மரபு வித்தகம்

265 views
Skip to first unread message

Subbaier Ramasami

unread,
Oct 30, 2013, 7:40:31 PM10/30/13
to சந்தவசந்தம்
மரபு வித்தகம் 1- கட்டளைக் கலித்துறைக்குள்  வெண்பா

நீட்டி அதனின்றும் நேருமோர் பாட்டொன்று நீதமுடன் 
கூட்டி எடுத்தால் குறைவுண்டோ?- நாட்டமாய்க் கொண்டுவிடின் 
கேட்ட வகையிலே கிட்டும் பயிற்சியும் பற்றுகிற 
வேட்கையும் சேர்த்து விடும்நிச் சயமென வேண்டுகவே! 

நீட்டி அதனின்றும் நேருமோர் பாட்டொன்று 
கூட்டி எடுத்தால் குறைவுண்டோ- நாட்டமாய்க் 
கேட்ட வகையிலே கிட்டும், பயிற்சியும் 
வேட்கையும் சேர்த்து விடும். 

இலந்தை

Girija Varadharajan

unread,
Oct 30, 2013, 9:14:43 PM10/30/13
to santhavasantham

தத்தையைப் போல நானும் தலைவரின்  வீச்சைக் கண்டு,  


சொத்தையாய்ப் பாக்கள்  இங்கு சொல்கிறேன்  ஏதோ எண்ணி


வித்தையே  தினமும் காட்டும்  வித்தகம்  தன்னை  எய்த 


எத்தனை  நாட்கள்  இன்னும்  ஏங்கவே  வேண்டும்  ஐயா? 




வாட்டமுற்ற  வரதராசன்    


2013/10/31 Subbaier Ramasami <elan...@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--
Thanks and Regards 

Girija Varadharajan
Executive Life Planner
Great Eastern Life Assurance Co Ltd
HP:  91852063
Email:  girijavar...@gmail.com

Subbaier Ramasami

unread,
Oct 31, 2013, 1:25:58 PM10/31/13
to சந்தவசந்தம்
மரபுவித்தகம் 2

ஆங்கிலத்தில் மோனோரைம் என்பது ஒருவகைப் பாடல்
   
.கா
A break from my career,
to visit a new frontier.
Where life is not severe,
and stress will disappear.
I'll become a pioneer,
a new found volunteer.
To help this old sphere,
make it's air all clear.
We will persevere,
for I'm the brigadier.
So as I tip my beer,
lets offer up a cheer.
Lets make this our year
where everyone will be sincere.

ஒற்றை இயைபு

இதோ தமிழில் எனது பாடல்

               
ஆடு மனமே ஆடு!

           
இந்தத் தேகம் எனக்குக் கூடு
           
என்றும் இங்கே இடர்பெரும் பாடு
             
இங்கே மனமே என்றும் ஆடு
         
இனிய வாழ்வில் இறைநிலை தேடு
         
இளைத்த லின்றி நெறியில் ஓடு
         
உள்ளுக் குள்ளே ஒருபெரும் காடு
           
ஐந்து பொறிகள் ஆங்காரத்தோடு
         
அடக்கும், அவற்றை அடக்கிப் போடு
         
பரவச நிலையில் பக்தி யோடு
         
இறையைத் தொழுதால் எய்தும் வீடு
         
அனைவரும் சமமென் றன்ப ரோடு
           
பழகத் தொலையும் பள்ளம் மேடு
         
பேதம் காட்டும் பிழையை மூடு
         
இனிதே படிக்க இலக்கிய ஏடு
         
ஞான நிலையே சிகரக் கோடு
         
பொய்மை வேடம் என்றும் சாடு
         
நாடெலாம் சுற்றினும் நம்தாய் நாடு
         
அதனிற் குண்டோ வேறோர் ஈடு?
         
கல்வி பாரம் தாங்கும்சும் மாடு
           
அதுதான் வாழ்வில் அரும்பெரும் பீடு!

இலந்தை



2013/10/30 Girija Varadharajan <girijavar...@gmail.com>

Subbaier Ramasami

unread,
Oct 31, 2013, 8:00:21 PM10/31/13
to சந்தவசந்தம்

             வேத மோங்கிட வீற்றிருப்பவள்

                 விண்ணவர்களும் போற்றுவார்

                 வீழுவார் பதம் வேண்டுவார் தினம்

                 வெற்றி கிட்டிடச் சூழுவார்

             ஏதம் அற்றதாம்   ஏற்றம் கண்டவள்

      எண்ணம் யாவுமே வெல்லுமே

      ஏழுலகமும்  தோத்தரிக்குமே

        இற்றுப்போகுமே தீவினை

   ஓது மந்திரம்  ஊற்றம் கொண்டவள்

         உண்மை உன்னதம் உன்னதம்

        ஊழையும் புறம் காணலாகுமே

        உற்றவள் பதம் பற்றவே

   ஆதரிப்பவள்      ஆற்றல் போற்றுவோம்

         அண்ட நாயகி ஆமவள்

ஆ                 ஆழமாய் அவள் நாமம் போற்றிடில்                             

                    அற்புத ஒளி நிச்சயம்     



inthஇந்தப் பாடல் தச பங்கி. இது பத்துப்பாடல்களாகப் பிரியும். பிரித்துப் பாருங்களேன்

இலிலந்தை

     


         

 

Subbaier Ramasami

unread,
Nov 1, 2013, 9:48:15 AM11/1/13
to சந்தவசந்தம்
கலி விருத்தம்

வேத மோங்கிட வீற்றி ருப்பவள்
ஏதம் அற்றதாம் ஏற்றம் கண்டவள்
ஓது மந்திர ஊற்றம் கொண்டவள்
ஆத ரிப்பவள் ஆற்றல் போற்றுவோம் 1

வஞ்சித் துறை

வேத மோங்கிட
ஏத மற்றதோர்
ஓது மந்திரம்
ஆதரிப்பவள்                           2


எழுசீர் விருத்தம்

வேத மோங்கிட வீற்றி ருப்பவள்  விண்ண வர்களும் போற்றுவார்
ஏதமற்றதாம் ஏற்றம் கண்டவள்  எண்ணம் யாவுமே வெல்லுமே
ஓது மந்திரம் ஊற்றம் கொண்டவள் உண்மை உன்னதம் உன்னதம்
ஆதரிப்பவள் ஆற்றல்  போற்றுவோம் அண்ட நாயகி ஆமவள்   3

வஞ்சித் துறை

வீற்றி ருப்பவள்
ஏற்றம் கண்டவள்
ஊற்றம் கொண்டவள்
ஆற்றல் போற்றுவோம் 4

வஞ்சி விருத்தம்

விண்ண வர்களும் போற்றுவார்
எண்ணம் யாவுமே வெல்லுமே
உண்மை உன்னதம் உன்னதம்
அண்ட நாயகி ஆமவள் 5

கலித்துறை

வேத மோங்கிட விண்ண வர்களும் போற்றுவார்
ஏத மற்றதாம் எண்ணம் யாவுமே வெல்லுமே
ஓது மந்திரம் உண்மை உன்னதம் உன்னதம்
ஆதரிப்பவள் அண்ட நாயகி ஆமவள் 6

கலிவிருத்தம்

வீழுவார் பதம் வேண்டுவார் தினம்
ஏழு லகமும் தோத்த ரிக்குமே
ஊழையும் புறம் காணலாகுமே
ஆழமாய் அவள் நாமம் போற்றிடி   7

வஞ்சி விருத்தம்
 வெற்றி கிட்டிடச் சூழுவார்
 இற்றுப்போகுமே தீவினை
 உற்றவள் பதம் பற்றவே
 அற்புத ஒளி நிச்சயம் 8

எழுசீர் விருத்தம்

வீழு வார் பதம் வேண்டு வார் தினம்
                 வெற்றி கிட்டிடச் சூழுவார்
ஏழு லகமும்  தோத்த ரிக்குமே
   இற்றுப் போகுமே தீவினை
ஊழை யும் புறம் காணலாகுமே
                  உற்றவள் பதம் பற்றவே
ஆழமாய் அவள் நாமம் போற்றிடில்
                      அற்புத ஒளி நிச்சயம்           9                                 
                 
      அறுசீர் விருத்தம்

விண்ண வர்களும் போற்றுவார் வெற்றி கிட்டிடச் சூழுவார்
எண்ணம் யாவுமே வெல்லுமே இற்றுப் போகுமே தீவினை      
உண்மை உன்னதம் உன்னதம் உற்றவள் பதம் பற்றவே
அண்ட நாயகி ஆமவள் அற்புத ஒளி நிச்சயம்        10 
                 




2013/10/31 Subbaier Ramasami <elan...@gmail.com>

Shrikaanth K. Murthy

unread,
Nov 1, 2013, 10:20:52 AM11/1/13
to santhav...@googlegroups.com
மிக அருமை ஐயா. பத்தினும் மேற்பட்டுப் பாடல்கள் பிரிக்கலாம் என்பது என் கருத்து.

Subbaier Ramasami

unread,
Nov 1, 2013, 11:34:47 AM11/1/13
to சந்தவசந்தம்
பாம்பன் சுவாமிகள் 125 பாடல்களாகப் பிரியும் ஒரு பாடல் எழுதியிருக்கிறார்.

இலந்தை


2013/11/1 Shrikaanth K. Murthy <drshri...@gmail.com>
மிக அருமை ஐயா. பத்தினும் மேற்பட்டுப் பாடல்கள் பிரிக்கலாம் என்பது என் கருத்து.

Subbaier Ramasami

unread,
Nov 1, 2013, 9:53:08 PM11/1/13
to சந்தவசந்தம்

ஒரே வெண்பாவில் மூன்று வெண்பாகள் கவிஞர் இக்குவனம் எழுதியிருப்பதைப் படித்தேன்.. அதற்குமேலும் வெண்பாக்களை வருவிக்க
முடியுமா என்று சிந்தித்ததன் முயற்சிதான் இது.  இன்னும் முயன்றால்
தெளிவான பொருளோடு இன்னும் சிறப்பாகச் செய்திருக்கக் கூடும்.இதைக் கவிதை
என்று நான் கூற மாட்டேன்.  வெண்பா விளையாட்டு

சில குறிப்புகள்.

1 எதுகை மோனையின் இடத்தைப் பிடிக்கும் என்று ஒரு விதி இருக்கிறது.

2. இதில் இறுதிச் சீர்களில் பொழிப்பு  அமையவில்லை
இலந்தை

தெய்வமெழில் வையகம் மெய்தவழும் உய்வளிக்கும்
ஐயனவன் மெய்வடிவைப் பொய்யிலதாய் - நெய்திடவே
செய்கைகள் எய்துதற்கு மையலறு தெய்வபக்தி
வையுறுதி மொய்ம்புற வே!

வையகம் மெய்தவழும் உய்வளிக்கும் ஐயனவன்
மெய்வடிவைப் பொய்யிலதாய்  நெய்திடவே -செய்கைகள்
எய்துதற்கு மையலறு தெய்வபக்தி  வையுறுதி
மொய்ம்புறவே தெய்வம் எழில்

மெய்தவழும் உய்வளிக்கும் ஐயனவன் மெய்வடிவைப்
பொய்யிலதாய் நெய்திடவே செய்கைகள் - எய்துதற்கு
மையலறு தெய்வபக்தி வையுறுதி மொய்ம்புறவே
தெய்வ மெழில்வை யகம்

உய்வளிக்கும் ஐயனவன் மெய்வடிவைப் பொய்யிலதாய்
நெய்திடவே செய்கைகள் எய்துதற்கு -மையலறு
தெய்வபக்தி வையுறுதி மொய்ம்புறவே தெய்வமெழில்
வையகம்  மெய்தவ ழும்.

ஐயனவன் மெய்வடிவைப் பொய்யிலதாய்  நெய்திடவே
செய்கைகள் எய்துதற்கு  மையலறு- தெய்வபக்தி
வை யுறுதி மொய்ம்புறவே தெய்வமெழில் வையகம்
மெய்தவழும் உய்வளிக் கும்

மெய்வடிவைப் பொய்யிலதாய் நெய்திடவே செய்கைகள்
எய்துதற்கு மையலறு தெய்வபக்தி -வையுறுதி
மொய்ம்புறவே தெய்வமெழில் வையகம்  மெய்தவழும்.
உய்வளிக்கும் ஐய னவன்

பொய்யிலதாய்  நெய்திடவே செய்கைகள் எய்துதற்கு
மையலறு தெய்வபக்தி வையுறுதி -மொய்ம்புறவே
தெய்வமெழில் வையகம் மெய்தவழும் உய்வளிக்கும்
ஐயனவன் மெய்வடி வை

நெய்திடவே செய்கைகள் எய்துதற்கு மையலறு
தெய்வபக்தி வையுறுதி மொய்ம்புறவே தெய்வமெழில்
வையகம் மெய்தவழும் உய்வளிக்கும் ஐயனவன்
மெய்வடிவைப் பொய்யில தாய்

செய்கைகள் எய்துதற்கு மையலறு தெய்வபக்தி
வையுறுதி மொய்ம்புறவே தெய்வமெழில் -வையகம்
மெய்தவழும் உய்வளிக்கும் ஐயனவன் மெய்வடிவைப்
பொய்யில தாய் நெய்திட வே!

