’மானுடம் போற்றுதும்’: ரமணியின் கதைகள்

246 views
Skip to first unread message

ramaNi

unread,
Aug 7, 2014, 12:41:13 AM8/7/14
to santhav...@googlegroups.com
அன்புடையீர்!

கவிதையில் புலமை பெற்றோர் தம் கதைப் புலமையையும் இங்குப் பகிர்ந்துகொள்வதுபோல்
நானும் என் கதைகளை இணைப்பாகத் தர விரும்புகிறேன். அன்பர்களும் அறிஞர்களும்
படித்துக் கருத்துச் சொல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இணைப்பு:
’மானுடம் போற்றுதும்’, சிறுகதை


அன்புடன்,
ரமணி

*****

ramaNi-ss-mp.pdf

Kaviyogi Vedham

unread,
Aug 7, 2014, 4:24:52 AM8/7/14
to santhavasantham
 சரி.. 1990 இல் நீங்க எழுதிய  பழைய மாமாங்கக் கதையை இப்போதுதான் பகிர்கின்றீர்கள்.
 கதை நன்று. ஆனால் இத்தனை ஆங்கிலம் ஏன் என த்தோன்றியது. படிக்க அது இடைஞ்சல் செய்ததே! சரி. நீங்க இப்போது புதிதாக இயற்கையான தமிழ்-நடையில் எழுதிய கதையை இவண் இடுமாறு வேண்டுகிறேன்.  முயல்க..நன்றி,
 (என்ன சொல்றீங்க மீ. விசு அவர்களே!.. சரிதானே??)-
 யோகியார்

வாழ்க அனைவரும் வளமுடனே 
என் குருஜி லஹரி பாபாஜி
ஆசியினால்.
கவியோகி வேதம்(kaviyogi vedham)-
PL. visit my blog(for my poems etc)at http;//kaviyogi-vedham.blogspot.com/
kaviyogi vedham(yogiyaar)தலைவர்..
Founder, Sree Laharibabaji yogasram,
2/682, 10th cross St,...Renga reddy garden,
Neelankarai, Chennai-600115--செல் எண் 95000-88528
 



--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

ramaNi

unread,
Aug 7, 2014, 10:14:58 AM8/7/14
to santhav...@googlegroups.com
அன்புள்ள யோகியார் அவர்களுக்கு,

வணக்கம். என் சிறுகதை உங்களுக்குப் பிடித்திருப்பது மகிழ்ச்சி.

நான் கதை எழுதத் தொடங்கிய பின்-எண்பது முன்-தொண்ணூறுகளில் அவற்றை
ஜனரஞ்சகப் பத்திரிகைகளுக்காக எழுதியதால் கதை மாந்தர் பொறுத்து இத்தனை
ஆங்கிலம் சேர்க்க வேண்டியதாயிற்று. எனினும் கதாசிரியர் நடை என்று வரும்போது நான்
பெரிதும் ஆங்கிலம் தவிர்த்தே எழுத முயன்றேன்.

நான் எழுதிய முதல் ஐந்து சிறுகதைகளில் மூன்று வெளிவந்தன. முதலாக எழுதியது ’இதயம் பேசுகிறது’ மணியனின்
’சிறுகதைக் களஞ்சியம்’ பத்திரிகையில் பிரசுரமாயிற்று. அதன்பின் இன்னொன்று ’இதயம் பேசுகிறது’ இதழில் வெளிவந்தது.
மூன்றாவது கதை 1990-ஆம் ஆண்டின் ’அமுதசுரபி’ சிறுகதை போட்டியில் முதல் பரிசைப் பகிர்ந்துகொண்ட
இரு கதைகளில் ஒன்று. இப்போது பகிர்ந்தது இதுவரையில் அச்சில் வராத என் ஐந்தாவது சிறுகதை.

நன்கு அமைந்த ஒரு சிறுகதை எழுதுவது என்பது பின்னர் பிரசவ வேதனை யானதால் ஐந்து கதைகளுக்குப் பின்
கதை எழுதுவதையே விட்டுவிட்டேன்! வங்கியில் பணிபுரிந்த கணிணித் துறையின் வேலைச் சுமையும் ஒரு காரணம்.
சமீபத்தில் மீண்டும் கதை எழுதும் உந்துதல் வர, ஓரிரு கதைகள் முயன்றேன். நீங்கள் சொல்வதுபோல் ’இயற்கையான தமிழ்
நடையில்’ எழுதிய கதை ஒன்றை இணைத்துள்ளேன். நீங்களும் மற்ற அன்பர்களும் படித்துக் கருத்துத் தெரிவிக்குமாறு

கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்,
ரமணி

*****


00ramaNi-ss-chArbu.pdf

Kaviyogi Vedham

unread,
Aug 7, 2014, 10:28:25 AM8/7/14
to santhavasantham
ஓ! சொல்லுங்க சாரே! நீங்க எந்த வங்கியில் இருந்து பின் இப்போ ஓய்வு பெற்றீர்கள்?.. யான் ரிஸர்வ் வங்கியில் வங்கித் தணிக்கையாளர் ஆக இருந்து
(Banks' inspector) 1996இல் விருப்ப ஓய்வு பெற்றேன்.
 இப்போ உங்க வயசு 68 இருக்குமா? உடன் மடல் இடல் கடன்.
 கதை படித்துவருகின்றேன். எழுதுவேன்.
 2) உங்க வீட்டு முகவரி செல் எண் எழுதுங்கள். எங்க மாத ஏடு இலக்கியவேல் அனுப்புகின்றேன்.புதிய தரமான விடயங்கள் அடங்கியது. நம்ம மீ. விசு அடிக்கடி எழுதுகிறார். இலந்தையும் எழுதுகின்றார்..
 யோகியார்
 

வாழ்க அனைவரும் வளமுடனே 
என் குருஜி லஹரி பாபாஜி
ஆசியினால்.
கவியோகி வேதம்(kaviyogi vedham)-
PL. visit my blog(for my poems etc)at http;//kaviyogi-vedham.blogspot.com/
kaviyogi vedham(yogiyaar)தலைவர்..
Founder, Sree Laharibabaji yogasram,
2/682, 10th cross St,...Renga reddy garden,
Neelankarai, Chennai-600115--செல் எண் 95000-88528
 .

Kaviyogi Vedham

unread,
Aug 7, 2014, 10:40:13 AM8/7/14
to santhavasantham
ஆகா.. ரமணீ!! முழுதும் படித்து முடித்தேன் இப்போது.
 ரொம்ப நல்ல கதை. இயற்கையான, நல்ல ஸஸ்பென்ஸ் கூடிய சிறுகதை. இது எதில் வந்தது? எழுதுக,
 யோகியார் 

ramaNi

unread,
Aug 7, 2014, 11:06:16 AM8/7/14
to santhav...@googlegroups.com
அன்புள்ள யோகியார் அவர்களுக்கு வணக்கம்.

நான் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 1972-1998 வரை வேலை பார்த்துக்
கடைசியில் scale 2 அதிகாரியாக விருப்ப ஓய்வு வாங்கிக்கொண்டேன்.
வங்கியில் கணிணித் துறையில் இருந்ததாலும் பதவி உயர்வு என்னை மீண்டும் கிளைகளின்
பொதுச் சேவைக்கு மாற்றிவிடும் என்பதாலும் விருப்ப ஓய்வு கொண்டேன். அதன்பின் ஒரு
IT Company-இல் பதினான்கு மாதங்கள் வேலை பார்த்துப் பின் அதையும்
விட்டுவிட்டுச் சில காலம் வீட்டில் computer programming சொல்லிக்
கொடுத்து, முடிவில் 2004 முதல் I am well and truly retired.

உங்கள் சுயவிவரங்கள் இப்போது மீண்டும் பார்த்ததில் நீங்கள் ரிசர்வ் வங்கியில் வங்கித்
தணிக்கையாளராக இருந்தது தெரிந்தது. இப்போது எனக்கு வயது 63 ஓடுகிறது.
நீங்கள் என்னை விடப் பத்து வயது மூத்தவர்.

உங்கள் ’இலக்கியவேல்’ ஏடு அனுப்புவது குறித்து மகிழ்ச்சி. அதற்கான சந்தாத்
தொகையை அனுப்பிவிடுகிறேன்.

என் முகவரி:
G. GURUNATHAN
17, SETHU NARAYANAN STREET, CHITLAPAKKAM
CHENNAI - 600064
cell phone: 9445311809

என் ’சார்பு எழுத்துகள்’ கதை உங்களுக்குப் பிடித்திருந்தது மகிழ்ச்சி.
இதை நான் அச்சில் வெளியிட முயலவில்லை. தமிழ் இணையக் குழுமங்கள்
சிலவற்றில் இதை எழுதிய புதிதில் வெளியிட்டேன். பொருந்துமானால் உங்கள்
ஏட்டில் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.


அன்புடன்,
ரமணி

*****

Kaviyogi Vedham

unread,
Aug 7, 2014, 11:43:45 AM8/7/14
to santhavasantham
ரொம்ப மகிழ்ச்சி நல்ல எழுத்தாளரே!..
 அப்படியே செய்வோம். உம்ம கதையை எங்க எடிட்டர் கவிமணி சந்தருக்கு இப்போ அனுப்பிவிட்டேன்.. பிரசுரிப்பார். கதை நீளம் கருதி அவர் சுருக்கினால்
 தப்பாக எடுத்துக்கொள்ளக்கூடாது. மொத்தம்  5 பக்கத்துக்குள் சுருக்கித்தாருங்களேன் நீங்களே.. சரியா? ரொம்ப நல்லகதை. சுருக்கம் தேவை.
 இதோ இன்னும் இரண்டு நாளில் இலக்கியவேல் வரும். 
200ரூ ஆக எமக்கு அனுப்பி இதன் உறுப்பினராகச் சேருங்களேன். சரியா?
 வாழ்த்துக்கள்,
 யோகியார்

M. Viswanathan

unread,
Aug 11, 2014, 1:34:24 AM8/11/14
to santhav...@googlegroups.com, Sai Chow
அன்புக்குரிய திரு. இரமணி அவர்களுக்கு,

வணக்கம்.

தங்களின் மானுடம் போற்றுதும், சார்பு எழுத்துகள் இரண்டு கதைகளிலும் "கரு" நன்றாக உள்ளது. உருவில் இன்னும் கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும்.கதையின் நீளம் சிறுகதையின் நேர்த்தியைப் பாதிக்கும். மிகக்குறைந்த கதாபாத்திரங்கள், கச்சிதமான உரையாடல்கள், "பளீர்" முடிவு. இவைகள் சிறுகதைக்கு அழகூட்டும்.
இது உங்களால் முடியும். வாழ்த்துகள்.

அன்பன்,
மீ.விசுவநாதன்


ramaNi

unread,
Aug 11, 2014, 2:21:48 AM8/11/14
to santhav...@googlegroups.com, sai...@gmail.com
அன்புடையீர்!

வணக்கம். தங்கள் அறிவுரைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

நான் சிறுகதை எழுதத் தொடங்கிய எண்பது-தொண்ணூறுகளில் விகடன், கல்கி, சாவி, இதயம் பேசுகிறது, அமுதசுரபி போன்ற
ஜனரஞ்சக/இலக்கியப் பத்திரிகைகளில் சிறுகதையின் நீளம் அச்சிட்ட தாளில் ஏழெட்டு பக்கங்கள் என்று இருந்தது.
பொதுவாகப் பத்திரிகைகள் பக்கத்துக்கு இரண்டு பத்தி (two column pages) என்று பதிப்பித்ததாலும்,
ஒரு பத்தி கையெழுத்தில் ஒரு முழுத்தாள் என்பதாலும், சிறுகதை எழுத்தாளர் ஒரு கதையைப் பன்னிரண்டு-பதினாலு
முழுத்தாள் அளவு எழுதுவது வழக்கமாய் இருந்தது. எனவே என் கதைகள் இந்த நீளத்தில் அமைந்தன.

ஒரு சிறுகதையின் அளவிலக்கணம் அது ஒரே தடவையில் (in one sitting) படிக்க முடிவதாக இருக்கவேண்டும்
என்பதே. இன்றைய அவசர யுகத்தில் இந்த நீளம் ஐநுறு-ஆயிரம் வார்த்தைகள் என்ற அளவுக்குச் சுருங்கிவிட்டது.
இந்த அளவில் நான் எழுதிய ஒரு கதையை அடுத்த பதிவில். கதை பற்றிய கருத்துக்களை வரவேற்கிறேன்.


அன்புடன்,
ரமணி


*****


ramaNi

unread,
Aug 11, 2014, 2:22:44 AM8/11/14
to santhav...@googlegroups.com, sai...@gmail.com
யத்கிஞ்ச ப்ராஹ்மணோத்தமம்
பாட்டியும் பேரனும்

’ப்ராஹ்மண-பந்து’

['யத்கிஞ்ச ப்ராஹ்மணோத்தமம்' என்பது அந்தணர்கள் தம் குலதர்மமாகப்பட்ட, வள்ளுவர் குறிக்கும் அறுதொழில்களையும், இந்த நாளிலும் தம்மால் இயன்ற அளவு செய்து வருவது அவர்களுக்கு உத்தமாக அமையும் என்பதாகும்.]

"பாட்டி பாட்டீ, நோக்கு நான் ஹெல்ப் பண்ணறேன்", என்றான் ஆறு வயதுப் பேரன். "நீதான் நேக்கு சொல்லிக்கொடுத்திருக்கையே!"

பாட்டியின் கையை பேரன் பிடித்துக்கொள்ள, இருவரும் சேர்ந்து ஹாலில் உயரே மூங்கில் கொடியில் உலர்த்தியிருந்த பாட்டியின் மடிப்புடவையை லாவகமாக ஒரு நீண்ட மூங்கில் கழியால் மேலே படாமல் எடுத்துவிட, பாட்டி, "இனி நான் பாத்துக்கிரேண்டா கண்ணா!", என்றாள். அம்மா முகவாய்க்கட்டையை ஒருதரம் தன் தோளில் இடித்தவாறே கிச்சனுக்குள் சென்றாள். அப்பா வழக்கம்போல் சோஃபாவில் உட்கார்ந்தபடி பேப்பரில் மூழ்கியிருந்தார்.

பாட்டி மடியாக ஸ்நானம் பண்ணியவுடன், பேரனும் ஸ்நானம்பண்ணிவிட்டு ரெடியாக, இருவரும் அந்த சின்ன பூஜை அறைக்குள் சென்றனர்.

"பாட்டி, இன்னிக்கு ஞாயித்துக்கிழமை. அதனால, நான் ஸந்த்யா வந்தனம் பண்ணறதை நீ கூட இருந்து பார்க்கணும்". "ஆட்டும்டா கண்ணா", என்றாள் பாட்டி. பேரனின் ஸந்தியில் பாட்டி சிற்சில உச்சரிப்பு திருத்தங்கள் செய்தபோது, "எப்படி பாட்டி உனக்கு இதெல்லாம் தெரியும்? தாத்தா வாத்யாரா இருந்தார்னு சொல்வியே, அவர் உனக்கு சொல்லிக்கொடுத்தாரா?" என்றான் பேரன். "நானும் நாளைக்குத் தாத்தா மாதிரி ஆவேன், அதுதான் நேக்குப்பிடிக்கும்".

பின்னர், பாட்டி ஷ்லோகங்கள் சொல்ல, பேரன் அவற்றை அழகாகத் திருப்பிச் சொல்ல பூஜையறை களைகட்டியது. இதற்குள் அப்பாவும் குளித்துவிட--அம்மா காலையிலேயே வழக்கம்போல் பாட்டியைத் திட்டியபடி குளித்துவிட்டிருந்தாள்--பாட்டியும் பேரனும் தரையில் உட்காந்துகொண்டு சாப்பிட்டனர். அதன்பின், அம்மாவும் அப்பாவும் டைனிங் டேபிளில் அமர்ந்து அரட்டையடித்தாவாறே சாப்பிட்டு முடிக்க, பேரன் அதுவரை பாட்டியிடம் கதைகள் கேட்டுக்கொண்டிருந்துவிட்டு, அம்மாவின் "போதும் கதை கேட்டது, போய் ஹோம்வர்க் பண்ணு" குரல் ஒலிக்க, படிக்கச் சென்றான்.

