும் கருத்தின்றேல் நாளென் செய்யும்?
 
இந்தநாளில் நம்வாழ்க்கை முறைதான் நன்றா?
.. இதைஎண்ணிப் பின்வருவோர் போற்றுவோரா?
சொந்தபந்தம் சுகதுக்கம் பொதுவே யார்க்கும்!
.. சுயநலத்தைப் பெரிதாக எண்ணாச் சாறோர்
எந்தநாளில் வாழ்ந்தாலும் வரலாறாவார்!
.. எல்லாமும் தமக்கென்பார் இழிந்தே சாவார்!
வந்தவழி எனும்நினைப்பே வீண்நாள் ஆக்கும்
.. வாழ்வித்து வாழ்கின்ற நாளே நன்னாள்!

Chandar Subramanian

unread,
Sep 30, 2012, 9:38:32 PM9/30/12
to santhav...@googlegroups.com
மழலைப்பேறு
 
குலம்வளர் வித்து
குடும்பத்தின் சொத்து
நலம்நிறை மகிழ்ச்சி
நடமிடும் எழில்தேர்
வலம்வரும் வான்மதி
வாழ்க்கைப் பயன்நிதி
உலவிடும் ஓவியம்
உறவுணர் காவியம்!
 
உயிர்வளர் அமுதம்
உளக்குளக் குமுதம்
உயர்தரு நிதியம்
உறவுகள் பதியம்
பயன்பல பதியும்
பயனுறும் இதயம்
இயலிசைக் கூத்தின்
இனிமையின் சாறு!
 
(வேறு)
 
பேசிடும் செல்வமாகப்
பெருமைகள் சேர்ப்பதாக
மாசிலா இன்பம் வாழ்வில்
மண்டியே சுரப்பதாக
வீசிடும் தென்றல் தம்மை
விளங்கிடும் அன்பைக் கொண்டே
ஆசையில் அணைப்பதாக
அமைவதே பிள்ளைச் செல்வம்!
 
கோடியாய்ப் பணத்தைச் சேர்த்து
குவித்துள மாடி வீட்டில்
ஓடியே ஆடிப் பாடும்
ஒரு மகவில்லை என்றால்
வாடிடும் நிலைமை அன்றோ
வளர்ந்திடும் வாழ்நாள் எல்லாம்!
கூடிவாழ் குடும்பம் தன்னில்
குழந்தையால் குலவும் பாசம்!
 
தழைத்திடும் மரக்கிளைகள்
தரைதொடும் விழுது பெற்றால்
பிழைத்திடும் ஆயுள் நீளும்
பெருகிடும் இனவளர்ச்சி!
மழலைவாய்மொழி மணக்கும்
மனமெலாம் பூக்காடாகும்
குழந்தையின் விழிவெளிச்சம்
குடும்பத்தில் ஒளி யளிக்கும்!

Chandar Subramanian

unread,
Oct 2, 2012, 8:38:12 PM10/2/12
to santhav...@googlegroups.com
படிப்பாய்! பிடிப்பாய்!
 
படித்துக் கொள்ளடா தம்பி! - நல்ல
பண்பாடு பெறுதலை நம்பி - கருத்தைப்
பிடித்துக் கொள்ளடா தம்பி!
 
படித்துப் பெறுதலே பட்டம் - அதனைப்
பரிந்துரை தருவது மட்டம்
பிடித்தவர் அளித்திடும் பரிசு - அவர்கள்
பெருமைக்கே எனிலது தரிசு!
- படித்துக் கொள்ளடா தம்பி...
 
படிப்பும் பரம்பரைச் சொத்தா? - நல்ல
பண்புக்கவை தான் வித்தா?
பண்பே உயர்வின் வித்து - உண்மைப்
பகுத்தறிவே புகழ்ச் சொத்து
- படித்துக் கொள்ளடா தம்பி...
 
உறவுகள் உயர்ந்திடத் திட்டம் - அதையும்
உருவாக்கிட ஒரு வட்டம்
சிறப்பினை ஒதுக்குதல் காழ்ப்பு - தெரிந்தும்
சிறுமையைப் போற்றுதல் ஏய்ப்பு!
- படித்துக் கொள்ளடா தம்பி...
 
சிலையினைச் சிதைத்தல் சிறுமை - கொடிய
சீற்றமே நடத்தையின் கருமை
நிலையினை உயர்த்தலே பெருமை - ஒழுக்க
நெஞ்சினைக் கொள்வதுன் உரிமை!
- படித்துக் கொள்ளடா தம்பி...