எய்துதற்கு மையலறு தெய்வபக்தி வையுறுதி
மொய்ம்புறவே தெய்வமெழில் வையகம்- மெய்தவழும்
உய்வளிக்கும் ஐயனவன் மெய்வடிவைப் பொய்யில தாய்
நெய்திட வேசெய்கை கள்.

மையலறு தெய்வபக்தி வையுறுதி மொய்ம்புறவே
தெய்வமெழில் வையகம் மெய்தவழும் உய்வளிக்கும்
ஐயனவன் மெய்வடிவைப் பொய்யிலதாய் நெய்திடவே
செய்கைகள். எய்துதற் கு.

தெய்வபக்தி வையுறுதி மொய்ம்புறவே தெய்வமெழில்
வையகம் மெய்தவழும் உய்வளிக்கும்- ஐயனவன்
மெய்வடிவைப் பொய்யில தாய் நெய்திடவே செய்கைகள்
எய்துதற்கு மைய லறு..

வையுறுதி மொய்ம்புறவே தெய்வமெழில் வையகம்
மெய்தவழும் உய்வளிக்கும்  ஐயனவன் -மெய்வடிவைப்
பொய்யில தாய் நெய்திடவே செய்கைகள் எய்துதற்கு
மையலறு தெய்வபக் தி

மொய்ம்புறவே தெய்வமெழில் வையகம் மெய்தவழும்
உய்வளிக்கும்  ஐயனவன் மெய்வடிவைப் - பொய்யில தாய்
நெய்திடவே செய்கைகள் எய்துதற்கு மையலறு
தெய்வபக்தி வையுறு தி.!

இலந்தை
29-8-2008 



2013/11/1 Subbaier Ramasami <elan...@gmail.com>

Subbaier Ramasami

unread,
Nov 1, 2013, 10:00:39 PM11/1/13
to சந்தவசந்தம்

   sarabantham

                பெருமையோ காப்பதில் உண்டு

காவலர்

                அருமையோ பூப்பதில் உண்டு



2013/11/1 Subbaier Ramasami <elan...@gmail.com>
sarabantham.jpg

Siva Siva

unread,
Nov 1, 2013, 10:02:16 PM11/1/13
to santhavasantham
Nice.


2013/11/1 Subbaier Ramasami <elan...@gmail.com>

VETTAI ANANTHANARAYANAN

unread,
Nov 1, 2013, 10:07:37 PM11/1/13
to சந்தவசந்தம்
வித்தக விநாயகர் போல, இங்கு வேழமொன்றின் வித்தகத்தைக் கண்டு  வியக்கிறேன்..

.. அனந்த்

வித்தக விநாயகா விரைகழல் சரணே!



2013/11/1 Subbaier Ramasami <elan...@gmail.com>

Subbaier Ramasami

unread,
Nov 1, 2013, 10:12:44 PM11/1/13
to சந்தவசந்தம்
சிவசிவா அனந்த் இருவருக்கும் நன்றி
இலந்தை


2013/11/1 Siva Siva <naya...@gmail.com>

Subbaier Ramasami

unread,
Nov 1, 2013, 10:14:11 PM11/1/13
to சந்தவசந்தம்

எனக்குமகள் தம்பி இவள் மாமன் பிள்ளை
எனக்கோ இருவர் கணவர்- எனைவிட்டுச்
சென்றுவிட்டார் தந்தையும் சீக்காளி இச்சிறுவன்
என்றன் மகனாம் இவள்.

இலந்தை

தடுமாற்றம் இல்லை, சரியாக இப்பா
கடைமாற்றிப் பார்த்தால் கனி

இந்தப் பாடலைச் சிக்கவிழ்த்துத் தருகிறேன்

கடைசிச் சீராகிய இவள் என்பதை முதலில் கொண்டு செல்லவேண்டும்

இவள் எனக்கு மகள், தம்பி இவள் மாமன், பிள்ளை எனக்கோ இருவர், கணவர்

எனைவிட்டுச் சென்றுவிட்டார், தந்தையும் சீக்காளி, இச்சிறுவன் என்றன் மகனாம்

இதற்குக் கடைமாற்றுப் பொருள்கோள் என்று பெயர்.


இலந்தை



2013/11/1 Subbaier Ramasami <elan...@gmail.com>

Subbaier Ramasami

unread,
Nov 1, 2013, 10:15:31 PM11/1/13
to சந்தவசந்தம்

புரையோடிப் போயிற்றிப் புண்என்று போட்டேன்
எரியும் பொடியொன் ரெடுத்துப்- பொரியாய்
இடுக்கின்றிப் பூத்ததே என்செய்வேன், போய்நீ
எடுப்பாய் புதிதாக  வேறு

இலந்தை

மேலே உள்ள வெண்பாவில் 12  ஈற்றடிகள் இருக்கின்றன?
கணக்கிட்டுப் பாருங்களேன்



2013/11/1 Subbaier Ramasami <elan...@gmail.com>

Lalitha & Suryanarayanan

unread,
Nov 1, 2013, 10:20:12 PM11/1/13
to santhav...@googlegroups.com
வித்தகத்தின் மேல் வித்தகங்கள்! அருமையோ அருமை!

சிவசூரி.


2013/11/2 Subbaier Ramasami <elan...@gmail.com>

Kavingar Jawaharlal

unread,
Nov 2, 2013, 2:29:13 AM11/2/13
to santhavasantham
வித்தக விளையாட்டில் நீர் வேழமே .வாழ்க.


2013/11/2 Lalitha & Suryanarayanan <lall...@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--
பொற்கிழிக்கவிஞர்
டாக்டர். ச.சவகர்லால்
கைபேசி : +91- 9790846119

Ilam Parithiyan

unread,
Nov 2, 2013, 3:18:03 AM11/2/13
to santhav...@googlegroups.com
தமிழ்தனின் நுட்பமும் அதை ஆளும் அறிஞர் நுட்பமும் சிலிர்க்கச் செய்கிறது... செந்தமிழ்ச் செல்வியின் செவ்வி எண்ண எண்ண... மாந்த; மயக்கி; களிப்பேற்றித் திகைக்க செய்கிறது ... தொடரட்டும் தங்கள் தமிழ் ஆற்றல் தேங்கிய தொண்டு.... தமிழன்னை எழில் கொள்ள .....



2013/11/2 Kavingar Jawaharlal <kavingar....@gmail.com>

Subbaier Ramasami

unread,
Nov 2, 2013, 9:33:22 AM11/2/13
to சந்தவசந்தம்

    ஓரா திருந்தவன்  இருந்தவன் ஆவதும்

       சாரா மனத்தினன் மனத்தினன்  ஆவதும்

       சேராக் கருத்தவன்  கருத்தவன் ஆவதும்

      ஆரா விடையவன் விடையவன் ஆவதே!

 

இருந்தவன் - பெரிய தவமுடையவன்

மனத்தினன் - மனத்து இனன்  - சூரியனைப்போல பிரகாசம் மனத்தில் உடையவன்

கருத்தவன்  கருத்தில் அவனை உடையவன்

விடையவன்   ஏறு வாகனமாக உடையவன்.

விடையவன் - இச்செயற்கெல்லாம் விடையாக அவன் இருக்கிறான்

 



2013/10/30 Subbaier Ramasami <elan...@gmail.com>

ramaNi

unread,
Nov 2, 2013, 10:04:18 AM11/2/13
to santhav...@googlegroups.com
திரிபங்கி
முன்னை வினைகள் இற்றுப் போகவே! 

(எழுசீர் விருத்தம்: தேமா புளிமா தேமா கூவிளம் மா மா காய்)

முன்னை வினைகள் முற்றும் சூழ்வது குன்றச் செய்வீர் கோமானே!
இன்னும் வினைகள் இற்றுப் போகவே என்றும் அருள்வீர் பெம்மானே!
உன்னத் தெரியேன் சுற்றம் ஆகுவீர் துன்மை யுரைப்பீர் முக்கண்ணா!
மன்னித் தருள்வீர் பற்றை நீக்கியே நன்மை விளைப்பீர் கங்காளா!

வஞ்சித் துறை
முன்னை வினைகள்
இன்னும் வினைகள்
உன்னத் தெரியேன்
மன்னித் தருள்வீர்! ... 1.


வஞ்சித் துறை
முற்றும் சூழ்வது
இற்றுப் போகவே
சுற்றம் ஆகுவீர்
பற்றை நீக்கியே! ... 2.


வஞ்சி விருத்தம்
குன்றச் செய்வீர் கோமானே!
என்றும் அருள்வீர் பெம்மானே!
துன்மை யுரைப்பீர் முக்கண்ணா!
நன்மை விளைப்பீர் கங்காளா! ... 3.

--ரமணி, 02/11/2013, கலி.16/07/5114

*****

ஒரு சந்தேகம்: 
இந்தப் பாடலில் நான்காவதாக இப்படி யொரு பாடலும் உறைவதால்
இதைச் சதுர்பங்கி என்று சொல்லலாமா?

கலித் துறை
முற்றும் சூழ்வது குன்றச் செய்வீர் கோமானே!
இற்றுப் போகவே என்றும் அருள்வீர் பெம்மானே!
சுற்றம் ஆகுவீர் துன்மை யுரைப்பீர் முக்கண்ணா!
பற்றை நீக்கியே நன்மை விளைப்பீர் கங்காளா!

அன்புடன்,
ரமணி

*****

Subbaier Ramasami

unread,
Nov 2, 2013, 11:07:46 AM11/2/13
to சந்தவசந்தம்
சொல்லலாம்.

துன்மை என்றால் என்ன?

இலந்தை


2013/11/2 ramaNi <sai...@gmail.com>
திரிபங்கி
முன்னை வினைகள் இற்றுப் போகவே! 

(எழுசீர் விருத்தம்: தேமா புளிமா தேமா கூவிளம் மா மா காய்)

ramaNi

unread,
Nov 2, 2013, 12:58:10 PM11/2/13
to santhav...@googlegroups.com
அன்புடை ஆசானுக்கு வணக்கம்.

துன்மை = தீமை. எதுகை/மோனக்காக இந்தச் சொல்லைத் தேர்ந்தெடுக்க நேர்ந்தது.

தேவார்த்தில், " துன்மை யெனுந்தக வின்மையை யோரேன்" என்று உள்ளதையும் கண்டேன்:
http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=7&Song_idField=70580&padhi=058&startLimit=9&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC


அன்புடன்,
ரமணி

Subbaier Ramasami

unread,
Nov 2, 2013, 6:28:37 PM11/2/13
to சந்தவசந்தம்
துன்மை என்பதை லிஃப்கோ அகராதியில் தேடிப்பார்த்தேன் . கிடைக்கவில்லை. தேவாரத்தில் சான்று காட்டியிருக்கிரீர்கள். தெளிந்தேன்.
நன்றி

இலந்தை


2013/11/2 ramaNi <sai...@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com

ramaNi

unread,
Nov 2, 2013, 9:37:37 PM11/2/13
to santhav...@googlegroups.com

ramaNi

unread,
Nov 3, 2013, 1:45:28 AM11/3/13
to santhav...@googlegroups.com
கடைமாற்றுப் பொருள்கோள்

புல்தின்னும் வேங்கைமுகம் மீசைப்பெண் நாவது
சொல்தின்னும் வண்டொன்று பூத்தின்னும் - வில்லினில்
வல்லம்பு தின்னுமே ஆவியெனக் காட்சிகள்
கல்தின்னும் சிற்றுளியால் மாடு.

சிக்கல் அவிழ்த்து:
மாடு புல்தின்னும் | வேங்கை முகம் மீசை | பெண் நா அது
சொல்தின்னும் | வண்டொன்று பூத்தின்னும் |- வில்லினில்
வல்லம்பு தின்னுமே ஆவி| யெனக் காட்சிகள்
கல்தின்னும் சிற்றுளியால்.

--ரமணி, 03/11/2013

*****

ramaNi

unread,
Nov 3, 2013, 8:41:22 AM11/3/13
to santhav...@googlegroups.com
அன்புடையீர்!

ஒரு வெண்பாவின் நான்கு அடிகளிலும் உள்ள முதல், இரண்டாம், மூன்றாம், நான்காம் சீர்களை வைத்து
இன்னொரு வெண்பா அமைக்க முயன்றதில் வந்த அடிகளைக் கீழே இடுகிறேன்.

வெண்பா இலக்கணப்படி சரியாக இருந்தாலும் பொருள் அமைதியில் எனக்குத் திருப்தியில்லை, எனவே இதைக் கவிதை
என்று கூறமாட்டேன். இலந்தையாரின் வேழ வித்தகங்களுக் கிடையில் இந்தத் துரும்பை இடுவதன் காரணம் அவரோ
பிறரோ இதுபோல் வெண்பா முயன்றிருந்தாலோ அல்லது இதற்கு எதேனும் முன்னோடி இருந்தாலோ அந்தப் பாக்களைத் தரலாம்
என்பதற்காகவே.

இப்படி வரும் உத்திக்குச் ’சரமழை’ என்னும் பெயர் பொருத்தமாக இருக்குமோ என்று தோன்றுகிறது. (சரம் நேரே செல்லும், மழை கீழே விழும், எனவே இந்தப் பெயர்).

