பாண்டியன் போற்றிய பட்டினப்பாலை மண்டபம்

275 views
Skip to first unread message

N. Ganesan

unread,
May 31, 2016, 1:21:31 PM5/31/16
to சந்தவசந்தம், housto...@googlegroups.com, மின்தமிழ், vallamai

பாண்டியன் போற்றிய பட்டினப்பாலை மண்டபம்

By -கி.ஸ்ரீதரன்

 


















பத்துப்பாட்டு' எனும் தொகை நூல்களுள் ஒன்று கடியலூர் உருத்திரங்கண்ணணனார் பாடிய பட்டினப்பாலை. இதில் சோழ நாடு, காவிரி ஆறு, கரிகாலனின் வீரம், வெற்றி, காவிரிப்பூம்பட்டினம், கடல் வணிகம், வாணிகச் சிறப்பு முதலிய பல வரலாற்றுச் செய்திகள் கூறப்பட்டுள்ளன. கடற்கரை ஊரான காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்பு பற்றி பேசுவதால் இது "பட்டினப்பாலை' எனப்பட்டது.

 

இதன் பாட்டுடைத் தலைவன் கரிகாலன் என்பது "சோழன் கரிகாற்பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடியது' எனும் நச்சினார்க்கினியர் உரையால் அறியலாம். சோழ மன்னன் கரிகாலன், பட்டினப்பாலையை இயற்றிய புலவர்க்கு பதினாறு நூறாயிரம் பொன் பரிசு கொடுத்தான் என்பதைக் கலிங்கத்துப்பரணி கூறுகிறது.

""தழுவு செந்தமிழ்ப் பரிசில் வாணர் பொன்

பத்தொடு ஆறு நூறாயிரம் பெறப்

பண்டு பட்டினப்பாலை கொண்டதும்''

 

இது மட்டுமல்ல, பட்டினப்பாலை அரங்கேறிய 16 கால் மண்டபத்தையும் கரிகாலன் பரிசாகக் கொடுத்துவிட்டான். இச்செய்தியை சங்கர சோழன் உலா, தமிழ்விடு தூது, பாண்டி மண்டல சதகப் பாடல்களும் குறிப்பிடுகின்றன.

 

108 வைணவத் தலங்களுள் ஒன்றான திருவெள்ளறை திருக்கோயிலில், "நாழி கேட்டான் வாசல்' எனப்படும் வாயிலின் சுவரில் காணப்படும் கல்வெட்டு தமிழ் இலக்கியத்தைப் போற்றிய அரிய செய்தியைக் கூறுகிறது.

 

சோழ மன்னரது ஆட்சி வலிமைக் குன்றியவுடன் பாண்டிய மன்னர்களில் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (கி.பி.1216-1238) சோழ நாட்டின் மீது படையெடுத்து பெரும் பகுதியை அழித்தான். ஆனால் பட்டினப்பாலை அரங்கேற்றப்பட்டதன் நினைவாக இருந்த 16 கால் மண்டபத்தை அப்படியே விட்டுவிட்டான் பாண்டிய மன்னன் என்பதை கீழ்க்காணும் கல்வெட்டுப் பாடல் கூறுகிறது. இப்பாடலின் வழி, தமிழின்பால் கொண்டிருந்த ஈடுபாட்டின் காரணமாக அம் மண்டபத்தை அழிக்காமல் பெருமை சேர்த்தான் பாண்டிய மன்னன் என்ற உண்மை விளங்குகிறது. பாடல் வருமாறு:

 

""வெறியார் துவளத் தொடைச்செய மாறன் வெகுண்டதொன்றும்

அறியாத செம்பியன் காவிரி நாட்டில் அரமியத்துப்

பறியாத தூணில்லை கண்ணன்செய் பட்டினப் பாலைக்கன்று

நெறியால் விடுந்தூண் பதினாறு மேயங்கு நின்றனவே!''


