ஒற்று பற்றிய இலக்கண விளக்கக் கேள்வி

507 views
Skip to first unread message

Swaminathan Sankaran

unread,
Aug 23, 2013, 9:43:58 AM8/23/13
to santhav...@googlegroups.com
தமிழ் இணையப் பல்கலைக் கழகத்தின் ,மழலையர் பயிற்சி' பாடங்களில் குழந்தைகள் பாட்டுகள் இருக்கின்றன. அவற்றில் 'ஒற்று' தவறாகப் பயன்படுத்தப் பட்டிருக்கிறதாகக் கருதுகிறேன். பேராசிரியர்கள் குழந்தைசாமி, நன்னன், நக்கீரன் போன்றவர்கள் பொறுப்பில் இருக்கும் பாடத்திட்டங்களில் இவ்வாறான பிழைகள், அதுவும் மழலையர் பயிற்சியில், இருப்பது முறையல்ல என்று நினைக்கிறேன். உங்கள் அபிப்பிராயம் என்ன?
 
உதாரணங்கள்:
 
'குழந்தைக்குப் பூக் கொண்டு வா'           (பூக்)
'மல்லிகைப் பூக் கொண்டுவா'                 (பூக்)
'கண்ணுக்கு மைக் கொண்டுவா'             (மைக்)
 
சங்கரன் 

--
 Swaminathan Sankaran

VETTAI ANANTHANARAYANAN

unread,
Aug 23, 2013, 10:51:02 AM8/23/13
to சந்தவசந்தம்
பூக் கொண்டுவா - பூவைக்  கொண்டுவாஎன்பதன் 2-ஆம் வேற்றுமைத் தொகை வடிவம். பொதுவாக இத்தொகையில் ஒற்று மிகாதெனினும், பூ, ஈ, ஓ போன்ற ஓரெழுத்தொரு மொழி நிலைமொழியாக இருக்கையில், வருமொழி முதல் வல்லினம் மிகும். ஆகவே , பூக் கொண்டுவா என்பது சரியே. இதுபோல, ஆச்சென்றது, ஈச்செத்தது, கோக்காப்பான்.. என வரும்.
 
ஆனால், ஒரு விலக்காக, மை, பை, கை போன்ற ஐ (அய்)கார வகைச் சொற்கள் புணரும்போது , வருமொழி முதல் வல்லினம் மிகாது (கை பிடித்தான், பை கொண்டுவா). எனவே, மைக் கொண்டுவா'  பிழை.

அனந்த் 


2013/8/23 Swaminathan Sankaran <swamina...@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

Swaminathan Sankaran

unread,
Aug 23, 2013, 12:38:50 PM8/23/13
to santhav...@googlegroups.com
விளக்கத்திற்கு நன்றி, அனந்த்!
 
சங்கரன்  


2013/8/23 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>



--
 Swaminathan Sankaran

Bharathi Pitthan

unread,
Aug 23, 2013, 9:25:34 PM8/23/13
to santhav...@googlegroups.com
குழந்தைகள்தானே, பெரியவர்கள் ஆனாதும் சரி செய்து கொள்ளலாம் என்று
நினைத்திருப்பார்கள்! :)

N. Ganesan

unread,
Aug 24, 2013, 5:35:52 AM8/24/13
to santhav...@googlegroups.com


On Friday, August 23, 2013 6:25:34 PM UTC-7, Bharathi Pitthan wrote:
குழந்தைகள்தானே, பெரியவர்கள் ஆனாதும் சரி செய்து கொள்ளலாம் என்று
நினைத்திருப்பார்கள்! :)


பாரதிபித்தன்,

இணையப் பல்கலை தளத்தில் பிழையில்லை. அதைத்தானே அனந்த் சொல்லியுள்ளார்கள்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Aug 24, 2013, 5:42:00 AM8/24/13
to santhav...@googlegroups.com, vall...@googlegroups.com
உங்கள் கேள்வி பெண்கல்வி வேண்டி பாரதிதாசன் பாடிய
புகழ்மிக்க பாடலை நினைவூட்டுகிறது.

இணையப் பல்கலைத்தளத்தில்:

தந்தை பெண்ணுக்கு
தலைவாரிப் பூச்சூடி உன்னைப் -- பாட
     சாலைக்குப் போஎன்று சொன்னாள் உன் அன்னை!
சிலைபோல ஏனங்கு நின்றாய்? -- நீ
     சிந்தாத கண்ணீரை ஏன்சிந்து கின்றாய்?
விலைபோட்டு வாங்கவா முடியும்? -- கல்வி
     வேளைதோ றும்கற்று வருவதால் படியும்!
மலைவாழை அல்லவோ கல்வி? -- நீ
      வாயார உண்ணுவாய் போஎன் புதல்வி!

படியாத பெண்ணா யிருந்தால் -- கேலி
     பண்ணுவார் என்னைவ் வூரார் தெரிந்தால்!
கடிகாரம் ஓடுமுன் ஓடு! -- என்
     கண்ணல்ல? அண்டைவீட் டுப்பெண்க ளோடு!
கடிதாய் ருக்குமிப் போது -- கல்வி
     கற்றிடக் கற்றிடத் தெரியுமப் போது!
கடல்சூழ்ந்த த்தமிழ் நாடு -- பெண்
     கல்விபெண் கல்விஎன் கின்றதன் போடு!

புரட்சிக்கவிஞர் தமிழாசிரியராகப் பள்ளியில் வேலைபார்த்த காலத்தில்
பெண்குழந்தைகள் பூச்சூடிப் பள்ளிகளுக்குச் சென்றனர்.
இக்காட்சி இன்றைய தமிழகத்தில் அரிதாகிவிட்டது.

