--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
2011-10-07
நல்ல
வினா!
இப்பாடல்
''தானன
தானன தானன தானன தானன தானன
தானா"
என்ற அழகிய
சந்தத்தில் அமைந்துள்ளது.
உங்கள்
வினாவைப் பார்த்தபின் தேடியதில்
கண்ட பாடல்களும்
விளக்கங்களும்:
----------
http://www.tamilvu.org/library/l0B36/html/l0B36ind.htm
வைத்தியநாத
தேசிகர் இயற்றிய "இலக்கண
விளக்கம் -
பொருளதிகாரம்
-
பாட்டியல்"
(பதிப்பாசிரியர்
- பண்டித
வித்துவான் தி.வே.கோபாலையர்,
எம்.ஏ.,
பி.
ஓ.
எல்.,)
என்ற
நூலில்
காண்பது:
http://www.tamilvu.org/slet/l0B00/l0B00pd1.jsp?bookid=10&auth_pub_id=27&pno=168
கலம்பகத்தின்
உறுப்புகளைப் பற்றிய
விளக்கம்:
"
.......
களி
- கட்குடியர்
கள்ளையும் அது உண்டாகும் பனை
முதலியவற்றையும் சிறப்பித்துக்
கூறுவது.
......
ஊசல்
- மகளிர்
ஊசலாடும் சிறப்பினைக்
கூறுவது.
கொற்றியார்
- வைணவச்
சின்னங்களுடன் பிச்சை எடுக்க
வருவாளைக் கண்ட காமுகன் ஒருவன்
கூறுவது.
பிச்சியார்
- பிச்சை
வாங்கச் செல்லும் சிவ வேடங்கொண்ட
பெண்ணைக் கண்ணுற்ற காமுகன்
ஒருவன் கூறுவது.
இடைச்சியார்
- இடைக்குல
மகளை வீதிவாய் மோர்விற்க
வந்தஞான்று கண்ட காமுகன்
கூறுவது.
வலைச்சியார்
- மீன்
உணக்கும் செம்படவப் பெண்ணைக்
கண்ட காமுகன் கூறுவது.
கலம்பகம்
பெரும்பாலும் நூறு பாடல்களை
உடையதாகவே காணப்படும்.
"---
-------------
ஸ்ரீகுமரகுருபரசுவாமிகள்
பிரபந்தத் திரட்டு என்ற நூலின்
முற்பகுதியில் இருக்கும்
கலம்பகத்தைப் பற்றிய விளக்கத்தில்
காண்பது:
"கலம்பகங்கள்
மூன்றை இவர் பாடியுள்ளார்.
கலம்பகமென்பதற்குப்
பலவகைப்பொருள் கூறப்படினும்
பலவகை மலர்களும் கலந்தமைத்த
கலம்பகமாலை யென்று பொருள்
கொள்வதே பொருந்தும்;
'களிவண்டு
மிழற்றிய கலம்பகம் புனைந்த,
அலங்கலந்தொடையல்'
(திவ்.
திருப்பள்ளி.
5); ‘பல
பூக்கள் கலந்து நெருங்கிய
கலம்பகமாகிய மாலை;
(பெரும்பாண்.
174, ந.)
என்பவற்றைக்
காண்க.
கதம்பமென்பது
இங்ஙனம் திரிந்தது போலும்.
இப்பிரபந்தத்தில்
பலவகைப் பொருள்களும்
அகப்புறத்துறைகளிற் பலவும்
பலவகை யாப்புக்களும் விரவிக்
கலந்தமையின் இப்பெயர் வந்தது.
சிலவகை
மகளிரைக் கண்டு காமுற்ற
இளைஞர்கள் தம் காமக்குறிப்புத்தோன்ற
அவர்களோடு பேசும் உலகியல்பைத்
தழுவி மதங்கியார்,
பிச்சியார்,
கொற்றியார்,
இடைச்சியார்,
வலைச்சியாரென்னும்
உறுப்புக்கள் கலம்பகங்களில்
அமைக்கப்படும்.
மதங்கி
யென்பவள் வாள் சுழற்றி ஆடுபவள்;
பிச்சியென்பவள்
சிவவேடம் புனைந்து வருபவள்;
கொற்றி
வைணவ வேடத்தினள்.
