[santhavasantham] Kavadichindu

77 views
Skip to first unread message

aka...@gmail.com

unread,
Mar 3, 2007, 10:30:30 PM3/3/07
to santhav...@googlegroups.com

kunnakkudybala
(kunnakk...@yahoo.com
) எழுதியது

என் இனிய நண்பர்களே
என் தந்தை குன்னக்குடி வேங்கடராம அய்யர் அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச்சிந்தின்பால் ஈடுபாடு கொண்டு பாடி வந்தார். நானும் அதை தொடர்ந்து செய்து வருகிறேன். 'காவடி சிந்துகள்' என்ற பெயரில் ஒரு புத்தகத்தையும் வெளியிட்டு இருக்கிறேன். அதில் அண்ணாம்லை ரெட்டியாரைத்தவிற சிவராமலிங்கம் பிள்ளை, பாண்டிதுரை தேவர், நாராயணஞ்செட்டியார், ரெங்கசாமி செட்டியார் ஆகியோர் இயற்றிய சிந்துகளை வெளியிட்டுள்ளேன்.
வேறு யாராவது இயற்றிய சிந்துகளைப்பற்றிய தகவல் தெரிந்தால் எனக்கு தெரிவிக்க கேட்டுக்கொள்கிறேன்.
குன்னக்குடி பாலா

Send instant messages to your online friends http://uk.messenger.yahoo.com

[Non-text portions of this message have been removed]

------------------------ Yahoo! Groups Sponsor --------------------~-->
See what's inside the new Yahoo! Groups email.
http://us.click.yahoo.com/0It09A/bOaOAA/yQLSAA/GE2qlB/TM
--------------------------------------------------------------------~->


Yahoo! Groups Links

<*> To visit your group on the web, go to:
http://groups.yahoo.com/group/santhavasantham/

<*> Your email settings:
Individual Email | Traditional

<*> To change settings online go to:
http://groups.yahoo.com/group/santhavasantham/join
(Yahoo! ID required)

<*> To change settings via email:
mailto:santhavasan...@yahoogroups.com
mailto:santhavasantha...@yahoogroups.com

<*> To unsubscribe from this group, send an email to:
santhavasanth...@yahoogroups.com

<*> Your use of Yahoo! Groups is subject to:
http://docs.yahoo.com/info/terms/


aka...@gmail.com

unread,
Mar 3, 2007, 10:30:51 PM3/3/07
to santhav...@googlegroups.com

subbaierramasami
(subbaier...@yahoo.com
) எழுதியது

--- In santhav...@yahoogroups.com, Bala Ramakrishnan
<kunnakkudybala@...> wrote:
>
> பாரதியார் காவடிச்சிந்து பாடியிருக்கிறார். பாரதிதாசனும் காவடிச்சிந்து பாடியிருப்பதாகத்
தெரிகிறது.
இங்கே சந்தவசந்தத்தில் நம் கவிஞர்கள் காவடிச்சிந்து பாடியிருக்கிறார்கள்.
அனந்தின் கனடா என்றொரு தேசம் பிரசித்தம். நான் ஐயப்பன் காவடிச்சிந்து என்றொரு பாடலும்
ஐயப்பன் சிந்து என்றொரு சிறுநூலும் இயற்றியிருக்கிறேன் இ�வையெல்லாம் இங்கே வெளியாகியுள்ளன.
இலந்தை

வேண்டுமென்றால் காவடிச்சிந்து அரங்கம் ஒன்றே நாம் நடத்ஹ்டிவிடலாம்.

------------------------ Yahoo! Groups Sponsor --------------------~-->

Check out the new improvements in Yahoo! Groups email.
http://us.click.yahoo.com/4It09A/fOaOAA/yQLSAA/GE2qlB/TM

aka...@gmail.com

unread,
Mar 4, 2007, 8:30:11 AM3/4/07
to santhav...@googlegroups.com

kunnakkudybala
(kunnakk...@yahoo.com
) எழுதியது

நன்றி அய்யா
நானும் பாரதியாரின் காவடிசிந்தை படித்திருக்கிறேன். பாரதிதாஸன் எழுதியதை படித்ததில்லை. கவி புனையும் ஆர்வமுள்ளவர்கள் அனைவருமே காவடிசிந்தை எழுதியிருப்பார்கள் என நினைக்கிறேன். ஆனால் அண்ணாமலை ரெட்டியாருக்கு இணையாக இருக்கும் என தாங்கள் நினைப்பவர்களின் படைப்புகள் எனக்கு கிடைத்தால் மிக
மகிழ்ச்சியாக இருக்கும். நான் ஒரு பாடகியாக இருப்பதால் அந்த கோணத்தில்தான் என் பார்வை. ரெட்டியாரின் அளவுக்கு தமிழ் இல்லாவிட்டாலும் பாடுவதற்க்கு சுலபமாக, எளிய தமிழில் கிடைத்தால் நலம்.

குன்னக்குடி பாலா


ELANDHAI RAMASAMI <subbaier...@yahoo.com> wrote: --- In santhav...@yahoogroups.com, Bala Ramakrishnan

<kunnakkudybala@...> wrote:
>
> பாரதியார் காவடிச்சிந்து பாடியிருக்கிறார். பாரதிதாசனும் காவடிச்சிந்து பாடியிருப்பதாகத்
தெரிகிறது.
இங்கே சந்தவசந்தத்தில் நம் கவிஞர்கள் காவடிச்சிந்து பாடியிருக்கிறார்கள்.
அனந்தின் கனடா என்றொரு தேசம் பிரசித்தம். நான் ஐயப்பன் காவடிச்சிந்து என்றொரு பாடலும்
ஐயப்பன் சிந்து என்றொரு சிறுநூலும் இயற்றியிருக்கிறேன் இ�வையெல்லாம் இங்கே வெளியாகியுள்ளன.
இலந்தை

வேண்டுமென்றால் காவடிச்சிந்து அரங்கம் ஒன்றே நாம் நடத்ஹ்டிவிடலாம்.

Send instant messages to your online friends http://uk.messenger.yahoo.com

[Non-text portions of this message have been removed]

------------------------ Yahoo! Groups Sponsor --------------------~-->
Great things are happening at Yahoo! Groups. See the new email design.
http://us.click.yahoo.com/lOt0.A/hOaOAA/yQLSAA/GE2qlB/TM

aka...@gmail.com

unread,
Mar 4, 2007, 4:30:35 PM3/4/07
to santhav...@googlegroups.com

subbaierramasami
(subbaier...@yahoo.com
) எழுதியது

--- In santhav...@yahoogroups.com, Bala Ramakrishnan

<kunnakkudybala@...> wrote:
>
> நன்றி அய்யா
> நானும் பாரதியாரின் காவடிசிந்தை படித்திருக்கிறேன். பாரதிதாஸன் எழுதியதை படித்ததில்லை. கவி
புனையும் ஆர்வமுள்ளவர்கள் அனைவருமே காவடிசிந்தை எழுதியிருப்பார்கள் என நினைக்கிறேன்.
ஆனால் அண்ணாமலை ரெட்டியாருக்கு இணையாக இருக்கும் என தாங்கள் நினைப்பவர்களின் படைப்புகள் எனக்கு கி
டைத்தால் மிக
> மகிழ்ச்சியாக இருக்கும். நான் ஒரு பாடகியாக இருப்பதால் அந்த கோணத்தில்தான் என் பார்வை.
ரெட்டியாரின் அளவுக்கு தமிழ் இல்லாவிட்டாலும் பாடுவதற்க்கு சுலபமாக, எளிய தமிழில் கிடைத்தால் நலம்.
> குன்னக்குடி பாலா
>

> உங்களது காவடிச் சிந்து ஆர்வத்தை மெச்சுகிறேன். கழுகுமலை எங்களூரிலிருந்து 14 மைல்.

அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்தைப்போல வேண்டுமென்றால் அவர்வந்துதான் பாடவேண்டும்.
காவடிச்சிந்து வேண்டுமென்றால் கிடைக்கும். காவடிச்சிந்து விஷயமாகப் புலவர்கள் பாரதியாரோடு போட்டி
போட்டுத் தோற்ற கதை உங்களுக்குத் தெரிந்திருக்கும்.
பாரதியின் காலமாம் வனத்திற்கு ஈடாக இன்னும் பாடல் எழுதப்படவில்லை.
இதோ கீழே என்னுடைய ஐயப்பன் காவடிச்சிந்து தருகிறேன். அண்ணாமல் ரெட்டியாரை அடியொற்றியதுதான்
என்றாலும் இது இலந்தையின் காவடிச்சிந்து. எனவே ஒப்பிடவேண்டாம்.

ஐயப்பன் காவடிச்சிந்து

ஞான நாதனைக் காண வேண்டுமேல்
நாட்டுக அருட் தாகம் - பதம்
நாடுவார்க் கிலை சோகம்- அட
நண்ணுமோ வெறும் மோகம் - அவன்
நாடும் அன்பர்கள் கேடறச் செயும்
நல்ல மாமழை மேகம்

பாதகம் தனை மோதி மாய்த்திடப்
பந்தளம் வளர் ஐயன் - அரி
பரமனின் எழில் பையன் - நமைப்
பாதுகாத்திடும் கையன்- படி
பத்தொ டெட்டதன் மேலமர்ந்தருள்
பாலிக்கும் அருள் மெய்யன்

சபரி மாமலை மீதமர்ந்தருள்
தந்திடும் ஒளி ஜோதி - ஐயன்
சாற்றி வைத்தவை நீதி- அவன்
சத்தியப் பெயர் ஓதி - பதம்
சரண மென்றவர் மரணமஞ்சிடார்
சாருமோ எம பீதி?

காட்டுப் பாதையில் ஏறிச் செல்கையில்
கால்களில் வலு ஏறும்- மனம்
கட்டுக்குள் இளைப் பாறும்- மணி
கண்டனின் பெயர் கூறும் - கொடும்
காமக் குரோதமும் லோப மோகமும்
கண்ணியத்துளே மாறும்

சாமியே சரண் என்னவே பதம்
சாருவார் இனம் ஒன்றே - கொடும்
சாதி பேதமே வென்றே- ஐயன்
சத்திய வழி நின்றே-அந்தச்
சாந்த மூர்த்தியைக் காணுவார் உயர்
சபரி மாமலை சென்றே!

காந்த மாமலை மீதில் ஜோதியாய்
காட்சி கண்டிட லாகும்- கூட்டம்
காணக் கோடியாய்ப் போகும்- கண்டால்
கண்ணில் நீர்வழிந் தேகும் - மிகக்
கட்டுப் பாட்டொடு காலடி தொழ
கால பாபமும் வேகும்.

இலந்தை
20-9-2004
அனந்தின் கனடா என்றொரு... என்னும் காவடிச் சிந்து அவ்வியலக்கியத்தைப் பக்தியிலிருந்து
சமுதாயக்கருத்துக்கும் இழுத்துச் செல்லும் ஒன்று. பல மேடைகளில் பாராட்டப்பட்ட பாடல் . அ�தி அவர்
பாடிக் கேட்கவேண்டும். அப்பாடலை அவர் பாடி நமது கோப்புப்பகுதியில் இடலாம்.
பாலா அவர்களே, அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்து பாடல்கள் ஒன்றிரண்டைப் பாடி எம்.பி 3
கோப்பாக நீங்கள் www.rogepost.com என்னும் தளத்தில் இட்டால் நாங்களும் கேட்டு மகிழலாம்.
ஏற்கனவே ஏதாவது வலைத்தளத்தில் இட்டிருந்தால் சுட்டலாம்.

இலந்தை

aka...@gmail.com

unread,
Mar 4, 2007, 6:30:26 PM3/4/07
to santhav...@googlegroups.com

pas_jaya
(pas_...@yahoo.ca
) எழுதியது

தங்கள் தந்தையார் போலவே உங்களுக்கும் காவடிச் சிந்துமீது
ஆர்வம் இருப்பது பற்றி மகிழ்ச்சி.

இதைப் பற்றி நிறைய எழுதலாம். சில கருத்துகள் மட்டும் முன்வைக்கிறேன்.

1. உங்கள் புத்தகத்தில் சுர, தாளக் குறிப்புகள் இருக்கும் என்று
நம்புகிறேன். ஏனென்றால், அவை இல்லாமல், காவடிச் சிந்துகள்
உள்ள நூல்கள்/ஆய்வுகள் வந்திருக்கின்றன. ஆனால்,
எனக்குத் தெரிந்தவரை, ஒரே ஒரு நூல் தான் சுரக் குறிப்புடன்
வந்திருக்கிறது.

2. புதிய காவடிச் சிந்துகளை சேர்ப்பது நல்ல முயற்சி.
புதுமைகளை வரவேற்கும் காலம் இது. அதனால், புது
சிந்துகளுக்குச் சுரக் குறிப்புகள் கொடுத்து வெளியிட்டால்
இசையுலகம் வரவேற்கலாம்.

3. காவடிச் சிந்துகளில் பல வகைகள் உண்டு. பாரதியாரின்
'வில்லினை', 'தொன்று' 'காலமாம்' போன்றவையும்
காவடிச் சிந்துகளே. அண்ணாமலை ரெட்டியாரின் சிந்துகளைப்
போலவே இவையும் பரவலாகப் பாடப்பட்டு வருகின்றன என்பதும் நீங்கள்
அறிந்ததே. (அண்ணாமலை ரெட்டியாருக்கு முன்பே காவடிச் சிந்துகள்
இருந்திருக்கின்றன என்பதற்கு ஆதாரங்கள்
உள்ளன. )

4. பழைய சுவடிகளின் மூலம் பலவிதமான ராகங்களில் காவடிச் சிந்துகள் பழங்
காலத்தில் பாடப் பட்டிருக்கின்றன என்று அறிகிறோம். இப்போது அவை
வழக்கத்தில் இல்லை. அதனால், பாடகர்களும், பாடகிகளும் சிறிது
யோசித்து, புதிய ராகங்களில் இவற்றை அமைக்க வேண்டும்.கிருதிகளில்
எப்படிப் புதிய கிருதிகள் மக்களை ஈர்க்கின்றனவோ அதே மாதிரி
பழைய/புது காவடிச் சிந்துகள், பழைய/புது ராகங்களில் பரிமளிக்க வேண்டும்.
இல்லாவிட்டால், இன்றைய தேக்க நிலைதான் நீடிக்கும். எல்லாப்
பாடல்களையும். 'காவடிச் சிந்து' மெட்டு என்று இப்போது நிலைத்துவிட்ட
ஒன்றிலேயே எல்லோரும் பாடிவருவர்; என் கருத்துப்படி, இது ஒரு ஆரோக்யமான
போக்கு அன்று. அவசியமும் இல்லை.