புளிமா புளிமா புளிமா புளிமா
புளிமா புளிமா புளிமா புளிமா
புளிமா புளிமா புளிமா நிரைபு
புளிமா புளிமா நிரைபு

கிடைநிலை வெண்பா

குருவாய் வருவாய் முருகா அருள்வாய்
வருவாய் மணமாய் மலரும் ஒளியாய்
முருகா மனிதர் புனித நயப்பு
அருள்வாய் மனதில் நயப்பு

நிமிர்வு நிலை வெண்பா

குருவாய் வருவாய் முருகா அருள்வாய்
வருவாய் மணமாய் மனிதர் மனதில்
முருகா மலரும் புனித நயப்பு
அருள்வாய் ஒளியாய் நயப்பு.

[நயப்பு = அன்பு, இன்பம், விருப்பம், மேம்பாடு, நன்மை]


அன்புடன்,
ரமணி

*****

Subbaier Ramasami

unread,
Nov 3, 2013, 1:08:56 PM11/3/13
to சந்தவசந்தம்
இந்த மாதிரி அமைப்பை அளவொத்த நான்கடிப் பாவினத்தில் முயலவேண்டும்.  அளவடி விருத்தம் ஏதுவானது. வெண்பாவில் நான்காவது அடி முக்கால் அடியாக அமைவதால் சரியாக வராது.

இதோ ஒரு அளவடி விருத்தம்

அருளே      பொருளே       வருக              தருக
பொருளே   வருக             தருக               விரைவாய்
வருக          தருக              விரைவாய்     உரிமை
தருக           விரைவாய்    உரிமை          அருளே!


இலந்தை




2013/11/3 ramaNi <sai...@gmail.com>

Subbaier Ramasami

unread,
Nov 3, 2013, 1:22:26 PM11/3/13
to சந்தவசந்தம்
வினாவிடை

வாலிறைவன் நெஞ்சத்தில் மாறா திருக்கின்ற

..ஞாலம் புரக்கின்ற நாமமெது?-சீலமுடை

தெய்வத்தை ஊராரும் செப்புமுறை எவ்வாறு?

மெய்யாய் இராமசா மி!

(வாலிறைவன்=அனுமன்--ஊரார் தெய்வங்களை,'சாமி' என்பர்)


2013/11/3 Subbaier Ramasami <elan...@gmail.com>

Subbaier Ramasami

unread,
Nov 3, 2013, 1:48:07 PM11/3/13
to சந்தவசந்தம்

"வெளிநாடு வந்திங்கே மேவிடும் என்றன்

உளநாடும் நாடும்ஒன் றுண்டு!-வளமோடு

சிந்தை நிறைதேசம், என்தேசம் என்றேநான்

iந்தியா வுக்கேகு வேன்!

(என்னுடைய தேசம் என்று சொல்லிக்கொண்டு நான் இந்தியாவுக்குப் போவேன்

 

"வெளிநாடு வந்திங்கே மேவிடும் என்றன்

உளநாடும் நாடும்ஒன் றுண்டு!-வளமோடு

சிந்தை நிறைதேசம் என்தேசம், என்றேநான்

iந்தியா வுக்கேகு வேன்!


என்றைக்கு நான் இந்தியாவுக்குப் போகப்போகிறேன்?

மூன்றாவது அடியில் கமா வை மாற்றிப்போடுவதால் பொருள் மாறுபடுகிறது.



2013/11/3 Subbaier Ramasami <elan...@gmail.com>
வினாவிடை

Subbaier Ramasami

unread,
Nov 3, 2013, 1:55:06 PM11/3/13
to சந்தவசந்தம்
வினா உத்தரம் 

கட்டளைக் கலித்துறை- வினா உத்தரம்

 

29   மகிழ்வு   தருமழ    கானதோர்  மந்திர மாண்பெதுவோ?

     திகழ்மா  மறையு   ளுர்வாய்த் தெரியும் சிறப்பெதுவோ?

     புகழில்      பெருந்த த்   துவத்தில்  சிறந்த பொருளெதுவோ?

     உகந்தே விடைய  உ  ரி ய  முறையறி ஒன்பதிலே!

 

(இது வினா உத்தரம்- பாடலிலேயேகேள்வியும்  விடையும் இருக்கும். ஒவ்வொரு வரியிலும் ஒன்பதாம் எழுத்தை எடுத்து இணைத்தால் காயத்ரி என்று விடை வரும்.)

ramaNi

unread,
Nov 3, 2013, 11:53:14 PM11/3/13
to santhav...@googlegroups.com
வினா உத்தரம் 

எரிவ தெதுவோ விளக்கிலே? மன்னன்
அரிவை இடப்பின் பதமெது? சொல்லெதிர்
’இந்த’வுக் கென்ன? இவற்றோடு ’கன்’சேர
வந்த சிவநா மமே. ... 1.

விடை:
கேள்விகளுக்கு விடை முறையே திரி, (அந்தப்)புரம், அந்த.
இவற்றோடு ’கன்’ விகுதி சேர வந்த சிவநாமம் ’திரிபுராந்தகன்’

*****

வரதுங்க ராமமன்னன் அந்தாதி சொல்லும்
கருவைத் தலமிது! யானையின்னோர் பேரெதுவோ?
அம்மைக்கெப் பக்கமத்தன்? ’போன’ எதிர்ப்பதம்?
செம்மைநல் லூர்சேர்க்க வே. ... 2.

விடை:
கேள்விகளுக்கு விடை முறையே: கரி, வலம், வந்த
கரிவலம்வந்த நல்லூர்

*****
Message has been deleted

ramaNi

unread,
Nov 4, 2013, 8:28:05 AM11/4/13
to santhav...@googlegroups.com
அன்புடையீர்!

வெண்பாவின் நான்காவது அடி முக்காலடியாக இருந்தாலும், ஈற்றுச்சீரை ’நிரைபு/பிறப்பு’ வாய்பாடில் அமைத்தால்
வெண்பாவிலும் ’சரமழை’ உத்தியைக் கொள்கையளவில் கொண்டுவர முடியவேண்டும் அல்லவா?

அப்படி முயன்றதில் வந்த வெண்பா இது. பொருளும் ஓகே என்று நினைக்கிறேன். உங்கள் கருத்தும் மற்ற அன்பர்களின்
கருத்தும் எனக்கு உதவியும் மகிழ்ச்சியும் அளிக்கும்.

கனவும் நனவும் உளமே விளையும்
நனவும் மறுநாள் கனவாய் இரியும்
உளமே கனவாய் உருவாய் வரத்து
விளையும் இரியும் வரத்து. 


[இரிதல்=கெடுதல், ஓடுதல், விலகுதல், வடிதல், அஞ்சுதல்]

ஒரு குறை:
ஒரே வெண்பாவே இரண்டு விதங்களிலும் பயில்கிறது.
அப்படியின்றி இரு வேறு வெண்பாக்கள் வருமாறு எழுத முடியுமா?
இரண்டு குறள் வெண்பாக்களை ஒட்டுப் போட்டால் இயலுமோ?


அன்புடன்,
ரமணி

*****


Kalam Kader

unread,
Nov 4, 2013, 11:57:51 AM11/4/13
to santhav...@googlegroups.com





அன்பின் ஆசான் கவிவேழம் இலந்தையார் அவர்கட்கு, வணக்கம்

யான் கீழே எழுதியுள்ள “சரமழை” என்று ஈண்டுச் சொல்லப்பட்டதன் மரபு வித்தகம் சரியா?



எண்ணம் பெரிதாம் எடைமிக்க எண்ணிக்கை
வண்ணம் புரியும் வணக்கம் பெரிதன்று 
எண்ணம் உயர்த்தும் எடையென நன்மையை
எண்ணி வணங்கும் இடத்து


2013/11/4 ramaNi <sai...@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--
அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்
 http://www.kalaamkathir.blogspot.com/ 


Subbaier Ramasami

unread,
Nov 4, 2013, 3:11:35 PM11/4/13
to சந்தவசந்தம்
இதைக் கவிஞர் ரமணியிடமல்லவா கேட்க வேண்டும்! சர மழை நல்ல பெயர். ஆனால் இந்த வெண்பாவுக்கு ஒத்து வராது.

திரு ரமணி எழுதியிருப்பதை மீண்டும் படிஹ்த்டுப்பாருங்கள்.

இலந்தை




2013/11/4 Kalam Kader <kalam...@gmail.com>

Kalam Kader

unread,
Nov 4, 2013, 11:13:14 PM11/4/13
to santhav...@googlegroups.com
 
 
அன்பின் ஆசான்,
 
தங்களின் “மரபுவித்தகம்” என்னும் இவ்விழையினூடே இடப்பட்டிருந்தாலும், என் வெண்பாவில் தவறுகள்/ பிழைகள் உளவா என்பதை அறிவதற்கும் யான் ஈண்டு வினவினேன்.  தவறாக இருப்பின் மன்னிக்க வேண்டுமாய்த் தாழ்மையுடன் கோருகிறேன்,
 
என்றும் பணிவுடன்,
 
மாணவன்,
 
கலாம்.


2013/11/5 Subbaier Ramasami <elan...@gmail.com>

Subbaier Ramasami

unread,
Nov 6, 2013, 9:33:58 AM11/6/13
to சந்தவசந்தம்
பசுபதி முன்பு எடுத்துக்கொடுத்த முடுகு வெண்பாக்கள்

அன்புள்ள இலந்தை,

 

முதல் மடலை எழுதும்போது , எங்கே இவற்றைக் கண்டேன் என்பது மறந்திருந்தது; அதனால் தான் அப்போதே இடவில்லை.

 

'தனிப்பாடல் திரட்டில்' உள்ள பாடல்கள் இவை; எழுதிய புலவர்கள் பெயர்கள் தெரியாது.

 

கந்தனென்றும் வேலனென்றும் கானமயில் வீரனென்றும் 

செந்தனென்றும் ஏன்புலவீர் செப்புகிறீர்? - முந்தஇளம்

கூனல்பிறை சூடச்சிவ னாருக்குப  தேசித்தருள்

ஞானக்குரு வேடப்பய லை.

 

பொருள்;

 முற்காலத்தில் பிறைமதியைச் சூடிய சிவனுக்குப் பிரணவத்தின் பொருளை உபதேசித்த குருவின்

வடிவான சிறுகுழந்தையை, 'கந்தன்''வேலன்' 'காட்டு மயில் வீரன்' 'சிவந்த நிறமுடையவன்' என்றெல்லாம்

,புலவர்களே, ஏன் அழைக்கின்றீர்?

 

(செந்தன் - சேந்தனின் குறுக்கல் விகாரம்.)

 

(இதை முழுமுடுகு என்றே சொல்லலாம்.)

 

உன்னஇனி தாயிருக்கும்; ஓங்குசெல்வ மும்பெருக்கும் ;

நன்னல்அரு ளைக்கொடுக்கும் நாடோறும் -- பன்னும்

சகடம்உருள நெருடுகமல சரணகருணை அரியின்மருகன்

விகடகரியின் இளையமுருகன் வேல்.

 

பொருள்:

 'சகடாசுரன்' என்பவன் உருண்டு சாகுமாறு அழித்த திருவடிகளுடைய திருமாலின்

மருமகனும், 'விகடசக்கர' விநாயகரின் தம்பியுமான முருகனின் வேல் துதிக்கின்றவர்க்கு






-- 

RAJAGOPALAN APPAN

unread,
Nov 7, 2013, 6:24:08 AM11/7/13
to santhav...@googlegroups.com
2004 ல் தெளிதமிழ் மாத இதழில் வெளியான என்னுடைய பின் முடுகு வெண்பா.
 
நீ  வாழ்க!

வேண்டித் தமிழ்கேட்டாய் வெண்பாவிற் பின்முடுகாய்

நீண்ட நெடுநாள்கள் நீவாழ்க - ஈண்டு

மலையு மலையு மதியு மொளியு

முலகி னிலவு மளவு.
மலை - குன்று
அலை - கடல்
மதி - சந்திரன்
ஒளி - சூரியன்

 

'தெளிதமிழ்' மாத இதழ் - ஜனவரி 2004
அ.ரா
 


2013/11/6 Subbaier Ramasami <elan...@gmail.com>

--

Subbaier Ramasami

unread,
Nov 7, 2013, 7:32:17 AM11/7/13
to சந்தவசந்தம்
அருமை


2013/11/7 RAJAGOPALAN APPAN <appan.ra...@gmail.com>

VETTAI ANANTHANARAYANAN

unread,
Nov 7, 2013, 9:04:24 AM11/7/13
to சந்தவசந்தம்
அழகு!

அனந்த்


2013/11/7 RAJAGOPALAN APPAN <appan.ra...@gmail.com>

Shanmuga Sundar Lakshmanan

unread,
Nov 8, 2013, 2:53:06 AM11/8/13
to santhav...@googlegroups.com
அருமை - 

மலையும் அலையும் மதியும் ஒளியும்
உலகினில் உலவும் அளவு

ஆகா! 

ஒரு முழுமுடுகு இயற்றினேன் சில நாள் முன்பு. உங்கள் பார்வைக்கு... 

பா:
பிஞ்சுமுடி பஞ்சுரகம்! பிஞ்சழகு, கண்ணயர்ந்தும்,
கொஞ்சசுகம்! அஞ்சுதடி கொஞ்சிவிட நெஞ்சமது!
கொஞ்சசுகம் கெட்டுவிடும், குட்டிமகன் கண்விழிக்க!
கொஞ்சவில்லை! கண்ணுரங்கென் குட்டு!

