தொழிலதிபர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம்

278 views
Skip to first unread message

Pas Pasupathy

unread,
Oct 2, 2014, 10:07:19 AM10/2/14
to Santhavasantham

தொழிலதிபர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம் காலமானார்

By Sriram Senkottai, சென்னை

First Published : 02 October 2014 07:16 PM IST

தொழிலதிபரும் வள்ளலார் அன்பரும் காந்தியவாதியுமான பொள்ளாச்சி நா.மகாலிங்கம் இன்று சென்னையில் காலமானார்.

91 வயதாகும் பொள்ளாச்சி நா.மகாலிங்கம், சென்னையில் வள்ளலார் குறித்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிக் கொண்டிருந்தபோது அவரது உயிர் பிரிந்தது.

மறைந்த பொள்ளாச்சி நா.மகாலிங்கம், சக்தி குழும நிறுவனங்களின் தலைவர். இவருக்கு 2007ல் பத்ம பூஷன் விருது வழங்கி பாரத அரசு கௌரவித்தது. தமிழக சட்டப் பேரவை உறுப்பினராக 3 முறை இருந்துள்ளார். 15 ஆண்டுக் காலம் அவர் சட்டப்பேரவை உறுப்பினராக சேவை புரிந்துள்ளார். காந்தியத்தை வாழ்வின் லட்சியமாகக் கொண்டிருந்தவர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம். மேலும், வள்ளலார் மார்க்கமான சுத்த சமரஸ சன்மார்க்கத்துக்காக பல அளப்பரிய பணிகளைச் செய்துள்ளார். அவர் காந்தி ஜயந்தியான அக்.2ம் நாளில், வள்ளலார் நிகழ்ச்சியில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது அவர் உயிர் பிரிந்துள்ளது.



--

N. Ganesan

unread,
Oct 2, 2014, 10:18:50 AM10/2/14
to santhav...@googlegroups.com, மின்தமிழ், vallamai, panb...@googlegroups.com
On Thursday, October 2, 2014 7:07:19 AM UTC-7, பசுபதி wrote:

தொழிலதிபர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம் காலமானார்


இப்பொழுதுதான் கேள்விப்பட்டேன் ஊரிலிருந்து.

தமிழ் இசை இலக்கண நூலாம் பஞ்சமரபு,
ஔவை துரைசாமிப் பிள்ளையின் திருவருட்பா உரை, ...
ஆதரித்த புரவலர் மறைந்து விட்டார்.

அடியார்க்குநல்லார் கொங்கின் தமிழ்ப்புரவலன்
பொப்பண காங்கேயனையும், வில்லிபுத்தூரார்
கொங்கர்கோன் ஆட்கொண்டானையும்,
எம்பெருமான் கவிராயர் கம்பன் வழிநூலாக
தக்கை ராமாயணம் பாடுவித்த மோரூர் நல்லதம்பியையும்
பாடிய பாக்கள் நினைவுக்கு வருகின்றன.


நா. கணேசன்

Dr Subramanian

unread,
Oct 2, 2014, 10:24:17 AM10/2/14
to santhav...@googlegroups.com
A very sad news. A true Gandhian-left this mortal world to join his leader. My deep condolences to the bereaved family and a host of his well-wishers and admirers
vavesu 

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
Dr.V.V.Subramanian
Director,Phycospectrum Environmental Research Centre (PERC)
( A Unit of Phycospectrum Inc:)
52A,AK Block,7th Main Road,
Annanagar. Chennai, 600040
Managing Editor,
Journal of Algal Biomass Utilization (JABU): ISSN: 2229 – 6905 
http://jalgalbiomass.com
President ,IBA-Indian Biomass Association (Regd)
President, KIA,Chennai (Regd)
Off: 044-26208896 Res: 044-24748674
Mobile: 9381044470
Skype ID vavesu1

VETTAI ANANTHANARAYANAN

unread,
Oct 2, 2014, 10:27:02 AM10/2/14
to சந்தவசந்தம்
தமிழுக்கும் ஆன்மிகத்திற்கும் இது  மிகப்பெரிய இழப்பு.

அனந்த்

2014-10-02 10:07 GMT-04:00 Pas Pasupathy <pas.pa...@gmail.com>:

Subbaier Ramasami

unread,
Oct 2, 2014, 10:38:29 AM10/2/14
to சந்தவசந்தம்
வள்ளலார் காந்தி விழா வருடாவருடம் கொண்டாடுவார். நான் அவர் நடத்திய பல விழாக்களில் கலந்துகொண்டிருக்கிறேன். அவரது அழைப்பை ஏற்று பொள்ளாச்சி கோயம்பத்தூர்  வடலூர் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறேன். 
எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் 
செல்வர்க்கே செல்வம் தகைத்து  என்னும் குறளுக்கேற்ப வாழ்ந்தவர்.    பல தமிழ் இலக்கிய வெளியீடுகள் சலுகை விலையில் கிடைக்கப் பண உதவி செய்தவர்

நிறைவாழ்வு வாழ்ந்தவர்.  அவர் ஆன்மா இறையடி நீழலில் தங்குக1

இலந்தை

Ka Thamizhamallan

unread,
Oct 2, 2014, 11:49:11 AM10/2/14
to santhavasantham
ஆழ்ந்த இரங்கல்

2 அக்டோபர், 2014 8:08 பிற்பகல் அன்று, Subbaier Ramasami <elan...@gmail.com> எழுதியது:

M. Viswanathan

unread,
Oct 2, 2014, 11:51:46 AM10/2/14
to Santhavasantham
இறையுணர்வும், தேசபக்தியும் நிறைந்த காந்தியவாதி. வள்ளல் குணம் மிக்க பண்பாளர். அருமையான பல நூல்கள் அனைவருக்கும் மலிவுவிலையில் கிடைக்கச் செய்த கல்வியாளர் அருட் செல்வர் திரு.நா.மகாலிங்கம் அவர்களின் மறைவு பேரிழப்புதான்.அவரது ஆன்மா சாந்தி பெற இறைவனை வேண்டுகிறேன்.