மாலை அம்மாவும் அப்பாவும் ஷாப்பிங் சென்றுவிட, பாட்டியும் பேரனும் கோவிலுக்குப் போனார்கள். பாட்டி பேரனை வழக்கம்போல் ஒவ்வொரு ஸந்நிதியாக அழைத்துப்போய், அந்தந்த ஸ்வாமிகளுக்குரிய ஷ்லோகங்களையும் கதைகளையும் சொன்னாள். தீபாராதனை பார்த்துவிட்டு ஸ்வாமி தரிசனம் செய்துவிட்டு, பேரன் கையில் விபூதி-குங்குமம் ஈரமாகக் கொண்டுவந்தபோது அப்பா-அம்மா இன்னும் வீடு திரும்பவில்லை என்று தெரிந்தது. பாட்டி தன் ஜபமாலையை உருட்டத்தொடங்க, பேரன் கொஞ்சநேரம் பாட்டியிடம் கதைகேட்டுவிட்டு, ஸ்கூல் பாடங்களை உரக்கப் படிக்க ஆரம்பித்தான்.

அம்மா பாட்டியைக் கரித்துக்கொட்டுவது வழக்கம்தான் என்றாலும் ஒரு நாள் இரவு மென்குரலில் அப்பாவிடம் தீர்மானமாகச் சொன்னாள்:

"இதப்பாருங்கோ, இதுக்கு ஏதாவது வழி பண்ணியே ஆகணும். என்னால இப்படி கஷ்டப்பட முடியாது. இந்தப்பிள்ளையும் உங்கம்மாவையே சுத்திச்சுத்தி வரது, நானும் தாத்தா மாதிரி வேத வாத்யாராவேன்னு இப்பவே பெருமையா சொல்லிக்கறது. தான் கண்ணைமூடறதுக்குள்ள பேரனுக்குப் பூணல் போடனும்னு சொன்னா உங்கம்மா. நீங்களும் சரின்னு ஆறு வயசுலேயே போட்டுவெச்சேள். இப்ப இந்தப்பிள்ளை நம்பளையே அலக்ஷியம் பண்ணறது. ஏம்மா உனக்கு பாட்டி மாதிரி ஸ்தோத்ரம்லாம் தெரியலே, நீ ஏன் பூஜை பண்றதில்ல, அப்பா ஏன் ஸந்திகூடப் பண்ணமாட்டேன்றா-ன்னு கேள்விவேற. அப்படியே தாத்தாவை உரிச்சு வெச்சிருக்கு. எல்லாம் அந்தக்கிழம் பண்றவேல. நாம் ரெண்டுபேரும் ஒடியாடி ஏதோ கொஞ்சம் சம்பாதிக்கறதால கிழம் சொகுசா அனுபவிக்கிறது. இல்லேன்னா என்னிக்கோ ஓல்டேஜ் ஹோம்ல சேர்த்திருங்கோன்னு சொல்லியிருப்பேன்."

"இவ்வளவுநாள் தள்ளினே. அம்மாக்கு வயசு எண்பதைத்தாண்டியாச்சு. வியாதி-வெக்கை இல்லேனால்லும் எவ்ளோ வீக்கா இருக்கா பாரு. எதோ ஒரு ஸங்கல்பத்ல மற்றவாளுக்கு சுமையா இருக்கக்கூடாதுன்னு தன் கார்யத்த தானே பார்த்துக்கறா. அந்த அளவுக்கு உனக்கும் எனக்கும் வசதிதானே? நம்ப சம்பாத்யத்ல குழந்தையை எஞ்ஜினீரிங், சீ.ஏ.ன்னு படிக்கவெக்க முடியாதுதான். நடக்க நடக்க பார்த்துப்பமே."

அவர்கள் அதிர்ஷ்டமோ என்னவோ பாட்டி அடுத்த வாரமே ஒருநாள் ராத்ரித் தூக்கத்திலேயே தன் உடலை நீத்தாள். இவர்களுக்கு ஒரு சொல்லமுடியாத ரிலீஃப். பேரனால்தான் தாங்கமுடியவில்லை.

பாட்டியின் படுக்கையில் தலையணை அடியில் அப்பா-அம்மா ஒரு கவரைப் பார்த்தார்கள். பிரித்தபோது அதில் இரண்டு லக்ஷம் ரூபாய்க்கு அப்பா பேரில் ஒரு செக் இருந்தது. கூடவே ஒரு சின்னக்கடுதாசி, ஒரு மாதம் முந்தய தேதியிட்டு. "ப்ரிய புத்ர, ஸ்னுஷா! உங்களுக்கு அதிக ஷ்ரமமாக, பாரமாக இல்லாமல் ஷீக்ரமே கண்ணைமூடிவிடவேணுமின்னுதான் அனுதினமும் பகவானைப் ப்ரார்த்தனை பண்ணினேன். உங்கப்பா ஆசீர்வாதத்தால் அது விரைவில் நிறைவேறும்னு நினைக்கிறேன். உங்கப்பா சேமிப்புடன் நான் சிறுகச்சிறுக சேர்த்து வைத்திருந்த இந்தப் பணத்தையும், லாக்கரில் உள்ள என் பத்துப்பவுன் நகைகளையும் நீங்கள் இஷ்டம்போல் உபயோகித்துக்கொள்ளலாம். ஆனால் ஒரே ஒரு கண்டிஷன். என் பேரனை,--அவன் விரும்பினால் மட்டுமே--அவனது ஏழாவது வயதில் ஒரு வேதபாடஷாலையில் சேர்த்து அவன் (தன் தாத்தா போல) தொடர்ந்து வேத அத்யயனம் பண்ண நீங்கள் அனுமதிக்கவேண்டும். செய்வீர்கள் என்று நம்புகிறேன்."

பேரனுக்குப் பாட்டியின் பணமோ கடிதமோபற்றி ஒன்றும் தெரியாது. பாட்டியின் அந்திம காரியங்கள் முடிந்ததும் அப்பாவின் முன்னிலையில் அம்மா ஒரு நாள் மாலை பேரனிடம் சொன்னாள்: "கண்ணா, கவலைப்படாதே. உனக்கு நாங்கள் இருக்கிறோம்."

"போம்மா, எனக்கு பாட்டிதான் வேணும். உனக்கு அவா மாதிரி கதை சொல்லத்தெரியுமா? நாலு ஷ்லோகம் சொல்லித்தரத் தெரியுமா? கோவிலுக்கு கூடவந்து எனக்கு சொல்லிக்கொடுக்க முடியுமா? யாருக்கு வேணும் நீயும் இந்த ஸ்கூல்லயும் சொல்லித்தற நர்சரி ரைம், அலைஸ் இன் வொண்டர்லாண்ட், மடில்டா கதைலாம்?"

"அதுதாண்டா இனிமே நமக்கு லைஃப் கண்ணா! நீ நல்லாப்படிச்சு, எஞ்ஜினீரிங் காலேஜ் சேர்ந்து கம்ப்யூட்டர் எஞ்ஜினீயர் ஆகணும். அப்போதான் எங்களமாதிரி இல்லாம, கைநிறைய சம்பாதிக்கலாம். உன்கூடப்படிக்கற ஜனனியோட அண்ணா மாதிரி ஃபாரின் போகலாம், புரிஞ்சுதா?" என்றனர் அம்மாவும் அப்பாவும் கோரஸாக.

"அதெல்லாம் முடியாது. நான் தாத்தா மாதிரி வேத பாடசாலைல படிச்சு வேதம்தான் சொல்வேன். அதுல உங்களுக்கென்ன கஷ்டம்?" என்றான் பேரன்.

"கிழம் தப்பாம ஒரு வாரிசை உருவாக்கிட்டுத்தான் போயிருக்கு", என்றாள் அம்மா.

*** *** ***


 

Kaviyogi Vedham

unread,
Aug 11, 2014, 3:10:13 AM8/11/14
to santhavasantham
என் அன்பு கவிஞர் விஸ்வநாத்,
 இதையே என் கருத்தாக அன்பர் ரமணியிடம் சொன்னேன். ஒரு 5 பக்க ஏ4 சைஸுக்கு  அந்த நல்ல கதையைச் சுருக்கித்தந்தால் இலக்கியவேலில் போடுவோம் என்றும் ‘ பயமுறுத்’தினேன்.! அப்படியும் அவர் நீங்களே பாருங்கள் என்றார்.அவருக்குப்பதிலாய் யான் இப்போது சிரமத்துடன் அவ்வேலையை ஏற்றுள்ளேன்.நன்றி ஒத்த கருத்துக்கு.
 யோகியார்

M. Viswanathan

unread,
Aug 11, 2014, 7:13:52 AM8/11/14
to santhav...@googlegroups.com
கவியோகியின் "கைகள்" எப்பொழுதுமே நல்ல படைப்புகளின் முதுகில் தட்டிக்கொடுத்து, அப்படியே அணைத்துக் கொள்ளும்.
மீ.விசுவநாதன்.

Kaviyogi Vedham

unread,
Aug 11, 2014, 1:28:13 PM8/11/14
to santhavasantham
மிக்க நன்றி கவிஞரே!
 யோகியார்

Arunachalam Sabapathy

unread,
Aug 12, 2014, 2:26:36 AM8/12/14
to santhav...@googlegroups.com
கதை சுவையாகவும் சிறுகதைக்குரிய அமைப்போடும் இருந்தது.நல்லவனா கெட்டவனா தெரியலையே அப்பா என்பதுபோல் முடிந்தது.

ramaNi

unread,
Aug 12, 2014, 8:48:51 AM8/12/14
to santhav...@googlegroups.com
வணக்கம் அருணாசலம் ஸார்!

கதை உங்களுக்குப் பிடித்தது குறித்து மகிழ்ச்சி. பாராட்டுக்கு நன்றி.

ரமணி

ramaNi

unread,
Aug 12, 2014, 9:21:20 AM8/12/14
to santhav...@googlegroups.com
ஒரு ஹாஸ்யக் கதை, பல வருடங்கள் முன்பு எழுதியதைப் பகிர்ந்துகொள்கிறேன்.
அன்பர்கள் படித்துப் பார்த்துக் கருத்துரைக்க வேண்டுகிறேன்.

இணைப்பு:
’புதிய கோணங்கி’: சிறுகதை

ரமணி

*****

ramaNi-ss-pk.pdf

Kaviyogi Vedham

unread,
Aug 12, 2014, 10:19:34 AM8/12/14
to santhavasantham
நாளை படித்துவிட்டு கருத்து சொல்கிறேன். நன்றி,
 யோகியார்

வாழ்க அனைவரும் வளமுடனே 
என் குருஜி லஹரி பாபாஜி
ஆசியினால்.
கவியோகி வேதம்(kaviyogi vedham)-
PL. visit my blog(for my poems etc)at http;//kaviyogi-vedham.blogspot.com/
kaviyogi vedham(yogiyaar)தலைவர்..
Founder, Sree Laharibabaji yogasram,
2/682, 10th cross St,...Renga reddy garden,
Neelankarai, Chennai-600115--செல் எண் 95000-88528
 



2014-08-12 18:51 GMT+05:30 ramaNi <sai...@gmail.com>:
Message has been deleted

ramaNi

unread,
Aug 15, 2014, 1:29:24 AM8/15/14
to santhav...@googlegroups.com
namaste.

Partake a hearty Independence Day Meal through this essay:

Attachment:
A South Indian Meal

Regards,
ramaNi

South Indian Meal.pdf

ramaNi

unread,
Aug 21, 2014, 9:52:44 PM8/21/14
to santhav...@googlegroups.com
கூட்டுக் குடும்பம் 
ரமணி, 11/04/2013

இளம் இந்திய ஆடவரும் பெண்டிரும் திரைகடலோடித் திரவியம் தேடி வாழ்வில் எல்லாவித சுதந்திரங்களையும் அனுபவித்துப் பார்க்க முற்படும் தற்காலத்தின் சமூகப் பரிணாம வளர்ச்சியில் இனிவரும் நாட்களில் பெண்ணியமும் ஆணியமும் ஒன்றுடன் ஒன்று மோதிப் போட்டி போட்டுக்கொண்டு வளர்ந்ததில் விளைந்த குட்டிக்கதை இது.

ஆறு வயதுச் சிறுவன் அகிலேஷ்: அக்கா, நீ மட்டும் அப்பாவை ஏன் டாடின்னு கூப்பிடறே? நாமட்டும் ஏன் அப்பான்னு கூப்பிடனும்? அப்பா வேற டாடி வேறயாக்கா? ரெண்டும் ஒரே மீனிங்தான்னு என் ஃப்ரெண்ட் அரவிந்த் சொல்றானே?

எட்டு வயதுச் சிறுமி மதுமிதா: ஆமாம் அகில் கண்ணா! ஒவ்வொரு ஸன்டேயும் என்னை வந்து கூட்டிட்டு போவாரே, ப்ரகாஷ் அங்கிள், அவர்தான் எனக்கு அப்பா. உங்கப்பா சூர்யா வந்து உனக்கு அப்பா, எனக்கு டாடி, ஸிம்பிள்!

அகிலேஷ்: அப்போ உங்கப்பாவை நான் டாடின்னு கூப்பிடலாமா? நம்ம ரெண்டு பேர்க்கும் ஒரே அம்மா, ஆனா அப்பா டாடி வேற வேறயா?

மதுமிதா: எனக்கும் உனக்கும் ஒரே அம்மாதான். ஆனா எனக்கு இன்னொரு மம்மி இருக்கா. அவளுக்கு ஒரு குட்டிப் பாப்பாவும் இருக்கு, தீபக்ங்கற பேர்ல, தெரியுமா? ஸோ, எனக்கு ரெண்டு தம்பிங்க இருக்காங்க.

அகிலேஷ்: ஏன்க்கா எனக்கு மட்டும் மம்மி இல்லை? அம்மா வந்ததும் கேக்கப் போறேன், எனக்கும் ஒரு மம்மி வேணும்.

மதுமிதா: ஷ்..ஷ்! சத்தம் போட்டுப் பேசாதே, பாட்டி எழுந்திடப் போறா! உனக்கு ஒரு ரகசியம் சொல்றேன், ஆனா நீ அதைப் பத்தி யார்ட்டயும், மெய்ன்னா அம்மா டாடிட்ட வாய்தவறிக் கூடக் கேட்டுறக் கூடாது, ப்ராமிஸ்?

அகிலேஷ்: ப்ராமிஸ்க்கா! என்ன ரகசியம் சொல்லேன்.

மதுமிதா: கூடிய சீக்கிரம் உனக்கும் ஒரு மம்மி வரப் போறா!

அகிலேஷ்: ஹை, எப்படிக்கா?

மதுமிதா: அம்மாவும் உங்கப்பாவும் இப்பல்லாம் அடிக்கடி சண்டை போட்டுக்கறா பத்தியா? அதனாலா, டாடி வேற கல்யாணம் பண்ணிக்கப் போறார். ஸோ, உனக்கு ஒரு மம்மி கிடைப்பா. ஆனா, நீ இதுபத்தி மூச்சு விடக்கூடாது.

அகிலேஷ் (கொஞ்சம் யோசித்து): ஏன்க்கா நம்ப அம்மா அப்பா டாடிலாம் அடிக்கடி சண்டை போட்டுக்கறா? நம்ப அம்மாவும் உங்க அப்பாவும் பிரிஞ்சதனாலதானே நீ இங்கேயும் அங்கேயுமா இருக்க வேண்டியிருக்கு. எனக்கும் ஸன்டேஸ்ல போர் அடிக்கிது. அட்லீஸ்ட் நாம சில்ட்ரன்லாம் ஒண்ணா ஒரு இடத்தில இருந்தா எவ்ளோ லவ்லியா இருக்கும்!

மதுமிதா: கவலைப் படாதே அகில் கண்ணா. நான் அதுக்கு ஒரு ப்ளான் வெச்சிருக்கேன். அது சரியா வரலேன்னா Plan-B-யும் யோசிச்சு வெச்சிருக்கேன். கூடிய சீக்கிரம் பாரேன், நான் பெரியவங்க எல்லோரையும் ஃபோர்ஸ் பண்ணி நாம எல்லாரும் சேர்ந்து ஒரு வீக்-என்ட் பிக்னிக் போகப்போறோம். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா முதல்ல நாம சில்ட்ரென் லெவல்ல ஒண்ணுசேரப் போறோம்.

தொலைபேசி மணி அடிக்க, பாட்டி விழித்துக் கொள்கிறாள். குழந்தைகள் வாயை மூடிக்கொண்டு தங்கள் ஹோம்-வர்க்கைத் தொடர்கின்றனர்.

