இன்று நரசிம்மன் தூண்பிளந்து உதித்த நன்னாள்.

1 view
Skip to first unread message

Parthasarathy S

unread,
Apr 29, 2026, 11:36:32 PM (4 hours ago) Apr 29
to santhav...@googlegroups.com

ஊழி பலவாகும் நம்வினைகள் தீர்க்கவே

               ஓர்ந்து நரசிங்கன் தீர்ப்பதுவும் நொடியிலே

ஆழி தனில்பள்ளி அரிதுயிலில் ஆழ்ந்துமே

               ஆழி தொட்டுநம்மின் பகைமுடிக்க விரைவனே

வாழி யெனப்பொழுதும் வாழ்த்துவரை நெஞ்சிலே

               வாடி யவர்தேயா திருந்திடவே அருள்வனே

நாழி பலவேண்டா நாமமொன்றை ஓதவே

               நாடி யச்சிறுவன் நல்வழியில் நடப்பமே

              

புதுஅக்ரஹாரம் எஸ் பார்த்தசாரதி, பெங்களூர்


--
S. Parthasarathy

+91 98441 24542/9980794542

GOPAL Vis

unread,
2:31 AM (1 hour ago) 2:31 AM
to santhav...@googlegroups.com
நன்று!
தொட்டுநம்மின் -- கொடுநமது    என்பதும்  பொருந்தக் கூடும். 
வாழ்த்துவரை -- வாழ்த்துபவர்.    என்பதும் பொருந்தக் கூடும். 
கோபால்
Reply all
Reply to author
Forward
0 new messages