kayilaya dharisanam

8 views
Skip to first unread message

Subbaier Ramasami

unread,
Jun 8, 2026, 11:45:37 AM (4 days ago) Jun 8
to santhavasantham
கடந்த மூன்று தினங்களாக இரவில் எனக்குக் கைலாய தரிசனம் கிடைத்துக் கொண்டிருக்கிறது
என் மகன் அவன் மனைவியுடனும் முப்பதுக்கும் மேற்பட்ட அன்பர்களுடனும் கயிலாய யாத்திரை சென்றிருக்கிறான். அவன் ஒவ்வொரு கோணத்திலும் கையிலாய மலையை நேரில் காணும் போதும் என்னைத் தொடார்பு கொண்டு வீடியோ மூலம் நேரடியாகவே காட்டுகிறேன். மூன்று தினங்களாகக் கைலாய தரிசனம்  வெவ்வேறு திசைகளிலிருந்து கிடைத்துக்கொண்டிருக்கிறது.

மூன்று முறை வெவ்வேறு கோணங்களில் கைலாயக் காட்சி கிடைத்தது. தெற்குப்புறக் காட்சி. நந்தி முன்பாகப் படுத்திருக்க மேனி முழுதும் வெண்ணீறு பூசியது போன்ற அற்புதமான கைலாயக் காட்சி. என்னே ஆச்சர்யம். கைலாய மலை உரித்துவைத்த வெள்ளை வெங்காயம் போலக் காட்சியளித்தது.

 

கண்டேன் கயிலைமலை கண்டு மனநெகிழ்ச்சி
கொண்டேன், அடடா குதூகலம்-  அண்டியவர்க்(கு)
ஆனா நலமளிக்கும் அண்ணலே என்றனுக்கு
ஞானானந் தம்தா நயந்து

 

களிப்போடு நந்திமுன்னே காட்சிதர தேகம்
வெளுப்பாய்க் கயிலைமலை வீற்றே- ஒளிர்ந்திருக்க
என்னே பரவசம் எவ்வளவு பேரழகு
அன்னேயீ தன்றோ அருள்!

 

உரித்துவைத்த வெள்ளைநிற உள்ளியென நீறு
தரித்திருந்த  கைலாயத் தானே-  பொருப்பெனவே
காட்சி யளிக்கும் கருணையினை என்சொல்வேன்
மீட்சியினுக் கீதன்றோ வித்து

 

இலந்தை

7-6-2026

Siva Siva

unread,
Jun 8, 2026, 2:52:56 PM (4 days ago) Jun 8
to santhav...@googlegroups.com
Nice.

/  ஆனா நலமளிக்கும் / 

Nice phrasing.

/ உரித்துவைத்த வெள்ளைநிற உள்ளியென நீறு
தரித்திருந்த  கைலாயத் தானே /

ஈசனுக்கு இது புதிய உவமைபோல்!

V. Subramanian



On Mon, Jun 8, 2026 at 11:45 AM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:

....கைலாய மலை உரித்துவைத்த வெள்ளை வெங்காயம் போலக் காட்சியளித்தது.

 

...

Ram Ramakrishnan

unread,
Jun 8, 2026, 3:38:39 PM (4 days ago) Jun 8
to santhav...@googlegroups.com
அருமையான கையிலைமலைத் தரிசனத்திற்கு அடியேனையும் அழைத்துச் சென்றீர், தலைவரே. 

மிக்க நன்றி.



அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)



On Mon, Jun 8, 2026 at 11:45 AM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBBP98okAuxMnbO5cC7LdUAPD8ZLxJ9JyrwjivyJBrNVYQ%40mail.gmail.com.

இமயவரம்பன்

unread,
Jun 8, 2026, 5:29:57 PM (4 days ago) Jun 8
to santhav...@googlegroups.com
காண்பதற்கு அரிய கைலாய மலையை உவமைகளுடன் நம் முன்னே காட்டும் கவிதைகள் மிக அருமை, தலைவரே!