நா. கணேசன்
 
சங்கரன் 

--
 Swaminathan Sankaran

N. Ganesan

unread,
Aug 24, 2013, 7:05:03 AM8/24/13
to santhav...@googlegroups.com


On Saturday, August 24, 2013 2:35:52 AM UTC-7, N. Ganesan wrote:


On Friday, August 23, 2013 6:25:34 PM UTC-7, Bharathi Pitthan wrote:
குழந்தைகள்தானே, பெரியவர்கள் ஆனாதும் சரி செய்து கொள்ளலாம் என்று
நினைத்திருப்பார்கள்! :)


பாரதிபித்தன்,

இணையப் பல்கலை தளத்தில் பிழையில்லை. அதைத்தானே அனந்த் சொல்லியுள்ளார்கள்.

நா. கணேசன்
 
On 8/24/13, Swaminathan Sankaran <swamina...@gmail.com> wrote:
> விளக்கத்திற்கு நன்றி, அனந்த்!
>
> சங்கரன்
>
>
> 2013/8/23 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>
>
>> பூக் கொண்டுவா - பூவைக்  கொண்டுவாஎன்பதன் 2-ஆம் வேற்றுமைத் தொகை வடிவம்.
>> பொதுவாக இத்தொகையில் ஒற்று மிகாதெனினும், பூ, ஈ, ஓ போன்ற ஓரெழுத்தொரு மொழி
>> நிலைமொழியாக இருக்கையில், வருமொழி முதல் வல்லினம் மிகும். ஆகவே , பூக்
>> கொண்டுவா என்பது சரியே. இதுபோல, ஆச்சென்றது, ஈச்செத்தது, கோக்காப்பான்.. என
>> வரும்.
>>
>> ஆனால், ஒரு விலக்காக, மை, பை, கை போன்ற ஐ (அய்)கார வகைச் சொற்கள்
>> புணரும்போது
>> , வருமொழி முதல் வல்லினம் மிகாது (கை பிடித்தான், பை கொண்டுவா). எனவே, மைக்
>> கொண்டுவா'  பிழை.
>>


மைகொண்டு மைக்கொண்டு - இரண்டும் சரிதானோ?
அல்லது, கீழ்க்காணும் காட்டுகள் இணையப் பல்கலை உதாரணங்களினின்றும்
வேறா?

ஒருகாலத்தில், இன்க்ஜெட் ப்ரிண்டர் என்பதை மைப்படி அச்சு என்றோம்.
மைப்படி - நாலாயிரத்தில்:

கைக்கொண்டு

மைக்கொண்ட

இவை போல, ‘மைக்கொண்டுவா’ (இணையப் பல்கலை) எழுதப்பட்டுள்ளது.

நா. கணேசன்
 
>> அனந்த்

Swaminathan Sankaran

unread,
Aug 24, 2013, 9:27:08 AM8/24/13
to santhav...@googlegroups.com
'மைக்கொண்டு,' 'மைக்கொண்ட' 'கைக்கொண்டு வா' என்பவை சரியாக இறக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை. வாய் விட்டுப் படிக்கும்போது ஒழி சரியாக வரவில்லை.
 
 
"இணையப் பல்கலை தளத்தில் பிழையில்லை. அதைத்தானே அனந்த் சொல்லியுள்ளார்கள்.

நா. கணேசன்"
 
இல்லை. அவர் அப்படிச் சொல்லவில்லை. 'மைக் கொண்டு வா' பிழை என்று தான் சொல்லியிருக்கிறார்.
 
பார்க்கவும்:
"ஆனால், ஒரு விலக்காக, மை, பை, கை போன்ற ஐ (அய்)கார வகைச் சொற்கள்
>> புணரும்போது
>> , வருமொழி முதல் வல்லினம் மிகாது (கை பிடித்தான், பை கொண்டுவா). எனவே, மைக்
>> கொண்டுவா' பிழை."
 
சங்கரன் 
 
 


2013/8/24 N. Ganesan <naa.g...@gmail.com>



--
 Swaminathan Sankaran

Swaminathan Sankaran

unread,
Aug 24, 2013, 9:30:42 AM8/24/13
to santhav...@googlegroups.com
தட்டச்சுப் பிழை. சர் செய்து...
 
'மைக்கொண்டு,' 'மைக்கொண்ட' 'கைக்கொண்டு வா' என்பவை சரியாக இருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை. வாய் விட்டுப் படிக்கும்போது ஒலி சரியாக வரவில்லை.
 
சங்கரன் 


2013/8/24 Swaminathan Sankaran <swamina...@gmail.com>



--
 Swaminathan Sankaran

Subbaier Ramasami

unread,
Aug 24, 2013, 5:01:13 PM8/24/13
to சந்தவசந்தம்
மை கொண்டு வா என்பதுதான் சரி.

இலந்தை




2013/8/24 Swaminathan Sankaran <swamina...@gmail.com>

Vis Gop

unread,
Aug 24, 2013, 8:52:31 PM8/24/13
to santhav...@googlegroups.com
மை கொண்டு வா

வல்லினம், மெல்லினம், கடைஎழுத்து, முதலெழுத்து, வடசொல் . . . .இவைகளை எல்லாம் கணக்கிற் கொண்டு ஒற்று மிகுவதன் இலக்கணம் வகுக்கப் பட்டிருப்பினும், இரண்டு தனிச்சொற்களின் பொருள்கள், அவை இணைந்த பின் அறியப் படும் பொருள், தொக்கி நிற்கும் உருபு, . . . இவற்றைப் பொருத்தும் ஒற்று மிகுதலும் மிகாமையும் அமைவது வழக்கில் தெரிகிறது.

"மை கொண்டு வா" - ஒற்று மிகாது என்று அறிஞர்கள் விளக்கி விட்டார்கள். இங்கும் தொக்கி நிற்கும் வேற்றுமை உருபைச் செருகினால் 'மையைக் கொண்டு வா' என்று வருமல்லவா?
"மைக்கொண்டை" - மை போன்ற கருங்கொண்டை. ஒற்று மிகுதலே சரி அல்லவா?

நல்வாழ்த்துக்களுடன்,
கோபால்.







2013/8/24 Subbaier Ramasami <elan...@gmail.com>

Pas Pasupathy

unread,
Aug 24, 2013, 9:23:46 PM8/24/13
to santhav...@googlegroups.com
ஆம். உவமத் தொகையில் வருமொழியின் முன் வல்லினம் மிகும். 


