Fwd: விநாயகர் அனுபூதி! (91-101) (கோபால்)

8 views
Skip to first unread message

GOPAL Vis

unread,
Jan 6, 2026, 8:15:54 PM (2 days ago) Jan 6
to santhav...@googlegroups.com, hemalatha hemalatha
விநாயகர் அனுபூதி! (91-101)

ஈசன் மகனே இபமா முகனே
பாசாங் குசனே பணிபூண் டவனே!
தூசாங்(கு) எரிமுன்; துயருன் திருமுன்!
ஆசத் துடனே அமர்வாய் எனுளே! ..(91)


[இபம் = யானை; ஆங்கு = அதுபோல; ஆசம் = சிரிப்பு]
[ஈசனின் மகனே! பெரிய ஆனைமுகம் கொண்டவனே! பாச அங்குசங்கள் ஏந்தியவனே! பாம்பை அணிந்தவனே! நெருப்பின் முன் தூசைப் போலத்தான் உன் சந்நிதியில் துயரம்! நீ என்னுள்ளே சிரிப்புடனே அமர்ந்தருள்க!]

உள்ளத் தினிலே உறைவாய் இறைவா!
தெள்ளப் புறமும் தெரிவாய் நினருள்
வெள்ளத் தினிலே விழவே தருவாய்
அள்ளக் குறையா அருளின் துளியே! ..(92)


[இறைவா, நீ என் உள்ளத்திலே நிலைகொள்! வெளிப்புறமும் தெளிவாகக் காட்சி கொடு! உன்னுடைய அருள் வெள்ளத்திலே நான் விழுவதற்கு, அள்ளக் குறையாத உன் அருளின் ஒரு துளியைத் தா!] ..(92)

துள்ளும் சிசுவைத் தொடரும் பசுவாய்க்
கள்ளம் கபடம் கடுகும் தெரியார்க்(கு)
எள்ளத் தனையும் இடரற் றவணம்
மெள்ளத் தொடரும் விரிநெஞ் சினனே! ..(93)


[மெள்ள = மெல்ல]
[கள்ளம் கபடம் கடுகளவும் அறியாதவர்களுக்கு எள்ளளவும் துன்பம் வாரா வண்ணம் துள்ளும் கன்றை அன்னைப் பசு தொடர்வதைப் போல, மென்மையாகத் தொடரும் தாராளமான இதயம் உடையவனே!] ..(93)

நெஞ்சத் தினுளே நினைவைத்(து) அணியாய்ச்
செஞ்சொல் மொழியால் தினமும் பரவப்
பஞ்சக் கரனே பரிவாய் அருளே!
தஞ்சம் புனிதச் சரணின் நிழலே! ..(94)


[அணியாய் = அடுக்காய், அழகாய்; செஞ்சொல் = சிறந்த சொல், பரவ = தோத்திரம் செய்ய]
[என் இதயத்தின் உள்ளே உன்னை வைத்து, அழகாய் அமைந்த சிறந்த சொற்கள் கொண்ட மொழியால் தினமும் உன்னைத் தோத்திரம் செய்ய, ஐங்கரனே, அன்போடு அருள் செய்! உன் புனிதமான சரணங்களின் நிழல்தான் எனக்குத் தஞ்சம்!] ..(94)

நிழலே மருளால் நிசமாய்த் தெரியும்!
விழலே நிலமேல் விரிவாய் வளரும்!
பழமை நெறிகள் பழுதாய் இழியும்!
கழலே கலியில் கதிகண் திறவே! ..(95)


[மருள் = மனமயக்கம்; விழல் = வேண்டாத களை]
[மன மயக்கத்தால் நிழலே நிசமாகத் தெரியும்! களைகளே நிலத்தில் பரவலாக வளரும்! பழமையான நன்னெறிகள் பழுதாகித் தாழ்ச்சி அடையும்! இத்தகைய கலி காலத்தில் உன் திருவடிகளே கதியாகும்! ஆகவே கண்ணைத் திற!] ..(95)

திறவாக் கணைநீ திற!மெய் அறிவைப்
பெறவும், சிதையாப் பிரமத்(து) உணர்வை
உறவும், குருவாய் உபதே சமளித்(து)
இறவிப் பயமெற்(கு) இலதாக் குகவே! ..(96)

