இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

7 views
Skip to first unread message

Rajja Gopalan

unread,
Oct 19, 2025, 6:29:49 AM (3 days ago) Oct 19
to Santhavasanthsm சந்தவசந்தம்




இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்



இருட்திரையும் கலைகிறது!
இனியமனம் திளைகிறது!
அருட்பொருளும் விளைகிறது!
அன்புமழை பொழிகிறது!

தன்னடக்கம் தலைக்குளியல்! தகையழகு புத்தாடை!
மின்மினுக்கும் அன்புவெடி! மிளிருங்கைச் சக்கரங்கள்!
புன்சிரிப்பு மத்தாப்பு! பூவிழிகள் தீப ஒளி!
இன்பமெனப் பலகாரம்! எல்லார்க்கும் உபகாரம்!

ஏற்புடைமை எனமருந்து! எளிமையினில் நிலமிருந்து
ஆற்றும்சர வெடிஉகுந்து அனைவருடன் சுகவிருந்து!
பட்டகடன் பொட்டுவெடி! படபடத்து ஓய்ந்துவிடும்!
நட்டமிலை சரவெடிகள் நடுமொலியில் தீய்ந்துவிடும்!

பாய்ந்துவரும் ராக்கெட்டாய் பலகனவும் வானமுறும்!
ஓய்ந்துமனம் எதுவரினும் உடன்பட்டு ஞானமுறும்!
அறம்நமது கைச்சாட்டை! அதிலுரிய வலிவூட்டைத்
திறம்விளக்கும் பூவானம்! தீமையெலாம் புஸ்வானம்!

வாழ்க்கையிது விளையாட்டு! வழக்கெதற்கு! விளையாடு!
ஊழ்க்கையினில் ஒட்டாது உடனிருந்து விளையாடு!
வெடித்தோயும் ஒளிபோல விரைந்தோடும் நொடிபோல
மடித்தோய்தல் நமக்கில்லை! மறையுள்ளிறை யாயெல்லை!

நானிவராய் நடித்தாலும்
நானிறைவன் எனத்தெளிய
நாமினிதாய் நடிப்போமே!
நல்லருளே தீபஒளி!
HAPPY DEEPAVALI

மீ. ரா
19-10-2025

N. Ganesan

unread,
Oct 20, 2025, 8:18:00 AM (2 days ago) Oct 20
to santhav...@googlegroups.com
தீபாவளி வாழ்த்துடன்,
NG

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CANuAMWwjLJxV2aLge4kaTjTcwi9YvdbdtizR%3DkxNYZ2f-QWAkA%40mail.gmail.com.

N. Ganesan

unread,
Oct 20, 2025, 8:56:13 AM (2 days ago) Oct 20
to santhav...@googlegroups.com

தீபாவளி எனும் திருநாள்

தீபாவளிஎனும் திருநாளே
       தெய்வம் அன்பென வருநாளாம்
கோபா வளிகளைக் கொளுத்திடும்நாள்.
       கொஞ்சிக் குலவிக் களித்திடும்நாள்.       1

தனித்தனி வீட்டின் தரைமெழுகி,
       தரித்திரப் பீடையைத் தலைமுழுகி,
மனத்துயர் யாவையும் மறந்திடுவோம்;
       மகிழ்வுடன் உள்ளதை விருந்திடுவோம்.       2

உதவாப் பழசாம் வழக்கமெல்லாம்
       உதறித் தள்ளுதல் ஒழுக்கமெனப்
புதிதாம் ஆடைகள் புனைந்திடுவோம்.
       புதுப்புது வழிகளில் நினைந்திடுவோம்.       3

கட்சிச் சண்டைகள் பட்டாரைக்
       கட்டுக் கட்டாய்ச் சுட்டேபின்
பட்சம் வந்த மனத்துடனே
       பழகுவம் எல்லாம் இனத்துடனும்.       4

ஒவ்வொரு வீட்டிலும் பலகாரம்;
       ஒருவருக் கொருவர் உபகாரம்;
இவ்வித வாழ்வே தினந்தோறும்
       இருந்திட வேண்டிநம் மனம்கோரும்       5

ஈயாப் பத்தரும் ஈந்திடும்நாள்
       ஏகிடும் அடிமையும் ஓய்ந்திடும்நாள்
நோயால் நொந்தே இளைத்துவரும்
       நோன்பெனக் கொஞ்சம் செழித்திடுவார்.       6

‘ஐயா பசி‘யென் பாரில்லை
       ‘அப்புறம் வா‘யென் பாரில்லை
மெய்யே அன்பு மிகுந்திடும் நாள்
       வேற்றுமை விட்டு மகிழ்ந்திடும் நாள்.       7

மாச்சரி யங்களும் மறைந்திடும்நாள்
       மனிதன் இயல்பு சிறந்திடும்நாள்
ஆச்சரி யம்போல் எல்லோரும்
       ஆடலும் பாடலும் சல்லாபம்.       8

                                      - நாமக்கல் கவிஞர்

Reply all
Reply to author
Forward
0 new messages