தினமணியில் தெரிவு: http://nganesan.blogspot.com

N. Ganesan

unread,
Jun 1, 2016, 10:20:22 AM6/1/16
to மின்தமிழ், vallamai, dorai sundaram, Santhavasantham, panb...@googlegroups.com
On Tuesday, May 31, 2016 at 11:01:13 AM UTC-7, dorai sundaram wrote:
அருமையான பதிவு. கல்வெட்டுப்படத்தை என் சேமிப்பில் 
இணைத்துக்கொண்டேன்.
முதல் வரியில் “துளவத்தொடை” என்றுள்ளது.
சுந்தரம்.


சரியாகப் பிடித்துவிட்டீர்கள். தமிழில் மெட்டாதீஸிஸ் உண்டு. மதுரையை மருதை, குதிரையைக் குருதை என்பதுபோல, துளவ என்னும் சொல்லை துவள என்று மாற்றியுள்ளார் தினமணியில் கி. ஸ்ரீதரன் என்னும் கட்டுரையாசிரியர். 

முதலில் ”செந்தமிழ்” (மதுரை), ஆய்விதழ், 41-ஆம் தொகுதியில் அச்சாகியுள்ளது. தி. வை. ச. பண்டாரத்தாரா? சுந்தரேச வாண்டையாரா? - எனப் பார்க்கவேண்டும். ஆனால், அதற்குமுன்பே, ச. வையாபுரிப்பிள்ளை பார்த்துக் கட்டுரை எழுதியுள்ளார். அவர் “தளவத்தொடை” எனப் படித்திருக்கிறார். அதனை எல்லோரும் அப்படியே பின்பற்றியுள்ளார்கள். துளவம் என்றால் துழாய்(=துளசி.
இந்தத் தமிழ்ச் சொல் வடமொழிக்கு தமிழ் தந்தது. கல்வெட்டின் மெய்ப்படி காட்டும் சொல் துளவம் தான்.  தளவு/தளா என்றெல்லாம் சங்க இலக்கியம் குறிப்பிடும் தளவம் முல்லைப்பூக்களாகும்.
துளவம் பச்சை நிற இலை. தளவம் = வெண்மையான பூ. தளவம் மெட்டாதீஸீஸ் ஆகி தவளம் என்ற சொல்லாக வடமொழிக்குத் த்ராவிடமொழியில் இருந்து சென்றிருக்கிறது என எண்ணுகிறேன்:
ஆடுமாடு என்ற மரபுத்தொடர் போல, காடைகவுதாரி என்கிறோம். காடை = Quails, கவுதாரி = Partridges. கதுவாலி என்னும் பழந்தமிழ்ப் பெயர் கவுதாரி என்று metathesis ஆகிவிட்டது.லாகவம் > லாவகம், புழைக்கடை > புடக்காளி (கொங்குவழக்கு) ..... தளவம் என்றால் முல்லை இனங்கள். தமிழ்நாட்டில் ஒரு 30+ வகை முல்லைச் செடிகள் உண்டு. எல்லா முல்லைப் பூவும் பூத்தபின் வெண்மை நிறம்தான். வடமொழியில் தவளம் என்றால் வெண்மை, தளவம் (தளா, தளவு என்றெல்லாம் தளவம் சங்கத் தமிழில் சொல்லப்பட்டுள்ளது) metathesis  ஆகி தவளம் என்று வடமொழியில் பயில்கிறது என்று குறிப்பிட்டேன். மெய்ர்ஹாப்ர் குறிப்பிடும் சொற்பிறப்பை விட இந்த கருதுகோள் சிறப்பு என்றார் அசோகன் பார்ப்போலா (சிந்து ஆய்வுப் பேராசிரியர், ஃபின்லாந்து).

  கட்டளைக் கலித்துறை (திருவெள்ளறைக் கல்வெட்டுச் செய்யுள்):

"வெறியார் துளவத் தொடைச்செய மாறன் வெகுண்டதொன்றும்

அறியாத செம்பியன் காவிரி நாட்டில் அரமியத்துப்

பறியாத தூணில்லை கண்ணன்செய் பட்டினப் பாலைக்கன்று

நெறியால் விடுந்தூண் பதினாறு மேயங்கு நின்றனவே!”


