ரொம்ப நன்றிபா நேற்றிலிருந்து உன்னுடைய பதிலுக்கு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அம்மாவிடமும் சொன்னேன் ஆனால் நீ ரொம்ப அசந்து தூங்கிக் கொண்டிருக்கிறாய் என்று சொன்னால் அதனால் தான் தொந்தரவு பண்ண விரும்பவில்லை..நான் இன்னும் இரண்டு நாள் இங்கே இருப்பேன் என்று நினைக்கிறேன்.. ராஜன் என்ன ப்ரோக்ராம் சொல்கிறாரோ அதுபடி தான் நடக்க வேண்டும்.. அப்புறம் இறைவன் அருளால் திருவையாறு தியாகராஜ உற்சவத்தில் பாடுவதற்கு அழைப்பு வந்திருக்கிறது இறைவன் அருளால் நல்லபடியாக பாட வேண்டும்..அன்புள்ள உனது மகள் சுதாOn Sun, 21 Dec, 2025, 7:09 am Kaviyogi Vedham, <kaviyog...@gmail.com> wrote:abaaram. karuththu arumai. no change. pattu seerukirathu. minnal irukku, vazga.appaOn Sat, Dec 20, 2025 at 1:11 PM sudha's creations <sudhave...@gmail.com> wrote:சின்னச் சின்னத் தூறல் வலுத்து
சீறி மழையாய்ப் பெய்கிறதே!
மின்னி மின்னித் தோன்றும் மின்னல்
மிரட்டும் இடியைக் கொணர்கிறதே!
தின்ன தின்ன அறிவுப் பசியும் (எனக்கு)
தீரா நிலைமை புரியலையே !
இன்னும் இன்னும் என்னுள் தேட
இறைவன் கண் முன் தோன்றலையே !
வெட்டிப் பேச்சு வம்பர் கண்டால்
வெறுத்து ஓடப் பார்க்கின்றேன்!
கொட்டும் குளவி போல மனத்தைக்
கொல்லும் வார்த்தை வெறுக்கின்றேன் ! (நானோ...)
பட்டுப் பூச்சி தாவும் அழகைப்
பார்த்துக் கண்கள் களிக்கின்றேன் !
சொட்டும் அழகு குழவி முகத்தில்
சொர்க்கம் முழுக்கக் காண்கின்றேன் !
(என்னைப் போல)
கவிதை அருவி கணத்தில் பெய்யும்
கவிஞன் மனது அடங்காது !
புவியில் புகழால் வாழத் துடிக்கும்
புலவன் நெஞ்சம் ஓயாது !
குவித்த எண்ணம் சீறிப்பாய்ந்து
குறைகள் சுட்டத் தயங்காது !
தவிக்கும் பேர்க்கு அவனின் பேனா
தடவிக் கொடுக்கும், சுணங்காது !
சிலரின் சூழ்ச்சி நாடகப் பொய்யைச்
சீறிக் கேட்கப் புரட்சி வரணும் !
கலங்கி நிற்கும் நிலைமை வரினும்,
கடவுள் நினைப்பை நெஞ்சம் பெறணும்!
நிலத்தில் யார்க்கும் அஞ்சா நெறிகள்
நித்தம் செயலில் கொண்டு வரணும் !
பலரின் சோர்வைப் போக்கும் உணர்ச்சிப்
பாட்டு மின்னல் ஒளியைத் தரணும்! உடன்
மனதின் மாயைக் கலகம் விழணும்..!
நன்றியுடன் சுதா வேதம்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CANcs5oYYPdWx5yW78exos71q%3DTELU%3D-aNzZbiaUyHF0O6D136w%40mail.gmail.com.
On Dec 21, 2025, at 10:09, Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CABMnAXZ-PWxsA8DoaO9fkL_rGKr_MiHCjanKJYkajgS4k%3D3v1g%40mail.gmail.com.
--
கவிதை அருவி கணத்தில் பெய்யும்
கவிஞன் மனது அடங்காது !
புவியில் புகழால் வாழத் துடிக்கும்
புலவன் நெஞ்சம் ஓயாது !
குவித்த எண்ணம் சீறிப்பாய்ந்து
குறைகள் சுட்டத் தயங்காது !
தவிக்கும் பேர்க்கு அவனின் பேனா
தடவிக் கொடுக்கும், சுணங்காது !
மிக அருமை.
கோபால்
இந்த கவிதை இன்று பாரதி கலைக்கழக ஆண்டு விழாவில்பாட்டு மின்னல் உடைத்தாகுக என்ற தலைப்பில் படித்தேன்.. கவிஞர் நண்பர்கள்... கருத்து தெரிவிக்க வேண்டுகிறேன்..அன்புள்ள சுதா வேதம்
.. . . . . .
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CALjGCtuNby97pwiwSvn%3D%3DUqJ1F4TVBmVD95Abnugt9LN3wRu2w%40mail.gmail.com.