திருமால் அடியே சரண்
(சந்த விருத்தம்
தனதானன தனதானன தனதானன தனனா)
அழல்போல்விழி
அரவேமலர்
அணையாய்த்துயில் வளர்வாய்
சுழலாழியொண் படையாயொரு சுரிசங்குடன் ஒளிர்வாய்
தொழுவாரவர் வினையோடுறு துயராயின அரிவாய்
அழியாப்புகழ் உடையாய்திரு வடியேசர ணாமே.
பழுதாய்ப்பல பகல்போயுறு பழியாலுளம் இழிய
உழல்வேமிக உயிர்சோர்ந்திடும் ஒருவாழ்வினை விழையேன்
உழைநேர்விழி மடவாள்திரு உறைமார்பினை உடையாய்
கழியாவினை களைவாயொளிர் கழலேசர ணாமே.
(உழை நேர் விழி = மான் போன்ற விழி)
On Jan 31, 2026, at 9:19 AM, Siva Siva <naya...@gmail.com> wrote:
தொழுவாரவர் வினையோடுறு துயராயின அரிவாய் /