அரிய இந்தப் பாட்டுக்கு 20-ஆம் நூற்றாண்டு ஆசிரியர்கள் என்ன எழுதியுளர் எனப் பார்ப்போம்.

நா. கணேசன்

 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Jun 2, 2016, 10:42:20 AM6/2/16
to மின்தமிழ், vallamai, Santhavasantham, housto...@googlegroups.com, panb...@googlegroups.com, pira...@googlegroups.com
On Thursday, June 2, 2016 at 2:58:06 AM UTC-7, Sivaramakrishnan Siva wrote:
அற்புதமான   பகிர்வு......மிக்க   நன்றி.

நன்றி, சிவராமகிருஷ்ணன். கட்டளைக் கலித்துறைப் பாவின் சரியான பாடம், “வெறியார் துளவத் தொடை” எனப் பாடல் தொடங்குவது
கல்வெட்டின் மெய்ப்படியைப் பார்த்ததால் தெரிகிறது. அதனை விளக்கவே இவ்விழை. திருவெள்ளறையில் ‘மதுரையை மீட்ட
சுந்தரபாண்டியன்’ புகழைப் பாடின புலவர் ஏன் துழாய் மாலையைச் சொல்கிறார் என்றால் திருவெள்ளறைப் பாசுரங்களில்
10 மலர்கள் சொல்லப்படுவதால் ஆகும். என்ன மலரென்றாலும், துளவம் பெருமாளுக்கே உரியதன்றோ? மகாவீரருக்கு அசோகு,
புத்தருக்கு அரசு, ஆதிநாதருக்கு ஆல், பார்சுவநாதருக்கு ஆத்தி (சமணக் குரத்தி ஔவை ஆத்திசூடி என்கிறார்), சிவனுக்குக் கொன்றை, முருகனுக்குக் கடம்பு, கணபதிக்கு அறுகு,
கொற்றவைக்கு வாகை, .... போல விஷ்ணுவுக்கு துளசி தானே. ராஜா விஷ்ணு ரூபேன - என்பதுபோன்ற வேத வாக்கியம் உண்டு,
திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே - ஆழ்வார். பரம வைஷ்ணவனாக சுந்தரபாண்டியன் இருந்திருக்கவேண்டும்.
திருவரங்கத்துக்குப் பெருந்திருப்பணி ஆற்றியவன் அவன். பெருமாளாகவே கல்வெட்டுப் பாடலில் பார்ப்பது “துளவம்” என்ற சொல்லால்தான்
துலக்கமடைகிறது.
 
இக் கல்வெட்டினை முதலில் படித்துக் கட்டுரை எழுதினவர் பேரா. ச. வையாபுரிப்பிள்ளையவர்கள். தமிழ் லெக்ஸிகான் தயாரித்தவர்களில் முக்கியமானவர்.
அப்போது, கல்வெட்டை தேய்த்துக் கழுவி மெய்ப்படி இங்க்கில் எடுக்கவில்லை போலும். மேலோட்டமாகப் பார்த்தபோது “வெறியார் தளவம்” என எழுதிவிட்டார்.
அவர் கட்டுரையை இணைக்கிறேன். எழுதிய பின்னர், இலக்கியதீபம் என்னும் அவரது நூலில் கோக்கப்பட்ட கட்டுரை இஃது. தினமணியில்
கி. ஸ்ரீதரன் துளவத்தை ’துவள’ என இடவலமாற்றம் (மெட்டாதீஸிஸ்) செய்துவிட்டார்! வையாபுரிப்பிள்ளை கட்டுரையால் இப்பாடலில் தளவம் என
மா. ராசமாணிக்கனார், மயிலை சீனி. வேங்கடசாமி, .... அப்படியே எழுதிவிட்டனர். துளவம் என்பதுதான் கல்வெட்டில் உள்ளது எனக் கல்வெட்டின் ஒளிப்படம்
நன்கு காட்டுகிறது.  

