காங்கயம்-தாராபுரம் பகுதியில் தொல்லியல் தடயங்கள்

111 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Jun 2, 2018, 1:41:35 PM6/2/18
to Santhavasantham
2018-06-02 9:27 GMT-07:00 dorai sundaram <doraisu...@gmail.com>:
நன்றி கணேசன் ஐயா. ஊதியூர்  பற்றிய கூடுதல் செய்திகள்
மற்றும் உதியர், ஓதி மரம்,  சொல்லாய்வு ஆகியன அறிந்தேன்.
மிக்க நன்றி.
சுந்தரம்.


நல்ல தொல்லியல் கட்டுரையைத் தாங்கள் எழுதியுள்ளீர்கள். 
http://kongukalvettuaayvu.blogspot.com/2018/06/blog-post.html  
தென்கொங்கு சதாசிவத்தை நலம்விழைந்ததாய்க் கூறவும்.

உதி/ஒதி மிகப்பழைய பெயர். கொங்கு போன்ற வறட்சியான பகுதிக்கு ஏற்ற மரம். வெங்கால மரம் வெங்காலூர் (வடகொங்கின் பெங்களூர்),
வெங்கால நாடு (சங்க காலத்தில் இருந்த ஒரே வஞ்சி மாநகரின் நாடு - கொங்கு 24 நாடுகளில் ஒன்று) பெயர் தந்தது.
அதேபோல, உதி/ஒதி மரம் ஊதியூர் என்றும், ஓதிமலை என்றும் பெயர் அளித்துள்ளது.

கடம்ப மரம் குலச்சின்னமாகக் கொண்டவர்கள் கடம்பர்கள். இவர்கள் மேலைக் கடற்கரை அதிபர்கள். கடம்பு கதம்ப- என வடமொழியில்
ஆகும். மீனாட்சி அம்மனுக்கு கதம்பவனவாசினி என்பது கடம்ப மரத்தால் பெற்ற பெயர்தான்.

உதி மரத்தைக் குலச்சின்னமாகக் கொண்ட உதியர்கள் கடம்பர்களை அடக்கி உள்ளதை சங்க இலக்கியங்களில் (பதிற்றுப்பத்து, ...)
காண்கிறோம்.

அருணகிரி நாதர் பெயர்க்காரணத்தை அழகாக ஊதிமலைத் திருப்புகழ்களில் விளக்கியுள்ளார். பொன் போன்ற ஆபரணங்களைப்
பூக்களாகப் பூத்துச் சொரியும் ஓதிமரங்கள் நிறைந்த ஊதிமலை, ஊதியூர் என்று பாடியுள்ளார்.

ரஸவாதம் பற்றிய அறிவு வரவர, இந்தப் பொன்னூதி மலைக்கு கொங்கண சித்தர் ரசவாதம் செய்து பொன்னை உலையில் இட்டு ஊதிச்
செய்தார் என்ற புராணம் ஏற்பட்டுவிட்டது.இரண்டு திருப்புகழ்கள் கொண்ட முருகன் தலம் இது.

இதேபோல, ஓதிமலையும் கொங்கில் உள்ளது. இதுவும் உதி/ஒதி மரத்தால் ஏற்பட்ட மலைப்பெயர்தான். ஆனால், ஓதுதல், ஓத்து (=வேதம்)
என்று கொண்டு மிக அரியதான ஐம்முக முருகன் அருள்பாலிக்கும் தலம் என்று புராணம் உண்டு. அருகேயே, இரும்பறை என்ற ஊர்.
இரும்பொறை என்பது இரும்பறை எனத் திரிந்து வழங்குகிறது. பிரமனை இரும்பு அறையில் சிலை வைத்ததாய்ப் புராணம் ஏற்பட்டுவிட்டது.
ஆனால், பேரூர், தெனமநல்லூர், ... போன்ற ஊர்களின் உதியர் குடிமரபினரும் (உதி/ஒதி), வஞ்சி மாநகரின் கொல்லி இரும்பொறையரும்
இணைந்து சேரநாட்டை ஆண்டதற்குச் சாட்சி இரும்பொறை/இரும்பறை ஊர் ஆகும். பூப்பொலி > பூப்பலி (சிலம்பில் காண்க.)
அதுபோல, ஓதிமலையின் இரும்பொறை > இரும்பறை.