இவ்வுறுப்புக்களில்
அவ்வம்மகளிருடைய தொழிலுக்குரிய
செய்திகள் தோற்றும்படி
சிலேடையமைத்தல் புலவர் நெறி.
இவற்றையன்றி
மறம், குறம்,
சம்பிரதம்,
சித்து,
களி,
ஊர்,
அம்மானை,
ஊசல்,
பாணாற்றுப்படையென்னும்
உறுப்புக்கள் கலம்பகங்களில்
வரும்.
மறமென்பது
மறச்சாதி மகளொருத்தியை ஒரு
மன்னன் மணம் பேசிவிடுப்ப
அச்செய்தியை அறிவிக்கும்
திருமுகத்தைக் கொணர்ந்த
தூதனை நோக்கி அச்சாதியினர்
தலைவன் சினந்து கூறுதல்.
குறத்தி
குறிகூறுவது குறம்.
பிறரால்
இயற்ற முடியாத அரிய செயல்களைத்
தான் செய்து விடுவதாகத்
தோற்றும்படி ஒருவன் கூறுவதாக
அமைப்பது சம்பிரதம்.
இரசவாதம்
செய்யும் ஆற்றலுடைய சித்தனாகத்
தன்னை ஒருவன் கூறிக்கொள்வது
சித்து;
இவ்வுறுப்பில்
இரசவாத சம்பந்தமான பொருள்
தோற்றுவதோடு இயல்பாக உள்ள
பொருளும் தோற்றும்படி அமைப்பர்.
சித்தர்களுடைய
நூல்களில் வரும் செய்யுளைப்போல
இச்செய்யுளிலும் அப்பா என்ற
விளி வரும் (161).
இவ்வாசிரியர்
தாம் இயற்றிய இரண்டு கலம்பகங்களிலும்
இவ்வுறுப்புக்குரிய செய்யுட்கள்
இரண்டை அமைத்ததன்றிப் பண்டார
மும்மணிக்கோவையிலும் இத்தகைய
பொருளமைதியையுடைய செய்யுளொன்றை
(589) அமைத்துள்ளார்.
கட்குடியன்
கூறுவதாக அமைவது களி;
கட்குடித்தலும்
ஊனுகர்தலும் பெருமைதருஞ்
செயல்களென்று தோற்றும்படி
அக்கூற்று அமைந்திருக்கும்.
பாட்டுடைத்
தலைவனது ஊரைச் சிறப்பிப்பது
ஊர். மகளிர்
அம்மானை யாடுதற்கும் ஊசலாடுதற்கும்
உரிய செய்யுட்கள் முறையே
அம்மானையும் ஊசலும் ஆகும்.
அம்மானை
மூவர் பாடுவதாக அமைவது.
இவ்வுறுப்புக்களுக்கு
இலக்கியமாக உள்ள செய்யுட்களை
இவ்வாசிரியர் சொற்பொருட்சுவை
திகழப்
பாடியுள்ளார்."
------
http://www.tamilvu.org/slet/l5F10/l5F10pd1.jsp?bookid=126&pno=482
காசிக்கலம்பகம்
40)
சோதி
யொன்றிலொரு பாதி சத்தியொரு
..
.. பாதி
யும்பரம சிவமெனத்
..
தொகுத்து
வைத்தவவி முத்த நாயகர்
....
துணைப்ப
தம்பரவு களியரேம்
ஓதி
யோதியி ளைப்பர் வேத
....
முணர்த்து
த்ததுவ முணர்கிலார்
..
உணரும்
வண்ணமனு பவத்தில் வந்திடுமொ
....
ருண்மை
வாசக முணர்த்துகேம்
ஏதி
னாலற மனைத்தி னும்பசு
....
வினைப்ப
டுத்தனல் வளர்த்திடும்
..
யாக மேயதிக
மென்ப தன்பர்த
....
மிறைச்சி
மிச்சிலதி லிச்சையார்
ஆதி
யாரறிவ ரதுகி டக்கமது
....
வருந்தி
லப்பொழுதி லேபெறற்
..
கரிய தோர்பரம
சுகம்வி ளைந்திடுவ
....
ததும்
றுத்தவிர வில்லையே.