*****


M. Viswanathan

unread,
Aug 21, 2014, 11:08:05 PM8/21/14
to santhav...@googlegroups.com, Venkatesan J, Senkottai Sriram, Seethalakshmi Viswanath, hgs...@gmail.com, Arkay Ramakrishnan, Arun Prabu, Raghu A, Ramesh Iyer, Murali M, Krishnan H, Subramaniam Ramamoorthy
அன்புக்குரிய திரு. இரமணி அவர்களுக்கு,

மெல்ல மெல்லக்  கரையும் பண்பாட்டைக் "குட்டிகள்" மூலம் சொல்லும் குட்டிக் கதை. பாராட்டுகள்.
அப்படியே மெல்ல மெல்லத் தமிழும் சாகாதிருக்கப் படைப் பாளிகள், கதைமாந்தர்கள் பேசிக்கொள்ளும் 
இடங்களைத்  தவிர பிற இடங்களில் நல்ல தமிழினால்  கதையின் போக்கை அமைத்தால் தமிழும், தமிழிலக்கியமும்
சிறக்கும், என்றும் இளமையோடிருக்கும்.

மீ.விசுவநாதன்.

p balakrishnan

unread,
Aug 21, 2014, 11:34:40 PM8/21/14
to santhav...@googlegroups.com
நீதிமன்றங்களில் பெருகிவரும் விவாகரத்து வழக்குகளால் இக்கதையில் வருவது போன்று நடக்க
வாய்ப்புண்டு. - இளங்கண்ணன்

On Fri, 22 Aug 2014 07:22:49 +0530 ramaNi wrote
--
>
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
>
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
>
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
>
santhavasanth...@googlegroups.com.
>
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
>
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
>
---
>
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
>
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to
santhavasanth...@googlegroups.com.
>
To post to this group, send email to santhav...@googlegroups.com.
>
For more options, visit https://groups.google.com/d/optout.
>

Get your own FREE website, FREE domain & FREE mobile app with Company email.  
Know More >

ramaNi

unread,
Aug 22, 2014, 8:46:57 AM8/22/14
to santhav...@googlegroups.com
மேலுள்ள குட்டிக்கதையானது மேற்கத்திய கலாசாரத்தில் எப்படி பூதாகாரமாகப் பரிமாணம் எடுக்கக்கூடும் என்று கோடிட்டுக் காட்டி ஆங்கிலத்தில் வந்த ஒரு நகைச்சுவையின் தமிழாக்கம்:

ஏற்பட்ட திருமணமும் காதல் திருமணமும்:
ஒரு கலாசார அதிர்ச்சி 


இரண்டு மனிதர்கள், ஒருவர் இந்தியர், மற்றொருவர் அமெரிக்கர் ஒரு பாரில் பக்கத்தில் அமர்ந்து குடித்துக்கொண்டிருந்தார்கள்.

இந்தியர் அமெரிக்கரிடம் சொன்னார்: "என் பெற்றோர்கள் என்னைக் கல்யாணம் செய்துகொள்ளும்படி கட்டாயப் படுத்துகிறார்கள். குடும்பப் பாங்கான ஒரு கிராமப் பெண்ணாம். நான் அவளை ஒரு முறை கூடப் பார்த்ததில்லை!

"நாங்கள் இதை ’அரேஞ்ட் மேரேஜ்’ என்று சொல்வோம். நான் காதலிக்காத ஒரு பெண்ணை மணந்துகொள்ள எனக்கு விருப்பம் இல்லை. இதை நான் அவர்களிடம் வெளிப்படியாகச் சொல்லிவிட்டதால் குடும்பத்தில் ஏகப்பட்ட குழப்பம்..."

அமெரிக்கர் சொன்னார்: "’லவ் மேரேஜ்’ பற்றியா நீங்கள் பேசுகிறீர்கள்? என் கதையைக் கேளுங்கள்...

"மூன்று வருடங்கள் டேட்டிங் பண்ணி நான் ஒரு விதவையைக் கல்யாணம் செய்துகொண்டேன். அவளுக்குக் கல்யாண வயதில் ஒரு மகள் இருந்தாள்... இரண்டு வருடம் கழித்து என் அப்பா என் வளர்ப்பு மகளான அவளைக் காதலித்துக் கல்யாணம் செய்துகொண்டார். இதனால் என் தந்தை எனக்கு மருமகன் ஆகிவிட, நான் என் தந்தையின் மாமனார் ஆனேன்! என் மகள் இப்போது என் அன்னையாகி, என் மனைவியே எனக்குப் பாட்டியானாள்!

"எனக்கு ஒரு மகன் பிறந்தபோது உறவின் குழப்பங்கள் விசுவரூபம் எடுத்தன. என் மகன் என் தந்தையின் சகோதரன், எனவே எனக்கு அவன் அங்க்கிள் ஆனான்! என் தந்தைக்கும் ஒரு மகன் பிறந்தபோது இன்னும் மோசமானது. இப்போது என் தந்தையின் மகன், அதாவது என் சகோதரன் எனக்குப் பேரன்! இப்படியெல்லாம் எங்கள் குடும்பத்தில் இருக்கும்போது நீ உன் குடும்பத்தில் குழப்பம் என்று சொல்வது வேடிக்கை!"

*****

M. Viswanathan

unread,
Aug 22, 2014, 11:03:51 AM8/22/14
to santhav...@googlegroups.com
அண்ணா ....இதெல்லாம் "அபூர்வராகங்கள்"...
மீ.வி.


ramaNi

unread,
Aug 22, 2014, 11:37:22 AM8/22/14
to santhav...@googlegroups.com
உண்மைதான் அண்ணா!

அபூர்வமாக உள்ள வரையில் சரிதான் என்று எடுத்துக்கொள்ள வேண்டியதுதான்!
ஆனாலும் அபூர்வ ராகங்களும் ஒருதலை ராகங்களும் நம் கலாச்சாரத்திலும்
முக்கியம் பெறுவது என்று ஆகும் போது வருத்தமாகத்தான் இருக்கிறது!

இவ்வகை ராகங்கள் நம் புராணங்களிலும் உண்டு என்கிறது இந்த வலைதளம்:
http://www.galva108.org/


அன்புடன்,
ரமணி


M. Viswanathan

unread,
Aug 22, 2014, 11:53:25 AM8/22/14
to santhav...@googlegroups.com
ஆமாம்.


ramaNi

unread,
Aug 22, 2014, 9:07:00 PM8/22/14
to santhav...@googlegroups.com
நாடியது கேட்கின்...
சிறுகதை
ரமணி, 21/05/2013

[இணையத்தில் ஆங்காங்கே மேய்ந்து கிடைத்த விவரங்களுக்குக் கண்-காது-மூக்கு வைத்து எழுதிய கதை இது.--ரமணி]

நான் முத்துவேல். என் நண்பன் மனோகரன். இருவரும் நெருங்கிய நண்பர்கள், அதுதான் ஆச்சரியம்!

ஏனெனில் நான் (மனோகரன் மூடநம்பிக்கைகள் என்று மறுக்கும்) அனைத்து ஆன்மிக விஷயங்களையும் நம்புபவன்: எனக்குக் கோவில் ஸ்தல புராணங்கள், சாயி பாபா போன்ற மகான்கள் நிகழ்த்தும் அதிசயங்கள், பேய்-பிசாசுகள் பிடிப்பது அவற்றை ஓட்டுவது, மந்திரித்து வைத்தியம் செய்வது, மறுபிறவி--இன்னும் எது வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளுங்கள்--போன்ற அனைத்து விஷயங்களும் உண்மை.

மனோகரனுக்கோ ஒரு நியூட்டன், ஒரு ஐன்ஸ்டின், ஒரு ஸ்டீஃபன் ஹாகிங்--இன்னும் யாரை வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளுங்கள்--போன்று யாரவது உறுதிப்படுத்தி யிருந்தால்தான் அது உண்மை, அறிவியல், நிச்சயம் நம்பலாம். எல்லாத் துறைகளிலும் பற்பல விஞ்ஞானிகள் ஒருவருக்கொருவர் முரண்பட்டுக் கருத்துக்களைச் சொல்கிறார்களே மனோ, இவற்றில் எதுதான் உண்மை என்று கேட்டால் ஜகா வாங்கிவிடுவான்! காலம் காலமாக நிறுவப்பட்டதாகக் கருதப் பட்ட விஞ்ஞான் உண்மைகள் ஒரு நாள் தூக்கியெறியப் படுவதே விஞ்ஞானத்தின் வளர்ச்சி என்பது அவன் கட்சி.

சரி, விஷயத்துக்கு வருகிறேன். நாங்கள் இருவரும் சேர்ந்து வைத்தீஸ்வரன் கோவிலில் நாடி ஜோதிடம் பார்க்க முடிவுசெய்தோம்! பொதுக்காண்டமும் முற்பிறவி பற்றிப் பேசும் சாந்திக்காண்டமும் பார்ப்பதாக முடிவுசெய்துகொண்டோம். எனக்குண்டான பலன்களை அறிந்துகொள்வதில் எனக்கு ஆர்வம் இருந்தது. அவனுக்குச் சொல்லப்படும் பலன்கள் எப்படியாவது பொய், புனைகதை என்று நிரூபிக்கவேண்டும் என்பதில் அவனுக்கு ஆர்வம் இருந்தது. இதற்காக அவன் திரும்பவும் வை.கோவிலுக்கு வரவும் தயாராக இருந்தான்.

ஜோதிடர் எங்கள் கைரேகைகளைப் பதிந்துகொண்டு ஓலைதேடச் சென்றபோது நாங்கள் அதே தெருவில் உள்ள ஒரு சின்ன விடுதியில் இட்டிலி-வடை, தோசை, காப்பி சாப்பிட்டோம். தோசைக்காகக் காத்திருந்தபோது, "முத்து, எப்படிடா கைரேகையை வைத்து ஓலையைத் தேடமுடியும்? அதுவே ஃப்ராட்" என்றான். அங்கு சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்களில் பலர் ஏடு பார்க்க வந்தவர்கள் என்பது வெளிப்படையாகத் தெரிந்ததால் நான் அவனை அடக்கிவிட்டுக் கிசுகிசுத்தேன்: "மனிதர்களின் கைரேகைகளை உன் அறிவியல் முறைப்படி பெர்ம்யுடேஷன்-காம்பினேஷன் போட்டால் வரும் எண் 28531 கோடி, தெரியுமா உனக்கு? இந்த நம்பரை வெச்சு நெட்ல நாடி ஜோதிடம் பக்கங்கள்ல தேடிப்பார்." அவன் ஒன்றும் பதில் சொல்லாவிட்டாலும் அவன் ஆர்வத்தைக் கிளறிவிட்டது தெரிந்தது.

இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்ற உறவில் எங்களுக்குச் சொல்லப்படும் பலன்களை இருவருமே சேர்ந்து கேட்டோம். பழந்தமிழ்ச் செய்யுட்கள் மூலம் எங்கள் பெர்சனல் விவரங்கள் தெரிந்தது "டூ மச், அந்தாள் கில்லாடிதான்" என்றான், அவர் தன் யஜமானர் அழைத்ததாக ஐந்து நிமிடங்கள் அறையை விட்டு வெளியில் சென்றிருந்தபோது. ஒரு ஓலையை எடுத்துப் பார்த்துவிட்டு அதில் இன்றைய தமிழ் எழுத்துகளில் இருக்கும் கிறுக்கல்கள் புரியாமல், "இந்த ஓலை கௌசிகர் எழுதி தமிழ்ல ட்ரான்ஸ்லேட் பண்ணினதுன்னு எப்படி நம்ப முடியும்? ரொம்பப் போனா இது முன்னூறு-நானூறு வருஷம் பழமையா இருக்க சான்ஸ் இருக்கு. கார்பன் டேட்டிங்க்கு கொடுத்தாங்கன்னா இவங்க வண்டவாளம் எல்லாம் வெளில வந்திடும்."

பொதுக்காண்டம் முடிந்தது. எங்களைப் பற்றிய பொது விவரங்கள் பெரும்பாலும் சரியாக இருந்தன. ஆனால் எதிர்காலம் பற்றிய நம்பிக்கைகள் அதிகம் இல்லை. பலன்கள் சொல்லும் போது மனோவிடம் ஜோதிடர் திடீரென்று, "நீங்கள் ஒரு நாத்திகரா?" என்று கேட்டு அவனை அசரவைத்தார். "டேய், மைண்ட் ரீடிங்கூட பண்ற கில்லாடிடா ஜோசியர்!" என்றான் பின்னர். "நாங்கூட இதெல்லாம் கத்துக்கிட்டா நல்லா காசு பாக்கலாம் போலிருக்கே!"

சாந்திக் காண்டத்தில் என் முற்பிறவி பற்றி ஜோதிடர் அலசியபோது நல்ல வேளையாக மனோவுக்கு வயிற்றுக்குடைச்சல் ஏற்பட்டுக் கொஞ்ச நேரம் வெளியே சென்றான். முற்பிறவியில் என் பெயர் முத்தண்ணனாம். நான் தஞ்சை சரபோஜி மன்னர் அரண்மனையில் அவருக்கு நெருங்கிய பணியாளனாக வேலை பார்த்தேனாம். பேராசையில் ஒரு நாள் அரண்மனைக் கருவூலத்திலிருந்து ஒரு விலையுயர்ந்த முத்துமாலையைத் திருடி அகப்பட்டுக்கொண்டு சிரச்சேதத்துக்குத் தப்பி நாடு கடத்தப்பட்டுப் பிச்சையெடுத்து வாழ்ந்து நாய்பாடு பட்டேனாம். இன்னும் சில பிறவிகளுக்கு எனக்கு முத்து என்று ஆரம்பிக்கும் பெயர்தான் இருக்குமாம், அந்த முத்துவேல் முருகன் என்னை ஆட்கொள்ளும் வரை. முத்துவேல் என்று பெயர்கொண்ட இந்தப் பிறவியிலும் நான் என் நெருங்கிய நண்பனிடம் இருந்து ஒரு பெரிய கடன்தொகையை வாங்கியிருப்பேனாம். அதனை என்னால் திருப்பித் தரவே முடியாதாம்.

வியர்த்து வெலவெலத்துவிட்டேன். மனோவிடம் நான் ஒரு லட்ச ரூபாய் கடன் வாங்கியிருந்தேன். அத்துடன் என் சொந்தப் பணத்தையும் போட்டு இரண்டு ஐம்பது கிராம் 24 காரட் தங்கச் சிறுகட்டிகள் வாங்கியிருந்தேன், இப்போது ப்ளஸ்-டூ பண்ணும் என் மகளுக்கு அவள் திருமண சமயம் வரும் போது நகைகள் செய்ய. முதல் வேலையாக மனைவியிடம் சொல்லி ஒரு ஐம்பது கிராம் கட்டியில் நகைகள் செய்து, இன்னொரு கட்டியை விற்று (எங்கள் குடும்ப நகைக் கடையில் பாதி பணமாகவும் பாதி நகையாகவும் தருவதற்கு ஒப்புவார்கள்) மனோவின் கடனை அடைத்துவிட வேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டேன். ஜோதிடர் இந்த விஷயத்தில் சொன்னது பொய் என்று நிரூபிக்க வேண்டும்.

மனோவின் முற்பிறவி பற்றிச் சொல்லும் போது ஜோதிடர் அப்போது சுதாகர் என்ற பெயரில் காஞ்சி தேசத்தில் வாழ்ந்த அவன் மிகப் பணக்காரனாக இருந்தான் என்றும், சுற்றமும் நட்பும் அடுத்துக் கெடுத்த சதிகளால் பணமில்லாம் இழந்து கடைசி காலம் வரை சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டு வாழ்ந்ததாகவும், இது அவனை இந்தப் பிறவியில் நாத்திகனாக்கியிருக்கலாம் என்றும் பலன் சொன்னார்.