2013/8/24 Vis Gop <vis...@gmail.com>

Subbaier Ramasami

unread,
Aug 24, 2013, 11:18:45 PM8/24/13
to சந்தவசந்தம்
பெயர்ச்சொல்லுக்குப்பின்னால் வர்வதையும் பண்புக்குப்பின்னால் வருவதையும் கவனிக்க வேண்டும் . மை (கண்மை )யைக் குறிக்கும் போது மிகாது   வேற்றுமையை விரிக்கும் போது மிகும். மை கொண்டை என்னும் போது மையென்பது கருமையான என்ற பண்பைக்குறிக்கும் அப்பொழுது மிகும். கருமை ஆன கொண்டை,மை போன்ற கொண்டை அல்ல. 
இலந்தை


2013/8/24 Vis Gop <vis...@gmail.com>

Vis Gop

unread,
Aug 25, 2013, 9:26:51 AM8/25/13
to santhav...@googlegroups.com
திரு பசுபதி, திரு இலந்தை இருவருக்கும் நன்றி.
கோபால்.

Kalam Kader

unread,
Aug 25, 2013, 11:16:34 AM8/25/13
to santhav...@googlegroups.com
ஒற்றுப்பிழை சரிபார்த்தல் அல்லது சந்திப்பிழை நாவி என்ற தலைப்பில் ஒரு மென்பொருள் கண்டதாக நினைவில் இருக்கின்றது. அதன் தரவிறக்கம் கிட்டுமா?


2013/8/25 Vis Gop <vis...@gmail.com>



--
அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்
 
"கவித்தீபம்”, “கவியன்பன்” கலாம்
அதிராம்பட்டினம்  பாடசாலை), 
அபுதபி               (தொழிற்சாலை)
வலைப்பூந் தோட்டம்
http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844/ 055 7956007
மின்னஞ்சல்kalaam...@gmail.com , kalam...@gmail.com
 Skype : kalamkader
 

N. Ganesan

unread,
Aug 25, 2013, 12:07:56 PM8/25/13
to santhav...@googlegroups.com
On Saturday, August 24, 2013 6:30:42 AM UTC-7, கடிச்சம்பாடி wrote:
தட்டச்சுப் பிழை. சர் செய்து...
 
'மைக்கொண்டு,' 'மைக்கொண்ட' 'கைக்கொண்டு வா' என்பவை சரியாக இருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை. வாய் விட்டுப் படிக்கும்போது ஒலி சரியாக வரவில்லை.
 
சங்கரன் 



ஓசை பல கவிஞர்களுக்குச் கு சரியாக வருகிறது. இரண்டு விதமாகவும் எழுதலாம் என
தமிழின் மரபு காட்டிநிற்கிறது. It is just a User's choice.

செந்தமிழ்ப் பாவை தெய்வானை
    செந்தில் முருகனைக் கைப்பிடித்தாள்
பைந்தமிழ் வாழ்ந்திடும் மணக்காட்சி
    பரங்குன் றத்தின் திருக்காட்சி 




etc. etc ..,

ரகு எழுதியிருக்கிறார்:
திருமங்கை ஆழ்வாருக்கு பெருமாள் காட்சி கொடுத்த திருவல்லிக்கேணியில் அடியேனது வாடிக்கையான பழைய புத்தகக் கடையில் கிடைத்த ஒரு நூல் “ஸ்ரீஇராம காநாமிருதம்”. வந்தவாசியில் போஸ்ட் மாஸ்டராகப் பணி ஆற்றிய ஸ்ரீஎஸ்.வி.இராமஸ்வாமி என்பவர் இராமாயணத்தை இசையுடன் கூடிய பாடல்களாக இயற்றி அந்தப் பாடல்களுக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழக ஸங்கீத பூஷணம் எஸ், இராமநாத அய்யரும் ( டைகர் இராமநாத அய்யரோ?) ஸ்ரீமதி விஜயலக்ஷ்மி இராமஸ்வாமியும் இசை அமைக்க, ஸ்ரீ வை.மு.கோபாலகிருஷ்ணமாச்சார்யாரின் மதிப்புரையுடன் அந்நூல் வெளியாகிஇருக்கிறது

(BTW, S. Ramanathan is the musicologist who worked on Music in Cliappatikaram. Not Tiger ... . Info for Rajam Raghu)

தேவருக் குதவியவன் தயரதன் — திருமகன் தாடகையின் 
ஆவி யொழித்திட்டான் மிதிலையில் — அரன்வி லொடித்திட்டான் 
தேவியைக் கைப்பிடித்தான் 

மைப்படி மேனியும் செந்தா மரைக்கண்ணும் வைதிகரே,

மெய்ப்படி யலுன் திருவடி சூடும் தகைமையினார்,

எப்படி யூர மிலைக்கக் குருட்டா மிலைக்குமென்னும்

அப்படி யானும்சொன் னேன்,அடி யேன்மற்று யாதென்பனே?


 மைப்படி மேனியும் = மைச்செறிகிற உடலும் = மையினைச் செறிகிற (ஐந்தாம் வேற்றுமைத் தொகை).
கலியாணத்தில் கைப்பிடித்தான், கைப்பிடித்தாள் - மரபிலும், மக்கள் வழக்கிலும் நாடொறும் வாழும் தொடர்.
ஒற்று மிகும் இவற்றில் இரண்டாம் வேற்றுமைத் தொகை இருக்கிறது.

Pas Pasupathy

unread,
Aug 25, 2013, 1:16:06 PM8/25/13
to santhav...@googlegroups.com
>>இரண்டு விதமாகவும் எழுதலாம் என
>> தமிழின் மரபு காட்டிநிற்கிறது. It is just a User's choice

இலக்கிய மரபைக் “கைப்பிடி”த்தலே சரி.  

அதே போல் “கைக்கொள்” ளும் சரியே.