கள்ளுண்டு
ஊனுகரும் வழக்க முடையவன்
ஒருவன் தன் வழக்கத்தைச்
சிறப்பித்துக் கூறுவதாக
அமைந்தது இச் செய்யுள்.
யாகம்
அதிகமென்பது ஏதினால்.
பசுவைப்படுத்தலால்
யாகம் சிறப்புடையதாயிற்றென்பது
களியின் கருத்து.
அன்பர்
தம் - கண்ணப்ப
நாயனாருடைய.
இறைச்சி
- மாமிசம்.
மிச்சில்
- எச்சில்.
கண்ணப்பநாயனார்
உண்டு சுவை பார்த்த எச்சிலாகிய
இறைச்சியில் விருப்பமுடையவராகிய
ஆதியார் அதிகமென்பதை அறிவாரென
இயைக்க.
மது -
கள்.
மறுத்த
இரவு இல்லை -
ஒழிந்த
இராத்திரி இல்லை;
ஒவ்வொரு
நாளும் உண்பரென்றபடி.
மறு
தவிரவில்லையென உண்மைப்
பொருளும் இதன் கண் அமைந்தது;
மறு -
குற்றம்.
(பி-ம்.)
‘மறுத்தவ்வை
யில்லையே’.
-------------
http://www.tamilvu.org/slet/l5F10/l5F10pd1.jsp?bookid=126&pno=133
மதுரைக்
கலம்பகம்
25)
அழகுற்றதொர்
மதுரேசனை யமரேச னெனக்கொண்
..
டாடுங்களி
யானின்றிசை பாடுங்களி
யேம்யாம்
பொழுதைக்கிரு
கலமூறுபைந் தேறற்பனை யினைநாம்
..
போற்றிக்கரு
மூர்த்திக்கிணை சாற்றத்தகு
மப்பா
பழுதற்றதொர்
சான்றாண்மை பயின்றார்தின
முயன்றாற்
..
பலமுண்டத
னலமுண்டவ ரறிவார்பல
கலைநூல்
எழுதப்படு
மேடுண்டது வீடுந்தர வற்றால்
..
எழுதாத்தொர்
திருமந்திர மிளம்பாளையு
ளுண்டே.
கட்குடியர்
கள்ளையும் அஃது உண்டாகும்
பனைமுதலியவற்றையும் சிறப்பித்துக்
கூறுவது இது.
(பி-ம்.)
*தாழிசை.
மதுரேசன்
- மதுரையென்னும்
நகர்க்கத் தலைவம்;
மதுரை -
கள்ளென்பது
வேறு பொருள்.
மதுரேசனானமையால்தான்
அமரேசனானா னென்பது களியின்
கருத்து;
அமரேசன்
- மரணமில்லாத
தேவர்களுக்குத் தலைவன்.
களியால்
- களிப்பினால்.
இருகலம்
- அறுத்த
பாளையிற் செருகி வைத்திருக்கும்
இரண்டு மண் கலயங்கள்;
இரண்டுகலமென்னும்
அளவை யென்பது வேறு பொருள்.
தேறல் -
கள்.
சாற்றத்தகும்
- சாற்றவேண்டும்.
சான்றாண்மை:
சிலேடை.
(பி-ம்.)
‘பயின்றாரிதின்
முயன்றால்’.
பலம் -
பிரயோசனம்,
பழம்.
நலத்தை
உண்டவர் அறிவார்.
கலைநூல்
- கலைகள்.
ஏடு -
பனையேடு.
வீடு -
முத்தி,
குடியிருக்கும்
வீடு. வற்று
- வன்மையுடையது.
பனையோலையால்
வீட்டை வேய்தல் பற்றி,
‘வீடும்
பறவற்றுய என்றான்.
எழுதாத்தோர்
திருமந்திரம்.
- கள்,
உபதேசித்தற்கு
உரிய வேதமந்திரம்.
------------
பூண்டி
அரங்கநாத முதலியாரியற்றிய
கச்சிக்கலம்பகம்
பச்சையப்பன்
கல்லூரித் தமிழ்ப் பேராசிரியராயிருந்த
வித்வான் மோசூர் கந்தசாமி
முதலியாரவர்கள் எழுதிய விளக்க
வுரையுடன்
http://218.248.16.19/library/l5410/html/l5410s31.htm
கச்சிக்
கலம்பகம்
31)
அரவிந்த
மலரின்கட் குடியனயன்
..