மனோவின் முற்பிறவிக் காண்டம் பாதியில் நின்றது. ஜோதிடர் தம் செல்ஃபோனில் விவரம் தெரிவிக்க அவரது யஜமானரே அறைக்கு வந்துவிட்டார். "ரொம்ப சாரிங்க. இந்த ஓலைச் சுவடிகள் எங்கள் பரம்பரைச் சொத்தாக இருந்துவந்து தலைமுறை தலைமுறையாகக் குடும்பத்தில் மூத்த பிள்ளை இந்தப் புனிதத் தொழிலை மேற்கொண்டு வந்தோம். இந்தத் தலைமுறையில் என் தம்பிக்கும் இந்தத் தொழிலில் ஆர்வம் தோன்றிவிடவே, நாங்கள் கைவசம் இருந்த சுவடிகளை ஆளுக்குப் பாதியாகப் பங்கிட்டுக் கொண்டோம். அவர் இப்போது சாளுக்கிய தேசத்தில், அதாவது இன்றைய பங்களூரு அருகில், ஏடு பார்த்துப் பலன் சொல்லி வருகிறார். நீங்கள் அங்கே போக முடியுமானால் இதுவரை பார்த்த உங்கள் சுவடிகள் பற்றிய விவரங்களைத் தருகிறேன். மீதமுள்ள முற்பிறவி பற்றிய சாந்திக் காண்டத்தையும் இன்னும் ஏதேனும் காண்டங்கள் பார்க்க விரும்பினால் அவற்றையும் நீங்கள் என் தம்பியிடம் பார்த்துக்கொள்ளலாம். மீதமுள்ள சாந்திக்காண்டத்துக்கு நீங்கள் ஏதும் தனியாக பணம் கட்ட வேண்டியதில்லை."

யஜமானர் தந்த விவரங்களை எடுத்துக்கொண்டு ஊர்போய்ச் சேர்ந்தோம். மனோவுக்கு இருப்புக் கொள்ளவில்லை. தனக்குச் சொல்லப்பட்ட பலன்களை நம்புவதா வேண்டாமா என்ற குழப்பத்தில் அவன் மீதமுள்ள சாந்திக்காண்டத்தை சாளுக்கிய தேசத்தில் பார்த்துவிடத் தீர்மானித்து, அடுத்த மாதமே இருவரும் இன்டர்-ஸ்டேட் சொகுசுப் பேருந்தில் கிளம்பினோம்.

என்ன சொல்வது? பாதி வழியில் ஒரு லாரி மோதி விபத்தில் எங்கள் பேருந்து சிக்கிக்கொள்ள, என் அருமை நண்பன் மனோ உட்பட இருபது பேர் மாண்டனர். வண்டியிலேயே என் அருகில் உயிர்விட்ட மனோ உரக்கக் கத்திய கடைசி வார்த்தை, "மூத்துவேலா!" என்பதுதான். அவன் அருகில் அமர்ந்திருந்த நான் காயங்களுடன் தப்பினேன்.

மனோவின் கடைசி ஆசையைப் பூர்த்தி செய்யும் எண்ணத்தில் நான் விவரங்களை எடுத்துக்கொண்டு அந்த தம்பி ஜோதிடரிடம் சென்றேன். வெகுநேரம் தேடிவிட்டு அவர் ஒரே ஒரு ஓலையைக் கட்டினார். அதில் இப்படி எழுதியிருந்தது:

சாளுக்கிய தேசச் செலவின் போது
மாளுதல் நிகழும் மனமும் மாறும்.

*** *** ***

Lalitha & Suryanarayanan

unread,
Aug 22, 2014, 11:14:14 PM8/22/14
to santhav...@googlegroups.com
கதை என்ன ஒட்டம், என்ன அழகு!

சிவசூரி.

M. Viswanathan

unread,
Aug 22, 2014, 11:23:24 PM8/22/14
to santhav...@googlegroups.com
சுவாரஸ்யமான கதை. பாராட்டுகள்.
மீ.விசுவநாதன் 

ramaNi

unread,
Aug 22, 2014, 11:55:54 PM8/22/14
to santhav...@googlegroups.com
கதையைப் பாராட்டிய சிவசூரி, விசுவநாதன் அவர்களுக்கு நன்றி.
ரமணி

Subbaier Ramasami

unread,
Aug 23, 2014, 9:49:39 AM8/23/14
to சந்தவசந்தம்
அன்புள்ள ரமணி,
நல்ல அமைப்பு. நடை, கருத்தோட்டம்.
உங்களுக்கு நன்றாகக் கதை சொல்ல வருகிறது. வாழ்த்துகள்.


இலந்தை

ramaNi

unread,
Aug 23, 2014, 9:31:53 PM8/23/14
to santhav...@googlegroups.com
ஆசான் இலந்தையார் அவர்களின் பாராட்டுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.
ரமணி

ramaNi

unread,
Aug 23, 2014, 9:42:30 PM8/23/14
to santhav...@googlegroups.com
’நாடியது கேட்கின்’
இன்னொரு முடிவு 

ரமணி

நாடி ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லாதவர்களுக்காக இந்தக் கதையின் முடிவைச் சற்று மாற்றுவோம்:


மனோவின் முற்பிறவிக் காண்டம் பாதியில் நின்றது. ஜோதிடர் தம் செல்ஃபோனில் விவரம் தெரிவிக்க அவரது யஜமானரே அறைக்கு வந்துவிட்டார். "ரொம்ப சாரிங்க. இந்த ஓலைச் சுவடிகள் எங்கள் பரம்பரைச் சொத்தாக இருந்துவந்து தலைமுறை தலைமுறையாகக் குடும்பத்தில் மூத்த பிள்ளை இந்தப் புனிதத் தொழிலை மேற்கொண்டு வந்தோம். இந்தத் தலைமுறையில் என் தம்பிக்கும் இந்தத் தொழிலில் ஆர்வம் தோன்றிவிடவே, நாங்கள் கைவசம் இருந்த சுவடிகளை ஆளுக்குப் பாதியாகப் பங்கிட்டுக் கொண்டோம். அவர் இப்போது சாளுக்கிய தேசத்தில், அதாவது இன்றைய பங்களூரு அருகில், ஏடு பார்த்துப் பலன் சொல்லி வருகிறார். நீங்கள் அங்கே போக முடியுமானால் இதுவரை பார்த்த உங்கள் சுவடிகள் பற்றிய விவரங்களைத் தருகிறேன். மீதமுள்ள முற்பிறவி பற்றிய சாந்திக் காண்டத்தையும் இன்னும் ஏதேனும் காண்டங்கள் பார்க்க விரும்பினால் அவற்றையும் நீங்கள் என் தம்பியிடம் பார்த்துக்கொள்ளலாம். மீதமுள்ள சாந்திக்காண்டத்துக்கு நீங்கள் ஏதும் தனியாக பணம் கட்ட வேண்டியதில்லை."

"எனக்கு அந்த மீதிக்காண்டம் நிச்சயமா பாக்கணும். நாங்க அடுத்த வாரமே கிளம்பலாம்னு நினைக்கறோம். அதான் நெறைய இன்டர்-ஸ்டேட் செகுசுப் பேருந்துகள் இருக்கே?"

"அப்ப ஒண்ணு செய்யுங்க. நான் தம்பிட்ட இன்னைக்கே பேசிடறேன். நீங்க ஊருக்குப் போய், டிக்கட் புக் பண்ணிட்டு, எனக்கு உங்க பயணம் பற்றிய தகவல் சொல்லுங்க. தம்பியே ஒரு ஆளை பஸ் ஸ்டாண்டுக்கு அனுப்பி உங்களை ரிசீவ் பண்ணுவார், நீங்க தேடி அலைய வேண்டியதில்லை. இது என் கார்ட். என் செல் நம்பரும், இந்த விலாசமும் இருக்கு."

"ரொம்ப நன்றிங்க. அப்ப நாங்க கிளம்பறோம்" என்று நண்பர்கள் விடைபெற்றுச் சென்றனர்.

அதன்பின், யஜமானர் தன் தம்பியிடம் பலமுறை பேசினார். தம்பியிடம் மனோகரனின் முற்பிறவிக் காண்டம் பற்றிய மீதி ஏடுகள் எதுவும் இல்லையென்று தெரிந்தது. "ரெண்டு நாளா எல்லாத்தையும் தலைகீழாப் புரட்டிப் பாத்துட்டேன் அண்ணே, எதுவும் கிடைக்கலை."

"சான்ஸே இல்லைய்யா! என்கிட்ட எல்லா ஏடுகளும் இருந்தபோது ஒண்ணு கூட இப்படி அரைகுறையா இருக்கலைன்னு எனக்கு நிச்சயமாத் தெரியும். வேற கட்டு எதுலயாவது மாறி இருக்குமா? அல்லது நீ அங்கே ரெண்டு தரம் வீடு மாத்தினியே அப்ப மிஸ் ஆகியிருக்கலாம் இல்ல? அவங்க ரெண்டு பேரும் வர்ற புதன் கிழமை சென்னையிலிருந்து கிளம்பி வராங்கய்யா. இன்னைக்கு சனிக்கிழமை. என்ன செய்யப் போறே?"

"கவலைப் படாதீங்கண்ணே. நான் பாத்துக்கறேன்."

"எது செஞ்சாலும் என்கிட்ட சொல்லிட்டு செய். எதும் வில்லங்கம் வந்து நம்ம குடும்பப் பேருக்குக் களங்கம் வந்துறக் கூடாது."

அந்த புதன் கிழமை பாதி வழியில் ஒரு லாரி மோதி விபத்தில் அவர்கள் பேருந்து சிக்கிக்கொள்ள, மனோகரன் உட்பட இருபது பேர் மாண்டனர். வண்டியிலேயே நண்பன் அருகில் உயிர்விட்ட மனோ உரக்கக் கத்திய கடைசி வார்த்தை, "மூத்துவேலா!" என்பதுதான். அவன் அருகில் அமர்ந்திருந்த முத்துவேல் காயங்களுடன் தப்பினான்.

நண்பர்கள் வந்து சேரவில்லை என்றதும் தம்பி ஜோதிடர் பேருந்து கம்பெனிக்கு அலைபேசி, விபத்து பற்றியும் அதில் மனோகரன் இறந்தது பற்றியும் அவன் நண்பன் முத்துவேல் அருகில் ஓர் அரசு மருத்துவ மனையில் சிசிச்சை பெறுவது பற்றியும் தெரிந்துகொண்டார். முத்துவேலிடம் அலைபேசி துக்கம் விசாரித்து, அவன் அடுத்த பத்து நாட்களில் நண்பனின் கடைசி விருப்பத்தை நிறைவேற்ற அவரைச் சந்திக்க வரப்போவது பற்றித் தெரிந்துகொண்டார்.

"வாங்க தம்பி, என்கிட்ட அந்த மீதி ஏடு இருக்கு, காட்டறேன்."

"அதில என்னங்க எழுதியிருக்கு?"

"அதைப் பத்தி ஃபோன்ல பேசக் கூடாதுங்க. நீங்க நேர்ல வாங்க."

அண்ணனிடம் ஆலோசித்த போது ஒரு ஜாதகரின் மரணம் பற்றி அறிவிக்கும் ஒற்றைச் சுவடிகள் இரண்டு பல வருஷங்கள் முன்பு தாம் பலன் சொல்லிய கட்டில் இருந்ததாகத் தெரிந்தது. "இந்தக் கேஸ்லயும் நிச்சயமா இருக்கணும்யா. நீதான் அதை எங்கயோ மிஸ் பண்ணிட்டே. இப்ப வேற வழியில்லை, பாத்து செய். நம்ம குலதெய்வம் முனீஸ்வரர் நம்மைக் காப்பாத்துவார்."

தம்பி ஜோதிடர் ஒரு பழைய, எதுவும் எழுதப் படாத ஓலை நறுக்கை எடுத்தார். அதில் பின்வருமாறு எழுதினார்:

ramaNi

unread,
Aug 25, 2014, 10:08:25 PM8/25/14
to santhav...@googlegroups.com

முகம் தெரியாப் பகைவர்கள் 
ரமணி
(இதயம் பேசுகிறது, 13 Mar 1988)
முரளிதரன் ஒரு நெடிய பெருமூச்சுடன் எழுந்துகொண்டான். கைகளை உயர்த்தி சோம்பல் முறித்தான். பேண்ட்டின் பின்புறம் படிந்திருந்த உலர்ந்த புல் துணுக்குகளைத் தட்டிவிட்டான்.

வலது கையில் கட்டியிருந்த டிஜிடல் கடிகாரத்தில் அவன் எப்போதோ அமைத்திருந்த அலாரம் ’கீங்க்கி...கீங்க்கி...’ என்று சிணுங்கியது.

"எழுந்திரு மோகனா! மணி ஆறே-காலாச்சு, போலாம். அப்பா வேற ஊர்லேர்ந்து வந்திருக்கார்."

கைகளைத் தலைக்கடியில் முட்டுக்கொடுத்து புல்தரையில் மல்லாக்கப் படுத்தபடி செக்கர் வானத்து விந்தைகளை ரசித்துக்கொண்டிருந்த மோகனா அவனை நோக்கிக் கைகளை நீட்டினாள்.

அவன் அவள் கைகளை வளையல்களுடன் பற்றி இழுத்தபோது மோகனா விலுக்கென்று எழுந்து உட்கார்ந்து தரையில் மல்லிகைப் பூக்கள் உதிர, புறங்கையால் நெற்றியில் விழுந்த குழல்களை சரிசெய்துகொண்டு, "எங்க இந்திரா?" என்றாள்.

*** *** ***

"காடி தஸ்-பந்த்ரா மினிட் மே ரவானா ஹோகி" (வண்டி பத்து-பதினஞ்சு நிமிஷத்தில் கிளம்பும்) என்றான் எதிரில் இருந்தவன்.

அவதார் சிங் தலையாட்டி நன்றி கூறிவிட்டு அந்த பஸ்ஸில் ஏறினான். பஸ் ஏறக்குறைய காலியாக இருக்க, கவுன்ட்டரில் சீக்கிய கண்டக்டர் ஒருவர் டிக்கெட் வழங்கிக் கொண்டிருந்தார்.

நுழைந்ததும் வலப்புறம் காலியாக இருந்த சீட்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து சன்னலோரம் அமர்ந்தான்.

அடுத்த இரண்டு நிமிடங்களில் அவன் ஓர் ஆங்கிலப் பத்திரிகையை தன் சீட்டில் வைத்துவிட்டு பேண்ட் பைகளில் கைவிட்டபடி தோளில் ஜோல்னாப்பை ஊசலாட கீழிறங்கியபோது அவன் அமர்ந்திருந்த சீட்டின் அடியில் புத்தம் புதியதொரு டிரான்சிஸ்டர் ’மறதியாக’ விடப்பட்டிருந்தது.

*** *** ***

அப்போதுதான் குழந்தையின் ஞாபகம் வர அவர்கள் துணுக்குற்று நாலா திசைகளிலும் பார்த்தபோது கொஞ்ச தூரத்தில் ஒரு மரத்தின் பின்னால் இருந்து குரல் கேட்டது.

"டாடி, லுக் ஹியர்!"

"இந்து, கமான் நேரமாச்சு. இருட்டறதுக்குள்ள வீட்டுக்குப் போகலாம்."

அவள் குரல் வந்த திசையை நோக்கி நடந்தான்.

"இதப் பாருங்க டாடி, வொன்டர்ஃபுல்!" என்றபடி குழந்தை ஒரு மரத்தின் பின்னிருந்து வெளிப்பட்டாள்.

"ஏய், என்னது கைல டிரான்சிஸ்டர்?"

"இந்த இடத்ல புல்தரைல கிடந்தது டாடி! புதுசு! யார்தோ தெரியல, பாவம்!"

*** *** ***

தனக்குக் கொடுக்கப்பட்ட ஐந்து டிரான்சிஸ்டர் பெட்டிகளையும் ஒரு வழியாக நகரின் முக்கியமான, ஜனசந்தடி மிகுந்த இடங்களில் புறக்கணித்துவிட்ட நிம்மதியுடன் அவதார் சிங் சாலையில் தன் யெஸ்டி பைக் சீராக படபடக்க வந்துகொண்டிருந்தான்.

பின்னால் ஒரு மாருதி காரின் கொம்பொலி கேட்க பைக்கின் வலப்புறக் கண்ணாடியில் பார்த்தபடி சாலை ஒரம் ஒதுங்கியவன் இந்த ஐந்து மாத காலத்தில் தன் வாழ்க்கை எவ்வளவு தூரம் மாறிவிட்டது என்று நினைத்துக்கொண்டான்.

கடந்த நவம்பர் மாதம் டில்லியை ஆட்டிவைத்த சீக்கிய எதிர்ப்புக் கலவரங்களில் அநியாயமாகத் தாக்குண்டு உடலும் மனமும் சிதைந்து ஏறத்தாழ உயிரிழந்தவன் இறுதியில் நெருங்கிய நண்பனால் காப்பாற்றப்பட்டு இன்று உடல் தேறி மனம் பாறையாக இறுகி ஒரு ஃபீனிக்ஸ் பறவையாக மறுபிறவி எடுத்து எதற்கும் துணிந்தவனாக, பயங்கரவாதிகளின் தற்கொலைப்படையில் ஓர் உறுப்பினனாகத் திகழ்வது குறித்துப் பெருமை கொண்டான்.

