கவியரங்கம் - 62- வெண்பா வித்தகம்

9 views
Skip to first unread message

Parthasarathy S

unread,
Jul 4, 2026, 2:33:32 AM (3 days ago) Jul 4
to சந்தவசந்தம்


வெண்பாக் கவியரங்கம்

 

1.கண்ணெல்லாம் ஆகுமோ கண்?

 

மண்தின்ற மாதவன் மாமறை மன்னினோன்

பண்கொண்டு கோயில் பயில்கிறான் - எண்ணத்தில்

வண்ணமெழ வண்டாடும் வார்குழலன் காணாத

கண்ணெல்லாம் ஆகுமோ கண்?                                   1

 

2. பொந்துக்குள் இன்னொரு பொந்து

 

நாமொரு பொந்ததில் நம்மான்மா தானிருக்கும்

வாமனன் ஆன்மாவில் வாழ்ந்திடுவான்- காமத்தைச்

சிந்தாது கொண்டு செகம்வென்று காணலாம்  

பொந்துக்குள் இன்னொரு பொந்து                             2

              

3. நேசமாய் வந்த நெருப்பு

 

ஓசையின்று உள்புகுந்த உத்தமன் சீர்குணங்கள்

தேசுடைத்துத் தீர்த்திடும் என்னையே - ஆசையை

வாசியின்றி வைக்கவழி இல்லைசெயும் மாலவனின்

நேசமாய் வந்த நெருப்பு                                                3

 

4.கண்ணைமூ டிக்கொண்டு காண்.               

 

எண்ணம் அறமிறுத்த எப்போதும் பக்கத்தில்

வண்ணம் விரித்தங்கே வாழ்ந்திடுவான் - மண்ணுலகில்

திண்ணம் அவன்தோன்றும் தேசும் தெரியுமே

கண்ணைமூ டிக்கொண்டு காண்.                                  4

 

5.பார்ப்பாரே பார்ப்பாரே பார்        

 

வினைகொண்டு வந்தவனை வீக்கா(து) அவனை

வினைவிடுத்(து) ஆன்மா விளங்க - மனையிடு

ஆர்பரித்து ஆன்மா அனைத்துமென்(று) றென்றறிந்து

பார்ப்பாரே பார்ப்பாரே பார்                                          5

 

6. குறுக்குத் தெருவில் குடி

 

விரிந்த உலகில் விரிப்பாய் இதயம்

தெரிந்தார் தெரியாதார் தீண்டு -பெருமை

மறந்தே சிறுமை மனமிட நாளும்

குறுக்குத் தெருவில் குடி                                                6

 

               7. வானம் இறங்கி வரும்

 

கானத்தில் நல்முனி காத்தானைக் கண்ணனாய்க்

கானத்தில் கோபிகை கொண்டானை - மானமின்றி

ஏனமாய் பூமி இடந்தானைக் கொண்டாட

வானம் இறங்கி வரும்                                                   7

 

8.காதுக்கு வேண்டாம் கதவு

 

தீதுடை மாந்தர்  திரிசொல் தடுத்துடன்

வாதம் புரிவார் விலக்கிடு - ஆதரவாய்க்

கோதில் குணத்தார் கொடைவுரை கேட்டிடக்

காதுக்கு வேண்டாம் கதவு                                             8

 

9.போதிலே பூத்ததிப் போது

 

வாதிலே போதினை வைத்து வழிமறந்து

சோதியாம் தன்மை மறந்திருக்க - வீதிசெல்

ஏதமில் நற்குரு எண்ணத்தில் எட்டியவப்  

போதிலே பூத்ததிப் போது                                             9

 

10.மறதியும் கூட வரம்

 

குறையின்றி வாழ்ந்து குணம்கொண்ட மேலோர்

நிறைகொள்வர் நன்மை நினைந்து - கறையைப்

பறைசாற்ற மாட்டார் பலன்கொள்ளார் பாரில்

மறதியும் கூட வரம்                                                        10

 

               11.பள்ளியாம் பாதையும் பார்

 

கள்ள மனத்தையும் வெள்ளையென மாற்றிடும்

பள்ளம் நிறைத்திடும் பள்ளியெனில் - அள்ளலைக்

கொள்ளக் குறைவின்றிக் கொட்டிடும் வாழ்க்கையெனும்

பள்ளியாம் பாதையும் பார்                                            11

 

               12. நெருப்பை அணைக்காத நீர்

 

கருத்துடன் கோவிந்தன் காத்தளிக்கும் அண்டம்

இருத்துமே பூதமைந்து முன்னம் - சுருக்கச்

சிருட்டியில் பின்னதாம்  முன்சென்று சேரும்

நெருப்பை அணைக்காத நீர்                                          12

 

13.கொஞ்சமே னும்மிதைக் கொள்

 

அஞ்சும் பொருள்காண அஞ்சுதல் வேண்டுமறி

மிஞ்சுவர்க்கு வேறாம் வழியுணர் - வஞ்சமென

நஞ்சுமிழ் வார்பால் நலியாமல் நின்றடிப்பாய்

கொஞ்சமே னும்மிதைக் கொள்                                    13

 