படம்:

sankara dass nagoji

unread,
Nov 8, 2013, 7:04:42 AM11/8/13
to santhav...@googlegroups.com
ஸ்ரீ பாம்பன் சுவாமிகள் இரண்டரை மணி நேரத்திற்குள் எழுதிய 125-பங்கி என்று படித்திருக்கிறேன்!

இலந்தை ஐயா! உங்களின் வித்தகப் பாக்களைப் படிக்கும் போது ஆச்சரியம் பயம் இரண்டும் கலந்து
வருகின்றன! அருமை!

- சங்கர தாஸ்


On Friday, November 1, 2013 9:04:47 PM UTC+5:30, Ram wrote:
பாம்பன் சுவாமிகள் 125 பாடல்களாகப் பிரியும் ஒரு பாடல் எழுதியிருக்கிறார்.

இலந்தை


RAJAGOPALAN APPAN

unread,
Nov 8, 2013, 9:47:32 PM11/8/13
to santhav...@googlegroups.com
பாராட்டியவர்களுக்கு மிக்க நன்றி.

அ.ரா


2013/11/8 Shanmuga Sundar Lakshmanan <lssu...@gmail.com>

Subbaier Ramasami

unread,
Nov 9, 2013, 1:37:02 PM11/9/13
to சந்தவசந்தம்
ITHAZAKALI

இதழகலி

(உதடு ஒட்டாத பாடல்)

ஆடாத தில்லை, அசைக்காத தில்லையே
தேடாத தில்லை தெளிந்தேதான் - காடேகி
எங்கெங்கே தேடி இளைத்தேன்?, அடடாடா
அங்கேதான் கண்டேன் அதை.

அதைக்கண்டேன் என்றேன், அதிசயித்தார், எங்கே
எதைக்கண்டாய் என்றென்னைக் கேட்டார்- கதைக்கத்தான்
எத்தனை நெஞ்சில் எழுதினேன், ஆகாதே
சத்தியத்தைச் சாற்றிடத் தான்

இலந்தை


2013/11/6 Subbaier Ramasami <elan...@gmail.com>

ramaNi

unread,
Nov 9, 2013, 10:16:26 PM11/9/13
to santhav...@googlegroups.com
Amazing!

VETTAI ANANTHANARAYANAN

unread,
Nov 9, 2013, 10:42:39 PM11/9/13
to சந்தவசந்தம்
அந்தாதியாக அமைந்த இரு இதழகலிகளைத் தொடர்ந்து:

தானே எனக்கன்னை தந்தையாய் ஆகியெனை

நானே அறிய நடஞ்செய்தான் – ஆனேன்காண்

அன்னான் அடியனாய் அன்றேஎன் நெஞ்சத்தில்

நின்றான் நிலைத்தான் இறை.

 

..அனந்த்




2013/11/9 Subbaier Ramasami <elan...@gmail.com>

ramaNi

unread,
Nov 9, 2013, 11:53:14 PM11/9/13
to santhav...@googlegroups.com
அருமை! நான் முயன்றது:

என்னென்ன நானில்லை என்றறியச் செய்தாய்நீ
என்னதான் நானெனக் கேட்டேன்நான் - என்னைநீ
என்றழைக்கா தேநீயே நான்நானே நீதெளி
யென்றானே நெஞ்சி லிறை.

--ரமணி

Subbaier Ramasami

unread,
Nov 10, 2013, 8:25:47 AM11/10/13
to சந்தவசந்தம்
சொன்னதை நன்றாகச்  சொன்னீர்  இதழகலி
கன்னிடா நல்ல கனி

இலந்தை
(கன்னிடா- கன்னிப்போகாத)


2013/11/9 ramaNi <sai...@gmail.com>

Subbaier Ramasami

unread,
Nov 10, 2013, 8:32:39 AM11/10/13
to சந்தவசந்தம்
நின்றான் நிலைத்தான் இறையென் இதழகலி
நன்றாகக் கண்டேன் நனி

இலந்தை


2013/11/9 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

ramaNi

unread,
Nov 10, 2013, 8:38:26 AM11/10/13
to santhav...@googlegroups.com
உதடுக ளொட்டாத உங்கள தின்சொல்
கதுப்புமா வாகு மெனக்கு.

Subbaier Ramasami

unread,
Nov 10, 2013, 10:42:52 AM11/10/13
to சந்தவசந்தம்
மரபு வித்தகங்கள் கொண்ட பாடல்கள் பல ஏற்கனவே வெவ்வேறு திரிகளில் இடப்பட்டுள்ளன. ஆனால் இந்தத்திரியில் அவையும் வந்தமர்ந்தால் ஒன்றாகத் தொகுக்க இடமிருக்கும் என்னும் காரணத்தால் அவற்றைத் தேடிப்பிடித்து இங்கே இட முயல்கிறேன். அவை ஏர்கனவே நீங்கள் படித்ததாக இருந்தால் கண்டுகொள்ளாமல் விட்டுவிடலாம். பின்னூட்டம் அளிக்க நினைத்தாலும் தடையில்லை.

சில பாடல்கள் தமிழில்லாத சில ஆங்கிலப்பாடல் வகைகளின் தமிழ் வடிவங்களாகவும் அமையும். அவை தமிழ்ழுக்கு இறக்குமதி.  

இங்கே பின்னல்(செச்டினா) பாண்டி(phantom)போன்ற ஆங்கிலப்பாவகைகளைத் தமிழுக்குக் கொணர்ந்திருக்கிறோம். அவையும் இடம் பெறும். மரபு வித்தகம் எல்லாவகைகளையும்  உள்ளடக்கிய தொகுதியாக அமைய வேண்டும் என்பது என் விருப்பம். எனவே மீண்டும் சிலவற்றை இங்கே இடுவதைக் கண்டுகொள்ளாதீர்கள.


இப்பொழுது  பாண்டி(PHANTOM)

ஆங்கிலத்தில் பாண்டம் என்றொரு பாவகை உண்டுஅதைத் தமிழில் நான் பாண்டி

என்று மாற்றியிருக்கிறேன். பாண்டியாட்டத்தில் தாவித் தாவிச்

செல்லுவதுபோல் இங்கும் செல்ல வேண்டியிருப்பதால் அப்பெயர்.

 

இனி விதியைப் பார்க்க்லாம். நான்கு அடிப்பாடல். சீர்களின்

எண்ணிக்கைக்குக் கட்டுப்பாடில்லை. எல்லாஅடிகளும் அளவொத்திருக்கவேண்டும்

அவ்வளவே

 

இரண்டாம் அடியும் நான்காம் அடியும் அடுத்த பாடலின் முதலடியும் மூன்றாவது

அடியுமாக வரவேண்டும். இப்படி எவ்வளவு முடியுமோ அவ்வளவு எழுதலாம்.

கடைசியில் அந்தாதிபோல் முதல் பாடலின் முதலடியில் தொடங்குவதுபோல்

முடியவேண்டும்.

 

நான் கீழே கொடுத்துள்ள மாதிரிப்பாடலில் ஒவ்வோர் அடியும் அதன் அளவில்

முற்றுப்பெறறதாக அமைத்துள்ளேன். அப்படியெழுதினால் எளிது. அப்படித்தான்

அமையவேண்டுமென்ற அவசியமில்லை.

 

 

எடுத்துக்காட்டு

 

போடு கோடு புகழில் கூடு

 

காடும் மலையும் கண்ணுக் கழகு

தேடு தேடு தேடு கிட்டும்

ஏடும் எழுத்தும் இனிய சொத்து

பாடு பட்டால் பயன் நம் பக்கம்

 

தேடு தேடு தேடு கிட்டும்

ஆடல் பாடல் அலுப்பு மருந்து

பாடுபட்டால் பயன் நம் பக்கம்

ஓடும் மேகம் ஒளிர்பூங் கொத்து

 

ஆடல் பாடல் அலுப்பு மருந்து

நாடு போற்றல் நமது கடமை

ஓடும் மேகம் ஒளிர்பூங் கொத்து

மூடும்  நெஞ்சம் முட்டாள் பண்பு

 

நாடு போற்றல் நமது கடமை

காடும் மலையும் கண்ணுக்கழகு

மூடும் நெஞ்சம் முட்டாள் பண்பு

போடு போடு புகழில் கூடு!    --   இலந்தை

 

அடுத்த பாடல் காடும் மலையும் கண்ணுக்கழகு என்று தொடங்கும். அதுதானே

முதல் பாடலின் முதலடி.

 

ஆங்கிலத்தில் இவ்வகைப்பாடல் எழுதுவது எளிது. காரணம். அங்கே எதுகை பற்றிக்

கருத வேண்டிய அவசியமில்லை. ஆனால் தமிழில் அப்படியில்லையே! ஒரே எதுகை

கடைசிவரை தொடரவேண்டியிருகிறது. அப்படி எதுகை அமையாத அகவலாக ஆனால் ஒவ்வோரடியும் ஏகாரத்தில் முடிவதாக எழுதிப்பார்க்கலாம். 

இலந்தை

29-2-2008




2013/11/10 ramaNi <sai...@gmail.com>
உதடுக ளொட்டாத உங்கள தின்சொல்
கதுப்புமா வாகு மெனக்கு.
ils from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Shanmuga Sundar Lakshmanan

unread,
Nov 10, 2013, 11:07:09 AM11/10/13
to santhav...@googlegroups.com
வார்த்தையில் விளையாடியது மட்டுமின்றி ஆழ்ந்த பொருளும் உணர்த்தியிருக்கிறீர்கள். இளங் கவிகள் வெறும் இலக்கணம் மட்டும் சேர்ந்துவிட்டால் வெண்பா என்றெண்ணும் காலத்தில் இவ்வளவு அர்மையான பொருளுடன்  இதழகலி வெண்பா - கட்டிடக்காட்டில் தென்றல் போல் சுகம்! 
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/santhavasantham/KiMQlEfoi0E/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to santhavasanth...@googlegroups.com.

To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.


--

Sundar






Subbaier Ramasami

unread,
Nov 10, 2013, 11:32:09 AM11/10/13
to சந்தவசந்தம்
புலவர் இராமமூர்த்தி அவர்கள் எழுசீர்விருத்தஹ்ட்திடையே ஓரடி அறுசீராக அமைத்து ஒரு கவிதை எழுதியிருந்தார்.  பெரிதினும் பெரிதுகேள் என்னும் தலைப்பு என நினைக்கிறேன். அதன் அமைப்பு என்னைக் கவ்ர்ந்ததால் சில ஆண்டுகளுக்கு முன்பு  அதற்கு இடைமுடை விருத்தம் எனப்பெயர் சூட்டி அதை நமது குழுமத்தில் வெளியிட்டேன். அவ்வகையைல் நமது அன்பர்கள் பலர் எழுதினார்கள். அந்தஹ்ட்திரியைத் தேடிப்பார்த்தேன் எனக்குக் கிடைக்கவில்லை. நல்லவேளையாக தங்கமணி அம்மையார் எழுதிய அவ்வகை விருத்தம் கிடைத்தது.  நான் எழுதிய பாடலும் எனக்குக் கிடைக்கவில்லை. தங்கமணி அம்மையாரின் பாடலை இங்கே இடுகிறேன். திரு இராமமூர்த்தி அவர்கள் அவரது கவிதை கிடைத்தால் இங்கே இடவும்.

சிலசமயங்களில் ஹோமங்களில் இரண்டு மந்திரங்களை ஒன்றிணைத்துச் சொல்வார்கள். அதர்குச் சம்புடிதம் என்று பெயர். அதைத்தான் இங்கே செய்கிறோம். அதற்கு இடைமுடை என்று நான் பெயர் கொடுஹ்த்டுள்ளே.

இதோ தங்கமணி அம்மையாரின் பாடல்


இயற்கைக் காட்சி!

மனத்தை ஈர்த்து மகிழும் காட்சி
...மாந்தக் கோடி கண்களாம்!
கனவோ? மெய்யோ? களிக்கும் உள்ளம்
...கவிதை  பொங்கச் செய்திடும்!
நினைவில் பசுமை காவியம்!
...நிகரில் லாத ஓவியம்!
வனங்கள்,தருக்கள்,மலைநீர் வீழ்ச்சி
...வளமை கூட்டும் இயற்கையே! 


இதில் எழுசீர் விருத்தத்துக்கிடையே மூன்றாம் அடி அறுசீர் அடியாக வருவதைக் காணலாம். அதுவும் அரைஅடிகளுக்குள்ளே இயைபு பெற் றுவருவது அழகு.

இலந்தை


2013/11/10 Subbaier Ramasami <elan...@gmail.com>

Subbaier Ramasami

unread,
Nov 10, 2013, 2:00:26 PM11/10/13
to சந்தவசந்தம்
கீழ்வரும் பாட்டிலே ஒரு புதுமை இருக்கிறது. ஆர்வம் உள்ளவர்கள் அதை ஆய்ந்து சொல்ல வேண்டுகிறேன்.

