மழையே தேவை இல்லா மீனவர் -கடின உழைப்புத் தேவைப்படும் தொழிலில் ஈடுபடத் தேவையற்ற கூட்டுவிக்கும் தொழிலுடைப் பாணர்கள்
மீனவன் தூண்டிலில் சிக்கிய மீன் - பாணனால் சதிர் ஆட்டக்கலையில் தேர்ச்சி பெறும் சேரிப்பரத்தை. அவள் யாழ்வல்லபியாக
இருத்தலும், பாணனின் முழவமும் பாடலின் பின்னர் வருகிறது. இச் சேரிப் பரத்தை தலைவனுக்கு நயப்புப் பரத்தை ஆகிவிட்டாள்
என்கிறது பாடல். நற்றிணை 310 போலவே, இங்கும் தாமரைத் தாவரம். பதும மலர் - தலைவி. தாமரைத் தண்டின் பச்சை இலைகள் - சுக வாழ்வு வாழும் இற்பரத்தையர்.
மீனவன் பாணருக்கு உவமை. பாணர் பிடிக்கும் மீன், வாளை போன்றன யாழ் வல்ல சேரிப் பரத்தை.
இம் மீன்களால், இல்லிடைப் பரத்தையர் (தாமரைத் தண்டில் உள்ள பச்சிலைகள்) கலங்குகின்றனர், கதறுகின்றனர்.
இற்பரத்தையரிடம்
இருந்த தலைவன் பாணர் - பரத்தையர் சேரிக்குப் போய்விடுகிறான். வேழப்புணை
பரத்தையர்க்கு உவமை. For both illiDai & cEri kinds; hero uses them
just for pleasure - Use & Throw culture.
"அவன்
எம்மிடம் இல்லை; பாண் சேரியில் அல்லவா இருக்கிறான்? எம்மை ஏன் நோகிறாள்
தலைவி? அவள் நிலையிலே தான் நாங்களும்” என்று சக்களத்தி (சேரிப் பரத்தை)
பற்றி இல்லிடைப் பரத்தையர் புலம்பும் பாடல். நற்றிணை 310 போலவே, இங்கும்,
ஒரே இல்லில் வாழும் இற்பரத்தையர் என்னும் காமக்கிழத்தியர் தாமரைத்
தாவரத்தின் பச்சிலைகளுக்கும், தாமரைப் பூ தலைவிக்கும் உவமையாக மகாகவி+
ஜர்னலிஸ்ட் பரணர் பாடிய பாடல் அகம் 186.
எப்பொழுதும் போல, சரித்திர நிகழ்ச்சி ஒன்றை - பழையன் காவிரிக் கரையில் போஒர் - பதிவு செய்கிறார். காமக்கிழத்தி ஆகிய இற்பரத்தை, சேரிப்பரத்தையைச் சாடி,
தன்னிடம் இல்லை தலைவன் எனத் தெரிவிக்கும் பாடல்.
தலைவன் சேரிக்குச் சென்றதால், தாமரைச் செடி போல, தலைவி (பூ) நிலையும், தம் (பாசிலை)நிலையும் ஒன்றுதான் என்கிறாள் இற்பரத்தை. அற்புதமான பாடல்.
நற்றிணை 310-ம், அகநானூறு 186-ம் ஒருசேர வாசிக்கவேண்டியவை.
(4) நெய்தல் திணைப் பாடல் - திணைமயங்கு செய்யுள்.
ஐங்குறுநூறு 184
துறை : வாயில் வேண்டி வந்தார், தலைமகன் அன்புடைமை கூறியவழி, வாயில் மறுக்கும் தலைமகள் சொல்லியது.
நெய்தல் இருங்கழி நெய்தல் நீக்கி
மீனுண் குருகிளங் கானல் அல்கும்
கடலணிந் தன்றவர் ஊரே
கடலினும் பெரிதெமக் கவருடை நட்பே!
இங்கும், மீன் = பரத்தை. மீன், கடல்வாளை ஆயின் சேரிப்பரத்தை எனலாம்.
உள்ளுறை : கழியிடைச் செல்லும் குருகு, அவ்விடத்தேயான அழகிய நெய்தலை
விரும்பாது, இழிந்த மீனையே விரும்பி உண்டுவிட்டு, இளங்கானலிலே சென்று
தங்கும் என்றனள். இது தலைவனும் தலைவியின் பெருநலனைப் போற்றிக் கொள்ளாதே
வெறுத்தானாய், இழிவான பரத்தையரையே விரும்பிச்சென்று நுகர்ந்து களித்தானாய்,
வேறெங்கோ சென்று தங்குவானுமாயினன் என்பதனை உள்ளுறுத்துக் கூறியதாம்.(புலியூர்க் கேசிகன்).