மீ.விசுவநாதன்

Subbaraman NV

unread,
Oct 2, 2014, 7:20:19 PM10/2/14
to santhav...@googlegroups.com
A great loss to the humanity.May his soul rest in peace.
As a part of LIC of India , Coimbatore Division, in connection with the Insurance Week, I had the pleasure of inviting Shri Mahalingam ; he donated blood in our blood donation camp and thus inaugurated the camp and gave a wonderful speech bringing in Mahatma Gandhi and Vallalar.How fresh and green is that occasion in my mind! It was on 7th September 1970!- 44 years ago!
It is in the fitness of things that he should have taken leave of this world on Gandhi jayanthi day while speaking on Vallalar.His white khadi dhoti and shirt with towel stand in our mind.

N V Subbaraman
N V Subbaraman,
Editor, Young Poet,
12 / 1045 Jeevan Bhima Nagar,
Chennai - 600101

Visit http://www.youngpoet.org
Visit http://www.poemhunter.com/subbaraman-n-v/

Siva Siva

unread,
Oct 2, 2014, 9:33:36 PM10/2/14
to santhavasantham
Pollachi Mahalingam has set an excellent example of how to lead a fulfilling life!
May his life inspire others to emulate it!





2014-10-02 10:07 GMT-04:00 Pas Pasupathy <pas.pa...@gmail.com>:

N. Ganesan

unread,
Oct 2, 2014, 10:26:01 PM10/2/14
to santhav...@googlegroups.com, vallamai, housto...@googlegroups.com, mintamil


On Thursday, October 2, 2014 8:49:11 AM UTC-7, mallan wrote:
ஆழ்ந்த இரங்கல்

2 அக்டோபர், 2014 8:08 பிற்பகல் அன்று, Subbaier Ramasami <elan...@gmail.com> எழுதியது:
வள்ளலார் காந்தி விழா வருடாவருடம் கொண்டாடுவார். நான் அவர் நடத்திய பல விழாக்களில் கலந்துகொண்டிருக்கிறேன். அவரது அழைப்பை ஏற்று பொள்ளாச்சி கோயம்பத்தூர்  வடலூர் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறேன். 
எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் 
செல்வர்க்கே செல்வம் தகைத்து  என்னும் குறளுக்கேற்ப வாழ்ந்தவர்.    பல தமிழ் இலக்கிய வெளியீடுகள் சலுகை விலையில் கிடைக்கப் பண உதவி செய்தவர்

நிறைவாழ்வு வாழ்ந்தவர்.  அவர் ஆன்மா இறையடி நீழலில் தங்குக1

இலந்தை

2014-10-02 19:56 GMT+05:30 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>:
தமிழுக்கும் ஆன்மிகத்திற்கும் இது  மிகப்பெரிய இழப்பு.

அனந்த்

2014-10-02 10:07 GMT-04:00 Pas Pasupathy <pas.pa...@gmail.com>:

தொழிலதிபர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம் காலமானார்


மகாலிங்கம்... பொள்ளாச்சியின் ஆலமரம்!
தமிழகத்தில் இல்லை... தரணியிலே எந்த ஊரிலும் யாரோ ஒருவர், இந்த ஊரைப் பற்றி பேச ஆரம்பித்து பொள்ளாச்சி என்றவுடனே அடுத்ததாக அவரது வாயில் அனிச்சையாக ஒரு வார்த்தை வந்து ஒட்டிக்கொள்ளும்.. .அதுதான் மகாலிங்கம். தான் பிறந்த மண்ணின் பெயரையும் தன்னுடைய பெயரோடு தாங்கி, அதற்கும் பெருமை சேர்த்த மாமனிதர். நம் நாட்டின் சுதந்திரத்துக்குப் பின், தொழில் துவங்குவதற்கு, மத்திய அரசு அழைப்பு விடுத்தபோது, தொழில் முனைவோராக தன்னைத் தயார் படுத்திக்கொண்டு, பல்வேறு தொழில்களிலும் பாதம் பதித்தார். தொழில் மீதிருந்த ஈடுபாடும், பலருக்கு வேலைவாய்ப்பு தர வேண்டுமென்ற ஆர்வமும், அவரை மெல்ல மெல்ல தொழில் அதிபராத அவரை உருவேற்றியது. சக்தி சர்க்கரை ஆலை, சக்தி மென்பானங்கள், சக்தி சோயா ஆலை, சக்தி ஆட்டோமொபைல்ஸ், சக்தி பைனான்ஸ், ஏபிடி டிரான்ஸ்போர்ட், ஏபிடி பார்சல் சர்வீஸ்....என அவரது தொழில் சக்தி, பெரும் சாம்ராஜ்யமாக விரிவடைந்தது. சக்தி குழுமங்களின் தலைவராக இருந்து, அவற்றை அடுத்தடுத்த கட்டங்களுக்குக் கொண்டு சென்ற அவரது உழைப்பு, தேசிய அளவில் அவரை சேவை மனப்பான்மையுள்ள தொழிலதிபராக அடையாளப்படுத்தியது. காங்கிரசில் தன்னை இணைத்துக்கொண்ட மகாலிங்கம், 1952லிருந்து 1967 வரையிலான 3 சட்டமன்றத் தேர்தல்களில், தொடர்ந்து வெற்றி பெற்று, பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினராக சிறப்பாகப் பணியாற்றினார். தனது அரசியல் செல்வாக்கைப் பயன் படுத்தி, மக்களுக்கு மாபெரும் சேவை புரிந்தார். தேசத்தின் நிதியமைச்சராக சிறப்பாகப் பணியாற்றி, தமிழகத்திற்கு பெருமை சேர்த்த சி.சுப்ரமணியம், இவரது அரசியல் வழிகாட்டி. ஆன்மிக வாழ்விலும் சிறந்து விளங்கியவர் மகாலிங்கம். வள்ளலாரின் அறநெறிகளில் ஆழ்ந்த ஈடுபாடு காட்டியவர். சச்சிதானந்தா சுவாமிகளிடம் மிகவும் நெருக்கமாக இருந்த அவர், சுவாமிகளின் யோகா மகத்துவத்தை அமெரிக்கா மக்களும் உணரும் வகையில், அங்கும் யோகா மையங்களை உருவாக்கவும், விர்ஜினியாவில் தாமரை ஆலயம் அமைக்கவும் பல விதங்களிலும் உதவினார். ஆழியாறு பகுதியில் அழகான அறிவுத்திருக்கோவிலை உருவாக்க, வேதாத்திரி மகரிஷிக்கு அந்த நிலத்தை தானமாக வழங்கியவரும் அவரே. அரசியல், ஆன்மிகம், சமூகம் மற்றும் தொழில் சார்ந்து அவர் செய்த சேவைகளைப் பற்றி பல புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன. அவரும் ஏராளமான புத்தகங்களை எழுதியுள்ளார். தாய் வழிக் கல்வியை அழுத்தமாக வலியுறுத்தியவர்; ஆராய்ச்சிப் படிப்பு வரையிலும், தாய் மொழியிலான கல்வியைக் கொண்டு வர வேண்டுமென்றார். மேல்நிலைக் கல்வி பயிலும் போதே, தொழில் பயிற்சியையும் வழங்க வேண்டுமென்பதை, மீண்டும் மீண்டும் வற்புறுத்திச் சொன்னார். வெறும் வார்த்தைகளில் சொன்னதோடு நிற்காமல், தொழிற்கல்வி பாடத்திட்டத்துடன் கூடிய மேல்நிலைப்பள்ளியை உருவாக்கினார். இந்திரா காந்தி தேசிய ஒருமைப்பாட்டு விருது உட்பட பல விருதுகள் அவரைக் கவுரவித்துள்ளன; அவற்றில், தலை சிறந்தது, கடந்த 2007 ம் ஆண்டில், மத்திய அரசால் வழங்கப்பட்ட பத்மபூஷண் விருது.

வரலாறு படைக்கும் வாரிசுகள்! பொள்ளாச்சி மகாலிங்கத்தின் மனைவி மாரியம்மாள் 86. மகள் கருணாம்பாள், இவரது கணவர் கிருஷ்ணராஜ் வானவராயர்; மகன்கள் மாணிக்கம், பாலசுப்ரமணியம், சீனிவாசன் ஆகியோர். இவர்களனைவரும், தமிழகத்தில் மட்டுமின்றி கர்நாடகா உட்பட வெளிமாநிலங்களிலும், வெளி நாடுகளிலும் தங்களது தொழில் சாம்ராஜ்யத்தை விரிவு படுத்தியுள்ளனர்.

கிடைத்ததை மறுத்தவர்! இன்றைக்கு பல ஆயிரம் கோடிகள் புரளும், மது பான ஆலை அமைப்பதற்கான வாய்ப்பும், அழைப்பும் கிடைத்தும், மக்கள் நலன் மீதான அக்கறையாலும், வள்ளலார் கொள்கைகளில் காட்டிய ஈடுபாட்டினாலும் அதை மறுத்தவர் பொள்ளாச்சி மகாலிங்கம்.

பத்மபூஷண் விருது: இந்திரா காந்தி தேசிய ஒருமைப்பாட்டு விருது உட்பட பல விருதுகள் அவரைக் கவுரவித்துள்ளன; அவற்றில், தலை சிறந்தது, கடந்த 2007ம் ஆண்டில், மத்திய அரசால் வழங்கப்பட்ட பத்மபூஷண் விருது.

கல்விச்சேவையில்...: மகாலிங்கம் அவரது கல்விச்சேவை, அளவிடற்கரியது. கோவையில் குமரகுரு தொழில் நுட்பக் கல்லூரி, பொள்ளாச்சியில் டாக்டர் மகாலிங்கம் பொறியியல் கல்லூரி, என்.ஜி.எம்.,கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நாச்சிமுத்து பாலிடெக்னிக் மற்றும் பல பள்ளிகளை அவர் துவங்கி, அவரது குடும்பத்தாரால் நடத்தப்படுகின்றன.

சோகத்தில் பொள்ளாச்சி மக்கள்: சென்னையில் நேற்று காலமான பொள்ளாச்சி தொழிலதிபர் மகாலிங்கத்தின் உடல் இன்று காலை பொள்ளாச்சியில் நாச்சிமுத்து கவுண்டர் வீதியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. மகாலிங்கம் மறைந்த செய்தி கேட்டதும், பொள்ளாச்சி மற்றும் இதன் சுற்றுப்புற பகுதிகளில் வசிக்கும் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால், நேற்றிரவு முதலே அவரது இல்லத்திற்கு கவலையுடன் சென்று வந்தனர். 

