விவேகானந்தர் நிவேதிதையை வாழ்த்திய கவிதை - தமிழாக்கம்

5 views
Skip to first unread message

இமயவரம்பன்

unread,
Oct 16, 2025, 6:31:47 AM (6 days ago) Oct 16
to santhavasantham


image0.png

(Photo Generated by AI)


சகோதரி நிவேதிதை அவர்களை வாழ்த்திச் சுவாமி விவேகானந்தர்  எழுதிய ஆங்கிலக் கவிதை ஒன்றைத் தமிழ்ப்படுத்துமாறு திரு. கணேசன் அவர்கள் சில நாள்களுக்கு முன் என்னிடம் கேட்டுக்கொண்டார்.  அவர் பணித்தபடி எழுத முயன்ற மொழிபெயர்ப்புக் கவிதையை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.


விவேகானந்தர் நிவேதிதையை வாழ்த்திய கவிதை:

(நிலைமண்டில ஆசிரியப்பா)


ஓர்தாய் உள்ளம், வீரர்நெஞ் சுறுதி,

தென்றலின் இனிமை, செந்தழல் எரிபாய்

ஆரிய வேள்வி தோறு(ம்)நின் றொளிரும்

மந்திர வலிமை - என்றுபண் டெவர்க்கும்

நனவினும் கனவினும் நினைவரி யனவாம்

வீ(று)இவற் றொடுநற் பேறுகள் பிறவும்

நின்ன தாகி மன்னுக! - வருநாள்

பாரதம் பயக்கும் பேரார் மைந்தற்(கு)

இன்னருந் தலைவி, அன்புச் சேவகி,

உன்னத சகி-என் றாதிநீ ஒருங்கே.


(மொழிபெயர்ப்பு)

இமயவரம்பன் 


(தழல் எரி = ஒருபொருட் பன்மொழி; பண்டு = முற்காலத்தில்; வீறு இவற்றொடு = பெருமை வாய்ந்த இவற்றுடன்; மன்னுக = நிலைக்க; வருநாள் = வருங்காலத்தில்; பயக்கும் = பெற்றெடுக்கும்; பேர் ஆர் = புகழ் வாய்ந்த; சகி = தோழி; ஆதி = ஆவாயாக)


Original poem (by Swami Vivekananda)


BLESSINGS TO NIVEDITA 

The mother's heart, the hero's will,
The sweetness of the southern breeze,
The sacred charm and strength that dwell
On Aryan altars, flaming, free;
All these be yours, and many more
No ancient soul could dream before --
Be thou to India's future son
The mistress, servant, friend in one.

https://www.vivekananda.net/Poetry/BlessingsToNivedita.html

இமயவரம்பன்

unread,
Oct 16, 2025, 9:00:47 AM (6 days ago) Oct 16
to AnandBl...@gmail.com, santhavasantham
பேறுகள் பலவற்றைக் குறிப்பதால், “நின்னது” என்னும் சொல் இங்கே பொருந்தாது என்று நினைக்கிறேன். எனவே, “நின்ன” என்று மாற்ற விரும்புகிறேன் . மேலும், “வருநாள்” என்பதை விடப் “பின்னாள்” பொருந்தும் என்று நினைக்கிறேன். மாற்றங்கள் கொண்ட இந்த அடி (highlighted) சரியா என்று தெரிவிக்குமாறு வேண்டுகிறேன்:

வீ(று)இவற் றொடுநற் பேறுகள் பிறவும்
நின்ன வாக என்றும்! பின்னாள்
பாரதம் பயக்கும் பேரார் மைந்தற்(கு)



[ஆக =  ஆகுக; (வியங்கோள் வினைமுற்று)]

N. Ganesan

unread,
Oct 16, 2025, 10:48:10 AM (6 days ago) Oct 16
to santhav...@googlegroups.com
நன்று. படமும் (செய்யறிவு) அழகு.

பாரதியார் தன் இரு நூல்களை அவர் குரு நிவேதிதைக்கு சமர்ப்பித்தார்.
https://x.com/naa_ganesan/status/1964660178286195112
எனவே, விவேகானந்தர் பாரதிக்குப் பரமகுரு. அவரது வாழ்த்து தமிழில் சிறப்பு.