5. பாரதிதாசன் 50-க்கு மேல் கா.சி. எழுதியதாகப் படித்திருக்கிறேன்.
கண்ணதாசன் 10- சிந்துகள் ஆவது (எனக்குத் தெரிந்து) எழுதியிருக்கிறார். (
சேஷகோபாலன் கண்ணதாசனின் பாடல்களை வைத்தே 'தமிழிசை'யில் கச்சேரி
செய்தார். கா.சி பாடினாரா என்று தெரியாது.) ராமலிங்க சுவாமிகளும்
கா.சி. செய்திருக்கிறார். ( சஞ்சய் சுப்ரமண்யம் வள்ளலாரின் பாடல்களை
வைத்து, ஒரு கச்சேரி செய்தார்; வள்ளலாரின் கா.சிந்தைப் பாடினாரா
என்பது தெரியாது. )

இவற்றில் சிலவற்றை எடுத்து, ராக,சுர, தாளக் குறிப்புகளுடன் வெளியிட்டால்
தொண்டுக்குத் தொண்டு; புதுமைக்குப் புதுமை.
ஒலி நாடாவும் கொடுக்கலாம். அப்போது, சில இளம் பாடகர்கள்
மேடையில் இவற்றைப் பாட முன்வரலாம்.

பசுபதி
4-3-07

--- Bala Ramakrishnan <kunnakk...@yahoo.com>
wrote:

> நன்றி அய்யா
> நானும் பாரதியாரின் காவடிசிந்தை படித்திருக்கிறேன். பாரதிதாஸன்
> எழுதியதை படித்ததில்லை. கவி புனையும் ஆர்வமுள்ளவர்கள் அனைவருமே
> காவடிசிந்தை எழுதியிருப்பார்கள் என நினைக்கிறேன். ஆனால் அண்ணாமலை
> ரெட்டியாருக்கு இணையாக இருக்கும் என தாங்கள் நினைப்பவர்களின் படைப்புகள்
> எனக்கு கிடைத்தால் மிக
> மகிழ்ச்சியாக இருக்கும். நான் ஒரு பாடகியாக இருப்பதால் அந்த
> கோணத்தில்தான் என் பார்வை. ரெட்டியாரின் அளவுக்கு தமிழ்
> இல்லாவிட்டாலும் பாடுவதற்க்கு சுலபமாக, எளிய தமிழில் கிடைத்தால்
> நலம்.
> குன்னக்குடி பாலா
>
>

> ELANDHAI RAMASAMI <subbaier...@yahoo.com>
> wrote: --- In


> santhav...@yahoogroups.com, Bala Ramakrishnan
> <kunnakkudybala@...> wrote:
> >

> > பாரதியார் காவடிச்சிந்து பாடியிருக்கிறார். பாரதிதாசனும்


> காவடிச்சிந்து பாடியிருப்பதாகத்
> தெரிகிறது.

> இங்கே சந்தவசந்தத்தில் நம் கவிஞர்கள் காவடிச்சிந்து


> பாடியிருக்கிறார்கள்.

> அனந்தின் கனடா என்றொரு தேசம் பிரசித்தம். நான் ஐயப்பன்


> காவடிச்சிந்து என்றொரு பாடலும்
> ஐயப்பன் சிந்து என்றொரு சிறுநூலும் இயற்றியிருக்கிறேன் இ�வையெல்லாம்
> இங்கே வெளியாகியுள்ளன.
> இலந்தை
>
> வேண்டுமென்றால் காவடிச்சிந்து அரங்கம் ஒன்றே நாம் நடத்ஹ்டிவிடலாம்.


__________________________________________________
Do You Yahoo!?
Tired of spam? Yahoo! Mail has the best spam protection around
http://mail.yahoo.com


------------------------ Yahoo! Groups Sponsor --------------------~-->

Check out the new improvements in Yahoo! Groups email.
http://us.click.yahoo.com/4It09A/fOaOAA/yQLSAA/GE2qlB/TM
--------------------------------------------------------------------~->

aka...@gmail.com

unread,
Mar 4, 2007, 11:30:26 PM3/4/07
to santhav...@googlegroups.com

kunnakkudybala
(kunnakk...@yahoo.com
) எழுதியது

கா.சி தமிழக நாட்டுப்பாடல் வகையை சேர்ந்தது அல்லவா ஆகவே அதில் வேறு வேறு வகையான நாட்டுபாடல் மெட்டுக்கள்தான் அமையவேண்டுமே தவிற வேறு வேறு ராகங்களில் அமைப்பது பொறுத்தமாக இருக்காது, என்பது என் தந்தையின் அபிப்ராயம். புரட்சிகரமாக வேண்டுமானால் செய்யலாம். ஆனால் ஒரு கச்சேரி முழுவதும் பாட வேறு வேறு ராகங்களில் இருந்தால்தான் நன்றாக இருக்கும். பழைய பண்களில் அமைக்கலாம். ஓரளவு
பொருத்தமாக இருக்கும். ஸங்கீத வித்வான் ராமநாதன் அவர்கள் தாங்கள் சொல்லுவதுபோல் வேறு வேறு ராகங்களில் ஒரு புத்தகம் நீண்ட நாட்களுக்குமுன் வெளியிட்டு இருக்கிறார். கா.சி சுரதாள குறிப்புடன் வந்திருப்பதாக சொல்லியிருக்கிறீர்களே அது யார் வெளியிட்டது ? நானும் சுரதாள குறிப்புடந்தான் வெளியிட்டு இருக்கிறேன்.

kunnakkudy Bala

பசுபதி
4-3-07

Send instant messages to your online friends http://uk.messenger.yahoo.com

[Non-text portions of this message have been removed]

------------------------ Yahoo! Groups Sponsor --------------------~-->
Yahoo! Groups gets a make over. See the new email design.
http://us.click.yahoo.com/hOt0.A/lOaOAA/yQLSAA/GE2qlB/TM

aka...@gmail.com

unread,
Mar 4, 2007, 11:30:34 PM3/4/07
to santhav...@googlegroups.com

kunnakkudybala
(kunnakk...@yahoo.com
) எழுதியது

அருமை அருமை நான் பாடி பார்த்தேன். நாட்டுப்பாடல் மெட்டுக்கு தாளத்தோடு வெகு சுலபமாக பாடவருகிறது. எனது நிகழ்ச்சிகளில் பாடுவேன். என் சிஷ்யர்களுக்கும் சொல்லி வைக்கிறேன். புத்தகம் வெளியிட்டு இருந்தால் கிடைக்குமிடம் தெரிவிக்கவும்.
2 நாட்களாகத்தான் 'முரசு' வில் தட்டச்சு செய்கிறேன். தவறு இருந்தால்...(இருக்கும்) மன்னிக்கவும்.


