Fwd: [MinTamil] தமிழ்மணி - கம்பர் காலம் - தெளிவு வேண்டும்!

180 views
Skip to first unread message

OAGAI NATARAJAN

unread,
Jul 10, 2012, 11:05:53 PM7/10/12
to santhav...@googlegroups.com


---------- Forwarded message ----------
From: Hari Krishnan <hari.har...@gmail.com>
Date: 2012/7/10
Subject: Re: [MinTamil] தமிழ்மணி - கம்பர் காலம் - தெளிவு வேண்டும்!
To: mint...@googlegroups.com




2012/7/9 OAGAI NATARAJAN <enge...@gmail.com>
கம்பரின் காலம் 13ஆம் நூற்றாண்டு அல்லது அதற்கு மேற்பட்டது என்பதற்கான சான்றுகள்:

அ.  ஒட்டக்கூத்தரின் காலம் 12ஆம் நூற்றாண்டு என்பது எவ்வித ஐயத்துக்கும் இடமில்லாமல் கல்வெட்டு சான்றுகளாலும் இலக்கிய சான்றுகளாலும் நிறுவப்பட்டிருக்கிறது. அடுத்தடுத்து வந்த மூன்று சோழ அரசர்களின் காலத்தில் அவர் இருந்திருக்கிறார். இவர் உத்தரகாண்டத்தை எழுதினார் என்பது கம்பன் இவர் காலத்துக்கு முற்பட்டவன் என்பதற்கு சான்றாகக் கொடுக்கப் படுகிறது. ஆனால் அதை ஏற்க முடியாதபடிக்கு பல வரலாற்று அம்சங்கள் தென்படுகின்றன.

ஒட்டக்கூத்தர் ஒரு வீர சைவர். இவர் ஒரு வைணவ காவியத்தின் இறுதிப் பகுதியை உளமாற எழுதுவாரா என்பது முதல் கேள்வி. மறந்தும் புறந்தொழாக் கோட்பாடு சில வைணவர்களுக்கு மட்டுமே உரியதாயினும் வீர சைவர்கள் சைவ வழிபாட்டு மேன்மையில் தீவிரமானவர்கள். வீர சைவ மடத்தை ஏற்படுத்தியவர் ஒட்டக்கூத்தரே. ஒட்டக்கூத்தர் தீவிர சைவர் என்பது மட்டுமல்லாமல் ஒரு வைணவ வெறுப்பாளராகவும் இருந்திருக்கிறார். இதற்குச் சான்றாக அவரது இரண்டு பாடல்களைத் தர முடியும்.

க.தில்லைத் திருமன்றின் முன்றில் சிறுதெய்வத் தொல்லைக் குரும்பு.......
       (குலோத்துங்கன் உலா பாடல் 77-78)
கா. பொன்னில் குயிற்றிப் புறம்பின் குரும்பு அனைத்தும்
       முன்னர் கடல் அகழில் மூழ்கிவைத்த சென்னி........
      (ராராஜன் உலா - பாடல் 65-66)


அன்புள்ள ஓகை,

இதை நீங்கள் கம்பர்-ஒட்டக்கூத்தர் காலக்குறிப்பு இழையிலேயே தொடரலாம்.  மற்ற குழுக்களுக்கும், முக்கியமாக சந்தவசந்தத்துக்கும் ஒரு காப்பி அனுப்பலாம்.  இந்த உரையாடல் பரவலாக நடைபெறும்போதுதான் கவனத்திலிருந்து தப்பும் பல செய்திகள் பலரால் சொல்லப்படலாம்; அல்லது சொல்லப்படும் ஒரு தவறான தகவல் உண்மையை நோக்கி இட்டுச்செல்லும் spark ஒன்றை ஏற்படுத்தலாம்.

கால ஆய்வில் விருப்பமில்லாத என்னை இதற்குள் தலைகுப்புறத் தள்ளிவிடுவீர்களோ என்ற அச்சம்கூட எனக்கு இப்போது ஏற்பட்டிருக்கிறது.:)) தற்போது வேறு சில பணிகளுக்குள்ளும் தலையை விட்டுக்கொண்டிருப்பதாலு்ம், அவையெல்லாம் time-bound பணிகள் என்பதாலும் நான் இந்தத் திறக்கில் செலவழிக்கும் நேரம் பெரிதும் மட்டுப்படும்.  இதுவரையில் படித்திருக்கும் நூல்களையே புதுநோக்கில் (from another perspective) மீண்டும் தொடக்கத்திலிருந்து கடைசிவரையில் தேடி அலச வேண்டியிருக்கும்.  அவ்வளவு நேரம் இப்போதைக்கு என்னிடம் இல்லை.  என்றபோதிலும், நீங்கள் இங்கே சொல்லியிருக்கும் (மேற்கோள் காட்டியிருக்கும் என்பது பொருத்தம் என்றெண்ணுகிறேன்) கருத்துகளைக் குறித்து ஒருசில சொல்ல விரும்புகிறேன்.  பகுதி பகுதியாகப் பிரித்துக்கொள்கிறேன்.  தற்போதைக்கு என் எல்லை, இந்த மடலில் நான் மேற்கோள் காட்டியிருக்கும் உங்கள் மடலின் பகுதி அளவில் நிற்கிறது.


அ.  ஒட்டக்கூத்தரின் காலம் 12ஆம் நூற்றாண்டு என்பது எவ்வித ஐயத்துக்கும் இடமில்லாமல் கல்வெட்டு சான்றுகளாலும் இலக்கிய சான்றுகளாலும் நிறுவப்பட்டிருக்கிறது. அடுத்தடுத்து வந்த மூன்று சோழ அரசர்களின் காலத்தில் அவர் இருந்திருக்கிறார். இவர் உத்தரகாண்டத்தை எழுதினார் என்பது கம்பன் இவர் காலத்துக்கு முற்பட்டவன் என்பதற்கு சான்றாகக் கொடுக்கப் படுகிறது. ஆனால் அதை ஏற்க முடியாதபடிக்கு பல வரலாற்று அம்சங்கள் தென்படுகின்றன.

மூன்று சோழ மன்னர்களின் காலத்தில் வாழ்ந்திருக்கிறார் என்பது மறுக்க முடியாத உண்மை.  மூவருலாவின் முழுப் பாடல் பகுதிகளுக்காக நீங்கள் சிரமப்பட வேண்டியதில்லை.  முழு நூலும் என்னிடத்தில் இருக்கிறது.  ஆரம்ப நாட்களில் மேம்போக்காக படித்து, பிறகு மூலையில் போட்டுவிட்ட நூல்.  இப்போது, இந்த உரையாடல்களின் தேவைக்காகத் திரும்பப் படிக்கத் தொடங்கியிருக்கிறேன்.  (என்னிடம் இருப்பது கலாக்ஷேத்திரம், அடையாறு 1952ம் ஆண்டில் வெளியிட்ட பதிப்பு.  தற்போது பதிப்பிலிருக்கிறதா; புதுப் பதிப்புகள் வந்திருந்தால் கூடுதல் தகவல்கள் தரப்பட்டிருக்கின்றனவா என்பன போன்ற விவரங்கள் எனக்குத் தெரியாது.  இருக்கும் வரையில் சொல்கிறேன்.

  • ஒட்டக்கூத்தர் கைக்கோளர் (செங்குந்தர் அல்லது செங்குந்த முதலியார்) பிரிவைச் சேர்ந்தவர் என்பது அவர் இயற்றிய ஈட்டியெழுபது நூலில் அகச்சான்றாகக் கிடைக்கிறது. 
  • கூத்தர் என்பது இயற்பெயர்.  கூத்த முதலியர் (முதலியார்) என்ற பெயரும் இவருக்கு உண்டு.
  • மலரி என்ற ஊரைச் சேர்ந்தவர் என்பது ‘...மலர்இவரும் கூந்தலார் மாதர் நோக்குஒன்று; மலரிவரும் கூத்தன்தன் வாக்கு’ என்ற தண்டியலங்கார மேற்கோள் செய்யுளால் தெரிய வருகிறது.  மலரி என்ற ஊரைச் சேர்ந்த கூத்தன் என்பதே ‘மலரிவரும் கூத்தன்’ என்று சொல்லப்பட்டுள்ளது.
  • விக்கிரம சோழன் ஒருமுறை, தன்மீது இயற்றப்பட்ட உலாவில் ஒரு கண்ணியை ஒட்டி, ஒரு செய்யுள் பாடும்படி வேண்ட, கேட்டதும் விரைந்து இயற்றினார். விரைந்து பாடுவதில் பந்தயம் வைத்துப் பாடும் இயல்புடையவர் என்ற காரணத்தால் இவருக்கு ஒட்டக்கூத்தர் என்ற பெயர் ஏற்பட்டது.  ஒட்டம் என்றால் பந்தயம் என்று பொருள்.
  • விக்கிரம சோழனுக்கு ஆஸ்தான பண்டிதராகவும்; அவனுடைய மகன் குலோத்துங்கனுக்கு வித்தியா குருவாகவும்; அவனுடைய மகன் இரண்டாம் இராசராசனுக்கும் ஆஸ்தான பண்டிதராகவும் விளங்கினார்.
  • இதனாலேயே இந்த மூன்று சோழ மன்னர்கள் பேரிலும் மூன்று தனித்தனி உலா நூல்களைப் பாடி, அது பின்னர் மூவருலா என்ற பெயரில் ஒன்றாகத் தொகுக்கப்பட்டது.
  • எனவே, ஒட்டக்கூத்தருடைய காலத்தைத் தீர்மானிப்பது எளிது.  மூவருலாவில் கூறப்பட்டுள்ள வம்சாவளியில் வருபவர்கள்:  1) குலோத்துங்க சோழன் I (2) விக்கிரம சோழனும் ஆளுடைய நாச்சியாரும் (3) குலோத்துங்க சோழன் II (4) இராசராச சோழன் II.

குலோத்துங்க சோழன் I எப்படி இதற்குள் வருகிறான் என்றால், ‘இன்னார் பெயரனே’ என்று ஓரிடத்தில் (இடம் நினைவில்லை.  படித்த நினைவிருக்கிறது.  நினைவுக்கு வந்ததும் அல்லது தேடிக் கிடைத்ததும் சொல்கிறேன்) குறிப்பிடுவதால் இந்த வம்சாவளியில் கூடுதலாக ஒரு மன்னன் பெயர் தென்படுகிறது.  விக்கிரம சோழன் பட்டத்துக்கு வந்தது (கிறிஸ்துவ நாள்காட்டிப்படி) கி. பி. 1118 ஜூன் மாதம் 29ம் தேதி என்று விக்கிரம சோழனைப் பற்றிய குறிப்பில் இந்த நூல் சொல்கிறது.  (மூவருலா--கலாக்ஷேத்திரா வெளியீடு, பக்கம் xxiii, 1952ம் ஆண்டு பதிப்பு).  இப்போது காலக்குறிப்பில் ஒரு notch கிடைத்தது என்று கொண்டால், கம்பனை எங்கே நிறுத்துவது என்ற கேள்விக்கு இப்போதைக்கு என்னிடம் விடை இல்லை.   உத்தரகாண்டத்தை ஒட்டக்கூத்தர் இயற்றவில்லை என்று நீங்கள் நிறுவி முடித்ததன்பின் மற்றவற்றைப் பார்த்துக் கொள்ளலாம்.

ஒட்டக்கூத்தர் ஒரு வீர சைவர். இவர் ஒரு வைணவ காவியத்தின் இறுதிப் பகுதியை உளமாற எழுதுவாரா என்பது முதல் கேள்வி. மறந்தும் புறந்தொழாக் கோட்பாடு சில வைணவர்களுக்கு மட்டுமே உரியதாயினும் வீர சைவர்கள் சைவ வழிபாட்டு மேன்மையில் தீவிரமானவர்கள். வீர சைவ மடத்தை ஏற்படுத்தியவர் ஒட்டக்கூத்தரே. ஒட்டக்கூத்தர் தீவிர சைவர் என்பது மட்டுமல்லாமல் ஒரு வைணவ வெறுப்பாளராகவும் இருந்திருக்கிறார்.

கூத்தர் சைவர் என்பது உண்மை.  கூத்தன் என்பது நடராஜப் பெருமானைக் குறிக்கும் பெயர்.  ஆனால் மறந்தும் புறந்தொழாத வீரசைவர்தானா என்பது கேள்விக்குரிய ஒன்று.   என்னிடத்தில் உள்ள பதிப்பில் ஒட்டக்கூத்தர் வரலாறாகச் சொல்லப்பட்டுள்ள இந்தச் சான்றுகளைப் பாருங்கள்.  (அபிதான சிந்தாமணியிலும் ஏராளமான செய்திகள் இருந்தாலும் கட்டுக்கதைகள் மலிந்து கிடப்பதால் அவற்றை இங்கே நான் முற்படுத்தவில்லை.  இந்தச் சான்றுகள், கவியின் வாக்கை அடிப்படையாகக் கொண்டு முடிவெடுக்க இடம்கொடுப்பவை.)