Kaviyogi Vedham

unread,
Oct 3, 2014, 12:14:36 AM10/3/14
to santhavasantham
 ஓ.. கடவுளே!.. உனக்குப்பிரியமான நல்ல அன்பர்களையெல்லாம் நீ எடுத்துக்கொண்டு
 எங்களுக்குத் துன்பம் செயும் மாக்களை எம்மிடமே விடுகிறாயே? என்ன நியாயம்?
 பொள்ளாச்சி மகாலிங்கம் ஐயா தலைமையில் இரண்டு தடவை கவிப்பொழிவும், வேதாத்ரி ஸ்வாமி முன்னிலையில் திருவான்மியூரில் சொற்பொழிவும் நிகழ்த்திய் அந்நாளை நினைத்துப்பார்க்கிறேன்.. நல்லறம் பற்றியும், ஸ்வாமிகள் பற்றியும் சொன்ன சில அற்புத வரிகளைக்கேட்டவுடனே எழுந்து தனக்குப்போர்த்திய விலையுயர்ந்த பட்டாடையை எனக்கு அணிவித்த அந்த நல்ல உள்ளம், கருணை வெள்ளம் இப்போது என் கண்ணை நனைக்கிறது.
 அன்னார், காந்தியின் உண்மைதாசர் நாமம் வாழ்க என அஞ்சலி செலுத்துகின்றேன்!
 யோகியார்

வாழ்க அனைவரும் வளமுடனே 
என் குருஜி லஹரி பாபாஜி
ஆசியினால்.
கவியோகி வேதம்(kaviyogi vedham)-
PL. visit my blog(for my poems etc)at http;//kaviyogi-vedham.blogspot.com/
kaviyogi vedham(yogiyaar)தலைவர்..
Founder, Sree Laharibabaji yogasram,
2/682, 10th cross St,...Renga reddy garden,
Neelankarai, Chennai-600115--செல் எண் 95000-88528
 

Pas Pasupathy

unread,
Oct 3, 2014, 8:32:36 PM10/3/14
to Santhavasantham
அருட்செல்வரைப் பற்றிய 

தினமணித் தலையங்கம்


--

Pas Pasupathy

unread,
Oct 3, 2014, 8:36:42 PM10/3/14
to Santhavasantham
பொள்ளாச்சி வள்ளலும் போய்ச்சேர்ந்தார்…

இசைக்கவி ரமணனின் கவிதை

Kaviyogi Vedham

unread,
Oct 4, 2014, 1:11:51 AM10/4/14
to santhavasantham, Ramanan Isaikkavi, Chandar subramanian, sudhavedham2008 sudhavedham2008
ஏன் நேரடியாகவே இவண் இடக்கூடாதா?..(yogiyaar)
*******************************இதோ ரமணன் கவி..
 பொள்ளாச்சி வள்ளலும் போய்ச்சேர்ந்தார்…

காந்தியைப் போற்றி, வள்ளல்

கருணையைப் பற்றி வாழ்ந்தார்

காலமெல் லாம்தமிழ்க்

காவலே சேவையாக

ஏந்திய கையெதற்கும்

இல்லையென் னாம லீந்தார்

இறுதிவரை சுறுசுறுப்பாய்

இனிமையாய் வாழ்ந்துவந்தார்

சாந்திதான் பெறுவார், அஃதில்

சந்தேகம் இல்லை, ஆனால்

தமிழ்ச்சபை களையிழந்து

தளர்ந்துதான் போயிருக்கும்

 

அண்ணலைப் பார்க்கவேண்டி

அண்ணல்தான் அழைத்தாரோ? நம்

வள்ளலைக் காணவேண்டி

வள்ளல்தான் வாவென்றாரோ?

கண்ணுக்குக் கண்ணாய் நின்ற

சமுதாய ரத்தினத்தைக்

கண்ணற்ற காலன் வெளவிக்

கவர்ந்துசென் றானோ ஏதோ?

ஊராண்ட மன்னவர்கள்

உலகிலே காணா உச்சி

உழைப்பாலும் வண்மையாலும்

தொட்டதே நம்பொள்ளாச்சி

பாராண்ட தலைவரெல்லாம்

பண்பாளர் முன்னே என்னே?

பைந்தமிழ்த் தேனியெங்கோ

பறந்தோடிச் சென்றதம்மா!

 

நீரோடும் கண்களோடும்

நினைவற்ற நெஞ்சினோடும்

தேரோடும் தெருவிலெங்கும்

திரண்டுள்ள மக்களோடும்

ஓரோரம் நானும் நின்றே

உயிராற வணங்குகின்றேன்

உயர்ந்தாரைப் போற்றலல்லால்

உய்யவழி இல்லை வேறே..

 

இருகரம் தேயத் தேய

இசைவோடு தந்தோர் சென்றார்

இம்பர்விட் டும்பருக்கும்

ஈவதற் காகத் தானோ?

பொருதாமல் தந்துதந்தே

புன்னைகை செய்தே வென்ற

பொள்ளாச்சி வள்ளல் அவரும்

போய்ச்சேர்ந்தார் புவி இளைக்க,,,,

 இசைக்கவி ரமணன்..

