அருள்மிகும் எவ்வுள் அரசன்

1 view
Skip to first unread message

இமயவரம்பன்

unread,
Jan 20, 2026, 4:51:37 PM (9 days ago) Jan 20
to santhavasantham
அருள்மிகும் எவ்வுள் அரசன்
(சந்த விருத்தம் 
- தானான தான தானான தான - தானான தான தனனா)

வானோடு பூமி தாளால் அளக்க
… மாலாய்ப் பரந்து வளர்வான் 
ஊனாதி ஐந்தின் ஊடோடு கின்ற
… ஓராவி ஆக உறைவான்
வானேத்து கின்ற நாலாயி ரந்நம்
… வாழ்வென்று சொல்ல மகிழ்வான்
மாநாக மீதொர் ஏகாந்த யோகம்
… மாறாத எவ்வுள் அரசே.  (1)

(நாலாயி ரந்நம் = நாலாயிரம் + நம் - விரித்தல் விகாரம்)

ஆராத இன்பம் ஆர்கின்ற அன்பை
… ஆறாய் வழங்கி அருள்வான்
பேரோதி நின்ற தோர்நெஞ்சி னின்று
… பேராதி ருந்துள் ஒளிர்வான்
கூராழி யோடு சங்கொன்ற ணிந்து … கூடாரை வென்று திகழ்வான்  
தீராத நோய்கள் தீர்த்தெங்கள் வாழ்வு
… சீராக்கும் எவ்வுள் அரசே. (2)

- இமயவரம்பன் 

Saranya Gurumurthy

unread,
Jan 20, 2026, 6:36:51 PM (9 days ago) Jan 20
to சந்தவசந்தம்
அருமை ஐயா.

Regards,
Saranya

இமயவரம்பன்

unread,
Jan 20, 2026, 7:03:50 PM (9 days ago) Jan 20
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக்க நன்றி 🙏

> On Jan 20, 2026, at 6:36 PM, Saranya Gurumurthy <saranya.g...@gmail.com> wrote:
>
> அருமை ஐயா.
Reply all
Reply to author
Forward
0 new messages