[உற = அனுபவிக்க]
[திறவாத கண்ணாகிய என் ஞானக் கண்ணைத் திற! மெய்ஞ்ஞானத்தைப் பெறவும், அழிவற்ற பிரம்மத்தை உணர்ந்து அனுபவிக்கவும், நீ என் குருவாய் இருந்து உபதேசம் செய்து, எனக்கு மரணபயம் என்பதே இல்லை எனச் செய்!] ..(96)

குகனின் முனனே குவளை விழியாள்
மகனே திருமால் மருகா எலிமேல்
சுகமாய் உலவும் சுமுகக் களிறே!
அகமா ளிகையில் அரசாய் அமரே! ..(97)


[குவளை = அல்லிமலர்]
[குகனான முருகனின் முன்னவனே! அல்லி விழிகளை உடைய சக்தியின் மகனே! திருமாலின் மருகனே! எலிமீது சுகமாக உலவும் இன்முகமுடைய ஆனைமுகனே! என்னுடைய இதய மாளிகையில் அரசனாக அமர்க!] ..(97)

அமரர் முதலாய் அசுரர்க் குமெலாச்
சமயத் திலுநீ தலையாங் கடவுள்!
கமலம் நினகை கருணை நினகண்!
நிமலா எனுளே நிலைகொள் ளுகவே! ..(98)

[நிமலன் = தூயவன்]
[தேவர்கள், அசுரர்கள், யாவர்க்கும் எல்லாச் சமயத்திலும் நீதான் முதன்மையான கடவுள்! உன் கைகள் தாமரை மலர்கள்! உன் கண்கள் கருணை வடிவானவை! மாசற்றவனே! என்னுள்ளேயே நிலை பெற்றிரு!] ..(98)

கொள்ளாய்! கனலாய்க் குறைசுட்(டு) எரியே!
பள்ளத் தினிலாழ் பதிதர்க்(கு) உனநேர்
விள்ளத் தகுமோ விளியாத் துணையாய்?
எள்ளா(து) இறைவா எனையேற்(று) அருளே! ..(99)

[பள்ளம் = உய்ய ஒண்ணாத நிலை, குழி; பதிதர் = கீழ்நிலை அடைந்தவர்; விள்ள = சொல்ல,தெளிவு படுத்த; விளியா = அழைக்காத]
[என்னை முழுவதுமாக உன்னில் கொள்க! என் குறைகளைத் தீயாகச் சுட்டெரித்து விடு! கீழ்நிலையை அடைந்து உய்வடைய முடியாத படுகுழியில் ஆழ்ந்து விட்டவர்களுக்கு, அழையாமலே வந்துதவும் உனக்குச் சமமான துணை ஒன்றைச் சொல்ல இயலுமோ? என்னைத் தூற்றாமல் ஏற்று அருள்க இறைவனே!] ..(99)

ஏற்றாய் எனிலோ இசையா விடிலோ
போற்றக் கடவேன் புகல்நீ அலனோ!
ஆற்றா தவனுன் அடியேன்! கருணை
ஊற்றே நமதி(வ்) உற(வு)ஓம் புகவே! ..(100)


[ஆற்றாதவன் = இயலாதவன், திறனற்றவன்; ஓம்புதல் = பாதுகாத்தல், கடைப்பிடித்தல்]
[என்னை நீ ஏற்றுக் கொண்டாலும், அன்றி அதற்கு இசையாவிடினும், நான் உன்னைப் போற்றித் துதிக்கக் கடமைப் பட்டவனாவேன்! எனக்குப் புகல் நீயே அல்லனோ? கருணை ஊற்றானவனே! திறனேதும் அற்ற நான் உனக்கு அடியவன்! நமக்கிடையே உள்ள இந்த உறவைப் பாதுகாப்பு செய்!] ..(100)

பயன்
———
வள்ளல் வரசித் திவிநா யகனே
அள்ளித் தருவான் அவனைப் பணிவாம்!
உள்ளத் தினிலே உறவாய் அவனைக்
கொள்ளப் பெருகிக் குவியும் சுகமே! ..(101)


[வரசித்திவிநாயகன் ஒரு வள்ளல்! அள்ளித் தருபவன்! அவனை நாம் பணிவோம்! உள்ளத்தில் அவனை நம் உறவாகக் கொண்டால் சுகமே பெருகி நிறையும்!] ..(101)

சுபம்

நல்வாழ்த்துகள்
கோபால். 