03.10.2014 / வெள்ளி / 09.50

 


வாழ்க அனைவரும் வளமுடனே 
என் குருஜி லஹரி பாபாஜி
ஆசியினால்.
கவியோகி வேதம்(kaviyogi vedham)-
PL. visit my blog(for my poems etc)at http;//kaviyogi-vedham.blogspot.com/
kaviyogi vedham(yogiyaar)தலைவர்..
Founder, Sree Laharibabaji yogasram,
2/682, 10th cross St,...Renga reddy garden,
Neelankarai, Chennai-600115--செல் எண் 95000-88528
 


--

Pas Pasupathy

unread,
Oct 4, 2014, 8:32:09 AM10/4/14
to Santhavasantham, Ramanan Isaikkavi, Chandar subramanian, sudhavedham2008 sudhavedham2008
>>>ஏன் நேரடியாகவே இவண் இடக்கூடாதா?..(yogiyaar)

:-)

இங்கே பரிமாறினால் சிற்றுண்டி,
அங்கே போனால் விருந்து! 


2014-10-04 1:11 GMT-04:00 Kaviyogi Vedham <kaviyog...@gmail.com>:
ஏன் நேரடியாகவே இவண் இடக்கூடாதா?..(yogiyaar)
*******************************இதோ ரமணன் கவி..
 
--

Pas Pasupathy

unread,
Oct 6, 2014, 10:55:42 AM10/6/14
to Santhavasantham

இந்த வார கலாரசிகன்

நிலையாமை என்பது மண்ணுயிர்க்கெல்லாம் பொதுவான விதிதான் என்றாலும், சிலரது மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தி விடுகிறது. அருட்பிரகாச வள்ளலார் மகாத்மா காந்தி விழா நடந்து கொண்டிருக்கும்போது, காந்தி ஜயந்தி தினத்தன்று தனது 92-ஆவது வயதில் நா.மகாலிங்கம் இயற்கை எய்தியதை இப்போது நினைத்தாலும் மெய் சிலிர்க்கிறது. மாமனிதர் என்கிற பெருமைக்கு முற்றிலும் பொருத்தமான வேறொருவரை என்னால் சட்டென அடையாளம் காட்ட முடியவில்லை.

வள்ளுவப் பேராசானின் கூற்றான ""பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின் அருமை உடைய செயல்'' என்கிற குறள், "அருட்செல்வர்' நா.மகாலிங்கத்துக்கு சாலப்பொருந்தும். அவரளவு பன்முகத் தன்மையுடைய ஆளுமைகொண்டவராக வேறு யாரையும் குறிப்பிடத் தெரியவில்லை.

எனது இளமைப் பருவத்தில் அவரை அண்ணாந்து பார்த்து வியந்த நான், அவரது அன்பையும் நன்மதிப்பையும் பெற்றவனாவேன் என்று கனவிலும் கருதவில்லை. "தினமணி' சார்பில் அண்ணா நூற்றாண்டு விழா மலர் வெளிக்கொணர்ந்த போதும், செம்மொழி மலர் வெளிக்கொணர்ந்த போதும் அவர்தான் வெளியிட்டு வாழ்த்தினார். "தினமணி' தமிழ் இலக்கியத் திருவிழாவின் "வேர்களைத் தேடி' தொகுப்பையும், "இந்த வாரம்' தொகுப்பையும் அவரை வைத்துத்தான் வெளியிட வேண்டும் என்கிற எனது எண்ணம் நிறைவேறாமல் போனது பெருத்த வருத்தம்.

ஒருமுறை பவானியில் "சக்தி சுகர்ஸ்' விருந்தினர் விடுதியில் அவரைச் சந்திக்கச் சென்றிருந்தேன். ஏறத்தாழ மூன்று மணி நேரத்திற்கும் அதிகமாகப் பேசிக் கொண்டிருந்தோம். சுதந்திர இந்தியாவில் மதறாஸ் ராஜதானி அரசியல் பற்றி எனக்கிருந்த எல்லா சந்தேகங்களையும் அவர் தெளிவுபடுத்தினார்.

ஓமந்தூரார், குமாரசாமி ராஜா, ராஜாஜி, காமராஜ், பக்தவத்சலம் ஆகிய முதல்வர்கள் அனைவரிடமும் பழகியவர் என்பதால், அன்றைய அரசியல் நிகழ்வுகளையும், ரகசியங்களையும் அவரிடம் நேரில் கேட்டுத் தெரிந்துகொள்ள முடிந்தது. அப்போதுதான் "தினமணி' நிறுவன ஆசிரியர் டி.எஸ்.சொக்கலிங்கம், தமிழகத்தின் முதல் நான்கு முதல்வர்களின் தேர்வில் மிகப்பெரிய பங்கு வகித்தார் என்பது தெரிந்தது.

அண்ணல் காந்தியடிகளைத் தன் தலைவராகவும், மூதறிஞர் ராஜாஜியைத் தன் ஆசானாகவும், சி.சுப்பிரமணியத்தைத் தன் வழிகாட்டியாகவும் கருதியவர் நா.மகாலிங்கம். ராஜாஜி காங்கிரஸிலிருந்து பிரிந்து சுதந்திராக் கட்சியைத் தொடங்கியபோது, அவரை சுதந்திராக் கட்சியில் சேரச் சொன்னாராம். காந்திஜியின் அறைகூவலை ஏற்றுக் காங்கிரஸ்காரனான தான் கடைசிவரை காங்கிரஸ்காரனாகவே இருக்க விரும்புவதாகக் கூறி விட்டதாகவும் ராஜாஜி கோபப்படாமல் சிரித்துக்கொண்டே தனக்கு ஆசி வழங்கியதாகவும் கூறி நெகிழ்ந்தார் அவர்.