சோலைமலை திருப்புகழ் (444) இந்த ஓதிமலைத் திருப்புகழ் தான். அதற்கான குறிப்புகள் பாட்டிலேயே விரிவாக உள்ளன.
ஓதிமலை சென்று ஐம்முக முருகனையும், அவன் தலக் கல்வெட்டுகளையும் நீங்களும், சதாசிவமும் எழுதவேண்டும்.
வாணவராயர் அறக்கட்டளை ஜெகதீசனிடம் சொல்லுங்கள். ஊர் வரும்போது வஞ்சி மாநகர் அருகே அரவக்குறிச்சியில்
உள்ள ப்ராமி, சுந்தரி, ஆதிநாதர் பற்றியும், உதி/ஒதி மரங்களால் மலைப்பெயர்களும், உதியன் என்ற குல மரத்தால் வரும் பெயர்,
அம்மரத்தால் உள்ள இரண்டு மலைகள், அங்கே உள்ள ஸ்கந்த ஸ்தலங்கள், அவற்றிற்கான திருப்புகழ்கள் உரையாற்ற ஆவல்.

ஐந்து திருமுகங்களுடன் அருளும் ஓதிமலை முருகன்!


ஓதிமலை நீங்கள் இருவரும் செல்ல வேண்டும். அதற்கு முன்னரே, ஓதிமலைத் திருப்புகழ் என ஒரு கட்டுரை தருகிறேன்.

நா. கணேசன்


மிக அருமையான பதிவு. உவச்சர்களின் காளி கோயில் திருப்பணி பற்றிக் குறிப்பிட்டுள்ளீர்கள். கம்பர் போன்ற மகாகவிகள் இருமொழிப் புலவர்கள் இவர்களிலே தோன்றியுள்ளனர்.
இப் பூசாரிகள் பிற்காலத்தில் தமிழர் குலங்களில் பல சிவாச்சார்யர் (குருக்கள்) ஆனமை போல, கபி குலம் என்றாகியிருக்கலாம். கபி - பழுப்பு நிறம். கபிகுலத்தவர் தொல்காப்பியர்
என்று பழைய நூல்கள் பல கூறுகின்றன. இருமொழிப் புலமையால் தொல்காப்பியம் தமிழுக்குக் கிடைத்துள்ளது.

உதி/ஒதி என்பது ஒருவகை மரம். அது ஊதி/ஓதி என்றும் அழைக்கப்படுகிறது. இந்தக் கொங்கு நாட்டுப் பகுதியில்  உதி/ஒதி மரங்கள் மிகுதியாகப் பண்டைக் காலத்தில் இருந்தன.
ஓதி மலை என்ற மலை சத்தியமங்கலம் அருகே உள்ளது. http://www.giriblog.com/2008/07/othimalai-murugan.html

ஊதியூர் கொங்கண முனிவருடன் தொடர்பானதலம்.  ஊதி மலை முருகனின் மேல் திருப்புகழ் இரண்டு உள்ளது. அதில் அம்மலைக்குப் பெயர்க்காரணம்
அருணகிரி நாதர் சொல்லியுள்ளார். ஓதி மரங்கள் மிகுந்த இடம் எனப் பாடியுள்ளார்.

பழைய காலச் செய்யுளில் ஓ, ஒ ஆதற்குப் புள்ளி பெறும் என்பதற்கு ஓதி, ஒதி சொற்களை உதாரணமாகப் பாடப்பெற்றுள்ளது.

உதி மரம் குலச்சின்னமாக இருந்த குடும்பம் மேலைக் கொங்கில் ஆட்சி செய்துள்ளனர். அவர்கள் உதியர்கள்.
காஞ்சி நதி பூர்வீகம் என்பது சங்கச் செய்யுள்களால் அறிகிறோம். அயிரை மலை (பழனி மலைத்தொடர்) ஐயை அவர்கள் குலதெய்வம்.
இவர்கள் கொல்லிப் பொறையருடன் மணவினை, ஆள்வினை செய்த குடும்பங்கள் இணைந்து சேர நாட்டை ஆண்டுள்ளனர்.
பெருஞ்சோறு மாபாரத காலத்திலேயே அளித்தவர்கள் என்பார்கள். வடக்கே இருந்து வந்த வேளிர்கள் எனலாம்.
பெருஞ்சோற்று உதியன் சேரலாதன், .... இவனது தலைநகர் சேரர்களின் வஞ்சி. சங்க காலத்தின் வஞ்சி எனப்பட்ட ஊர் இன்று கரூர்
என அழைக்கப்படுகிறது.

