அன்பிற்குரிய இலந்தை Uncle,
காந்தியடி. வேகு சாந்தனடி.
இந்த. கான்கு பாட்டுகளும் நான் என் கவித்திறமை: யைக் காட்டுவதுபோல, விரும்பி எழுதின பாட்டுகள்... இந்தப் பாட்டுகள் 1914-ம் வருஷத்தில் இயற்றப் பட்டவை என்பதை நினைவில் வைத்துக்கொண்டு பார்த் தால்தான் இவற்றின் அழகு புலனாகும், அப்போது எனக் கிருந்த அரசியல் எண்ணங்களும் இதில் ஒருவாறு உருவாகின்றன. முதற் பாட்டில் பிரம்மனும்--அரவிர்த கோஷாும் சிலேடை. இரண்டாவது பாட்டில் சிவபிரா னும்--பாலகங்காதர திலகரும் சிலேடை, மூன்றாவது பாட்டில் கோபாலகிருஷ்ணனும் -- கோபால இருஷ்ண கோகலேயும் சிலேடை, நான்காவது பாட்டில் கந்தனும்-- காந்தியும் சிலேடை. காந்தியைப் பற்றிய இந்தக் கடைப் பாட்டு மிகவும் கருதத் தக்கது, 1914-ம் ஆண்டில், காந்தியடிகள் இந்தி UTE DF வருவதற்கு முன்னால், .அவருடைய மூமை இன்னதென்பதை இந்தியர்களில் வெகு சிலரே ஊ௫க்கக் கூடிய அந்தக் காலத்தில், அவர் தென்னாப்பிரிக்காவில் அப்போது நடத்திக்' கொண்டிருந்த சத்யாக்ரெகத்தைத் தவிர வேறு விவரங்கள் ஈம்முடைய காட்டில் பரவாத தாளில், அவரைப்பற்றி எழுதிய பாட்டில் அமைத்த பதங்கள் இப்போதும் எனக்கு இன்பம் கொடுக்கின்றன. “தாமரை மலரில் வீஜ்.றிருக்கும் மேலவனாகய பிரம்ம தேவனுக்கும் ஞானோபதேசம் செய்யக்கூடிய கந்தன்" என்.றும்சிலேடைப் பொருளில் (*கர்மயோ௫யாக இருந்து இப்போது ஞானயோூயாக இருக்கின்ற) மேலே சொன்ன அரவிந்த கோஷுக்கும்கூட ஆன்ம பலம் இன்ன தென்று விளக்கிக் காட்டத் தகுந்த அருள் நிறைந்த. சாந்தன் காந்தியடிகள்' என்ற கருத்தையும் கொண்டது அந்தப் பாட்டு, மேலே உள்ள கான்கு பாட்டுகளில் கோகலேயைப் பற்றிய பாட்டைத் தவிர மற்.ற மூன்று பாட்டுகளையும் நீக்கிவிட வேண்டும் என்பது பரிசுக் கமிட்டி, காரியதரிசி யின் கடிதம், பரிசு காட்டியவர் மிதவாதி ஸ்ரீ கோகலே யவர்களைப் பின்பற்றுகறவர், பரிசும் (கோகலே பரிசு” என்று பெயரிடப்பட்டது. அரவிந்த கோஷ் பிரிட்டிஷ். மிகப் பெரிய விரோதியாக அப்போது கருதப் பட்டவர், திலகர் வெகு தீவிரவாதி, திலகருடைய பெயர்: சொன்னாற்கூட மிதவாதிகளுக்கு எரிச்சல். மேலும் திலகர் : கட்சிக்கும் கோகலே கட்?க்கும் பத்திரிகைகளில் வாக்கு. வாதம் பரவிக்கொண்டிருந்த காலம். ஆதலால் அரவிந்தர் பெயரும் திலகர் பெயரும் பரிசுப் பாட்டில் இல்லாதிருப்பது நலம் என்று எண்ணினார்கள் போலும்: பாட்டில் அவவளவு பெருமை கொடுத்துப் பாராட்டுவதற்குத் தகுந்தவராக காந்தியடிகளை அப்போது... கருதியிருக்க மாட்டார்கள். அதனால் தானோ என்னவோ அந்தப். பாட்டையும் நீக்விடச் சொன்னார்கள்.
