வள்ளுவன் வாய்ச்சொல் மருந்து

3 views
Skip to first unread message

இமயவரம்பன்

unread,
Jan 8, 2026, 6:58:45 AM (yesterday) Jan 8
to santhavasantham

வள்ளுவன் வாய்ச்சொல் மருந்து
(வெண்பா)

அறம்:
பொல்லா மருளுக்கும் பொய்வாழ் நெறிகட்கும்
தொல்லேழ் பிறப்பில் தொடர்வினைக்கும்  -  இல்லார்க்கொன்(று) 
உள்ளபோ(து) ஈயா உளத்துக்கும் பேரறவோன்
வள்ளுவன் வாய்ச்சொல் மருந்து.

பொருள்:
தீரா மடமைக்கும் தீப்போல் வறுமைக்கும்
ஆராத் துயர்க்கும் அயர்வுக்கும் - ஆராய்ந்து
தெள்ளுறா(து) ஆற்றும் சிறுவினைக்கும் வான்பொருள்சேர் 
வள்ளுவன் வாய்ச்சொல் மருந்து.

இன்பம்:
அன்பில் தொலைந்த அகத்துக்கும் ஊனுருகி
என்பும் கரைந்த இளைப்புக்கும் - தன்பிரிவால்
வெள்ளநீர் வார்க்கும் விழிகளுக்கும் காமருசீர்
வள்ளுவன் வாய்ச்சொல் மருந்து.

(காமரு சீர் = விரும்பத்தக்க சிறப்புடைய)

- இமயவரம்பன் 

Arasi Palaniappan

unread,
Jan 8, 2026, 10:25:41 AM (yesterday) Jan 8
to சந்தவசந்தம்
மிக அருமை 

"வள்ளுவனார் வாய்ச்சொல் மருந்து " என்று இருக்கலாமோ?


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/8EFBB2FB-CA2D-4AB1-BE5F-E42FA5954547%40gmail.com.

GOPAL Vis

unread,
Jan 8, 2026, 11:56:05 AM (yesterday) Jan 8
to santhav...@googlegroups.com
அருமை வெண்பாக்கள், திரு இமயவரம்பன்!

இருபால் அறம்பொருள் இன்ப(ம்)இரு பாலார்க்(கு)
அருவிபோற் பெய்தானே அந்தத் - திருக்குறள்
என்னுமொரு வேதத்தில்! எக்காலும் வள்ளுவனுக்(கு)
இன்னொருவர் ஆவரோ ஈடு?  

கோபால். 

--

Ram Ramakrishnan

unread,
Jan 8, 2026, 12:16:27 PM (yesterday) Jan 8
to santhav...@googlegroups.com
மிக அருமை, திரு. இமயவரம்பன் 

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jan 8, 2026, at 10:25, Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:



இமயவரம்பன்

unread,
Jan 8, 2026, 12:21:50 PM (yesterday) Jan 8
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக்க நன்றி!

மூன்று வெண்பாக்களிலும் மூன்றாம் அடியின் முதல் சீர் கூவிளமாக இருப்பதால் ஓசை இயைபு கருதி, ஈற்றடியின் முதற்சீரையும் வள்ளுவன் என்று கூவிளமாக்கினேன். வள்ளுவர் என்று மாற்றுகிறேன்.

இமயவரம்பன்

unread,
Jan 8, 2026, 12:23:37 PM (yesterday) Jan 8
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. கோபால்!

தங்கள் வெண்பாப் பின்னூட்டம் மிகச் சிறப்பு।  

இமயவரம்பன்

unread,
Jan 8, 2026, 12:24:02 PM (yesterday) Jan 8
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக்க நன்றி! திரு ராம்கிராம்

இமயவரம்பன்

unread,
Jan 8, 2026, 1:39:54 PM (yesterday) Jan 8
to AnandBl...@gmail.com, santhav...@googlegroups.com
முதல் வெண்பாவை இவ்வாறு மாற்ற விரும்புகிறேன்:

பொல்லாப் பகைமைக்கும் பொய்வாழ்(வு) இழிமைக்கும்
தொல்லேழ் பிறப்பில் தொடர்வினைக்கும் - வல்லான்ஓர்
வள்ளலை எண்ணா மருட்கும் அறம்திகழும்
வள்ளுவர் வாய்ச்சொல் மருந்து.

Reply all
Reply to author
Forward
0 new messages