  • குலோத்துங்க சோழன் இவருக்கு அரிசிலாற்றங்கரையில் உள்ள ஓர் ஊரைக் கொடையாக அளித்தான்.  கூத்தனூர் என்ற பெயரால் அது இன்றும் அறியப்படுகிறது.
  • கலைமகளைத் தன்னுடைய இதய பீடத்தில் நிறுத்தியவராதலின், கூத்தனூரில் ஒட்டக்கூத்தர் சரஸ்வதிக்கு ஒரு ஆலயம் ஏற்படுத்தினார்.  ‘ஆற்றங்கரைச் சொற்கிழத்தி வாழியே’ என்ற தக்கயாகப் பரணி (813வது அடி)யால் இதை அறியலாம்.  இந்த ஆலயம் இன்றளவும் நல்ல நிலையில் இருப்பதாகத் தெரிய வருகிறது.
  • பரணியில் தேவியைப் பற்றிப் பாடும்போதல்லாம் யாமள சாஸ்திரக் கருத்துகளைப் பின்பற்றிச் சொல்கின்ற காரணத்தால் இவருக்கு யாமள சாஸ்திரத்திலும் பயிற்சி இருந்ததாகத் தெரிகிறது.  இது, தக்கயாகப் பரணி 136வது அடியின் உரையில் சொல்லப்பட்டுள்ளது.
  • சரஸ்வதி, யாமளை இரண்டு தேவியரையும் ‘மறந்தும் புறந்தொழாத வீரசைவர்’ பாடியதில்கூட வியப்பில்லை.  இவருடைய நூல்களில் ‘சைனம் முதலிய பிறசமயங்களைப் பற்றிய செய்திகளையும், பரிபாஷைகளையும் எடுத்தாளுதலின், அச்சமய நூல்களை அறிந்தவரென்றும் சொல்லலாம்’ என்று மூவருலாவில் காணப்படும் ஒட்டக்கூத்தர் வரலாறு சொல்கிறது.
  • மறந்தும் புறந்தொழாத வீர சைவர் யாமளையைப் பாடியதில் வியப்பில்லை.  சரஸ்வதிக்கு ஆலயம் ஏற்படுத்தியதும், ஜைனம் முதலான பிற சமய நூல்களில் ஆழ்ந்த பயிற்சி அடைந்தவராக இருந்ததும்தான் ஆச்சரியத்துக்குரியன.  ஏனெனில் வேளுக்குடி கிருஷ்ணன் விவரிக்கும் அடிப்படையில் ‘ஸ்ரீவைஷ்ணவத்தில் திருமால் ஒருவன்தான் தெய்வம்.  லக்ஷ்மி தாயார்கூட இரண்டாம்பட்சம்தான்.  ஆனால் திருமாலை அடையவேண்டுமானால், ‘பெரியாரைத் துணைக்கொள்வதுபோல’ லக்ஷ்மியின் துணையோடுதான் அடையவேண்டும் என்பதனாலே, லக்ஷ்மி முக்கியத்துவம் பெறுகிறாள்.  இருந்தாலும் அவளுக்கு இரண்டாம் இடம்தான்’ என்று தெரிகிறது.  இங்கேயும் ஆராதனை மூர்த்தியில் சம இடம் இருப்பதைப்போல் வேளுக்குடியின் விவரிப்பின் அடிப்படையில் தெரியவில்லை.  தெரிந்தவர்கள் சொல்லலாம்.
  • அப்படியானால், ‘மறந்தும் புறந்தொழாத வீர சைவருக்கு’ இந்த லட்சணம் பொருந்துமா, பொருந்தாதா?  யாமளையைப் பாடியதும் பரணியில் துர்கையைப் பாடியதும் இங்கே கேள்விக்குள் வராதவை.  சரஸ்வதி எப்படி ‘மறந்தும் புறந்தொழா வீர சைவருடைய’ இஷ்டதேவதையானாள்?  வைணவர்களே கூட, ‘ஆதாரம் ஸர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மகே’ என்றுதான் துதிக்கிறார்களே ஒழிய, ‘சரஸ்வதியெல்லாம் ஒங்கள மாதிரி ஆளுங்களுக்கு’ என்று என்னுடைய நண்பன் வீட்டிலேயே என்னைப் பார்த்து சொல்லப்பட்ட வார்த்தை.  இன்றளவும் இது நடைமுறையில் வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ கடைப்பிடிக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது.  வீர சைவருக்கு இந்த நெறி பொருந்தாதா?

இவர் ஒரு வைணவ வெறுப்பாளர் என்று எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள் அல்லது சொல்லப்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாமா?  வைணவ வெறுப்பின் காரணமாகத்தான் இவர் உத்தரகாண்டத்தை இயற்றியிருக்க வாய்ப்பில்லை என்று சொல்லப்படுவதால், இந்த முடிபின் அடிப்படை என்ன என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.

சரி.  வைணவ வெறுப்பாளர் என்றே வைத்துக் கொள்ளலாம். ராமனைப் பற்றிப் பாட இவருக்கு உள்ளத் தடை இருந்திருக்கும் என்று இந்த அனுமானத்தின் அடிப்படையில் கட்டியிருப்பது மணற்கோட்டை.  சீட்டுக்கட்டுக் கோட்டை.  மூவருலாவுக்குள்ளேயே, ராமனைப் பற்றி இவர் சொல்லியிருக்கும் பகுதிகளில் சிலவற்றை மாதிரிக்காகக் காட்டுகிறேன்.  இவையெல்லாம் சோழ மன்னனைப் பெருமைப்படுத்துவதற்காக, ஈடு சொல்லிப் புகழ்ந்திருக்கும் மொழிகள்:

பேராப் பெரும்பகை தீரப் பிறவேந்தர்

ஊராக் குலிச விடையூர்ந்தோன்

குலோத்துங்க சோழனுலா, கண்ணி 3 (முன்னோர் பெருமை)

தேவர்களுக்கு ஏற்பட்ட தீராத பகையைத் தீர்ப்பதற்காக, மற்ற மன்னர்கள் யாருமே ஊர்ந்திராத எருதை வாகனமாகக் கொண்டு போர்புரிந்தவன்.  (இக்ஷ்வாகுவின் மகனான புரஞ்சயன் இந்திரனுக்காக யுத்தம் செய்தபோது, இந்திரனே எருதாக வந்து அவனுக்கு வாகனம் ஆனான்.  எருதின் கழுத்தில் (ககுஸ்த்தம்) அமர்ந்து போர்புரிந்ததனால் புரஞ்சயனுக்கு ககுஸ்தன் என்ற பெயரும் உண்டு.  இதுவே தமிழில் காகுத்தன் என்றறியப்படுகிறது.  பின்னால் பரம்பரை பரம்பரையாக, இராமன் உள்ளிட்ட அனைவருமே காகுத்தன் என்ற பெயரால் அறியப்பட்டவர்கள்.

பொருதோர்கள் ஈரைந்தின் ஈரைவர் போர்பண்(டு)

ஒருதேரால் வென்ற உரவோன்

(மேற்படி, கண்ணி 9)

ஈரைந்து தேர்களில் அமர்ந்து வந்த ஈரைந்து பகைவர்களை ஒரே தேராலே எதிர்கொண்டவன்.  ஈரைந்து=பத்து.  தசரதனைக் குறிக்கிறது என்பது வெளிப்படை.


மலைபத்தும் வெட்டும் உருமின் மறவோன்

தலைபத்தும் வெட்டும் சரத்தோன்

(மேற்படி, கண்ணி 10)

இராவணனின் மலைபோன்ற பத்துத் தலைகளையும் இடிபோன்ற சரங்களால் வெட்டித் தள்ளிய ராமன்.  (அல்லது, வஜ்ராயுதத்தால் இந்திரன் மலைகளின் சிறகை அறுத்ததுபோல், சரங்களால் ராவணனின் மலைபோன்ற தலை பத்தும் கத்தரித்தவன் என்றும் சொல்லலாம்.)

ஒருதேரால் ஐயிரண்டு தேரோட்டி உம்பர்

வருதேரால் வான்பகையை மாய்த்தோன்

(இராசராச சோழனுலா, கண்ணி 11)


சிலையால், வழிபடு தெண்டிரையைப் பண்டு

மலையால் வழிபட வைத்தோன்

(மேற்படி, கண்ணி 12)

வில்லின் ஆற்றலால், (அம்புதொடுத்ததுமே தன்னை வந்து) வணங்கி வழிபட்ட கடலை, மலையால் (நிரப்பி அணைகட்ட ஏதுவுவாகுமாறு) தனக்கான வழியை ஏற்பட வைத்தவன்.  ராமன்.

வட்ட மகோததி வேவ ஒருவாளி

விட்ட திருக்கொற்ற விற்காணீர்

(மேற்படி, கண்ணி 84)

அன்று கடல் வற்றுமாறு அம்பு விட்டவனான ராமனுடைய வில்லுக்கு இணையானதான ராஜராஜனுடைய வில்லைப் பாருங்கள்.

முற்றக் கடல் கிடந்து வேவ முனிந்தின்னம்
கொற்றத் தனிவிற் குனியாதோ
(மேற்படி, கண்ணி 310)

அன்று கடலை வற்ற அடித்த வில், இன்று எங்கள் சோழனுடைய வில்லாக வளையாதோ

கண்ணி 309 முதல் 316 வரை சோழனைத் திருமாலாகப் பாவித்து அவனுடைய பஞ்சாயுதங்களும் தனக்குச் செய்ய வேண்டும் உதவிகளைக் கூறுகின்றான்.

சான்றுகள் போதுமா அல்லது இன்னமும் வேண்டுமா?  இன்னமும் நிறைய வைத்திருக்கிறேன்.  மறந்தும் புறந்தொழத வீர சைவர், சோழனைத் திருமாலாகப் பாவிப்பதும், திருமாலுடைய பஞ்சாயுதங்களும் சோழனுடைய ஆயுதங்களாக (ஆவிர்பவித்து) உதவவேண்டும் என்று வேண்டுவதும் எதற்காக?  சிவனுடைய சூலாயுதம் எங்கே போனது?  வைணவ வெறுப்புக்கு என்ன ஆனது?

ஆக, உங்களுடைய மூல ஆய்வாளர் தவறான முடிவுகளைக் கண்டறிந்திருக்கிறார் என்பது இதுவரையில் எடுத்து வைக்கப்பட்ட சான்றுகளால் நிறுவப்படுகிறது.  மற்ற வாதங்களுக்கு அப்புறம் வருகிறேன்.  நேர நெருக்கடியில் உள்ளேன்.

நீங்கள் அனுமதித்தால் இந்த உரையாடல்களைத் தொகுத்து மற்ற குழுக்களுக்கும், குறிப்பாக சந்தவசந்தத்துக்கு, பொதுவா மற்றவற்றுக்கு அனுப்பலாம்.  Let others also give their inputs taking whichever stance they want to. 
 
--
அன்புடன்,
ஹரிகி.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

N. Ganesan

unread,
Jul 18, 2012, 9:54:07 AM7/18/12
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, thamiz...@googlegroups.com, Santhavasantham, Dr. Krishnaswamy Nachimuthu
On Sunday, July 8, 2012 1:26:03 AM UTC-7, S.Vinaitheerthan wrote:


2012/7/8 OAGAI NATARAJAN <enge...@gmail.com>


ஐயம் என்பதே அறிவின் விதை.
 
 நன்மொழி!
 
கம்பனில் இரண்டு பாடல் எடுத்து இரசிக்க, எண்ணிப்பார்க்கத் தந்தால் பயனடையலாம் என்பது என் எளிய கருத்து.
 
 
கம்பன் பாடலை ரசிக்க இரண்டென்ன கணக்கு?
ஒரு பேச்சுக்கு இரண்டு என்று சொன்னேன். ”ரெண்டு சோறு போடு” என்பதுபோல.
எத்தனை வேண்டுமானாலும் இரசிக்க, எண்ணிப்பார்க்கத் தாருங்கள்.
அன்புடன்,
சொ.வினைதீர்த்தான்.
 


 விரிவாக, ஆய்வாளர்களையும், அவர்கள் நூல்களையும் பெயர்கள் கொடுத்து
தினமணி பத்திரிகை கம்பர் காலம் 12-ஆம் நூற்றாண்டு என நிறுவியுள்ளது
தமிழ் இலக்கிய ஆய்வை இளந்தலைமுறையினருக்கு பரந்துபட்ட அளவில்
 எடுத்துச் செல்லும். அவ்வகையில் தினமணி பல மூத்த புலவர்களை எழுத வைப்பது
பாராட்டுக்குரியதாகும். 

தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒட்டக்கூத்தரும், வாணியன் தாதனும்
சமுகத்தாலும், காலத்தாலும் வேறுபட்டவர்கள். கூத்த முதலியார் கைக்கோளர்.
வாணியன் தாதன் என்னும் புலவர் செக்காரச்செட்டியார். 
வாணியன் பாடிட வண்ணான் சுமக்க என்னும் புகழ்பெற்ற காளமேகத்தின்

விருத்தம் தொடங்குவது தாதனின் ஜாதிபற்றியே தொடங்குகிறது.

