நான் எங்கேயோ எதையோ குறிப்பிட்டு யாருக்கோ சொன்னதை, இங்கே வந்து (விளையாட்டுக்காகத்தான் செய்கிறார்; வெகுளி; மிக நல்ல
மனிதர் என்பதெல்லாம் எனக்கு 1971 முதலே தெரியும்) ஒரே ஒரு வாக்கியத்தை மட்டும் எடுத்துப் போட்டு அதற்கு ஒரு கேள்வியை
வேறு கேட்டு வைத்துவிட்டால், நான் அந்த இன்னொரு குழுவில் என்ன நடந்தது என்பதைச் சொல்லியாக வேண்டிய நிரபந்தம்
ஏற்படுகிறது. இங்கே உள்ள சக மரபுக் கவிஞர்களுடைய உள்ளத்தில் வருத்தத்தை விளைவிக்க எனக்கு விருப்பமில்லை.
வேதத்துக்கும் எனக்கும் உள்ள உறவு எங்கள் இருவருக்கும் தெரியும். மற்ற அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டிய
அவசியமில்லையே! நான் வேதத்தை ஒருநாளும் தவறாக நினைகக மாட்டேன். ஆனால் ஒருசில சமயங்களில் தனனிலை விளக்கம்
கொடுக்க வேண்டிய கட்டாயம் (ஏற்பட்டாலும் நான் செய்ததில்லை) ஏற்படுகிறது. இங்கே ஒரு சிலருக்கு என்மேல் ஏற்கெனவே தப்பான
அபிப்பிராயம் இருக்கிறது என்பதை அறிவேன். ஆகவே, என்ன நடந்தது என்பதைச் சொல்லியே ஆகவேண்டியிருக்கிறது. அது
மட்டுமல்ல, இந்த விஷயத்தில் வெண்பாவிரும்பியின் பேருதவி என்ன காரியத்தை எலலாம் செய்திருக்கிறது என்பதை உங்களுக்கு
எடுத்துச் சொல்லவேண்டிய பொறுப்பும் எனக்கிருக்கிறது. ஆகவே இந்தக் கடிதம். சிலருடைய பெயர்களைக் குறிப்பிடுவதைத்
தவிர்க்கிறேன். இந்த விஷயத்தில் சிக்கல் ஏற்பட காரணமாக இருந்தாலும், நான் அவரிடத்திலும் என்றும்போல் பேரன்பும் பெருமதிப்பும்
பூண்டவனாகவே இருக்கிறேன். கருத்துகளை மட்டும் சொன்னால் போதும் என்பதால், இந்தக் கடிதப் போக்குவரத்தில் ஒருவருடைய
பெயரை மட்டும் விட்டுவிட்டு மற்றவற்றை இங்கே தருகிறேன்.
சில மாதங்களுக்கு முன்னால் இன்னொரு குழுவில் ஏதோ பேச்சு வந்த சமயத்தில் ‘பாரதியை உவேசா ஒரு கவிஞனாகவே
மதிக்கவில்லை’ என்று திருமதி கீதா சாம்பசிவம் குறிப்பிட்டிருந்தார். மிக நல்ல, அறிவார்ந்த, முதிர்ச்சியுள்ள பெண்மணி. நான் அதை
மறுத்து, ‘பல இக்கட்டுகளில் பாரதிக்கு உதவி செய்தவரே உவேசாதான்; இருவருக்கும் நல்ல நட்பு இருந்தது’ எனறு சொல்லியிருந்தேன்.
‘இதை நானாகச் சொல்லவில்லை. யார், எப்போது சொன்னது என்பதைச் சமயம் வரும்போது சொல்கிறேன்’ என்று அவர்
சொல்லியிருந்தார். இணைய உறவுகளைப் பற்றி எனக்கு நன்றாகவே தெரியுமாதலால் நான் இந்தப் பெண்மணி சொன்னதைத் தவறாக
எடுத்துக் கொள்ளவில்லை. விட்டுவிட்டேன்.