சீக்கிய மதத்தையும் இனத்தையும் காக்க அவன் தன் உயிரையும் கொடுக்கத் தயாராக இருந்தான். யாரோ இரண்டு கொடியவர்கள் செய்துவிட்ட துரோகச் செயலுக்கு ஒரு சமூகத்தையே பொறுப்பாக்கி ஒரு பாவமும் அறியாத ஏராளமான சீக்கிய மக்களை அநியாயமாகக் கொன்று குவித்ததற்கு அவனுடைய முகம் தெரியாப் பகைவர்கள் பதில்கூறியே ஆகவேண்டும் என்று நினைத்துக்கொண்டபோது அவன் இதழ்களில் ஒரு குரூரப் புன்னகை அரும்பியது.

கூடவே மதம் என்பது எவ்வளவு ஆபத்தான, இருபுறமும் கூரான ஆயுதம் என்ற எண்ணம் எழுந்தது. அதனால்தான் என்னவோ சயன்ஸ் ஃபிக்‍ஷன் கதைகள் வருணிக்கும் எதிர்கால உலகங்களில் மதம் முற்றிலும் ஒழிக்கப்பட்ட ஒன்றாக விளங்குகிறது என்று தனக்குள் அனுமானித்துக்கொண்டான்.

அந்தக் கருப்பு நவம்பர் கலவரங்களில் அவன் தன் தொழிலையும் குடும்பத்தையும் உறவினர்களையும் ஒருசேர இழந்து அவனது எதிர்காலக் கனவுகள் குரூரமாகக் கலைக்கப்பட்டுவிட, அமைதியாக ஓடிக்கொண்டிருந்த அவனது தனிமனித, சமூக வாழ்வில் உணர்ச்சிகள் கொந்தளித்துப் பெருகி இன்று அவனை ஒரு காட்டாறாக மாற்றிவிட, இந்த சமூகத்தில் வாழும் சீக்கியர் அல்லாத ஒவ்வொரு மனிதனையும் அவனது நேரடிப் பகைவனாகக் கருதுவதற்கும் அவன் தயாராக இருந்தான்.

ஒரே ஒரு மனிதனைத் தவிர.

அன்று விதியின் கரங்களில் இருந்து அவனை விடுவித்த அந்த ஒரே நண்பனைத் தவிர.

"குட் ஹெவன்ஸ், ஐ ஹாவ் நாட் வார்ன்ட் ஹிம்!" என்று முனகியவன், டெலிஃபோன் பூத் ஒன்று கண்ணில்பட, வண்டியை நிறுத்திவிட்டு முரளிதரன் வீட்டு எண்களை சுழற்றத் தொடங்கினான்.

*** *** ***

முரளிதரன் அந்த டிரான்சிஸ்டர் ரேடியோவை வாங்கிக்கொண்டான். பளிச்சென்று புதிதாக இருந்தது. இடப்புறம் ஒலிபெருக்கி வரிகள் மென்மையாகத் தெரிய வலப்புறம் வால்யூம் குமிழ் அருகில் ’ஸோபர்’ என்ற பெயர் தாங்கியிருந்தது.

பார்க்க ஜப்பான் செட் போலிருக்கு என்று நினைத்துக்கொண்டான். கூடவே சென்னையிலிருந்து அன்று காலை வந்திறங்கிய அப்பாவின் ஞாபகம் வந்தது.

மோகனாவின் கேள்விகள் கவனத்தைத் திசைதிருப்ப, அவளுக்கு சுருக்கமாக விஷயத்தை விளக்கியபடி அவன் தன் ஸ்கூட்டரைக் கிளப்பினான்.

"அந்த டிரான்சிஸ்டரை நான் வெச்சுக்கறேன் டாடி! குடுங்க பாக்கலாம். வீட்லபோய்த்தான் திருகுவேன், ப்ராமிஸ்!" என்றாள் இந்திரா.

மௌனமாகத் தலையாட்டிவிட்டு டிரான்சிஸ்டர் இருந்த அந்த வலைப்பையைக் குழந்தையிடம் கொடுத்தபோது அந்த சைஸிற்கு டிரான்சிஸ்டர் கொஞ்சம் கனமாகப் படுவதாக நினைத்துக்கொண்டான். மேலும் யோசிக்க நேரமின்றி, அவர்கள் பின்னால் உட்கார்ந்ததும் அவன் கியரை நியூட்டரிலிருந்து விடுவித்து வண்டியைக் கிளப்பி சாலையில் விரைந்த மற்ற வாகனங்களுடன் ஐக்கியமானான்.

*** *** ***

"முர்லி பாஹர் கயா ஹ க்யா? ஐ’ம் அவதார் அங்கிள்... கைசே ஹை ஆப்? யூ ஆர் எக்ஸ்பெக்டிங் ஹிம் ரைட் நௌ? அச்சா, ஐ’ல் கம் அரௌன்ட் எய்ட்." (முர்லி வெளியே போயிருக்கிறானா? நான் அவதார் அங்கிள்... நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? அவனை இன்னேரம் நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்? நல்லது, நான் எட்டு மணிக்கு வருகிறேன்.)

அவதார் சிங் மீண்டும் பைக்கைக் கிளப்ப முயன்றபோது சைரன் ஒலிக்க ஒரு போலீஸ் ஜீப் அவனைக் கடந்து சென்றது. தொடர்ந்து நகர பஸ் ஒன்றும் சில கார்களும் ஒரு மாருதி வேனும் விரைந்தன.

பைக்கின் வலப்புறம் கண்ணாடியில் தன் முகத்தை ஒருதரம் பார்த்துக்கொண்டான். அளவாக வெட்டிவிடப்பட்டிருந்த கேசத்தை ஹெல்மெட் மறைத்திருக்க முகம் முழுவதும் மழமழவென்று ஷேவ் செய்துகொண்டு சீக்கியப் புனித வஸ்துக்களான கேசம், கங்கா, கச்சா, கரா, கிர்பன் அனைத்தையும் துறந்து, முரளியின் வார்த்தைகளில் ஒரு ’டிப்பிகல் மத்ராஸி ப்ராமின் லட்கா’வாகக் காட்சியளித்தான்.

ஆம்புலன்ஸ் ஒன்று அலறியபடி விரைய பின்னால் மணியடித்தபடி ஒரு தீயணைப்பு வாகனமும் தொடர்ந்து மற்றொரு போலீஸ் ஜீப்பும் சென்றன.

வழிவிட்டு ஒதுங்கிய நீளமான ட்ரக் ஒன்று ’தம்’ பிடித்து சாலையின் நடுவுக்கு நெளிந்து சோம்பேறித்தனமாக ஊர்ந்துகொண்டிருக்க, அவர்களது திட்ட முதல்படி வெற்றியில் மகிழ்ந்து அவன் உற்சாகமாக பைக்கை ஓசையுடன் கிளப்பி வேகம் பிடிக்க அந்த எதிர்பாராத நிகழ்ச்சி நடந்தது.

ஸ்கூட்டர் ஒன்று அவனைக் கடந்து விரைந்து விடாப்பிடியாக ஹார்ன் விர்ரித்து அந்த நீளமான ட்ரக்கின் வலப்புறம் கடக்க முயன்றது.

அவதார் சிங் அவநம்பிக்கையுடன் பார்த்தான். ஸ்கூட்டரின் பின்சீட்டில் தாயின் மடியில் அமர்ந்திருந்த ஐந்து வயதுக் குழந்தை ஒன்று தன் மடியில் ஒரு வலைப்பையை வைத்துக்கொண்டு அதனுள்ளிருந்த டிரான்சிஸ்டர் குமிழ்களை ரகசியமாக ஆராய்ந்து கொண்டிருந்தது இவ்வளவு தூரத்திலிருந்தும் தெளிவாகத் தெரிந்தது.

அவன் தன் பைக்கின் வேகத்தை அதிகரித்து அவர்களுக்கு இடையே இருந்த தூரத்தைக் குறைக்க முற்பட்டபோது, அது முரளிதரன்தான் என்று திகிலுடன் உதயமாக, மேலும் பைக்கின் வேகத்தை அதிகரிக்க முயன்றபோது இடப்புறம் ஒரு சந்தில் இருந்து திடீரென்று வெளிப்பட்ட போலீஸ் ஜீப் ஒன்று சைரன் ஒலிக்க இடையில் நுழைந்துகொள்ள, ஸ்கூட்டர் அவன் பார்வையில் இருந்து மறைந்துபோனது.

அடுத்த சில வினாடிகள் அவதார் சிங் தன் தலைக்குள் வெற்றிடம் பாய்ந்து மரத்துப் போவதை உணர்ந்து முழுமூச்சுடன் பைக்கின் வேகத்தை மேன்மேலும் அதிகரித்து இடைவிடாது ஹார்ன் அடித்து ஒவ்வொரு வாகனமாகக் கடந்தபோது அந்த போலீஸ் ஜீப்பும் பிடிவாதமாகக் குறுக்கிட்டு முன்னால் செல்ல, பின்னால் ஒரு ஆம்புலன்ஸின் சங்கொலி கேட்க, அவன் கவலையுடன் பார்த்தபடி விரைய, முன்னால் கொஞ்ச தூரத்தில் சாலை சிணுங்கித் திரும்பியபோது திருப்பத்தில் அந்த ஸ்கூட்டர் தென்பட்டது.

*** *** ***

(அடுத்த பதிவில் மீதி...)


ramaNi

unread,
Aug 25, 2014, 10:09:33 PM8/25/14
to santhav...@googlegroups.com
யாரோ தன்னை பெயர்சொல்லி உரக்கக் கூப்பிடுவதைக் கேட்ட முரளிதரன் வண்டியின் வேகத்தைக் குறைத்து திரும்பிப் பார்த்தபோது அவதார் சிங் கண்ணில்பட, சட்டென்று ப்ரேக்கை அழுத்தினான்.

மறுகணம் பின்சீட் பக்கம் எழுந்த பயங்கர ஒலியில் தன்னைத் தாக்கியது எது என்று உணர்வதற்குள் அவன் தூக்கி எறியப்பட்டு முதுகெல்லாம் ரத்த விளாறாகி எலும்புகள் நொறுங்க விழுந்தபோது, அவன் நண்பன் அவதார் கைகளால் முகத்தைப் பற்றிக்கொள்வதும் அவனது பைக் தடுமாறுவதும் கண்களில் பளிச்சிட, ’காட், ஹி இஸ் கோயிங் டு டை!’ என்று பொருத்தமில்லாமல் நினைத்தவன் அந்த நினைப்பு முடிவதற்குள் முடிந்துபோனான்.

முரளிதரனின் ப்ரேக் தோற்றுவித்த குலுக்கலில் குழந்தை இந்திராவின் விரல்கள் அந்த டிரான்சிஸ்டர் குமிழை வலம்புரித்துவிட, உள்ளிருந்த வெடிகுண்டின் டெடனேட்டர் பின்புறம் அமைந்த ஒன்பது வோல்ட் பாட்டரியுடன் இணைப்புப் பெற்று மின்பொறிகளை உதிர்க்க, சுற்றியிருந்த இருநூறு கிராம் வெடிமருந்து பற்றிக்கொண்டு ராட்சத ஆற்றலுடன் விரிவடைந்து அழுத்தத்தைப் பலமடங்கு அதிகரிக்க, குண்டின் வெளிஓடு சுக்குநூறாகி சுற்றிலும் பறந்து கணைகளாகத் தாக்க, வெடியோசையைத் தொடர்ந்த புகைமண்டலம் தெளிவானபோது பின்சீட்டில் இருந்த இருவரும் உருத்தெரியாமல் சிதைந்து கருகியிருந்தனர்.

அவதார் சிங் தலைக்குள் இன்னொரு குண்டு வெடித்து அவன் கைகள் தாமாக முகத்தைப் பொத்திக்கொள்ள, அந்த யெஸ்டி பைக் தத்தித் தடுமாறி சில அடிகள் முன்னேறி பின்னால் அந்த ட்ரக் மோத, அவன் தூக்கி எறியப்பட்டு பலத்த காயங்களுடன் சாலையில் விழுந்து மல்லாந்தான்.

ஹெல்மெட் காரணமாக இன்னமும் உயிரோடு இருந்தவன் போலீஸ் அதிகாரி ஒருவரால் பொறுக்கப்பட்டு அவரது முதல் கேள்விக்கு பதிலாகத் தன் பெயரைக் கூறியவன், "எதோ டிரான்சிஸ்டர்னு கத்தினையே, என்னய்யா அது?" என்ற அடுத்த கேள்விக்கு பதில்கூற முயன்று நினைவிழந்தான்.

*** *** ***

ஆம்புலன்ஸில் எடுத்துச் செல்லப்பட்டபோது அவனுக்கு நினைவு திரும்பியது. உடல் எங்கும் ரத்தக் காயங்களும் கைகால்களில் எலும்பு முறிவுகளும் திடீரென்று ஏராளமாக வலிக்கத் தொடங்க, விழியோரம் அந்த போலீஸ் அதிகாரி சன்னல் பக்கமாக அமர்ந்திருப்பதும், அருகில் இரண்டு பெரிய ஒரு சிறிய உடல்கள் வெள்ளைத் துணியால் முழுதும் மூடப்பட்டு அவனுடன் பயணம் செய்வதும் தெரிந்தது.

நடந்த நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றாக நினைவுக்கு வர மனம் வெதும்பி, "ஐ ஹாவ் கில்ட் முர்லி! ஐ ஹாவ் கில்ட் தெம் ஆல்!" என்று மௌனமாகப் புலம்பினான்.

அந்த அதீதமான சோக வெள்ளம் அவன் நினைவுகளில் பிரவகித்து உணர்வுகளில் தளும்பிக் கண்களில் தாரையாகப் பெருக்கெடுக்க, அந்த வெள்ளத்தில் அவனுடைய விபரீத ஆசைகள், இன உணர்வுகள், காலிஸ்தான் கனவுகள் கரைந்துவிட, மின்சாரம் துண்டிக்கப்பட்ட கூறை விசிறியாக அவன் உடல் உணர்வுகள் செயல் இழக்கத் தொடங்க, அவனுக்கென்று நிர்ணயிக்கப்பட்ட வாழ்வின் கடைசிக் கணங்கள் மணிக்குமிழில் வடியத் தொடங்க, பிறந்தும் பிறவாத இறந்தும் இறவாத அந்த சோக சுக நிலையில் எண்ணங்கள் பிம்பங்களாக உருப்பெற்று அவன் முன் காற்றில் மிதந்தன.

’யூ லுக் லைக்க டிப்பிகல் மத்ராஸி ப்ராமின் லட்கா யார்!’

’எ வெரி ஸ்வீட் கர்ல் முர்லி, யுவர் இந்திரா. ஒரு இருவது வருஷம் முன்னாடி அவள் பிறந்திருந்தா ஐ வுட் ஹாவ் மேரீட் ஹர்!... இந்திரா கௌர்!... அச்சா லக்தா ஹ ந ஏ நாம்?’ (இந்தப் பெயர் நன்றாக இருக்கிறதல்லவா?)

பின்னால் ஆரவாரம் கேட்கத் திரும்பியபோது ஒரு கூட்டம் ஆயுதங்களுடன் அவன்மேல் பாய்ந்தது. அடிகளின் மழையில் அவன் மரவட்டையாகச் சுருண்டு டர்பன் கிழிய முகம் எங்கும் ரத்தம் கசிய மரக்கட்டையாகச் சாய்ந்தபோது ஸ்கூட்டர் ஒன்று ஓசையின்றி அருகில் வந்து நின்றது.

அவன் மௌனமாக முரளியின் கைகளில் கண்ணீர் உகுத்துக் கொண்டிருந்தான். முரளி அவன் முதுகை வருடியபடி, ’ஐயாம் ஸோ ஸாரி அபௌட் யுவர் பேரண்ட்ஸ் அவதார்! அன்ட் அபௌட் யுவர் ந்யூபைல் ஸிஸ்டர்! ஒரு மதத்தோட பெயரால மனிதர்களை வேட்டையாடுவதை விடக் காட்டுமிராண்டித் தனமான செயல் இல்லை. இந்த நாட்லயா காந்தி பிறந்தார்? வி ஆர் எ ஃபர்ஸேக்கன் லாட், அவதார்! விமோசனமே கிடையாது’ என்றான்.

