இந்தக் கவிதையில் உள்ள சிறப்பம்சம் என்னவென்று யாரேனும் சொல்ல முடியுமா

35 views
Skip to first unread message

Niranjan Bharathi

unread,
Feb 17, 2012, 5:33:31 AM2/17/12
to santhav...@googlegroups.com, tamizhs...@googlegroups.com, Amma, Appa, Vilasinee Arjun, Arjun Bharathi, Vidya, ashwath naganathan, aswinibharathi, madhuvanthi.bharathi, Rama Ramakrishnan, Anuradha Chitrapu, tamil ponnu, radha jagan, Bhamini Pattabhiraman, Jyothsna Bhavanishankar
எழுத்து

தொலை தூரத்திலிருந்தே 
என்னைத் தாக்கினாய் - ஆதலால் 
நீ ஒரு ஆயுத எழுத்து ;

உன்னை ஓயாது 
சுற்றினேனே - ஆதலால் 
நீ ஒரு வட்டெழுத்து ;

உயிரோடு உறவாடினாயே  - ஆதலால் 
நீ உயிரெழுத்து ;

தலைகீழாக்கினாயே- இனி
நீ தான் தலையெழுத்து ;

யோசித்தேன் - எனக்கு 
நீ தான் துணையெழுத்து ;

கடைசியாக ஒன்று ;

ஒற்று எழுத்தாய் உன்னை 
விட்டுவிட மாட்டேன் ;
காலெழுத்தாய் உன்னை - என்னோடு 
நீட்டிக்கவே வழி செய்வேன் ;



Niranjan Bharathi

unread,
Feb 17, 2012, 10:43:18 AM2/17/12
to santhav...@googlegroups.com, tamizhs...@googlegroups.com, Amma, Appa, Vidya, Arjun Bharathi, Vilasinee Arjun, Anuradha Chitrapu, aswinibharathi, Bhamini Pattabhiraman, Jyothsna Bhavanishankar, madhuvanthi.bharathi, mpav...@yahoo.co.in, Rama Ramakrishnan, radha jagan, selvi vetha, tamil ponnu
 
  முதன்முறை உதடு ஒட்டாத கவிதையை எழுதியிருக்கிறேன். 
  இதற்கு முன் இட்ட கவிதையில் ஒரு பிழை இருந்தது.  அதனைத் திருத்தி மறுபடியும் இடுகின்றேன். 
    
எழுத்து

தொலை தூரத்திலிருந்தே 
என்னைத் தாக்கினாய் - ஆதலால் 
நீ ஒரு ஆயுத எழுத்து ;

உன்னை ஓயாது 
சுற்றினேனே - ஆதலால் 
நீ ஒரு வட்டெழுத்து ;

உயிரோடு உறவாடினாயே  - ஆதலால் 
நீ உயிரெழுத்து ;

தலைகீழாக்கினாயே- இனி
நீ தான் தலையெழுத்து ;

யோசித்தேன் - எனக்கு 
நீ தான் துணையெழுத்து ;

கடைசியாக ஒன்று ;

ஒற்று எழுத்தாய் 
உன்னை விடாது 

Siva Siva

unread,
Feb 17, 2012, 4:09:30 PM2/17/12
to santhav...@googlegroups.com
உங்கள் ஆர்வத்தை மெச்சுகிறேன்.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

http://www.tamilvu.org/slet/l0E00/l0E00sel.jsp?x=291
198.
காதையின்ஓ ரெழுத்து,ஒருசொல் வேறுஒவ்வொர் எழுத்தைக்
     கண்டுசொல்லாய்ப் பொருளுறலே எழுத்துவருத் தனமாம்;
ஓதுயிர்மெய் மொழியின்ஒற்றுப் பெயர்க்குங்கால் பொருள் வேறு
     உடையதுஒற்றுப் பெயர்த்தல்,ஒரு கவிமூன்று கவியாய்ப்
போதல்திரி பங்கி;மூன்று எழுத்துஒருசொல் முதல்பின்
     புகல்இடைபின் சேர்ந்துசொற்க ளாந்திரிப தாதி;
பாதம்உ, ஊ, ஒ, ஓ, ஒள, ப, ம, வ, விசை நூற்று
     பத்தொன்பான் எழுத்தில்நிரோட் டகங்கரந் திசையே.  [5]

எழுத்து வருத்தனம், ஒற்றுப்பெயர்த்தல், திரிபங்கி, திரிபதாதி,
நிரோட்டகம் ஆகியவற்றை விளக்குகின்றது.

     உரை : ஓரெழுத்து ஒரு மொழியாய்ப் பொருள் சுட்டி நின்று பின்னர்
ஒரு எழுத்துச் சேர்த்தால் வேறொரு சொல்லாய்ப் பொருள் சுட்டி அமைதலே
எழுத்து வருத்தனம் (எழுத்து வளர்த்தல்) என்று பெயர். சொல்லப்பட்ட
மொழிகளில் உள்ள மெய்யெழுத்துக்களை நீக்கி விட்டால் வேறு பொருள்
தரும்படி அமைப்பது ஒற்றுப் பெயர்த்தல்.

     ஒரு பாட்டாக இருப்பதை மூன்றாகப் பிரித்து எழுத மூன்று பாட்டாக
அமையுமானால் அது திரிபங்கி எனப்படும். மூன்று எழுத்துக்களை உடைய
ஒருசொல் முதல் எழுத்தும் இறுதி எழுத்தும் சேர வேறொரு சொல்லாகவும்
நடு எழுத்தும் இறுதி எழுத்தும் சேர வேறொரு சொல்லாகவும்
அமையுமானால் திரிபதாதி எனப்படும். உ, ஊ, ஒ, ஓ, ஒள ஆகிய ஐந்து
உயிரெழுத்துக்களும், ப, ம, வ, நீங்கிய பதினைந்து மெய்யெழுத்துக்களால்
உண்டான எழுபத்தைந்து
உயிர்மெய் எழுத்துக்களும், (15x5) ப, ம, வ என்ற மூன்று
மெய்யெழுத்துக்களும் இம்மூன்று மெய்யெழுத்துக்களால் உண்டான
முப்பத்தாறு உயிர்மெய் எழுத்துக்களும் சேர்த்து மொத்தம் (5 + 75 + 3 + 36)
119 எழுத்துக்கள் இல்லாமல் பாடுவது நிரோட்டம் என்று அழைக்கப்படும்.

     விளக்கம் : ஒற்றுப் பெயர்த்தலுக்குத் தண்டி உரை தரும் விளக்கம்
வேறு. திரிபதாதி என்பதைத் தண்டி திரிபாகி என்று குறிப்பிட்டுள்ளது.

     நிரோட்டம் என்பது இதழோடு இதழ் ஒட்டாதது என்று பொருள்.



2012/2/17 Niranjan Bharathi <niranjan...@gmail.com>

Subbaier Ramasami

unread,
Feb 17, 2012, 6:17:13 PM2/17/12
to santhav...@googlegroups.com


2012/2/17 Niranjan Bharathi <niranjan...@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

Reply all
Reply to author
Forward
0 new messages