सर्वे जना: सुखिनो भवन्तु ।

Siva Siva

unread,
Jan 6, 2026, 11:57:36 PM (2 days ago) Jan 6
to santhav...@googlegroups.com
Nice.

What is the reason for naming this set as "... அனுபூதி" - instead of calling it "....அந்தாதி"?

#93
/துள்ளும் சிசுவைத் தொடரும் பசுவாய்க்/

கன்றைச் சிசு என்றும் சொல்வது உண்டா?

#100
/புகல்நீ அலனோ!/

அலையோ?


V. Subramanian

Arasi Palaniappan

unread,
Jan 7, 2026, 12:04:35 AM (yesterday) Jan 7
to சந்தவசந்தம், hemalatha hemalatha
அற்புதம் 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CALjGCtti1M_WNWatc80S%2BustHtQvAjm39pAXf9Y4uqfZ%2BqSQBA%40mail.gmail.com.

GOPAL Vis

unread,
Jan 7, 2026, 1:24:18 AM (yesterday) Jan 7
to santhav...@googlegroups.com

Nice
Thank you. 

What is the reason for naming this set as "... அனுபூதி" - instead of calling it "....அந்தாதி"?
அந்தாதி is its structure. அனுபூதி is the content. 
I speak to him, share my desires, status, helplessness, anguish, delight, requests, and what not, with him while also enjoying his beauty, powers, postures, and so on. I humbly submit myself to him as his slave with a prayer to maintain this boss-slave relationship. I served him personally for many years, and continue to do so on occasions, with this relationship unbroken!. He is special to me, so must be I to him. 
I did not start it with an intention to make it an அந்தாதி, while I intended அனுபூதி, which  suggested the structure of கந்தர் அனுபூதி. Sure enough, mine can in no way match Arunagiri's, I being a mortal made of ignorance and incapability. 
I take some freedom in SV and look up to others to give final touches in my efforts. 

#93
/துள்ளும் சிசுவைத் தொடரும் பசுவாய்க்/

கன்றைச் சிசு என்றும் சொல்வது உண்டா? 
शिशु
m.
shishu
young
of
any
anima
From spoken Sanskrit dictionary. 

#100
/புகல்நீ அலனோ!/

அலையோ?
Thanks. I will correct it. 

Gopal. 

--

GOPAL Vis

unread,
Jan 7, 2026, 1:28:18 AM (yesterday) Jan 7
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு பழனியப்பன்
கோபால். 

On Wed, Jan 7, 2026 at 10:34 AM Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:
அற்புதம் 

On Wed, 7 Jan 2026, 2:15 am GOPAL Vis, <vis.go...@gmail.com> wrote:
விநாயகர் அனுபூதி! (91-101)

ஈசன் மகனே இபமா முகனே
பாசாங் குசனே பணிபூண் டவனே!
தூசாங்(கு) எரிமுன்; துயருன் திருமுன்!
ஆசத் துடனே அமர்வாய் எனுளே! ..(91)


[இபம் = யானை; ஆங்கு = அதுபோல; ஆசம் = சிரிப்பு]
[ஈசனின் மகனே! பெரிய ஆனைமுகம் கொண்டவனே! பாச அங்குசங்கள் ஏந்தியவனே! பாம்பை அணிந்தவனே! நெருப்பின் முன் தூசைப் போலத்தான் உன் சந்நிதியில் துயரம்! நீ என்னுள்ளே சிரிப்புடனே அமர்ந்தருள்க!]

.......

-- 

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jan 7, 2026, 3:05:05 AM (yesterday) Jan 7
to santhav...@googlegroups.com
ஆதியந்தம் இல்லா இறைவன் தாள் நெஞ்சிருத்தி இயற்றிய உங்கள் துதிக்கு அந்தாதி என்பது பொருத்தமே
அனந்த்

Sent from my iPhone

On Jan 7, 2026, at 11:58 AM, GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Subbaier Ramasami

unread,
Jan 7, 2026, 7:17:14 AM (yesterday) Jan 7
to santhav...@googlegroups.com
ஈசன் மகனே இபமா முகனே
பாசாங் குசனே பணிபூண் டவனே!
தூசாங்(கு) எரிமுன்; துயருன் திருமுன்!
ஆசத் துடனே அமர்வாய் எனுளே! ..(91)

இருவிகற்பம் ஏன் செய்தீர்கள்?.  ஒரே விகற்பத்தில் செய்ய இயலுமே.