அவன் அந்த ஐந்து டிரான்சிஸ்டர்களையும் திறமையுடன் ஒரு பார்க், ஒரு ஹோட்டல், ஒரு வயல்வெளி, ஒரு பாங்க் மற்றும் ஒரு பஸ்ஸில் புறக்கணித்துவிட்டு வெற்றியுடன் பைக்கில் ஊர்ந்துகொண்டிருந்தபோது நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது இப்போது வெட்கமாகவும் வேதனையாகவும் அவமானமாகவும் இருந்தது.

"ஸேம் டிரான்சிஸ்டர் தட் கில்ட் ஹிம்" என்று அவன் ஈன ஸ்வரத்தில் முனகியபோது முகத்தில் தண்ணீர் தெளிக்கப்பட்டு, "வாட் டிரான்சிஸ்டர் யங் பாய்? கௌன் பனாயா ஓ சப் கோலியான், போலோ" (யார் அந்த குண்டுகளைத் தயாரித்தது, சொல்லு) என்ற கட்டைக்குரல் ஒன்று காதருகில் கேட்டது.

"ப்ளீஸ், என்னத் தனியா விடுங்களேன்! நான் நிம்மதியா, அமைதியா சாகணும்" என்று கண்களை மூடிக்கொண்டான்.

"காந்திய வழிகள்ல எதும் பயன் கிடையாது" என்றது அந்த கட்டைக்குரல் ஹிந்தியில்.

ஒரு வலிய கரம் அவனது ஜனன விதைகளைப் பற்றியது. முதலில் மெதுவாகவும் போகப்போக அழுத்தமாகவும் பிசையத் தொடங்கியது.

"இப்ப சொல்லு! யார் கொடுத்தது அந்த டிரான்சிஸ்டர்?"

அவதார் பற்களைக் கடித்துக்கொண்டான். அவனும் முரளியும் அந்தக் கல்லூரியின் பின்புறம் யூரினல்ஸில் இருந்தனர். ’கவர் யுவர் சீஸ் அவதார்! எல்லாத்தயும் நேஷனலைஸ் பண்ற காலம் இது. ஏதாவது பெரிசா பாத்தா நேஷனலைஸ் பண்ணிடுவாங்க!’ என்று முரளி சிரித்தான்.

கலைடாஸ்கோப்பில் காட்சி மாரியது. முரளியும் அவனும் ஹாஸ்டல் அறையில் தலைகீழாக, ஏறக்குறைய நிர்வாணமாக நின்றுகொண்டு உடற்பயிற்சி செய்தவாறே செய்தித்தாள் படித்துக்கொன்டிருந்தனர். திடீரென்று முரளி செய்தித்தாளை விசிறி எறிந்துவிட்டு, "என்னய்யா பெரிய மதம்! தாடி வெச்சா முஸ்லிம், தலப்பா கட்டினா சீக்கியன். தாடிய எடுத்துட்டுப் பட்டையடிச்சா சைவன், நாமம் போட்டா வைஷ்ணவன். சிலுவை போட்டுண்டா கிறிஸ்துவன். அவத்துப்போட்டா எல்லாம் மனுஷன்தானய்யா?" என்றான்.

திடீரென்று எங்கிருந்தோ இரண்டு கவிதை வரிகள் தலைகாட்டின.

"குருநானக் ஷா ஃபக்கீர்
ஹிந்து கா குரு, முஸல்மான்கா பீர்."

சட்டென்று முளைத்தது அந்தக் கேள்வி. ’இறைவன் ஒருவனே என்று கரடியாகக் கத்தும் மதங்கள் யாவும் மனிதன் ஒருவனே என்று ஏன் போதிக்கத் தவறிவிட்டன?’

கால்களிடையே அழுத்தமும் வலியும் அதிகமாக அவன் ஒருகணம் முழுவதும் விழித்துக்கொண்டு தன்னை எதிர்நோக்கியிருந்த போலீஸ் முகத்திடம் ஸ்பஷ்டமான ஹிந்தியில், "அவுத்துப்போட்டா எல்லோரும் மனுஷன்தான்!" என்றான்.

அவர் அவனை நம்பமுடியாமல் பார்த்தார். அவன் கண்கள் மெல்ல மூடிக்கொள்ளத் தலை சாய்ந்து எங்கும் இருள் சூழ்ந்தது.

*** *** ***

(முற்றியது)


ramaNi

unread,
Aug 27, 2014, 11:45:30 AM8/27/14
to santhav...@googlegroups.com
ஆறு சொற்களில் ஒரு கதை 

புகழ்பெற்ற கதையெழுத்தாளர் எர்னஸ்ட் ஹெமிங்வே ஒரு முறை ஆறு சொற்களில்
அமையுமாறு தம்மால் ஒரு கதை எழுத முடியும் என்று பந்தயம் கட்டி ஜெயித்தார்.

அந்தக் கதை உலகின் மிகச் சிறிய கதைகளின் முன்னோடி யாகியது:For sale: baby shoes, never worn

இன்று அறுசொற் கதைகளுக்கென்றே ஒரு வலைதளம் உள்ளது!
http://www.sixwordstories.net/

இந்த வலை தளத்தில் கண்ட சில சுவாரஸ்யமான ’கதைகள்’ கீழே.

01. We’re lying in bed. She’s lying.
02. "Joining the President is his husband..."
03, Strangers. Friends. Best friends. Lovers. Strangers.
04. Torched the haystack. Found the needle.
05. Sorry soldier, shoes sold in pairs.

06. Unwanted boy grows into wanted man.
07. Free rent. Three squares. Maximum Security.
08. The smallest coffins are the heaviest.
07. Smoking my very last cigarette. Again.
08. Should’ve. Could’ve. Would’ve. Didn’t. Didn’t. Didn’t.
09. I’m beside myself; cloning machine works.
10. Underwater collector. Bad lover. Lone shark.

11. Alzheimer’s Advantage: new friends every day!
12. Painfully, he changed 'is' to 'was'.
13. Ex-wife, ex-husband are fine. Kids aren’t.
14. Five armed vampires enter blood bank.

15. Murderous rooster slaughters hens: foul play!

தமிழில் இதுபோல் நான் முயன்றதில் உதித்த சில ’கதைகள்’.

1. மன்னனின் வேட்டையில் சிக்கியது மான். திருமணம் செய்துகொண்டான்.

2. தலைவனும் தலைவியும் ஊடிப் பிரிந்தனர். தோழியைக் காணவில்லை!

3. புலவர் மன்னனைக் கடிந்து பாடினார். மன்னன் பரிசளித்தான்.

4. அண்ணன் செத்தால் திண்ணை காலி. தம்பி முந்திக்கொண்டான்.

5. வைக்கோலை எரித்துத் தேடினர். அரசியின் தங்க ஊசி!

நீங்களும் முயன்று பாருங்களேன்! ஒரே ஒரு நிபந்தனை, ஆறு சொற்களில் ஒரு கதை இருக்கவேண்டும்,
கவிதை அல்ல.

ரமணி, 27/08/2014

*****

ramaNi

unread,
Sep 4, 2014, 10:26:55 AM9/4/14
to santhav...@googlegroups.com
அன்புடையீர்!

மறைந்த என் இளைய சகோதரன் எழுதி, ’சாவி’ பத்திரிகையில் வெளிவந்த சிறுகதையை அன்பர்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

இணைப்பு:
’காகிதப் பாலங்கள்’
ஜி.எச்.எஸ். மணியன்



அன்புடன்,
ரமணி

*****

ghs-kp.pdf

M. Viswanathan

unread,
Sep 4, 2014, 11:13:58 AM9/4/14
to Santhavasantham
அன்புக்குரிய திரு.ரமணி அவர்களுக்கு,

1980 சாவிப் பத்திரிகையின் தொடக்க காலம். சிறுகதைக்கான காலம்.
உங்கள் சகோதரரின் கதையில் எளிமையும், கருவும் அழகாக உள்ளது. 

அன்புடன்,
மீ.விசுவநாதன் 

Kaviyogi Vedham

unread,
Sep 4, 2014, 11:32:49 AM9/4/14
to santhavasantham
அட்டகாசம் ரமணீ!! கதை நேரே என் நெஞ்சுலே போய் ஒக்காந்துடுத்து!,
 யோகியார்

வாழ்க அனைவரும் வளமுடனே 
என் குருஜி லஹரி பாபாஜி
ஆசியினால்.
கவியோகி வேதம்(kaviyogi vedham)-
PL. visit my blog(for my poems etc)at http;//kaviyogi-vedham.blogspot.com/
kaviyogi vedham(yogiyaar)தலைவர்..
Founder, Sree Laharibabaji yogasram,
2/682, 10th cross St,...Renga reddy garden,
Neelankarai, Chennai-600115--செல் எண் 95000-88528
 



2014-09-04 19:56 GMT+05:30 ramaNi <sai...@gmail.com>:

ramaNi

unread,
Sep 4, 2014, 9:22:46 PM9/4/14
to santhav...@googlegroups.com
கதையைப் பாராட்டிய திரு.விசுவநாதன், யோகியார் அவர்களுக்கு நன்றி.
ரமணி


>> 1980 சாவிப் பத்திரிகையின் தொடக்க காலம். சிறுகதைக்கான காலம்.
>> உங்கள் சகோதரரின் கதையில் எளிமையும், கருவும் அழகாக உள்ளது.
>>
>> அன்புடன்,

>> மீ.விசுவநாதன்

ramaNi

unread,
Sep 9, 2014, 12:11:08 AM9/9/14
to santhav...@googlegroups.com
அன்புடையீர்!

எங்களது எழுத்தாளக் குடும்பத்தில் நான்தான் கடைசியாக எழுத முனைந்தது.
மறைந்த என் தந்தை, தாய், தம்பி ஆகிய மூவரும் தத்தம் காலத்தில் எழுதி வெளியான கதைகளை
நான் அப்போது படிக்க முனைந்ததில்லை. அப்போதெல்லாம் என் இலக்கிய ஆர்வம் ஆங்கிலக் கவிதைகள்
புனைவதில் இருந்தது. இப்போது இவர்கள் மறைவுக்குப் பின் விட்டுச்சென்ற உடமைகளைத் தேடும் போது
கிடைத்த இலக்கியப் பதிவுகளைச் சேகர்த்தேன். இவற்றை மின்வடிவில் ஒரு வலைப்பூவாக்கும் திட்டம்
தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது.

என் தந்தையார், ’எச்.குருமூர்த்தி, உமாகாந்தன்’ என்ற புனைப் பெயர்களில், ஹாஸ்யமாகக் கதைகளும்
கட்டுரைகளும் எழுதினார்.தாயார் நேர்மாறாகச் சோகம் பிழியப் பிழியக் கதைகள் எழுதினார்.
அப்போதைய பிரபல பத்திரிகைகளில் இவை பெரும்பாலும் வெளிவந்தன. என் தந்தையார் எழுதி 1954-ஆம் ஆண்டு
வெளிவந்த ஓர் ஹாஸ்யக் கட்டுரையை அன்பர்கள் பார்வைக்கு வைக்கிறேன். பத்திரிகையின் பெயர் தெரியவில்லை.

இணைப்பு:
’மறதி மன்னர்கள்’
எச்.குருமூர்த்தி
hg-mm.pdf

Kaviyogi Vedham

unread,
Sep 9, 2014, 12:14:20 AM9/9/14
to santhavasantham
பலே பலே. நன்று. இப்படி உங்க வீட்டுச் சுரங்கத்தைத்தோண்டி இங்கு இடுங்கள். உபயோகமாயிருக்கும் எமக்கு கதை எழுத, பயிற்சிக்கு
 யோகியார்

வாழ்க அனைவரும் வளமுடனே 
என் குருஜி லஹரி பாபாஜி
ஆசியினால்.
கவியோகி வேதம்(kaviyogi vedham)-
PL. visit my blog(for my poems etc)at http;//kaviyogi-vedham.blogspot.com/
kaviyogi vedham(yogiyaar)தலைவர்..
Founder, Sree Laharibabaji yogasram,
2/682, 10th cross St,...Renga reddy garden,
Neelankarai, Chennai-600115--செல் எண் 95000-88528
 


ramaNi

unread,
Sep 9, 2014, 12:19:24 AM9/9/14
to santhav...@googlegroups.com
அன்புள்ள யோகியார்க்கு,

படித்து உடனே கருத்துச் சொன்னதற்கு மிக்க நன்றி.
நீங்கள் சொன்னவாறே செய்கிறேன்.


அன்புடன்,
ரமணி

*****

Siva Siva

unread,
Sep 9, 2014, 7:38:22 AM9/9/14
to santhavasantham
If you increase the resolution of the scanning, the pages will be easier to read.
You can play with different resolutions to determine optimal resolution that enables easy reading while not making the file size too large for gmail.

ramaNi

unread,
Sep 9, 2014, 9:02:04 AM9/9/14
to santhav...@googlegroups.com
Thanks for your advice Sivasiva. As you can see the pages are very old and brittle, and the original print itself is rather faint. If I increase the scanning resolution, the file size  will increase much, so I think the best way to read the enclosure is to increase the zoom in the pdf reader or viewer. In any case, I shall play with a higher resolution in the next enclosure as you have suggested.

ramaNi

Kaviyogi Vedham

unread,
Sep 9, 2014, 9:14:38 AM9/9/14
to santhavasantham
ஆம். ரொம்ப சிரமப்பட்டுப் படித்து ஆயின் சிரித்து மகிழ்ந்துதான் பதில் அனுப்பினேன்.. மறதி மன்னர்களைப்பார்த்து.
 அவ்வளவு ஏன்? சாப்பாட்டு மேஜையிலேயே என் மூக்குக் கண்ணாடியை வைத்துவிட்டு டி வி ரூம் முழுக்க முந்தா நாள் அதைத் தேடி அரை மணி தொலைத்தபின் பார்யாள் ஏன்னா! இங்கே சாப்பாட்டு மேசையிலேயே வச்சுப்பிட்டு நேரத்தைச் சாப்பிடறேளே.. என்று கிண்டலாகச் சொல்லிச் சிரித்தது இன்னும்காதில் ஒலிக்கிறது.
 யோகியார். 

வாழ்க அனைவரும் வளமுடனே 
என் குருஜி லஹரி பாபாஜி
ஆசியினால்.
கவியோகி வேதம்(kaviyogi vedham)-
PL. visit my blog(for my poems etc)at http;//kaviyogi-vedham.blogspot.com/
kaviyogi vedham(yogiyaar)தலைவர்..
Founder, Sree Laharibabaji yogasram,
2/682, 10th cross St,...Renga reddy garden,
Neelankarai, Chennai-600115--செல் எண் 95000-88528
 


ramaNi

unread,
Sep 9, 2014, 9:23:56 AM9/9/14
to santhav...@googlegroups.com
நல்ல அனுபவம் ! முயற்சி செய்கிறேன், யோகியார் அவர்களே!

எதையும் நீங்கள் ஒரு சிட்டிகை நகைச்சுவை சேர்த்தே எழுதுவதால், நீங்களும் இதுபோன்ற நகைச்சுவைக் கதைகள், கட்டுரைகள் வரையலாமே?

ரமணி

Kaviyogi Vedham

unread,
Sep 9, 2014, 9:34:15 AM9/9/14
to santhavasantham
என்னுடைய நந்தி மாப்பிள்ளை- கதையை இலக்கியவேலில் ( ஆகஸ்ட் இதழில்)படிக்கவில்லையா? அந்த நகைக்கதையைப் படித்து என் நண்பர் புதுவயல் செல்லப்பன் (கவிஞர்) என்பவர், “ ஐயா அதைப்படித்து எனக்கும் என் துணைவியார்க்கும் சிரித்துச் சிரித்து இடுப்பில் பிடித்துக்கொண்டது..  வோலினி-- (Volini-)என்ற ஆயின்மெண்ட் வாங்கித்தடவியதில் எனக்குச் செலவு ரூ 100 ஆயிற்று. அனுப்பவும், “ என்று எனக்கு கடிதம் எழுதினார்.
 யோகியார்

வாழ்க அனைவரும் வளமுடனே 
என் குருஜி லஹரி பாபாஜி
ஆசியினால்.
கவியோகி வேதம்(kaviyogi vedham)-
PL. visit my blog(for my poems etc)at http;//kaviyogi-vedham.blogspot.com/
kaviyogi vedham(yogiyaar)தலைவர்..
Founder, Sree Laharibabaji yogasram,
2/682, 10th cross St,...Renga reddy garden,
Neelankarai, Chennai-600115--செல் எண் 95000-88528
 


--

ramaNi

unread,
Sep 9, 2014, 9:45:52 AM9/9/14
to santhav...@googlegroups.com
One-page or One-minute stories

As in the short stories of O.Henry, very short stories, such as the single-page or one-minute stories depend on the final twist for their effect. The more the twist is hard to guess, the better.
Here is a one-minute-story of my father. I scanned this image file at resolution 1400x1867 pixels at a filesize of 298 KB. I am enclosing the image file itself, instead of converting
it into a pdf file. In case the print is small, kindly use the zoom feature.