ELANDHAI RAMASAMI <subbaier...@yahoo.com> wrote: --- In santhav...@yahoogroups.com, Bala Ramakrishnan
<kunnakkudybala@...> wrote:
>
> நன்றி அய்யா
> நானும் பாரதியாரின் காவடிசிந்தை படித்திருக்கிறேன். பாரதிதாஸன் எழுதியதை படித்ததில்லை. கவி
புனையும் ஆர்வமுள்ளவர்கள் அனைவருமே காவடிசிந்தை எழுதியிருப்பார்கள் என நினைக்கிறேன்.
ஆனால் அண்ணாமலை ரெட்டியாருக்கு இணையாக இருக்கும் என தாங்கள் நினைப்பவர்களின் படைப்புகள் எனக்கு கி
டைத்தால் மிக
> மகிழ்ச்சியாக இருக்கும். நான் ஒரு பாடகியாக இருப்பதால் அந்த கோணத்தில்தான் என் பார்வை.
ரெட்டியாரின் அளவுக்கு தமிழ் இல்லாவிட்டாலும் பாடுவதற்க்கு சுலபமாக, எளிய தமிழில் கிடைத்தால் நலம்.
> குன்னக்குடி பாலா
>

> உங்களது காவடிச் சிந்து ஆர்வத்தை மெச்சுகிறேன். கழுகுமலை எங்களூரிலிருந்து 14 மைல்.


அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்தைப்போல வேண்டுமென்றால் அவர்வந்துதான் பாடவேண்டும்.
காவடிச்சிந்து வேண்டுமென்றால் கிடைக்கும். காவடிச்சிந்து விஷயமாகப் புலவர்கள் பாரதியாரோடு போட்டி
போட்டுத் தோற்ற கதை உங்களுக்குத் தெரிந்திருக்கும்.
பாரதியின் காலமாம் வனத்திற்கு ஈடாக இன்னும் பாடல் எழுதப்படவில்லை.
இதோ கீழே என்னுடைய ஐயப்பன் காவடிச்சிந்து தருகிறேன். அண்ணாமல் ரெட்டியாரை அடியொற்றியதுதான்
என்றாலும் இது இலந்தையின் காவடிச்சிந்து. எனவே ஒப்பிடவேண்டாம்.

ஐயப்பன் காவடிச்சிந்து

ஞான நாதனைக் காண வேண்டுமேல்

இலந்தை

Send instant messages to your online friends http://uk.messenger.yahoo.com

aka...@gmail.com

unread,
Mar 5, 2007, 3:30:28 AM3/5/07
to santhav...@googlegroups.com

anbudan_ananth
(anbudan...@yahoo.com
) எழுதியது

இலந்தை: நீங்கள் இங்கு முன்னம் அளித்துள்ள உங்கள் ஐயப்பன் சிந்து மிக அழகு!
பாலா அவர்கள் அதை மெட்டுடன் பாடவிருக்கிறார் என்பதைக் கேட்க மகிழ்ச்சியாய்
இருக்கிறது.
அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச் சிந்துகள் சிலவற்றைத் திருமதி சௌம்யா அவர்கள்
பாடி வெளியிட்டுள்ளார். அவை அகத்தியர் யாஹூ குழுவின் கோப்பில் சேமி
க்கப்பட்டுள்ளன. அவற்றைக் கீழ்க்கண்ட தளங்களில் உங்களது வசதிக்காக இறக்கி
யுள்ளேன்.
http://www.rogepost.com/n/1472670188
http://www.rogepost.com/n/2401837508
http://www.rogepost.com/n/1922630414

இறுதியில் உள்ள பாடலின் ('சந்தவரை வந்தருளும் நாதா..') மெட்டையொட்டி நான்
முன்னம் சந்தவசந்தக் கவியரங்கம் ஒன்றிற்காக (சற்று அவசரமாக அப்போது) அமைத்த
ஒரு பாடலைக் கீழே தந்துள்ளேன். (இது மேடையில் பாட ஆகாது!).
'கானடா காவடிச் சிந்து' பாடலை விரைவில் ஒலிப்பதிவு செய்து இட முயல்கி
றேன். அப்பாடல் சற்று நீண்டதாகையால் கோப்பின் அளவும் பெரிதாக
இருக்குமென்ற அச்சம் உள்ளது. எனினும் முயன்று பார்க்கிறேன்.
..அனந்த் 5-3-2007
======================
<> இணையக் காவடிச் சிந்து <>

எங்களிணை யத்திற்கிலை ஈடு-அது
எம்மனைய னோர்வதியும் வீடு - உளம்
இன்புறஇ னித்திடும்தேன் கூடு

வந்து கூடு(ம்)
அன்பர் நாடு(ம்) - அனை
வர்க்கும்பொது வென்றுளபண் பாடு (1)


இந்தியரும் இங்கிலந்துள் ளோரும் - வேறு
எங்குமுள நாடுபுகுந் தோரும் - ஒரு
சாதியென உவகையுடன் சாரும்

இணையம் பாரும்!
இதற்கு நேரும் - எங்கும்
இல்லைஇ துணர்ந்துபகை தீரும்! (2)


ஆயிரம்பல் லாயிரமாய்ச் சேர்ந்து - நாம்
அங்குமிங்கும் சேதிகளைத் தேர்ந்து - வெகு
ஆழமுடன் அலசிடுவோம் கூர்ந்து

இணையம் சார்ந்து
எதையும் ஓர்ந்து - செயும்
எவருமிங்கு விழுவதில்லை சோர்ந்து! (3)


கவிதையொடு கட்டுரைச மைப்போம் - பிறர்
காணமன ஓவியம்முன் வைப்போம் -தமிழ்க்
காதல்தரு கனிகளைச்சு வைப்போம்

இன்பம் துய்ப்போம்
துன்பம் பொய்ப்போம் - இந்த
இணையம்வழி எவரையுமி ணைப்போம் (4)

கவிதையறி வென்பதெனக் கில்லை - என்ற
கவலைமுன்பு கொண்டடைந்த தொல்லை - இனிக்
கடுகளவு மென்மனத்தில் இல்லை

இணைய வில்லை
எடுத்து ஒல்லை - இன்றி
இனித்தொடுப்பேன் இனியதமிழ்ச் சொல்லை (5)