Chandar Subramanian

unread,
Oct 3, 2012, 8:39:16 PM10/3/12
to santhav...@googlegroups.com
அநியாயத் தீ!
 
பதிப்பாளர் சிலரிடத்தில் படைப்பைத் தந்து
.. பணம்பெறவே நான்பட்ட பாடு நெஞ்சம்
கொதிப்படையும் கொடுமையினை நினைக்கும் தோறும்
.. குமறுவதைத் தடுத்திடவே முடியவில்லை
மதிகொண்டு மதிப்போடு வாழ்வதற்கு
.. மனமிருந்தால் போதாதே! நடப்பே வேறு!
நிதிசேர்த்துப் படைப்பாளி வெளியிட்டாலும்
.. நிம்மதியோ நூலகத்தார் ஆணை நோக்கி!
 
இலக்கியமும் உளவியலும் கற்று நெஞ்சில்
.. எழும்கருத்தை எழுத்துருவில் எழுப்பி நூல்கள்
பலதுறைகள் சார்ந்தவையாய் படைத்துக் காணும்
.. பலனான மனநிறைவைச் சொல்லப் போமோ?
சிலர்கதைகள் எப்படியோ? பலர்க்கு நேர்மைச்
.. செயல்முறையாய் இருப்பதனால் சிக்கல் நேரும்!
நலம்பொதுவா? தனிச்சொத்தா? உண்மை சொல்ல
.. நாம்நடக்கும் பாதையிலே யாரைக் கேட்போம்?
 
ஏமாற்றம் இதயத்தில் உரத்தை ஏற்றும்
.. இன்னலிலே இதையேற்போர் எத்துணைப்பேர்?
நாமார்க்கும் அஞ்சோம் என்றிருப்போர் கூட
.. நார்நாராய் கிழிபடுங்கால் என்செய் வாரோ?
தாம்தூம்தை எனக்குதிக்கும் தகுதி இல்லார்
.. தலைநிமிர்ந்தே நடக்குங்கால் தகவேன் தாழும்?
ஆம் இங்கே சூதுகளின் ஆதிக்கத்தில்
.. அநியாயத் தீவானில் சூழும் தானே?

Siva Siva

unread,
Oct 3, 2012, 9:32:03 PM10/3/12
to santhav...@googlegroups.com


2012/10/3 Chandar Subramanian <chandarsu...@gmail.com>

அநியாயத் தீ!
 
பதிப்பாளர் சிலரிடத்தில் படைப்பைத் தந்து
.. பணம்பெறவே நான்பட்ட பாடு நெஞ்சம்
கொதிப்படையும் கொடுமையினை நினைக்கும் தோறும்
.. குமறுவதைத் தடுத்திடவே முடியவில்லை
மதிகொண்டு மதிப்போடு வாழ்வதற்கு
.. மனமிருந்தால் போதாதே! நடப்பே வேறு!
நிதிசேர்த்துப் படைப்பாளி வெளியிட்டாலும்
.. நிம்மதியோ நூலகத்தார் ஆணை நோக்கி!
 
-->  குமறுவதை - குமுறுவதை?

Swaminathan Sankaran

unread,
Oct 3, 2012, 11:38:56 PM10/3/12
to santhav...@googlegroups.com
இந்த அநியாயம் அழிவதற்கு படிப்பவர்கள், புத்தகம் படிப்பவர்கள், பணம் கொடுத்து வாங்கிப் படிப்பவர்கள் எண்ணிக்கை கூட வேண்டும். படைப்பாளியின் காப்புருமையைக் காக்கும் சட்டம் வலிமையாக இருக்க வேண்டும். படைப்பாளிகள்கள் கட்சி வாரியாகப் பிரியாமல், படைப்பாளிகள்கள் என்ற ஒரே நோக்கில் ஒன்று பட வேண்டும். இல்லையேல் இந்த அவல நிலை மாற இயலாது.
 
சங்கரன்
 
 

2012/10/3 Chandar Subramanian <chandarsu...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
 
 



--
 Swaminathan Sankaran

Chandar Subramanian

unread,
Oct 4, 2012, 8:42:52 PM10/4/12
to santhav...@googlegroups.com
ஆம். தட்டுப் பிழை. குமுறுவதே சரி.