இணைப்பு
நிமிஷக்கதை-01

எச்.குருமூர்த்தி

ramaNi

hg-nk-01.jpg

ramaNi

unread,
Sep 9, 2014, 9:50:00 AM9/9/14
to santhav...@googlegroups.com
இப்போது படித்துச் சிரித்து ரசித்தேன், யோகியார் அவர்களே! அருமையான நகைச்சுவை! இதுபோல் அடிக்கடி எழுதுங்கள்.
ரமணி

Kaviyogi Vedham

unread,
Sep 9, 2014, 9:50:15 AM9/9/14
to santhavasantham
நன்றாக எழுதியுள்ளார் சாமி,
 யோகியார்

வாழ்க அனைவரும் வளமுடனே 
என் குருஜி லஹரி பாபாஜி
ஆசியினால்.
கவியோகி வேதம்(kaviyogi vedham)-
PL. visit my blog(for my poems etc)at http;//kaviyogi-vedham.blogspot.com/
kaviyogi vedham(yogiyaar)தலைவர்..
Founder, Sree Laharibabaji yogasram,
2/682, 10th cross St,...Renga reddy garden,
Neelankarai, Chennai-600115--செல் எண் 95000-88528
 


Kaviyogi Vedham

unread,
Sep 9, 2014, 9:52:39 AM9/9/14
to santhavasantham
பாராட்டுக்கு நன்றி. முயல் ஆக இருப்பேன்... முயல்கிறேன் என்று சொல்லவந்தேன்,
 யோகியார்

வாழ்க அனைவரும் வளமுடனே 
என் குருஜி லஹரி பாபாஜி
ஆசியினால்.
கவியோகி வேதம்(kaviyogi vedham)-
PL. visit my blog(for my poems etc)at http;//kaviyogi-vedham.blogspot.com/
kaviyogi vedham(yogiyaar)தலைவர்..
Founder, Sree Laharibabaji yogasram,
2/682, 10th cross St,...Renga reddy garden,
Neelankarai, Chennai-600115--செல் எண் 95000-88528
 


ramaNi

unread,
Sep 9, 2014, 9:55:05 AM9/9/14
to santhav...@googlegroups.com
நன்றி ஸார்! பழங்கதைகளை இப்போது படிக்க நேர்வதில், நானும் நிறையக் கற்றுக்கொள்கிறேன்.
ரமணி

Siva Siva

unread,
Sep 9, 2014, 11:16:31 AM9/9/14
to santhavasantham
Taking pictures with a camera or phone (as most phones have good resolution cameras) is the easiest way to scan and least stress for old books/magazines.

Each page - when scanned as text using a scanner - even when done at reasonable resolution - the size does not exceed 100-200 K.

Of course, if you are really motivated, you can type those stories again - then no scanning and good readability !!



-- 

M. Viswanathan

unread,
Sep 9, 2014, 11:27:16 PM9/9/14
to Santhavasantham
அன்பர் திரு.ரமணி அவர்களுக்கு,

"மறதி மன்னர்கள்" கதை நல்ல நகைச் சுவையைக் கொண்டுள்ளது. தேவன் கதைகளும், புதுமைப் பித்தனின் கடவுளும் கந்தசாமிப்பிளையும் நினைவில் வந்து சென்றனர்.

மீ.வி.

--

ramaNi

unread,
Sep 9, 2014, 11:30:58 PM9/9/14
to santhav...@googlegroups.com
'மறடி மன்னர்களை' மறக்காமல் பாராட்டியது மகிழ்ச்சி.
ரமணி

ramaNi

unread,
Sep 9, 2014, 11:58:02 PM9/9/14
to santhav...@googlegroups.com
மேலும் இரண்டு 'நிமிஷக்கதை'கள், கொஞ்சம் பெரிய எழுத்துகளில்.

இணைப்பு:
'நிமிஷக்கதை'
எச்.ஜி.மூர்த்தி/எச்.குருமூர்த்தி

ரமணி


hg-nk-02.pdf

M. Viswanathan

unread,
Sep 10, 2014, 12:29:58 AM9/10/14
to Santhavasantham
இன்றைய "மைக்ரோ"க் கதைகளைவிட அருமையாக உள்ளது.
மீ.வி.

ramaNi

unread,
Sep 10, 2014, 1:05:26 AM9/10/14
to santhav...@googlegroups.com
நீங்கள் சொல்வது பெரும்பாலும் சரியே. ஆயினும் இன்றைய 'மைக்ரோ' கதைகளில் அரிதாக சில முத்துக்களைப் பார்க்கலாம் என்று தோன்றுகிறது.
பல வருடங்கள் கழித்து இன்றைய குமுதம், குங்குமம், விகடன் பத்திரிகைகள் எவ்வாறு உள்ளன என்று 'சாம்பிள்' வாங்கிப் பார்த்தபோது இந்தக் கதையைக் கண்டேன்:

இணைப்பு
'சங்கிலி' ராஜன் புத்திரன்

கதை மாப்பாசானின் 'த நெக்லஸ்' கதையின் காப்பிதான். இருப்பினும் அதை புதுமையாகச் செய்திருக்கிறார்.

ரமணி
eg-kung-rp.jpg

M. Viswanathan

unread,
Sep 10, 2014, 5:04:31 AM9/10/14
to Santhavasantham
தழுவல் கதைகளை விடத்   தனது சொந்தக் கற்பனையில் எழுதுவதுதான் ஒரு நல்ல கதசிரியனுக்குப் பெருமை சேர்க்கும்.
மீ.விசுவநாதன் 

M. Viswanathan

unread,
Sep 10, 2014, 5:19:14 AM9/10/14
to Santhavasantham
தழுவல் கதைகளை விடத்   தனது சொந்தக் கற்பனையில் எழுதுவதுதான் ஒரு நல்ல கதாசிரியனுக்குப் பெருமை சேர்க்கும்.

மீ.விசுவநாதன் 

Kaviyogi Vedham

unread,
Sep 10, 2014, 8:55:43 AM9/10/14
to santhavasantham
ரொம்ப சரி கவிமாமணியே.
 இருப்பினும் அவர் எடுத்துக்காட்டியது ரசிக்கத்தகுந்தது.
 யோகியார்

வாழ்க அனைவரும் வளமுடனே 
என் குருஜி லஹரி பாபாஜி
ஆசியினால்.
கவியோகி வேதம்(kaviyogi vedham)-
PL. visit my blog(for my poems etc)at http;//kaviyogi-vedham.blogspot.com/
kaviyogi vedham(yogiyaar)தலைவர்..
Founder, Sree Laharibabaji yogasram,
2/682, 10th cross St,...Renga reddy garden,
Neelankarai, Chennai-600115--செல் எண் 95000-88528
 


ramaNi

unread,
Sep 10, 2014, 11:29:31 PM9/10/14
to santhav...@googlegroups.com
எச்.குருமூர்த்தியின் ’விசித்திர ஜன்மங்கள்’ தொடரில் ’மறதி மன்னர்கள்’ கட்டுரைக்குப் பின்
’முந்திரிக் கொட்டை’ மற்றும் ’பூலோக விஷ்ணு’

ரமணி

hg-vj-mk.pdf
hg-vj-bv.pdf

ramaNi

unread,
Sep 11, 2014, 9:48:06 PM9/11/14
to santhav...@googlegroups.com
Our sweetest songs are those that tell of saddest thought.
--Percy Bysshe Shelley

என் அன்னையாரின் கதைகள் பெரும்பாலும் குடும்பச் சூழ்நிலையில் அமைந்தவை. அவற்றில் பொதுவாக சோகம் இழையோடும். சமயத்தில் வழிந்தோடும்!

இணைப்பு
'மாயே, யசோதா!'
உமா குருமூர்த்தி

ரமணி

ug-my.pdf

M. Viswanathan

unread,
Sep 11, 2014, 11:15:19 PM9/11/14
to Santhavasantham
"யசோதா" நேர்த்தியாகச் செய்யப்பட்ட  கதை. முடிவும் அழகானது. பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.
அன்புடன்,
மீ.விசுவநாதன் 

ramaNi

unread,
Sep 12, 2014, 1:35:41 AM9/12/14
to santhav...@googlegroups.com
அன்னையின் சிறுகதை உங்களுக்குப் பிடித்திருந்தது எனக்கு மகிழ்ச்சி.
தினமும் மூணு-நாலு பக்கங்கள், படிக்க வசதியாக, இன்னும் இருப்பவற்றைப் பகிர்ந்துகொள்கிறேன்.
இடையில் என் கதைகளும்!

--ரமணி

M. Viswanathan

unread,
Sep 12, 2014, 2:57:10 AM9/12/14
to Santhavasantham, Saidevo ramaNi
அன்புமிக்க திரு.ரமணி அவர்களுக்கு,

வணக்கம்.
நல்ல "கதைவிடுகிற" குடும்பமையா! மிக்க மகிழ்ச்சி. 
அன்பன்,
மீ.விசுவநாதன் 
 

Kaviyogi Vedham

unread,
Sep 12, 2014, 4:24:32 AM9/12/14
to santhavasantham
படித்தேன் ரசித்தேன். நல்ல கதை. நல்ல சஸ்பென்ஸ்!,
 யோகியார்

வாழ்க அனைவரும் வளமுடனே 
என் குருஜி லஹரி பாபாஜி
ஆசியினால்.
கவியோகி வேதம்(kaviyogi vedham)-
PL. visit my blog(for my poems etc)at http;//kaviyogi-vedham.blogspot.com/
kaviyogi vedham(yogiyaar)தலைவர்..
Founder, Sree Laharibabaji yogasram,
2/682, 10th cross St,...Renga reddy garden,
Neelankarai, Chennai-600115--செல் எண் 95000-88528
 


2014-09-12 7:18 GMT+05:30 ramaNi <sai...@gmail.com>:

ramaNi

unread,
Sep 12, 2014, 9:04:35 AM9/12/14
to santhav...@googlegroups.com
யோகியார்க்கு மிக்க நன்றி.
ரமணி

ramaNi

unread,
Sep 12, 2014, 11:23:36 PM9/12/14
to santhav...@googlegroups.com
’அமுதசுரபி’யின் 1990-ஆம் ஆண்டு சிறுகதைப் போட்டியில் இரு கதைகள் முதல் பரிசைப்
பகிர்ந்துகொண்டன. நான் எழுதிய ’பெண்மையைன் அவலங்கள்’ அந்த இரு கதைகளில் ஒன்று.
இன்னொன்று ’அப்பா’ என்ற தலைப்பில் திரு.பாஸ்கர் எழுதியது. என் சிறுகதை அன்பர்கள் கருத்துக்கு,
இணைப்பாகக் கீழே.

இணைப்பு
’பெண்மையின் அவலங்கள்’, ரமணி

ரமணி

*****
gg-pa.pdf

Subbaraman NV

unread,
Sep 12, 2014, 11:27:53 PM9/12/14
to santhav...@googlegroups.com
Great Ramani. May God bless you with excellent strength of body and mind to continue your services to the society through literature.
N V Subbaraman

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
N V Subbaraman,
Editor, Young Poet,
12 / 1045 Jeevan Bhima Nagar,
Chennai - 600101

Visit http://www.youngpoet.org
Visit http://www.poemhunter.com/subbaraman-n-v/

ramaNi

unread,
Sep 12, 2014, 11:38:19 PM9/12/14
to santhav...@googlegroups.com
Sir, thanks for your good wishes. 
ramaNi

M. Viswanathan

unread,
Sep 12, 2014, 11:47:09 PM9/12/14
to Santhavasantham, Saidevo ramaNi
நல்ல கதை. திரு.ரமணிக்குப் பாராட்டுகள்.
மீ.விசுவநாதன்
2014-09-13 8:53 GMT+05:30 ramaNi <sai...@gmail.com>:

--

ramaNi

unread,
Sep 13, 2014, 2:01:10 AM9/13/14
to santhav...@googlegroups.com, sai...@gmail.com
மிக்க நன்றி.
ரமணி


Kaviyogi Vedham

unread,
Sep 13, 2014, 2:21:05 AM9/13/14
to santhavasantham
பலே பலே இதுநாள்வரை சொல்லவில்லையே! பாராட்டுக்கள்.
 நல்ல அழுத்தம் சார் நீங்க!
 யோகியார்

வாழ்க அனைவரும் வளமுடனே 
என் குருஜி லஹரி பாபாஜி
ஆசியினால்.
கவியோகி வேதம்(kaviyogi vedham)-
PL. visit my blog(for my poems etc)at http;//kaviyogi-vedham.blogspot.com/
kaviyogi vedham(yogiyaar)தலைவர்..
Founder, Sree Laharibabaji yogasram,
2/682, 10th cross St,...Renga reddy garden,
Neelankarai, Chennai-600115--செல் எண் 95000-88528
 


2014-09-13 8:53 GMT+05:30 ramaNi <sai...@gmail.com>:

--

ramaNi

unread,
Sep 13, 2014, 3:14:07 AM9/13/14
to santhav...@googlegroups.com
யோகியார்க்கு வணக்கம்.


மிக்க நன்றி.

இந்தக் கதையைப் பற்றி அசோகமித்திரன் அவர்கள்,

’தங்கள் பரிசுக் கதையை அமுதசுரபியில் படித்தேன். மிகவும் சுருதி சுத்தமாக
எழுதியிருக்கிறீர்கள். என் மனமார்ந்த பாராட்டுகள்.’

என்று எனக்கு ஒரு தபால் அட்டையில் கடிதம் எழுதியிருந்ததும், அதைத் தொடர்ந்து
நானும் திரு.இரா முருகனும் அவரை இல்லத்தில் சந்தித்து அரைமணி நேரம் பேசிக்கொண்டிருந்ததும்
என் வாழ்வில் முக்கியமான அனுபவங்கள்.

இரா. முருகன் என்னுடன் ஐ.ஓ.பி. மத்திய அலுவகத்தில் பக்கத்து ’டிபார்ட்மென்ட்’-இல் வேலைபார்த்தார்.
அப்போது நாங்கள் தினமும் சந்தித்து உரையாடினாலும், இப்போது அதிகம் தொடர்பில்லை. அவர் மிகவும்
’பிஸி’யான மனிதர் என்பது ஓர் காரணமாக இருக்கலாம்.

புகழ்பெற்ற எழுத்தாளர்களான குமாரி ஆர்.சூடாமணி, திருமதி அநுத்தமா ஆகியோர் எங்களுடன்
உறவினர்கள் போன்றே பழகினார்கள். அன்னையாரும் சூடாமணி அவர்களும் தம் கதைகளைக் கடிதம் மூலம்
பகிர்ந்து விமரிசித்துக் கொள்வார்கள். நேரிலும் நாங்கள் அவரைச் சந்தித்துப் பேசுவோம்.

நான் ஆங்கிலக் கவிதை எழுதிய காலத்தில் ஆன்ட்டி சூடாமணி அவர்கள் எனக்குக் கருத்துரைத்தும்
அறிவுறுத்தியும் மிகவும் உதவியாக இருந்தார். பின்னர் நான் எழுதிய ஐந்து சிறுகதைகள்,
ஒரு குறுநாவல், ஒரு முழுநாவல் இவற்றையும் அவற்றின் இறுதிக் கையெழுத்துப் பிரதி முடிந்த
உடனேயே படித்துச் சிலாகித்துப் பேசினார்.