ஈர்ப்பதில் காசினுக் கேற்பவே ஓர்பொருள்    

சேர்ப்பதும்  ஒப்புமோ சொல்லடா நேர்த்தியாய்

வார்த்திடும் ஈகைதான் விண்ணகம் சேர்வழி

     பார்த்துனைப் பின்தொடர் பாங்குகாண் சீர்பெற

கூர்த்திடும் புத்தியால் கொள்ளிதை நேர்புகழ்

     சோர்ந்திடா தேவரும் சொத்துகாண் மூர்க்கமாய்

ஆர்ப்பதில் நன்மையும் யாதுகொல்? சார்ந்திடும்

     தீர்ப்பினை நெஞ்சிலே தேர்ந்துகொள் வேர்ப்பவே!



2013/11/10 Subbaier Ramasami <elan...@gmail.com>

Pas Pasupathy

unread,
Nov 10, 2013, 2:25:47 PM11/10/13
to santhav...@googlegroups.com
ஒவ்வொரு அரையடியிலும் முதல், கடைசிச் சீர்களில் எதுகை. ஒரே எதுகை. மொத்தம் 16 சீர்களில் ஒரே எதுகை. 


2013/11/10 Subbaier Ramasami <elan...@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

Subbaier Ramasami

unread,
Nov 10, 2013, 2:56:51 PM11/10/13
to சந்தவசந்தம்
உண்மைதான். ஆனால் அவைமட்டுமல்ல இன்னும் ....

இலந்தை


2013/11/10 Pas Pasupathy <pas.pa...@gmail.com>

Shanmuga Sundar Lakshmanan

unread,
Nov 10, 2013, 3:01:24 PM11/10/13
to santhav...@googlegroups.com
அனைத்துச்சீரும் கூவிளம். வெண்டளை பயில்கிறது.
--

Sundar






Subbaier Ramasami

unread,
Nov 10, 2013, 3:21:36 PM11/10/13
to சந்தவசந்தம்
அதுவும்தான் ஆனால் இன்னும்  இன்னும்  ...


2013/11/10 Shanmuga Sundar Lakshmanan <lssu...@gmail.com>

VETTAI ANANTHANARAYANAN

unread,
Nov 10, 2013, 4:03:45 PM11/10/13
to சந்தவசந்தம்
இத்தனை எதுகைகளும், வெண்டளையும் இருக்கும்போது அங்கே பல (இன்னிசை, நேரிசை, குறள்) வெண்பாக்கள் ஒளிந்து கொள்ளாவோ?.

காட்டாக:


ஈர்ப்பதில் காசினுக் கேற்பவே ஓர்பொருள்    

வார்த்திடும் ஈகைதான் விண்ணகம் சேர்வழி

கூர்த்திடும் புத்தியால் கொள்ளிதை நேர்புகழ்

ஆர்ப்பதில் நன்மையும் யாது?


ஈர்ப்பதில் காசினுக் கேற்பவே ஓர்பொருள்    

சேர்ப்பதும்  ஒப்புமோ சொல்?



... அனந்த்



2013/11/10 Subbaier Ramasami <elan...@gmail.com>
அதுவும்தான் ஆனால் இன்னும்  இன்னும்  ...

Subbaier Ramasami

unread,
Nov 10, 2013, 4:13:11 PM11/10/13
to சந்தவசந்தம்
அடடா! அனந்த் கண்டு பிடித்துவிட்டார்.


இதோ மற்றவை

ஈர்ப்பதில் காசினுக் கேற்பவே ஓர்பொருள்    

சேர்ப்பதும்  ஒப்புமோ சொல்லடா நேர்த்தியாய்

வார்த்திடும் ஈகைதான் விண்ணகம் சேர்வழி

     பார்த்துனைப் பின்தொடர் பாங்குகாண் சீர்பெற

கூர்த்திடும் புத்தியால் கொள்ளிதை நேர்புகழ்

     சோர்ந்திடா தேவரும் சொத்துகாண் மூர்க்கமாய்

ஆர்ப்பதில் நன்மையும் யாதுகொல்? சார்ந்திடும்

     தீர்ப்பினை நெஞ்சிலே தேர்ந்துகொள் வேர்ப்பவே!

 


1 ஈர்ப்பதில் காசினுக் கேற்பவே ஓர்பொருள்

     சேர்ப்பதும்  ஒப்புமோ சொல்

 

2 ஈர்ப்பதில் காசினுக் கேற்பவே ஓர்பொருள்

  சேர்ப்பதும்  ஒப்புமோ சொல்லடா- நேர்த்தியாய்

  வார்த்திடும் ஈகைதான் விண்ணகம் சேர்வழி

  பார்த்துனைப் பின்தொடர் பாங்கு

 

 3 வார்த்திடும் ஈகைதான் விண்ணகம் சேர்வழி

   பார்த்துனைப் பின்தொடர் பாங்கு

 

4  வார்த்திடும் ஈகைதான் விண்ணகம் சேர்வழி

   பார்த்துனைப் பின்தொடர் பாங்குகாண் -சீர்பெற

   கூர்த்திடும் புத்தியால் கொள்ளிதை உன்புகழ்

   சோர்ந்திடா தேவரும் சொத்து

 

5   கூர்த்திடும் புத்தியால் கொள்ளிதை நேர்புகழ்

    சோர்ந்திடா தேவரும் சொத்து

 

 

 6  கூர்த்திடும் புத்தியால் கொள்ளிதை நேர்புகழ்

    சோர்ந்திடா தேவரும் சொத்துகாண் மூர்க்கமாய்

    ஆர்ப்பதில் நன்மையும் யாதுகொல்? சார்ந்திடும்

    தீர்ப்பினை நெஞ்சிலே தேர்.

 

7    ஆர்ப்பதில் நன்மையும் யாதுகொல்? சார்ந்திடும்

     தீர்ப்பினை நெஞ்சிலே தேர்.

 

 8    ஆர்ப்பதில் நன்மையும் யாதுகொல்? சார்ந்திடும்

     தீர்ப்பினை நெஞ்சிலே தேர்ந்துகொள்- வேர்ப்பவே!

      ஈர்ப்பதில் காசினுக் கேற்பவே ஓர்பொருள்   

      சேர்ப்பதும்  ஒப்புமோ சொல்

 

9     சேர்ப்பதும்  ஒப்புமோ சொல்லடா நேர்த்தியாய்

      வார்த்திடும் ஈகைதான் விண்.

 

10    பார்த்துனைப் பின்தொடர் பாங்குகாண் சீர்பெற

      கூர்த்திடும் புத்தியால் கொள்

 

11   சோர்ந்திடா தேவரும் சொத்துகாண் மூர்க்கமாய்

     ஆர்ப்பதில் நன்மையும் யாது

 

12    தீர்ப்பினை நெஞ்சிலே தேர்ந்துகொள் வேர்ப்பவே!

      ஈர்ப்பதில் காசினுக்  கே!

 



2013/11/10 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

Subbaier Ramasami

unread,
Nov 10, 2013, 4:21:17 PM11/10/13
to சந்தவசந்தம்
இடைமுடை விருத்தம்.

எழுசீருக்குள் அறுசீர் அடி(சம்புடிதம்)

அச்சம்


அச்சமே வீழ்ச்சி அச்சமே தாழ்ச்சி

    அச்சமே நோய்களின் அன்னை

அச்சமே நெஞ்சை ஆசன மாக்கி

     அமர்த்திடும் தோல்வியை முன்னே

          அச்சமே மூத்தோள் பீடம்

          அச்சமே பொய்மை வேடம்

அச்சமே வேண்டாச் சாக்குகள் தேடி

      அலைப்புற வைத்திடும் நம்மை

 



2013/11/10 Subbaier Ramasami <elan...@gmail.com>

VETTAI ANANTHANARAYANAN

unread,
Nov 10, 2013, 4:37:03 PM11/10/13
to சந்தவசந்தம்
இந்தப் புதுமையான விருத்த அமைப்பு இரசிக்கத் தக்கதாய் உள்ளது. குறிப்பாக, இடையில் புகும் மாறுபட்ட விருத்த அமைப்பில் இயைபு பயில்வது இதற்கு மேலும் ஒரு தனித்தன்மையையும்  ஓசை அழகையும் தருகிறது. 

அனந்த்


2013/11/10 Subbaier Ramasami <elan...@gmail.com>
இடைமுடை விருத்தம்.

Pas Pasupathy

unread,
Nov 10, 2013, 6:53:47 PM11/10/13
to santhav...@googlegroups.com
சற்று யோசித்தால், இதற்கும் ‘குறும்பா’ வடிவத்திற்கும் ஓர் ஒற்றுமை உண்டு என்பதைக் காணலாம்.

பொதுவாக, ஒரு பாடல் இடையே , குறைந்த சீர்கள் கொண்ட சில அடிகள் கொடுக்கும் ஓசையின் கவர்ச்சியே வெண்டுறை, ஆசிரியத்துறை வடிவங்களைத் தோற்றுவித்தது என்றும் கூறலாமோ ? 



2013/11/10 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

இந்தப் புதுமையான விருத்த அமைப்பு இரசிக்கத் தக்கதாய் உள்ளது. குறிப்பாக, இடையில் புகும் மாறுபட்ட விருத்த அமைப்பில் இயைபு பயில்வது இதற்கு மேலும் ஒரு தனித்தன்மையையும்  ஓசை அழகையும் தருகிறது. 

அனந்த்


2013/11/10 Subbaier Ramasami <elan...@gmail.com>
இடைமுடை விருத்தம்.

எழுசீருக்குள் அறுசீர் அடி(சம்புடிதம்)

அச்சம்


அச்சமே வீழ்ச்சி அச்சமே தாழ்ச்சி

    அச்சமே நோய்களின் அன்னை

அச்சமே நெஞ்சை ஆசன மாக்கி

     அமர்த்திடும் தோல்வியை முன்னே

          அச்சமே மூத்தோள் பீடம்

          அச்சமே பொய்மை வேடம்

அச்சமே வேண்டாச் சாக்குகள் தேடி

      அலைப்புற வைத்திடும் நம்மை

 




VETTAI ANANTHANARAYANAN

unread,
Nov 10, 2013, 8:09:15 PM11/10/13
to சந்தவசந்தம்
ஆம். படித்ததும், குறும்பா நினைவே முதலில் எழுந்தது. இடைமுடை விருத்தம் இலக்கியத்தில் இதற்குமுன் இல்லையென்றே தோன்றுகிறது.


2013/11/10 Pas Pasupathy <pas.pa...@gmail.com>

Pas Pasupathy

unread,
Nov 10, 2013, 8:41:58 PM11/10/13
to santhav...@googlegroups.com
ஆம், இடைமுடை விருத்தம் நல்ல கட்டமைப்பு கொண்ட, ஓசை அழகு கொண்ட  ஒரு புதிய அமைப்பே. மிகவும் அழகு; வரவேற்கத் தக்கது. ஆனால், நான் சொல்ல வந்தது: பாடல் நடுவில் சீர்களைக் குறைப்பதில் உள்ள இசையழகைப் பற்றி முன்னோர்கள் யோசித்திருப்பது.


 இதன் முன்னோடியாய் இத்தகைய சில முயற்சிகளைச் சைவ சமய நால்வர் செய்திருக்கின்றனர்  என்று கூறலாம். சோ.ந.கந்தசாமி சொல்கிறார்:
“ தம்பால் பயின்று வரும் சீர்கள் மிக்கும் குறைந்தும் வருவதினால் அளவு ஒவ்வாத அடிகள் நான்கினை அமைத்துப் பாடுவதில் ஒருவகை இசையின்பம் கொண்டனர். “

மேலும், இப்படிப் பாடுவதில் இளங்கோ முன்னோடி என்கிறார். சீர்களை மிகுத்தும் குறைத்தும் பாடுவதில் பதினைந்து வகையான உத்திகள் உண்டு என்றும் சொல்கிறார்.  






2013/11/10 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

ஆம். படித்ததும், குறும்பா நினைவே முதலில் எழுந்தது. இடைமுடை விருத்தம் இலக்கியத்தில் இதற்குமுன் இல்லையென்றே தோன்றுகிறது.


2013/11/10 Pas Pasupathy <pas.pa...@gmail.com>
சற்று யோசித்தால், இதற்கும் ‘குறும்பா’ வடிவத்திற்கும் ஓர் ஒற்றுமை உண்டு என்பதைக் காணலாம்.

பொதுவாக, ஒரு பாடல் இடையே , குறைந்த சீர்கள் கொண்ட சில அடிகள் கொடுக்கும் ஓசையின் கவர்ச்சியே வெண்டுறை, ஆசிரியத்துறை வடிவங்களைத் தோற்றுவித்தது என்றும் கூறலாமோ ? 




Subbaier Ramasami

unread,
Nov 10, 2013, 9:30:29 PM11/10/13
to சந்தவசந்தம்
பசுபதி சொல்வது உண்மைதான்.
நான் சிந்துப்பாடல்களில் ஒரே பாடலில் அளவு கூடியது அளவு குறைந்ததுமாக அமைத்துப் பாடியிருக்கிறேன்.

இன்னும் ஒரு பாடலில் ஒரு கண்ணி சிந்தாகவும் அடுத்த கண்ணி  அறுசீர்க் கண்ணியாகவும் அமைத்து எழுதியிருக்கிறேன். சிந்து இயற்கைவர்ணனை செய்ய அறுசீர் அதற்கேற்ப வாழ்க்கைப் பருவத்தைச் சொல்லும் மாதிரி அமையும். 