 
2012/10/4 Siva Siva <naya...@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
 
 

Chandar Subramanian

unread,
Oct 4, 2012, 8:43:32 PM10/4/12
to santhav...@googlegroups.com
எழுக தோழா!
 
படைப்பவன் தினமும் படிப்பவனானால்
.. பதிந்திடும் பண்புகள் பலவும்
உடைபடும் கிளையும் உடனடி துளிர்த்தே
.. உதவிடும் குணத்தை நிலவும்
கொடுத்திடும் இயல்பினைக் கெடுத்தவன் அடையும்
.. குதூகுலம் வஞ்சகப் பலமா?
விடுத்தவன் ஒதுங்க அடுத்தவன் பிடிக்குள்
.. விரைவினில் சிக்குதல் நலமா?
 
விளம்பரம் தேடிக் களம்பல நாடும்
.. வேகத்தில் அலைந்திடல் மடமை
உளந்தனில் தூய்மை விளங்கிட வாய்மை
.. ஒன்றிடச் சிறந்திடல் கடமை!
செடிகளின் மலர்கள் கொடுத்திடும் மணத்தில்
.. சேர்ந்திடும் புத்துணர்வகத்தில்
நடைமுறை வாழ்வில் கடைபிடி ஒழுங்கை
.. நல்கிடும் பொலிவினை முகத்தில்
 
அடுத்தவர்க் குதவும் நடத்தையே சிறப்பு
.. அளித்திடும் நிறைமன இருப்பு
கொடுக்கிற நலத்தைத் தடுக்கிற விரைவு
.. கீழவர்க்கே உடன்பிறப்பு!
தொடுத்திடும் பூவே மாலையில் தொங்கும்
.. தொடர்ந்திடும் பெருமையே எங்கும்
விடுத்திடும் அம்பே விரைந்துமுன் பாயும்
.. வினைசெய எழுதுயர் மாயும்!

Siva Siva

unread,
Oct 4, 2012, 9:24:34 PM10/4/12
to santhav...@googlegroups.com
Please check for some typos.

2012/10/4 Chandar Subramanian <chandarsu...@gmail.com>

எழுக தோழா!
 
படைப்பவன் தினமும் படிப்பவனானால்
.. பதிந்திடும் பண்புகள் பலவும்
உடைபடும் கிளையும் உடனடி துளிர்த்தே
.. உதவிடும் குணத்தை நிலவும்
கொடுத்திடும் இயல்பினைக் கெடுத்தவன் அடையும்
.. குதூகுலம் வஞ்சகப் பலமா?
விடுத்தவன் ஒதுங்க அடுத்தவன் பிடிக்குள்
.. விரைவினில் சிக்குதல் நலமா?
 
-->  'விளம் மா விளம் மா விளம் விளம் மா' என்ற வாய்பாடு?
'குணத்தை' = மாச்சீர்.
குதூகுலம்? குதூகலம்?


 
விளம்பரம் தேடிக் களம்பல நாடும்
.. வேகத்தில் அலைந்திடல் மடமை
உளந்தனில் தூய்மை விளங்கிட வாய்மை
.. ஒன்றிடச் சிறந்திடல் கடமை!
செடிகளின் மலர்கள் கொடுத்திடும் மணத்தில்
.. சேர்ந்திடும் புத்துணர்வகத்தில்
நடைமுறை வாழ்வில் கடைபிடி ஒழுங்கை
.. நல்கிடும் பொலிவினை முகத்தில்
--> கடைபிடி? கடைப்பிடி? 

Hari Krishnan

unread,
Oct 4, 2012, 10:18:03 PM10/4/12
to santhav...@googlegroups.com


2012/10/5 Siva Siva <naya...@gmail.com>

குதூகுலம்? குதூகலம்?

குதூகலம், கோதுகலம், கௌதூகலம்.. எல்லாம் கலம்தான்.  குலம் இல்லை.

--
அன்புடன்,
ஹரிகி.

Chandar Subramanian

unread,
Oct 5, 2012, 8:58:31 PM10/5/12
to santhav...@googlegroups.com
குதூகலந்தான் கடைப்பிடிப்பில் என்றாலும் தட்டுப்பிழை என்னது.


 
2012/10/5 Siva Siva <naya...@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
 
 

Chandar Subramanian

unread,
Oct 5, 2012, 8:59:42 PM10/5/12
to santhav...@googlegroups.com
புதியதோர் உலகம் செய்வோம்
 
புதியதோர் உலகம் செய்வோம் - இந்தப்
பூமியின் வளமெலாம் பொதுவெனச் சொல்வோம்
எதிரிகள் எவருமிங் கிலரே - என்னும்
இனிய நிலையினில் இருக்குமா இடரே?
 