இவற்றையெல்லாம் இப்போது நினைத்துப் பார்க்கும்போது, கணிணித் துறை வேலை மற்றும் ஈடுபாட்டின் தாக்கத்தில்
நான் என் இலக்கிய முயற்சிகளை அடியோடு விட்டுவிட்டது கொஞ்சம் நெருடுகிறது. இருந்தாலும்
இப்போதைய நிலையில், எந்தக் கட்டுமின்றி, நான் விரும்பும் வகையில் அவற்றைத் தொடர்வது எனக்கு
ஆறுதலாகவும், மகிழ்வாகவும் உள்ளது. அதுவும் கவிதை புனையும் ஆற்றலை வளர்த்துக்கொள்ள
நான் சந்தவசந்தம் குழுவில் சேர்ந்து, இங்குள்ள அறிஞர்கள் என் கவிதைகளைப் படித்துக்
கருத்துச் சொல்லி அறிவுறுத்துமாறு அமைந்ததை வாழ்வின் இனிமையான அனுபவங்களில் தலையாயதாகக்
கருதுகிறேன்.

இந்த இழையில் என் கதைகளைப் படிக்கும், படித்துக் கருத்துச் சொல்லும் அன்பர்கள், அறிஞர்கள்
எல்லோர்க்கும் என் நன்றிகள்.

இணைப்பு
’பெண்மையின் அவலங்கள்’ கதை பற்றிய பின்னூட்டம்


அன்புடன்,
ரமணி

*****


gg-pa-cmt.pdf

M. Viswanathan

unread,
Sep 13, 2014, 5:51:04 AM9/13/14
to Saidevo ramaNi, Santhavasantham
சரஸ்வதி நதிபோல் வெளியில் தெரியாது, திடீர் என்று கங்கைபோலப் பிரவாகிக்கிற உங்கள் கதைகள் அருமை திரு. ரமணி அவர்களே. பாராட்டுக்கள்.
மீ.வி.

ramaNi

unread,
Sep 13, 2014, 11:51:32 PM9/13/14
to santhav...@googlegroups.com
சிறுகதை எழுதுவதில் பல உத்திகளைப் பயன்படுத்தலாம். collage, அதாவது படத்திரட்டு என்பது அவற்றில் ஒன்று.
இந்த உத்தியை பயன்படுத்தி எழுதுவது சித்திரக்கதை அல்ல. சித்திரக்கதையில் கதைக்குப் படங்கள் இருக்கும். இந்த உத்தியில்
படங்களையெல்லாம் இணைத்து ஒரு கதை எழுதவேண்டும். இணைத்துள்ள என் சிறுகதை பற்றி அன்பர்கள் கருத்துரைக்க வேண்டுகிறேன்.

இணைப்பு
’ஷோகேஸ்’
ரமணி

ramaNi-ss-showcase.pdf

p balakrishnan

unread,
Sep 14, 2014, 1:48:53 AM9/14/14
to santhav...@googlegroups.com
Superb! - Elangkannan

On Sun, 14 Sep 2014 09:21:40 +0530 ramaNi wrote
--
>
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
>
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
>
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
>
santhavasanth...@googlegroups.com.
>
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
>
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
>
---
>
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
>
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to
santhavasanth...@googlegroups.com.
>
To post to this group, send email to santhav...@googlegroups.com.
>
For more options, visit https://groups.google.com/d/optout.
>

Get your own FREE website, FREE domain & FREE mobile app with Company email.  
Know More >

ramaNi

unread,
Sep 14, 2014, 2:42:57 AM9/14/14
to santhav...@googlegroups.com
Thanks for your appreciation, shrI Balakrishnan.
ramaNi

On Sunday, September 14, 2014 11:18:53 AM UTC+5:30, pbalakrishnan1 wrote:
Superb! - Elangkannan

 

Kaviyogi Vedham

unread,
Sep 14, 2014, 4:17:11 AM9/14/14
to santhavasantham
அப்படியே என்னை ஒரு உலுக்கு உலுக்கிவிட்டது ரமணீ!
 கதையின் சஸ்பென்ஸும், ஓட்டமும் சூப்பர்! வாழ்க உம்  சொல்லும் திறம்
 யோகியார்.

வாழ்க அனைவரும் வளமுடனே 
என் குருஜி லஹரி பாபாஜி
ஆசியினால்.
கவியோகி வேதம்(kaviyogi vedham)-
PL. visit my blog(for my poems etc)at http;//kaviyogi-vedham.blogspot.com/
kaviyogi vedham(yogiyaar)தலைவர்..
Founder, Sree Laharibabaji yogasram,
2/682, 10th cross St,...Renga reddy garden,
Neelankarai, Chennai-600115--செல் எண் 95000-88528
 


ramaNi

unread,
Sep 14, 2014, 8:47:21 AM9/14/14
to santhav...@googlegroups.com
யோகியாரின் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.
ரமணி

Lalitha & Suryanarayanan

unread,
Sep 14, 2014, 9:19:01 AM9/14/14
to santhav...@googlegroups.com
சிறுகதைகள் மூலம் என் உள்ளத்தில் பேரிடம் பிடித்துவிட்டார் ரமணி.

சிவசூரி.

2014-09-14 9:21 GMT+05:30 ramaNi <sai...@gmail.com>:

ramaNi

unread,
Sep 14, 2014, 9:22:05 AM9/14/14
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி சிவசூரி அவர்களே!
ரமணி

M. Viswanathan

unread,
Sep 14, 2014, 12:18:52 PM9/14/14
to Santhavasantham, Saidevo ramaNi, Seethalakshmi Viswanath
அன்பு ரமணிக்கு ஒரு கட்டி முச்சா....."ஷோக்கேஸ் கதையை மனதில் தைத்த தற்கு.
அன்பன்,
மீ.விசுவநாதன் 

ramaNi

unread,
Sep 16, 2014, 9:36:45 AM9/16/14
to santhav...@googlegroups.com
அன்பர்களின் பார்வை, கருத்துக்கு:

இணைப்பு
'முப்பது வருஷங்கள்'

உமா குருமூர்த்தி

ரமணி


On Tuesday, September 9, 2014 9:44:20 AM UTC+5:30, yogiyaar wrote:
பலே பலே. நன்று. இப்படி உங்க வீட்டுச் சுரங்கத்தைத்தோண்டி இங்கு இடுங்கள். உபயோகமாயிருக்கும் எமக்கு கதை எழுத, பயிற்சிக்கு
 யோகியார்
ug-mv.pdf

K.R. Kumar

unread,
Sep 17, 2014, 3:38:32 AM9/17/14
to santhav...@googlegroups.com
அன்புள்ள ரமணி,

கதையைப் படிக்கும்போது கண்கள் குளமாகியது.

அன்புடன்,
குமார்(சிங்கை)


ramaNi

unread,
Sep 17, 2014, 9:39:35 PM9/17/14
to santhav...@googlegroups.com
இழந்த வாழ்வின் நினைவால் எழும் சோகத்தை வாசகர் மனதிலும் எழச் செய்வது கதையின் சிறப்பு.
ரமணி

ramaNi

unread,
Sep 17, 2014, 9:41:59 PM9/17/14
to santhav...@googlegroups.com
இணைப்பு:
எச். குருமூர்த்தியின் இரண்டு ஹாஸ்யக் கட்டுரைகள்
'தலை தப்பியது'
'டிராமே வா!'

ரமணி

00hg-ess-01a.pdf

ramaNi

unread,
Sep 18, 2014, 9:51:36 PM9/18/14
to santhav...@googlegroups.com
நான் எழுதிய முதல் சிறுகதைக்கு 'மனைமாட்சி' என்று தலைப்பிட்டு, அதை சூடாமணி ஆன்ட்டியிடம் காட்டினேன்.
மிகவும் நன்றாகவும் இயல்பாகவும் அமைந்திருப்பதாகச் சொன்னார். நம்பிக்கையுடன் அதைத் தாமரைமணாளன்
அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த, மணியனின் 'சிறுகதைக் களஞ்சியம்' பத்திரிகைக்கு அனுப்பினேன்.

என் அதிர்ஷ்டம், கதை 'அவன் அவள்' என்ற பெயரில் வெளிவந்தது, அதுவும் அட்டைப் படக் கதையாக! நான் இல்லறத்தான் ஆகியிருந்த புதிதில் கதை வெளிவந்தது இன்னுமோர் மகிழ்ச்சி.
அன்பர்கள் இந்தக் கதையைப் படித்துக் கருத்துச் சொல்ல வேண்டுகிறேன்.

இணைப்பு
'அவன் அவள்' சிறுகதை (2 கோப்புகள்0
ரமணி

ramaNi-ss-aa-01.pdf
ramaNi-ss-aa-02.pdf

Subbaraman NV

unread,
Sep 18, 2014, 10:00:29 PM9/18/14
to santhav...@googlegroups.com
முதற் சிறுகதையே அருமை! விளையும் பயிர் முளையிலே! மானுடம் போற்றுதும்; மானுடம் போற்றுகிறது.

என் வி சுப்பராமன்

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

ramaNi

unread,
Sep 18, 2014, 11:17:09 PM9/18/14
to santhav...@googlegroups.com
அன்புடையீர்!

உங்கள் ஊக்கச்சொல் என் சிறுகதை முயற்சிகளை நான் மீண்டும் தொடர உதவும்.

மிக்க நன்றி.

ரமணி


M. Viswanathan

unread,
Sep 19, 2014, 12:59:16 AM9/19/14
to Santhavasantham, Saidevo ramaNi
அன்பு திரு.ரமணிக்கு,
உளவியல் ரீதியான நல்ல கதை. பாராட்டுக்கள்.
மீ.விசுவநாதன் 

p balakrishnan

unread,
Sep 19, 2014, 1:33:44 AM9/19/14
to santhav...@googlegroups.com
Arumai !- Arima Elangkannan

On Fri, 19 Sep 2014 07:22:02 +0530 ramaNi wrote
--
>
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
>
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
>
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
>
santhavasanth...@googlegroups.com.
>
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
>
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
>
---
>
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
>
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
>
To post to this group, send email to santhav...@googlegroups.com.
>
For more options, visit https://groups.google.com/d/optout.
>

ramaNi

unread,
Sep 19, 2014, 1:47:59 AM9/19/14
to santhav...@googlegroups.com, sai...@gmail.com
கதையைப் பாராட்டிய விசுவநாதன், பாலகிருஷ்ணன் அவர்களுக்கு மிக்க நன்றி.
ரமணி

> pbalakrishnan1 11:03 AM (13 minutes ago) 
> Arumai !- Arima Elangkannan

Ramamoorthy Ramachandran

unread,
Sep 19, 2014, 8:33:46 AM9/19/14
to santhav...@googlegroups.com
எல்லாரும் நல்லவரே என்று உறுதியாக 
நம்பிஇருந்தால், கழுத்தில் செயின் இருந்திருக்கும்!
நம்பிக்கையே  வாழ்வு! (optimism) 
 அவநம்பிகை வேண்டாமே! (pessimism)
நன்றி அன்புடன் புலவர் இராமமூர்த்தி.

ramaNi

unread,
Sep 19, 2014, 8:58:11 AM9/19/14
to santhav...@googlegroups.com
புலவர் அவர்களுக்கு வணக்கம்.

இந்தக் கதையை நான் www.tamilbrahmins.com வலைதளத்தில் வெளியிட்ட போது ஒரு உறுப்பினர் எழுப்பிய வினாவும் அதற்கு நான் அளித்த பதிலும் கீழே:

**********
ஹரிதாச சிவா:
"ஒரு ஆக்ஸிடன்ட் ஆறபோது நாலுபேர் உதவ ஓடிவரும்போதும், ஒரு கண்ணில்லாதவன் சாலையைக் கடக்க முயலும்போது யாரோ ஒருவன் உதவ முன்வரும்போதும், ஏன், ஒரு தெரியாத இடத்துக்கு வழி கேக்கறபோது, கர்மசிரத்தையா ஒருவன் முன்வந்து வழிகாட்டும்போதும் எனக்கு மானுடத்தின் பேரில் நம்பிக்கை அதிகரிக்கிறது."

இப்படி நம்பிக்கை ஊட்டும் வார்த்தைகளைக் கொடுத்துவிட்டு positiveவா முடிஞ்ச சந்தோஷத்துல இருந்தப்போ chain காணோம்னு ஒரு bad news ல முடிச்சிட்டீங்களே...

அது சரி, கதைன்னா ஒரு twist இருந்தாத்தானே kick !

என் பதில்:
வணக்கம் திரு ஹரிதாச சிவா.

கதையில் புனைந்த ’ட்விஸ்ட்’ ஒரு ’உந்துதலுக்காக’ மட்டுமில்லை. உண்மையில் கதையை 1990-ஆம் வருடம் நான் எழுதியபோது, ஆரம்பத்தில் எப்படி முடிப்பது என்று யோசிக்கவில்லை. முடிவை நெருங்கியபோது அந்தத் ’திருகு’ ஒன்றுதான் கதைக்கு இயற்கையான முடிவு என்று தோன்றியது.

இப்படி யோசிப்போம். குழந்தையின் கழுத்துச் சங்கிலியை அபகரித்தது யார்? தாஸா, மணியா, அல்லது அந்த போலீஸ்காரரா? அல்லது சங்கிலி எங்காவது நழுவி விழுந்திருக்கலாமா? இந்தக் கேள்விக்கு விடை கதாசிரியருக்கும் தெரியாது, ஆண்டவனுக்கே வெளிச்சம்!

வாசுவைப் பொறுத்தவரை அவன் இன்னமும் அந்த ஆட்டோ டிரைவர் தாஸ் சங்கிலியைத் திருடவில்லை என்று நம்ப இடமிருக்கிறது. நிச்சயமாகத் தெரியாவிட்டாலும் தாஸ் மூலமாக அவன் தன் நண்பர்களையும் ’கன்வின்ஸ்’ செய்ததால் இப்போது அவன் தன் நம்பிக்கையை (’அது ஒரு உணர்வு’) இன்னமும் தக்கவைத்துக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. அல்லது இந்த நிகழ்ச்சி அவனை மிகவும் பாதித்து அவன் தன் நம்பிக்கையை மாற்றிகொள்ளவும் இடமிருக்கிறது.

கோபி, ஸ்டீபன் இவர்களை பொறுத்தவரை, வாசுவின் நம்பிக்கை கண்ணெதிரே நிரூபிக்கப்பட்டிருப்பதால், அவர்களும் மனிதன் அடிப்படையில் நல்லவன் என்ற கருத்தில் நம்பிக்கை வைக்க இடமிருக்கிறது.

அந்த மாமியாரை பொறுத்தவரையில் இத்தகைய நம்பிக்கைக்கே இடமில்லை--அது ’விஷப்பரிட்சை’. ஆனால் அந்தக் குழந்தை எல்லா ’மாமா’க்களும் நல்லவர்கள் என்கிறது.

இத்தனை சிக்கல்கள் நிறைந்தது வாழ்க்கை. நம்பிக்கைகள் பொய்யாகலாம், அவ்வாறு ஆவது தற்காலிகமாகவும் இருக்கலாம். சிறுகதை என்பது வாழ்க்கையின் ஒரு slice--சீவல் என்பதால் நான் இக்கதையை இவ்வாறு எழுதினேன்.

**********

அன்புடன்,
ரமணி

ramaNi

unread,
Sep 20, 2014, 10:47:37 PM9/20/14
to santhav...@googlegroups.com
சில வருடங்கள் முன்பு ’ரம்யா’ என்ற பெயரில் நாற்பதின் அதிக பக்கங்களில் ஒரு குறுநாவல்
(க்ரைம் நாவல்) எழுதினேன். அதை தினமும் நாலைந்து பக்கங்களாக இந்த இழையில் இடுகிறேன்.
இந்தப் படைப்பு இதுவரை அச்சில் ஏறவில்லை.

அன்பர்கள் படித்துக் கருத்துரைக்க வேண்டுகிறேன்.

இணைபபு:
’ரம்யா’ குறுநாவல், அத்.1,2

ரமணி

*****


gg-ramyA-01.pdf

M. Viswanathan

unread,
Sep 21, 2014, 8:48:26 AM9/21/14
to Santhavasantham, Saidevo ramaNi
நல்ல விளக்கம்.
மீ.வி.

M. Viswanathan

unread,
Sep 21, 2014, 9:06:57 AM9/21/14
to Santhavasantham, Saidevo ramaNi
"ரம்யா" விறுவிறுப்பாகச் செல்கிறாள். பாராட்டுக்கள். சில இடங்களில் உள்ள அச்சுப் பிழைகளைத் திருத்திக் கொள்ளவும்.
அன்பன்,
மீ.விசுவநாதன்
It is loading more messages.
0 new messages