பழம்பாடல் - அவியல் மகிமை

59 views
Skip to first unread message

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jan 7, 2025, 11:58:18 AM1/7/25
to சந்தவசந்தம்


<> அவியல் மகிமை <>


அவியலில் வந்திடும் அளவிலா இன்பம்

புவியினில் தன்னலம் போகும் ஆறவித்தால்

எவைகளும் வசம்வர இன்பமாய் அன்புச்

சுவையினை நுகரலாம் சுள்ளிகொண் டெரியில்

அவியளிப் பவர்களும் ஆசையை அதனோ(டு)

அவித்திடா திருப்பரேல் யாதுதாம் பெறுவார்?

குவிந்திடு மனத்தொடு குவலய இச்சை

அவிந்திட அவிந்திட அவனுளே தோன்றுவான்.


(ஆறவித்தால் - காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் என்ற ஆறு வகையான புறவுலக நாட்டங்கள்.) 

 

..அனந்த், பிப்ருவரி 14, 2003 

Siva Siva

unread,
Jan 7, 2025, 3:30:54 PM1/7/25
to santhav...@googlegroups.com
குவியல் போலக் கூட்டின் பக்கம்
அவியல் அதுவும் அங்கே இருந்தால
புவியில் பிறந்த பயனும் கிட்டும்
கவியில் சொன்னால் கைககள் தட்டும்! :)

V. Subramanian


Ram Ramakrishnan

unread,
Jan 7, 2025, 3:34:14 PM1/7/25
to santhav...@googlegroups.com
அவியல் மகாத்மியம் அருமை, அனந்த்ஜீ.

அவியலில் தங்களின் நாட்டத்தை உங்களது குறும்பா மூலம் கண்டிருக்கிறேன். இதோ உங்கள் குறும்பா:


கவிஞனைநான் ஏன்மணந்தேன் என்று

கண்கசக்கும் என்மனைவி இன்று

.... அவியலுடன் ரசமும்வைத்து

.... அப்பளம்பா யசம்சமைத்துச்

செவியில்சொன்னாள்: உம்குறும்பா நன்று!





அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jan 7, 2025, at 11:58, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAF%2Bqia2VFqTXa8wvKofuU%3Dr5i1qFaGmRqhPNDtBwgxqLeQp4cg%40mail.gmail.com.

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jan 7, 2025, 9:35:01 PM1/7/25
to santhav...@googlegroups.com
😊thanks

Sent from my iPhone

On Jan 7, 2025, at 3:34 PM, Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:

அவியல் மகாத்மியம் அருமை, அனந்த்ஜீ.

அவியலில் தங்களின் நாட்டத்தை உங்களது குறும்பா மூலம் கண்டிருக்கிறேன். இதோ உங்கள் குறும்பா:


கவிஞனைநான் ஏன்மணந்தேன் என்று

கண்கசக்கும் என்மனைவி இன்று

.... அவியலுடன் ரசமும்வைத்து

.... அப்பளம்பா யசம்சமைத்துச்

செவியில்சொன்னாள்: உம்குறும்பா நன்று!





அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jan 7, 2025, at 11:58, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:




<> அவியல் மகிமை <>


அவியலில் வந்திடும் அளவிலா இன்பம்

புவியினில் தன்னலம் போகும் ஆறவித்தால்

எவைகளும் வசம்வர இன்பமாய் அன்புச்


 

..அனந்த், பிப்ருவரி 14, 2003 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAF%2Bqia2VFqTXa8wvKofuU%3Dr5i1qFaGmRqhPNDtBwgxqLeQp4cg%40mail.gmail.com.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jan 19, 2025, 6:54:54 PM1/19/25
to சந்தவசந்தம்
என்றோ எழுதிய ஒரு வெண்பா இன்று கண்ணுக்குத் தென்பட்டது. (முன்னமே இட்டதாக நினைவில்லை):

ஒற்றுப் பிழைசொற்கள் ஒட்டுப் பிழைஉகரக்
குற்றுப் பிழைதளைகள் தட்டுப் பிழையாவும்
அற்றுப் பிழைவிதியை ஒற்றிப் பிழைஅறிவு
முற்றிப் பிழைஇன்ப முற்று.

(பிழைத்தல் = உய்தல்,வாழ்தல், தவறுசெய்தல்; உகரக்குற்று - குற்றியலுகரம்;)

:-))
...அனந்த்
11-5-2007

On Tue, Jan 7, 2025 at 11:58 AM VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:


<> அவியல் மகிமை <>


அவியலில் வந்திடும் அளவிலா இன்பம்

புவியினில் தன்னலம் போகும் ஆறவித்தால்

எவைகளும் வசம்வர இன்பமாய் அன்புச்

 

..அனந்த், பிப்ருவரி 14, 2003 

Ram Ramakrishnan

unread,
Jan 19, 2025, 11:40:57 PM1/19/25
to santhav...@googlegroups.com
ஒற்றுப்பிழைகளைத் தவிர்த்தலுக்கு அருமையான வெண்பா.

பள்ளிப் பாடப் புத்தகத்திற்கு உகந்தது.
விடியலுக்குப் புரியாதது.

பகிர்ந்தமைக்கு நன்றி, அனந்த்ஜீ.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jan 20, 2025, at 05:24, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jan 29, 2025, 10:42:02 PM1/29/25
to சந்தவசந்தம்

         <> சித்தரின் உண்டி <:>


காலை உணவாகக் காலையுண் டேன்மாலை

மாலை மகிழ்ந்துண்டேன் கங்குலின்பால்யான்

இரவேற்றேன் வேண்டுமோ மேலும் எனக்கு

விருந்தென்று வேறொன்று சொல்.