விதியினைச் சொல்லியே ஏய்ப்பார் - ஏதோ
வேறுலகம் என மயக்கியே மாய்ப்போர்
சதியினால் எளியரைச் சாய்ப்போர் - இங்கே
சகலமும் தமக்கென வளைப்பதை மாய்ப்போம்
- புதியதோர் உலகம் செய்வோம்
 
மதியுளோர் தன்னலம் ஆசை - மற்றவர்
மார்க்கமே தவறென வளர்க்கிறார் மீசை
சதமெனச் சேர்க்கிறார் காசை - கள்ளச்
சந்தையில் உழல்பவர் முகத்திலேன் மீசை
- புதியதோர் உலகம் செய்வோம்
 
சிந்தியாமல் பின் தொடர்தல் - மக்கள்
சேவை என்போர் மனம் புகழிலே படர்தல்
வந்தனைக்காய் உடல் வளைதைல் - என்று
வயிறு வளர்ப்பவர் வளர்ச்சியைக் களைந்தே
- புதியதோர் உலகம் செய்வோம்
 
மந்தை ஆடாய்ப்பின் தொடர்தல் - ஏதோ
மாண்புளோன் என்பவன் தாள்சரண் அடைதல்
வந்தனை செய்யவே வளர்தல் - என்று
வாழ்ந்திடும் வறியவர் தாழ்நிலைக் களைவோம்
- புதியதோர் உலகம் செய்வோம்
 
அறிவியல் சிந்தனை தழைக்கும் - கல்வி
அளித்துப் பயிற்றலால் தாயகம் செழிக்கும்
நெறிமுறை நேர்மைகள் நிகழ்வாய் - இயங்கும்
நினைப்பிலே நீசரா பதவியில்? இகழ்வாய்!
- புதியதோர் உலகம் செய்வோம்
 
உழைப்பவர் உயர்வதே பெருமை - ஏய்ப்போர்
உடலிலே குருதியா? கழிநீர்! சிறுமை!
தழைகளும் மூலிகையாகி - உடலைத்
தாக்கிடும் பிணியற பணிசெயல் யோசி
- புதியதோர் உலகம் செய்வோம்
 
பேச்சிலும் மூச்சிலும் நாடு - மேன்மை
பெற்றிடப் பெரும்பணி ஆற்றிட நாடு
தீச்சுடர் போல் அழி கேடு - உண்மைத்
திறமையின் வலிமையைப் புகழுமே ஏடு
- புதியதோர் உலகம் செய்வோம்

Chandar Subramanian

unread,
Oct 6, 2012, 9:34:32 PM10/6/12
to santhav...@googlegroups.com
நல்லவரும் வல்லவரும்
 
உருவத்தில் ஏறத்தாழ் விருந்த போதும்
.. உள்ளத்தில் உணர்வுகளில் பொதுநலத்தைக்
கருதுதற்கே பகுத்தறிவு மாந்தருக்கு!
.. கண்முன்னே பல உயிர்கள் பசியால் வாட
சிறிதும் சஞ்சலமின்றித் திரிவர் தீயர்
.. சிறுமதியோர் பெருகுவதே பூமி பாரம்
வறியநிலை மண்டையிலே கொண்டோர் இங்கே
.. வாழ்கின்ற காலமெலாம் உலகக் கேடே!
 
எல்லோர்க்கும் எல்லாமும் வேண்டும் என்னும்
.. எண்ணமிலார் தம்பெண்டு மக்கள் மட்டும்
செல்வத்தில் நீந்தும் பேராசை கொள்வார்
.. சீரழிப்பார் ஊரழிப்பார் சாகும் மட்டும்
நல்லவரே வல்லவராய் மாற வேண்டும்
.. நலிந்தவரின் துயர்நீக்க உதவ வேண்டும்
புல்கூட மருந்தாகிப் புண்ணை ஆற்றப்
.. பொதுநலத்தை ஏன்மனிதன் பொசுக்குகின்றான்?
 