இரண்டாம் குலோத்துங்கன் காலத்தவர் ஒட்டக்கூத்தர்.
கவிச்சக்கரவர்த்தி கம்பரோ மூன்றாம் குலோத்துங்கன் காலம்.
அக் காலத்தவர் புலவர் வாணியன் தாதன். கம்பரும், வாணியன் தாதனும்
ஒருவருக்கொருவர் ஏசியும், வாழ்த்தியும் பாடிய பாடல்களை
17-ஆம் நூற்றாண்டில் கவிஞர்கள் சரித்திரத் தொகைநூல்கள் கொண்டுள்ளன.

இராமாயணம் ஒரு நாட்டார்கதைப்பாடலாய் இந்தோ-ஐரோப்பிய மக்கள்
வாழும் நாடுகள் எல்லாவற்றிலும் இருக்கிறது. உ-ம்: ருஷியா நாட்டுப்புறப் பாடல்கள்.
இராமாயணத்தின் ஏழாம் காண்டத்தை எழுதிப் பூர்த்திசெய்ய, கம்பன் 6 காண்டங்களோடு
முடித்ததைச் சோழ சக்கரவர்த்தி (குலோத்துங்கன் III) ஆதரவால் பின்னர் எழுதியவர்
வாணியன் தாதன். வாணியன் தாதன் கம்பரை உவச்சர் குலத்தவர்
என்ற செய்தி தருபவர். 

தமிழின் புகழ்மிக்க இரங்கற்பாக்களில் ஒன்று 
வாணியன் தாதன்  கம்பர் இறந்தபோது பாடிய வெண்பா:

இன்றோநம் கம்பன்  இறந்தநாள்! இப்புவியில்
இன்றோஅப் புன்கவிகட்கு  ஏற்றநாள்! - இன்றோதான்
பூமடந்தை வாழப்  புவிமடந்தை வீற்றிருப்ப
நாமடந்தை நூல் வாங்கும்  நாள்! 

e.g:

உவேசா அவர்கள் ஒட்டக்கூத்தர் காலத்தவராக கம்பர் வாழ்ந்தவர்
என்பதற்குச் சான்றுகள் இல்லை என்று எழுதியுள்ளார்கள்.
மேலும், ஒட்டக்கூத்தர் நூல்களில் உத்தர ராமாயணத்தை
ஏற்காதவர். கூத்தரின் நூல்களுக்கும், பிற்காலத்தவர்
வாணியன் தாதன் செய்த உத்தர காண்டத்துக்கும் நடையில்
உள்ள வித்தியாசங்கள் பற்பல என்று புலவர்கள் காட்டியுள்ளனர்.

ஒட்டக்கூத்தர் புதிய அணுகுமுறைகளைத் தமிழில் கொணர்ந்தவர்.
அவர் குறிப்பிடும் பதுமக் கொத்தன் யார்? என்று ஒருவரும்
இணையகாலம் வரை உரை சொல்லவில்லை. Poetry in Stone
விஜயகுமார் தளத்தில் விரிவாக எழுதிய என் கட்டுரையில்
கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் பாடும் தமிழ் தரும் 
பதுமக்கொத்தன் யார்? என விளக்கியுள்ளேன். அது பௌத்த
போதிசத்துவர் - அவலோகிதன். கூத்தர் தம் கவிதைகளில்
அகத்தியன் தமிழைப் போதித்தவர்களில் நடுநாயகமானவர்
என்ற கருத்தைப் பலமுறை விரிவாகப் பேசுபவர் ஒட்டக்கூத்தரே.
அதற்குமுன்னர், சின்னமனூர் செப்பேடு போன்றவற்றில்
வடமொழியில் பாணியர்களின் புரோகிதர் அகத்தியர் 
என்ற அளவில்தான் உள்ளது. 
இறையனார் களவியல் உரையிலும் தமிழிலக்கணம் தந்தவர் அகத்தியர்தான்
என்று விரிவாகக் காணோம். 

இடைக்கால இலக்கியங்களில் தமிழ் இலக்கணம் அகத்தியத்துடன்
ஆரம்பிக்கிறது என்ற கருத்தை நச்சினார்க்கினியர் எழுதுகிறார்.
இந்தக் கருத்தாக்கங்களுக்கு விதை ஊன்றியவர் கூத்தர். 
அவர் இரண்டாம் குலோத்துங்கனைப் பாடியவர். பின்னர்
மூன்றாம் குலோத்துங்கன் காலத்தவரான கம்பர் அகத்தியர்
இலக்கணம் தந்து தமிழை உலகத்துக்கு அளித்தான் என்ற
கதையை வளர்த்தெடுக்கிறார். நச்சினார்க்கினியர் அகத்தியர்
சிஷ்யர் தொல்காப்பியர் என்ற கதையை விரிவாக நமக்குத்
தருகிறார்.

நமக்கு முதலில் கம்பனை மேற்கோள் காட்டுபவர்
வியாக்கியான சக்ரவர்த்தி பெரிவாச்சான் பிள்ளை.
அவர் கம்பனை மேற்கோள் காட்டும் 13-ஆம் நூற்றாண்டின்
முதற்பகுதிக்கு சுமார் 100 ஆண்டு முன்னிருந்தவர் கம்பர்.

2 கவிச்சக்ரவர்த்திகள் கூத்தரும், பின்னர் கம்பரும் 
அகத்தியர் தமிழ் இலக்கணம் தரும் கதைகளை எப்படி
விரிவுபடுத்துகிறார்கள் என்று பின்னர் ஆராய்வோம்.

அகத்தியம் என்னும் இலக்கணம் தமிழுக்கு இருந்ததாய்
சொல்லப்படும் புராணக் கதைகளை வளர்த்ததில்
கூத்தரும் அவருக்குப் பின்னர் கம்பரும் முக்கிய இடம் வகிக்கிறார்கள்.

நா. கணேசன்


N. Ganesan

unread,
Jul 19, 2012, 2:46:45 AM7/19/12
to மின்தமிழ், vall...@googlegroups.com, tiruva...@googlegroups.com, santhav...@googlegroups.com, thami...@googlegroups.com, yavaru...@googlegroups.com, thamiz...@googlegroups.com

On Jul 18, 3:10 pm, Subashini Tremmel <ksubash...@gmail.com> wrote:
> 2012/7/18 N. Ganesan <naa.gane...@gmail.com>


>
>
>
>
>
> > On Sunday, July 8, 2012 1:26:03 AM UTC-7, S.Vinaitheerthan wrote:
>

> >> 2012/7/8 OAGAI NATARAJAN <engee...@gmail.com>


>
> >>>  ஐயம் என்பதே அறிவின் விதை.
>
> >>  நன்மொழி!
>

> >>>> கம்பனில் இரண்டு பாடல் எடுத்து இரசிக்க, எண்ணிப்பார்க்கத் தந்தால் பயனடை**யலாம்

> எந்த நூலில் அல்லது கட்டுரையில் உ.வே.சா அவர்கள் இப்படி
> குறிப்பிட்டிருக்கின்றார்கள் என்று தகவல் தர முடியுமா?
>
> சுபா-

Dear Subha,

I'm writing an essay - 3 stages of the Agastya myth development in
Tamil, and implications
for Kampan's century (= late 12th century). will give detailes there.

3 stages of Agastya's myth in Tamil.

I. As a vedic Rsi Agastya is the southern star, Canopus.
Pl. read my college professor Abhaynkar's article on Agastya
(Canopus):
http://www.iisc.ernet.in/currsci/dec252005/2174.pdf

Because of his southern connection, he gets associated with Mt.
Pothiyil
(Manimekalai. Tevaram - Thennan/Dakshinamurti's disciple there in
Tevaram
(e.g., Cuntarar, etc.,). In this First stage, no association of
Agastya rsi
with Tamil or as the first Tamil grammarian etc., yet

This is the stage where we find numerous Agastya statues in South East
Asia,
and vedic & Sanskrit rsi only. Most South East Asian inscriptions are
in Sanskrit.

II stage. Agastya becomes the family priest of Pandya kings
- kula purohitar. He teaches mantras as well as sweet Tamil to Pandya
kings.
Not yet a grammarian for the Tamil masses. In Pandikkovai and
Chinnamnur
Velvikkudi grant (10th cenntury) Agastya is the family priest of
Pandyas
and sings Tamil (of course, Sanskrit as well) to the Royalty.

This is the time, first in wood, and then in bronze, Nataraja image
was
created by Tamil sculptors, theologians (e.g., Manickavacakar).
In the Chola country, Haradatta Sivacaharya (10th century?) writes
about Nataraja's drum
sounds are Siva sutras and Siva teaching Sanskrit to Panini, the
grmmarian.
This Sanskrit stories eventually make Tamil pulavar-s to find an
equivalent story
for Tamil grammar.

||| stage. Like Siva teaching Sanskrit to Panini, OTTakkuuttar, the
staunch saivaite makes
Agastya the first Tamil grammarian. He sings in important places about
Agastya as the first grammarian of Tamil (takkayaakap paraNi)
And oTTakkuuttar in his songs where he gets awarded the title, Poet
Laureate,
by the Chola emperor, mentions Agastya the Tamil teacher being taught
in Tamil by Gnanasambandhar whom he calls (for the first time in
Tamil)
as an avatar of Murukan, and also by Avalokita Padmapani (whom he says
is
an avatar of Dakshinamurti). And then we see this myth of Agastya as
grmmarian
in PuRapporuL veNpaamaalai. BTW, oTTakkuuttar mentions akattiyam
grammar
in relation with wearing tumpai flowers of puRapporuL themes.

Hence, oTTakkuuttar is the first poet in Tamil who assigns grammar
work
to Agastya, and creates a mythical akattiyam grammar for Tamil.
This myth of Agastya as the author of first grammar for Tamil
was followed by Kampar in his Ramayana in Kulottunga III times more
elaborately foll. oTTakkuuttar's lead.

By 12th century's end, Kampar completely disposes of shramana
reliogions'
contribution to Tamil grammars which earlier oTTakkuutar did not
forget to
mention. Also, the Choza poets, kUttar & later kampar competely leave
out
Pandya royal household's connection to Agastya, as Pandyas were
subdued
by Chozhas, and Pandya realm gets annexed to Chozha country.

A study of Agastya myth development as the grammarian of Tamil leaves
no doubt that Kampar cannot be from 9th century, but belongs to 12th
century.
Dinamani articles, I'm glad, are also pointing to the same date.

The three stages of Agastya myth (1) as a Vedic rsi living in Pothiyil
as disciple of Dakshinamurti (2) Pothiyil Malaya being symbol of
Pandyas becoming the family priest of Pandya royalty and (3) when
Pandyas were subdued by Chozhas, the Chozha country poets
Ottakkuuttar and Kampar developing the story of Agastya as the
Tamil grammarian needs to be taken into account when discussing the
date of Kampar.

Kavichakravartis
(a) JeyamkoNDar - Kulottunga I
(b) Ottakkuutar - Kulottunga II
(c) Kampar - Kulottunga III

N. Ganesan

Siva Siva

unread,
Jul 19, 2012, 7:56:35 AM7/19/12
to santhav...@googlegroups.com



2012/7/19 N. Ganesan <naa.g...@gmail.com>

I presume you refer to this sundarar song:

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=7&Song_idField=70650&padhi=065&startLimit=5&limitPerPage=1&sortBy=&ampsortOrder=DESC
7.65.5
வந்தொர் இந்திரன் வழிபட மகிழ்ந்து
    வான நாடுநீ யாள்கென அருளிச்
சந்தி மூன்றிலுந் தாபர நிறுத்திச்
    சகளி செய்திறைஞ் சகத்தியன் றனக்குச்
சிந்து மாமணி யணிதிருப் பொதியிற்
    சேர்வு நல்கிய செல்வங்கண் டடைந்தேன்
செந்தண் மாமலர்த் திருமகள் மருவுஞ்
    செல்வத் தென்றிரு நின்றியூ ரானே

--

Thirumandiram has a brief section on Agsthyar too.

http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=10&Song_idField=10201
பத்தாம் திருமுறை - இரண்டாம் தந்திரம் - 1. அகத்தியம்
நடுவுநில் லாதிவ் வுலகஞ் சரிந்து
கெடுகின்ற தெம்பெரு மானென்ன ஈசன்
நடுவுள அங்கி அகத்திய நீபோய்
முடுகிய வையத்து முன்னிரென் றானே. 

அங்கி உதயம் வளர்க்கும் அகத்தியன்
அங்கி உதயஞ்செய் மேல்பா லவனொடு
மங்கி உதய வடபால் தவமுனி
எங்கும் வளங்கொள் இலங்கொளி தானே. 