இரண்டு மாதங்களுக்குப் பின் பரிசுபெற்ற பாட்டு களில் கொஞ்சம் கொஞ்சம் பத்திரிகைகளில் வெளி யாயின. என்னுடைய ஈண்பர்களிற் லர் என்னுடைய பாட்டுகளிற் லவற்றை அச்சிட்டுப் பத்திரிகைகளுக்கு அனுப்பி, என்னுடைய பாட்டுகளின் தகுதியைப் பாராட்டி, ஒரு விவாதத்தைக் கிளப்பினார்கள். இந்தப் பேச்சு அங்குமிங்கும் பரவி, ஒரு நாள் நான் சேலக் துக்குப் போயிருந்த போது என்னுடைய ஈண்பர் ஸ்ரீ இடாம்பி அனந்தாச்சாரியார்.. பி. ஏ., பி, எல். என்னைக் கேட்டார். பாட்டுகளைப் பாடிக் காட்டினேன். அனந்தாச் சாரியார் ௮தி தீவிரமான தேச பக்தருள் ஒருவர். சேலத்தில் அப்போது வாலிப தேச பக்தர்களுக்கு அவர் ஒரு வழிகாட்டி, என் பாட்டுகளைக் கேட்டுப். பரவசப் _ பட்டு புகழ்ந்து பாராட்டினார். மறுகாள் அவரே என்னை சேலம் ‘ Sits 'இன்ஸ்டிடியூட்' என்ற சங்கத்துக்கு அழைத்துச் சென்று அங்கே என் பாட்டுகளை அரங்கேற்றச் செய்தார். சேலத்தில் அப்போது அந்த : லிட்டரரி இன்ஸ்டிடியூட் " தான் அரசியல் பேச்சுகளுக்கெல்லாம் ஆஸ்தானம். சிறந்த அரசியல் வாதிகளான அனைவரும் அதில் அங்கத்தினர்கள். அவ்வூர் பிரமுகர்கள் எல்லாரும் தினந்தினம் பொழுது போக்காக அங்கே கூடுவார்கள். மேற்படி இடத்தில் அன்றைக்கு, நான் அந்த நாட்டுக் கும்மியை' அரங் கேற்றியபோது ஸ்ரீ சக்கரவர்த்தி ராஜகோபாலாச் சாரியார், ஸ்ரீ, பி. வி, நரசிம்மையர், (இப்போது திருவண்ணாமலை ரமண ஆசிரமத்தில் ஸ்ரீ ஈரஸிம்ம சுவாமி களாக இருப்பவர் )ஸ்ரீ வெங்கட சுப்பையர் முதலான பல பேரும் கேட்டு ரஸித்துப் பாராட்டினார்கள். ராஜாஜி என்: னுடைய பாட்டுகளை மிகவும் மெச்சிஞர், ஸ்ரீ. சி, விஜய ராகவாச்சாரியாரும் அந்தச் சங்கத்தில் ஒரு அங்கத்தினர். ஆனால் அன்றைய தினம் அவர் அங்கு வரவில்லை. மறுகாள் காலையில் ஸ்ரீ ஆனந்தாச்சாரியார் என்னை ஸ்ரீ 'விஜயராகவாச்சாரியார் வீட்டிற்கு அழைத்துச் சென்ருர். அகஸ்மாத்தாக ராஜகேரபாலாச்சாரியவர் களும் அப்போது அங்கு வந்து சேர்ந்தார், விஜயராகவாச் சாரியாருக்கு மற்ற இரண்டு பேரும் என்னை அறிமுகப் படுத்தினார்கள். விஜயராகவாச்சாரியார் மிகவும் கடுபிடி. யானவர். அவருக்கு மூன்னால் யாரா யிருந்தாலும் கொஞ்சம் அஞ்சிப் பயந்து அடங்கி ஒடுங்கித்தான் பேசுவார்கள். வீண் வார்த்தைகளுக்கோ விளையாட்டுப் பொழுது போக்குக்கோ அவருக்கு கேரமிருக்காது, என் னேரமும் ஜோலியும், வேலையும், சுருசுருப்பும் பரபரப்புக் தான். அவரிடத்தில் எதையாவது சொல்ல வேணு மானாலும் நெடுநேரம் நீட்டி கெளித்துப் பேசிக்கொண் ருக்க முடியாது. சுருக்கமாகச் சொன்னால்தான் நின்று கேட்பார். காலத்தைச் செலவு செய்வதில் அவ்வளவு கணக்கா யிருப்பார். அப்படிப்பட்ட அவர் அனந்தாச்சாரியாரும் ராஜ'கோபாலாச்சாரியாரும் என் தேச்யப் பாட்டுகளைப்பற்றி .பிரஸ்தாபிக்க உடனே மற்ற அலுவல்களை விட்டுவிட்டு பாட்டைக் கேட்க விரும்பினார். நான் பாடினேன். என் னுடைய சிலேடைப் பாட்டுகளை உடனே கண்டுகொண்டு அப்போதே ரஸித்துப். புகழ்ந்தார். அரைமணி நேரத் துக்குமேல் வெகு அமைதியாகக் கேட்டுவிட்டு இங்க லீஷில் *ரொம்ப சந்தோஷம். பாட்டுகள் மிக நன்றாக இருக்கன் றன. உங்களிடத்தில் நல்ல கவித்துவம் இருக் கின்றது. அது நாளுக்கு காள் விருத்தியடைந்து நீங்கள் இரு சிறந்த புலவனாக வேண்டுமென்று ஆசீர்வதிக் கிறேன்'' என்றார். நான் பிறர் மெச்சப் 'புலவன்' ஆனது அப்போதுதான்அது முதற்கொண்டு அனந்தாச்சாரி யாரும், சாஜகோபாலாச்சாரியாரும் என் புலமையை மிக வும் போற்றி வந்தார்கள்.
Include related words (1 more titles)
அன்பிற்குரிய இலந்தை Uncle,நீங்கள் கூறியது போல் தேசிய உணர்ச்சி கொண்ட 100 கும்மிப்பாடல்களை எழுத வேண்டும் என்பது தான் போட்டி விதிமுறை.
செய்திக்கு நன்றி. நாமக்கல் கவிஞரின் பாடல் லிஃகோ வெளியிட்ட அவரது பாடல் தொகுதியில் தமிழ்க் கும்மி என்னும் தலைப்பில் வெளியாகியிருக்கிறது
பக்கம் 303 - நாட்டுக் கும்மிகும்மியடி பெண்கள் கும்மியடியுங்கள்
கொட்டுச் சரப்பணி சத்தமிட
On Mon, Feb 20, 2023 at 10:48 AM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:செய்திக்கு நன்றி. நாமக்கல் கவிஞரின் பாடல் லிஃகோ வெளியிட்ட அவரது பாடல் தொகுதியில் தமிழ்க் கும்மி என்னும் தலைப்பில் வெளியாகியிருக்கிறது
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBDo-vKETVA%3DMD8Z41bfuVywRqjh5zaJhvA0Lk4tT4Oqgw%40mail.gmail.com.