வெண்பா விரும்பி அனுப்பிய இந்தக் குறிப்பிட் உரைதான் மொத்தச் சிக்கலுக்கும் காரணமாக இருந்திருக்கிறது. (இதை நான்
உணர்ந்ததே நேற்று அந்தக் கடிதத்தை அங்கே அனுப்பிய பிறகுதான்.) இப்போது சில கடிதப் பரிமாற்றங்களை இங்கே நகலெடுத்துத்
தருகிறேன். (எல்லாம் நேற்று நடந்தவை.)
திருமதி கீதா சாம்பசிவம் சொன்னார்:
தொ.மு.சி. ரகுநாதன் அவர்கள் கூறி இருக்கிறார். எதோ ஒரு மலர் இல்லை. தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் நூற்றாண்டு மலர்.
அந்தக் குறிப்பை *******னுக்கு அனுப்பினேன். நாளைக்குள் இங்கே இடுகிறேன். இப்போக் கொஞ்சம் வேலை!
நான் சொன்னேன்:
ஆகா! தாராளமாக அனுப்புங்கள். ‘இப்போ கொஞ்சம் வேலை’எப்போ இல்லையோ அப்போ அனுப்பிச்சா போறும். வாய்கூசாமல்
பொய்பேசும் அந்த மகானுபாவர் யார் என்ற உலகத்துக்குத் தெரியட்டுமே!
பாரதி வரலாற்றுப் பதிவில் சிக்கல்கள் என்று ஈசனோஃபீலியாகாரன் தும்முவதைப் போல ஓயாமல் தும்மிக் கொண்டிருப்பேனே,
அதற்கான கண்கூடான சாட்சியத்தை கீதம்மா தரப்போறாங்க. காத்திருப்போம். :-)
அம்மையார் இதன் பிறகு வேறொரு இழையில் அவர் தரப்பு ஆதாரத்தை எடுத்து வைத்துவிட்டு, பினவருமாறு சொன்னார்:
*************
போட்டாச்சு, அந்த இழையே கிடைச்சுடுத்து, நல்லவேளையா! பாருங்க ஹரிகி அவர்களே. எனக்கு இதில் தனிப்பட எந்த ஆதாயமும்
இல்லை, இப்படியும் இருக்குனு சொல்லப் படுகிறது என்ற ஒரே கருத்துத் தான்.
*************
இதன் கீழ் தனக்கும் இன்னொருவருக்கும் நடைபெற்ற தனிமடல் பரிமாற்றத்தையும், தொமுசி ரகுநாதன், உவேசாவின் இந்த உரையைக்
குறிப்பிட்டு பேசியிருப்பதையும் அப்படியே மேற்கோளாக அனுப்பியிருந்தார். (கடிதம் நீண்டாலும் பரவாயில்லை. சிலவற்றை சில
விதங்களில் செய்யத்தான் வேண்டியிருக்கிறது. தொமுசி ரகுநாதன் பேச்சிலிருந்து, இந்தத் தலைப்புக்குத் தொடர்புள்ள பத்தியை மட்டும்
இங்கே தருகிறேன்.
ஹரிகி அவர்களே,
நான் படித்ததைத் தான் இங்கே எடுத்துப் போட்டிருக்கேன். மற்றபடி உ.வே.சா. அவர்களிடமோ, பாரதியிடமோ எனக்கு மதிப்பும்,
மரியாதையும் மிகவும் உண்டு. அதற்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை என்ற கோணத்திலேயே படிக்குமாறு வேண்டுகிறேன். நன்றி.
புத்தகம் இன்னமும் என்னிடம்தான் இருக்கிறது. புத்தகம் தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் அவர்கள் (கொள்ளுப் பேத்தி, டாக்டர் உமா
நடராஜன், அரக்கோணம், அவர்களின் மகள் ப்ரியா வெங்கட்) குடும்பத்தினர் அளித்தது.
இதன் பின்னர் தொடர்வது, நான் முதலில் மறுத்த சமயத்தில் நடைபெற்ற ஒரு தனிமடல் உரையாடல். கீதா அம்மையாருக்கும் நான் குறிப்பிட்டுள்ள, என் மதிப்புக்கும் அன்புக்கும் உரிய நண்பருக்கும் இடையே நடைபெற்றிருக்கிறது. (அதையும் சேர்த்து அம்மையார் அனுப்பியிருக்கிறார்.)
