Based on what I hear and see in TN today, especially within the Brahmana community. Thank you for your indulgence.
********************
(அறுசீர் விருத்தம்)
பெற்றோர்க் குதவும் பிள்ளைகடம்
பெண்ணுக் குதவார் எனத்துணிவார்
சற்றே நியமம் பயில்வோரைச்
சகியார் மறையுஞ் சாத்திரமுங்
கற்றோர்க் குரிய மதிப்பளிக்கக்
கருதார் மரபில் ஒருசிறிதும்
பற்றே இலரைப் பாரதத்திற்
படைத்த தயனின் விளையாட்டோ?
பதம் பிரித்து:
பெற்றோர்க்கு உதவும் பிள்ளைகள் தம் பெண்ணுக்கு உதவார் எனத் துணிவார்
சற்றே நியமம் பயில்வோரைச் சகியார்; மறையும் சாத்திரமும்
கற்றோர்க்கு உரிய மதிப்பு அளிக்கக் கருதார்; மரபில் ஒரு சிறிதும்
பற்றே இலரைப் பாரதத்தில் படைத்தது அயனின் விளையாட்டோ?
********************