(காலை உண்டேன் = காற்றை உட்கொண்டேன் (பிரணாயாமம் பயின்றேன்); மாலை = மாயையால் விளையும் மயக்கத்தை; கங்குல் இன்பால் = இரவு வேளையின் இன்பத்தால்; இரவு= யாசித்தல்.


.... அனந்த் -2019

 

Subbaier Ramasami

unread,
Jan 29, 2025, 10:48:40 PM1/29/25
to santhav...@googlegroups.com
பிழை என்னும் தலைப்பில் நீங்கள் முன்பு கவிதையிட்டது நினைவிருக்கிறது. அதற்குப் பின்னூட்டமாகப் பிழை என்று மீண்டும் மீண்டும் வருமாறு நானும் எழுதினேன். தேடிக் கண்டுபிடித்து இங்கே இடுகிறேன்.

இலந்தை.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Jan 29, 2025, 11:03:23 PM1/29/25
to santhav...@googlegroups.com
Nice.

GOPAL Vis

unread,
Jan 30, 2025, 3:36:34 AM1/30/25
to santhav...@googlegroups.com
அருமை.
கோபால்.

NATARAJAN RAMASESHAN

unread,
Jan 30, 2025, 6:16:27 AM1/30/25
to santhav...@googlegroups.com
அருமை 
   —தில்லைவேந்தன்

VETTAI ANANTHANARAYANAN

unread,
Feb 21, 2025, 10:46:16 PM2/21/25
to சந்தவசந்தம்

 😁 பற்குறள்: பல்லோம்பல் 😁













பல்செல்வம் ஈட்டிப் பயனென் பழுதில்லாப்
பல்செல்வம் பெறாஅர் எனின்? 1

பல்லார் பழிக்கப் பெறுவர்வாய் பேணாத
பல்லார்தாம் பல்நோய்வாய்ப் பட்டு. 2

கற்க கசடறப் பல்நலம் கற்றிடேல்
நிற்க மருத்துவர் முன்.   3

தொட்டால் துடிப்போம் பிறபுண்ணால் பல்லோநீர்
பட்டாலும் நோகும் பழுத்து.  4 

பல்லால் கிடைத்த பயனெல்லாம் சொத்தைவரில்
சொல்லாமல் ஏகும் துறந்து. 5

பல்காத்துப் பல்டாக்டர்” சொல்காத்துப் பின்வரும்
பில்பார்த்துப் போகும் வலி. 6

.மண்ணுலகும் தீநரகாய் மாறுமே பற்களிடைப்
புண்ணுழைந்த போதில் பொரிந்து. 7.

வலிசூழ்ந்த பல்லெனக் காட்டிநம் இன்பம்
பலிகொள்ளும் பாவி உணர்.  8

பல்லால் விளைஇன்னல் வாழ்வில் படும்துன்பம்
எல்லாவற் றுள்ளும் தலை. 9

யாகாவா ராயினும் வாய்காக்க காவாக்கால்
சோகாப்பர் பல்லழுக்குப் பட்டு. 10    
                          
... அனந்த்
 9-7-2019

GOPAL Vis

unread,
Feb 22, 2025, 3:36:03 AM2/22/25
to santhav...@googlegroups.com
அருமை!
பல்காத்துப் பல்டாக்டர்” சொல்காத்துப் பின்வரும்
பில்பார்த்துப் போகும் வலி. 6
ஹஹ்ஹா!

Ram Ramakrishnan

unread,
Feb 22, 2025, 5:29:53 AM2/22/25
to santhav...@googlegroups.com
அற்புதக் குறள் வெணபாக்கள் அனந்த்ஜீ.

என்பங்குக்கு:

கொடுத்த படத்திற்கு விடுத்த வெண்பா

image

பல்வலியால் பாழ்படும்நான் பட்டதுயர் சொல்லடங்கா
அல்லலினைப்  போக்குதற் காருளர் - மெல்லென
ஊசிபோல் தைக்குதடா உள்ளமுறு வேதனையைப்
பேசிடவு மாகாப் பிணி.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Feb 22, 2025, at 09:16, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Kaviyogi Vedham

unread,
Feb 22, 2025, 11:45:15 AM2/22/25
to santhav...@googlegroups.com
attagasam  ananth
 yogiyar

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

VETTAI ANANTHANARAYANAN

unread,
Feb 23, 2025, 9:33:13 PM2/23/25
to சந்தவசந்தம்
பழையது என்று புறக்கணிக்காமல் என் பாடலைப் படித்துப் பின்னூட்டம் தந்த பல்லோருக்குப் பல்லாயிரம் நன்றி.

..அனந்த்

On Sat, Feb 22, 2025 at 2:06 AM Dr.Parameswaran VS <vsp...@gmail.com> wrote:
I understand. The dentist you consulted might have made lament like this.

Don't worry. 
You are yourself a "பல்கலை கவிஞன்"

பல் செல்வம் பல பெற்று, பல்லாண்டு வாழ்க.. 