பேரா. ச. வையாபுரிப்பிள்ளை கட்டுரை - இலக்கியதீபம் (ப்ராஜெக்ட் மதுரை). An essay written well before this inscriptional verse was publsihed in Centamiz, Journal of the Madurai Tamil Sangam. ~NG


5. பாலையின் அரங்கேற்று மண்டபம்

பட்டினப்பாலை என்பது பத்துப்பாட்டு என்னும் தொகுதியில் ஒன்பதாவது செய்யுள். இதன் பாட்டுடைத் தலைவன் சோழன் கரிகாற் பெருவளத்தான். இதனைப் பாடியவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார். இது 301 அடிகளாலாயது. இந்நூலின் பெருமையைப் பாட்டுடைத் தலைவனாகிய கரிகாலன் உணர்ந்து 16-கோடிப்பொன் கண்ணனாருக்கு அளித்தான் என்று சொல்லப்படுகிறது.
    தத்து நீர்வரால் குருமி வென்றதும்

    தழுவு செந்தமிழ்ப் பரிசில் வாணர்பொன்
    பத்தொ டாறுநூ றாயி ரம்பெறப்
    பண்டு பட்டினப் பாலை கொண்டதும் (இராச-21)
என்று கலிங்கத்துப் பரணி கூறும். சங்கர சோழன் உலாவிலும்,
    பாடிய பாக்கொண்டு பண்டு பதினாறு
    கோடி பசும்பொன் கொடுதோனும் (10)
என இச்செய்தி குறிக்கப்பட்டுள்ளது. பிற்காலத்ததாகிய தமிழ்விடு தூதும்,
    பாடியதோர் வஞ்சிநெடும் பாட்டால் பதினாறு
    கோடிபொன் கொண்டதுநின் கொற்றமே
என்று கூறுகிறது. இவ்வொரு செய்தியே இதுவரை அறியப்பட்டது. இப்பொழுது புதுச் செய்தி ஒன்று ஒரு சாசனத்தால் வெளியாகின்றது. பட்டினப்பாலையை அரங்கேற்றுவதற்குப் பதினாறு தூண்கள் அமைந்த பெரிய மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது என ஓர் சாசனச் செய்யுள் தெரிவிக்கிறது. அச்செய்யுள் வருமாறு:
    வெறியார் தளவத் தொடைச்செய மாறன் வெகுண்ட தொன்றும்
    அறியாத செம்பியன் காவிரி நாட்டிலரமியத்துப்

    பறியாத தூணில்லை கண்ணன்செய் பட்டினப் பாலைக்கன்று
    நெறியால் விடுந்தூண் பதினாறு மேயங்கு நின்றனவே.
இச்சாசனம் திருச்சி ஜில்லாவிலுள்ள திருவெள்ளறையில் செதுக்கப்பட்டுள்ளது. இன்றுகாறும் இது வெளியிடப்படாதது. இதில் சுந்தர பாண்டியனுக்கும் மூன்றாம் ராஜ ராஜனுக்கும் நிகழ்ந்த போர் ஒன்று கூறப்பட்டுள்ளது என்பது சரித ஆராய்ச்சியாளர் கருத்து.

இச்செய்யுளில் கண்ணன் என்றது கடியலூர் உருத்திரங் கண்ணனாரை. அரமியம் என்றது அரண்மனை முற்றத்தை. இங்குக் குறித்த போர் நிகழ்ச்சியால் அரண்மனைப் பகுதிகளில் பதினாறு கால் மண்டபம் ஒன்று தவிர ஏனைய அனைத்தும் அழிவுற்றன. மிகப் பூர்வகாலத்தே பட்டினப்பாலை அரங்கேறிய மண்டபம் ஆதலாலும், அதற்கு அழிவு செய்யின் தமிழிலக்கிய ஞாபகச் சின்னமொன்றினை அழித்ததாக முடியும் ஆதலாலும், அது அழியாது பாது காக்கப் பட்டது போலும்! இதனால் தமிழிலக்கியச் சின்னங்களை நம் மூதாதையர் எவ்வாறு போற்றிவந்தனர் என்பது விளங்கும்.

