கழலடியின் நிழல்தருவாய் - கணபதி துதி

8 views
Skip to first unread message

இமயவரம்பன்

unread,
Aug 11, 2026, 5:40:28 AM (3 days ago) Aug 11
to santhavasantham
கழலடியின் நிழல்தருவாய் - கணபதி துதி

[பல்லவி]
கணபதியே துணைவருவாய்
கழலடியின் நிழல்தருவாய்

[அனு பல்லவி]
கனிவுமிகும் அருள்முகிலாய்க்
கருணையெனும் மழைபொழிவாய்

[சரணம்]
துதிப்பவர் துயரொழியச் சுடர்விழி விழித்திடுவாய்
கொதித்திடும் பிணியொழியக் குழைச்செவி அசைத்திடுவாய்  (கணபதியே) (1)

படர்ந்திடும் வினையொழியப் பயத்தினை அகற்றிடுவாய்
தொடர்ந்திடும் பிறப்பொழியத் துதிக்கரம் உயர்த்திடுவாய் (கணபதியே) (2)

குறிப்புகள்:

1. கனிவு, அருள், கருணை மூன்றும் ஒரே விதமான பொருளில் இருந்தாலும், பாடலைக் கேட்பவர் மனத்தில் கணேசனின் கருணை பதிவதன் பொருட்டு எழுதினேன். 

2. கொதித்திடும் பிணியொழியக் குழைச்செவி அசைத்திடுவாய் - இங்கே கணேசனின் திருச்செவிகளின் அசைவினால் வினைகளின் வெப்பம் தணியும் என்று படித்திருக்கிறேன். இங்கே வினைகளுக்குப் பதிலாகப் பிணிகள் என்று மாற்றியுள்ளேன். குழைச்செவி = குழை அணிந்த செவி

3. துதிக்கரம் உயர்த்திடுவாய் = துதிக்கை உயர்த்தி அருள் புரிவாய் 

- இமயவரம்பன் 

Sai Ganesan H

unread,
Aug 11, 2026, 5:58:11 AM (3 days ago) Aug 11
to santhav...@googlegroups.com
அருமை! 

— சத்ய வேழன் H சாயி கணேசன்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/BECF4C3E-0905-4360-8AAF-EC861DB07208%40gmail.com.

GOPAL Vis

unread,
Aug 11, 2026, 7:39:26 AM (3 days ago) Aug 11
to santhav...@googlegroups.com
அருமை. பல்லவி, அனுபல்லவி இவைகள் ஒரே எதுகை பெற்றிருந்தால் இன்னும் அருமை!
கோபால்

இமயவரம்பன்

unread,
Aug 11, 2026, 7:41:24 AM (3 days ago) Aug 11
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. சத்யவேழன்!

இமயவரம்பன்

unread,
Aug 11, 2026, 7:46:05 AM (3 days ago) Aug 11
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. கோபால்!

“கணமெதிலும் கருமுகிலாய்” என்று மாற்றுகிறேன். 

Ram Ramakrishnan

unread,
Aug 11, 2026, 8:23:18 AM (3 days ago) Aug 11
to santhav...@googlegroups.com
அற்புதம், திரு. இமயவரம்பன்.

துதிப் பாடல்கள் அருமையாக இயல்பாக வருந்தன்மை போற்றற்குரியது.

வாழ்க!

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Aug 11, 2026, at 07:46, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:

மிக்க நன்றி, திரு. கோபால்!
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Aug 11, 2026, 8:50:21 AM (3 days ago) Aug 11
to santhav...@googlegroups.com
வருவாய்
தருவாய்
This form of verbs is usually statements and not requests (in thevaram songs).
வாராய்
தாராய்
etc. are the entreaty form.

படர்ந்திடும் வினையொழியப் பயத்தினை அகற்றிடுவாய்  /

பயம் போனால் வினை போய்விடுமா?

V. Subramanian

இமயவரம்பன்

unread,
Aug 11, 2026, 8:53:54 AM (3 days ago) Aug 11
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. ராம்கிராம்

இமயவரம்பன்

unread,
Aug 11, 2026, 10:35:05 AM (3 days ago) Aug 11
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
“ This form of verbs is usually statements and not requests (in thevaram songs).
வாராய்
தாராய்” - I have noted this down, thank you!

“படர்ந்திடும் வினை ஒழியப்
பயத்தினை அகற்றிடுவாய்”

படர்ந்திடும் வினை இறையருளால் ஒழிய, அவ்வினையால் விளைந்த பயத்தையும் அகற்றுவான் என்பதே இவ்வரியில் நான் சொல்ல நினைத்த பொருள். வேறு விதமாக எழுதிப் பார்க்கிறேன். 

இமயவரம்பன்

unread,
Aug 12, 2026, 4:22:08 AM (2 days ago) Aug 12
to santhavasantham, santhav...@googlegroups.com
“ படர்ந்திடும் வினை ஒழித்துப்
பயத்தினை அகற்றிடுவாய்”
என்று மாற்றுகிறேன்.

இமயவரம்பன்

unread,
Aug 12, 2026, 4:24:55 AM (2 days ago) Aug 12
to santhavasantham, santhavasantham

Siva Siva

unread,
Aug 12, 2026, 9:00:16 AM (2 days ago) Aug 12
to santhav...@googlegroups.com
Yes, this phrasing is better.

V. Subramanian

இமயவரம்பன்

unread,
Aug 12, 2026, 3:10:24 PM (2 days ago) Aug 12
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
Thank you
Reply all
Reply to author
Forward
0 new messages