VETTAI ANANTHANARAYANAN

unread,
Mar 2, 2025, 3:37:25 PM3/2/25
to சந்தவசந்தம்

போற்றி வளர்க்கும் இந்த மனித உடலில் விளையும் மாற்றங்களை விவரித்து வாழ்வின் நிலையாமையைக் காட்டவும் ழகரம் பயன்படும் என்பதைக் காட்ட:

 

<> அழகு ழகரமும் அழும் ழகரமும் <>

 

 

பழனி அழகனை விழுந்து விழுந்து

 

விழைந்து தொழக்கை விழுந்த பழமாம்

 

குழவி எனும்ஓர் அமிழ்தப் பிழம்பு 

 

மழையில் செழித்த எழிலார் பொழில்பூ

 

குழலொடு யாழைப் பழிக்கும் மதலை

 

மொழியைப் பழகும் மகிழங் கொழுந்து 

 

கொழுகொழு மேனியில் கூழ்குழைத் தாற்போல்

 

வழுக்கிடும் கன்னம், அழுத்தின் சிவக்கும்;

 

பொழுதொரு வழியாய்த் திகழும் புகழ்சேர்

 

தமிழின் ழகரத் தழைப்பு முடிவில்   

பழைய கொழுப்பை இழந்த கிழமாய்ப்

பழுத்துச் சுருங்கிய பாழும் உடலும்

அழுகைப் பொழிவை உமிழும் முகமும்

குழியில் விழுந்த விழியும் அழுகி

விழுந்திட்ட பல்லும் விழாத ஆசையும்

வழவழக் கோழை ஒழுகி இழைந்து

தழுதழுத் தொலிக்கும் குழறிய மொழியும்

புழுவினும் கீழாய்ப் புவியோர் இகழ

வழிதெரி யாமல் உழலும் பொழுதில்

அழுகும் ழகரப் பழம்! 

 

(68 முறை ழகரம்)


... அனந்த் 30-5-2012 /2-3-2025

Swaminathan Sankaran

unread,
Mar 2, 2025, 5:35:59 PM3/2/25
to santhav...@googlegroups.com
சிறப்பு, அனந்த்!

சங்கரன் 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.


--
 Swaminathan Sankaran

VETTAI ANANTHANARAYANAN

unread,
Mar 2, 2025, 7:45:30 PM3/2/25
to santhav...@googlegroups.com
நன்றி, சங்கரன்.

Govindaraju Arunachalam

unread,
Mar 2, 2025, 10:40:36 PM3/2/25
to santhav...@googlegroups.com
மிக மிகச் சிறப்பு. 

rgds,
 
Dr. A. GOVINDARAJU,
Retired Principal - National Awardee,



--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

VETTAI ANANTHANARAYANAN

unread,
Mar 12, 2025, 11:10:57 PM3/12/25
to சந்தவசந்தம்

<> கொசுக் கதை <>

                                                                                          .. அனந்த் (கனடா) ..

(இது ‘ஹப் மாகஸீன்’ மின்னிதழில் 2008-ல் ’மரபில் நகைச்சுவை’ பகுதி இடுகைகளில் ஒன்று.) 


காட்சி- 1

கோடைக் காலம் வந்தும் குளிரும் மழையும் இன்னும் விடாத இந்தக் கானடா தேசத்திலும் கொசுவுக்கு- அதாவது கொசுக்களின் எண்ணிக்கைக்குப்- பஞ்சமில்லைதான். ஆனால்கொசு இனத்திற்கு அவற்றின் உணவாகிய இரத்தம் கிட்டாமல் எழும் பஞ்சத்தையும் அப்போது கொசு படும் கஷ்டத்தையும் அறிந்து ஆராய்ந்து சொல்ல ஒருவரும் முனைவதில்லை. தை நினைத்து, மனம் நொந்து போன ஒரு கொசுவின் அங்கலாய்ப்பே கீழ்க்காணும் அந்தாதி வெண்பாப் பாடல்:

கொசுப் புலம்பல் அந்தாதிப் பதிகம்


வலைவிரிப்பார் வத்திவைப்பார் வாயுண்டு சாகக்

கொலைமருந்து வைப்பார் கொசுநான் -அலைந்தலைந்(து)

