நாரா யணனே நமக்கு - தொகுதி 2

3 views
Skip to first unread message

Parthasarathy S

unread,
Jul 23, 2026, 11:05:43 AM (2 days ago) Jul 23
to சந்தவசந்தம்
அடியேன் தினம் எழுதிவரும் நாரா யணனே நமக்கு என்ற ஈற்றடி கொண்ட வெண்பக்களின் இரண்டாம் தொகுதி- பத்து வெண்பாக்களை உங்கள் அனுபவத்திற்கு இடுகிறேன்.

தேரார் கதிரோன் திரள்மண் டலத்துள்ளே

தீரா திருந்தே அலங்கரிப்பான் - பாருக்கே

வேரா யிருப்பவன் வேத முதல்வனாம்

நாரா யணனே நமக்கு                                                                                                  11

 

ஆராய்ந் தறிதலும் ஆமோ அவனுடை

சீரார் செழுங்குணம் செப்பிநட - தாரானே

வாரா தொழிவனோ வாட்டமேன் வாவணங்கு

நாரா யணனே நமக்கு                                                                                                  12

 

நீராய் நமையுருக்கும் நின்மலன் நாம்பாட

நீராய் உருகிடும் நித்தியன் - ஓருருளைச்

சூரிய மண்டலத்தன் சூழ்வன் நமையந்த

நாரா யணனே நமக்கு                                                                                                  13

(உருளை-சக்கரம்)

 

ஊரைந்துக்காய்த் தூதுசென்ற ஓங்கியன் உத்தமன்

தேரை நிறுத்தித் தெருள்கீதை - பாரளித்தான்

கூராம் எயிற்றில்பார் கொண்ட சிரீதரன்

நாரா யணனே நமக்கு                                                                                                  14

 

வாரணத்தின் வாழ்வளித்தான் வாயாரத் தமிழ்கொண்டான்

கூராழி கொள்வான் குளிரவைப்பான் -  பாரதில்

நேராக எட்டெழுத்தின் ஞானமிட்டான் நேயத்தான்

நாரா யணனே நமக்கு                                                                                                  15

 

வார்குழலாள் சீதைக்காய் வார்கடலைத் தாண்டியவன்

கார்நிறத்தன் கொப்பூழ் கமலையன் - சீர்மிகுத்தன்

ஓரானை  காத்தானாம் ஓரானை கொன்றானாம்

நாரா யணனே நமக்கு                                                                                                  16

 

நாகத்தைத் தாங்கியவன்  நாகத்தில் நித்தரையன்

நாகத்தார் நாயகனின் நாயகனாம் - நாகநட்பில்

போரிட்டு வென்றன்று பெட்பவளை மீட்டவனாம்

நாரா யணனே நமக்கு                                                                                                  17

( நாகம்மலை; பாம்பு; வானுலகு; குரங்கு, பெட்பு விருப்பம்;காதல்)

 

ஊரார் உறவெல்லாம் உண்மை உறவில்லை

சீரார் திருமாலைச் சிந்தையிடு - காராடும்

பாரோர் புகழப் பரமபதப் பாங்களிக்கும்

நாரா யணனே நமக்கு                                                                                                  18

 

துருவன் பதமளித்த தூயவன் தாயன்

மருளை விரட்டிடும் மாலன்  - மருத்துவன்

பாரா யணம்மகிழ் பாற்கடற் பள்ளியன்

நாரா யணனே நமக்கு                                                                                                  19

 

வேராம் வினையறுத்து வீடளிக்க வல்லவன்

பாரோர் புகழப்  பலவாய் - வருமாயன்

கூராழி சங்கத்தன் கூற்றத்தின் கூற்றத்தன்

நாரா யணனே நமக்கு                                                                                                  20

தாஸன் புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்



இமயவரம்பன்

unread,
Jul 23, 2026, 11:09:02 AM (2 days ago) Jul 23
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக அருமையான வெண்பாக்கள்!

 கூற்றத்தின் கூற்றத்தன்” - சிறப்பு 

Parthasarathy S

unread,
Jul 23, 2026, 11:24:35 AM (2 days ago) Jul 23
to சந்தவசந்தம்
நன்றி திரு இமயவரம்பரே!

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jul 23, 2026, 6:08:35 PM (2 days ago) Jul 23
to santhav...@googlegroups.com

அழகிய பதிகம்.

>> ஊரைந்துக்காய்த்,  சீதைக்காய்  - இத்தகைய பிரயோகம் சரியானதாகத் தோன்றவில்லை.
>ஓரானை  காத்தானாம் ஓரானை கொன்றானாம்; கூராம் எயிற்றில்பார் கொண்ட சிரீதரன்- அழகு!

... அனந்த்



Reply all
Reply to author
Forward
0 new messages