வல்லமையால் சேர்ந்திருக்கும் வசதி யாவும்
.. வாழ்நாளின் இறுதிவரை உறுதி யாமோ?
பொல்லாதார் சமத்துவத்தைப் போற்ற மாட்டார்
.. போங்காலம் வரையில் தன்னலமாம் சேற்றில்
எல்லையிலா ஆசைகளை வளர்த்துக் கொண்டே
.. இடர்ப்பாட்டில் சிக்கி இழிநிலையில் வீழ்வார்
நல்லவராய் வாழ்ந்தவரின் வரலாறெல்லாம்
.. ஞாலமுள்ள நாள்வரைக்கும் புகழாய் வாழும்!
 
உள்ளத்தை மறைத்துரையில் பரிவைக் காட்டல்
.. ஊர்கெடுப்போர் ஏமாற்று வித்தை என்றே
பள்ளத்தில் இருப்பவர்கள் உணர்ந்து மீளப்
.. படும்பாடும் பாதகரால் பாழாய்ப் போகும்
கள்ளத்தை வளர்ப்பவர்க்கோ பகட்டாய் ஆடை
.. கடுமுழைப்பில் நடுங்குமுடல் சுற்றக் கந்தல்
கொள்ளையரின் உடற்பெருக்கம் இல்லா தோரின்
.. குடற்சுருக்கம் எனும் அவலம் ஒழிவதென்றோ?

Chandar Subramanian

unread,
Oct 7, 2012, 8:55:44 PM10/7/12
to santhav...@googlegroups.com
வெற்றி
 
வல்லமையால் பொல்லாங்கில் வாகை சூடல்
.. வாழ்த்துகிற வகைமாண்பு கொள்வதில்லை
சொல்செயலால் சிந்தனையால் தன்னலத்தைச்
.. சொந்தமாக்கிச் சேமிக்கும் சொத்தும் குப்பை
கல்லாதார் வஞ்சமின்றிக் கடமையாற்றிக்
.. காட்டுகிற சிறுசெழிப்பும் மாசில் வெற்றி!
நல்லவர்போல் நடித்திடுவோர் நாநயத்தால்
.. நம்பவைத்துக் கெடுத்தடையும் வெற்றி போலி!
 
வெற்றியென்றால் நல்லுளத்தோர் விரும்பிப் போற்றும்
.. விவேகத்தின் பதிவாக விளங்க வேண்டும்
குற்றத்தை மறைத்ததனை வினைநலத்தில்
.. கொண்டவெற்றி யெனப்போற்றக் கூட்டம் சேர்த்தால்
பெற்றவளே தன்வயிற்றை நொந்து கொள்வாள்!
.. பெருமைதரும் வெற்றியது நற்றாய்ப் பிள்ளை!
மற்றவர்கள் விதைப்பைத்தன் வெற்றி என்று
.. மலர்முடியைத் தலையேற்றல் மடமை உச்சம்!
 
கடும்முயற் சியும்தோல்வி யடைதல் கண்டு
.. கலங்காது படிக்கட்டாய்க் கருத்திற் கொண்டு
தடுமாற்றம் இல்லாமல் தொடர்வோர்க் குத்தான்
.. தாளாண்மை வெற்றிக்கனியினிக்கும்!
படுத்துகொண்டே வெற்றி படைப்பேன் என்னும்
.. பகற்கனவு தோல்வியிலே தோய்த்துக் காண்போர்
எடுத்துக்கொள்வதற்கேற்ற எச்சரிக்கை!
.. ஏற்கின்ற ஊக்கம்தான் உயர்த்தும் ஏணி!

Chandar Subramanian

unread,
Oct 8, 2012, 8:28:48 PM10/8/12
to santhav...@googlegroups.com
முன்னும் பின்னும்
 
சதுரத்துள் சிறுவட்டம் வரைதல் கூடும்
.. சதுரமதும் வட்டத்துள் சிறிதாய்க் காணும்
எதுவொன்றும் தனிமையிலே பெரிதாய் தோன்றும்
.. இயல்புக்கு மீறுவதா இயற்கை ஆகும்?
புதுமையென விதிமுறையை மீறல் புன்மை
.. புடலங்காய் சுரைக்காய் போல் பெருக்க லாமா?
பதமான தாள்களிலே வண்ணப் பூக்கள்
.. படைத்துமணம் தெளித்திறைக்குச் சூட்டுவாரா?
 