”நெய்தல் திணையில் மருதத்தின் உரிப்பொருள்
நெய்தல் திணையில் நெய்தல் நிலமானது ‘நெய்தல்’ என்னும்
பெயரில் ஐங்.நெய்.184:1-3 என்னும் இவ்வொரு பாடலில் மட்டும இடம்பெற்றுள்ளது
என்பது இங்குச் சுட்டத்தக்கது. நெய்தல் நிலமானது பெரிய நீர்நிலையும்,
அந்நீர் நிலையில் மலர்ந்த நெய்தல் மலரும், நெய்தல் மலருக்கு அருகில்
மீன்களும், அம்மீன்களை உண்ட குருகு கடற்கரைச் சோலையில் தங்குவதாகவும்
வருணிக்கப்பட்டுள்ளது. இக்காட்சியினை,
“நெய்தல் இருங்கழி நெய்தல் நீக்கி
மீன்உண் குருகினம் கானல் அல்கும்
கடல்அணிந்தன்று அவர் ஊரே”
(ஐங்.நெய்.184:1-3)
என்னும் பாடலடிகள் காட்சிப்படுத்துகின்றன. இப்பாடலில், நெய்தல் நிலம்,
இந்நிலத்திற்குரிய பெரிய நீர்நிலைகள், நெய்தல் மலர், நெய்தல் நிலத்தினைச்
சார்ந்து வாழும் மீனை உண்ணும் குருகினம், கடற்கரைச்சோலை, கடல் ஆகிய
வருணனைக் கூறுகளை உட்படுத்தி நெய்தல் நிலத்தினை வருணித்திருப்பது
அம்மூவனாரின் கவிப் புலமையினை வெளிப்படுத்தும் சிறப்பு எனலாம்.
நெய்தல் நிலத்திலுள்ள பெரிய நீர்நிலையில் மலர்ந்திருந்த மணமிக்க நெய்தல்
மலர் தலைவி. நெய்தல் மலருக்கு அருகிலுள்ள இழிந்த நாற்றமுடைய மீன் பரத்தை.
அம்மீனை உண்ட குருகானது பரத்தையிடம் இன்பம் அனுபவித்த தலைவன். குருகு
கடற்கரைச் சோலையில் தங்குவது என்பது தலைவன் பரத்தையர் சேரியில் தங்குதல்
என்பதாக உள்ளுறைப்பொருள் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வுரிப்பொருளானது
மருதத்திணையில் இடம்பெற வேண்டியது நெய்தல் திணையில் இடம் பெற்றிருப்பதைத்
திணைமயக்கம் என்று கூறுவர். முதற்பொருளாலும் கருப்பொருளாலும் நெய்தல்
திணையாக அமைந்துள்ளது. உள்ளுறைப்பொருளால் மட்டும் மருதத்தின் உரிப்பொருள்
வந்துள்ளது. இப்பாடலின் மூலம், நெய்தல் நிலத்திலும் தலைவன்
பரத்தமைமேற்சென்றிருந்த தன்மை புலனாகின்றது.
இக்கட்டுரையில் நெய்தல் நிலத்தின் பல்வேறுபட்ட பெயர்கள் எத்தனைப்
பாடல்களில் இடம்பெற்றுள்ளன என்பதைப் புள்ளிவிவரத்தோடு அறியமுடிகின்றது.
நிலவருணனையின் வாயிலாக நிலத்தினுடைய தன்மை வெளிப்படுகின்றது. நெய்தல்
நிலத்திற்குரிய கருப்பொருளின் செயல்பாடுகளைத் தலைவனின் செயல்பாடுகளாக
உள்ளுறையின் வாயிலாக ஆசிரியர் வெளிப்படுத்துகின்றார். மருதத்திணையின்
உரிப்பொருளானது நெய்தல் திணையில் இடம்பெற்றுள்ளதால் திணைமயக்கத்திணையும்
இங்குக் காணமுடிகின்றது.” பா. ஈஸ்வரன்,
http://www.muthukamalam.com/essay/literature/p179.html
------------
இன்னும் இரண்டு செய்யுள், மீன் = பரத்தை என்பதற்குக் காட்டுதும்.