அமரர்சுரா
பானத் தாரே,
வரமுறுகா
விரிநதிக்கட் குடியனே
..
திருமருவு
மார்பி னானும்,
தரணியின்கட்
குடியர்பெருந் தவமுனிவர்
..
சித்தரும்விண்
ணவர்க டாமும்,
கரவடமேன்
திருக்கச்சிக் கண்ணுதலார்
..
பனையின்கட்
குடியர் தாமே.
(இ-ள்.)
அயன் -
பிரமன்,
அரவிந்த
மலரின்கண் -
தாமரை
மலரினிடத்து,
குடியன்
- குடியிருப்பவன்
(அரவிந்தமலரின்
- தாமரை
மலரில் பதுங்கிக்கொண்டு,
கள் குடியன்
- கள்
குடிக்கும் இயல்புடையவன்.)
அமரர் -
தேவர்கள்,
சுராபானத்தாரே
-
தேவலோகத்திலிருந்துகொண்டு
அமுதத்தைக் குடிப்பவரே ஆவர்.
(கள்
குடிப்பவரே ஆவர்.)
திரு மருவு
மார்பினானும் -
திருமகள்
உறைகின்ற மார்பை உடைய திருமாலும்,
வரமுறு -
மேன்மையுடைய,
காவிரிநதிக்கண்
- காவிரிநதிசூழ்ந்த
(ஆற்றிடைக்குறையாகிய)
திருவரங்கத்தில்,
குடியன்
- குடியிருப்புக்
கொண்டவன் (மார்பினானும்
காவிரிநதியின் கிளைகளிடைத்
தெளிந்துண்ணும் கட்குடியன்)
பெருந்தவ
முனிவரும் -
பெரியதவமுடைய
முனிவர்களும்,
சித்தரும்
- சித்தர்களும்,
விண்ணவர்க
டாமும் -
ஆகாய வீதியே
செல்லும் வேணாவியரும்,
தரணியின்
கண் -
பூமியில்,
குடியர்
- குடியிருப்பவர்,
(தரணியில்
பொய் வேடங் கொண்டு கள்குடிப்பவரே
யாவர்,)
கரவடமேன்
- வஞ்சகமேன்,
திருக்கச்சி
கண்ணுதலார் -
திருக்கச்சியில்
எழுந்தருளியுள்ள நெற்றிக்
கண்களையுடைய ஏகாம்பரர்,
பனையின்
கட் குடியர்தாமே -
திருப்பனங்காடு
என்னும் பதியில் குடியிருப்பவர்.
(பனந்தோப்பினிடத்துக்
குடியிருப்பு உடையவர்.
பனையின்
கள்குடியரே -
பனைமரத்திலிருந்து
பெறும் கள்ளை வஞ்சகமாகக்குடிப்பவரே
யாவர்.)
சுரா
- கள்,
சுரை -
அமுதம்.
சுரா -
சுரை.
கர
வடம் எனப் பிரித்துக் கரத்தில்
உருத்திராக்க மாலை ஏந்திக்
கொண்டு,
இரு கச்சிக்
கண்ணுதலார் -
கச்சியில்
நுதற்கண்ணுடைய சிவபெருமானார்,
கட்குடியர்
தாமே எனவும் பொருள்
கூறலாம்.
திருப்பனையின்கண்
எழுந்தருளும் சிவபெருமானார்
இன்ப வடிவினர்.
அவ்வடிவினரை
நான்முகனும்,
ஏனைய
தேவரும்,
திருமாலும்,
முனிவரும்,
சித்தரும்,
வேணாவியரும்
தியானித்து இன்ப முறுவர்.
ஆதலால்
‘நமரங்காள்,
நீவிரும்
அவ்வின்பவடிவினரை நினைவு
செய்து இன்பமடைவீராக’ என்று
இன்பமுற்ற ஒருவன் கூறுவதாக
அமைந்துள்ளது இப்பாடல்
என்க.
குடியிருத்தல்,
குடிப்பது
என்று இரட்டுறமொழிதற் பொருளில்
குடி யென்னும் சொல் ஆளப்பெற்றுள்ள
நயம் பாராட்டத்தக்கது.