2013/11/10 Pas Pasupathy <pas.pa...@gmail.com>
ஆம், இடைமுடை விருத்தம் நல்ல கட்டமைப்பு கொண்ட, ஓசை அழகு கொண்ட  ஒரு புதிய அமைப்பே. மிகவும் அழகு; வரவேற்கத் தக்கது. ஆனால், நான் சொல்ல வந்தது: பாடல் நடுவில் சீர்களைக் குறைப்பதில் உள்ள இசையழகைப் பற்றி முன்னோர்கள் யோசித்திருப்பது.


 இதன் முன்னோடியாய் இத்தகைய சில முயற்சிகளைச் சைவ சமய நால்வர் செய்திருக்கின்றனர்  என்று கூறலாம். சோ.ந.கந்தசாமி சொல்கிறார்:
“ தம்பால் பயின்று வரும் சீர்கள் மிக்கும் குறைந்தும் வருவதினால் அளவு ஒவ்வாத அடிகள் நான்கினை அமைத்துப் பாடுவதில் ஒருவகை இசையின்பம் கொண்டனர். “

மேலும், இப்படிப் பாடுவதில் இளங்கோ முன்னோடி என்கிறார். சீர்களை மிகுத்தும் குறைத்தும் பாடுவதில் பதினைந்து வகையான உத்திகள் உண்டு என்றும் சொல்கிறார்.  






2013/11/10 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>
ஆம். படித்ததும், குறும்பா நினைவே முதலில் எழுந்தது. இடைமுடை விருத்தம் இலக்கியத்தில் இதற்குமுன் இல்லையென்றே தோன்றுகிறது.


2013/11/10 Pas Pasupathy <pas.pa...@gmail.com>
சற்று யோசித்தால், இதற்கும் ‘குறும்பா’ வடிவத்திற்கும் ஓர் ஒற்றுமை உண்டு என்பதைக் காணலாம்.

பொதுவாக, ஒரு பாடல் இடையே , குறைந்த சீர்கள் கொண்ட சில அடிகள் கொடுக்கும் ஓசையின் கவர்ச்சியே வெண்டுறை, ஆசிரியத்துறை வடிவங்களைத் தோற்றுவித்தது என்றும் கூறலாமோ ? 




--

Subbaier Ramasami

unread,
Nov 10, 2013, 9:31:40 PM11/10/13
to சந்தவசந்தம்
இடைமுடை விருத்தத்திற்கு முன்னோடி புலவர் இராமமூர்த்திதான். அவருக்கே நினைவிருக்கிறதோ என்னவோ?

இலந்தை


2013/11/10 Subbaier Ramasami <elan...@gmail.com>
பசுபதி சொல்வது உண்மைதான்.

Shanmuga Sundar Lakshmanan

unread,
Nov 11, 2013, 1:09:47 AM11/11/13
to santhav...@googlegroups.com
அப்பாடியோவ்! சூப்பர்!
> You received this message because you are subscribed to a topic in the
> Google Groups "சந்தவசந்தம்" group.
> To unsubscribe from this topic, visit
> https://groups.google.com/d/topic/santhavasantham/KiMQlEfoi0E/unsubscribe.
> To unsubscribe from this group and all its topics, send an email to
> santhavasanth...@googlegroups.com.
> To post to this group, send email to santhav...@googlegroups.com.
> For more options, visit https://groups.google.com/groups/opt_out.
>


--

Sundar

ramaNi

unread,
Nov 11, 2013, 2:34:56 AM11/11/13
to santhav...@googlegroups.com
முன்பின் மாற்றுப் பொருள் 
(சொற்களில் இடம்-வலம் மேல்-கீழ் ஒரு பொருளும்,
வலம்-இடம் கீழ்-மேல் வேறொரு பொருளும் வர அமைத்தது)

துய்ப்பும் துறவும் 
துய்ப்பு 
(இன்னிசை வெண்பா)
தினம்தினம் ஓர்நிலை பற்றா விழைவு
நனவில் மகிழ்ச்சி அடையா அலைச்சல்
வினவல் பெறாத விழைதல் தனையே
கனவாய்த் திருப்பும் மனது.

துறவு 
(ஆசிரியத் துறை?)
மனது திருப்பும் கனவாய்த்
தனையே விழைதல் பெறாத வினவல்
அலைச்சல் அடையா மகிழ்ச்சி நனவில்
விழைவு பற்றா ஓர்நிலை தினம்தினம்

[தனையே = தன்னையே]

--ரமணி, 11/11/2013, கலி.25/07/5114

*****

ramaNi

unread,
Nov 11, 2013, 2:50:43 AM11/11/13
to santhav...@googlegroups.com
Fantastic creation!

Subbaier Ramasami

unread,
Nov 11, 2013, 8:17:02 AM11/11/13
to சந்தவசந்தம்
நல்ல முயற்சி.

இலந்தை


2013/11/11 ramaNi <sai...@gmail.com>

Subbaier Ramasami

unread,
Nov 12, 2013, 9:34:54 AM11/12/13
to சந்தவசந்தம்
கீழ்க்காணும் பாடல்  முதல் சீர் நெடிலாக மூன்றாஞ்சீர் அதன் குறிலாக வரும் அமைப்பு

பாராத    -  பரம்
தாராத -  தரம்
வாராத  - வரம்
காராக-  கரம்



பாராத தேனோ பரமென்று வந்தவனை, 
தாராத தேனோ தரமாக- ஏராளம் 
வாராத தெல்லாம் வரவேண்டும் நல்குகவே 
காராக அன்புக் கரம். 


2013/11/11 Shanmuga Sundar Lakshmanan <lssu...@gmail.com>

VETTAI ANANTHANARAYANAN

unread,
Nov 12, 2013, 9:50:35 AM11/12/13
to சந்தவசந்தம்
2002-ல் பாரதி கலைக்கழக ஆண்டு விழா மலருக்காக அனுப்பிய கவிதைகள் இரண்டைக் கீழே காணவும் (மலரில் வெளியாயிற்றா என்று நினைவில்லை). இவற்றில் 1,3 சீர்கள் குறில்-நெடிலாக அமையும்.


பாரதி கலைக்கழக ஆண்டு விழா: 22 டிசம்பர் 2002

குறிப்பு: கீழ்வரும் வெண்பாக்களில், ஒரு புதிய உத்தியாக, ஒவ்வோர் அடியிலும் குறில்-நெடில் இணைகள் மோனையாக அமைக்கப்பட்டுள்ளன.

 

                                                   கனலில் மலர்ந்த காதல்

 

                                                கனலே மணக்கின்ற கானலாய் நெஞ்சில்

                                                அனலே மலர்களாய் ஆக - எனக்குள்

                                                எழுந்து பரந்ததோர் ஏக்கம்அவ் வேளை

                                                விழுந்ததென் பார்வையவள் மேல்:   

                                                                                 OoO


                                                           <> வேட்கை <>

 

                                                மடுப்புக்கு நீரருந்தும் மாடொன்றைப் பார்த்துச்

                                                சுடுவெம்மை போக்குமரஞ்  சூழஅவள் நின்றிருந்தாள்

                                                மின்னை நிகர்ஒளியாள் மீன்விழியாள் அன்னவளைத்

                                                தன்னை மறந்தென்கண் தான்உண்ட காலை

                                                கடும்புலியைக் கண்டிட்ட கானகத்து மான்போல்

                                                ஒடுங்கியவள் பேதலித்தே ஓடுகையில் பின்சென்(று)

                                                அடியே!என் ஆசைபோல் ஆடித் துயர்தீர்!

                                                கொடியே!உன் பார்வைக்குக் கோடிப் பணம்தருவேன்

                                                என்றிங்ஙன் கெஞ்சிடினும் ஏனோ அவள்மறுத்து

                                                வன்னெஞ்சர் பாலிருந்து வானோர் விலகுதல்போல்

                                                சட்டென் றகன்றிட்டாள் சாட்டை யடிகொண்டேன்

                                                வெட்டுண்ட பின்னுணர்ந்தேன் வேட்கை விளைத்த

                                                படுதுன்பம் போகவினிப் பாடுவதே  நன்றென்(று)

                                                எடுத்திட்டேன் ஈங்கிந்த ஏடு

 

                                                                                  OoO


அனந்த் 12-11-2013




2013/11/12 Subbaier Ramasami <elan...@gmail.com>

Subbaier Ramasami

unread,
Nov 12, 2013, 11:23:10 AM11/12/13
to சந்தவசந்தம்
விட்டது போ  என்றிங்கே  வேட்டை  அளித்தகவி
கட்டியே போட்டதெனைக் காண்.

இலந்தை



2013/11/12 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

Kalam Kader

unread,
Nov 12, 2013, 1:16:36 PM11/12/13
to santhav...@googlegroups.com





ஈர்ப்பதில் மல்லிகை மணத்துடன் மருதாணி
..........சேர்ப்பதும் மனத்தினில் மயக்கமே வருதாமே
வார்த்திடும் பேச்சினில் இனிமையே உருவாகப்
..........பார்த்திடும் பார்வையில் அழைப்புதான் கருவாகிக்
கூர்த்திடும் சமிக்ஞையைக் கொண்டவன் திருவாக
.........மூர்க்கமும் இன்றியே முழுவதும் தருவானே
ஆர்த்திடும் உணர்வினைத் தீயதாய்க் கருதாமல்
.......தீர்த்திடத் திருமணம் நன்மையாய் வருதாமே!




2013/11/10 Subbaier Ramasami <elan...@gmail.com>
கீழ்வரும் பாட்டிலே ஒரு புதுமை இருக்கிறது. ஆர்வம் உள்ளவர்கள் அதை ஆய்ந்து சொல்ல வேண்டுகிறேன்.

ஈர்ப்பதில் காசினுக் கேற்பவே ஓர்பொருள்    

சேர்ப்பதும்  ஒப்புமோ சொல்லடா நேர்த்தியாய்

வார்த்திடும் ஈகைதான் விண்ணகம் சேர்வழி

     பார்த்துனைப் பின்தொடர் பாங்குகாண் சீர்பெற

கூர்த்திடும் புத்தியால் கொள்ளிதை நேர்புகழ்

     சோர்ந்திடா தேவரும் சொத்துகாண் மூர்க்கமாய்

ஆர்ப்பதில் நன்மையும் யாதுகொல்? சார்ந்திடும்

     தீர்ப்பினை நெஞ்சிலே தேர்ந்துகொள் வேர்ப்பவே!



2013/11/10 Subbaier Ramasami <elan...@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--
அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்
 http://www.kalaamkathir.blogspot.com/ 


mannan mayangum ponnanana malar.jpg

ramaNi

unread,
Nov 12, 2013, 11:13:20 PM11/12/13
to santhav...@googlegroups.com
குறில்-நெடில் பொழிப்பு மோனை

குறிலாக வரும் அதே சொல்லே பொழிப்பில் நெடில்வரும் வேறு சொல்லாக அமையுமாறு
முயன்ற வெண்பா கீழே. முதல்-மூன்றாம் சீர்களும் இரண்டாம்-நான்காம் சீர்களும்
அப்படி அமைவது எண்ணம். எனினும் இரண்டாம் அடியில் சீர்கள் இரண்டு-நான்கில்
அதுபோல் முடியவில்லை. Any suggestions, please?

சிவனே பவநாசன் சீவனின் பாவம்
அவனே அழிப்பவன் ஆவான் எனிலே
உமையன்னை ஆவாளோ ஊமை அவளாவாள்
நம்தாய் குழந்தைகள் நாம்.

*****

இந்த வெண்பாவில் முயன்றது சரியாக வந்துள்ளது என்று நினைக்கிறேன்.

மன்னன் கடுகடுத்தான் மானது காடோடும்
தன்னையவன் கொல்வதைத் தானது கோலுமோ?
இன்னுமோர் கன்றையது ஈனுவதாம் கானிலே
என்ன கொடுமைமன்னா ஏன்?

--ரமணி, 13/11/2013

*****

ramaNi

unread,
Nov 12, 2013, 11:32:06 PM11/12/13
to santhav...@googlegroups.com
Subtle and natural flow! Thanks for sharing.

Shanmuga Sundar Lakshmanan

unread,
Nov 13, 2013, 2:42:39 PM11/13/13
to santhav...@googlegroups.com
கதைபோல் கவிதை கவிவேட்டை தந்த
புதையல் புவியில் புதுசு

வேட்கை மிகவும் ரசித்தேன்!
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/santhavasantham/KiMQlEfoi0E/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.


--

Sundar






ramaNi

unread,
Nov 13, 2013, 9:17:45 PM11/13/13
to santhav...@googlegroups.com
இதழுறல் அல்லது இதழுறலி 

உதடுகள் ஒட்டாமலோ குவியாமலோ சொல்லும் சொற்களால் அமைந்த பாட்டை ’நிரோட்டம் அல்லது இதழகலி’ என்றால்,
உதடுகள் ஒட்டியோ குவிந்தோ சொல்லும் சொற்கள் அமைந்த பாட்டை ’இதழுறல் அல்லது இதழுறலி’ எனலாமன்றோ?
இந்த வகையில் முயன்று வேறோர் இழையில் முன்பு நான் இட்ட வெண்பாக்களை மறுபடியும் இங்கு இடுகிறேன்.

ஒவ்வொரு சீரிலும் (குறைந்தது ஓர்) இதழுறல் வருவது:

மானு மழுவு மிருபுஜா மோங்குமே
வானம் புவனமு மாண்டு மழித்துமே
மொய்ம்புறக் காப்பவன் மாண்புறு மாபதி
மெய்யவன் பாடியே போற்று.

