
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/70E817D4-8D77-4245-82A9-AF68B3103A86%40gmail.com.
On Mar 18, 2026, at 8:42 PM, Kaviyogi Vedham <kaviyog...@gmail.com> wrote:
attagasam imayam. vazga,yogiyar
On Mar 19, 2026, at 06:07, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:
--
![]() | |
திருவரங்கத்தில் நாச்சியார் திருக்கோலம் (பெரிய திருநாள்- வைகுண்ட ஏகாதஶிக்கு முதல் நாள்). இதைப் பற்றிய பாரம்பரிய செய்தி ஒன்று வைணவர்களிடையே அறியப் படுகிறது.
ஶ்ரீபராஶர பட்டர் என்ற பெயர்கொண்ட வைணவ ஆசாரியர் தாயாரிடம் மிகவும் ஈடுபாடு கொண்டவராகத் திகழ்ந்தார். நாச்சியார் திருக்கோலத்தன்று, பெருமாள் அவரிடம், ‘இந்த அலங்காரத்தில் எப்படி இருக்கிறேன், பார்த்துச் சொல்லும்’ என்று பணித்தார். பட்டரும், ‘எல்லாம் சரியாகத்தான் இருக்கு, ஆனால். . . ‘ என்று நிதானிக்கப் பெருமாளும், ஆர்வத்துடன் மேலும் சொல்லும்படிப் பணித்தார். பட்டர், ‘அழகில் ஒன்றும் குறைவில்லை; எனினும் என் தாயாரின் கண்களில் இருக்கும் கருணை உங்கள் கண்களில் இல்லை’ என்று வெளிப்படையாகவே கூறிவிட்டாராம்.
தாயாருக்கு, ‘நித்யம் அஞ்ஞாத நிக்ரஹா’ ( नित्यं अज्ञात निग्रहा) அதாவது, ஒருநாளும் பக்தர்களைத் தண்டித்தறியாள், அத்துணை கருணை நிறைந்தவள் என்று பொருள்.
தாயார், பெருமாள் இருவரையும் பட்டர் மட்டுமன்று, திருவடியும் (அநுமன்) ஒப்பிட்டு இதே கருத்தை ஸுந்தர காண்டத்தில் சொல்வதை அறிகிறோம்.
तुल्यशील.वयोवृत्तां तुल्याभिजन.लक्षणाम्। राघवोऽर्हति वैदेहीं तं चेय.मसितेक्षणा॥
எல்லா குணங்களிலும் ஒருவருக்கு ஒருவர் இணையாக இருப்பதை இராகவனிடமும், ஸீதையிடமும் காண்கிறேன் என்று சொல்ல வந்த அநுமன், இராகவனிடமும், அந்த கண்ணழகியிடமும் காண்கிறேன் என்று கூறுவதை உற்று நோக்கினால், மேலே பட்டர் சொல்வது உள்ளங்கை நெல்லிக்கனி.
ஸௌந்தர்