ஓர்சொட்டு ரத்தம் உணவுக்காய் யாசித்தால்

போர்கொட்டும் புன்மைச் சனம்! 1



சனத்தொகை 'பில்லியனை'த் தாண்டுவது தங்கள்

மனத்தில் உறைக்கா மனிதர் - சினத்துடன்

சீறுவார் என்றன் சிறுகுலம் சில்கோடி

மீறினால்ஈதெம் விதி! 2



விதித்தார் கடவுளெங்கள் வேலையாய் மக்கள்

உதிரம் உறிஞ்சுதல் என்றே - மதித்தெம்மைத்

தாமே வரவேற்று நல்விருந்து தாராமல்

போமென்(று) இகழ்வார் பொரிந்து. 3



பொரியும் பழமோடு பொங்கலுமாய் மாந்தர்

பரிந்தளிப்பார் அந்தப் பசுவிற்(கு) - எரிந்தோர்

துளிக்குருதி யும்தாரார் சோர்ந்துஅந்த மாட்டின்

குளியாத்தோல் குந்தும் எமக்கு. 4



எமனேறும் அந்த எருமையும்தன் மேனி

அமரும்எமக் கீயும்ஆ காரம் - தமதுடலில்

ஓர்கணமும் எம்மை உவந்தேற்கா மானிடர்க்குப்

பேர்வைப்பேன் தன்னலப் பேய்! 5



பேயும் இரங்குமாம் பெண்டிர்க்கென் பாரிவர்எம்

தாய்க்குலத் திற்கும் தயைகாட்டார் - பாயில்

படுத்துறங்கும் போது பதறாமல் நாங்கள்

எடுக்கும் துளிதருமோ துன்பு? 6



துன்மார்க்கர் மேனியின் தோல்குத்தித் தின்றால்எம்

சன்மார்க்கம் விட்டொழிதல் சாத்தியமே - என்றாலும்

நாங்கள் இதையறிந்து நல்வழியை நாதமொடு

ரீங்காரம் செய்வோம் தினம். 7



தினவெடுக்கும் காலெம்மைத் தீர்ப்பதற்குத் தங்கள்

கனம்மிகுந்த கையெடுத்து மாந்தர் - மனம்போலச்

சாத்துவார் தம்முடலைத் தாமே அதைநாளும்

பார்த்துகுப்போம் கண்ணீர் பரிந்து. 8



பரிசாய்க் குருதிதரும் பாங்கில்லை யேனும்

பரிதாபப் பட்டேனும் தங்கள் - பெருமுடலில்

ஓர்இடத்தை எங்கட்(கு) ஒதுக்கிவைத்தால் எம்பசி

தீருமிதைச் சிந்தியா ரோ. 9



சிந்துவார் தம்மினம் வாழ்வதற்குத் தானமாய்

இந்த மனிதர் இரத்தத்தை - வந்திரவில்

பாட்டளிக்கும் எம்நிலைமை பார்த்தளித்தால் தீருமெம்மை

வாட்டும் பெருங்க வலை. 10.



காட்சி- 2

இந்தக் கவிதையைப் படித்ததும்என் நண்பர்களில் ஒருவரும்கொசு எதிர்ப்புக் கழ/லகத்தின் (கொ.எ.க.) தலைவரும் ஆன ஒரு புலவர் பெருமான் படுகோபங் கொண்டுவிட்டார். தமக்கே தளை தட்டாமல் எழுத வராத வெண்பாப் பாவினத்தில், அதுவும் மண்டலித்த அந்த்தாதிப் பதிகமாய், ஒரு அற்பக் கொசு கவிதை படைத்தது பற்றி மட்டுமல்ல அவரது சினத்தின் காரணம். அவர் தினமும் காலையில் எழுந்தவுடன் 'கோபூஜைஎன்னும் பசுவழிபாட்டை ஒழுங்காகச் செய்துவரும் பசு ஆதரவாளர். (அவர் தம் மகளுக்குப் பசுப்ரியா என்று பெயரிட்டதிலிருந்து அவரது பசுமோகம் நன்கு தெரியவரும்). அவருக்குக் கொசுவைக் கண்ணால் காணவும் அதற்குத் தம் குருதியைக் கொடுக்கவும் கட்டோடு பிடிக்காது. தம் வீடு முழுவதும் உள்ளும் வெளியுமாகக் கொசுவலையால் போர்த்திப் பாதுகாத்து வருபவர். இத்தகைய குணநலன் வாய்ந்த நம் கவிஞர் நண்பர் கொசுவின் மேலுள்ள தம் ஆத்திரத்தை வெளிப்படுத்தும் வகையில்பண்டு பண்டு காலத்தில் வெளியான சிவகவி என்னும் திரைப்படத்தில் எம்.கே. தியாகராஜ பாகவதர் (எம்.கே.டீ) தாம் சிவபெருமானைப் பாடும் வாயால் முருகனைப் பாட மாட்டேன் என்று பாடிய ஒரு அழகிய கீர்த்தனத்தை (https://www.youtube.com/watch?v=h7_AKTFpGvk ) அடிப்படையாகக் கொண்டுகீழ்க்கண்ட பாடலை இயற்றிப் பாடினார்:


<> பசுக்கவி <>  

இராகம்: செஞ்சுருட்டிதாளம்: ஆதி

பல்லவி:


பசுவினைப் பாடும் வாயால் - அற்பக்

கொசுவினைப் பாடுவேனோ?- வெள்ளைமனப்

பசுவினைப் பாடும் வாயால் - அற்பக்

கொசுவினைப் பாடுவேனோ? - பரம



சாதுவைப் பாடும் வாயால் - அரக்கன்

மீதுநான் பாடுவேனோ

சரணம்:


1. ஆவினைப் பாடும் வாயால் - கெடுக்கும்

பாவியைப் பாடுவேனோ - எங்கள்


நள்ளிர வில்கடித்தே மறைந்திடும்

கள்ளனைப் பாடுவேனோ?



2. நம்பிடும் நம் குடும்ப - நலம்

விரும்பியைப் பாடும் வாயால்

துன்பமொன்றே விளைக்க - எமன்விடும்

தூதனைப் பாடுவேனோ



காட்சி- 3
கொசுப் பெருமான்
மேற்கண்ட பாடலைப் பாட நம் கொ.எ.க. நண்பர் 'சிவகவிகதையில் வரும் மெட்டையும் நடையையும் தேர்ந்தெடுத்த காரணத்தாலோ என்னமோஅக்கதையில் வருவது போலஅவருக்கு ஒரு பெரிய சோதனையை அளித்து அவரைத் தமது அருமை பெருமையை உணரச் செய்யப் பதினைந்தாவது உலகமாகிய கொசு லோகத்தில் கொலு விற்றிருக்கும் கொசு பகவான் திருவுள்ளங் கொண்டார். அதன்படி, பசுக்கவியைப் பாடலைப் பாடிய சிலதினங்களுக்குள்கொசுவின் 'தொல்லைஇல்லாமல் நிம்மதியாகத் தினம் உறங்கி வந்த நம் கவிஞர் பெருமானின் வீட்டில் திருடர்கள் புகுந்துஒரு பொருள் பாக்கியில்லாமல் கொள்ளை கொண்டு சென்றுவிட்டனர். பிறரைப் போலகொசுவின் உதவியால் இரவெல்லாம் விழித்திருந்து தங்களுடைய உடைமைகளைப் பாதுகாக்கும் மற்ற மாந்தரைப் போலன்றித் தாம் கொசுவை வெறுத்துக் கொசுப் பழிப்புக் கவிதையும் பாடியதே தம் இழப்புக்குக் காரணம் என்று உணர நம் புலவர் பெருமானுக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை. உடனே அவர் (மீண்டும் சிவகவி-எம்.கே.டீ- சொப்பன வாழ்வில்..பாடலின் மெட்டில் கீழ்க்கண்ட கீர்த்தனப் பாடலை இயற்றி மனமுருககூடியவரை எம்.கே. தியாகராஜ பாகவதரைப் பின்பற்றிப்  பாடினார்:

<.> கொசுக்கவி <>

இராகம்: விஜயநாகரிதாளம்: ஆதி

பல்லவி:


சொப்பன வேளை மகிழ்ந்து - பறந்துவரும்

சுவாமி உனைமறந்தார் -அந்தோ


அற்பக் குணப்பேய் பிடித்தே உனைத்துரத்த

ஆனவரை முயல்வார்


சரணம்:

நாவால் பழித்திடுவார் பலமருந்தை

நாடிநாள் பாழ்செய்வார் - ஒரு

பாவமும் செய்தறியா உன்னை அழிக்கும்

பாதகம் செய்திடுவார்

அந்தோ விந்தை இதே - அறிவிழந்து

ஆழ்துயிலில் வீழ்வாரே - மாந்தர்

அந்தோ விந்தை இதே - அறிவிழந்து

ஆழ்துயிலில் வீழ்வாரே - இனிச்

சிந்தை திருந்திக் கொசுவே! இவர்குருதி

தினமுனக் களியாரோ?


(இப்பாட்டின் ஒலிப்பதிவை இணைத்துள்ள கோப்பில் கேட்கலாம்.)

 
காட்சி- 4

இப்பாடலைக் கேட்டு மிகவும் மனம் நெகிழ்ந்துபோன கொசுப்பெருமான் நம் நண்பர் முன் பிரத்தியட்சமாகி அவர் கவலையைத் தாம் உடனே தீர்ப்பதாக உறுதி கூறினார். அடுத்த கணமே அவர் தமது பரிவார கணங்களோடுகொள்ளையடித்த கள்வர் குகையில் புகுந்து அவர்களை ஓட ஓட விரட்டிநம் நண்பரின் காலில் விழச்செய்து அவரது வீட்டுப் பொருள்களை அவரிடம் ஒப்படைக்கச் செய்தார். என்னே கொசுவாரின் மகிமை! நாமும் கொசுப் பெருமானுக்குத் தினமும் குருதி நைவேத்தியம் அளித்துஅவர் அருள் கடியைப் பெற்றுப் பயனுற வாழ்வோமாக!

=====================================================

On Fri, Feb 21, 2025 at 10:46 PM VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:
 😁 பற்குறள்: பல்லோம்பல் 😁



7B- சொப்பன வேளை மகிழ்ந்து.mp3

NATARAJAN RAMASESHAN

unread,
Mar 13, 2025, 12:03:05 AM3/13/25
to santhav...@googlegroups.com
சிறப்பான சிரிப்பு வெண்பாக்கள்
பாட்டும் அருமை 
நல்ல கற்பனை 

         — தில்லைவேந்தன்

       

K.R. Kumar

unread,
Mar 13, 2025, 1:15:41 AM3/13/25
to rathna...@googlegroups.com, சந்தவசந்தம்
அன்புள்ள அனந்த்,

நல்ல தமாஷான (jovial) கற்பனை. 

தொடர்க ! கொசுக்கடி விவகாரப் பஞ்சாயத்து.!!

வாழ்க ! வளத்துடன் !!

குமார்(சிங்கை)

--
--
"அளவற்றவன் அவன்; அவனை அடையும் வழிகளும் அளவற்றவை"
"God is simple. Everything else is complex"

---
You received this message because you are subscribed to the Google Groups "இரத்தினமாலை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to rathnamaalai...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/rathnamaalai/CAF%2Bqia1EQUBJVR1EeoVwAX-CRw60G4GVcnMwQx5%3D4%2B1eg1BfKA%40mail.gmail.com.

Siva Siva

unread,
Mar 13, 2025, 9:45:21 AM3/13/25
to santhavasantham
Very nice.

I think this or some other songs and other writings were posted in SV at that time.

V. Subramanian

VETTAI ANANTHANARAYANAN

unread,
Mar 13, 2025, 12:45:37 PM3/13/25
to santhav...@googlegroups.com
Thanks.
> I think this or some other songs and other writings were posted in SV at that time.
That's why it is posted under பழம்பாடல்! 🙂 I was asked to post some such selected old poems for the sake of newer members who may not have seen them before..  Also, the Hub Magazine poems are no longer available online.

அனந்த்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCPcL4yU7gN2ebidWaJuJ%3DX7-_0W4CpnXoprPB7poXoucg%40mail.gmail.com.

Siva Siva

unread,
Mar 13, 2025, 1:19:41 PM3/13/25
to santhav...@googlegroups.com
Yes, that is a good idea.