மண்ணுலக
விண்ணுலகங்களில் வாழ்வோர்
யாவரும் குடிப்பவர்களே யாதலால்
குடித்தல் இழுக்காகாது என்று
களிமகன் தன்பால் இழுக்கின்மையைத்
தெளிவித்து மற்றவர்களையும்
கள்ளுண்ணும்படி அழைக்கும்
உபாயம் இப்பாட்டில் நன்கு
அமைந்துள்ளது.
முதலடியில்
அமரர் என்னும் சொல் தேவரென்னும்
பொருள் பட வந்திருத்தலால்,
மூன்றாம்
அடியில் விண்ணவர் என்னும்
சொல் சூரியனோடு ஆகாய வீதியே
சென்று அச்சூரியனுடைய ஒளி
முழுவதும் மக்கள்மீது படாதவாறு
தடுத்துக்காக்கும் வேணாவியோர்
என்று பொருள் கூறப்பட்டது.
‘விண்செலன்
மரபினையர்க் கேந்திய தொருகை’
என்ற திருமுருகாற்றுப்படை
யடிக்கு நச்சினார்க்கினியர்
கூறியுள்ள பொருளை யுற்று
நோக்குக.
----------------
http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=11&Song_idField=11038&padhi=038&startLimit=11&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC
பதினொன்றாம்
திருமுறை -
038 ஆளுடைய
பிள்ளையார் திருக்கலம்பகம்
- 11
ஏனமு
கத்தவ புத்தரை யிந்திர சித்து
மணம்புணர் வுற்றான்
..
ஈழவ னார்சொரி
தொட்டி யினங்களை வெட்டி
யிசித்தனர் பட்டர்
தான
மிரக்கிற சீதை மடுப்பது சாதி
குடத்தொடு கண்டீர்
..
சக்கர
வர்த்திகள் சிக்கர மட்டுவர்
தத்துவம் இப்பரி சுண்டே
ஆன
புகழ்ப்பயில் விப்ர சிகாமணி
அத்தகு மைப்புரை யுங்கார்
..
ஆர்பொழில்
நீடிய சண்பையர் காவலன் வண்களி
யேனெளி யேனோ
சோனக
னுக்குமெ னக்குமெனத்தரை
யம்மனை சூலது கொண்டாள்
..
தும்புரு
வாலியை வென்று நிலத்திடை
நின்று துலக்குகிறாரே.
தர்மபுரம்
ஆதீன உரையில் குறிப்புரையில்
காண்பது:
"கலம்பக
உறுப்புக்களுள் ஒன்றாகிய
'களி'
என்பது
பற்றி வந்தது இப்பாட்டு.
களி
- களிப்பு;
உணர்வழிந்த
மயக்கம்.
கள்ளை
உண்டு இவ்வாறான மயக்கத்தை
எய்தினோன் கூற்றாக வருவதே
'களி'
என்னும்
உறுப்பு.
அது
பொருளுடைக் கூற்றாகவே அமைதல்
உண்டு.
ஆயினும்
இங்கு இது கள்ளுண்டோன் பிதற்றும்
பிதற்றுரையாகவே அமைந்துள்ளது.
அதனால்
இப்பாட்டில்,
'ஆன புகழ்ப்
பயில்....வண்
களியேன் எளியேனோ'
என்னும்
பகுதி தவிர,
ஏனைய பகுதி
முழுதும் பொருள் படாப்
பிதற்றுரைகளாம்."
----
>>இப்பாட்டில், 'ஆன புகழ்ப் பயில்....வண் களியேன் எளியேனோ' என்னும் பகுதி தவிர, ஏனைய பகுதி முழுதும் >>பொருள் படாப் பிதற்றுரைகளாம்."
மேலெழுந்தவாரியாகக்
குடிகாரனின் பிதற்றுரைகளாகத் தோற்றும் இப்பாட்டில்,
களி என்பது அங்கத உருவில் வெளிப்படுகிறது என்ற நோக்கில் படித்து நான் புரிந்துகொண்டது
இது:
ஏனமு கத்தவ புத்தரை இந்திரசித்து மணம்புணர்வுற்றான் - இது, காழிப்பிள்ளையார் காலத்தில் புத்த மதத்தைப் பரப்பியவர்களைக் கேலி செய்வது. (மொட்டைத் தலையால்) பன்றிபோல் முகங்கொண்ட புத்தர்களை அரக்கர்குலத்து இந்திரஜித் ஏற்று மகிழ்ந்தான் - இது, பௌத்த மதம் தமிழ்நாட்டிலில்லாமல் இலங்கையில் பரவியதைக் குறிப்பது.