Kaviyogi Vedham

unread,
Jun 8, 2026, 8:41:51 PM (4 days ago) Jun 8
to santhav...@googlegroups.com
அபாரம்..  வாழ்க
யோ

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Subbaier Ramasami

unread,
Jun 8, 2026, 10:41:43 PM (4 days ago) Jun 8
to santhav...@googlegroups.com
இங்கே வெங்காய உவமை வருவதற்கு ஒரு காரணமிருக்கிறது.  அது இரகசியமானாலும் இங்கே சொல்லுகிறேன்.

07-6-2026   7 ஜூன் 2026

இரவு 2 மணி அளவில் ஒரு கனவு. வெட்ட வெளியில் நானும் என்மகன் சுந்தரும் எனது ஸ்ரீவித்யா குருவும்  நடந்து கொண்டிருக்கிறோம். “இங்கேயே உங்களுக்கு ஒரு மந்திரம் கொடுக்கப்போகிறேன். ஆனால் அதை நீங்கள் பெறுவதற்குமுன் நான் கேட்கும் மந்திரத்தை நீங்கள் கையில் ஒரு வெங்காயத்தை வைத்துக்கொண்டு சொல்லவேண்டும்.சரியாகச் சொன்னால் மந்திரம் கிடைக்கும்  எங்காவது சென்று ஒரு வெங்காயத்தைக் கொண்டு வாருங்கள்” என்றார் குரு.  நான் காசைத் தேடினேன். “விலைக்கெல்லாம் வாங்கக் கூடாது. அதுவாக உங்களுக்குக் கிடைக்கவேண்டும்.”என்றார் குரு. . அதிசயமாக குருவின் முன்னாலேயே ஒரு பெரிய திரணமான வெங்காயம் கிடைத்தது. சரி ஜோடசியைச் சொல்லி கீழே விழுந்து நமஸ்காரம் பண்ணுங்கள் என்றார். ஜோடஸியைச் சொல்லத் தொடங்கினேன்.  அப்பா தப்பு என்றான் பையன். தினமும் சரியாகத்தானே சொல்லுகிறேன்.  இன்றேன் சரியாக வரவில்லை. மூப்பாலே மறதி வந்துவிட்டதோ?  மறதி வந்துவிட்டால் மந்திரம் வேண்டாம் என்று கத்தினேன். விழிப்பு வந்துவிட்டது. உடனே கம்ப்யூட்டரைத் திறந்து ஜோடசி மந்திரத்தைச் சரிபார்த்துக்கொண்டேன். அப்பொழுது கைலாய யாத்திரை சென்றிருக்கும் என் பையனிடமிருந்து ஒரு வீடியோ அழைப்பு வந்தது. “அப்பா கைலாய மலையைப் பார்  என்று சொல்லிக் கைலாய மலைக் காட்சியை நேரடியாகக் காட்டினான். ஓம் நமசிவாய என்று சொல்லிக் கை கூப்பினேன். மிகத் தெளிவான கைலாயக் காட்சி. மெய்சிலிர்த்துவிட்டேன்.

மூன்று முறை வெவ்வேறு கோணங்களில் கைலாயக் காட்சி கிடைத்தது. தெற்குப்புறக் காட்சி. நந்தி முன்பாகப் படுத்திருக்க மேனி முழுதும் வெண்ணீறு பூசியது போன்ற அற்புதமான கைலாயக் காட்சி. என்னே ஆச்சர்யம். கைலாய மலை உரித்துவைத்த வெள்ளை வெங்காயம் போலக் காட்சியளித்தது.


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Jun 8, 2026, 11:21:43 PM (4 days ago) Jun 8
to santhav...@googlegroups.com
Nice.
Thanks.

V. Subramanian

Kaviyogi Vedham

unread,
Jun 9, 2026, 10:53:39 AM (3 days ago) Jun 9
to santhav...@googlegroups.com
attakasam  ilandhai sir,
  yogiyar

On Mon, Jun 8, 2026 at 10:41 PM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:
Reply all
Reply to author
Forward
0 new messages