...அனந்த் 17-8-2003
***************************


> --- In santhav...@yahoogroups.com, Bala Ramakrishnan wrote:
கவி புனையும் ஆர்வமுள்ளவர்கள் அனைவருமே காவடிசிந்தை எழுதியிருப்பார்கள் என
நினைக்கிறேன்.
> ஆனால் அண்ணாமலை ரெட்டியாருக்கு இணையாக இருக்கும் என தாங்கள் நி
னைப்பவர்களின் படைப்புகள் எனக்கு கிடைத்தால் மிக
> > மகிழ்ச்சியாக இருக்கும். நான் ஒரு பாடகியாக இருப்பதால் அந்த கோணத்தி
ல்தான் என் பார்வை.
> ரெட்டியாரின் அளவுக்கு தமிழ் இல்லாவிட்டாலும் பாடுவதற்க்கு சுலபமாக, எளிய தமிழி
ல் கிடைத்தால் நலம்.
> > குன்னக்குடி பாலா

ilandhai wrote:
> ஐயப்பன் காவடிச்சிந்து
>
> ஞான நாதனைக் காண வேண்டுமேல்
> நாட்டுக அருட் தாகம் - பதம்
> நாடுவார்க் கிலை சோகம்- அட
> நண்ணுமோ வெறும் மோகம் - அவன்
> நாடும் அன்பர்கள் கேடறச் செயும்
> நல்ல மாமழை மேகம்
>

> அனந்தின் கனடா என்றொரு... என்னும் காவடிச் சிந்து அவ்வியலக்கியத்தைப் பக்தியி
லிருந்து சமுதாயக்கருத்துக்கும் இழுத்துச் செல்லும் ஒன்று. பல மேடைகளில்
பாராட்டப்பட்ட பாடல் . அ�தி அவர் பாடிக் கேட்கவேண்டும். அப்பாடலை அவர் பாடி
நமது கோப்புப்பகுதியில் இடலாம்.
> பாலா அவர்களே, அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்து பாடல்கள் ஒன்றி
ரண்டைப் பாடி எம்.பி 3
> கோப்பாக நீங்கள் www.rogepost.com என்னும் தளத்தில் இட்டால் நாங்களும் கேட்டு
மகிழலாம்.
> ஏற்கனவே ஏதாவது வலைத்தளத்தில் இட்டிருந்தால் சுட்டலாம்.

------------------------ Yahoo! Groups Sponsor --------------------~-->

Great things are happening at Yahoo! Groups. See the new email design.
http://us.click.yahoo.com/lOt0.A/hOaOAA/yQLSAA/GE2qlB/TM

aka...@gmail.com

unread,
Mar 5, 2007, 11:30:46 AM3/5/07
to santhav...@googlegroups.com

subbaierramasami
(subbaier...@yahoo.com
) எழுதியது

என்னுடைய மகன் சீநிவாசராகவன் இயற்றிப்பாடியுள்ள சிற்றம்பலச் சிந்துப் பாடலைக் கீழே தருகிறேன்
இலந்தை

சிற்றம்பலச்சிந்து

கருணைக் கனக சபேசன் -அவன்
காலடி நாடிடும் நேசன் - அந்த
திரிபுரமெரி ஒருகடவுளின் திருவம்பலப் புகழ்பாடிட
வந்தேன் - சிந்து தந்தேன்

ரகசியம் போதிக்கும் ஊராம் நட
ராஜன் அவன் திருப்பேராம் - அங்கு
அகயோகமும் அருயாகமும் சிவலோகமும் பதம்வைத்திடச்
சேரும் - உடன் வாரும்

மலையன் மகள் சிவகாமி மன்னன்
சேவடி சேர் வழிகாமி - அந்த
அலைமாமகள் கலைமார்புடை திருமாலவன் அறியாததைத்
தேடி - வந்தோம் ஒடி

பித்தன் சிதம்பர நாதன் அவன்
சித்தர்க்கும் போதிக்கும் வேதன் - நித்தம்
நடமாடிடும் நடராஜனின் நினைவே நிறை தவமென்பதை
நாமே - அறிவோமே

தித்திக்கும் காவடிச் சிந்து -தில்லைத்
தெய்வைத்தைப் பாடும் விருந்து - பாட
வித்திட்டிடும் வினையாவையும் திக்குத்திசை தெரியாமலே
வாடும் - எழுந் தோடும்
வாடும் - பயந் தோடும்
வாடும் - மறைந் தோடும்

ராசீரா

------------------------ Yahoo! Groups Sponsor --------------------~-->

See what's inside the new Yahoo! Groups email.
http://us.click.yahoo.com/0It09A/bOaOAA/yQLSAA/GE2qlB/TM

aka...@gmail.com

unread,
Mar 5, 2007, 12:31:15 PM3/5/07
to santhav...@googlegroups.com

subbaierramasami
(subbaier...@yahoo.com
) எழுதியது

1969ம் ஆண்டு பாரதி வில்லுப்பாட்டுக்காக இந்தக் காவடிச் சிந்தை எழுதினேன். இந்தப் பாட்டில் பாரதியி
ன் அசல் பெயர் இருக்கிறது. கண்டுபிடியுங்கள் என்று பின்பாட்டுக்காரர்களிடம் கேள்வி கேட்பதற்காக
எழுதப்பட்டது.

காளி இளஞ்சக்தி கன்றவன் -அருள்
காட்டிடும் மூலமாய் நின்றவன் - உயர்
கான மாமயில் ஏறியே உல கேழும் ஏழும் நலம்பெற வலம்
சென்றவன் நமை வென்றவன்

சூரனை வென்று தொலைத்தவன்- என்றும்
தூயவர் நெஞ்சில் நிலைத்தவன் -உயர்
நாரணன்திரு மால்மருகனாய் நாடும் அன்பரை வாழவைத்திடும்
நலத்தவன் செந்தில் தலத்தவன்


வள்ளியை ஈர்த்தவன் வேடன் - அந்த
வள்ளல்நம் செந்தமிழ் நாடன் -உயர்
வெள்ளியங்கிரி துள்ளுமால்விடை வள்ளலும்மறை கொள்ளவாயினன்
சீடன் செங் கோடன்

சுப்பிர மணியன் தீரன் - எழில்
தோயும் இசையின் ரீங்காரன் - சொல
ஒப்பிலாவகை செப்புமாமொழி எப்புறத்திலும் முற்படச்செயும்
வீரன் எழில் மாரன்


இலந்தை

------------------------ Yahoo! Groups Sponsor --------------------~-->

Check out the new improvements in Yahoo! Groups email.
http://us.click.yahoo.com/4It09A/fOaOAA/yQLSAA/GE2qlB/TM

aka...@gmail.com

unread,
Mar 5, 2007, 1:34:31 PM3/5/07
to santhav...@googlegroups.com

pas_jaya
(pas_...@yahoo.ca
) எழுதியது

--- Bala Ramakrishnan <kunnakk...@yahoo.com>
wrote:

> கா.சி தமிழக நாட்டுப்பாடல் வகையை சேர்ந்தது அல்லவா >ஆகவே அதில்


> வேறு வேறு வகையான நாட்டுபாடல் மெட்டுக்கள்தான் அமையவேண்டுமே தவிற
> வேறு வேறு ராகங்களில் அமைப்பது பொறுத்தமாக இருக்காது, என்பது என்
> தந்தையின் அபிப்ராயம். புரட்சிகரமாக வேண்டுமானால் செய்யலாம். ஆனால்

> ஒரு கச்சேரி முழுவதும் பாட வேறு வேறு ராகங்களில் இருந்தால்தான் நன்றாக


> இருக்கும். பழைய பண்களில் அமைக்கலாம். ஓரளவு

> பொருத்தமாக இருக்கும்.