ஈழவ னார்சொரி தொட்டி யினங்களை
வெட்டி
யிசித்தனர் பட்டர்- இழிந்தவர்
ஆன பௌத்த, சமணவாதிகள் கொட்டிய குப்பைகளை (தொட்டி இனங்கள்) சம்பந்தப் பெருமான் வெட்டி
இழுத்தெறிந்தார்.
தான மிரக்கிற சீதை மடுப்பது சாதி குடத்தொடு கண்டீர்- கீழ்மக்கள் (மேற்சொன்ன மதவாதிகள்; சீத்தை என்பது களியை ஒட்டிச் சீதையென இங்கு மருவியது) உண்டிக் கலம் ஏந்திப் பிச்சை எடுத்து உண்பர்.
சக்கர வர்த்திகள் சிக்கர மட்டுவர்
தத்துவம்
இப்பரி சுண்டே / பெரும் பட்டங்களைத் தரித்துலவும் அவர்களது (தவறான) தத்துவமாகிய பரிசை உட்கொண்டவர் (உண்டவர்) அழுவார்கள்/துன்பப்படுவார்கள் ;
சிக்கரம் - அழுகை)
ஆன புகழ்ப்பயில் விப்ர சிகாமணி அத்தகு
மைப்புரை
யுங்கார்
ஆர்பொழில் நீடிய சண்பையர் காவலன் வண்களி யேனெளி யேனோ
புகழ்மேவும் அந்தண குலத்திற்கு முடியிலணி மணியாக விளங்கும் அரசனை ஒத்த சம்பந்தரின் (சண்பையர்) வண்மை கண்டு நான் களிப்பேன்;
சோனக னுக்குமெ னக்குமெனத்தரை யம்மனை
சூலது கொண்டாள்-
தென்னகம்
மட்டுமன்றிப் வேறு நாட்டவருக்கும் (சோனகர்), அவரைப் பாடும் எனக்குமாக
உமையம்மை சம்பந்தப் பெரியோனைப் பெற்றுத் தந்தாள்
தும்புரு வாலியை வென்று நிலத்திடை
நின்று
துலக்குகிறாரே. -இசை வல்லமையில்
தேவருலகத் தும்புருவையும், எதிரிகளை வெல்லும் திறத்தில் வாலியையும் நிகர்த்த திருஞான
சம்பந்தப் பெருமான் இம்மண்ணில் சிவனின் உயர்ந்த தன்மைகளை உலகுக்கு விளக்குகிறார்.
..அனந்த்
9-10-2011
பதினொன்றாம் திருமுறை - 038 ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம் - 11
ஏனமு கத்தவ புத்தரை யிந்திர சித்து மணம்புணர் வுற்றான்
.. ஈழவ னார்சொரி தொட்டி யினங்களை வெட்டி யிசித்தனர் பட்டர்
தான மிரக்கிற சீதை மடுப்பது சாதி குடத்தொடு கண்டீர்
.. சக்கர வர்த்திகள் சிக்கர மட்டுவர் தத்துவம் இப்பரி சுண்டே
On Oct 10, 11:26 pm, "K.R. Kumar" <krishra...@gmail.com> wrote:
> //கலம்பகத்தில் ஏன் களி (கட்குடியர் கள்ளையும் அது உண்டாகும் பனை
> முதலியவற்றையும் சிறப்பித்துக் கூறுவது), கொற்றியார் (வைணவச் சின்னங்களுடன்
> பிச்சை எடுக்க வருவாளைக் கண்ட காமுகன் ஒருவன் கூறுவது), பிச்சியார் (பிச்சை
> வாங்கச் செல்லும் சிவ வேடங்கொண்ட பெண்ணைக் கண்ணுற்ற காமுகன் ஒருவன்
> கூறுவது), இடைச்சியார்
> (இடைக்குல மகளை வீதிவாய் மோர்விற்க வந்தஞான்று கண்ட காமுகன் கூறுவது), வலைச்சியார்
> (மீன் உணக்கும் செம்படவப் பெண்ணைக் கண்ட காமுகன் கூறுவது), போன்ற பகுதிகள்
> இருக்கின்றன என்பதன் தாற்பரியம் எனக்குப் புலப்படவில்லை. //
>
> இதே எண்ணங்கள்தான் இந்தப் பாடலைப் படிக்கும்போது என்னுள்ளும் தோன்றின.
