நாரா யணனே நமக்கு - மூன்றாம் தொகுதி

13 views
Skip to first unread message

Parthasarathy S

unread,
Jul 31, 2026, 10:29:42 PM (14 days ago) Jul 31
to சந்தவசந்தம்
அடியேன் தினம் எழுதிவந்த  நாரா யணனே நமக்கு என்ற ஈற்றடி கொண்ட வெண்பக்களின் மூன்றாம் தொகுதி- பத்து வெண்பாக்களை உங்கள் அனுபவத்திற்கு இடுகிறேன்.

ஆரால் உலகெலாம் அன்றெழுந்து நின்றதோ

ஆரால் கரந்தளித்(து)  ஆடுமோ - ஆராலே

நேராய்ப் பதமீதல் நீடுமோ நன்கறியந்

நாரா யணனே நமக்கு                                                                                                  21

 

ஆயிரமாய்ப் பேருடையன் ஆழ்த்தும் குணமுடையன்

நோயிலா வாழ்வளிக்கும் நாயகன் - ஓயாது

நீராடு நித்தம் நலனிருத்தும் நாமத்தில்

நாரா யணனே நமக்கு                                                                                                  22

 

போரிலே சங்கெடுத்த புண்ணியன் பாதமிட்டுப்

பாரையே தாண்டியன் பல்வகையில் - போராடும்

ஓரைவர் பக்கத்தன் ஒற்றையன் ஓங்கியவந்

நாரா யணனே நமக்கு                                                                                                  23

  

சேரா திருளினியே சேர்ந்திடும் நல்லொளியே

பாரோர் புகழ்ந்திடுவர் பற்றிடுவர் - கூராழி

தேரோட் டிசொல்கீதை தேர்ந்தடைவோம் என்னாளும்

நாரா யணனே நமக்கு                                                                                   24

 

வாரி வழங்குநல் வைப்புநிதி வாய்மையன்

நாரி துகிலீந்த நல்லறன் - பாரளந்தான்

காரி சுதன்சொல் மடுத்து கழல்சேர்வோம்

நாரா யணனே நமக்கு                                                                                   25

 

கயலாமை பன்றிசிங்கம் கையிரந்தான் மூன்று

வயங்கொள் இராமன் மலையெடுத்தான் - மாயனென

சீரார் உலகுண்டுத் தானே உமிழ்ந்தவனாம்

நாரா யணனே நமக்கு                                                                                   26

 

வாராத துன்பம் வருகின்ற போதிலும்

போராட்டம் பொங்காது போக்கிடவும் - பேரோதல்

தோரா யமென்றாலும் தேக்கிட்டுத்  தண்மைகொள்

நாரா யணனே நமக்கு                                                                                   27

 

யாரா யிருந்தாலும் யாண்டும் அடிசேர்க்கும்

ஆரா தனைக்கெளியன் ஆதியன் - நேரிலான்

சீராய் நமையிட்டுச் சேர்ப்பான் தனதிடமே

நாரா யணனே நமக்கு                                                                                   28

 

அருட்பார்வை என்றும் அடிசேர்க்க நாளும்

கருத்தோடு காத்திடும் காதற் - கருமையன்

பாரா தவர்க்கும் பலனீயும் பண்புடையன்

நாரா யணனே நமக்கு                                                                                   29

 

சீரார் திருமகளார் செல்வன் திகிரியன்

ஏருடை வண்ணன் இனிமையன்- நாரிடும்

பாரே ழிரண்டிலும் பற்றற்றார் பற்றுமந்

நாரா யணனே நமக்கு                                                                                   30

( ஏர்பொலிவு; நாரிடும்பந்தப்படுத்தும்)


தாஸன் புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்

Sai Ganesan H

unread,
Aug 1, 2026, 1:31:51 AM (14 days ago) Aug 1
to santhav...@googlegroups.com
அருமை! 

— சத்யவேழன் H சாயிகணேசன்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/b7e4aebe-311b-4f7d-9ef0-0907949a599en%40googlegroups.com.