---------- Forwarded message ----------
Date: 2009/7/30
Subject: Re: உ.வே.சா. - பாரதி பற்றி
நன்றி. பின்னால் ஒரு சமயம் வெளியிடுவோம்.
திருவாடுதுறை பாரதியை மதித்தது என்பதோ,
உவேசா பலவாறு பாரதிக்கு உதவினார் என்பதோ
(என்னைப் பொருத்தவரை) நம்பும்படியாய் இல்லை.
அன்புடன்,
****
>>
>> > திரு ******,
>> >
>> > திரு பாஸ்கரத் தொண்டைமான் நூற்றாண்டு மலரில் குறிப்பிட்ட கட்டுரையைத் தேடி
>> > எடுத்துவிட்டேன்.உங்களுக்கு விருப்பமானால் தனி மடலிலேயே அளிக்கிறேன். இல்லை
>> > மின் தமிழில் போட மறுப்பு ஏதும் இல்லை எனில் மின் தமிழிலேயே போடுகிறேன்.
>> > உங்கள்
>> > மடல் கண்டு. நன்றி.
>> >
>> > கீதா சாம்பசிவம்
>>
>> ஹரிகி போன்றோர் காட்டமாக இருப்பதால் இப்போது (குழுப்பெயர்*) இடுவது
>> பொருத்தமாக இல்லை. தட்டெழுதி அனுப்புங்கள். பின்னர் ஒரு சமயம் உங்கள்
>> பதிவிலேயே
>> வெளியிட்டு வைப்போம்.
>>
>> தட்டெழுதிய ஒரு பிரதியை எனக்கு அனுப்புங்கள்.
>>
>> நன்றி!
>> **********
>>
>> (தொமுசிக்கு பொய் சொல்ல வேண்டிய அவசியமென்ன
>> என்று விளங்கவில்லை.)
>
>
* அவசியமில்லாததால் குழுப்பெயரைத் தவிர்த்திருக்கிறேன்.
தொமுசி ரகுநாதன் உரையிலிருந்து இந்தத் தலைப்புக்குத் தொடர்புள்ள கருத்துகளை மட்டும் இங்கே இடுகிறேன். I don't want to get into rake it up by giving the other carping comments from his speech.
> ஈரோட்டில் தொ.மு.சிதம்பர ரகுநாதன் அவர்களுக்கு 2001-ம் ஆண்டுக்கான பாரதி விருது
> வழங்கப் பட்டது. தொ.மு.சி.யின் ஈரோடு வருகை பற்றிய ஓர் வர்ணனை: 2001 டிசம்பர்
> 10.
தொ.மு.சி. ரகுநாதனின் முழக்கம்
> தொடங்குகிறது.
>
>
>
> “இந்தப் பரிசு கிடைத்தமைக்காக நான் பாரதிக்குத் தான் நன்றி சொல்லவேண்டும்.
> பாரதி பதினோராவது வயதில் பாரதி என்ற பட்டம் பெற்றான். அதர்குப் பிறகு அவன்
> உயிரோடு இருந்த காலத்தில் எந்தப் பரிசும் எந்தப் பட்டமும், எந்த விருதும்
> அவனுக்குக் கொடுக்கப் அடவில்லை. உ.வே.சாமிநாதய்யருக்கு மகாமகோபாத்யாய பட்டம்
> கொடுத்த போது அவரைப் பாராட்டி பாரதி பாடியிருக்கிறான். ஆனால் பாரதி செத்த
> பின்பும் பல ஆண்டுகள் உயிர் வாழ்ந்த உ.வே. சாமிநாதய்யர், தாம் சாகிறவரை பாரதியை
> அஒரு கவிஞனாகவே ஒத்துக் கொண்டதில்லை.
>
>
>
> 1936-ல் சென்னையில் காங்கிரஸ் பொன்விழா நடந்தது. இந்தக் கூட்டத்தை
> ராஜகோபாலாச்சாரி ஏற்பாடு செய்திருந்தார். உ.வே.சாமிநாதய்யர்தான் தலைமை.
> கூட்டத்தில், “பாரதி மகாகவியா? இல்லையா? என்ற சர்ச்சை நடந்து கொண்டிருக்கிறது.