என் மதிப்பிற்குரிய உங்கள் தந்தை போலவே பலரும் சொல்ல, எழுதக்
கேட்டிருக்கிறேன். இதில் நான் சற்று வேறுபடுகிறேன்.

:-))நாட்டுப் பாடல்-வகை என்றால், வேறு கேள்விகளும் எழுப்பலாம். நாட்டுப்
பாடல்-வகையைக் கச்சேரி மேடையில் பாடவேண்டுமா? பழங்காலத்தில்
பாடினார்களா? என்ற கேள்வி எழலாம். அப்படிப் பாடினாலும், பழம் நூல்களில்
அந்தக் காவடிச் சிந்து பாடப்பட்டது என்று குறிப்பிட்ட ராகங்களில் ஏன்
இப்போது பாடப் படுவதில்லை என்பது இன்னொரு கேள்வி.

அன்னமாச்சாரியார், புரந்தரதாஸர், அருணகிரி நாதர் ..இவர்களுடைய
பாடல்கள் அவர்கள் காலத்தில் இல்லாத
ராகங்களில் ஒலிப்பது இந்தக் காலம். ஏன், பாரதியின் சந்ததியரே
பாரதி பாடாத மெட்டில் பாடுகிறார்கள் இல்லையா?


ஒரு பாடல் கச்சேரி மேடையில் ஏறினபின் , இசைப் பொருத்தம்தான்
முக்கியம் என்பது என் கருத்து.
ஆனால். . இரண்டு விதக் கருத்துகளையும் உட்கொள்ளும் வழி ஒன்றுண்டு.
சிந்தின் கண்ணிகளை ராகமாலிகையாக அமைத்து, முதலில்
மூல ராகமோ, பழைய பண்ணோ அமைத்துப் பாடலாம்.
காட்டு: கடையநல்லூர் வெங்கடராமன் 'காலமாம் வன' என்ற
பாடலுக்கு அமைத்த மெட்டைக் கேளுங்கள். ஹுசேனியில் தொடங்கி,
சிந்துபைரவியில் முடிகிறது என்று நினைவு.
ஒன்றும் தவறாகத் தோன்றவில்லையே? இப்படித்தானே,
செம்மங்குடி 'பாவயாமி'யை ராகமாலிகாவாக மாற்றினார்?


இதே மாதிரி, பாரதியின் 'வில்லினை'ப் பாட்டையும் பலரும்
பல வேறு ராகமாலிகைகளில் பாடுவது .. எம்.எஸ். உட்பட. . நன்றாகத்தான்
இருக்கிறது என்பது என் கருத்து.

காவடிச் சிந்து, தற்காலத்தில், ஒரு. . யாப்பின் கட்டுப்பாடுகள் மிக
நிறைந்த. . ஒரு மரபுக் கவிதை வடிவத்தைத் தான்
குறிக்கிறது; அது அதன் பொருளை, இசையைக் கட்டுப்படுத்துவதில்லை என்பது என்
கருத்து. இது 'கும்மி' , 'ஆனந்தக்
களிப்பு' போன்ற மற்ற சிந்து வடிவங்களுக்கும் பொருந்தும்.
இன்னும். சொல்லப்போனால், ஒரு 'தாழ்வு'ப் பாவகையாகக்
கருத்தப்பட்ட 'சிந்து'வை 'மேலி'டத்தில் உட்காரவைத்த பெருமை
. . 'சிந்துக்குத் தந்தை' என்று பாரதிதாசன் குறிப்பிட்ட..
பாரதிக்கே உரியது. 'சின்னஞ் சிறுகிளியே' என்ற அந்த
'தாழ்'வான பாவகை இன்று எல்லாக் கச்சேரி மேடையிலும்
ஒலிப்பது இசைக்கு 'உயர்வை'த்தான் கொடுத்திருக்கிறது.


>ஸங்கீத வித்வான் ராமநாதன் அவர்கள் தாங்கள்

> சொல்லுவதுபோல் வேறு வேறு ராகங்களில் ஒரு புத்தகம் நீண்ட நாட்களுக்குமுன்


> வெளியிட்டு இருக்கிறார். கா.சி சுரதாள குறிப்புடன் வந்திருப்பதாக
> சொல்லியிருக்கிறீர்களே அது யார் வெளியிட்டது ?

ராமநாதனின் நூலைத்தான் நான் குறிப்பிட்டேன்.


பசுபதி
5-3-07

__________________________________________________
Do You Yahoo!?
Tired of spam? Yahoo! Mail has the best spam protection around
http://mail.yahoo.com

aka...@gmail.com

unread,
Mar 5, 2007, 5:30:32 PM3/5/07
to santhav...@googlegroups.com

nahupoliyan
(nbalu...@yahoo.com
) எழுதியது

அடடா இதென்ன காவடிச்சிந்து மேல் இப்படியொரு நீண்ட மடல்கள்? விஷயம்
தெரியாதா?
அக்டோபர் 2005க்குப் பின் தமிழில் காவடிச் சிந்து தடை
செய்யப்பட்டாச்சே? கீழே உள்ள சிந்தையும் அதற்கு அன்ந்த்
எழுதிப்போட்டதையும் நான் ஒரு ஹார்டுகாப்பி யெடுத்து அந்தத் திருவள்ளுவர்
சுவடிகளைத் தூக்கிப்போட்ட பொற்றாமரைக்குளத்தில் நானும் தூக்கிப்
போட்டேன். போட்டசூட்டோடு புளக்கேன்று சங்கப்பலகை மேல் எழும்பிக்
கரையில் எறியப்பட்டது மட்டுமில்லாமல் கூடவே வட்டெழுத்தில்
ஒரு வாசகத்துடன் ஒரு புது ஸ்டிக்கர் காணப்பட்டது. வாசகம் இதுதான்:

[இப்படி ஒரு சிந்தும் இஅதற்கொரு பாராடும் வேறு!ஹ்ம்! இட்டேன் தமிழ்த்தாய்
ஆணை!]
இனி ஒரு பயலும் பயலினியும் சிந்து எழுதக்கூடாது: இத்தோடு போகட்டும்


சந்தவசந்தத்தில் 12548 &12584 காண்க.

"இரு கோடிகள்"
-----------நகுபோலியனார் எவரெட்டியார் யாஅத்தது!

-1-
சந்திரனையெட்டிப் பிடித்(து)
அந்தரத்திலே உலவும்
விந்தைக்கலம் வீசும் மதிவாணரே! - அதை
உந்தும் விதி எந்த விதி?
'எந்திரத்தியற்கை விதி'
என்று மதி வீரம் பேசும் வீணரே! - அந்த
எந்திர விதி நுணுக்கத்
தந்திரத்தை உந்திறத்தில்
ஊட்டுவதும் எந்த விதி? காணிரே! - ஆக
அந்தரத்துக் கோளையும் உம்
அந்தரங்கச் சிந்தையையும்
ஆட்டி வைக்கும் ஓர் விதியைப் பேணிரே! -அந்த
ஆதி சக்தி ஓர் விதியைப் பேணிரே!