Ram Ramakrishnan

unread,
Aug 1, 2026, 8:30:56 AM (13 days ago) Aug 1
to santhav...@googlegroups.com
அருமை, திரு. பார்த்தா.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Aug 1, 2026, at 01:31, Sai Ganesan H <saisree...@gmail.com> wrote:



Siva Siva

unread,
Aug 1, 2026, 8:38:09 AM (13 days ago) Aug 1
to santhav...@googlegroups.com
திருத்துருத்தியில் ஈசன் திருநாமம் சொன்னவாறு அறிவார்.
So, He fully understands what a devotee says!

/ நாரா யணனே நமக்கு  / = ?

V. Subramanian

இமயவரம்பன்

unread,
Aug 1, 2026, 8:48:22 AM (13 days ago) Aug 1
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
அருமை! பத்து அவதாரங்களையும் இரண்டே அடிகளில் சொல்லியவிதம் அழகு!

“கயலாமை பன்றிசிங்கம் கையிரந்தான் மூன்று
வயங்கொள் இராமன் மலையெடுத்தான் - மாயனென
சீரார் உலகுண்டுத் தானே உமிழ்ந்தவனாம்
நாரா யணனே நமக்கு”

Parthasarathy S

unread,
Aug 4, 2026, 1:50:13 AM (11 days ago) Aug 4
to சந்தவசந்தம்
நன்றி திரு சத்யவேழன் சாயிகணேசன்

Parthasarathy S

unread,
Aug 4, 2026, 1:50:54 AM (11 days ago) Aug 4
to சந்தவசந்தம்
நன்றி! திரு ராம்கி ராம்!

Parthasarathy S

unread,
Aug 4, 2026, 1:52:13 AM (11 days ago) Aug 4
to சந்தவசந்தம்
நன்றி திரு சிவ சிவா!

Parthasarathy S

unread,
Aug 4, 2026, 1:52:40 AM (11 days ago) Aug 4
to சந்தவசந்தம்
நன்றி திரு இமயவரம்பரே!

Siva Siva

unread,
Aug 4, 2026, 8:54:05 AM (10 days ago) Aug 4
to santhav...@googlegroups.com

இமயவரம்பன்

unread,
Aug 6, 2026, 6:56:22 PM (8 days ago) Aug 6
to santhav...@googlegroups.com
"எமக்கு என்று இரு நிதியம் ஏமாந்து இராதே
தமக்கு என்றும் சார்வம் அறிந்து நமக்கு என்றும்
மாதவனே என்னும் மனம் படைத்து மற்று அவன் பேர்
ஓதுவதே நாவினால் ஓத்து “.

 பூதத்தாழ்வார் இந்தப் பாசுரத்தில் “நமக்கு என்றும் மாதவனே” என்கிறார். இதையொட்டித்தான் திரு. பார்த்தசாரதி அவர்கள் “நாராயணனே நமக்கு” என்று எழுதியிருப்பாரோ? 

Parthasarathy S

unread,
Aug 7, 2026, 2:05:14 AM (8 days ago) Aug 7
to சந்தவசந்தம்
அடியேன் ஆண்டாளும் நாராயணனே நமக்கே பறைதருவான் என்கிறாள். தாஸன்

Siva Siva

unread,
Aug 7, 2026, 8:58:37 AM (7 days ago) Aug 7
to santhav...@googlegroups.com
நாம் ஒரு பாடலை இயற்றும்பொழுது அதன் பதவுரையும் எழுதினால் நமக்கு உதவும். பிறர்க்கும் உதவக்கூடும்.

பாடலில் நம் முயற்சியால் செய்யக்கூடியது பிழைகள் இன்மையும் பொருளின் தெளிவும். மற்ற அழகுகள் இல்லாவிடினும் இவை இருக்கவேண்டும்.

When anyone points out an issue my verse, I am happy and thankful to them - because it helps to make my verse better.
When someone says something is not clear, we should explain what we meant and how our verse indicates that meaning.

V. Subramanian

Reply all
Reply to author
Forward
0 new messages