> நாங்கள் எல்லாம் அவனை மகாகவியாக ஒத்துக் கொண்டுவிட்டோம். பாரதி மகாகவிதான் என்ற
> வாசகம் உ.வே.சாமிநாதய்யர் வாயிலிருந்து வரவேண்டும் என்பதற்காகத் தான் இந்தக்
> கூட்டத்திற்கு அவரை தலைமை ஏற்கச் செய்திருக்கிறோம்.” என்றார் ராஜகோபாலாச்சாரி.
>
>
>
> உ.வே.சாமிநாதய்யர் பேசுகின்ற போது, “தமிழ்ப்பண்டிதன் ஒருவனை கவிஞன் என்று
> சொல்லுகின்ற வாய்ப்பு நமக்குக் கிடைத்திருக்கிறது.” என்று மட்டுமே
> குறிப்பிட்டார். இதைத் தவிர, பாரதி மகாகவி என்றோ, தேசிய கவி என்றோ அவர் சொல்லவே
> இல்லை.
>
இதைத் தொடர்ந்து, நான் சில கேள்விகளை எழுப்பியிருந்தேன்:
இது உண்மையானால்,
1) பாரதி மகாகவியா இல்லையா என்று ராஜாஜி உவேசாவிடம் கேட்டாரா என்பதற்கும்;
2) இதை மையமாக வைத்துதான் அன்று அந்தக் கூட்டத்துக்குத் தலைமை தாங்க உவேசா அழைக்கப்பட்டாரா என்பதற்கும்;
3) இந்தக் கேள்வி தன்னிடம் கேட்கப்பட்டிருந்தும், உவேசா அதைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை என்பதற்கும்
ஏதாவது ஆவணம் இருக்கிறதா?
நல்ல கவி மகாகவி போரின் தொடக்கம் 1935ல். அதற்கு அடுத்த ஆண்டில்தான் உவேசா பேசியிருக்கிறார் என்பதில் ஐயமில்லை. அப்படியானால், தொமுசி சொல்வதைப்போல் ராஜாஜி, இந்த ஒரு நோக்கத்துக்காகவே உவேசாவை அழைத்திருந்தால், ‘பாரதி மகாகவி அல்லர்’ என்று சொல்லியிருக்க வேண்டியதுதானே! சரி. அப்படித்தான் சொல்லாமல் நழுவிவிட்டார் என்றே வைத்துக் கொள்வோம். கல்கிக்கும் ராஜாஜிக்கும் அந்தச் சமயத்தில் (நல்லகவி கட்சிக்காரர்கள்) அது கௌரவப் பிரச்சினை அல்லவா? மேடையிலேயே உவேசாவை மறித்து, ‘இந்தக் கேள்விக்காகத்தானே இந்தக் கூட்டத்தையே கூட்டினோம்? இதற்கு பதில் சொல்லக் காணோமே’ என்று கேட்டிருக்கலாமே? அதுகூடவா முடியாமல் போய்விட்டது ராஜாஜிக்கு?
‘கவிஞர் என்றே ஒப்புக் கொள்ளவில்லை’ என்ற தொடங்கியது. இப்போது, ‘தேசிய கவி என்றோ, மகாகவி என்றோ’ சொல்லவில்லை என்று சொன்னதாகத் தெரியவருகிறது. அப்படியானால்,
“இவர் உண்மையான தேச பக்தியுடன் பாடிய பாட்டுக்களாதலின்அவை இவருக்கு அழியாத பெருமையை உண்டாக்குகின்றன” என்றும்;