ஆனால், கைகட்டிக் கொள், கைகலப்பு,கைகண்ட,  கைகழுவு , கைகாட்டி, கைகுலுக்கு , கைகூடு, கைகொட்டிச் சிரி, கைகொடு,கைதட்டு,  கைதூக்கு ...இவைதாம் சரி.

 ”க்ரியா” அகராதி இவற்றைச் சரியாகச் சொல்கிறது.
 
...


2013/8/25 N. Ganesan <naa.g...@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--

N. Ganesan

unread,
Aug 25, 2013, 1:40:23 PM8/25/13
to Santhavasantham



2013/8/25 Pas Pasupathy <pas.pa...@gmail.com>

>>இரண்டு விதமாகவும் எழுதலாம் என
>> தமிழின் மரபு காட்டிநிற்கிறது. It is just a User's choice

இலக்கிய மரபைக் “கைப்பிடி”த்தலே சரி.  

அதே போல் “கைக்கொள்” ளும் சரியே.

ஆனால், கைகட்டிக் கொள், கைகலப்பு,கைகண்ட,  கைகழுவு , கைகாட்டி, கைகுலுக்கு , கைகூடு, கைகொட்டிச் சிரி, கைகொடு,கைதட்டு,  கைதூக்கு ...இவைதாம் சரி.

 ”க்ரியா” அகராதி இவற்றைச் சரியாகச் சொல்கிறது.
 


அருமையான தகவல். நன்றி.

ஆக, ஒற்று மிகலும் மிகாமையும் தமிழ் ஏற்கும். 
பெரும்பான்மையான மக்கள் எதை ஏற்கிறார்களோ, அது இலக்கணம் ஆகிறது.
’கடிசொல் இல்லை காலத்துப் படினே’ - தொல்காப்பியம்

நா. கணேசன்

N. Ganesan

unread,
Aug 25, 2013, 1:45:04 PM8/25/13
to santhav...@googlegroups.com


On Sunday, August 25, 2013 10:16:06 AM UTC-7, பசுபதி wrote:
>>இரண்டு விதமாகவும் எழுதலாம் என
>> தமிழின் மரபு காட்டிநிற்கிறது. It is just a User's choice

இலக்கிய மரபைக் “கைப்பிடி”த்தலே சரி.  

அதே போல் “கைக்கொள்” ளும் சரியே.

ஆனால், கைகட்டிக் கொள், கைகலப்பு,கைகண்ட,  கைகழுவு , கைகாட்டி, கைகுலுக்கு , கைகூடு, கைகொட்டிச் சிரி, கைகொடு,கைதட்டு,  கைதூக்கு ...இவைதாம் சரி.

 ”க்ரியா” அகராதி இவற்றைச் சரியாகச் சொல்கிறது.
 

இன்னொன்று: தொலைபேசி

Pas Pasupathy

unread,
Aug 25, 2013, 1:50:16 PM8/25/13
to santhav...@googlegroups.com
எங்கே மிகும், எங்கே மிகாது, எங்கே எதை எழுதவேண்டும் என்ற  இந்தப் பயன்பாட்டுக்குப் பின்னே ஓர் இலக்கணம் இருப்பது உறுதி. 

தேர்ந்தவர்களிடம் கேட்டால் விளக்கம் கிடைக்கலாம். 


2013/8/25 N. Ganesan <naa.g...@gmail.com>




2013/8/25 Pas Pasupathy <pas.pa...@gmail.com>
>>இரண்டு விதமாகவும் எழுதலாம் என
>> தமிழின் மரபு காட்டிநிற்கிறது. It is just a User's choice

இலக்கிய மரபைக் “கைப்பிடி”த்தலே சரி.  

அதே போல் “கைக்கொள்” ளும் சரியே.

ஆனால், கைகட்டிக் கொள், கைகலப்பு,கைகண்ட,  கைகழுவு , கைகாட்டி, கைகுலுக்கு , கைகூடு, கைகொட்டிச் சிரி, கைகொடு,கைதட்டு,  கைதூக்கு ...இவைதாம் சரி.

 ”க்ரியா” அகராதி இவற்றைச் சரியாகச் சொல்கிறது.
 


அருமையான தகவல். நன்றி.

ஆக, ஒற்று மிகலும் மிகாமையும் தமிழ் ஏற்கும். 
பெரும்பான்மையான மக்கள் எதை ஏற்கிறார்களோ, அது இலக்கணம் ஆகிறது.
’கடிசொல் இல்லை காலத்துப் படினே’ - தொல்காப்பியம்

நா. கணேசன்
 
...



N. Ganesan

unread,
Aug 25, 2013, 2:09:08 PM8/25/13
to santhav...@googlegroups.com


On Sunday, August 25, 2013 10:50:16 AM UTC-7, பசுபதி wrote:
எங்கே மிகும், எங்கே மிகாது, எங்கே எதை எழுதவேண்டும் என்ற  இந்தப் பயன்பாட்டுக்குப் பின்னே ஓர் இலக்கணம் இருப்பது உறுதி. 

தேர்ந்தவர்களிடம் கேட்டால் விளக்கம் கிடைக்கலாம். 


ஆம். க்ரியா செய்தவர்களை நன்கறிவேன். ஜே. நீதிவாணன் (மதுரை), கி. நாச்சிமுத்து, செ. வை. சண்முகம்.
கிரியா ராமகிருஷ்ணன் முயற்சி போற்றுதற்குரியது.

கைக்காட்டி மரம் என்று ஜெயகாந்தன் பயன்படுத்துகிறார்
அவரே, கைகூப்பு எனவும் சொல்கிறார். 
ஐ என முடியும் சொற்களுக்கு க் மிகுமா? மிகாதா? - இன்னும் சரியான இலக்கணம் தமிழில் அமைந்துவிட்டதாகச்
சொல்ல முடியவில்லை.