இனி, பட்டினப்பாலைக்கும் பதினாறு என்ற தொகைக்கும் ஓர் இயைபு இருத்தல் நோக்கத்தக்கது. பதினாறு கோடிப் பொன் இந்நூற்குப் பரிசிலாக வழங்கப்பட்ட தென்பது வரலாறு. பதினாறு தூண்களுள்ள ஒரு மண்டபத்தின்கண் இந்நூல் அரங்கேற்றப்பட்ட தென்பது இச்சாசனத்தால் புதுவதாக அறியப்படும் வரலாறு. ஒருகால் பதினாறு கோணங்களிலும் தூண்கள் நிறுவி, ஒவ்வொரு தூணிலும் சில பொற்காசுகளைத் தூக்கியிட்டு, பதினாறு கோடிப் பொன் என அவற்றை வழங்கினர் என்று நாம் கொள்ளலாம். இங்கு, பதினாறு கோடிப்பொன் என வந்துள்ளதும், பதிற்றுப்பத்தில் காப்பி யாற்றுக் காப்பியனாருக்கு 40-நூறாயிரம் பொன்னும், காக்கைபாடினியார் நச்செள்ளை யாருகு 9-துலாம் பொன்னும் நூறாயிரம் பொற்காசும், கபிலருக்கு நூறாயிரம் பொற்காசும், அரிசில் கிழாருக்கு ஒன்பது நூறாயிரம் பொற்காசும், பெருங்குன் றூர்கிழாருக்கு 32-ஆயிரம் பொற்காசும் பரிசிலாக அளிக்கப்பட்டன என வந்துள்ளனவும் உயர்வு நவிற்சி என்றே நாம் கொள்ளுதல் வேண்டும். இராச ராஜன்உலாவின் கண்ணிதோறும் ஆயிரம் பொன் சொரிந்ததாகக் கூறுவதும் உயர்வு நவிற்சியாகவே கொள்ளத்தக்கது.
    தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயந்தெரி வார் (குறள், 104)
என்ற திருக்குறளைப் பின்பற்றி இவ்வாறு புனைந்து கூறினார்கள்போலும்! அன்றியும் ஒவ்வொரு சிற்றரசனும் தன் நாட்டிலுள்ள யானை முதலியவற்றை முற்காலத்தில் பரிசிலாக வழங்கிவந்தனன். இதற்கு மாறாக பொன்னை வழங்கத் தொடங்கியது புலவர்களுக்கு எத்தனையோ அருமையாகத் தோன்றி யிருத்தல் வேண்டும். இவ்வருமைப் பாட்டினைத் தெரிவித்ததற்கு இவ்வுயர்வு நவிற்சி ஆளப்பட்டது எனக் கொள்ளுதலும் தகும்.

இது எவ்வாறாயினும், மேற் குறித்த சாசனச் செய்யுள் ஓர் அரிய இலக்கிய வரலாற்றை உணர்த்துகின்றது என்பதற்கு ஐயமில்லை.




2016-06-01 19:50 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
On Tuesday, May 31, 2016 at 11:01:13 AM UTC-7, dorai sundaram wrote:
அருமையான பதிவு. கல்வெட்டுப்படத்தை என் சேமிப்பில் 
இணைத்துக்கொண்டேன்.
முதல் வரியில் “துளவத்தொடை” என்றுள்ளது.
சுந்தரம்.