 

Rajagopalan

unread,
Jul 19, 2012, 8:05:06 AM7/19/12
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, thamiz...@googlegroups.com, Santhavasantham, Dr. Krishnaswamy Nachimuthu
 
 தசமுகன் சீதையைப் பர்ணசாலையுடன் தூக்கிச் சென்றது கம்பனின் புனைவே. இந்தப்புனைவை அடிப்படையாகக் கொண்ட சிற்பமொன்று ஹொய்சள மன்னர்களின் தலைநகரான ஹளபீடு என்னுமிடத்திலுள்ள பதினொன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியில் எழுந்த  ஆலயமொன்றில் காணப்படுவதாகவும்; ஆகவே கம்பன் அதற்கு முன்பே வாழ்ந்திருக்க வேண்டும் என்று டாக்டர் எஸ். ராமகிருஷ்ணன் தனது கம்பனும் மில்டனும் என்னும் நூலில் குறிப்பிடுகிறார். கம்பன் காட்டுகிற மும்மூர்த்தித் தத்துவம் 9ம் நூற்றாண்டைச் சேர்ந்ததென்றும் அதற்குச்சான்றாக 9ம் நூற்றாண்டில் உருவானதாக கருதப்படும்  எலிபெண்டா குகையில் எழுந்தருளியிருக்கும் மும்மூர்த்தி வடிவத்தையும் காட்டுகிறார்.
 
அ.ரா
 

N. Ganesan

unread,
Jul 19, 2012, 9:09:51 AM7/19/12
to மின்தமிழ், Santhavasantham, vall...@googlegroups.com, Dr. Krishnaswamy Nachimuthu
On Jul 19, 5:05 am, Rajagopalan <appan.rajagopa...@gmail.com> wrote:
>  தசமுகன் சீதையைப் பர்ணசாலையுடன் தூக்கிச் சென்றது கம்பனின் புனைவே.
> இந்தப்புனைவை அடிப்படையாகக் கொண்ட சிற்பமொன்று ஹொய்சள மன்னர்களின் தலைநகரான
> ஹளபீடு என்னுமிடத்திலுள்ள பதினொன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியில் எழுந்த
> ஆலயமொன்றில் காணப்படுவதாகவும்; ஆகவே கம்பன் அதற்கு முன்பே வாழ்ந்திருக்க
> வேண்டும் என்று டாக்டர் எஸ். ராமகிருஷ்ணன் தனது கம்பனும் மில்டனும் என்னும்
> நூலில் குறிப்பிடுகிறார். கம்பன் காட்டுகிற மும்மூர்த்தித் தத்துவம் 9ம்
> நூற்றாண்டைச் சேர்ந்ததென்றும் அதற்குச்சான்றாக 9ம் நூற்றாண்டில் உருவானதாக
> கருதப்படும்  எலிபெண்டா குகையில் எழுந்தருளியிருக்கும் மும்மூர்த்தி
> வடிவத்தையும் காட்டுகிறார்.
>
> அ.ரா
>

தகவலுக்கு நன்றி, அ. ரா. ஐயா. மறைந்த எஸ். ராமகிருஷ்ணன் (மதுரை) நூலைப்
பார்க்கிறேன்.

(1) ஹளெபீடு (= பழவீடு) 12-ஆம் நூற்றாண்டு அன்றோ?
http://en.wikipedia.org/wiki/Halebid

(2) மும்மூர்த்தித் தத்துவம் பிரம்மா-விஷ்ணு-சிவனா?
கஜபுரி (எலிபெண்டா) சிற்பம் மகேசமூர்த்தி உடையது அல்லவா?
கஜபுரி சிற்பத்தையா கம்பன் பாடுகிறார்? அறிந்துகொள்ள ஆவல்.

--------------------------------

கம்பன் 9-ஆம் நூற்றாண்டு என்று இன்றும் இருப்பதன்
காரணம் ரஸிகமணி டிகேசி அவர்களின் தாக்கம்.
அவரது பிரதம சிஷ்யர் ஜஸ்டிஸ் எஸ். மகராஜன்
நூற்றாண்டுவிழா அண்மையில் நடந்தது. அம்மலரிலும்
என் வாழ்த்துச்செய்தி இடம்பெற்றுள்ளது. இவர்கள் எல்லோரும்
இலக்கியத்தில் பெரியவர்கள். ஆனால், கால ஆராய்ச்சியில்
என்று பார்த்தால், தமிழ்ப் பேராசிரியர்களுக்கே முதலிடம்
கொடுக்கவேண்டியுள்ளது. ரா. ராகவையங்கார், மு. ரா. ஸ்வாமி,
எஸ். வையாபுரிப்பிள்ளை, க. அ. நீலகண்ட சாஸ்திரி (முதலில்
அபிதான சிந்தாமணி பேரா. ஆ. சிங்காரவேலு முதலியார் போல
12-ஆம் நூற்றாண்டின் மத்தியில் என்று எழுதியவர்,
பின்னர் மூன்றாம் குலோத்துங்கன் காலம் என்று மாறினார் க.அ.நீ.)

மரியாதைக்குரிய டிகேசி அவர்களின் பாடல் வர்ணனைககள் அழகானவை.
ஆனால் அவரது முத்தொள்ளாயிரம் 2000 வருஷமாச்சு,
கம்பன் 9-ஆம் நூற்றாண்டு, ... கொள்கைகளை அவரது சிஷ்யர்கள்
பரப்பியதை விட்டுவிடலாம். இவை, மறைமலை அடிகள், அவரது
மாணவர் நாவலர் சோமசுந்தரபாரதி போன்றோரின்
திருவள்ளுவர் பிறப்பு கி.மு. 31, மாணிக்கவாசகர் தேவார முதலிகளுக்கு
முன்னர் 3-ஆம் நூற்றாண்டு போன்றவற்றுடன் ஒப்பிடத் தக்கவை.

நா. கணேசன்

> Visit arajagopalan.blogspot.com


>
>
>
>
>
>
>
> On Wednesday, 18 July 2012 19:24:07 UTC+5:30, N. Ganesan wrote:
> > On Sunday, July 8, 2012 1:26:03 AM UTC-7, S.Vinaitheerthan wrote:
>

> >> 2012/7/8 OAGAI NATARAJAN <engee...@gmail.com>

> >http://www.whatisindia.com/inscriptions/south_indian_inscriptions/vol...


> > இறையனார் களவியல் உரையிலும் தமிழிலக்கணம் தந்தவர் அகத்தியர்தான்
> > என்று விரிவாகக் காணோம்.
>
> > இடைக்கால இலக்கியங்களில்
>

> ...
>
> read more »

N. Ganesan

unread,
Jul 20, 2012, 2:15:35 AM7/20/12
to சந்தவசந்தம், vall...@googlegroups.com, tiruva...@googlegroups.com, yavaru...@googlegroups.com
NG > The three stages of Agastya myth (1) as a Vedic rsi living in

Pothiyil
> as disciple of Dakshinamurti (2) Pothiyil Malaya being symbol of
> Pandyas becoming the family priest of Pandya royalty and (3) when
> Pandyas were subdued by Chozhas, the Chozha country poets
> Ottakkuuttar and Kampar developing the story of Agastya as the
> Tamil grammarian needs to be taken into account when discussing the
> date of Kampar.
> Kavichakravartis
> (a) JeyamkoNDar - Kulottunga I
> (b) Ottakkuutar - Kulottunga II
> (c) Kampar - Kulottunga III
> N. Ganesan

Siva Siva wrote:

> I presume you refer to this sundarar song:

>http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=7&Song_idFie... 7.65.5

> வந்தொர் இந்திரன் வழிபட மகிழ்ந்து
>     வான நாடுநீ யாள்கென அருளிச்
> சந்தி மூன்றிலுந் தாபர நிறுத்திச்
>    சகளி செய்திறைஞ் சகத்தியன் றனக்குச்
> சிந்து மாமணி யணிதிருப் பொதியிற்
>    சேர்வு நல்கிய செல்வங்கண் டடைந்தேன்
> செந்தண் மாமலர்த் திருமகள் மருவுஞ்
>     செல்வத் தென்றிரு நின்றியூ ரானே
--

Yes. In Tevaram times, the myth of Agastya as the author of
first Tamil grammar has not yet developed.

இன்னொரு தேவாரமும் உண்டு.
’அன்று ஆலின் கீழிருந்து அங்கு அறம் சொன்னானை, அகத்தியனை உகப்பானை’
சங்க இலக்கியம் மதுரைக்காஞ்சியிலேயே தென்னன் (தட்சிணாமூர்த்தி)
குறிக்கப்படுகிறார். எனவே, “அங்கு அறம் சொன்னானை, அகத்தியனை உகப்பானை’
என்னும் தேவாரத்தில் “அங்கு” என்பது அகத்திய முனிவரின் பொதியிலில்,
தக்ஷிணாமூர்த்தி உபதேசம் செய்வதைக் குறிக்கிறது.

2 தேவாரப் பாட்டும் இங்கே முன்னர்க் கொடுத்துள்ளேன். பாருங்கள்:
http://poetryinstone.in/wp-content/uploads/2009/01/padmakottar.pdf

> Thirumandiram has a brief section on Agsthyar too.

> http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=10&Song_idFie...


> பத்தாம் திருமுறை - இரண்டாம் தந்திரம் - 1. அகத்தியம்
> நடுவுநில் லாதிவ் வுலகஞ் சரிந்து
> கெடுகின்ற தெம்பெரு மானென்ன ஈசன்
> நடுவுள அங்கி அகத்திய நீபோய்
> முடுகிய வையத்து முன்னிரென் றானே.

> அங்கி உதயம் வளர்க்கும் அகத்தியன்
> அங்கி உதயஞ்செய் மேல்பா லவனொடு
> மங்கி உதய வடபால் தவமுனி
> எங்கும் வளங்கொள் இலங்கொளி தானே.

அகத்தியர் தமிழைச் சிவனிடம் இருந்து கற்றுத்
தமிழ் இலக்கணம் தந்தார் என்றார் என்ற கதையை
முதலில் விரிவாகச் சொல்லுபவர் ஒட்டக்கூத்தர் ஆவார்.
அவர் கைக்கோளர் சமூகம் என்று உவேசா தெளிவாக,
விரிவாக எழுதியுள்ளார். பல நூல்களில் இருக்கிறது.

அகத்தியர் தமிழ் இலக்கணம் சிவனிடம் கற்றுத்
தந்தார் என்னும் கதையை பின்னர் கம்பர் வளர்த்தெடுக்கிறார்.
கம்பர் காலத்தில் வாழ்ந்த வாணியன் தாதன் என்னும்
புலவனின் சமூகம் பற்றிக் கம்பரே பாடலில் சொல்லியுள்ளார்.
கம்பர் காலத்தில் வாழ்ந்த வாழ்ந்த வாணியன்தாதன் சமூகத்தைச்
சார்ந்த பெரியவர் நேரு மந்திரிசபையில் இருந்தார், அதற்கு முன்னம்
பிரிட்டிஷ் அரசாட்சியில் இருந்த மந்திரிசபையில் பதவி வகித்தார்.
சிலம்பு பற்றி நூலெழுதினார். கோவையைச் சார்ந்தவர்.
இந்தியாவின் முதல் நிதியமைச்சர் ஆர். கே. சண்முகம் செட்டி.
கம்பர் வாணியன்தாதனைப் பற்றிப் பாடிய பாடல் இருக்கிறது.
கூவம் மக்கள் கம்பரையும், வாணியப்புலவரையும் ஆதரித்த
பாடல் உள்ளது. கூத்த முதலியார் வாணியன் தாதனுக்கும் கம்பனுக்கும்
முற்பட்ட காலத்தவர்.

கம்பர் பௌத்த சமயம் போன்ற புறச்சமயங்களின் தமிழ் இலக்கணப்
பங்களிப்பு மறைந்த காலத்தில் காவியம் செய்தவர். ஆனால் ஒட்டக் கூத்தர்
காலத்தில் கூட, வீரசோழியம் (11-ஆம் நூற்.) போன்றவற்றின் நூற் செய்திகள்
மறையவில்லை.
வளர்ச்சி பெற்ற அகத்தியர் சிவனிடம் தமிழ் கற்று இலக்கணம் தந்தார்
கதைகளின் வரலாற்றை ஆராயுமிடத்து 12-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி
கம்பர் காலம் என்பது வெள்ளிடைமலை. கம்பனின் அகத்தியர் - தமிழ் இலக்கணம்
போன்ற கதைகளைக் கொண்டுபார்த்தால் 9-ஆம் நூற்றாண்டு நூல்களுகளில்
அக் கருத்தாக்கம் இல்லை, எனவே தியாகவினோதன் என்று அவரே
பாடும் மூன்றாம் குலோத்துங்கன் காலம் என்பது தேற்றம்.

Agastya myths - Siva teaching the Pothiyil saint Tamil grammar and him
teaching to the World
are Choza poets' stories (leaving out Pandyas' connection of Agastya
as the family priest)
and this first occurs in oTTakkuuttar, and later on by Kampar. A study
of Agastya myth development
leads to the conclusion that Kampar is not from 9th century, but
belongs to 12th century.

University publications, e.g., George L. Hart's The Forest Book
(California) use only 12th century,
not 9th. There is lot of evidence Kampar is later than ceyamkoNTaar,
oTTakkuuttar and cEkkizhaar.