முருங்கையிலைக் கீரையிலே சத்துண்டென்றால்
.. முறியுமதன் கிளையெடுத்தா கூரை வேய்வார்?
இருப்பதுவே புனிதமென்று துளசிதன்னை
.. இருட்டறையில் வைத்தெவரும் வளர்க்க மாட்டார்
விருந்தென்று பல்சுவையில் உணவுப் பண்டம்
.. வேகாத நிலையென்றால் வயிறென்னாகும்?
மருந்தான மூலிகைகள் கசக்குமென்றே
.. மாற்றாகத் தேன்கலக்க அளவும் உண்டு!
 
நடைமுறைகள் பலகாலம் பயின்று பின்னே
.. நன்முடிவைத் தேர்ந்தேதான் பயன்பாட்டுக்குத்
தடையில்லை எனமுன்னோர் எதையும் செய்தார்
.. தற்கால அறிவியல் முன்னேற்றம் என்று
விடைகொடுத்தாம் எளிமையது பழைமை என்று
.. வீம்புக்கு நாகரிகப் போக்காய்க் காட்டும்
உடை உணவுப் பழக்கங்கள் நோய்க்கிடங்காய்
.. உடல் உள்ளம் உருமாற உவப்பா வாழ்வு?

Chandar Subramanian

unread,
Oct 12, 2012, 9:32:31 PM10/12/12
to santhav...@googlegroups.com
அவன் போக்கு!
 
குறையா நிறையா தெரியவில்லை - அவன்
கொள்கை தவறா புரியவில்லை!
 
நியாயந் தன்னைக் கொல்வோரை
நேரில் கண்டால் கூசுகிறான்
நேர்மை வழியே செல்வோரை
நெருங்கிச் சென்று பேசுகிறான்
- குறையா...
 
தியாகம் என்பதை விரிவாகத்
தெரிய உரைப்பார் மேடையிலே
வியாபாரந்தான் அரசியலோ?
விளங்கிக் கொண்டு விலகிடுவான்
- குறையா...
 
கைகள் தட்டும் கூட்டத்தில்
கலந்திட மறுப்பவன் ஓட்டத்தில்!
பொய்யாய்ப் புகழ்புகை மூட்டத்தில்
புகுந்தால் புழுங்குவான் வாட்டத்தில்
- குறையா...
 
உயர்த்தித் தூக்கிப் பேசிடுவோர்
உதறித் தூர வீசிடுவார்
பயத்தில் ஒதுங்கும் விழிப்புணர்வைப்
பலமாய்க் கொள்வான் வழித்துணையாய்
 
சரியா தவறா தெரியவில்லை - எதைச்
சாதிக்கப் போகிறான் புரியவில்லை!

Chandar Subramanian

unread,
Oct 17, 2012, 9:00:15 PM10/17/12
to santhav...@googlegroups.com
உண்மைகள்
 
விருந்தோம்பல் தேவையுள்ள எளியோர் தம்மை
.. விருப்பமுடன் வரவேற்றுப் பசியை ஆற்றல்
பொருள்கொடுத்துப் புகழ்த்தேடி அழையாப் போக்கைப்
.. புறந்தள்ளிக் கடமையெனச் செய்தல் ஈகை!
அருளென்றால் இயல்பாக நெஞ்சின் ஊற்றாய்
.. ஆவனசெய்தணைப்பதற்குச் சுரக்கும் அன்பாம்!
இருள்நீக்கி நெஞ்சத்தில் ஒளிவிளங்க
.. எண்ணம்சொல் வினைத்தூய்மைக் குந்தல் கல்வி!
 
உண்மைதனை நிலைநாட்ட அச்சம் கொள்ளா
.. உள்ளத்தின் சீரொழுங்கே வீரம் என்றார்
எண்ணத்தில் இடராமல் தேர்ந்து செய்தும்
.. இறுதியிலே தோல்வியெனில் ஏற்றல் ஆற்றல்!
மண்ணகத்தின் மாண்பங்கே வாழும் மாந்தர்
.. மானமுடை வாழ்க்கைமுறை காட்டும் உண்மை
கண்போல மொழிநாடு இனத்தைப் பேணும்
.. கடமைகளில் தவறாமை பேராண்மையாம்!
 
பழம்பெருமை பேசிடத்தான் மேடை என்னும்
.. பழக்கத்தில் ஆழ்ந்தேநாம் மறந்தோம் பண்டைச்
செழுமையினைப் பலதுறையும் காணவேண்டும்
.. செயல்முறையில் இழிவென்றால் நாணவேண்டும்
ஒழுக்கந்தான் இயக்கத்தின் உயர்வாம் என்னும்
.. உரம்நெஞ்ச நிலம் கொள்ளும் வித்தாய் வேண்டும்
தொழுதற்கே தலைகைகள் என்றே வாழ்வோர்
.. துணிவில்லார் துணையாகித் துயர்மாய்ப்போமா?