“இவருடைய பாட்டுக்கள் எல்லோருக்கும் உணர்ச்சியை உண்டாக்குவன; தமிழ்நாட்டில் இவருடைய பாட்டை யாவரும் பாடி மகிழ்வதனாலேயே இதனை அறிந்துகொள்ளலாம். கடல் கடந்த தேசங்களாகிய இலங்கை, பர்மா, ஜாவா முதலியஇடங்களிலும் இவருடைய பாட்டுக்கள் பரவியிருக்கின்றன. அங்கே உள்ளவர்களில்சிலர் இவரைப் பற்றி எழுத வேண்டுமென எனக்குக் கடிதங்கள் எழுதியதுண்டு."மணவைமகன் கூத்தன் வகுத்தகவி, தளைபட்ட காலுட னேகட லேழையுந் தாண்டியதே"என்று ஒரு புலவருடைய கவியைப்பற்றி வேறொரு புலவர் பாடியிருக்கிறார். ஸ்ரீராமனுடைய கவியாகிய ஆஞ்சனேயர் ஒரு கடலைத்தான் தாண்டினார்; மணவைக் கூத்தன்கவியோ ஏழு கடல்களையும் தாண்டிவிட்டது. ஸ்ரீ ராமனுடைய கவி தளையில்லாமல்தாண்டியது; அங்ஙனம் செய்தது ஆச்சரியமன்று. இந்தப் புலவர் கவியோ,தளையுடைய காலோடு ஏழு கடலைத் தாண்டியது என்கிறார். தளையென்பதற்குவிலங்கென்றும் கவிக்குரிய லக்ஷணங்களுள் ஒன்றென்றும் பொருள். இந்தப்பாட்டுக்கு இப்போது இலக்கியமாக இருப்பவை பாரதியாருடைய கவிகளாகும்.“
என்றும் குறிப்பிட்டிருக்கிறாரே, இந்தியாவைத் தாண்டி, கடல்கடந்த தேசங்களில் இவருடைய புகழ் பரவியிருக்கிறது என்று சொல்லியிருக்கிறாரே, அனுமனுடைய ஆற்றலையும் தாண்டிய கவி என்று வகுக்கப்பட்டுள்ள இலக்கணகத்துக்கு இலக்கியமாக விளங்குபவை என்று சொல்லியிருக்கிறாரே, அதெல்லாம் என்ன வகையில் சேர்த்தி? உலகக் கவி இல்லாமல் வேற எந்தக் கவி இந்த வகைப்பாட்டுள் அடங்கும்?
ஹரிகி காட்டமாக எல்லாம் இல்லை. நாட்டமாகத்தான் இருக்கிறேன். (பாயவேண்டுமானால்தான் பதுங்க வேண்டும். எனக்குப் பதுங்கிப் பழக்கம் கிடையாது. ஆறின பிறகு பார்த்துக் கொல்ல எனக்கு மட்டும் என்ன அவசியம், ஆதாயம்! உங்கள மாதிரி நானும் ஒரு வாசகன். எனக்குத் தெரிஞ்சத சொல்றேன். அப்புறம் என்ன?)
(தொடர்ச்சியாக மற்றொரு கடிதத்தில் நான்)
ஏஙக்! பாரதி ஒரு மகாகவி என்று முதலில் பேசியவர் வரா. 1935ல்
காரைக்குடியில் நடந்த கூட்டத்தில் பேசினார். அதற்குதான் கல்கி மறுப்பு
எழுதினார். நல்லகவி என்று வேண்டுமானால் சொல்லலாம்; மகாகவி இல்லை என்று.
பிறகு வரா பதிலடி; ‘நல்லபாம்பு என்பதைப் போல நல்லகவி’ என்ற பதில்
கிண்டல், இந்தப் பக்கத்துக்கு ஒரு கட்சி, அந்தப் பக்கத்துக்கு ஒரு கட்சி,
குடுமிப்பிடி சண்டை..... எல்லாமே ஒரேஒரு வருஷத்துக்குள்ள முடிந்துபோய்,
‘பாரதி மகாகவி என்று நாங்களெல்லாம் ஒப்புக்கொண்டாயிற்று’ என்று ராஜாஜி
சொன்னாரா? அடேயப்பா! சும்மா ராக்கெட் வேகத்துல சரித்திரம்
பறக்குதப்போவ்!
பாரதியை 1936லேயே மகாகவி என்று ஒப்புக்கொண்டாயிற்று என்றால், அதற்கு
ஒன்பது வருஷங்கள் கழித்துதான் (1945ல்) பாரதி மணிமண்டபம் கட்டுவதற்கு
கால்கோள் விழா நடத்தினாங்களாமா! அட அட அட...ஒன்பது வருஷம் என்பது, ஒரு
வருஷத்தைக் காட்டிலும் சுருக்கமானது என்பது இப்பத்தானே என் மரமண்டைக்கு
உறைக்கிறது!