நா. கணேசன்

தினமணி:

"கம்பர் காவியம்" என்னும் நூலில் பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை,
கம்பர்
காலம் கி.பி.12ஆம் நூற்றாண்டே என வலியுறுத்தி அதற்குச் சான்றாக ஒரு
தனிப்பாடலைக் காட்டுகிறார்.

"ஆவின் கொடைச்சகரர் ஆயிரத்து நூற்றொழித்துத்
தேவன் திருவழுந்தூர் நன்னாட்டு மூவலூர்ச்
சீரார் குணாதித்தன் சேயமையப் பாடினான்
காரார் காகுந்தன் கதை''.
என்ற பாடலைக்கொண்டு "எண்ணிய சகாப்தம் எண்ணூற்றி ஏழின் மேல்'' என்ற
செய்யுள்
கொள்ளத்தக்கதன்று. "ஆவின் கொடைச்சகரர்" என்ற செய்யுளே கொள்ளத்தக்கது.
கம்பன்
12ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவன் என்பதே தேற்றம்''
(கம்பன் காவியம், பக்.96) என வையாபுரிப்பிள்ளை கூறுகிறார்.

கம்பராமாயணத்தில் மருந்துமலைப் படலத்தில், "அனுமன் சோழநாட்டை ஒத்த வளமான
மூன்று உலகங்களைக் கண்டான்" என்று கம்பர் ஒரு பாடலில் கூறுகிறார்.
"சென்னிநாள் தெரியல் வீரன் தியாகமா விநோதன்''
இப்பாடல் வரியில், "தியாகமாவிநோதன்" யார் என்பதுதான் கம்பர் காலத்தைக்
கணிக்க
உதவும் அகச்சான்று. இங்கு குறிப்பிடப்பெறும் அரசன் மூன்றாம்


குலோத்துங்கன்

ஆவான். 9ஆம் நூற்றாண்டுக் கம்பர், முந்தைய அரசனை எவ்வாறு பாட இயலும்?

மூன்றாம் குலோத்துங்கனுடைய பல்வேறு பட்டப்பெயர்களில் "இவன் பெரிதும்
விரும்பியது தியாகவிநோதன் என்பது. இதனை அவன் காலத்து மக்கள் வழங்கினர்.
தியாகவிநோதபட்டன், தியாகவிநோத மூவேந்த வேளாண், தியாகவிநோதன் என்ற
பெயர்களைக்
கல்வெட்டுகளில் காணலாம். ஊர்களுக்கும் இப்பெயர் இடப்பெற்றிருந்தது.
"தியாகமேகம்" என்று இராஜராஜன் வழங்கப்பெற்றான். "தியாகசமுத்திரம்" என்று
விக்கிரமசோழன் குறிக்கப்பெற்றான். இச்சோழனோ "தியாகவிநோதன்" எனக்
கூறப்பெற்றான். இவ்வரிய - முற்சோழர்க்கு இல்லாத - இவனுக்கே சிறப்பாக
அமைந்த
பெயரைத்தானே கம்பர் பெருமான் "சென்னி நாள் தெரியல் வீரன்
தியாகமாவிநோதன்"
என்று தமது இராமாயணத்துள் கூறி மகிழ்ந்தனர்'' (மா.இராசமாணிக்கனார்,
சோழர்
வரலாறு, பக்.25).

அவர் மற்றொரு சான்றும் காட்டுகிறார். "கம்பர் பெருமான் இக்
குலோத்துங்கசோழன்
அவைப்புலவர் என்பது அறிஞர் ஒப்புக்கொண்டதேயாகும். அவர் இச்சோழனிடம் மனம்
வேறுபட்டவராய் ஓரங்கல்லைக் கோநகராகக்கொண்டு பெருநாட்டை ஆண்ட காகதீய
அரசன்,
முதற் பிரதாப ருத்திரன் (கி.பி.1162 - 1197) என்பவனிடம் சென்று
தங்கியிருந்தார் என்பது உண்மையாயின், "கம்பர் சோழர்க்குப் பகைவனான
காகதீய
அரசனிடம் சென்றிருந்தார் எனக்கோடலே பொருத்தமாகும்'' (பக்.242) எனக்
குறிப்பிடுகிறார். ஓரங்கல் என்பது இன்றைய "வாரங்கல்" என்ற ஊராகும்.
இங்கு
சிலகாலம் வாழ்ந்ததால்தான் கம்பர் மசரதம் (கானல் நீர்), அக்கட போன்ற
தெலுங்குச்
சொற்களைப் பயன்படுத்தியுள்ளார்.

"அவனி முழுதுண்டும் அயிராபத த்துள்
பவனி தொழுவார் படுத்தும் - புவனி
உருத்திரா உன்னுடைய ஓரங்கல் நாட்டில்
குருத்திரா வாழைக் குழாம்''.

எனக் கம்பர் அம்மன்னனைப் பாடியதாகத் "தமிழ் நாவலர் சரிதை" கூறுகிறது.
மூன்றாம்
குலோத்துங்கன் காலத்தில் வாழ்ந்து, அவனோடு போரிட்டவனே பிரதாபருத்திரன்
ஆவான்.
கம்பர் பாடிய பாடல் அகச்சான்றாலும், சோழர் வரலாற்றை ஆராய்ந்த
கே.ஏ.நீலகண்ட
சாஸ்திரியார், மா.இராசமாணிக்கனார், வையாபுரிப்பிள்ளை,இரா.இராகவையங்கார்
ஆய்வு
முடிவுகளாலும் கம்பர் காலம் கி.பி. 12ஆம் நூற்றாண்டே எனத் துணியலாம்.

சபா.அருணாசலம்
நன்றி:- தினமணி


N. Ganesan

unread,
Jul 22, 2012, 9:57:20 AM7/22/12
to Santhavasantham
On Jul 22, 6:52 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:

> 2012/7/22 N. Ganesan <naa.gane...@gmail.com>

> > உவேசா போன்றோர் ஒட்டக்கூத்தர்
> > படைப்பாக உத்தர ராமாயணத்தைக் கொள்வதில்லை.

> உவேசா எங்க சொன்னார்?  எந்த நூலில் அல்லது கட்டுரையில்?

உவேசா எழுதிய ‘பிற்காலப் புலவர்கள்’ படிக்கவும்.
பல பிற்காலப் புலவர்கள் வரலாறுகளை உவேசா தருகிறார்.
உவேசா நூல்நிலைய வெளியீடு.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Jul 22, 2012, 10:04:29 AM7/22/12
to வல்லமை, Santhavasantham
On Jul 22, 6:58 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:

> நான் ஒட்டக்கூத்தர் இயற்றியதாகச் சொல்லப்படும் பதிப்பின் நகலை
> இட்டிருக்கிறேன்.  வாணியன்தாதன் பெயர் தாங்கிய ஒரு பதிப்பைத் தாங்கள் இடலாமே!
>

தமிழ் ஆராய்ச்சிப் பேராசிரியர்கள் உத்தர ராமாயணம் ஒடக்கூத்தர்
எழுதியதன்று
என்ற முடிபை அறிவித்துள்ளனர்.

அதனால், நீங்கள் குறிப்பிடும் பதிப்பு ஆசிரியர் பற்றித் தவறான தகவல் உள்ள
பதிப்பு என்று தெரிகிறது. பதிப்பாளருக்குத் தெரிவிக்க எழுதுவோம்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Jul 22, 2012, 10:34:07 AM7/22/12
to வல்லமை, thamiz...@googlegroups.com, Santhavasantham
> தமிழ் ஆராய்ச்சிப் பேராசிரியர்கள் உத்தர ராமாயணம் ஒடக்கூத்தர்
> எழுதியதன்று என்ற முடிபை அறிவித்துள்ளனர்.


கம்பராமாயணப் பாயிரச் செய்யுள்:
(கம்பர் குலம் பற்றியது)
---------------------

நாரணன் விளையாட் டெல்லாம் நாரத முனிவன் சொல்ல
வாரணக் கவிதைசெய்தா னறிந்துவான் மீகியென்பான்
சீரணி சோழநாட்டுத் திருவழுந் தூர்உவச்சன்
காரணி கொடையான் கம்பன் தமிழினாற் கவிதை செய்தான்.

உத்தர ராமாயணம் இயற்றிய வாணியன் தாதனுக்கும்,
கம்பனுக்கும் பகைமை உண்டு

இராமாவதாரப் பாயிரத்தில் 'உவச்சன்' என்பதற்கு ஒத்து,
வாணிதாதன் பாடிய வசைப்பாட்டும் தமிழ் இலக்கிய வரலாற்றில்
முக்கியமானது. காளி கோவில் பூசகராம் உவச்சருக்கு கைம் மணி
ஒலிப்பித்தல் தொழில்.

வாணியன் தாதன் கம்பர்மேல் சொல்லிய வசைக்கவி.

கட்டளைக் கலித்துறை

கைம்மணிச் சீரன்றிச் சீரறி யாக்கம்ப நாடன்சொன்ன
மும்மணிக் கோவை முதற்சீர் பிழைமுனை வாளெயிற்றுப்
பைம்மணித் துத்திக் கணமணிப் பாந்தட் படம்பிதுங்கச்
செம்மணிக் கண்பதம் பொக்கக்கொல் யானைச் செயதுங்கனே!

வாணியன் தாதன் சோழராசனை இப்பாட்டில் புகழ்ந்துள்ளார்.
இப்பாடல் இணையத்தில் காணோம். எனவே ஈண்டுத்
தரப்பட்டது.

இனி, கம்பர் வாணியப் புலவன் தாதன் மேல் சொல்லிய
வசைக்கவி காண்போம். கம்பர் வாக்கினால் வாணியன்
மரபும், கூத்தர் மரபும் வெவ்வேறானவை என்பது
தெளியலாகும்.

கம்பர் காலம் - மூன்றாம் குலோத்துங்க சோழன் காலம்.
தமிழ் இணையப் பல்கலைக்கழகம் தரும் ஆய்வுத்தகவல்:
http://www.tamilvu.org/courses/degree/a011/a0112/html/a01123p3.htm

நா. கணேசன்

Hari Krishnan

unread,
Jul 22, 2012, 10:40:57 AM7/22/12
to vall...@googlegroups.com, Santhavasantham


2012/7/22 N. Ganesan <naa.g...@gmail.com>

தமிழ் ஆராய்ச்சிப் பேராசிரியர்கள் உத்தர ராமாயணம் ஒடக்கூத்தர்
எழுதியதன்று
என்ற முடிபை அறிவித்துள்ளனர்.

அதனால், நீங்கள் குறிப்பிடும் பதிப்பு ஆசிரியர் பற்றித் தவறான தகவல் உள்ள
பதிப்பு என்று தெரிகிறது. பதிப்பாளருக்குத் தெரிவிக்க எழுதுவோம்.

சரி.  வர்த்தமானன் பதிப்பகத்தார் தவறு செய்துவிட்டார்கள்.  வாணியன்தாதன் பெயரைத் தாங்கி, இத்தனை நூற்றாண்டுகளில் (அதாவது அச்சு வாகனம் வந்தபிறகு) ஒரு பதிப்பு கூடவா வெளியாகவில்லை?  தங்கள் வசம் இல்லாத பதிப்பே கிடையாதே!  (550 மேட்டர உட்டுரலாம்... ஒங்க பதிப்புல உள்ள ஒரயே கூட ஒங்களுக்கு மறந்து போச்சுன்னே வச்சுப்போம்.)  தங்களிடம் உள்ள வாணியன்தாதன் உத்தரகாண்டத்தின் நகலைப் பொதுவில் இடுங்களேன்!  நானும் என்னைத் திருத்திக்கொள்ள ஏதுவாக இருக்கும்.

இன்னமும் திறந்த மனத்தோடுதான் பேசிக்கொண்டிருக்கிறேன்.  தவறெனத் தெரிந்தால் திருத்திக்கொள்வதில் எனக்கு என்றும் வெட்கம் இருந்ததில்லை.  ஓடி ஒளிந்துகொள்ள மாட்டேன் என்று உத்தரவாதம் தருகிறேன்.  Please go ahead and take a scan of your edition showing Vaniyan-thadhan or whoever he is, as the author of Uttarakandam.

Subbaier Ramasami

unread,
Jul 22, 2012, 11:04:53 AM7/22/12
to santhav...@googlegroups.com
வாணியந்தாதன் பெயரில் வெளியான பதிப்பொன்று என்னிடம் இருக்கிறது. ஆனால் அது சென்னையில் இருக்கிறது. 

இலந்தை

2012/7/22 N. Ganesan <naa.g...@gmail.com>

நா. கணேசன்

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta



Hari Krishnan

unread,
Jul 22, 2012, 11:49:04 AM7/22/12
to santhav...@googlegroups.com


2012/7/22 Subbaier Ramasami <elan...@gmail.com>

வாணியந்தாதன் பெயரில் வெளியான பதிப்பொன்று என்னிடம் இருக்கிறது. ஆனால் அது சென்னையில் இருக்கிறது. 