VETTAI ANANTHANARAYANAN

unread,
Apr 4, 2025, 8:15:50 PM4/4/25
to சந்தவசந்தம்


நான் இன்று தரப்போகும் ஒரு தரவு கொச்சகக் கலிப்பா 'கவிதை'யைச் சாக்கிட்டு நம் நினைவில் மங்கிப்போன நமது இலக்கியச் செல்வத்தைச் சற்றுத் துடைத்துப் பார்க்கலாமே என்ற ஆவலினால் எழுந்தது.. வழக்கம்போல, இந்தக் கவிதையில் நகைச்சுவை உண்டு. ஆனால், அதைத் துழாவிக் கண்டுபிடிக்க நீங்கள் சற்று உழைக்க வேண்டி வரும். ஒருவகையான புதிர் என்று வைத்துக்கொள்ளுங்களேன். இதன் பொருளைத் தெரிந்து சிரிக்கவும் செய்தவர்கள் Discussion பகுதியில் அதை இடலாம். அப்படி யாரேனும் எழுதினாலும், எழுதாவிட்டாலும் அடுத்த மாத இதழில் புதிரின் விடையை இந்தப் பகுதியில் காணலாம்!


... அனந்த் 24-9-2006 / 4-4-2025

 

கவிதை:

 

மணல்மாயக் காரியைஓர் மறைமுடிவு மருத்துவர்மின்

தணலடுப்பில் வாட்டியபின் தாகமற வேண்டியொரு

மணமணக்கும் கரிப்பானம் வாங்கிஊண் பிளவினிலே

உணவருந்தும் காட்சியினை உலகம்இன்று பொறுத்திடுமே.!

 

பின்னுரை: ஒரு மருத்துவர் மாயக்காரி ஒருத்தியைத் தணலில் வாட்டி, அவளைக் கரிப்பானம் ஒன்றோடு உண்ணுகிறார் என்று அவல ஓலம் இடும் இப்பாட்டின் உட்பொருள் தெரியாமல் இருக்கலாமா? கூடாது! அதனால் இப்போதே சவாலை ஏற்றுப் புதிரை உடைத்து அமைதி காணுங்கள்! :-))


என்ன முயன்றும் விடை கிட்டவில்லையென்றால், மேலே தொடரவும். 

****************

விடை:

 

புதிரை அவிழ்க்கப் புரிந்துகொள்ள வேண்டிய சொல் பொருள்கள்:

 

1. மணல்மாயக் காரி = sandwitch; குறிப்பு- sand + witch = sandwitch என்பது தான் காலப்போக்கில் sandwich என்று மருவியது/மழுங்கியது என்பது மொழிவல்லூறுகளின் கூற்று; 2 மதிப்பெண்கள்

2. மறைமுடிவு மருத்துவர் = Ph.D. degree holder; குறிப்பு- Ph.D. stands for doctor of philosophy; philosophy = வேதாந்தம் = வேத அந்தம் = மறைமுடிவு; 2 மதிப்பெண்கள்.

3. மின் தணலடுப்பு = electric oven;1 மதிப்பெண்

4 மணமணக்கும் = vanilla, lime, etc. flavoured;1 மதிப்பெண்

5. கரிப்பானம் = coke drink (coke = கரி); 2 மதிப்பெண்கள்.

6. மதியப்பிளவு  ஊண்பிளவு = lunch break; 2 மதிப்பெண்கள்

 

மொத்தம் 10 மதிப்பெண்கள்


On Wed, Mar 12, 2025 at 11:10 PM VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:
<> கொசுக் கதை <>

                                                                                          .. அனந்த் (கனடா) ..

(இது ‘ஹப் மாகஸீன்’ மின்னிதழில் 2008-ல் ’மரபில் நகைச்சுவை’ பகுதி இடுகைகளில் ஒன்று.) 


காட்சி- 1

கோடைக் காலம் வந்தும் குளிரும் மழையும் இன்னும் விடாத இந்தக் கானடா தேசத்திலும் கொசுவுக்கு- அதாவது கொசுக்களின் எண்ணிக்கைக்குப்- பஞ்சமில்லைதான். ஆனால்கொசு இனத்திற்கு அவற்றின் உணவாகிய இரத்தம் கிட்டாமல் எழும் பஞ்சத்தையும் அப்போது கொசு படும் கஷ்டத்தையும் அறிந்து ஆராய்ந்து சொல்ல ஒருவரும் முனைவதில்லை. தை நினைத்து, மனம் நொந்து போன ஒரு கொசுவின் அங்கலாய்ப்பே கீழ்க்காணும் அந்தாதி வெண்பாப் பாடல்:

கொசுப் புலம்பல் அந்தாதிப் பதிகம்

Subbaier Ramasami

unread,
Apr 5, 2025, 11:19:54 AM4/5/25
to santhav...@googlegroups.com
ஆகா, மிக அழகு அழகு.

வலியின்றி குத்தி மகிழ்ந்து கொசு குடித்தால்
சலிப்பின்றி இரத்தம் தரவெனக்குச் சம்மதமே
கிலிகொடுக்கும் நோய்சற்றும் கிட்டவா ராதிருந்தால்
நலவுணவை உண்பேன் நம்கொசுவும் பலம்பெறவே!

இலந்தை

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Ramamoorthy Ramachandran

unread,
Apr 5, 2025, 6:51:33 PM4/5/25
to santhav...@googlegroups.com

ரீங்காரச் சங்கீதம்,
நேர்த்திச் சிறகசைப்பு,

ஏங்காதே வானூரும் எழிலூக்கம் - வீங்காமல்

மெல்ல வருடி உறிஞ்சும் மிதவேகம்

அல்லைக் கடத்தும் அது!

புலவர்




Ram Ramakrishnan

unread,
Apr 6, 2025, 1:14:21 AM4/6/25
to santhav...@googlegroups.com
கொசுபுராணம் அருமையிலும் அருமை, அனந்த்ஜீ.