Chandar Subramanian

unread,
Oct 18, 2012, 9:03:02 PM10/18/12
to santhav...@googlegroups.com
சிரிக்கலாமே!
 
நாவென்றால் நல்லதையே சுவைக்க வேண்டும்!
.. நாநயத்தில் உண்மையொளி சுடர வேண்டும்!
வாவென்று சிரங்குக்கை வழங்க நீண்டால்
.. வஞ்சகத்தை யுணர்ந்தும் கையேந்தலாமா?
தாவென்று கெஞ்சுதலே தலைமைப் பண்பாய்த்
.. தாங்குவதோ ஏங்குவதோ தகுதியாமோ?
சீஎன்றே சிறந்தவர்கள் இழித்துப் பேசும்
.. சிறுமதியார் அறங்கூறின் சிரிக்கலாமே!
 
தமிழெழுத்தின் வகையறியான் இலக்கணத்தைத்
.. தான்கற்றுத் தருவேனென் றுரைத்தல் நெல்லின்
உமிதனக்குப் பறந்திடவே தெரியும் என்றே
.. உரைப்பதைப்போல் நகைப்புக்கே இடமுண்டாக்கும்!
குமிழ்கன்னக் குழந்தைக்கு முத்தம் வைக்கக்
.. கொலைநாற்ற வாயுடையோர் முந்தலாமா?
திமிரேறும் தெளிவில்லாச் சிந்தை கொண்டோர்
.. தேர்ந்தவராய்த் தமைஎண்ணச் சிரிக்கலாமே!
 
மக்களது தீர்ப்புகளால் மனம் வெதும்பி
.. மாசென்றும் தூசென்றும் ஏசுவோர்க்குத்
தக்கவைத்துக் கொள்ளஒரு தகுதி இல்லை!
.. தலைக்கனத்தை வளர்ப்பதிலே காலம் ஓட்டிப்
பக்கதுணையாய்ப் பகையை நம்பி ஒட்டும்
.. பச்சோந்திகளின் நடுவே நானே என்று
கொக்கரித்தால் நகைக்காமல் என்ன செய்வோம்?
.. கூகைநன்றாய் இசைக்குமென்றால் சிரிக்கலாமே!

Chandar Subramanian

unread,
Oct 19, 2012, 8:48:33 PM10/19/12
to santhav...@googlegroups.com
நாணம்
 
நாகரிகப் பண்பாகும் நாணம்; என்றும்
.. நல்லதல்லாச் செயல்நிறுத்த எச்சரிக்கும்!
தாகத்தைத் தீர்க்கமது அருந்தப் போமா?
.. தகாமுறையில் கனியவைத்துப் புசிக்கலாமா?
வேகத்தில் சிந்தனைதன் வீழ்ச்சி காணும்!
.. விருந்திடுவோர் வஞ்சமறிந் துள்ளம் நாணும்!
மோகத்தைநாண் ஏற்றி வீழ்த்தா விட்டால்
.. மூளிருளில் குடும்பநலன் மூழ்கிடாதா?
 
பரிவதனால் பரிசுபெற நாண வேண்டும்
.. பணம்கொடுத்துப் புகழடைதல் பண்ட மாற்றா?
புரிசெயலால் புகழடைதல் போற்ற லாகும்
.. பொய்யுரைத்தே மெய்வளர்த்தல் வெட்கக் கேடு!
கரிசனமில்லா நேர்மை காண வேண்டும்!
.. கண்ணோட்டல்பண்பணியைப் பூண வேண்டும்!
விரிவுரையில் விளக்கமொளி வீச வேண்டும்
.. வீம்புக்கு நிற்போரே நைந்த தாம்பு!
 
அறிவுடையார் அஞ்சுகின்ற செயலைச் செய்யா(து)
.. அகல்வோர்க்கு நாணமணி கலனாய் ஆகும்
செறிவறிந்தும் குறைகூறல் முறையா என்னும்
.. சிந்தனையில் திருத்துகின்ற நாணம் வேண்டும்
நிறைவுதனை எப்படியோ பெருக்கிக் கொள்ள
.. நெஞ்சத்தில் நாணுடைமை காவல் வீரன்!
மறையும்நாள் வரை பிறழா முறையில் வாழும்
.. மனச்சான்றாம் நாணுடைமை மாண்பே யன்றோ?