இலந்தை

நன்றி இலந்தை.  But that makes this not only interesting but also complex!  வர்த்தமானன் பதிப்பகத்தின் உரிமையாளர் பேராசிரியர் ஸ்ரீசந்திரனை நான் நன்கறிவேன்.  எனக்கு இரண்டாண்டுகள் தமிழ் நடத்தியவர் அவர்.  கணக்கற்ற நூல்களைப் பதிப்பித்திருக்கிறார்.  ஆசிரியர் பெயரில் தவறு செய்யும் அளவுக்கு அவர் படிக்காதவர் அல்லர் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். 

உங்களிடம் உள்ள பதிப்பு கட்டாயம் பழைய பதிப்பாகத்தான் இருக்கவேண்டும்.  அப்படியானால், அது பேரா ஸ்ரீசந்திரன் பார்வைக்குத் தப்பியிருக்க முடியாது.  (Btw, பேரா. தி வேணுகோபாலனுக்கு சீனியர் பேரா ஸ்ரீசந்திரன்.  இருவரும் ஒரே அறையில் உரையாடிக்கொண்டிருந்தவர்கள்.  உண்மை காண்பதில் ஆசிரியருக்கிருந்த திறந்த மனத்தைத் தாங்கள் அறிவீர்கள்.)

அப்படியாயின், பேரா ஸ்ரீசந்திரன் (இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால், அவரே உத்தரகாண்டத்தின் உரையாசிரியர்) தெரிந்தே தவறு செய்திருக்கிறார் என்றல்லவா ஆகிறது.  அவர் பதிப்பித்திருக்கும் கணக்கற்ற நூல்கள் அவருடைய பரந்துபட்ட தமிழிலக்கியப் புலமைக்குச் சான்றளிக்கின்றனவே!

மாறாக, தமிழ் வர்ச்சுவல் யுனிவர்சிடியில் ஒத்தி ஒட்டும் விளையாட்டை ஆடுபவர்களுடைய கவனத்துக்கு இதைக் கொண்டு வருகிறேன்.  உவேசா எழுதிய என் சரித்திரம், தமிழ் வர்ச்சுவல் யுனிவர்சிடியில் உள்ளது.  இந்த இ-புத்தகத்தின் 673ம் பக்கத்தில் பின்வருமாறு காணப்படுகிறது:

“பெரும்பாலான ஏட்டுச் சுவடிகள் பழுதுபட்டும், குறைந்தும், ஒடிந்தும், இடையிடையே முறிந்தும், மிகவும் சிதிலமுற்றும் காணப்பட்டன.  அவள்றில் எனக்கு வேண்டியதாக ஒன்றும் கிடைக்கவில்லை.  கம்ப ராமாயணம் ஏழு காண்டமும் தனித்தனியே உள்ள ஏழு பிரதிகள் கிடைத்தன.”

மேலே உள்ள பத்தியைப் படித்தால், உவேசாவுக்கு, கம்பராமாயணத்தின் ஏழு காண்டங்களும் கிடைத்தன என்பது போன்ற மயக்கம் ஏற்படுகிறது.  கம்பன் எப்போது ஏழாவது காண்டத்தை எழுதினான் என்ற திகைப்பே ஏற்படுகிறது.  இதை வாசித்ததும் எனக்கேற்பட்ட அதிர்ச்சியில், அச்சுப் புத்தகத்தை எடுத்துப் புரட்டினேன்.  அதே 673ம் பக்கத்தின் ஸ்கேன் நகலை இணைத்திருக்கிறேன்.  ஹைலைட் செய்திருக்கும் பகுதியைப் பார்க்கவும்.  ‘கம்ப’ என்ற சொல் அச்சுப் புத்தகத்தில் இல்லை!  ராமாயணத்தின் ஏழு காண்டங்கள் என்றுதான் அச்சுப் புத்தகத்தில் இருக்கிறது.  ஆனால் இ-புத்தகத்தை நம்பி முடிவுக்கு வந்தால், உத்தரகாண்டத்தைக் கம்பன் தலையில் சுமத்த வேண்டியிருக்கும்!  எனவே ஒத்தி ஒட்டும் ஆட்டம் ஆடுவதற்கு முன்னால் ஒன்றுக்கிரண்டு முறை சரிபார்த்துக் கொள்வது அவசியம்.  (குறிப்பு: தமிழ் வர்ச்சுவல் யுனிவர்சிடியில் Service Not Available என்று வருவதால், சுட்டி தர முடியவில்லை.  இந்தப் பிரச்சினை தீர்ந்ததும், யார்வேண்டுமானாலும் என் சரித்திரத்தின் 673ம் பக்கத்தையும், இங்கே நானிட்டிருக்கும் ஸ்கேன் காப்பியையும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம்.)

கேள்வியை இன்னும் திறந்த மனத்தோடு மாற்றி அமைக்கிறேன்.  ஒரு பதிப்பு ஏற்கெனவே வெளிவந்துவிட்ட நிலையில், ஆசிரியர் பெயரை மாற்றி அமைக்கும் அளவுக்கு நாற்பது-நாற்பத்தைந்தாண்டுகள் தமிழ்ப் பேராசிரியராக இருந்த ஒருவர் சென்றிருக்க வேண்டிய அவசியம் என்னவாக இருக்கலாம்?  For instance, ஆய்வுகளின் முடிவில் குறிப்பிடத் தகுந்த மாற்றுக் கருத்து வலுப்பெற இடம்?
img026.jpg

N. Ganesan

unread,
Jul 22, 2012, 12:12:11 PM7/22/12
to santhav...@googlegroups.com, vall...@googlegroups.com
On Sunday, July 22, 2012 8:04:53 AM UTC-7, Ram wrote:
வாணியந்தாதன் பெயரில் வெளியான பதிப்பொன்று என்னிடம் இருக்கிறது. ஆனால் அது சென்னையில் இருக்கிறது. 

இலந்தை


நன்றி. சென்னை செல்கிறபோது பதிப்பாசிரியர், அச்சகம், அச்சான ஆண்டு தாருங்கள்.

20-ஆம் நூற்றாண்டில் குஜிலி பதிப்புகளில் ஒட்டக்கூத்தரை உத்தர ராமாயணத்துடன்
தொடர்புபடுத்திக் குழப்படி செய்துவிட்டார்கள். கூத்தரை ஆய்ந்தவர்கள் உத்தர ராமாயணம்
அவருடையதன்று என்று தெளிவு கொடுத்துள்ளனர்.

பழைய நூல்கள் ஒன்றிலும் கூத்தர், கம்பர் சமகாலத்தவர், அல்லது கம்பருக்குப் பின் வந்தவர்
கூத்தர் என்று இல்லை. மேலும், உத்தரராமாயணம் எழுதியவர் வாணியன் தாதன் என்ற
சான்று இருக்கிறது.

நா. கணேசன்

 
2012/7/22 N. Ganesan <naa.g...@gmail.com>
On Jul 22, 6:58 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:

> நான் ஒட்டக்கூத்தர் இயற்றியதாகச் சொல்லப்படும் பதிப்பின் நகலை
> இட்டிருக்கிறேன்.  வாணியன்தாதன் பெயர் தாங்கிய ஒரு பதிப்பைத் தாங்கள் இடலாமே!
>

தமிழ் ஆராய்ச்சிப் பேராசிரியர்கள் உத்தர ராமாயணம் ஒடக்கூத்தர்
எழுதியதன்று
என்ற முடிபை அறிவித்துள்ளனர்.

அதனால், நீங்கள் குறிப்பிடும் பதிப்பு ஆசிரியர் பற்றித் தவறான தகவல் உள்ள
பதிப்பு என்று தெரிகிறது. பதிப்பாளருக்குத் தெரிவிக்க எழுதுவோம்.

நா. கணேசன்

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhavasantham@googlegroups.com

இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,

இராம்குமார் முகவை

unread,
Jul 22, 2012, 1:47:32 PM7/22/12
to santhav...@googlegroups.com
குறுக்கீட்டிற்கு மன்னிக்கவும்.

இந்த இட்டீடு நுட்பமான தகவல்கள் துணையோடு சிறப்பான இழையாக உருப்பெற்று வருகிறது. நன்றி.

கம்பனின் காலம் மற்றும் சமயம் குறித்து சிங்கையில் இலக்கிய வட்டம் கூட்டம் ஒன்றில் பட்ட ஆய்வாளர்/பேராசிரியர் ஒருவர் பல சான்றுகளை முன்வைத்து 4 பகுதிகளாக சொற்பொழிவாற்றினார். புகைப்படங்கள் இணைத்த அருமையான பரத்தீடு (presentation) வழியான செறிவான பேச்சாக இருந்தது. திரு அ.கி. வரதராஜன் அவர்கள் மனது வைத்தால் மேல் விவரங்கள் இங்கே கிடைக்கலாம்.

நன்றி.
முகவை இராம்குமார்.

2012/7/22 N. Ganesan <naa.g...@gmail.com>
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com

இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,

Pas Pasupathy

unread,
Jul 22, 2012, 2:10:33 PM7/22/12
to santhav...@googlegroups.com
இதைப் பற்றி முன்பு ஒரு முறை சந்த வசந்தத்தில் பேசிய நினைவு.
 
செங்குந்தர் பிரபந்தத் திரட்டுக்கு மு.இராகவ ஐயங்கார் எழுதிய ஓர் ஆராய்ச்சி முன்னுரையில்
அவர் வாணியந்தாதனைப் பற்றி எழுதி இருக்கிறார்.  “நான் கண்ட ஒட்டக்கூத்தர்” என்ற  ஒரு நூலிலிருந்து நான் சில தகவல்களை  இட்ட நினைவு.
 
ச.வ -வில் தேடினால் கிடைக்கும்.

2012/7/22 இராம்குமார் முகவை <mugav...@gmail.com>



--

RAJAGOPALAN APPAN

unread,
Jul 24, 2012, 2:39:29 AM7/24/12
to santhav...@googlegroups.com

வாணியன் தாதன் கம்பனின் சம காலத்தவன். சொக்கர் குலத்துதித்தவன். சோழனின் அபிமானத்துக்குரியவனாக இருந்தவன். கம்பன் இறந்தபோது அவன் பாடியதாகக் கருதப்படும் ஒரு பாடல் மு. ராகவையங்காரின் பெருந்தொகையில் காணக்கிடைக்கிறது.

இன்றோநங் கம்ப னிறந்தநா ளிப்புவியில்
இன்றோவப் புன்கவிகட் கேற்றநாள் - இன்றோதான்
பூமடந்தை வாழப் புவிமடந்தை வீற்றிருப்ப
நாமடந்தை நூல்வாங்கு நாள்.

கம்பனோடு வாணியன்தாதன் பகைமைகொண்டிருந்தவன் என்பதும்

கைம்மணிச் சீரன்றிச் சீரறி யாக்கம்ப நாடன்சொன்ன

மும்மணி கோவை முதற்சீர் பிழைமுனை வாளெயிற்றுப்


பைம்மணித் துத்திக் கணமணிப் பாந்தட் படம்பிதுங்கச்

செம்மணிக் கண்பிதுங் கப்பதம் பேர்த்த செயதுங்கனே என்ற பாடலால் சுட்டிக்காட்டப் படுகிறது.

அ.ரா

Visit arajagopalan.blogspot.com

2012/7/22 Pas Pasupathy <pas.pa...@gmail.com>

RAJAGOPALAN APPAN

unread,
Jul 24, 2012, 3:07:48 AM7/24/12
to santhav...@googlegroups.com

வாணிதாதன் உத்தர காண்டம் எழுதி அபயன் சபையில் அரங்கேற்றியதை கூறும் சோழமண்டலசதகச் செய்யுள்:

பூணிலாவுங் கம்பன் நலம்பொலியும் தமிழாற் பொலிவெய்தி
காணுமாறு காண்டமுறுங் கதையிற் பெரிய கதையென்னும்
தாணிலாவுங் கழலபயன் சபையிற் பயிலுத் தரகாண்டம்
வாணிதாத னரங்கேற்ற வைத்தார் சோழ மண்டலமே.