துறவு - ஜெயகாந்தன்
”புவனகிரியின் எல்லையில் 'கடக் கடக் ' கென்று இரட்டை மாட்டுக் கட்டை வண்டியொன்று ஏற்றியிருந்த இலைக்கட்டுச் சுமையுடன் நகர்ந்துக்கொண்டிருந்தது. கழுத்து மணி 'சலசல 'த்தது; சக்கரத்தின் ஓசை விட்டுவிட்டுக் கிறீச்சிட்டது.

இலைக்கட்டுகளின்மேல், குளிருக்குக் கோணிப்பையைப் போர்த்தியவாறு உறக்கமும் விழிப்புமாய் உட்கார்ந்திருந்த சோமுவுக்கு ஊர் நெருங்குவதில் பயமும் மகிழ்ச்சியும் தோன்ற உறக்கம் கலைந்தது.

'சிதம்பரம் 1 மைல் ' ' ----என்ற கைக்காட்டி மரத்தைக் கண்டவுடன்,

'ஐயோ '---- ' என்று குதூகலிக்கும் குரலில் கூப்பிட்டான் சோமு.

வண்டிக்காரன் நுகத்தடியில் கால்களை உந்திக் கொண்டு, மாடுகளின் மூக்கணாங்கயிற்றை வலிந்திழுத்தான்; வண்டி நின்றது.

வண்டியிலிருந்து, சக்கரத்தைப் பற்றித் தொத்திக் கீழே இறங்கிய சோமு வண்டிக்காரனின் முன் கைகூப்பி நின்றான்.”

N. Ganesan

unread,
Aug 25, 2013, 3:11:21 PM8/25/13
to santhav...@googlegroups.com

க் - மிகுமா? மிகாதா?
ஐ விகுதிபெறும் சொற்களுக்கு வருமொழிமுதல் ககரமாயின் இலக்கணம் அமைந்துவிட்டதா? 

கைக்கலப்பு: 
அகராதி தருகிறது:

தினத்தந்தி மாலைமலரில்:
ஏத்தாப்பூர் போலீஸ் நிலையத்தில் கைக்கலப்பு: சென்னை போலீஸ்காரரை தாக்கிய சப்-இன்ஸ்பெக்டர்

கைக்கலத்தல் (கைக்கலப்பு) என்பது தமிழின் வரலாறு அளிக்கும்
- முதுகுடுமிப் பெருவழுதி பற்றிப் பேசும் - செப்பேடு காட்டுகிறது:
வராகவெல் கொடிமுதல் இராசபரிச் சந்தமும்
இனையன பிறவும் முனைவயிற் கொண்டு
போர்க்கல னாகத்துப் பார்திவ ரானோர்
முன்னரும் செய்தறி யாதன பின்நாள்- - - - - - - - - - - -40
செய்துமென்று எண்ணற் கரியது கைக்கலந்து
அன்றினர் படைதடர்த் தன்திர மேனியில்

Swaminathan Sankaran

unread,
Aug 25, 2013, 4:37:37 PM8/25/13
to santhav...@googlegroups.com
அப்படியானால் 'வாய்பாடு - வாய்ப்பாடு.' 'வாழ்த்துகள் - வாழ்த்துக்கள்,'  'ஓரிரவு - ஒரு இரவு' எல்லாமே சரிதானா? இல்லை, இதையெல்லாம் மக்களை வாக்குப் போடச் சொல்லி இலக்கணம் வகுத்துக் கொள்ளலாமா?  :-)
 
சங்கரன் 


 

Pas Pasupathy

unread,
Aug 25, 2013, 6:10:45 PM8/25/13
to santhav...@googlegroups.com
>>க் - மிகுமா? மிகாதா?
>>ஐ விகுதிபெறும் சொற்களுக்கு வருமொழிமுதல் ககரமாயின் இலக்கணம் >>அமைந்துவிட்டதா? 


இது சரியான கேள்வியன்று. மேலும் நுணுக்கமாக ஒவ்வொரு சொற்றொடரையும் அணுகவேண்டும். தொகா நிலைத் தொடரா? தொகை நிலைத் தொடரா?  வேற்றுமைத் தொகையா? என்ன வேற்றுமைத் தொகை?.. போன்ற பல விஷயங்களைப் பார்க்கவேண்டும்.

உதாரணமாக, இரண்டாம் வேற்றுமைத் தொகையில் (  இது அனந்த் குறிப்பிட்ட மாதிரி, இராஜகோபாலாச்சாரியாரின் இலக்கண நூலில் தெளிவாக உள்ளது.) 

மை கொண்டுவா.  இதுவே சரி ---.“வெகுஜன” எழுத்தில் எப்படி இருந்தாலும். 

இன்னொரு உதாரணம். 
மூன்றாம் வேற்றுமைத் தொகை.  கை தட்டினான்.
( கையால் தட்டினான்) . இங்கேயும் வலி மிகாது. இதுவே விதி...
“வெகுஜன” எழுத்தில் எப்படி இருந்தாலும். 


ஆறாம் வேற்றுமைத் தொகை. கைத் திறம் ( கையினது திறம்) .
இங்கே வலி மிகும்.

தைப்பொங்கல். இதுவும் சரியே.

இப்படி ஒவ்வொரு சொற்றொடரையும் மிகக் கவனத்துடன் அணுகி, 
இலக்கண நூல்களைப் படித்தால், விதிகள் தெரிய வாய்ப்பு உள்ளது. அப்படியும் குழப்பம் வரலாம். ஆனால்,  பொதுவாக, 

”ஐ விகுதிக்குப் பின் “ வலி மிகுமா? “ என்று கேட்பது பயனைத் தராது. பொதுவான  பதிலும் கிடையாது. 