-2-
சந்தனமும் குங்குமமும்
சாமரமும் தோமரமும்
சாமிபூசையென்று கொள்ளும் பத்தரே!
சொந்த பெண்டுபிள்ளைகளைச்
சந்தியிலே நிக்கவிட்டு
மந்திரஞ் செபித்து மாயும் பித்தரே! -அந்த
மந்திரஞ்செபிக்கவுமே
வந்து பிறந்துற்றவுடல்
தந்ததும் அந்நாயகன்றான் காணிரே! - ஆக
இந்த மெய்யும் அந்த மெய்யும்
ஒன்றெனவுணர்ந்திடுவீர்
செய்கையின்றேல் உய்கையில்லை காணிரே! - வினை
செய்கையொன்றே வீட்டுவழி காணிரே!
*************************************************************

Re: Iru Ko'dikaL
நடையிலும் கருத்திலும் அழகு சொட்டுகிறது. பாராட்டுகள்! அன்புடன், அனந்த்
... .......
******************************************************************


____________________________________________________________________________________
Never Miss an Email
Stay connected with Yahoo! Mail on your mobile. Get started!
http://mobile.yahoo.com/services?promote=mail


------------------------ Yahoo! Groups Sponsor --------------------~-->

Something is new at Yahoo! Groups. Check out the enhanced email design.
http://us.click.yahoo.com/kOt0.A/gOaOAA/yQLSAA/GE2qlB/TM

aka...@gmail.com

unread,
Mar 5, 2007, 5:30:35 PM3/5/07
to santhav...@googlegroups.com


____________________________________________________________________________________
TV dinner still cooling?
Check out "Tonight's Picks" on Yahoo! TV.
http://tv.yahoo.com/


------------------------ Yahoo! Groups Sponsor --------------------~-->

Great things are happening at Yahoo! Groups. See the new email design.
http://us.click.yahoo.com/lOt0.A/hOaOAA/yQLSAA/GE2qlB/TM

aka...@gmail.com

unread,
Mar 5, 2007, 7:30:45 PM3/5/07
to santhav...@googlegroups.com

pas_jaya
(pas_...@yahoo.ca
) எழுதியது

அருமையான சிந்து. இதை ரா.சீ.ரா 'பாரதி கலைக் கழக'
ஆண்டு விழாவில் படித்தபோது, பலரும் பாராட்டிய காட்சி
கண்முன் வருகிறது.

பசுபதி
5-3-07

--- ELANDHAI RAMASAMI <subbaier...@yahoo.com>
wrote:

>
>
>
>
> என்னுடைய மகன் சீநிவாசராகவன் இயற்றிப்பாடியுள்ள சிற்றம்பலச் சிந்துப்


> பாடலைக் கீழே தருகிறேன்
> இலந்தை
>
>
>
> சிற்றம்பலச்சிந்து
>
> கருணைக் கனக சபேசன் -அவன்
> காலடி நாடிடும் நேசன் - அந்த
> திரிபுரமெரி ஒருகடவுளின் திருவம்பலப் புகழ்பாடிட

> வந்தேன் - சிந்து தந்தேன்


__________________________________________________
Do You Yahoo!?
Tired of spam? Yahoo! Mail has the best spam protection around
http://mail.yahoo.com

------------------------ Yahoo! Groups Sponsor --------------------~-->

Yahoo! Groups gets a make over. See the new email design.
http://us.click.yahoo.com/hOt0.A/lOaOAA/yQLSAA/GE2qlB/TM

aka...@gmail.com

unread,
Mar 5, 2007, 7:30:47 PM3/5/07
to santhav...@googlegroups.com

pas_jaya
(pas_...@yahoo.ca
) எழுதியது

:-))
என்னுடைய ஒரு சிறு முயற்சியைத் தருகிறேன்.
('கோபுர தரிசனம்' 2005 தீபாவளி மலரில் வந்தது)

ரெட்டியார், பாரதி, இலந்தை . . யாருடனும் ஒப்பிட வேண்டாம்!


=============

பரமனின் பாட்டில் பிழைதனைக் கண்டு
. . பகர்ந்தது யாருடைச் சொல்? -- தமிழ்
மரபணு என்னும் மகிமைப் பிரணவ
. . மந்திர நாயகி சொல்

தந்திரச் சூரனைப் பண்டைச் சமர்தனில்
. . தாக்கிய தாருடை வேல்? -- திருச்
செந்திலின் செல்வனைப் பத்தர்க் கருளிய
. . செந்தமிழ் அன்னையின் வேல்.

தாவத் தவித்திடும் முல்லைக்குத் தேரினைத்
. . தந்த தெவருடைக் கை? -- மொழிக்
காவலர் காமுறும் தொன்மை இலக்கணக்
. . காப்பிய நாயகி கை.

அன்பும் இறையும் இரண்டிலை ஒன்றென
. .ஆய்வுகள் செய்ததெவ் வாய் ? -- திரு
மந்திரம் ஓதிய மாமுனி முத்தமிழ்
. . மாதவள் செந்தமிழ் வாய்.

கறையான் அரித்த சுவடிகள் தேடிக்
. . களைத்த தெவருடைக் கால்? -- நான்
மறையென மாண்புறு முப்பால் வழங்கிய
. . வண்டமிழ் அன்னையின் கால்.

பண்ணிசை கூத்தியல் யாப்பியல் நல்கிப்
. . பகுத்தது யார் அறிவு? -- எந்த
மண்ணும் அறிந்திடாச் சந்தம் நிறைதமிழ்
. . மாதாவின் கூர் அறிவு.

யாவரும் எம்மவர் யாதுமே நம்நகர்
. . என்றசொல் யாருடைச் சொல்? -- சங்கப்
பாவலர் பாட்டிசைப் பாணரைப் பெற்றவள்
. . பைந்தமிழ் அன்னையின் சொல்.