சரியாகப் பிடித்துவிட்டீர்கள். தமிழில் மெட்டாதீஸிஸ் உண்டு. மதுரையை மருதை, குதிரையைக் குருதை என்பதுபோல, துளவ என்னும் சொல்லை துவள என்று மாற்றியுள்ளார் தினமணியில் கி. ஸ்ரீதரன் என்னும் கட்டுரையாசிரியர். 

முதலில் ”செந்தமிழ்” (மதுரை), ஆய்விதழ், 41-ஆம் தொகுதியில் அச்சாகியுள்ளது. தி. வை. ச. பண்டாரத்தாரா? சுந்தரேச வாண்டையாரா? - எனப் பார்க்கவேண்டும். ஆனால், அதற்குமுன்பே, ச. வையாபுரிப்பிள்ளை பார்த்துக் கட்டுரை எழுதியுள்ளார். அவர் “தளவத்தொடை” எனப் படித்திருக்கிறார். அதனை எல்லோரும் அப்படியே பின்பற்றியுள்ளார்கள். துளவம் என்றால் துழாய்(=துளசி.
இந்தத் தமிழ்ச் சொல் வடமொழிக்கு தமிழ் தந்தது. கல்வெட்டின் மெய்ப்படி காட்டும் சொல் துளவம் தான்.  தளவு/தளா என்றெல்லாம் சங்க இலக்கியம் குறிப்பிடும் தளவம் முல்லைப்பூக்களாகும்.
துளவம் பச்சை நிற இலை. தளவம் = வெண்மையான பூ. தளவம் மெட்டாதீஸீஸ் ஆகி தவளம் என்ற சொல்லாக வடமொழிக்குத் த்ராவிடமொழியில் இருந்து சென்றிருக்கிறது என எண்ணுகிறேன்:
ஆடுமாடு என்ற மரபுத்தொடர் போல, காடைகவுதாரி என்கிறோம். காடை = Quails, கவுதாரி = Partridges. கதுவாலி என்னும் பழந்தமிழ்ப் பெயர் கவுதாரி என்று metathesis ஆகிவிட்டது.லாகவம் > லாவகம், புழைக்கடை > புடக்காளி (கொங்குவழக்கு) ..... தளவம் என்றால் முல்லை இனங்கள். தமிழ்நாட்டில் ஒரு 30+ வகை முல்லைச் செடிகள் உண்டு. எல்லா முல்லைப் பூவும் பூத்தபின் வெண்மை நிறம்தான். வடமொழியில் தவளம் என்றால் வெண்மை, தளவம் (தளா, தளவு என்றெல்லாம் தளவம் சங்கத் தமிழில் சொல்லப்பட்டுள்ளது) metathesis  ஆகி தவளம் என்று வடமொழியில் பயில்கிறது என்று குறிப்பிட்டேன். மெய்ர்ஹாப்ர் குறிப்பிடும் சொற்பிறப்பை விட இந்த கருதுகோள் சிறப்பு என்றார் அசோகன் பார்ப்போலா (சிந்து ஆய்வுப் பேராசிரியர், ஃபின்லாந்து).

  கட்டளைக் கலித்துறை (திருவெள்ளறைக் கல்வெட்டுச் செய்யுள்):

"வெறியார் துளவத் தொடைச்செய மாறன் வெகுண்டதொன்றும்

அறியாத செம்பியன் காவிரி நாட்டில் அரமியத்துப்

பறியாத தூணில்லை கண்ணன்செய் பட்டினப் பாலைக்கன்று

நெறியால் விடுந்தூண் பதினாறு மேயங்கு நின்றனவே!”


அரிய இந்தப் பாட்டுக்கு 20-ஆம் நூற்றாண்டு ஆசிரியர்கள் என்ன எழுதியுளர் எனப் பார்ப்போம்.

நா. கணேசன்

 
2016-05-31 22:51 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:

பாண்டியன் போற்றிய பட்டினப்பாலை மண்டபம்

By -கி.ஸ்ரீதரன்

 


















தினமணியில் தெரிவு: http://nganesan.blogspot.com

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
Reply all
Reply to author
Forward
0 new messages