ஓர் இலக்கண நூலில் உள்ள விதிக்கு மாற்றுக் கருத்தாக இன்னொரு இலக்கண நூலையோ, பழமிலக்கியச் சான்றையோ தான் நாம் கவனிக்கக் கூடும். மற்ற தற்கால ஜனரஞ்சகக் காட்டுகளை இலக்கண விதிகளாக ஏற்றுக் கொள்ள முடியாது. ( சில பழமிலக்கியங்களில் , சில சொற்றொடர்கள் வேறு விதமாக இருந்தால், அவை தட்டச்சுப் பிழையா என்று அறிஞர்கள் ஆராய்ந்து, முடிவு செய்து, பின் சிலசமயம் அவற்றை அப்படியே ..மரபு என்று .. எடுத்துக் கொள்வதும் உண்டு. தற்கால இலக்கண நூல்களின்  பரிந்துரைகள்  வேறுபட்டாலும். ) 
 
ஒற்று இலக்கணம் தற்காலத்தில் சிறிது மாறியிருக்கிறது. உண்மையே. சில நூல்கள் இவற்றைக் குறித்துள்ளன. சில புதிர்களும் உள்ளன. விவாதங்களும் நடந்துள்ளன. புணர்ச்சி இலக்கணம் மீண்டும் எழுதப் படுதல் நலம். 

ஆனால், தற்காலத்திற்கேற்ப ஒற்று இலக்கணம் மீண்டும் நல்ல அறிஞர்களால்  எழுதப் படும்வரை, இப்போது நமக்குக் கிட்டும், இராஜகோபாலாச்சாரியாரின் “புணரியல்” , ஆறுமுக நாவலரின் நூல் போன்ற  இலக்கண நூல்களில் உள்ள விதிகளைக் கடைப்பிடிப்பதே முறை. 

 


2013/8/25 N. Ganesan <naa.g...@gmail.com>

க் - மிகுமா? மிகாதா?
ஐ விகுதிபெறும் சொற்களுக்கு வருமொழிமுதல் ககரமாயின் இலக்கணம் அமைந்துவிட்டதா? 


kirikasan

unread,
Aug 26, 2013, 1:32:25 AM8/26/13
to santhav...@googlegroups.com
ஒரு குழந்தைத் தனமான பதில்... !

ஒரு குழந்தையிடம் இந்த பாடலை கூறும்போது அல்லது  இந்தப்பாடலை ஓர் குழந்தையைக் (சிறுவரைக்) கொண்டு  பாட வைத்தால் மைக் கொண்டுவா என்றே பாடும்.  இலக்கண விதிகள் பெரியவர்களுக்கு.முக்கியமாக இருக்கலாம்! குழந்தையின் மனதுக்கு  மைக் கொண்டுவா சரியாகவே இருக்கிறது. மை கொண்டுவா வில் குழந்தைக்கு சம்மதம் இருக்காது (ஏன் என் மனதுக்கும் இசைவில்லை)

அன்புடன் கிரிகாசன்

Pas Pasupathy

unread,
Aug 26, 2013, 8:05:46 AM8/26/13
to santhav...@googlegroups.com
:-)) 

குழந்தை ‘மைக்’ கொண்டுவா! “ என்றால், இக்காலத் தந்தை “ஆகா! 
குழந்தை பாடப் போகிறது “ என்று ஒரு “மைக்கைக் ( Microphone) கொண்டுவருவார் ! 

“நெய் கொண்டுவா” “காய் கொண்டுவா” என்பதை , குழந்தை எப்படிச் சொல்லும்? 

இந்த விதிகளுக்குப் பின் இருந்த ஓசை, பொருள் தொடர்புள்ள எண்ணங்கள் இப்போது பெரும்பாலும் நூல்களில் சொல்லப் படுவதில்லை.  நூலிலிருந்து எனக்குத் தெரிவது:

ஓரெழுத்தாயினும் ’அய்’ யில் முடிவதால் இந்த விதிவிலக்கு . 

’மை’ என்பது ‘மய்’ என்றுதான் ஒலிக்கும்.  அதனால், இது பொதுவான இரண்டாம் வேற்றுமைத் தொகை விதியைக் கடைப்பிடிக்கிறது.
அதாவது, வலி மிகாது. ( நூலிலிருந்து: உயிர் அல்லது யகர,ரகர, ழகர மெய்களை ஈற்றிலுள்ள நிலைமொழி இரண்டாம் வேற்றுமைத் தொகையானால் வருமொழி முதல் வல்லினம் மிகாது. இது பொது விதி) 

பை திறந்தாள். மை தீட்டினாள்.  காய் தின்றான். நெய் கொண்டுவா! 





2013/8/26 kirikasan <kana...@gmail.com>
ஒரு குழந்தைத் தனமான பதில்... !

ஒரு குழந்தையிடம் இந்த பாடலை கூறும்போது அல்லது  இந்தப்பாடலை ஓர் குழந்தையைக் (சிறுவரைக்) கொண்டு  பாட வைத்தால் மைக் கொண்டுவா என்றே பாடும்.  இலக்கண விதிகள் பெரியவர்களுக்கு.முக்கியமாக இருக்கலாம்! குழந்தையின் மனதுக்கு  மைக் கொண்டுவா சரியாகவே இருக்கிறது. மை கொண்டுவா வில் குழந்தைக்கு சம்மதம் இருக்காது (ஏன் என் மனதுக்கும் இசைவில்லை)

அன்புடன் கிரிகாசன்

-

N. Ganesan

unread,
Aug 26, 2013, 9:03:39 AM8/26/13
to santhav...@googlegroups.com


On Sunday, August 25, 2013 8:16:34 AM UTC-7, kavianban kalam wrote:
ஒற்றுப்பிழை சரிபார்த்தல் அல்லது சந்திப்பிழை நாவி என்ற தலைப்பில் ஒரு மென்பொருள் கண்டதாக நினைவில் இருக்கின்றது. அதன் தரவிறக்கம் கிட்டுமா?


சந்தி சரி பார்க்கும் மென்கலன் தரவிறக்கக் கிடைக்குமா? எனத் தெரியவில்லை. சென்னைப் பல்கலையின் ஓய்வு பெற்ற பேரா. நா. தெய்வசுந்தரம்  
ஒரு ஸாப்ட்வேர் எழுத உதவியிருப்பதாகப் படித்துள்ளேன். அதில் க்ரியா அகராதிச் சொற்கள் தரவுத்தளமாக இருக்கலாம்.