கவிதையில் ஒவ்வோர் வரியிலும் அனந்த் ஜீயின்  முத்திரையும் நகைச்சுவை உணர்வும் 
பரமளிக்கின்றன.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Mar 13, 2025, at 08:40, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAF%2Bqia1EQUBJVR1EeoVwAX-CRw60G4GVcnMwQx5%3D4%2B1eg1BfKA%40mail.gmail.com.
<7B- சொப்பன வேளை மகிழ்ந்து.mp3>

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jul 3, 2026, 11:10:19 PM (3 days ago) Jul 3
to சந்தவசந்தம்

 

8-8-2005

 

நேற்று (ஆகஸ்ட் 7) டொராண்டோவில் நடந்த திருமதி கீதா

ராஜசேகரனின் இசைக் கச்சேரியில் அமர்ந்திருக்கையில் முதல்

பாடலைக் கேட்டபின் அந்தப் பாட்டைப் பற்றி

ஒரு வரிஎழுதிய கையோடு பின்வந்த ஒவ்வொரு பாடலுக்கும்

அதே எதுகை கொண்ட வரிகளை ஒவ்வொன்றாகச் சேர்த்துக் கொண்டு

வந்தேன். இறுதி விளைவான கலிவெண்பா பொதுவாக உரைநடையில்

எழுதப்படும் கச்சேரி விமரிசனங்களிலிருந்து வேறுபட்ட வடிவில்

இருப்பதாகத் தோன்றியதால் அதை உங்களுடன் பகிர்ந்து

கொள்ள ஆவல் உண்டாயிற்று. பாட்டுப் பட்டியலை முதலில்

தந்திருக்கிறேன். (பாடகி டி.கே. பட்டம்மாள் அவர்களின் சிஷ்யை;

வயலின்: முல்லைவாசல் சந்திரமௌளி; மிருதங்கம்:

ஸ்கந்தசுப்பிரமணியன்)

... அனந்த்

------------------------------------

பாட்டுப் பட்டியல்:

1. வனஜாக்ஷி - கல்யாணி வர்ணம்; 2. துளசீதள.. -

மாயாமாளவகௌளை;

3. ப்ரோவபாரம்மா- பகுதாரி; 4. மனஸுலோனி - ஹிந்தோளம்

5. ரேணுகா தேவி - கர்நாடக பங்களா; 6. கொலுவ மரகத -

தோடி; 7. மிருதங்கம் தனி ஆவர்த்தனம் 8. தாயே திரிபுர சுந்தரி -

சுத்த சாவேரி; 9. பல்லவி- ஷண்முக ப்ரியா+ராகமாலிகை; 10.

ஜகஜ்ஜனனி - ரதிபதிப் ப்ரியா; 11. எப்படிப் பாடினாரோ- கர்நாடக

தேவகாந்தாரி; 12. பார்த்தசாரதி - மதுகௌன்ஸ்; 13. சாந்தி

நிலவ வேண்டும்-திலங்; 14. ஜயஜய தேவி - வலஜி; 15. பஞ்சரஞ்சனி;

16. தில்லானா - கமாஸ் 17. மங்களம்

----------------------------------------------------

கல்யாணி யில்*கமலக் கண்ணாளின் வர்ணமுடன்

நல்மாயா மாளவத்தில் நாட்டமுடன் ராகவனைப்

பல்வித மாகப் பகுதாரி யில்புகழ்ந்து

அல்லறுக்கும் இந்தளத்தில் ஆழ்மனத்தைத் தான்தொட்டு

வில்லேந்தும் ஐயனை மேலும் பரவியபின்

வல்லோன் 'மழுராமன் மாதா'வைப் பங்காளம்

மெல்ல எழுப்ப மிகவும்வித் தாரமாய்ச்

சொல்லச் சுகம்தரும் தோடி விரித்(து)உலகில்

நல்லோர்கள் போற்றும் நாயகனைப் பாடினதும்

துல்லிய ஓசை தொனிக்கமிரு தங்கத்தில்

வல்லமை காட்டிய வாலிபனைப் பின்தொடர்ந்து

உல்லாச சுத்தசா வேரியில் ஒன்றவைத்து

வல்லி மணாளன் விரும்பிடும் பண்ணிலோர்

பல்லவியைக் கேட்டுப் பரவசம் கொள்ளு(ம்)வண்ணம்

பல்ராக மாலிகையில் பாங்காய்ப் பரிமளித்துத்

தொல்மதுரைத் 'தாயவளை'த் தோத்திரம் செய்துதமிழ்ச்

சொல்லில் துதித்தோர் திறம்வியந்து பார்த்தனுக்கு

மல்லோர் இடையே 'மது'வைரி தந்ததுபோல்

எல்லோர்க்கும் சாந்தி இசையவரம் 'திலங்'கிலிட்டு,

ஜல்ஜல் வலஜி ஜயம்வேண்ட, ஐந்துவகை

மல்லிஎன ரஞ்சனி வீசக் கமாஸ்அதனில்

தில்லானா தந்து நிறைவுற்ற தேன்இசைக்கு

முல்லைவா சல்வயலின் முற்றும் துணைசெய்ய

வெல்லத்தை உண்டவர்போல் மேலுமிது வேண்டுமென

எல்லோரும் கேட்டார் இணைந்து.