(5)
நற்றிணை : 400
திணை : மருதம்
துறை : பரத்தை தலைவனைப் புகழ்ந்தது.
ஆசிரியர் : ஆலங்குடி வங்கனார்
வாழை மென் தோடு வார்புஉறுபு ஊக்கும்
நெல் விளை கழனி நேர் கண் செறுவின்
அரிவனர் இட்ட சூட்டு அயல் பெரிய
இருஞ் சுவல் வாளை பிறழும் ஊர
[...]
இங்கேயும், மீன் பரத்தைக்கு உவமை தான்.
உள்ளுறை:- வாழையினது
பூவை அசைக்கின்றனவாகிய வயலில் உண்டாகும் நெற்கதிர்களை மள்ளர்கள்
அறுத்துப்போகட்ட அரிச்சூட்டின் அயலின்கண்ணே வாளை பிறழுமென்றது, தலைவியினது
நெஞ்சை வருத்துகின்றனவாகிய காதற் பரத்தையின் செய்கைகளை வாயில்கள் அடக்க
அவள் நெஞ்சிலே தலைவன் விளங்கலாயினா னென்பதாம். மெய்ப்பாடு - உவகை. பயன் - தலைவனைப் பரத்தை புகழ்தல்.
புலியூர்க் கேசிகன் விளக்கினார்:
“
உள்ளுறை : வாழையின் தொங்கும் பூவை வளர்ந்துள்ள நெற்பயிர்கள் அசைக்கும் வயலிலே, மள்ளர்கள் அறுத்துப்
போட்ட கதிர்ச்சூட்டின் பக்கத்தே வாளை மீன்கள் பிறழும் வளமான ஊர் என்றனர்.
வாழையின் பூவை வளர்ந்து அசைத்த நெற்பயிர்போலத் தலைவியின் காதல்வாழ்வைத்
தன்னுடைய இளமை நலத்தால் படர்ந்து அலைவித்தனள் பரத்தை. வாயிலர்கள் அவள் உறவை
முடித்துப் போட்டது கதிர் அறுத்துப்போட்ட சூட்டினைப்போன்றதாம். சூட்டயலிலே
வாளைமீன் பிறழ்தல் போலப் புதிய பரத்தையர் அவள் எதிரேயே அவனைக் கொண்டு
செல்லக் காத்திருப்பவராயினர் என்பதாம்.
விளக்கம் : வாழை மென்தோடு வார்புறுபு ஊக்கும் நெல்விளை கழனி என்றது,
நெல்லானது செழித்து வளர்ந்துள்ளபோது, வாளையின் மெல்லியவான தாற்றின்
நுனிப் பூவானது கவிந்து வந்து அவற்றின் அளவுக்குத் தாழவும், அந் நெற்பயிர்
காற்றால் அசையும்போது, அப் பூவையும் ஆட்டுவிக்கும் என்றனர். இளமைச்
செழுமைக் கவினாலே செருக்குற்ற பரத்தையரைக் கண்டதும், தலைவன் தன் தகுதி
தாழ்ந்து அவர் உறவை நச்சிவந்து சார, அவர்கள் தம் அன்னையரால்
ஏவும்பொழுதெல்லாம் அவனை அதற்கேற்றபடி ஆடச் செய்வர் என்பதாம்.
சூட்டயலிலே வாளை பிறழும் என்றது, அடுத்து வரும் தன் அழிவை நினையாத
அறியாமையால் ஆகும். அவ்வாறே பரத்தையர் பலரும் தலைவனைச் சூழ்ந்து ஆடியும்
பாடியும் அவனைக் கவர்தற்கு முயல்வர் என்பதாம். அன்றித் தன்னோடு உறவாடி
யிருந்த நெற்பயிர் அறுப்புண்டு வெளியேபோவது கண்டும், கவலாது பிறழும் வாளை
மீன்போல, தலைவன் பிரிவைக் கண்டும் கவலாது, மீண்டும் அவனைத் தன்பால் ஈர்க்க
முயன்றனள் பரத்தை என்பதுமாம்.
பயன் : இதனால், தலைவன் அவள்பால் வெறுப்பு அடையாத வகை மீண்டும் அவளை
விரும்பி வருதலும் கூடும் என்பதாம்.”
(6)
குறுந்தொகை 164
கணைக்கோட்டு வாளை கமஞ்சூல் மடநாகு
துணர்த்தேக் கொக்கின் தீம்பழம் கதூஉம்
(7) அகநானூறு 276
etc. etc., ~NG