போறும். விட்டுட்டேன். :-))
*************
இதற்கு, கடலோடி நரசையா (சென்னை நகரத்தைப் பற்றிய வரலாற்றுப் பதிவுகளை அளிப்பதில குறிப்பிடத் தக்கவர்.) பின்வருமாறு எழுதுகிறார்:
ஏன் விடவேண்டும் ஹரிகி? விடாதீர்கள்! out of context ஆக பல விஷயங்கள் சொல்லப்படுகையில் சரியான வாதம் வைக்கப்படத்தான் வேண்டும்.
தொடருங்கள்.
மணிமண்டபத் த் விழாவில் நடந்தவையெல்லாம் நான்
‘”சாதாரணமனிதனி” ல் கூறியுள்ளேன். பலர் தமக்குச் சாதகமான விஷ்யங்களை மட்டும் தான் கூறுவார்கள்.
அந்தக்கூட்டததில் நடக்க்விருந்த குழப்பம் எவ்வாறு எம். எஸ், அவர்களது கச்சேரியினால் தவிர்க்கப்பட்டது என்பதையும் எனது நூலில் கூறியுள்ளேன்.
எல்லோருமே பாரதிக்குப் பின்னர் தான் பாரதியைப் புகழ்ந்திருக்கின்றன்ர். இப்போது உ. வே. சா பாரதியை மஹா கவி என்று ஒப்புக்கொண்டாரா இல்லையா என்ற சர்ச்சை ஒரு infrctuous exercise என்று தான் நான் சொல்வேன்.
ஆனாலும் ஹரிகி சொன்னது சரியான நேரத்தில் தான் என்றே நினைக்கின்றேன். ஆகையால் தொடரச் சொல்கிறேன். விதண்டாவாதம் வேண்டாம்.
நரசய்யா
நான் மேலே கொடுத்திருப்பது பனிக்கட்டியின் நுனிமட்டுமே. இங்கே இருக்கின்ற மற்ற மகாமகா மணிக் கவிஞர்களைப் போலெல்லாம் எனக்குக் கவிதை இயற்றத் தெரியாது; நான் அவங்களுக்கெல்லாம் ஜூனியர். உண்மைதான். ஆனால், சிறிய வயது தொடங்கி நானும் கவிதை இயற்றிக் கொண்டுதான் இருக்கிறேன். கவிதை இயற்ற இயற்ற உண்டாகும் கவி இயல்பு என்பது என் மனத்துக்கும் உண்டு. ‘சீனியர் போயட்ஸ்கிட்ட எப்படி நடந்து கொள்ளணும்’ என்று எனக்குத் தெரியவில்லைதான் (இதுவும் எனக்கு இன்னொரு சீனியர் போயட் சொன்னதுதான்.)
நான் ஜூனியர்தான். போயட் இல்லை என்பதை எந்தக் காலத்திலிருந்தோ சொல்லிக் கொண்டிருக்கிறேன். ஆனாலும், அவ்வப்போது என்னிடமும் கவிதா தேவிக்குக் கருணை பிறப்பதுண்டு. தழல்வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் இல்லை.
இதை மட்டும் தெரிவித்துவிட்டு, விடை பெறுகிறேன். நேற்று நான், வெண்பாவிரும்பிக்கு ஒரு தனிமடல் அனுப்பி அனுமதி கோரியிருந்தால் இதெல்லாம் தேவையே இல்லை. I thought of sharing the mail here because it is of common interest. எல்லா சீனியர் போயட்டுங்களும் என்னை மன்னிச்சிருங்க. இனிமேல் இப்படியெல்லாம் தொந்தரவு செய்யமாட்டேன்.
வெண்பாவிரும்பியின் பேருதவிக்கு மறுபடியும் நன்றி. அவருடைய உழைப்பால் மிகப் பெரிய clinching evidenc கிடைத்தது. பெருமைபெற்ற ஆய்வாளர்கள் எப்படியெல்லாம் தப்புத் தப்பாய் மக்களிடம் வந்து வரலாற்றைத் திரிக்கிறார்கள் என்பதை எடுத்துச் சொல்ல ஒரு வாய்ப்புக் கிடைத்தது. மீண்டும் மீண்டும் நன்றி வெண்பா விரும்பி.