எல்லா எழுத்துகளிலும் இதழுறல் வந்தது:

குப்பம்மா பாப்பா உவப்பது உப்புமா
சுப்பம்மா பூமா உவப்பது உப்புமா
உப்பொடு மாவுமே உப்புமா வாகுமே
உப்புமா போடு உமா!

*****

VETTAI ANANTHANARAYANAN

unread,
Nov 13, 2013, 10:43:41 PM11/13/13
to சந்தவசந்தம்

குறில்-நெடில் வெண்பாக்கள் பழைய நினைவுகளைத் தூண்டிவிட்டன. அவற்றைப் பற்றி, டிசம்பர் 2000-ல் மன்றமையத்தின் (ஃபோரம் ஹப்’) ’வெண்பா வடிக்கலாம் வா’ திரியில் இட்டிருந்த சில பாக்களைக் கணினிக் கோப்பிலிருந்து (எழுத்துரு மாற்றிக்) கீழே தந்துள்ளேன்.

..அனந்த்

 

ஓலமிடும் எண்ணங்கள் ஒளிந்திருக்கும் என்னுள்ளே

காலமிடும் கட்டளைக்கு கட்டுண்டு நூலறுந்து

தள்ளாடும் காற்றாடி தானடா உள்ளாடும்

கல்லூரி கால நினைவு

.. பாபு

 

நாவல் உயிர்நாடி நன்முடிவில்; வேண்டுமஃதே

ஆவலுடன் உண்ணும் அறுசுவைக்கும் -- நாவூறக்

கார வடுமா கடித்துப்பின் சோற்றுநடு

மோரின்ப வாரிதியில் முங்கு.

.. பசுபதி

 

 கனவினிலே வந்தின்ப கானத்தைப் பாடி

 நனவினிலோ சற்றேதான் நாணத்தைக் காட்டி

 மனதில் புகுந்தெந்தன் மானங் கவர்ந்தாய்

 உணவு மறந்ததென் ஊன்

 

கட்டழகுக் கன்னிதனைக் காட்டினில் கண்டதனால்

பட்டுவிட்ட துன்பமெலாம் பாட்டினில் இட்டுவிடத்

 திட்டமிட்டு ஓலையில் தீட்டுங்கால் நெஞ்சினிலோ

  திட்டமாய்ப் பொங்கிய தீ       

... சின்னக்கண்ணன்

 

மாரி இலையெனில் மக்கள் மரிப்பரிப்

பாரில் எனவறிந்தும் தாயாய்ப் பரிதவித்துத்

தானாகத் தண்ணீரைச் சென்னைக்குத் தாராமல்

வீணாய்க் கிடக்குதே விண்.

,,, சங்கரதாஸ் நாகோஜி

 

 மானம் மதிக்கும் மனமும் மனமாரத்

 தானம் தரநல் தனமும் பெற்றிடில்யான்

 வானம் பொழிந்த வனம்போல் மகிழ்ந்திட்டென்

 தீனம் தவிர்ப்பேன் தினம்

    (தீனம்=குறை, வறுமை)

 

இட்டம் பயக்காத ஈட்டம் எளியோர்க்குக்

கட்டம் விளைவிக்கும் காட்டம் பிறர்க்கென்றும்

நட்டம் கொடுப்பதில் நாட்டம் இவையெல்லாம்

விட்டால் கிடைக்குமவ் வீடு

..அனந்த்

 



2013/11/13 Shanmuga Sundar Lakshmanan <lssu...@gmail.com>
கதைபோல் கவிதை கவிவேட்டை தந்த
புதையல் புவியில் புதுசு

வேட்கை மிகவும் ரசித்தேன்!


On Tuesday, November 12, 2013, VETTAI ANANTHANARAYANAN wrote:
2002-ல் பாரதி கலைக்கழக ஆண்டு விழா மலருக்காக அனுப்பிய கவிதைகள் இரண்டைக் கீழே காணவும் (மலரில் வெளியாயிற்றா என்று நினைவில்லை). இவற்றில் 1,3 சீர்கள் குறில்-நெடிலாக அமையும்.





--


Nagoji

unread,
Nov 13, 2013, 11:40:02 PM11/13/13
to santhav...@googlegroups.com
ஐயா! 13 வருடங்கள் முன்பு எழுதியவற்றை நினைவு
படுத்தியமை நெகிழ வைக்கிறது! 2002க்குப் பின் நான் ஏன் தங்கள்
போன்ற அறிஞர்களுடன் தொடர்பின்றி இருந்தேன், ஏன் எழுதாமலே 
இருந்தேன் என்பது எனக்கே விளங்கவில்லை. தொழில் ரீதியான
சில சஞ்சலங்களால் அடியுடன் விட்டு விட்டேன். எப்போதாவது ஒன்று இரண்டு கிறுக்கல்கள். ஹரிகி அவர்களுக்கு நன்றி. ஹரிகி உடைய இரட்டை நாக பந்தம், முருகன் வெண்பா இவற்றை அவர் கைப்பட எழுதிய மூல ஓலை வழியாகப் படிக்கும் வாய்ப்பு கிட்டியது. பின் ஒரு மாற்றம். ஒரு விஷயம் உருப்படியாகச் செய்யத் தொடங்கினேன். தமிழ் மறைகளைத் தினம் ஓதி வருகிறேன்.

கடந்த 3 மாதங்களாக என்னை மீண்டும் ஆண்டு கொண்ட பசுபதி 
ஐயாவுக்கும் உங்களுக்கும் சிவசிவ அவர்களுக்கும் என்னுடைய 
பணிவார்ந்த வணக்கங்கள். 

ஹரிகி அவர்களே - தொகுதொகு  தொத்தொகு தோமெனத் துள்ளி என்று வரும் பாடல் கொண்ட அந்த முருகன் பற்றிய நூலை இடவும்.

- சங்கர தாஸ்


2013/11/14 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

Subbaier Ramasami

unread,
Nov 14, 2013, 12:25:07 PM11/14/13
to சந்தவசந்தம்

தரமுள்ளார் நல்லதொரு தாரமுள்ளார் நற்பா

வரமுள்ளார் அன்பென்னும் வாரமுள்ளார் நல்கும்

கரமுள்ளார் உள்ளேஓங் காரமுள்ளார் நெஞ்சில்

உரமுள்ளார் யாதுமவர் ஊர்.



2013/11/13 Nagoji <nag...@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Subbaier Ramasami

unread,
Nov 14, 2013, 12:27:12 PM11/14/13
to சந்தவசந்தம்

நினைத்தேன், நினைத்தேன் எனநான் சுவைத்தேன்

இனித்தேன் எதற்கென் றிருந்தேன்?- தனித்தேன்

புனைந்தேன் கவித்தேன் புதிதாய்ப் படைத்தேன்

தினை, தேன் எனக்கலந் தேன்.

 

மின்னைத்தான் எண்ணித்தான் வேர்த்தான் விரும்பித்தான்

பொன்னைத்தான் நோக்கித்தான் புன்னகைத்தான் - என்னைத்தான்

உன்னத்தான் என்னத்தான் ஏற்கத்தான் வேண்டுகிறேன்

உன்னைத்தான் என்றான் உவந்து



2013/11/14 Subbaier Ramasami <elan...@gmail.com>

Subbaier Ramasami

unread,
Nov 16, 2013, 8:19:16 PM11/16/13
to சந்தவசந்தம்
புலவர் இராமமூர்த்தி எழுதிய கவிதைக்கும் இந்த இடை முடை விருத்தஹ்ட்திற்கு சிறிது வேஎறுபாடு உண்டு. அவர் இரண்டடிக்கு இரண்டடி எதுகை மாற்றியிருக்கிறார். . அவருடைய முதல் விருத்தத்ஹ்டை அடிப்படையாகக்கொண்டுதான் இடைமுடை விருத்தஹ்ட்தை உருவாக்கினேன். இதஓ புலவரின் அந்தப்பாடல் முழுதும் இணைத்திருக்கிறேன்


2013/11/10 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>
pulavar oruperumseyal.jpg

Subbaier Ramasami

unread,
Nov 18, 2013, 3:27:34 PM11/18/13
to சந்தவசந்தம்

எண்சீர் உத்தி

 

30 ஆண்டுகளுக்கு முன்னே புதுச்சேரிக் கடற்கரையில் புதுவை அரசு நடத்திய பாவேந்தர் விழாவில் நான் கவியரங்கில் கலந்துகொண்டேன். அப்பொழுது  முதலமைச்சராயிருந்த பரூக் மரைக்காயர் விழாவுக்குத்  தலைமை(அவர் பெயரைச் சரியாகத்தான் எழுதியிருக்கிறேன் என நினைக்கிறேன்.). என் தலைப்பு" பாவேந்தர் பண்ணையில் -கிடைத்த பரிசு"  பாண்டியன் பரிசு பற்றிப் பாடவேண்டும். அது நீண்ட கவிதை. அதில் நான்கு எண்சீர் விருத்தங்களை மட்டும் அவற்றின்   உத்திக்காக இங்கே கொடுக்கின்றேன்.

 

பாவேந்தர்

பகுத்தறிவை ஊட்டியவர், தமிழர் வாழ்க்கைப்

      பண்பாட்டைக் காட்டியவர், வார்த்தைக் குள்ளே

மிகச் செறிவைப் பூட்டியவர், புதிய பார்வை

      வெளிச்சத்தைக் கூட்டியவர், கவிதை வாளைத்

தகதகக்கத் தீட்டியவர், மூட வாதத்

      தத்துவத்தை வாட்டியவர், சாதி பேதப்

பகுப்புகளை வீட்டியவர், எதுகை மோனை

      பரிசாக நாட்டியவர், பாவேந் தர்தான்,

 

2

 

மூவேந்தர் மடியினிலே கிடந்த முத்து

      முன்னேந்தி வந்தசுவைக் கவிதை வித்து

பாவேந்தர் நெஞ்சுக்குள் பரிண மித்து,

      பாண்டியனார் பரிசாக வந்த சித்து

ஆவேந்தித் தந்த சுவைப் பாலோ, பூவின்

      அகமேந்தி வந்தநறுந் தேனோ, தாகம்

நாவேந்தி ஆற்றுமிள நீரோ, பாலை

      நடுவேந்தும் அமுதத் தண் ணீரோ, சாறோ?

 

3

'நெஞ்சத்தில் நினைவைத்தேன்' என்றான்,' உங்கள்

      நினைவைத் தேன் என நானும் கொண்டேன்' என்றாள்.

'கொஞ்சத்தில் வந்ததில்லை பேழை, ஏற்றுக்

      கொள்ளுவையோ, விடையைத்தான் சொல்வாய்' என்றான்.

விஞ்சித்தான் போயிற்று, கேள்விக் கேற்ற

      விடை 'அத்தான்' எனச் சொன்னாள் அன்னம்.

பஞ்சுக்குப் பக்கத்தில் நெருப்பி ருந்தும்

      பற்றவில்லை, அது தானே பண்பின் எல்லை.

     

 எற்றைக்கும் பேதமற வேலன் அன்னம்

      இணை வைத்தார், இருவரையும் இணைய வைத்தார்

பற்றுக்கொண் டேநாட்டை வேலன் காக்கப்

      பணிவைத்தார், மாற்றார்கள் பணிய வைத்தார்

கற்றுக்கொண் டிருந்தவனின் முன்னே பேழைக்

      கனிவைத்தார், இருநெஞ்சம் கனிய வைத்தார்

முற்றுப்பெற் றானவுடன் இருவ ருக்கும்

      முடி வைத்தார், நல்லதொரு முடிவை வைத்தார்

 




Pas Pasupathy

unread,
Nov 18, 2013, 4:25:08 PM11/18/13
to santhav...@googlegroups.com
உத்திகள் மிக அருமை! நான்காவதற்கும், பாரதியின் 
 
“ஓமெனப் பெரியோர்கள் -என்றும்
   ஓதுவதாய் - வினை -மோதுவதாய்”

என்னும் நொண்டிச் சிந்துக்கும் ஒரு ஒற்றுமையைக் காண்கிறேன்.   


2013/11/18 Subbaier Ramasami <elan...@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--

VETTAI ANANTHANARAYANAN

unread,
Nov 18, 2013, 5:15:29 PM11/18/13
to சந்தவசந்தம்
அருமை.
> விடை 'அத்தான்' எனச் சொன்னாள் அன்னம்... - ஒரு சீர் விட்டுப் போயிருக்கிறது. என் யூகம்: ‘அங்கே’ 

அனந்த்


2013/11/18 Subbaier Ramasami <elan...@gmail.com>

Lalitha & Suryanarayanan

unread,
Nov 18, 2013, 5:27:21 PM11/18/13
to santhav...@googlegroups.com
முதற்பாட்டின் அரையடிகளீல் இரண்டாம் சீரிலும் இயைபை ஒத்த எதுகை;

இரண்டாம் பாட்டின் முதல் நான்கு அரையடிகளில் இருக்கும் இயைபு;
ஒவ்வொரு அடியிலும் உள்ள முதற்சீரையும் நான்காம் சீரையும் சேர்த்துப் படித்தால் வரும் சுகம் ( மூவேந்தர் வித்து, பாவேந்தர் சித்து, ஆவேந்தும் தாகம், நாவேந்தும் சாறு);

மூன்றாம் பாடலில் விதவிதமான அழகுககள் : நினை வைத்தேன் - நினைவைத் தேன், விஞ்சித்தான் - விடையைத்தான் போன்றவை.