அவர் தலையசைத்திருந்தால் திமுகவில் இணைந்திருக்க முடியும். சி.சுப்பிரமணியத்தின் நெருக்கத்தைப் பயன்படுத்தி இந்திரா காங்கிரஸில் சேர்ந்து மத்திய அமைச்சராகவோ, ஏதாவது மாநில ஆளுநராகவோ பதவி பெற்றிருக்க முடியும். ஆனால், அரசியலைத் துறந்து கடைசிவரை காந்தியவாதியாகவும், ஆன்மிகவாதியாகவும், தமிழ் வளர்க்கும் சான்றோராகவும் வாழ்ந்து மறைந்திருக்கிறார் என்றால், அது சாதாரணமான செயலா?

ஆன்மிகத்திற்கும், இலக்கியத்திற்கும் முன்னுரிமை அளித்து அவர் நடத்தி வந்த "ஓம் சக்தி' மாத இதழில் அவர் எழுதிய கட்டுரைகள் இதுவரை 30 புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன. கடைசியாக அவரது 92-ஆவது பிறந்தநாள் சிறப்பு வெளியீடான "எண்ணுகிறேன்... எழுதுகிறேன்...' "புத்தகம் வரை ஒவ்வொன்றும், எல்லா அரசு அதிகாரிகளும், அரசியல் தலைவர்களும், சமூக அக்கறையுள்ளவர்களும் படித்துப் பயன்பெற வேண்டிய அரிய பொக்கிஷங்கள்.

 [ நன்றி: தினமணி ]

Kaviyogi Vedham

unread,
Oct 7, 2014, 3:52:57 AM10/7/14
to santhavasantham
ரொம்ப அருமையான தகவல். கொடுத்த தகவல் வள்ளலுக்கு நன்றி,
 யோகியார்

வாழ்க அனைவரும் வளமுடனே 
என் குருஜி லஹரி பாபாஜி
ஆசியினால்.
கவியோகி வேதம்(kaviyogi vedham)-
PL. visit my blog(for my poems etc)at http;//kaviyogi-vedham.blogspot.com/
kaviyogi vedham(yogiyaar)தலைவர்..
Founder, Sree Laharibabaji yogasram,
2/682, 10th cross St,...Renga reddy garden,
Neelankarai, Chennai-600115--செல் எண் 95000-88528
 


--

N. Ganesan

unread,
Oct 11, 2014, 1:31:36 PM10/11/14
to santhav...@googlegroups.com, மின்தமிழ், vallamai
On Friday, October 3, 2014 5:32:36 PM UTC-7, பசுபதி wrote:
அருட்செல்வரைப் பற்றிய 

தினமணித் தலையங்கம்



நாளை மோட்சதீபம். அருட்செல்வர் நினைவாக.

கவிஞர் சிதம்பரநாதனுடன் பேசினேன்.

கல்கி இதழில் இவ்வாரம் கட்டுரை ஒன்று அச்சாகி உள்ளதாக சொன்னார்.
கல்கி இதழின் கட்டுரை வருடி கோப்பாக யாராகிலும் அனுப்ப முடியுமா?

வழக்கறிஞர் கே. இரவி வல்லமையில் நா.ம.வை நினைவுகூர்ந்துள்ளார்:

நா. கணேசன்

M. Viswanathan

unread,
Oct 11, 2014, 1:55:40 PM10/11/14
to Santhavasantham
வழக்கறிஞர் கே. இரவி வல்லமையில் நா.ம.வை நினைவுகூர்ந்துள்ளதைப் படித்தேன். 
நல்ல பதிவு.
அன்பன்,
மீ.விசுவநாதன்

--

N. Ganesan

unread,
Oct 11, 2014, 3:02:03 PM10/11/14
to santhav...@googlegroups.com, Maravanpulavu K. Sachithananthan
On Tuesday, October 7, 2014 12:52:57 AM UTC-7, yogiyaar wrote:
ரொம்ப அருமையான தகவல். கொடுத்த தகவல் வள்ளலுக்கு நன்றி,
 யோகியார்

உங்கள் தனிமடல் கண்டு மகிழ்வு.

சந்தவசந்தக் கவிஞர்கள் உங்கள் பதிலையும் வாசிக்கவேண்டும்:

சரி ஸ்வாமி.. கொஞ்ச நாள் கழித்து அதனைச் சுட்டியிருக்கலாமே. ஏன் அவசரம்??. தமிழ் மரபு , தமிழன் பண்பு அது  அன்று
 அவர் மேல் உங்களுக்குக் காழ்ப்புனர்ச்சி இல்லை என்பதை நான்(மட்டும்?) அறிவேன்.. மேலும். உங்கள் தமிழ் நாட்டில் நிறைய பணக்காரர்கள் இருக்கின்றனர். வேறுயாராவது நா. மகாலிங்கம் அய்யா போல் அள்ளிக்கொடுத்து பல தமிழ் இலக்கியங்களுக்கு+ நல்ல முந்தைய நூல்களுக்கு அருட்கொடை கொடுத்து அச்சிட்டு குறைந்த விலையில் பற்பல தமிழர்கட்கு, தமிழ் மாணவர்கட்கு, ஆய்வு செய்பவர்கட்குக் கொடுத்தவர் யார்  சொல்லுங்கள்? விரல்மடக்குங்கள் பார்க்கலாம்.அதுபோன்றே ஆன்மிகச் சேவையும் செய்தவர் அவர். ஆன்மிக நூல்களையும் பலர்க்கும் அவர் கையால் இலவசமாக உங்கள் போன்ற கவிஞர்கட்கு, பேச்சாளர்க்கு அள்ளிகொடுத்தவர் அவர். சிலம்பொலியாரையும், அவ்வையையும் கேளுங்கள்சொல்வர்.