அன்புடன்
நா. கணேசன்

2018-06-02 1:24 GMT-07:00 dorai sundaram <doraisu...@gmail.com>:

காங்கயம்-தாராபுரம் பகுதியில் தொல்லியல் தடயங்கள்


முன்னுரை

வரலாற்று ஆர்வலரும் திருப்பூர் வீரராசேந்திரன் வரலாற்று மைய உறுப்பினருமான நண்பர் உடுமலை தென்கொங்கு சதாசிவம், தம்முடைய தொழிலில் ஈடுபடும் நேரம் போகக் கிடைக்கும் பொழுதுகளிலெல்லாம் வரலாற்றுத் தடயங்களைத் தேடிப் பயணப்பட்டுக்கொண்டே இருப்பவர். அவ்வாறான தேடல்களுள் ஒன்றில் தாராபுரம் அருகே, தாளக்கரை என்னும் ஊரில் வயல்வெளிகளுக்கிடையில் தனிக்கல் ஒன்றில் கல்வெட்டு இருப்பதைக் கண்டறிந்தார். அந்தக் கல்வெட்டைப் படித்துச் செய்திகளை அறிந்துகொள்ளும் ஆவலில் கல்வெட்டு பற்றிய தகவலைக் கட்டுரை ஆசிரியரிடம் (கல்வெட்டு ஆராய்ச்சியாளர் து.சுந்தரம், கோவை) பகிர்ந்துகொண்டதில் இருவரும் 17-12-2017 அன்று தாளக்கரை நோக்கிப் பயணப்பட்டோம். காங்கயம் கல்லூரியொன்றில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றும் வரலாற்று ஆர்வலர் ஆதிரை என்பவரும் காங்கயத்தில் எங்கள் பயணத்தில் இணைந்துகொண்டார். இப்பயணம், தாளக்கரைக் கல்வெட்டை ஆய்தல் என்ற நோக்கத்துடன் மட்டுமன்றி, வழியில் காங்கயத்திலிருந்து தாளக்கரை வரையிலுள்ள பகுதிகளில் கிடைக்கும் தொல்லியல் தடயங்களைத் தேடும் ஒரு முயற்சியாகவும் அமைந்தது.


 




N. Ganesan

unread,
Jun 2, 2018, 2:18:24 PM6/2/18
to சந்தவசந்தம்
உதியர்கள் குலச்சின்னம் உதி மரம். ’உதி மரக் கிளவி’ (தொல்காப்பியம்).

உதி/ஒதி ஊதி/ஓதி என்று பேச்சில் வரும்.  ஓதி என்பது கூந்தலுக்கு எதனால் எனப் பார்க்கணும்.

பொன்+உதி = பொன்போன்ற பூக்கள் மலரும் உதிமரம்.
துரைசுந்தரம் சென்ற மலைக்குப் பொன்னுதி பொன்னூதி மலை எனப் பெயருண்டு.

`Odayam' Odina wodier (Lannea coromandelica) are summer flowering trees. 




உதி/ஒதி மரத்துப் பொன்:

N. Ganesan

unread,
Jun 3, 2018, 9:09:24 AM6/3/18
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, Santhavasantham


2018-06-03 5:59 GMT-07:00 dorai sundaram <doraisu...@gmail.com>:
பாராட்டுதல் வழங்கிய சுபா அவர்களுக்கு 
மிகுந்த நன்றி. 
பொன்னூதிமலை என்றுதான் அப்பகுதி மக்கள் 
வழங்குகிறார்கள். ரசவாதக் கதை நிலவினாலும், 
ஊதி மலை, பொன்னிறப் பூகளைக்கொண்ட மரங்களின்
மலை என்று எடுத்துக்காட்டிய கணேசன் அவர்களுக்கும்
மிகுந்த நன்றி.  அன்னூருக்கருகில் ஓதி மலை அமைந்துள்ளது. 
முடியும்போது சென்று பார்க்கவேண்டும்.
சுந்தரம்.

தமிழ்நாட்டிலேயே உள்ள பழைய முருகன் கோவில்களில் உயரமான மலைக்கோவில் ஓதிமலைதான், 1800 படிகள் ஏறணும்.
சத்தியமங்கலம் - சிறுமுகை வழியில்.