===============

பசுபதி
5-3-07

--- ELANDHAI RAMASAMI <subbaier...@yahoo.com>
wrote:

> இதோ கீழே என்னுடைய ஐயப்பன் காவடிச்சிந்து தருகிறேன். அண்ணாமல்


> ரெட்டியாரை அடியொற்றியதுதான்

> என்றாலும் இது இலந்தையின் காவடிச்சிந்து. எனவே ஒப்பிடவேண்டாம்.
>
> ஐயப்பன் காவடிச்சிந்து

aka...@gmail.com

unread,
Mar 5, 2007, 9:30:43 PM3/5/07
to santhav...@googlegroups.com

subbaierramasami
(subbaier...@yahoo.com
) எழுதியது

--- In santhav...@yahoogroups.com, "Pas S. Pasupathy" <pas_jaya@...>
wrote:

> --- ELANDHAI RAMASAMI <subbaierramasami@...>


> wrote:
>
> > இதோ கீழே என்னுடைய ஐயப்பன் காவடிச்சிந்து தருகிறேன். அண்ணாமல்
> > ரெட்டியாரை அடியொற்றியதுதான்
> > என்றாலும் இது இலந்தையின் காவடிச்சிந்து. எனவே ஒப்பிடவேண்டாம்.
> >
> > ஐயப்பன் காவடிச்சிந்து
>
>
> __________________________________________________
> Do You Yahoo!?
> Tired of spam? Yahoo! Mail has the best spam protection around
> http://mail.yahoo.com
>


------------------------ Yahoo! Groups Sponsor --------------------~-->

See what's inside the new Yahoo! Groups email.
http://us.click.yahoo.com/0It09A/bOaOAA/yQLSAA/GE2qlB/TM

aka...@gmail.com

unread,
Mar 5, 2007, 9:30:51 PM3/5/07
to santhav...@googlegroups.com

subbaierramasami
(subbaier...@yahoo.com
) எழுதியது

--- In santhav...@yahoogroups.com, "Pas S. Pasupathy" <pas_jaya@...>
wrote:
>
> :-))
> என்னுடைய ஒரு சிறு முயற்சியைத் தருகிறேன்.
> ('கோபுர தரிசனம்' 2005 தீபாவளி மலரில் வந்தது)
>
> ரெட்டியார், பாரதி, இலந்தை . . யாருடனும் ஒப்பிட வேண்டாம்!
>
>
> =============
>

> அருமையான பாடல் . ஆனால் இது காவடிச் சிந்தல்ல. காவடிச்சிந்தின் இலக்கணத்தை நாம் இங்கே விரிவாகப்
பின்பு காண்போம்.

இந்தப்பாடல் எழுசீர் இரட்டைச் சமநிலைச் சிந்து.

இலந்தை

------------------------ Yahoo! Groups Sponsor --------------------~-->

Check out the new improvements in Yahoo! Groups email.
http://us.click.yahoo.com/4It09A/fOaOAA/yQLSAA/GE2qlB/TM

aka...@gmail.com

unread,
Mar 5, 2007, 11:30:29 PM3/5/07
to santhav...@googlegroups.com

pas_jaya
(pas_...@yahoo.ca
) எழுதியது

காத்திருப்பேன்.

"அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச் சிந்தில் 'ஆறுமுக வடிவேலனே' என்பதைப்
போல "
'தொன்று நிகழ்ந்த' (எங்கள் தாய்) வர்ணமெட்டு என்ற குறிப்பைப் பாரதி
கவிதை நூலில் பார்த்து, அதைப் போலவே ஒருநாள் எழுத முயன்றபோது
விளைந்த சிந்து அது என்பது என் நினைவு.\ இரண்டு 'வாய்பாடுகளும்'
(வெண்டளை, எழுத்தெண்ணிக்கை, ..) ஒன்று என்றே என்று அப்போது எனக்குத்
தோன்றியது.

பசுபதி
5-3-07


--- ELANDHAI RAMASAMI <subbaier...@yahoo.com>
wrote:


> > அருமையான பாடல் . ஆனால் இது காவடிச் சிந்தல்ல. காவடிச்சிந்தின்
> இலக்கணத்தை நாம் இங்கே விரிவாகப்
> பின்பு காண்போம்.
>
> இந்தப்பாடல் எழுசீர் இரட்டைச் சமநிலைச் சிந்து.
>
> இலந்தை

__________________________________________________
Do You Yahoo!?
Tired of spam? Yahoo! Mail has the best spam protection around
http://mail.yahoo.com

------------------------ Yahoo! Groups Sponsor --------------------~-->

Yahoo! Groups gets a make over. See the new email design.
http://us.click.yahoo.com/hOt0.A/lOaOAA/yQLSAA/GE2qlB/TM

aka...@gmail.com

unread,
Mar 6, 2007, 12:33:42 PM3/6/07
to santhav...@googlegroups.com

subbaierramasami
(subbaier...@yahoo.com
) எழுதியது

--- In santhav...@yahoogroups.com, "Pas S. Pasupathy" <pas_jaya@...>

wrote:
>
>>

> அருமையான சிந்து. இதை ரா.சீ.ரா 'பாரதி கலைக் கழக'
ஆண்டு விழாவில் படித்தபோது, பலரும் பாராட்டிய காட்சி
கண்முன் வருகிறது.

வானவில் பண்பாட்டு மையத்தின் சார்பில் பரதி வாழ்ந்த வீட்டில் நடைபெற்ற பாரதி விழாவில்
பாடினான். அப்பொழுது சுராஜ் சிந்துப்பாடல்கள் கவிதையே அல்ல. யாராவது கவிதை பாடுங்களேன் என்று
சொன்னதும் நினைவுக்கு வருகிறது

இலந்தை


------------------------ Yahoo! Groups Sponsor --------------------~-->

Something is new at Yahoo! Groups. Check out the enhanced email design.
http://us.click.yahoo.com/kOt0.A/gOaOAA/yQLSAA/GE2qlB/TM

aka...@gmail.com

unread,
Mar 6, 2007, 1:32:00 PM3/6/07
to santhav...@googlegroups.com

pas_jaya
(pas_...@yahoo.ca
) எழுதியது


--- ELANDHAI RAMASAMI <subbaier...@yahoo.com>
wrote:

> --- In santhav...@yahoogroups.com, "Pas S.
> Pasupathy" <pas_jaya@...>
> wrote:
> >
> >>
> > அருமையான சிந்து. இதை ரா.சீ.ரா 'பாரதி கலைக் கழக'
> ஆண்டு விழாவில் படித்தபோது, பலரும் பாராட்டிய காட்சி
> கண்முன் வருகிறது.
>
> வானவில் பண்பாட்டு மையத்தின் சார்பில் பரதி வாழ்ந்த வீட்டில்
> நடைபெற்ற பாரதி விழாவில்
> பாடினான். அப்பொழுது சுராஜ் சிந்துப்பாடல்கள் கவிதையே அல்ல. யாராவது
> கவிதை பாடுங்களேன் என்று
> சொன்னதும் நினைவுக்கு வருகிறது
>
> இலந்தை

:-)) ரா.சீ.ரா விற்குப் பின், நீங்களும் ஒரு சிந்து படித்தீர்களோ?
அதற்குப் பின்தான் சுராஜ் அப்படிச் சொன்னாரா? பிறகு
ரா.சீ.ரா வை விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்ல,
இருவரும் விழாவை விட்டுக் கிளம்பினீர்களோ?

சரியாக இடம், நிகழ்வுகள். . இவை நினைவில் இல்லை. பிறகு கவிமாமணி
தேவநாராயணன் 'ஒருமாதிரியாய்' அவருக்குப் பதில் சொன்னதாக நினைவு.


பசுபதி
6-3-07


__________________________________________________
Do You Yahoo!?
Tired of spam? Yahoo! Mail has the best spam protection around
http://mail.yahoo.com

Reply all
Reply to author
Forward
0 new messages