 எங்கோ ஒரு மூலையில் உங்களுக்குப்( மட்டும்?)-பிடிக்காத ஒரு சிறு செயலைச்செய்ததற்காக இப்படி உமிழணுமா? என்பதே என் கேள்வி. அது அவரது தனிக்கருத்தாக எண்ணி மதிப்பீர்களாக.. உங்கள் கருத்துக்கு விரோதமாக அவர் எத்தனை, கிரந்த நூல்கள் சம்ஸ்கிருத நூல்களை ஆதரித்து வெளிக்கொணர்ந்தார்? சொல்க யானும் தெரிந்து கொள்கிறேன். நன்றி,
 யோகியார்

வாழ்க அனைவரும் வளமுடனே 
என் குருஜி லஹரி பாபாஜி
ஆசியினால்.
கவியோகி வேதம்(kaviyogi vedham)-
PL. visit my blog(for my poems etc)at http;//kaviyogi-vedham.blogspot.com/
kaviyogi vedham(yogiyaar)தலைவர்..
Founder, Sree Laharibabaji yogasram,
2/682, 10th cross St,...Renga reddy garden,
Neelankarai, Chennai-600115--செல் எண் 95000-88528
 
-----------------------------------


நா. மகாலிங்கம் இயல், இசை, நாடகம், விளையாட்டு, கலைகள்,
ஆகமம், வேதம் எல்லாமும் தமிழ்நாட்டில் தழைக்கவேண்டும்
என்று வாழ்ந்தவர். பழைய டெக்னாலஜியில் கிரந்தம் எழுத்துருக்கள்
செய்வது கடினம். மேலும், பலரும் தேவநாகரிக்கு தாவிவிட்டதால்
கிரந்த லிபி பலர் அறியாமலே போனது. இப்பொழுது உள்ள கணி நுட்பங்களால்
தமிழ் அல்லாத இந்திய மொழிகளுக்கு தென்னிந்தியர்களுக்கு
ஒரு பாலமாக விளங்கும் என்று சொல்லியவர். இந்தியாவில்
பல நூறு உணவுவகைகள். துணிமணிகள், மொழிகள் உள்ளதுபோல
எல்லா லிபிகளும் இருக்கலாம் என்பார். மிக ஏழ்மையான கோவில்களில்
பட்டர்களுக்கும், சிவாச்சார்யர்களுக்கும் படிக்க எளிதானது
கிரந்தம். 85% தமிழ் தான். எனவே அவர்கள் கற்பது சுலபம்.
மேலும், இந்தி, தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளின்
வலைப்பக்கங்களும் கிரந்த உருவில் மாற்றிப் படிப்பதும் செய்யலாம்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Oct 11, 2014, 6:05:32 PM10/11/14
to santhav...@googlegroups.com, vallamai, mintamil, housto...@googlegroups.com, thami...@googlegroups.com
கவியோகியாரே,

வள்ளலார் தளம் ஒன்றில்,
மறுமொழிகள் பார்க்க,


நா. கணேசன்



Kaviyogi Vedham

unread,
Oct 12, 2014, 1:36:03 AM10/12/14
to santhavasantham
நன்றி கணேசன்.. பார்த்தேன்.
 யோகியார்

வாழ்க அனைவரும் வளமுடனே 
என் குருஜி லஹரி பாபாஜி
ஆசியினால்.
கவியோகி வேதம்(kaviyogi vedham)-
PL. visit my blog(for my poems etc)at http;//kaviyogi-vedham.blogspot.com/
kaviyogi vedham(yogiyaar)தலைவர்..
Founder, Sree Laharibabaji yogasram,
2/682, 10th cross St,...Renga reddy garden,
Neelankarai, Chennai-600115--செல் எண் 95000-88528
 


--

Kaviyogi Vedham

unread,
Oct 12, 2014, 1:46:01 AM10/12/14
to santhavasantham
நல்ல தகவல் தேனீ அய்யா நீர்!.. எங்கிருந்தெல்லாமோ எடுத்துவந்து இலக்கியக்கூட்டில் அடைக்கின்றீரே!..வாழ்க!,.(வல்லமை பார்த்தேன் நீர்  கசிந்தது.. கே. ரவி என் 45 வருட நீண்ட நண்பன்!)_
 யோகியார்

வாழ்க அனைவரும் வளமுடனே 
என் குருஜி லஹரி பாபாஜி
ஆசியினால்.
கவியோகி வேதம்(kaviyogi vedham)-
PL. visit my blog(for my poems etc)at http;//kaviyogi-vedham.blogspot.com/
kaviyogi vedham(yogiyaar)தலைவர்..
Founder, Sree Laharibabaji yogasram,
2/682, 10th cross St,...Renga reddy garden,
Neelankarai, Chennai-600115--செல் எண் 95000-88528
 