நிலைமொழி -ஐ விகுதிபெற்ற சொற்களுக்குப் வல்லினம் மிகுமா? மிகாதா?, நிலைமொழி -உ விகுதிபெற்ற வடசொற்களின் உகரம் வருமொழி உயிரில்
தொடங்கினால் மறையுமா?, மறையாதா? - சற்றுச் சிக்கலான கேள்வி. சந்தவசந்தக் கவிஞர்கள் ஒரு பட்டியல் உருவாக்கி, அதற்கான காரணங்களையும்
எழுதினால் sandhi checker மென்கலன் செய்யப் பெருந்துணை செய்யும்.

ஐரோப்பாவில் இருந்து இறக்குமதி ஆன சொற்களை இடைவிட்டு எழுதுவது -ஐ விகுதிச் சொற்களின் பின் ஒற்று மிகாமைக்கு 
ஒரு முக்கியக் காரணம். சந்தியின் வேலையை இடைவிட்டு எழுதல் செய்துவிடுகிறது, தைத்திங்கள், தைப்பொங்கல்,
கைக்கலத்தல் (வேள்விக்குடி செப்பேடு, 7-ஆம் நூற்றாண்டு), கைக்கலப்பு, கைக்காட்டி, கைப்பிடித்தல், மைக்கொண்ட கழுத்தன் (சிவன்),
மைப்படி மேனியன் (நாலாயிரம்), வணிகன் பைக்கொண்டு கடைக்குச் சென்றான், ஊழியன் தோளில் பைச்சுமந்து சென்றான், 
தாதாகும், சேதண்ணன்,  ... எல்லாம் இருக்கிறது.

சொற்களுக்கு இடையே இடைவெளிவிட்டு எழுதாது தமிழ் ஓலைகளில் வாழ்ந்த காலத்தில். இப்பொழுது
கணினிக் காலம். இடைவெளி விட்டு எழுதுகிறோம்.  அப்போது ஒற்று மிகுதலைப் பரவலாகக் காண்கிறோம்.
இப்பொழுது அச்சில் இடைவெளி விட்டு எழுதுதலின் தாக்கம். எனவே, புதிய தொடர்கள் அமையும்
போது, ஒற்று மிகாமல் அமைக்கிறோம். இடைவெளி விட்டு எழுதும் புதுமுறையால் ஏற்படும் புதுமுறையால்
ஏற்படும் சந்திவிதியை பழையமுறைக்கு பொருத்தும்போது, நாடோறும் பயன்படுத்தும் தொடர்களுக்குப்
பொருந்துவதில்லை. உ-ம்: கைபிடித்தான்/ள். பைப்பிடித்துச் சென்றான், மைக்கொண்டகண்டன் (சிவபிரான்),
தாதாகும், .... 

மைப்படி மேனியன் - மை படி மேனியன்
தாதாகும் - தாது ஆகும்
சேதண்ணன் - சேது அண்ணன்
கைக்காட்டி - கை காட்டி
கைப்பிடித்தல் - கை பிடித்தல்
கைக்கலப்பு - கை கலப்பு
மைக்கொண்ட மிடற்றன் (கம்பன்) = மை கொண்ட கழுத்தன்.
தொலைப்பேசி (பழையமுறையில்) - தொலை பேசி 
இது தொலைபேசி என்றே ஆனது புத்திலக்கணத்தால் என நினைக்கிறேன்.
தொலை பேசி என இடைவெளி விட்டுப் பலுக்கிப் பழகியாயிற்று.

Narayan Swaminathan

unread,
Aug 27, 2013, 11:18:19 AM8/27/13
to santhav...@googlegroups.com


கைப்பிடித்தல், கை பிடித்தல் .

மெதுவாகக்   கையால் பிடித்தால்  ஒற்று மிகாது. கை பிடித்தல்.

அழுத்திக் கையைப் பிடித்தால் வலி மிகும். ஆதலின்  ஒற்று மிகும். கைப்பிடித்தல் !

தொலை பேசியில் ஒற்று மிகாது. தொலை பேசியில் ' பேசித்தொலை ' என்றால் ஒற்று மிகும்.

நிலைமொழி ஈற்றில் ஐ இருப்பினும் ,  சிலவிடங்களில் ஒற்று  மிகாது. ஆனாலும் ( கொழுப்பால்)   'மெய்' மிகும் (உடல்  பெருக்கும்) வாய்ப்புண்டு. 

காட்டு : வெண்ணை தின்றான். 

இன்றையப்  பொழுதுக்கு ஏதோ என்னாலான இலக்கணக் குறிப்பு. (;-)




சுவாமிநாதன் 


2013/8/26 N. Ganesan <naa.g...@gmail.com>



On Sunday, August 25, 2013 8:16:34 AM UTC-7, kavianban kalam wrote:
 

நிலைமொழி -ஐ விகுதிபெற்ற சொற்களுக்குப் வல்லினம் மிகுமா?  
 

  கைப்பிடித்தல்......

RAJAGOPALAN APPAN

unread,
Sep 9, 2013, 10:52:35 AM9/9/13
to santhav...@googlegroups.com

பொருத்தமான தலைப்பில் இருப்பதால் ஒற்று பற்றிய என் கேள்வியையும் இதே இழையில் இடுகிறேன். அறிஞர்கள் விளக்க வேண்டுகிறேன்.


நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய
கோயில் காப்பானே! கொடித்தோன்றும் தோரண
வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள்திறவாய் என்று வருகிற ஆண்டாளின் வரிகளில், கொடிதோன்றும் தோரண வாயில் என்பது, ஒற்று மிகுந்து கொடித்தோன்றும் என்று வருகிறதே?


அ.ரா



2013/8/27 Narayan Swaminathan <swaminath...@gmail.com>

--

VETTAI ANANTHANARAYANAN

unread,
Sep 9, 2013, 2:30:18 PM9/9/13
to சந்தவசந்தம்

நல்ல வினா.