Bharatiyar's dedicatory statements of his two books to Sister Nivedita
as his Guru.
"ஸ்வதேச கீதங்கள்” என்னும் 1908-ம் ஆண்டு அச்சான நூலிலுள்ள சமர்ப்பணமும்
முகவுரையும் வருமாறு:

சமர்ப்பணம்

ஸ்ரீகிருஷ்ணன் அர்ஜூனனுக்கு விசுவரூபம் காட்டி ஆத்துமநிலை விளக்கியதொப்ப,
எனக்குப் பாரத தேவியின் ஸ்மர்ணரூபத்தைக் காட்டி, ஸ்வதேச பக்தி யுபதேசம்
புரிந்தருளிய குருவின் சரணமலர்களில் இச்சிறு நூலை சமர்ப்பிக்கின்றேன்.

-- ஆசிரியன்

முகவுரை

ஒருமையும் யௌவனத்தன்மையும் பெற்று விளங்கும் பாரத தேவியின் சரணங்களிலே
யான் பின்வரும் மலர்கள்கொண்டு சூட்டத் துணிந்தது எனக்குப் பிழையென்றும்
தோன்றவில்லை. யான் சூட்டியிருக்கும் மலர்கள் மணமற்றன வென்பதை நன்கறிவேன்.
தேவலோகத்துக்குப் பாரிஜாத மலர்கள் சூடத் தகுதிகொண்ட திருவடிகளுக்கு எனது
மணமற்ற முருக்கம்பூக்கள் அணிக்குறைவை விளைவிக்கு மென்பதையும் நான்
தெரிந்துள்ளேன். ஆயினும் உள்ளன்பு மிகுதியால் இச் செய்கையிலே
துணிவுகொண்டுவிட்டேன். சாக்கியன் எறிந்த கற்களையும் சிவபிரான் மலர்களாகக்
கருதி அங்கீகரிக்கவில்லையா? அதனையொப்ப, எனது குணமற்ற பூக்களையும்
பாரதமாதா கருணையுடன் ஏற்றருளுக!

-- சி. சுப்பிரமணிய பாரதி
1908 வருடம் ஜனவரி மாதம் 10-ம் தேதி மைலாப்பூர்.
----------

ஜன்ம பூமி’(“ஸ்வதேச கீதங்கள்” -- இரண்டாம் பாகம், 1909) என்னும்
நூலிலுள்ள சமர்ப்பணம் வருமாறு:

சமர்ப்பணம்

எனக்கு ஒரு கடிகையிலே, மாதாவினது மெய்த்தொண்டின் தன்மையையும், துறவுப்
பெருமையையும், சொல்லாமலுணர்த்திய குருமணியும், பகவான் விவேகானந்தருடைய
தர்ம புத்திரியும் ஆகிய ஸ்ரீமதி நிவேதிதாதேவிக்கு இந்நூலை
சமர்ப்பிக்கின்றேன்.

-- சி. சுப்பிரமணிய பாரதி்
> --
> You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
> To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/9BB488B0-3447-47EE-9FD2-8A6F53CFDF7D%40gmail.com.

Subbaier Ramasami

unread,
Oct 16, 2025, 11:24:14 AM (6 days ago) Oct 16
to santhav...@googlegroups.com
நல்ல மொழியாக்கம்

இலந்தை

On Thu, Oct 16, 2025 at 8:00 AM இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:

நின்ன தாகி மன்னுக! - வருநாள்

--

இமயவரம்பன்

unread,
Oct 16, 2025, 1:00:39 PM (6 days ago) Oct 16
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. கணேசன்!

இமயவரம்பன்

unread,
Oct 16, 2025, 1:02:23 PM (6 days ago) Oct 16
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
தலைவருக்கு மிக்க நன்றி!

Mohanarangan V Srirangam

unread,
Oct 16, 2025, 1:49:57 PM (6 days ago) Oct 16
to santhav...@googlegroups.com
நன்றாக இருக்கிறது. ஆயினும் உங்கள் முத்திரை விழவில்லை. வேறு ஒரு மூர்ச்சனையில் செய்து பாருங்கள். மேலும் சிறக்க. 

***

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
image0.png

இமயவரம்பன்

unread,
Oct 16, 2025, 3:30:28 PM (6 days ago) Oct 16
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. மோகனரங்கன். தங்கள் கருத்து மிகப் பயனுள்ளதாக இருக்கிறது.

> On Oct 16, 2025, at 1:49 PM, Mohanarangan V Srirangam <ranga...@gmail.com> wrote:
>
> 
Reply all
Reply to author
Forward
0 new messages