> அதனால்தான் ஒரு சந்தேகமாக மடலிட்டேன்.
>
> உங்கள் விளக்கம் (குடிகாரனின் அர்த்தமற்ற பிதற்றல் என்பதைவிட) ஏற்புடையதாக
> இருக்கின்றது.
>
> அனந்த் அளித்த விளக்கமும் புரிகிறது.
>
> நீங்கள் கூறிய //இப்பாட்டை இன்னும் ஆழ்ந்து ஆராயின் இன்னும் வேறு பொருள்களும்
> புலப்படக்கூடும்.// என்பதை முழுமையாக வழிமொழிகிறேன்.
>
> அன்புடன்,
> குமார்(சிங்கை)
>
இன்ன்னொன்றும் இப்பாடல் பொருள் காண்பதில்
யோசிக்கலாம்.
பதினோராம் திருமுறை எல்லா ஏடுகளையும்
பார்த்துச் செம்பதிப்பு ஏற்படவில்லை. 19-ஆம் நூற்றாண்டில்
ஆறுமுக நாவலர் தனக்குக் கிடைத்த ஏடுகளைப்
பார்த்து 11-ஆம் திருமுறை அச்சிட்டார்.
20-ஆம் நூற்றாண்டில் முக்கியமான புலவர்கள்
எல்லோரும் சங்க இலக்கியங்களைத் தேடினர்.
சைவ சமய இலக்கியங்களின் செம்பதிப்புக்கான
முயற்சிகள் குறைவாயின. மேலும், 40-50 ஆண்டுகளாய்
தமிழக அரசியல் சூழ்நிலை சைவ இலக்கிய தேடலுக்கும்,
பராமரிப்பு, பரவலுக்கு உதவவில்லை.
11-ஆம் திருமுறை உள்ள எல்லா ஏடுகளையும்
நல்ல புலவர்கள் தேடி ஆராய்ந்தால் இன்னும்
இந்த விருத்தம் செப்பமடையக் கூடும். 11-ஆம்
திருமுறை இன்னும் நன்கு ஏடுகளைக் கொண்டு
ஆராயப்படவில்லை. ஓர் உதாரணம் தருகிறேன்.
திரு ஈங்கோய் மலை எழுபது என்னும் பிரபந்தம்
அதில் உள்ளது. மிக அழகான இயற்கை வருணனை
கொண்ட 70 வெண்பாக்கள். இதில் ஸ்ரீலஸ்ரீ
ஆறுமுக நாவலருக்கு 15 வெண்பாக்கள்
கிடைக்கவில்லை. 1940களில் மாயூரம்
(திருச்சிற்றம்பலம்) மு. அருணாசலம் அவர்களுக்கு
நெல்லை செப்பறை ஆதீனத்தில் கிடைத்த
ஏட்டுச்சுவடிகளில் ஈங்கோய்மலை எழுபது
முற்றிலுமாய்க் கிட்டிற்று. அச்சாக்கினார்.
பின்னர் பாலூர் கண்ணப்ப முதலியார் உரைவரைந்தார்கள்.
19-ஆம் நூற்றாண்டில் அச்சான எத்தனையோ
சைவ தலபுராணங்கள் அழிந்துகொண்டுள்ளன.
படிப்பாரும் மிக அருகிவருகின்றனர்.
மின்னூல் ஆக்கம் அரசாங்கம், தனியார்கள்
நேரம், மனிதவளம், காசு செலவுசெய்து
காப்பாற்றவில்லையென்றால் பல பொக்கிஷங்கள்
இல்லாமல் போய்விடும் என்பதுறுதி.
நல்ல நூலகங்கள் பல அழிந்துகொண்டுள்ளன
- சை.சி.நூ.கழக்ம், கன்னிமாராவிலேயே பல
ஆயிரக்கணக்கான நூல்கள் அழியும் தறுவாயில்.
நா. கணேசன்