அ.ரா
Visit arajagopalan.blogspot.com

2012/7/24 RAJAGOPALAN APPAN <appan.ra...@gmail.com>

RAJAGOPALAN APPAN

unread,
Jul 24, 2012, 7:34:27 AM7/24/12
to santhav...@googlegroups.com
//மேலே உள்ள பத்தியைப் படித்தால், உவேசாவுக்கு, கம்பராமாயணத்தின் ஏழு காண்டங்களும் கிடைத்தன என்பது போன்ற மயக்கம் ஏற்படுகிறது. கம்பன் எப்போது ஏழாவது காண்டத்தை எழுதினான் என்ற திகைப்பே ஏற்படுகிறது. இதை வாசித்ததும் எனக்கேற்பட்ட அதிர்ச்சியில், அச்சுப் புத்தகத்தை எடுத்துப் புரட்டினேன். அதே 673ம் பக்கத்தின் ஸ்கேன் நகலை இணைத்திருக்கிறேன். ஹைலைட் செய்திருக்கும் பகுதியைப் பார்க்கவும். ‘கம்ப’ என்ற சொல் அச்சுப் புத்தகத்தில் இல்லை! ராமாயணத்தின் ஏழு காண்டங்கள் என்றுதான் அச்சுப் புத்தகத்தில் இருக்கிறது. ஆனால் இ-புத்தகத்தை நம்பி முடிவுக்கு வந்தால், உத்தரகாண்டத்தைக் கம்பன் தலையில் சுமத்த வேண்டியிருக்கும்!//
 
 
 
 
அரிகேசரி என்பவர் ரகுவம்சம் என்றொரு காவியம் செய்திருப்பதாகவும் அந்தக்காவியத்தின் தொடக்கத்தில்,

"பொற்றாமரையாள் ஒழியாது பொலியு மார்பன்
எற்றாங்கு மேனி ரகுராம சரிதையாவும்
கற்றார் கலியில் பெரிதாத் தமிழ்க் கம்பநாடன்
உற்றாங்கு உரைத்தான் உரையாதன ஓதுகிற்பாம்"

என்று உரைத்து, உத்தரகாண்டக் கதையை மாத்திரம் பாடியிருப்பதாகவும் தெரிகிறது. 'கம்பநாடன்... உரையாதன ஓதுகிற்பாம்' என்றதிலிருந்து கம்பன் உத்தரகாண்டம் பாடவில்லை என்றே ஆகிறது. தாங்கள் சுட்டிக்காட்டியபடி உ.வே.சா ஏழு காண்டங்கள் என்று குறிப்பிட்டிருப்பது (வாணிதாதனின் உத்தரகாண்டமும் சேர்ந்ததாக இருக்கக் கூடுமோ?) விளங்கவில்லை.

அரிகேசரியின் காலத்துக்குமுன் ஒட்டக்கூத்தர் இருந்திருந்து உத்தரகாண்டம் பாடியிருந்திருப்பாரேயானால், தானும் உத்தரகாண்டம் பாடுவதற்கு ஒட்டக்கூத்தரின் உத்தரகாண்டக் குறைபாடுகளைச் சுட்டி எழுதியிருப்பார். எனவே ஒட்டக்கூத்தர் இவர் காலத்துக்கும் பின்னவர் என்றே கருதவேண்டியிருக்கிறது.

அ.ரா
2012/7/22 Hari Krishnan <hari.har...@gmail.com>
--

Hari Krishnan

unread,
Jul 24, 2012, 8:14:12 AM7/24/12
to santhav...@googlegroups.com


2012/7/24 RAJAGOPALAN APPAN <appan.ra...@gmail.com>

அரிகேசரி என்பவர் ரகுவம்சம் என்றொரு காவியம் செய்திருப்பதாகவும் அந்தக்காவியத்தின் தொடக்கத்தில்,

ரகுவம்சம் என்றால் காளிதாசனுடைய ரகுவம்சத்தின் வழிநூலா?  அப்படியானால் காளிதாசன் செய்திருப்பது, விவஸ்வான், மனு என்ற இருவரை லேசாகத் தொட்டு, திலீபனில் தொடங்கி, ராமனுக்கு இருபத்துநான்கு தலைமுறைகள் பின்னால் வரையிலும் நடப்பதல்லவா?  திலீபனில் தொடங்கி, அக்னிவர்ணனில் முடியும் காதையல்லவா அது!  ராமகாதையே மிகமிகச் சுருக்கமாக, ஒன்பதாம் ஸர்க்கதத்திலிருந்து பதினைந்தாம் ஸர்க்கம் வரையிலல்லவா சொல்லப்படுகிறது!  இவ்வளவு சிறிய இடத்தில் உத்தரகாண்ட முழுமையை (அட ராமாயண முழுமையை விட்டுவிடுவோம்) எப்படித் திணிக்க முடியும்.  

ரகுவம்சத்தில் கதை ஓடும் ஓட்டத்தைப் பார்த்தால் மூச்சிறைக்கும்.  ஆனாலும், காளிதாசன் செய்துள்ள மிக நுட்பமான மாறுதல்கள், கம்பன் செய்துள்ள மாறுதல்களுக்குக் கருவாக அமைந்திருப்பதைப் பார்த்திருக்கிறேன்.

நீங்கள் சொல்லும் ரகு வம்சம் காளிதாசனுடைய வழிநூலா அல்லது தனிநூலா என்பதைத் தெரிவித்தால் நன்றியுடையவனாயிருப்பேன்.

Hari Krishnan

unread,
Jul 24, 2012, 8:18:33 AM7/24/12
to santhav...@googlegroups.com


2012/7/24 RAJAGOPALAN APPAN <appan.ra...@gmail.com>

உ.வே.சா ஏழு காண்டங்கள் என்று குறிப்பிட்டிருப்பது (வாணிதாதனின் உத்தரகாண்டமும் சேர்ந்ததாக இருக்கக் கூடுமோ?) விளங்கவில்லை.

ஆமாம்.  அப்படித்தான் பொருள்படுகிறது.  ஆனால், உத்தரகாண்டத்தை இயற்றியவர் இன்னார் என்று அவர் இந்த இடத்தில் குறிப்பிடவில்லை.

அன்றைக்கு கண்ணாமூச்சி ஆடிய பக்கம் இன்று சிக்கிவிட்டது.  இங்கே: 


சேலம் என்ற தலைப்புக்கு அடுத்த பத்தியைக் காணவும்.

இது காப்பி பேஸ்ட்: 

அவற்றில் எனக்கு வேண்டியதாக ஒன்றும்

கிடைக்கவில்லை. கம்ப ராமாயணம் ஏழு காண்டமும் தனித் தனியே உள்ள
ஏழு பிரதிகள் கிடைத்தன. 

நான் இணைத்த அச்சுப் புத்தகத்தின் ஸ்கேன் வடிவத்தைப் பார்க்கவும்.  ‘கம்ப’ என்ற சொல் இல்லை.  இங்கே உள்ளதன் அடிப்படையில் பொருள்கொண்டால், விபரீதமான ஆய்வு முடிவுகள்தான் பெறப்படும்!

N. Ganesan

unread,
Jul 24, 2012, 8:46:44 AM7/24/12
to சந்தவசந்தம்

On Jul 23, 11:39 pm, RAJAGOPALAN APPAN <appan.rajagopa...@gmail.com>
wrote:


> வாணியன் தாதன் கம்பனின் சம காலத்தவன். சொக்கர் குலத்துதித்தவன். சோழனின்
> அபிமானத்துக்குரியவனாக இருந்தவன். கம்பன் இறந்தபோது அவன் பாடியதாகக்
> கருதப்படும் ஒரு பாடல் மு. ராகவையங்காரின் பெருந்தொகையில் காணக்கிடைக்கிறது.
>
> இன்றோநங் கம்ப னிறந்தநா ளிப்புவியில்
> இன்றோவப் புன்கவிகட் கேற்றநாள் - இன்றோதான்
> பூமடந்தை வாழப் புவிமடந்தை வீற்றிருப்ப
> நாமடந்தை நூல்வாங்கு நாள்.
>
> கம்பனோடு வாணியன்தாதன் பகைமைகொண்டிருந்தவன் என்பதும்
>
> கைம்மணிச் சீரன்றிச் சீரறி யாக்கம்ப நாடன்சொன்ன
> மும்மணி கோவை முதற்சீர் பிழைமுனை வாளெயிற்றுப்
> பைம்மணித் துத்திக் கணமணிப் பாந்தட் படம்பிதுங்கச்
> செம்மணிக் கண்பிதுங் கப்பதம் பேர்த்த செயதுங்கனே என்ற பாடலால் சுட்டிக்காட்டப்
> படுகிறது.
>
> அ.ரா
>

அன்புள்ள அ. ரா.,

நன்றி. இவ்விழையில் முன்பும் இப்பாடல்களைக் கொடுத்துள்ளேன்.

நா, கணேசன்

> Visit arajagopalan.blogspot.com
>
> 2012/7/22 Pas Pasupathy <pas.pasupa...@gmail.com>


>
>
>
>
>
>
>
> > இதைப் பற்றி முன்பு ஒரு முறை சந்த வசந்தத்தில் பேசிய நினைவு.
>
> > செங்குந்தர் பிரபந்தத் திரட்டுக்கு மு.இராகவ ஐயங்கார் எழுதிய ஓர் ஆராய்ச்சி
> > முன்னுரையில்
> > அவர் வாணியந்தாதனைப் பற்றி எழுதி இருக்கிறார்.  “நான் கண்ட ஒட்டக்கூத்தர்”
> > என்ற  ஒரு நூலிலிருந்து நான் சில தகவல்களை  இட்ட நினைவு.
>
> > ச.வ -வில் தேடினால் கிடைக்கும்.
>

> > 2012/7/22 இராம்குமார் முகவை <mugavai...@gmail.com>


>
> >> குறுக்கீட்டிற்கு மன்னிக்கவும்.
>
> >> இந்த இட்டீடு நுட்பமான தகவல்கள் துணையோடு சிறப்பான இழையாக உருப்பெற்று
> >> வருகிறது. நன்றி.
>
> >> கம்பனின் காலம் மற்றும் சமயம் குறித்து சிங்கையில் இலக்கிய வட்டம் கூட்டம்
> >> ஒன்றில் பட்ட ஆய்வாளர்/பேராசிரியர் ஒருவர் பல சான்றுகளை முன்வைத்து 4
> >> பகுதிகளாக சொற்பொழிவாற்றினார். புகைப்படங்கள் இணைத்த அருமையான பரத்தீடு
> >> (presentation) வழியான செறிவான பேச்சாக இருந்தது. திரு அ.கி. வரதராஜன் அவர்கள்
> >> மனது வைத்தால் மேல் விவரங்கள் இங்கே கிடைக்கலாம்.
>
> >> நன்றி.
> >> முகவை இராம்குமார்.
>

> >> 2012/7/22 N. Ganesan <naa.gane...@gmail.com>


>
> >>> On Sunday, July 22, 2012 8:04:53 AM UTC-7, Ram wrote:
>
> >>>> வாணியந்தாதன் பெயரில் வெளியான பதிப்பொன்று என்னிடம் இருக்கிறது. ஆனால் அது
> >>>> சென்னையில் இருக்கிறது.
>
> >>>> இலந்தை
>
> >>> நன்றி. சென்னை செல்கிறபோது பதிப்பாசிரியர், அச்சகம், அச்சான ஆண்டு
> >>> தாருங்கள்.
>
> >>> 20-ஆம் நூற்றாண்டில் குஜிலி பதிப்புகளில் ஒட்டக்கூத்தரை உத்தர
> >>> ராமாயணத்துடன்
> >>> தொடர்புபடுத்திக் குழப்படி செய்துவிட்டார்கள். கூத்தரை ஆய்ந்தவர்கள் உத்தர
> >>> ராமாயணம்
> >>> அவருடையதன்று என்று தெளிவு கொடுத்துள்ளனர்.
>
> >>> பழைய நூல்கள் ஒன்றிலும் கூத்தர், கம்பர் சமகாலத்தவர், அல்லது கம்பருக்குப்
> >>> பின் வந்தவர்
> >>> கூத்தர் என்று இல்லை. மேலும், உத்தரராமாயணம் எழுதியவர் வாணியன் தாதன் என்ற
> >>> சான்று இருக்கிறது.
>
> >>> நா. கணேசன்
>

> >>>> 2012/7/22 N. Ganesan <naa.gane...@gmail.com>


>
> >>>>> On Jul 22, 6:58 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
>
> >>>>> > நான் ஒட்டக்கூத்தர் இயற்றியதாகச் சொல்லப்படும் பதிப்பின் நகலை
> >>>>> > இட்டிருக்கிறேன்.  வாணியன்தாதன் பெயர் தாங்கிய ஒரு பதிப்பைத் தாங்கள்
> >>>>> இடலாமே!
>
> >>>>> தமிழ் ஆராய்ச்சிப் பேராசிரியர்கள் உத்தர ராமாயணம் ஒடக்கூத்தர்
> >>>>> எழுதியதன்று
> >>>>> என்ற முடிபை அறிவித்துள்ளனர்.
>
> >>>>> அதனால், நீங்கள் குறிப்பிடும் பதிப்பு ஆசிரியர் பற்றித் தவறான தகவல் உள்ள
> >>>>> பதிப்பு என்று தெரிகிறது. பதிப்பாளருக்குத் தெரிவிக்க எழுதுவோம்.
>
> >>>>> நா. கணேசன்
>
> >>>>> --
> >>>>> நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப்
> >>>>> பெறுகிறீர்கள்:

> >>>>> இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhavasantham@googlegroups.**com<santhav...@googlegroups.com>


> >>>>> இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,

> >>>>> santhavasantham-unsubscribe@**googlegroups.com<santhavasantham-unsubscribe@ googlegroups.com>


> >>>>> .
> >>>>> இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:

> >>>>>http://groups.google.com/**group/santhavasantham?hl=ta<http://groups.google.com/group/santhavasantham?hl=ta>

> ...
>
> read more »

N. Ganesan

unread,
Jul 24, 2012, 9:13:23 AM7/24/12
to சந்தவசந்தம், vall...@googlegroups.com
On Jul 24, 12:07 am, RAJAGOPALAN APPAN <appan.rajagopa...@gmail.com>
wrote:

> வாணிதாதன் உத்தர காண்டம் எழுதி அபயன் சபையில் அரங்கேற்றியதை கூறும்
> சோழமண்டலசதகச் செய்யுள்:
>
> பூணிலாவுங் கம்பன் நலம்பொலியும் தமிழாற் பொலிவெய்தி
> காணுமாறு காண்டமுறுங் கதையிற் பெரிய கதையென்னும்
> தாணிலாவுங் கழலபயன் சபையிற் பயிலுத் தரகாண்டம்
> வாணிதாத னரங்கேற்ற வைத்தார் சோழ மண்டலமே.
>
> அ.ரா
> Visit arajagopalan.blogspot.com
>

வாணிகன் என்பது வாணி எனவும் வரும். வட இந்தியாவிலும் இம்மரபு
உண்டு. உதாரணம்: அத்தர் வாணிகன் - அத்வாணி, முத்து வாணிகன் -
மோத்வாணி, ...
தமிழில் வாணியன் என்றால் எள்ளைச் செக்கில் இட்டு ஆட்டும் தொழிலுடைய
செக்காரச் செட்டி மக்கள் சமூகப்பெயர். காளமேகம் செய்யுள் இவ் வாணியன்
என்னும் சொல்கொண்டு தொடங்குகிறது. கோவையில் இருந்து வாணியச்
செட்டியார் ஆர். கே. சண்முகம் இந்தியாவின் முதல் நிதியமைச்சர் ஆனார்
(நேரு காலத்தில்).