நான்காம் பாடலில் எல்லா அரையடிகளீலும் முதற்சீரும் மூன்றாம் சீரும்;ஒரே சொல் ஆனால் வெவ்வேறு பொருளில் மீண்டும் வரும் யுக்தி.

மொத்தத்தில் இது இலந்தையாரின் பரிசு.

சிவசூரி.



2013/11/19 Subbaier Ramasami <elan...@gmail.com>

Subbaier Ramasami

unread,
Nov 18, 2013, 6:50:04 PM11/18/13
to சந்தவசந்தம்
உண்மைதான். அழகி என்ற சொல் விடுபட்டுப்போயிருக்கிறது அழகி அன்னம் என வரவேண்டும். சுட்டியதற்கு நன்றி.

இலந்தை


2013/11/18 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

Kalam Kader

unread,
Nov 18, 2013, 11:24:36 PM11/18/13
to santhav...@googlegroups.com
 
 
பாவேந்தரைப் பற்றிய கவிவேழம் அவர்களின் எண்சீர் விருத்தங்கள் எமக்கு நல்ல பாடம் கற்பிக்கின்றன.
 
குறிப்பு: ஃபரூக் மரைக்காயர் என்று எழுதலாம் ஃப= FA,  ப= B
 
FAROOQ MARAIKAYAR


2013/11/19 Subbaier Ramasami <elan...@gmail.com>



--

Balasubramanian N.

unread,
Nov 25, 2013, 11:51:30 AM11/25/13
to santhav...@googlegroups.com

"யானுமொரு சித்தன் வந்தேனிந்த நாட்டில்"    நினைவுக்கு வருகிறது.



2013/11/19 Subbaier Ramasami <elan...@gmail.com>

எண்சீர் உத்தி

Subbaier Ramasami

unread,
Nov 26, 2013, 8:38:19 AM11/26/13
to சந்தவசந்தம்
மிக்க நன்றி  

இலந்தை


2013/11/25 Balasubramanian N. <n.balasu...@gmail.com>

Subbaier Ramasami

unread,
Nov 26, 2013, 8:39:05 AM11/26/13
to சந்தவசந்தம்

விருத்தத்தில் புதுமையாக அசை விருத்தம் சீர்விருத்தம் கண்டுள்ளோம்.

எடுத்துக்காட்டுகள்

வெற்றுச் சொல்லாக இல்லாமல் சொற்செட்டாக அமைந்திருக்கும் இவற்றை ஆராய்ந்து

பார்த்தால் விரிந்த பொருள் கிடைக்கக்கூடும். ஏதாவது ஒன்றை எடுத்து

ஒருபக்கத்துக்குக் குறையாமல் விமரிசனம் எழுதிப்பாருங்களேன்விமரிசனப்

பயிற்சி இது. இந்த வகையில் விருத்தங்களும் எழுதலாம்)

 

அசைவிருத்தம்

 

இலா

நிலா

உலா

செலா

(அமாவாசையன்று இல்லாத நிலா உலாப் போகுமா?)

எடு

கொடு

விடு

தொடு

(எடுத்துத் தானம் கொடு. ஆசை விடு. முக்தி நிலையில் இறைபதம் தொடு)

பல்

சொல்

கல்

வெல்

(பல மொழிகளைக் கற்றுக்கொள். வெற்றி பெறுவாய்)

 

சீர் விருத்தம்

 

மழலை

மொழியில்

முழுமை

இழையும்

 

 

வஞ்சம்

விஞ்சும்

நெஞ்சம்

துஞ்சும்

 

திருந்து

திருத்து

பொருந்து

பொருத்து

 

 

கெஞ்சும்

கொஞ்சும்

மஞ்சம்

விஞ்சும்



2013/11/26 Subbaier Ramasami <elan...@gmail.com>

Nagoji

unread,
Nov 29, 2013, 7:20:45 AM11/29/13
to santhav...@googlegroups.com
சீர் விருத்தம் - ஒலியளவில் கிட்டத்தட்ட கொன்றை வேந்தன் போல்
உள்ளது.

குரு
திரு
தரு
மரு. (மலை) 

குருவாய்
வருவாய்
அருள்வாய்
முருகா!

குருவின்
உருவைக்
கருதல்
திருவாம்.

குருவின்
இருகால்
பெருமை
தருமே.

சற்குரு
பொற்பதம்
பற்றிடப்
பற்றறும்.

கச்சிமுனி
பிச்சையிடின்  (அருட் பிச்சை)
உச்சநிலை
நிச்சயமே.

ஒருமுறையெனும்  (யெனும் - யேனும்)
குருவடிதொழ
இருளகலுமே
திருபெருகுமே.

- sankara dass


2013/11/26 Subbaier Ramasami <elan...@gmail.com>

Subbaier Ramasami

unread,
Nov 29, 2013, 7:59:47 AM11/29/13
to சந்தவசந்தம்
அசை சீர் விருத்தங்கள் மிகச் சிறப்பு.  ஒருமுறையெனும் என்பது ஒருமுறையேனும் எனப் பொருள் தராது. 
அந்தப்பாடலின் ஒவ்வோரடியையும் இரண்டாகப் பிரித்து இருசீராக ஆக்கிவிடமுடியும். அத்தகைய ஐயத்திற்கிடமின்றி அடிகளை அமைத்தல் நன்று.


2013/11/29 Nagoji <nag...@gmail.com>

ramaNi

unread,
Nov 29, 2013, 8:25:13 AM11/29/13
to santhav...@googlegroups.com
அசை விருத்தம்
தண்
பெண்
கண்
மண்

(தண்மை நிரைந்த பெண்ணின் கண் நோக்குவதோ மண்.)

கா
வா
வா
கா

(’காவாவா, கந்தா வாவா’ என்னும் புகழ்பெற்ற பாடலை நினைவூட்டி)

நான்
யான்
தேன்
ஏன்?

நாம்
யாம்
போம்
ஓம்!

ஏர்
தேர்
ஊர்
வேர்

(ஈரெதுகையில்)
நான்
தேன்
நீ
சீ!

***


சீர் விருத்தம்
இன்மை
நன்மை
தன்மை
உன்ன.

உண்ண
உண்டு
குண்டு
நண்டு

முன்னம்
அன்னம்
இன்று
வின்னம்

பண்ணாதே
கண்ணாம்பா
அண்ணாந்தே
உண்ணாதே!

--ரமணி

*****

Nagoji

unread,
Nov 30, 2013, 2:51:47 AM11/30/13
to santhav...@googlegroups.com
நன்றி ஐயா.

விளங்கனிச் சீர்கள் அல்லது சிலவகைக் காய்ச் சீர்கள் வந்தாலே அவற்றை இரண்டு மாச்சீர்களாகப் பிரிக்கும்
பிரச்சினை வரும் போல் உள்ளதே! ஆனால் அதில் வகையுளி ஓசையைக் கெடுக்கும் என்பதால், கனிச் சீரை ஒரே சீராய் வைத்து அமைத்தோம்.

ஒருமுறைமுது

குருவடிதொழ
இருளகலுமே
திருபெருகுமே

கற்பகமாம்
சற்குருவின்
அற்புதங்கள்
சொற்கடங்கா.

சகன்  (சர்வ லோகன்)
புகழ்
மகன்
குகன்.

துருவத் 
துருவக்
குருசீர்

பெருகும்.

(நாம் ஆராய்ந்து தேடும் அளவுக்கு, குருவின் பெருமையும் விரிந்து கொண்டே போகும்)

நெடிலடி நான்கு அளவொத்தல் விருத்தம் என்பது நூற்பா என நினைக்கிறேன்.
அசை/சீர் பாடல்களுக்கு விருத்தம் என்பது தவிர வேறு ஒரு பெயர் சூட்டினால் நன்று என்று தோன்றுகிறது.

- sankara dass


2013/11/29 Subbaier Ramasami <elan...@gmail.com>

Subbaier Ramasami

unread,
Nov 30, 2013, 9:23:45 AM11/30/13
to சந்தவசந்தம்
வஞ்சி விருத்தம் நெடிலடியா?

இலந்தை


2013/11/30 Nagoji <nag...@gmail.com>

Nagoji

unread,
Dec 1, 2013, 12:11:02 PM12/1/13
to santhav...@googlegroups.com
Thanks. I missed kali & vanji viruththams.

- sdn


2013/11/30 Subbaier Ramasami <elan...@gmail.com>
வஞ்சி விருத்தம் நெடிலடியா?

இலந்தை
நெடிலடி நான்கு அளவொத்தல் விருத்தம் என்பது நூற்பா என நினைக்கிறேன்.
அசை/சீர் பாடல்களுக்கு விருத்தம் என்பது தவிர வேறு ஒரு பெயர் சூட்டினால் நன்று என்று தோன்றுகிறது.

- sankara dass


Pas Pasupathy

unread,
Dec 1, 2013, 12:19:00 PM12/1/13
to santhav...@googlegroups.com
வஞ்சித் துறையும் ஒரு ‘விருத்தம்’ தான்! இருசீர், நான்கடி.


2013/12/1 Nagoji <nag...@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

ramaNi

unread,
Dec 16, 2013, 12:57:35 AM12/16/13
to santhav...@googlegroups.com
அன்புடையீர்!

இந்த இழையில் 02/11/2013 அன்று இலந்தையார் அவர்கள் கொடுத்த ஒரே வெண்பாவுக்குள் பல வெண்பாக்கள்
படைப்பை முன்மாதிரியாக வைத்து ஒரு ’சுழல் வெண்கலிப்பா’ எழுதினேன். சிவனின் தமிழ்ப் பெயர்களை இணைத்து
இப்படிப் பலவிதமான பாக்கள் சுழலில் எழுதலாம் என்று தோன்றுகிறது.

சுட்டிகள்:
https://groups.google.com/forum/#!topic/MCA_NMC/jGZSYHPoOXQ
http://anbhudanchellam.blogspot.in/2013/06/1000.html
http://spiritualaffairs.blogspot.in/2013/05/1000.html

முழுதும் கருவிளங்காய்ச் சீர்களே வந்து கலித்தளை பயிலும் இந்த வெண்கலிப்பாவில்,
ஒவ்வொரு சீரையும் முதற்சீராக வைத்து, முன்சீரைக் கருவிளம் + மா எனப் பிரித்தால்,
குறைந்தது பதினான்கு வெண்கலிப்பாக்கள் சுழலில் அமையும்.

இது தவிர, எந்தச் சீரையும் எதனோடும் இணைத்து மேலும் பல பாக்கள் அமைக்கலாம்.

இந்த முயற்சி பற்றி அன்பர்கள் கருத்துரைக்க வேண்டுகிறேன்.

அன்புடன்,
ரமணி

*****

சிவநாமாவளி
(சுழல் வெண்கலிப்பா)

அரனவனாம் அரசவனாம் அரியவனாம் அருத்தனென
அருளனென அருளிறையாம் அருந்துணையான் அரும்பொருளாம்
அருவனென அருட்சுடராம் அருண்மலையாம் அரவணியன்
அரவசைத்தான் அரவணைத் தான்.

--ரமணி, 16/12/2013

*****

On Saturday, November 2, 2013 7:23:08 AM UTC+5:30, Ram wrote:

ஒரே வெண்பாவில் மூன்று வெண்பாகள் கவிஞர் இக்குவனம் எழுதியிருப்பதைப் படித்தேன்.. அதற்குமேலும் வெண்பாக்களை வருவிக்க
முடியுமா என்று சிந்தித்ததன் முயற்சிதான் இது.  இன்னும் முயன்றால்
தெளிவான பொருளோடு இன்னும் சிறப்பாகச் செய்திருக்கக் கூடும்.இதைக் கவிதை
என்று நான் கூற மாட்டேன்.  வெண்பா விளையாட்டு

சில குறிப்புகள்.

1 எதுகை மோனையின் இடத்தைப் பிடிக்கும் என்று ஒரு விதி இருக்கிறது.

2. இதில் இறுதிச் சீர்களில் பொழிப்பு  அமையவில்லை
இலந்தை

தெய்வமெழில் வையகம் மெய்தவழும் உய்வளிக்கும்
ஐயனவன் மெய்வடிவைப் பொய்யிலதாய் - நெய்திடவே
செய்கைகள் எய்துதற்கு மையலறு தெய்வபக்தி
வையுறுதி மொய்ம்புற வே!

வையகம் மெய்தவழும் உய்வளிக்கும் ஐயனவன்
மெய்வடிவைப் பொய்யிலதாய்  நெய்திடவே -செய்கைகள்
எய்துதற்கு மையலறு தெய்வபக்தி  வையுறுதி
மொய்ம்புறவே தெய்வம் எழில்

மெய்தவழும் உய்வளிக்கும் ஐயனவன் மெய்வடிவைப்
பொய்யிலதாய் நெய்திடவே செய்கைகள் - எய்துதற்கு
மையலறு தெய்வபக்தி வையுறுதி மொய்ம்புறவே
தெய்வ மெழில்வை யகம்


It is loading more messages.
0 new messages