Chandar Subramanian

unread,
Oct 20, 2012, 10:15:34 PM10/20/12
to santhav...@googlegroups.com
குறுமதியாளன் குறிக்கோள்
 
அடியாளாய் வாழ்ந்தாலும் பரம்பரைக்கே
.. ஆனமட்டும் சேர்த்துக் கொள்ளாது போனால்
தடிமாடாய்த் திரிந்தவனாய் அடிமாடாகத்
.. தான்போக நேர்ந்துவிடும் எந்தக் கொள்கைப்
பிடிமான அரசியலாம் தேரில் ஏறும்?
.. பேசாது தலையாட்டிக் கொண்டு பின்னே
கொடிதூக்கி நடந்தாலே கோடி நன்மை
.. குறிஎன்ன குறையின்றி வாழ்தல் தானே?
 
படிதாண்டாப் பத்தினியாய் நடிப்பதற்குப்
.. பரத்தையிடம் யார்பாடம் பயிற்ற வேண்டும்?
இடிதாங்கி அழிவதற்கா பிறந்தேன் நானும்?
.. இழிவஞ்சிக் கிடப்பவர்கள் என்ன கண்டார்?
முடிசூட்டி உலாவருவோர் கண்முன்னாலே
.. முண்டியடித்தோடி முன்னால் மண்டியிட்டுப்
படிகின்ற மண்ணுடலைப் பார்த்துதானே
.. பசையுள்ளோன் பரிதாபம் என்மேல் தங்கும்!
 
பத்தினியாய் வாழ்பவர் பட்டினியால் வாட
.. பார்த்துத்தான் இப்பாடம் கற்றுக் கொண்டேன்
சொத்தென்ன போயிற்று சுகமாய் வாழ
.. சுயநலத்தில் ஆழ்ந்திட்டால் குடியா மூழ்கும்?
உத்தமமாய் வாழ்வதற்குப் பாதை ஒன்றே
.. ஊரேய்த்து வாழ்வதற்கு வழிகள் நூறு
செத்துக்கொண்டிருப்போரின் சித்தாந்தத்தைச்
.. செவிமடுப்போர் வாழ்க்கையிலே சொத்தா சேரும்?

Chandar Subramanian

unread,
Oct 21, 2012, 8:46:43 PM10/21/12
to santhav...@googlegroups.com
குணக்கோணல்
 
உன்முடிவை நானேற்க வேண்டுமென்றால்
.. உந்துதலைப் பலமாக்க முயலும் நண்பா
என்னிடமும் சிந்திக்கும் மனமிருக்க
.. ஏனிதனை அடியோடு மறந்து போனாய்?
நன்மையெனில் பொதுவாக அனைவர்க்கும் தான்
.. நாசமெனில் இழந்தவர்க்குத் துன்பம் தானே?
தன்வலிவால் இன்னலினை இழப்போன் வாழ்க்கைத்
.. தரத்தினிலே உயர்வதுதான் மானக்கேடு
 
கிளைஒடிந்தும் துளிர்க்கின்ற மரங்கள் உண்டு
.. கீழ்ப்படுத்தி வைத்திருந்தும் எழுச்சி காணும்
உளமுள்ள சிலருயர்வைக் கண்டபின்னும்
.. உரம்பெற்றும் முயலாதோர் தலையெழுத்தின்
விளைவின்றி வீறின்றிக் கிடந்துதானே
.. வெகுகாலமாய் அடிமைநிலையில் உள்ளார்
களைசிலவும் விளைபயிரில் ஓங்கி நிற்கும்
.. காண்பதற்கு அதன்சாயல் மயங்க வைக்கும்
 
காணாத நிலையினிலும் மணம் நுகர்ந்து
.. கணத்தினிலே மலரின்பேர் சொல்லல் ஒல்லும்
தூணெந்த மரத்தாலே ஆனதென்று
.. தூர இருந்தேகூறத் துணிவோர் உண்டோ?
வீணாக வார்த்தைகளைக் கொட்டுவோர்க்கு
.. வேகமாகக் கைத்தட்டல் அடக்கத் தானா?
கோணலுள்ள சிலவற்றை நிமிர்த்தத் தோற்போம்
.. குக்கலுடற் கூறுசிலர்க் குணத்துக் குண்டே!
It is loading more messages.
0 new messages