14.நட்டத்தில் உச்ச நடம்  

 

இட்டமாய் ஆயர் எழுபயம் தீர்த்தவன்

கட்டத்தில் காக்கும்நம் கண்ணனே - வட்டமாய்

கிட்டத்தில் நின்று கிழமையொடு கோப்பான்கை

நட்டத்தில் உச்ச நடம்                                                    14

 

15.நீயென்றேன் நீயென்றாய் நீ

 

மாவுடன் நற்பரி வாரம்சூழ் மாலேயுன்

சேவை கிடைக்க தியானித்தேன் - ஆசையாய்

தேவையறிந்து நெஞ்சில் எழுந்தருள சீர்பெரியன்

நீயென்றேன் நீயென்றாய் நீ                                          15

 

               16. புன்னகை யார்க்கும் பொது

 

பொன்மகள் போற்றிட பூத்திடும் செல்வமே

நன்மைகள் நாளெலாம் சேர்ந்திடும் - அன்புடன்

இன்னருள் ஏற்றே இனிமையில் ஆழ்ந்திடும்

புன்னகை யார்க்கும் பொது                                          16

 

புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்

Siva Siva

unread,
Jul 4, 2026, 9:03:21 AM (3 days ago) Jul 4
to santhav...@googlegroups.com
Nice to see your interest and effort.
By the way, I presume you read the verses posted by others for these last lines.
However, I do not recall seeing your comment / feedback on any of those threads.

V. Subramanian

On Sat, Jul 4, 2026 at 2:33 AM Parthasarathy S <spart...@gmail.com> wrote:


வெண்பாக் கவியரங்கம்

 

1.கண்ணெல்லாம் ஆகுமோ கண்?

 

மண்தின்ற மாதவன் மாமறை மன்னினோன்

பண்கொண்டு கோயில் பயில்கிறான் - எண்ணத்தில்

வண்ணமெழ வண்டாடும் வார்குழலன் காணாத

கண்ணெல்லாம் ஆகுமோ கண்?                                   1

...

Siva Siva

unread,
Jul 4, 2026, 11:56:16 AM (2 days ago) Jul 4
to santhav...@googlegroups.com
Some comments below - for the first 3 verses.

V. Subramanian

On Sat, Jul 4, 2026 at 2:33 AM Parthasarathy S <spart...@gmail.com> wrote:


வெண்பாக் கவியரங்கம்

 

1.கண்ணெல்லாம் ஆகுமோ கண்?

 

மண்தின்ற மாதவன் மாமறை மன்னினோன்

பண்கொண்டு கோயில் பயில்கிறான் - எண்ணத்தில்

வண்ணமெழ வண்டாடும் வார்குழலன் காணாத

கண்ணெல்லாம் ஆகுமோ கண்?                                   1

 

==> / வார்குழலன்  / 
வார்குழல் என்ற பிரயோகம் ஆண்கள் வர்ணனையில் வருவதுண்டா?

2. பொந்துக்குள் இன்னொரு பொந்து

 

நாமொரு பொந்ததில் நம்மான்மா தானிருக்கும்

வாமனன் ஆன்மாவில் வாழ்ந்திடுவான்- காமத்தைச்

சிந்தாது கொண்டு செகம்வென்று காணலாம்  

பொந்துக்குள் இன்னொரு பொந்து                             2

              

3. நேசமாய் வந்த நெருப்பு

 

ஓசையின்று உள்புகுந்த உத்தமன் சீர்குணங்கள்

தேசுடைத்துத் தீர்த்திடும் என்னையே - ஆசையை

வாசியின்றி வைக்கவழி இல்லைசெயும் மாலவனின்

நேசமாய் வந்த நெருப்பு                                                3

 

==> /  ஓசையின்று உள்புகுந்த    / 
Any typo?

தேசுடைத்துத் தீர்த்திடும் என்னையே   / = ?

மாலவனின் நேசமாய் வந்த நெருப்பு /
Is the above phrase describing Swmi's grace as fire?


Parthasarathy S

unread,
Jul 5, 2026, 6:18:31 AM (yesterday) Jul 5
to சந்தவசந்தம்
அடியேன்,  வார்குழலன் என்று ஆண்களுக்கு இட்டதாய்த் தெரியவில்லை. ஆனால் எம்பெருமானுக்கு இடுவதால் தவறாகாது என இட்டேன்.
ஓசையின்றி உள்புகுந்து என்றிருக்க வேண்டும்.  Typo Error அடியேன்.
தேசுடைத்து - பெருமையும் புகழும் என்னைத் தீர்த்து அகங்காரமற்றவனாக்கிவிடும் என்ற பொருளில் இட்டேன். நெருப்பு என்பதை ஒழுக்கம் தவறாத தன்மைக்கு ஆகுபெயரால் இட்டேன். இதை அடிக்குறியில் இட்டிருக்க வேண்டும். தவறுக்கு மன்னிக்கவும். 

புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்
Reply all
Reply to author
Forward
0 new messages