--

N. Ganesan

unread,
Oct 12, 2014, 12:18:14 PM10/12/14
to santhav...@googlegroups.com
On Saturday, October 11, 2014 10:46:01 PM UTC-7, yogiyaar wrote:
நல்ல தகவல் தேனீ அய்யா நீர்!.. எங்கிருந்தெல்லாமோ எடுத்துவந்து இலக்கியக்கூட்டில் அடைக்கின்றீரே!..வாழ்க!,.(வல்லமை பார்த்தேன் நீர்  கசிந்தது.. கே. ரவி என் 45 வருட நீண்ட நண்பன்!)_
 யோகியார்

வாழ்த்துக்களுக்கு நன்றி, கவியோகியாரே. கே. ரவி அவர்களின் போன் நம்பர், இ-மெயில் இருந்தால் அனுப்புங்கள். அவரது மனைவி
சோபனா ரவி, சென்னை தொலைக்காட்சியில் செய்திகள் படிப்பார். 1975-81 கிண்டி பொறியியற்கல்லூரியில் நான் B.E. (Hons) படிக்கும்போது
என் நண்பன் சதீஷ். என் ரூமுக்கு அடிக்கடிவருவான். அவனோடு மந்தைவெளியில் அவர்கள் வீட்டுக்குப் போயிருக்கிறேன். சோபனா ரவி
சதீஷின் கஸின். டெல்லி ஆகாஷ்வாணியில் செய்திகள் வாசித்த ஜானகியின் மகள் சோபனா என்று சதீஷ் சொன்னதாக ஞாபகம். பி.இ
முடிந்ததும் காதல்தோல்வியால் எங்கள் இனிய நண்பன் சதீஷ் மாண்டுபோனான். என் வாழ்க்கையில் முதலில் தைத்த சம்பவம் அது :(
முன்பு சந்தவசந்தத்தில் கே. ரவி அவர்களின் விடியோ ஒன்று வெளியானபோதே கேட்க நினைத்தேன். மறந்துவிட்டது.

--------------------------------

இந்தியாவின் செம்மொழிகள் இரண்டினுக்கும் எழுத்து வரலாறு பற்றி என் ஆய்வுக் கருத்தை எழுதியுள்ளேன். படித்தருள்க:

நா. கணேசன்

Kaviyogi Vedham

unread,
Oct 13, 2014, 1:23:44 AM10/13/14
to santhavasantham

krkavit...@gmail.com
 is his present Email id..
 his phone no i will let yu know in an hur,
 yogiyar



வாழ்க அனைவரும் வளமுடனே 
என் குருஜி லஹரி பாபாஜி
ஆசியினால்.
கவியோகி வேதம்(kaviyogi vedham)-
PL. visit my blog(for my poems etc)at http;//kaviyogi-vedham.blogspot.com/
kaviyogi vedham(yogiyaar)தலைவர்..
Founder, Sree Laharibabaji yogasram,
2/682, 10th cross St,...Renga reddy garden,
Neelankarai, Chennai-600115--செல் எண் 95000-88528
 


N. Ganesan

unread,
Oct 15, 2014, 10:08:13 AM10/15/14
to santhav...@googlegroups.com, mintamil
On Saturday, October 11, 2014 10:55:40 AM UTC-7, meev1955 wrote:
வழக்கறிஞர் கே. இரவி வல்லமையில் நா.ம.வை நினைவுகூர்ந்துள்ளதைப் படித்தேன். 
நல்ல பதிவு.
அன்பன்,
மீ.விசுவநாதன்

Kaviyogi Vedham

unread,
Oct 15, 2014, 10:13:49 AM10/15/14
to santhavasantham
ஆம் நானும் பார்த்தேன். என்ன அழகாக நா.ம அவர்கள் எழுதியுள்ளார்கள்!
 நல்ல ரசனையுள்ளம் அவருக்கு.
 வாழ்க அவர் புகழ்,
 யோகியார் 

வாழ்க அனைவரும் வளமுடனே 
என் குருஜி லஹரி பாபாஜி
ஆசியினால்.
கவியோகி வேதம்(kaviyogi vedham)-
PL. visit my blog(for my poems etc)at http;//kaviyogi-vedham.blogspot.com/
kaviyogi vedham(yogiyaar)தலைவர்..
Founder, Sree Laharibabaji yogasram,
2/682, 10th cross St,...Renga reddy garden,
Neelankarai, Chennai-600115--செல் எண் 95000-88528
 


N. Ganesan

unread,
Oct 15, 2014, 10:19:21 AM10/15/14
to santhav...@googlegroups.com, mintamil, vallamai
On Wednesday, October 15, 2014 7:13:49 AM UTC-7, yogiyaar wrote:
ஆம் நானும் பார்த்தேன். என்ன அழகாக நா.ம அவர்கள் எழுதியுள்ளார்கள்!
 நல்ல ரசனையுள்ளம் அவருக்கு.
 வாழ்க அவர் புகழ்,
 யோகியார் 

'தமிழ்மணம்’ திரட்டி இந்தியமொழிகளிலேயே வலைப்பதிவுகளுக்கு முதலில் அமைத்த காசிலிங்கம் இப்போது கோவை ரூட்ஸ் நிறுவனத்தில் பணிபுரிகிறார். அவர் அழைத்திருந்தார், பொள்ளாச்சி செய்திகளை கேட்டேன். அப்போது ஜெயமோகன் என்.எம் பற்றி எழுதியதைப் பார்த்தீர்களா? - என்றார். இல்லையே என்றேன். அவர் அனுப்பிய சுட்டிகள்:

அஞ்சலி பொள்ளாச்சி நா.மகாலிங்கம்

என்.எம். - வாசகர் கடிதம்

நா. கணேசன்
Reply all
Reply to author
Forward
0 new messages