உதி/ஒதி மரம் உதியம்/ஒதியம் என்பதும் உண்டு. பொன்னுதி என்று சொல்லிப்பாருங்கள். அது பொன்னூதி என்றாகிவிடும் பேச்சில்.
இதற்காக ரஸவாத புராணம் பின்னர் சேர்ந்துள்ளது. அருணகிரிநாதர் திருப்புகழில் விளக்கியுள்ளார். ஊதிமலைத் திருப்புகழில்.

சோலைமலைக்கு என்று (444) திருப்புகழ் என வ. சு. செங்கல்வராயபிள்ளை - தமிழின் முதல் எம்.ஏ. - கொடுத்துள்ளார்.
கூடவே, அதன் இன்னொரு பாடமும் கொடுத்துள்ளார். அந்தத் திருப்புகழ் ஓதிமலைக்கான திருப்புகழ்.
கொங்கில் இரண்டு ஊதிமலை உள்ளன. இரண்டிலும் பழைய முருகன் திருப்பதிகள் உண்டு எனப் பலர் அறியார். வ. சு. செங்கல்வராயர் உட்பட.

ஓதி என்ற சொல். உதி/ஒதி (ஊதி/ஓதி) மரம் பூத்துக் குலுங்கும்போது பெண்டிர் தலையங்காரத்தில், பொன்னும் பூக்களும் வைத்திருப்பதுபோல்
இருக்கும். அதனால் ஓதி என்பதற்குக் கூந்தல் என்று ஒரு பொருள் ஆகியுள்ளது. இது உவமையாகுபெயர் என்க.

நா. கணேசன்
 

2018-06-03 13:34 GMT+05:30 Suba <ksuba...@gmail.com>:
மிக அருமை.

பேசப்படாத கோயில்கள், சின்னங்கல் என உங்கள் ஆய்வு மிக நேர்த்தியாக மிளிர்கின்றது. மிக ஆக்கப்பூர்வமான ஆய்வு. நன்ரி.
சுபா

N. Ganesan

unread,
Jun 3, 2018, 9:12:17 AM6/3/18
to Santhavasantham
2018-06-03 5:59 GMT-07:00 dorai sundaram <doraisu...@gmail.com>:
பாராட்டுதல் வழங்கிய சுபா அவர்களுக்கு 
மிகுந்த நன்றி. 
பொன்னூதிமலை என்றுதான் அப்பகுதி மக்கள் 
வழங்குகிறார்கள். ரசவாதக் கதை நிலவினாலும், 
ஊதி மலை, பொன்னிறப் பூகளைக்கொண்ட மரங்களின்
மலை என்று எடுத்துக்காட்டிய கணேசன் அவர்களுக்கும்
மிகுந்த நன்றி.  அன்னூருக்கருகில் ஓதி மலை அமைந்துள்ளது. 
முடியும்போது சென்று பார்க்கவேண்டும்.
சுந்தரம்.

தமிழ்நாட்டிலேயே உள்ள பழைய முருகன் கோவில்களில் உயரமான மலைக்கோவில் ஓதிமலைதான், 1800 படிகள் ஏறணும்.
சத்தியமங்கலம் - சிறுமுகை வழியில்.

உதி/ஒதி மரம் உதியம்/ஒதியம் என்பதும் உண்டு. பொன்னுதி என்று சொல்லிப்பாருங்கள். அது பொன்னூதி என்றாகிவிடும் பேச்சில்.
இதற்காக ரஸவாத புராணம் பின்னர் சேர்ந்துள்ளது. அருணகிரிநாதர் திருப்புகழில் விளக்கியுள்ளார். ஊதிமலைத் திருப்புகழில்.

சோலைமலைக்கு என்று (444) திருப்புகழ் என வ. சு. செங்கல்வராயபிள்ளை - தமிழின் முதல் எம்.ஏ. - கொடுத்துள்ளார்.
கூடவே, அதன் இன்னொரு பாடமும் கொடுத்துள்ளார். அந்தத் திருப்புகழ் ஓதிமலைக்கான திருப்புகழ். அருணகிரிநாதர் வாக்கில்
கடைசிஅடியைப் பார்த்தால் இந்தப் பழைய ஓதிமலைத் திருப்புகழின் புராணத்தைச் சொல்கிறார் என விளங்கும்.
Reply all
Reply to author
Forward
0 new messages