 

இரு குறில்களாலான சொல் நிலைமொழியாக, வருமொழி முதல் வல்லினமிருப்பின் *எழுவாய்த் தொடரில்* வல்லினம் மிகுந்தேனும் மிகாமலும் புணரலாம் (கே.ராஜகோபாலாச்சாரியார்): காட்டு- தினை சிறிது அல்லது தினைச்சிறிது.

சம்பந்தர் தேவாரத்தில்: 

வேடஞ்சூழ் கொள்கையீர் வேண்டிநீண்ட வெண்டிங்கள்  

ஓடஞ்சூழ் கங்கையும் உச்சிவைத்தீர் தலைச்சங்கைக் 

கூடஞ்சூழ் மண்டபமுங் குலாயவாசற் கொடித்தோன்றும்

மாடஞ்சூழ் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.  2.55.4

உரையில்: ’வாசலில் கொடி தோன்றும் மாடம் என்க’

 

அனந்த்

 



2013/9/9 RAJAGOPALAN APPAN <appan.ra...@gmail.com>

Siva Siva

unread,
Sep 9, 2013, 2:42:26 PM9/9/13
to santhavasantham
ஈராண்டுகளுக்குமுன் வேறு ஒரு பாடலை ஆராய்ந்தபோது நிகழ்ந்த உரையாடலுக்காகத் தேடியதில் கண்டது:

தேவாரத்தில் 'பொடிப்பூசி' என்று பல இடங்களில் வருவதைக்கண்டுள்ளேன்,
எடுத்துக்காட்டாக:
சம்பந்தர் தேவாரம் - 1.32.4
அந்தம் மறியா தவருங் கலமுந்திக்
கந்தங் கமழ்கா விரிக்கோ லக்கரைமேல்
வெந்த பொடிப்பூ சியவே தமுதல்வன்
எந்தை யுறைகின்ற விடைமரு தீதோ. 

அதே போல, 'அர' என்ற சொல்லின்பின்னும் வல்லொற்று மிகுவதைக் கண்டுள்ளேன்.
திருவாசகத்தில்:
தாரகை போலுந் தலைத்தலை மாலைத்  தழலரப்பூண்
வீரஎன் றன்னை விடுதிகண் டாய்விடில் என்னைமிக்கார்
ஆரடி யான்என்னின் உத்தர கோசமங் கைக்கரசின்
சீரடி யாரடி யான்என்று நின்னைச் சிரிப்பிப்பனே. 

கதியடி யேற்குன் கழல்தந் தருளவும்  ஊன்கழியா
விதியடி யேனை விடுதிகண் டாய்வெண் டலைமுழையிற்
பதியுடை வாளரப் பார்த்திறை பைத்துச் சுருங்கஅஞ்சி
மதிநெடு நீரிற் குளித்தொளிக் குஞ்சடை மன்னவனே.



2013/9/9 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

RAJAGOPALAN APPAN

unread,
Sep 10, 2013, 6:38:33 AM9/10/13
to santhav...@googlegroups.com

சிறுத்தொண்டர் என்பதும்,

'மாணிக்கங் கட்டி வயிரம் இடைகட்டி
ஆணிப்பொன் னால்செய்த வண்ணச் சிறுத்தொட்டில்'

என்று பெரியாழ்வார் பாசுரத்தில் வருவதும் அவ்வகையிலேயே என்று அறிகிறேன்.

'சிறிய கள் பெறினே எமக்கீயும் மன்னே' என்ற புறநானூற்றுப் பாடலில், 'சிறு சோற்றானும்' என்று ஒற்றின்றி வருவதும் காண்கிறேன்.

மிக்க நன்றி ஐயா.
 
 
அ.ரா
 


2013/9/10 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

devraj

unread,
Sep 11, 2013, 10:11:12 PM9/11/13
to santhav...@googlegroups.com
On Tuesday, 10 September 2013 00:00:18 UTC+5:30, ananth wrote:

இரு குறில்களாலான சொல் நிலைமொழியாக, வருமொழி முதல் வல்லினமிருப்பின் *எழுவாய்த் தொடரில்* வல்லினம் மிகுந்தேனும் மிகாமலும் புணரலாம் (கே.ராஜகோபாலாச்சாரியார்): காட்டு- தினை சிறிது அல்லது தினைச்சிறிது.

சம்பந்தர் தேவாரத்தில்: 

கூடஞ்சூழ் மண்டபமுங் குலாயவாசற் கொடித்தோன்றும்

மாடஞ்சூழ் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.  2.55.4



திருப்பாவையிலும் அவ்வாறே -

நாயக னாய்நின்ற நந்தகோ பனுடைய
கோயில்காப்பானே, கொடித்தோன்றும்
தோரண வாயில்காப்பானே......................


தேவ்

N. Ganesan

unread,
Sep 11, 2013, 10:47:07 PM9/11/13
to santhav...@googlegroups.com


On Monday, September 9, 2013 7:52:35 AM UTC-7, Rajagopalan wrote:

பொருத்தமான தலைப்பில் இருப்பதால் ஒற்று பற்றிய என் கேள்வியையும் இதே இழையில் இடுகிறேன். அறிஞர்கள் விளக்க வேண்டுகிறேன்.


நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய
கோயில் காப்பானே! கொடித்தோன்றும் தோரண
வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள்திறவாய் என்று வருகிற ஆண்டாளின் வரிகளில், கொடிதோன்றும் தோரண வாயில் என்பது, ஒற்று மிகுந்து கொடித்தோன்றும் என்று வருகிறதே?


அ.ரா



ஒப்பிடலாம்:
தேவாரம் - 2ஆம் திருமுறை:

வேடஞ்சூழ் கொள்கையீர் வேண்டிநீண்ட வெண்டிங்கள்
ஓடஞ்சூழ் கங்கையு ம் உச்சிவைத்தீர் தலைச்சங்கைக்
கூடஞ்சூழ் மண்டபமுங் குலாயவாசற் கொடித்தோன்றும்
மாடஞ்சூழ் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.

நா. கணேசன்

 

Reply all
Reply to author
Forward
0 new messages