எரிமுன் அடுத்து செமிகோலன் தேவை இல்லை. துயருன் திருமுன் என்பது தூசாங் கெரிமுன் என்பதோடு  இணைந்தே வருதல் நலம். 

இலந்தை

On Tue, Jan 6, 2026 at 7:15 PM GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:
விநாயகர் அனுபூதி! (91-101)

ஈசன் மகனே இபமா முகனே
பாசாங் குசனே பணிபூண் டவனே!
தூசாங்(கு) எரிமுன்; துயருன் திருமுன்!
ஆசத் துடனே அமர்வாய் எனுளே! ..(91)

GOPAL Vis

unread,
Jan 7, 2026, 8:04:47 AM (yesterday) Jan 7
to santhav...@googlegroups.com
நான் அதை இருவிகற்பம் என்று எண்ணவில்லை. ச சா ஒரே எதுகைக்கு ஏற்புடையது என்று எண்ணினேன். மிக்க நன்றி. அதை மாற்றுகிறேன்
கோபால். 

--

Ram Ramakrishnan

unread,
Jan 7, 2026, 8:31:47 AM (yesterday) Jan 7
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
அற்புதமான அந்தாதி அனுபூதிப் பாடல்கள்.

ஒவ்வொருவரும் பாடிப் பரவசங் கொள்ளும் வகையில் இயற்றியுள்ளீர்கள்.

முழுவடிவத்தையும் (திருத்தங்கள் ஏதேனும் இருப்பின் அவற்றைச் செய்தபின்) pdf கோப்பாக அளிக்க வேண்டுகிறேன்.

வளர்க நுந்தம் தமிழ்த் தொண்டு.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jan 7, 2026, at 08:04, GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Kaviyogi Vedham

unread,
Jan 7, 2026, 10:55:29 AM (yesterday) Jan 7
to santhav...@googlegroups.com
 ஈசன்,பாசன்,தூசன்.. என்பன போன்ற சமச்சீர் எதுகைகள் வந்திருந்தால்  அழகாய்  இருந்திருக்குமோ..?  என்  கருத்து.
 இன்னும்  சிந்தித்தால் கிட்டும் என்பது  என் எண்ணம்..   தவறாக எண்ணற்க.
யோகியார்

GOPAL Vis

unread,
Jan 7, 2026, 11:33:24 AM (yesterday) Jan 7
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு ராம்கிராம். 
அவ்வாறே pdf வடிவில் பகிர்கிறேன். 
கோபால்

GOPAL Vis

unread,
Jan 7, 2026, 11:34:59 AM (yesterday) Jan 7
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு கவியோகி அவர்களே. 
கோபால்

இமயவரம்பன்

unread,
6:20 AM (11 hours ago) 6:20 AM
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிகச் சிறப்பான அந்தாதி 

- இமயவரம்பன்

GOPAL Vis

unread,
11:24 AM (6 hours ago) 11:24 AM
to santhav...@googlegroups.com
91ஆம் பாடலின் திருத்திய வடிவம்:

ஈசன் மகனே இபமா முகனே
பாசக் கயிறும் படையங் குசமும்
ஊசற் செவியோ(டு) ஒருகொம் புடனே
ஆசம் புரிவோய் அமர்வாய் எனுளே! ..(91) 

[இபம் = யானை; ஊசற் செவி = முன்னும் பின்னும் அசைந்து கொண்டே இருக்கும் காதுகள்; ஆசம் = சிரிப்பு]
[ஈசனின் மகனே! பெரிய ஆனைமுகம் கொண்டவனே! பாசக் கயிறும் அங்குசப் படையும் முன்னும் பின்னுமாய் அசையும் செவிகளும் ஒற்றைக் கொம்பும் கொண்டவனாய் முறுவல் செய்பவனே! நீ என்னுள்ளத்திலே அமர்ந்தருள்க!] ..(91)

On Wed, Jan 7, 2026 at 5:47 PM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:
--

GOPAL Vis

unread,
11:26 AM (6 hours ago) 11:26 AM
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு இமயவரம்பன். 
கோபால். 

--
Reply all
Reply to author
Forward
0 new messages