 

...அனந்த்

====================

*கமலக் கண்ணாள்=வனஜாக்ஷி; மழுராமன் மாதா = பரசுராமனின்

தாயான ரேணுகா; வல்லி மணாளன் விரும்பிடும் பண்= ஷன்முகப்பிரியா;

தொல்மதுரைத்தாய் = ஜகஜ்'ஜனனி'யான மீனாக்ஷி. 'மது'வைரி=

மது என்னும் அரக்கனைக் கொன்ற மாதவன். இப்பாடல் (12) ஸுமனேச

ரஞ்சனியில் அமைந்தது, மதுகௌன்ஸ் என்றும் சொல்வார்கள்.


On Fri, Feb 21, 2025 at 10:46 PM VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:

Ram Ramakrishnan

unread,
Jul 4, 2026, 8:14:24 AM (2 days ago) Jul 4
to santhav...@googlegroups.com
ஆகா! அற்புதம். சரள வரிசையில் கலிவெண்பா. பகிர்ந்தமைக்கு நன்றி, 
அனந்த் ஜீ. 

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jul 3, 2026, at 23:10, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Swaminathan Sankaran

unread,
Jul 4, 2026, 12:02:45 PM (2 days ago) Jul 4
to santhav...@googlegroups.com
கலி வெண்பா விமர்சனம் மிக அருமை, அனந்த்!

சங்கரன் 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAF%2Bqia1ZZwqGtJJs6As%3DGJENurqvrGk%2BHAtyXakgKyuXmLQybw%40mail.gmail.com.


--
 Swaminathan Sankaran

Subbaier Ramasami

unread,
Jul 4, 2026, 12:33:00 PM (2 days ago) Jul 4
to santhav...@googlegroups.com
பல்லுக்குப்ன்பாட்டுப் பல 


அழகு

Kaviyogi Vedham

unread,
Jul 4, 2026, 8:41:16 PM (2 days ago) Jul 4
to santhav...@googlegroups.com

Govindaraju Arunachalam

unread,
Jul 4, 2026, 9:46:43 PM (2 days ago) Jul 4
to santhav...@googlegroups.com
கடைசி ஈரடிகள் கலக்கல் 


rgds,
 
Dr. A. GOVINDARAJU,
Retired Principal - National Awardee,

இமயவரம்பன்

unread,
Jul 4, 2026, 11:27:58 PM (2 days ago) Jul 4
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
அருமை, திரு. அனந்த்.

பகவான் ஶ்ரீ ரமணரின் அப்பளப்பாட்டு நினைவுக்கு வருகிறது.

> On Jan 7, 2025, at 10:28 PM, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:
>
> ஆறவித்தால்

Lalitha & Suryanarayanan

unread,
Jul 5, 2026, 4:55:56 AM (yesterday) Jul 5
to santhav...@googlegroups.com

கச்சேரி
அதிகாலையில் சுபவேளையில் அழகோடிடும் பாடல்
புதிதாய்நவ விதமாயொரு புகழ்சூடிடப்
 புனைந்தே
இதமாய்மிக எழிலாயிவண் இதயம்களி விதமாய்
மதுவேநிகர் வகையாய்அளி அனந்துக்கிணை அனந்தே.
சிவசூரி.


VETTAI ANANTHANARAYANAN

unread,
Jul 5, 2026, 10:43:40 PM (21 hours ago) Jul 5
to சந்தவசந்தம்
எனது கச்சேரி விமரிசனப் பாடலுக்குப் பின்னூட்டம் அளித்த அன்பர்கள் அனைவருக்கும் என் நன்றி.

அனண்ட்

On Fri, Jul 3, 2026 at 11:10 PM VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:

 

8-8-2005

நேற்று (ஆகஸ்ட் 7) டொராண்டோவில் நடந்த திருமதி கீதா

ராஜசேகரனின் இசைக் கச்சேரியில் அமர்ந்திருக்கையில் முதல்

பாடலைக் கேட்டபின் அந்தப் பாட்டைப் பற்றி

ஒரு வரிஎழுதிய கையோடு பின்வந்த ஒவ்வொரு பாடலுக்கும்

அதே எதுகை கொண்ட வரிகளை ஒவ்வொன்றாகச் சேர்த்துக் கொண்டு

வந்தேன். இறுதி விளைவான கலிவெண்பா பொதுவாக உரைநடையில்

எழுதப்படும் கச்சேரி விமரிசனங்களிலிருந்து வேறுபட்ட வடிவில்

இருப்பதாகத் தோன்றியதால் அதை உங்களுடன் பகிர்ந்து

கொள்ள ஆவல் உண்டாயிற்று. பாட்டுப் பட்டியலை முதலில்

தந்திருக்கிறேன். (பாடகி டி.கே. பட்டம்மாள் அவர்களின் சிஷ்யை;

வயலின்: முல்லைவாசல் சந்திரமௌளி; மிருதங்கம்:

ஸ்கந்தசுப்பிரமணியன்)

... அனந்த்

------------------------------------

பாட்டுப் பட்டியல்:

1. வனஜாக்ஷி - கல்யாணி வர்ணம்; 2. துளசீதள.. -

மாயாமாளவகௌளை;

16. தில்லானா - கமாஸ் 17. மங்களம்

----------------------------------------------------

கல்யாணி யில்*கமலக் கண்ணாளின் வர்ணமுடன்

நல்மாயா மாளவத்தில் நாட்டமுடன் ராகவனைப்

பல்வித மாகப் பகுதாரி யில்புகழ்ந்து

அல்லறுக்கும் இந்தளத்தில் ஆழ்மனத்தைத் தான்தொட்டு

......

Reply all
Reply to author
Forward
0 new messages