வாணியன் - செக்காட்டும் போது எருதுகள் வட்டத்தில் வளைய வரும்.
திராவிட பாஷைகளில் சொல்லாக்கத்திற்கு அடிப்படை விதி ஒன்று
உண்டு: சொற்றொகுதிகளில் -ள்-/-ண்-/-ட்- இரண்டாம் எழுத்தாய் இருந்து
தொடர்புடைய சொற்களைத் தரும். 50 (அ) 60 தொகுதிகள் உதாரணங்களாய்
காட்டியிருப்பேன். (1) விள்ளு-/விண்ணு-/விட்டு (விண்ணு > விஷ்ணுஉ-ம்:
விட்டுசித்தன்).
(2) அள்ளை-/அண்டை-/அட்டை .. இன்ன பிற.

வள்-(வளை-)/வடம்:வட்டம்/வண்- வளை- என்னும் அடிப்படைப் பொருளுடையது.
வட என்னும் யால்/ஆல மரப்பெயர் தமிழில் இருந்து அம்மர விழுதுகளால் வடசொல்
ஆனதும் காண்க. இந்தியாவின் தேசிய மரம் - இதன் தாவரவியல் பெயர்: ficus
indica.
எனவே, யால்/ஆல் இதன் பொருளும் விழுதால்தான்.

செக்கை எருதுகளைப் பூட்டி வளையவிட்டு எண்ணெய் ஆட்டுதலால்
(வளை- >) வாணி/வாணியன் என்ற தொழிற்பெயர் செக்கார்களுக்கு ஏற்பட்டது.
எள்ளில் எண்ணெய் ஆட்டும் சமூகப் பெயரைக் குறிப்பிட்டுத் தாதன்
பேரில் கம்பன் சொன்ன வசைக்கவியும் உள்ளது. சோழமண்டல சதகம்
வாணிதாதன் பாடியதாக உத்தர ராமாயணத்தைத் தருகிறது.

பழைய இலக்கியங்கள் ஒட்டக்கூத்தருக்கும், கம்பருக்கும் சம காலம்
என்றோ, பகைமை என்றோ சான்று காட்டுவதில்லை. எல்லாம்
சுமார் 100 ஆண்டுகளாய் ஏற்பட்ட குழப்பம். இதில் பெரிய பங்கு
வீராசாமி செட்டியாருக்குண்டு. ஆனால், அவர் எழுதியது நாவல்
போன்ற கதை. அதை நம்பி இலக்கிய வரலாறு எழுத முடியாது.

ஒட்டக்கூத்தர் கம்பருக்கு முன்னர் வாழ்ந்தவர். இருவருக்கும் பகைமை
இருந்ததில்லை. ஆனால், வாணி தாதனைக் கம்பர் பாடும் வசைக்கவியும்,
வாணிதாதன் ‘கைம்மணிச் சீர்’ என்று உவச்சர் குலமானாகிய கம்பரைப்
பாடும் வசைக்கவியும் உள்ளது. ஆனால், கம்பன் இறந்த திவச நாளில்
கம்பனை நினைந்து வாணியன் தாதன் சொன்ன இரங்கற் பா தமிழின்
மிகச் சிறந்த நினைவஞ்சலிப் பாடலாக விளங்குகிறது. ‘இன்றோநம்
கம்பன் இறந்தநாள்!’ எனத் தொடங்கும் வெண்பா. அதற்கு விளக்கம்
டிகேசி சொல்லியுள்ளார் (இப்போதைய கம்பன் உருவ ஓவியம்,
டிகேசியின் நண்பர், சீடர் சா. கணேசன் டிகேசியைப் பார்த்துச்
செய்தது. மீசை பாருங்கள். திருவழுந்தூர் சிற்பமும் உதவியது.)

நா. கணேசன்

> 2012/7/24 RAJAGOPALAN APPAN <appan.rajagopa...@gmail.com>


>
>
>
>
>
>
>
> > வாணியன் தாதன் கம்பனின் சம காலத்தவன். சொக்கர் குலத்துதித்தவன். சோழனின்
> > அபிமானத்துக்குரியவனாக இருந்தவன். கம்பன் இறந்தபோது அவன் பாடியதாகக்
> > கருதப்படும் ஒரு பாடல் மு. ராகவையங்காரின் பெருந்தொகையில் காணக்கிடைக்கிறது.
>
> > இன்றோநங் கம்ப னிறந்தநா ளிப்புவியில்
> > இன்றோவப் புன்கவிகட் கேற்றநாள் - இன்றோதான்
> > பூமடந்தை வாழப் புவிமடந்தை வீற்றிருப்ப
> > நாமடந்தை நூல்வாங்கு நாள்.
>
> > கம்பனோடு வாணியன்தாதன் பகைமைகொண்டிருந்தவன் என்பதும்
>
> > கைம்மணிச் சீரன்றிச் சீரறி யாக்கம்ப நாடன்சொன்ன
> > மும்மணி கோவை முதற்சீர் பிழைமுனை வாளெயிற்றுப்
>
> > பைம்மணித் துத்திக் கணமணிப் பாந்தட் படம்பிதுங்கச்
> > செம்மணிக் கண்பிதுங் கப்பதம் பேர்த்த செயதுங்கனே என்ற பாடலால்
> > சுட்டிக்காட்டப் படுகிறது.
>
> > அ.ரா
>
> > Visit arajagopalan.blogspot.com
>

> > 2012/7/22 Pas Pasupathy <pas.pasupa...@gmail.com>


>
> >> இதைப் பற்றி முன்பு ஒரு முறை சந்த வசந்தத்தில் பேசிய நினைவு.
>
> >> செங்குந்தர் பிரபந்தத் திரட்டுக்கு மு.இராகவ ஐயங்கார் எழுதிய ஓர் ஆராய்ச்சி
> >> முன்னுரையில்
> >> அவர் வாணியந்தாதனைப் பற்றி எழுதி இருக்கிறார்.  “நான் கண்ட ஒட்டக்கூத்தர்”
> >> என்ற  ஒரு நூலிலிருந்து நான் சில தகவல்களை  இட்ட நினைவு.
>
> >> ச.வ -வில் தேடினால் கிடைக்கும்.
>

> >> 2012/7/22 இராம்குமார் முகவை <mugavai...@gmail.com>


>
> >>> குறுக்கீட்டிற்கு மன்னிக்கவும்.
>
> >>> இந்த இட்டீடு நுட்பமான தகவல்கள் துணையோடு சிறப்பான இழையாக உருப்பெற்று
> >>> வருகிறது. நன்றி.
>
> >>> கம்பனின் காலம் மற்றும் சமயம் குறித்து சிங்கையில் இலக்கிய வட்டம் கூட்டம்
> >>> ஒன்றில் பட்ட ஆய்வாளர்/பேராசிரியர் ஒருவர் பல சான்றுகளை முன்வைத்து 4
> >>> பகுதிகளாக சொற்பொழிவாற்றினார். புகைப்படங்கள் இணைத்த அருமையான பரத்தீடு
> >>> (presentation) வழியான செறிவான பேச்சாக இருந்தது. திரு அ.கி. வரதராஜன் அவர்கள்
> >>> மனது வைத்தால் மேல் விவரங்கள் இங்கே கிடைக்கலாம்.
>
> >>> நன்றி.
> >>> முகவை இராம்குமார்.
>

> >>> 2012/7/22 N. Ganesan <naa.gane...@gmail.com>


>
> >>>> On Sunday, July 22, 2012 8:04:53 AM UTC-7, Ram wrote:
>
> >>>>> வாணியந்தாதன் பெயரில் வெளியான பதிப்பொன்று என்னிடம் இருக்கிறது. ஆனால்
> >>>>> அது சென்னையில் இருக்கிறது.
>
> >>>>> இலந்தை
>
> >>>> நன்றி. சென்னை செல்கிறபோது பதிப்பாசிரியர், அச்சகம், அச்சான ஆண்டு
> >>>> தாருங்கள்.
>
> >>>> 20-ஆம் நூற்றாண்டில் குஜிலி பதிப்புகளில் ஒட்டக்கூத்தரை உத்தர
> >>>> ராமாயணத்துடன்
> >>>> தொடர்புபடுத்திக் குழப்படி செய்துவிட்டார்கள். கூத்தரை ஆய்ந்தவர்கள் உத்தர
> >>>> ராமாயணம்
> >>>> அவருடையதன்று என்று தெளிவு கொடுத்துள்ளனர்.
>
> >>>> பழைய நூல்கள் ஒன்றிலும் கூத்தர், கம்பர் சமகாலத்தவர், அல்லது கம்பருக்குப்
> >>>> பின் வந்தவர்
> >>>> கூத்தர் என்று இல்லை. மேலும், உத்தரராமாயணம் எழுதியவர் வாணியன் தாதன் என்ற
> >>>> சான்று இருக்கிறது.
>
> >>>> நா. கணேசன்
>

> >>>>> 2012/7/22 N. Ganesan <naa.gane...@gmail.com>


>
> >>>>>> On Jul 22, 6:58 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com>
> >>>>>> wrote:
>
> >>>>>> > நான் ஒட்டக்கூத்தர் இயற்றியதாகச் சொல்லப்படும் பதிப்பின் நகலை
> >>>>>> > இட்டிருக்கிறேன்.  வாணியன்தாதன் பெயர் தாங்கிய ஒரு பதிப்பைத் தாங்கள்
> >>>>>> இடலாமே!
>
> >>>>>> தமிழ் ஆராய்ச்சிப் பேராசிரியர்கள் உத்தர ராமாயணம் ஒடக்கூத்தர்
> >>>>>> எழுதியதன்று
> >>>>>> என்ற முடிபை அறிவித்துள்ளனர்.
>
> >>>>>> அதனால், நீங்கள் குறிப்பிடும் பதிப்பு ஆசிரியர் பற்றித் தவறான தகவல் உள்ள
> >>>>>> பதிப்பு என்று தெரிகிறது. பதிப்பாளருக்குத் தெரிவிக்க எழுதுவோம்.
>
> >>>>>> நா. கணேசன்
>
> >>>>>> --
> >>>>>> நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப்
> >>>>>> பெறுகிறீர்கள்:

> >>>>>> இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhavasantham@googlegroups.**com<santhav...@googlegroups.com>


> >>>>>> இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,

> >>>>>> santhavasantham-unsubscribe@**googlegroups.com<santhavasantham-unsubscribe@ googlegroups.com>


> >>>>>> .
> >>>>>> இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:

> >>>>>>http://groups.google.com/**group/santhavasantham?hl=ta<http://groups.google.com/group/santhavasantham?hl=ta>


>
> >>>>>  --
> >>>> நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப்
> >>>> பெறுகிறீர்கள்:
> >>>> இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
> >>>> இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
> >>>> santhavasanth...@googlegroups.com.
> >>>> இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
> >>>>http://groups.google.com/group/santhavasantham?hl=ta
>
> >>>  --
> >>> நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப்
> >>> பெறுகிறீர்கள்:
> >>> இக்குழுமத்தில் மின்மடல் முகவரி:
>

> ...
>
> read more »

Reply all
Reply to author
Forward
0 new messages