கொடுத்த கருத்திற்கு விடுத்த வெண்பா - 3
கொடுத்த கருத்து:
*ஆன்மீக அமைதி*
1. வார்த்தைகள் அமைதியை உண்டாக்கினால் அதன் பெயர் - *மந்திரம்*.
2.செயல்கள் அமைதியை உண்டாக்கினால் அதன் பெயர் - *தந்திரம்*.
3.ஓசை அமைதியை உண்டாக்கினால் அதன் பெயர் - *இசை*.
4.பார்வை அமைதியை உண்டாக்கினால் அதன் பெயர் - *கடாக்ஷம்*.
5.அமரும் நிலை அமைதியை உருவாக்கினால் அதன் பெயர் - *யோகா*.
6.மனம் அமைதியை உருவாக்கினால் அதன் பெயர்- *தியானம்.*
7.சுவாசம் அமைதியை உருவாக்கினால் அதன் பெயர் - *பிராணாயாமம்*.
8.சக்தி அமைதியை உருவாக்கினால் அதன் பெயர் - *குண்டலினி*.
9.இடம் அமைதியை தருமானால் அதன் பெயர் *கோவில்*.
10.உறவுகள் அமைதியைத் தரும் ஆனால் அதன் பெயர் - *குடும்பம்*.
11.தன்னுணர்வை இழப்பது அமைதியைத் தருமானால் அதன் பெயர் - *அன்பு*.
12. இறையன்பில் தன்னை இழப்பது அமைதியைத் தருமானால் அதன் பெயர் - *பக்தி*
விடுத்த வெண்பா
*ஆன்மிக அமைதி*
மந்திரந் தந்திரம் மன்னுமிசை யோகமிடம்
சிந்தைத் தியானஞ் செறிமூச்சு - செந்திறத்தில்
பக்தி யிறையருள் பந்தஞ்சூழ் அன்புடன்
சித்திதரும் சாந்தம் தெளி.
பிராணயாமம் - செறிமூச்சு (என்றன் பிரயோகம்)
குண்டலினி - செந்திறம் (என்றன் பிரயோகம்)
கடாக்ஷம் - இறையருள்
பக்தி, சித்தி - ஓரின எதுகை (வல்லின எதுகை)
காட்டு:
தக்கார் தகவில ரென்ப தவரவர்
எச்சத்தின் காணப் படும்.
(திருக்குறள் 114)