தென்நைமிசன் திருவங்க மாலை

5 views
Skip to first unread message

Parthasarathy S

unread,
Jan 4, 2026, 12:11:42 AM (5 days ago) Jan 4
to சந்தவசந்தம்

தென்நைமிசன்

திருவங்க மாலை

அடியார்க்கடியான்

(புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்)

(அங்கமாலை என்பது தமிழிலுள்ள 96 சிற்றிலக்கிய வகையில் ஒன்று. திருப்பாணாழ்வார் பாதாதி கேசம் ஆசிரியத்துறையில் பாடியுள்ளார். மங்கை மன்னன் எம்பெருமானிடத்தில் ஈடுபடாத அவயவங்கள் பயனற்றன என்று (11-7) கூறினார். சைவத்தில் திருநாவுக்கரசர் அங்கமாலை பாடியுள்ளார். அவர் பாடியுள்ளது யாப்பு இலக்கணத்தில் இல்லாது இசை இலக்கணத்தில் அடங்கியாதாக இருக்கிறது. அவ்வழியில் இப்பாக்கள் இயற்றப்பட்டுள்ளன.)

 

தலையே நீவணங்காய்  - தலை

நாலு டைத்தேவனைத்

துலையே துமில்லா வுந்தியில் தோற்றியனை

தலையே நீ வணங்காய்                                                                 1

 

கண்காள் காண்மின்களோகரந்

தெங்கும் இருப்பானைத்

தென்நை மிசக்கோயில் சிங்கனாய் வந்தானைக்

கண்காள் காண்மின்களோ                                                            2

 

செவிகாள் கேண்மின்களோ – உகிர்

நுனியால் கிழித்தானைப்

புகழிடும் வடதென் மறைகள் இரண்டினைச்

செவிகாள் கேண்மின்களோ                                                         3

 

 மூக்கே நீமுரல்வாய் - கடி

 சேரும் திருத்துழாய்

தாரதைச் சூடிடும்  பார்க்கவன் பரிமளமே

மூக்கே நீமுரல்வாய்.                                                                      4                                                                                                        

வாயே வாழ்த்திடுவாய் – அறம்

வாடும் பொழுதினில்

தாமம் தனைவிட்டுத் தரணி வருவோனை

வாயே வாழ்த்திடுவாய்.                                                                 5

 

 

நெஞ்சே நீநினையாய் - நிதம்

மிஞ்சும் மறைதனில்

தஞ்சம் தன்தாள்தரும் சிங்கன் தனியருளை

நெஞ்சே நீநினையாய்.                                                                   6 

 

கைகாள் கூப்பித்தொழீர் - குளிர்ப்

பைநா கமதிலே

வாகாய் வந்தமர்ந்த வேத விழுப்பொருளைக்

கைகாள் கூப்பித்தொழீர்.                                                              7 

 

ஆக்கை யாற்பயனென் - அருள்

ஊற்றாம் சிங்கனுரு

தேக்கி மனத்திட்டுத் தொழுது நலம் கொள்ளா

ஆக்கை யாற்பயனென்.                                                                 8 

 

கால்க ளாற்பயனென் - குறை

யாதனக் கொடுப்பவன்

கோலச் சிங்கனின் கோயிலை வலம்செய்யாக்

கால்க ளாற்பயனென்.                                                                   9 

 

உற்றா ராருளரோ - உயிர்

பற்றுப் போகையில்

கற்பீர் சிங்கனே நவவித உறவாம்மற்

றுற்றார் ஆருளரோ.                                                                        10                                         

 

பிறவிக்  கொள்வர்கொலோ - பதம்

அறமாய்ப் பற்றியபின்

திறமாய்க் குருவே பணித்ததைப் பாற்றியபின்

பிறவிக்  கொள்வர்கொலோ.                                                       11 

 

நாடிக் கண்டுகொண்மின் - அடி

யார்க்கடி யான்சொலில்

வாட விடாத்தென் நைமிசனை நவிற்றியே

நாடிக் கண்டுகொண்மின்.                                                             12 

Siva Siva

unread,
Jan 5, 2026, 10:33:08 PM (3 days ago) Jan 5
to santhav...@googlegroups.com
Good to see your interest and effort.

V. Subramanian

இமயவரம்பன்

unread,
7:03 AM (10 hours ago) 7:03 AM
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக அருமையான பாடல்கள்!

திருமங்கை ஆழ்வாரும் இந்த அமைப்பில் பாசுரங்கள் அருளிச் செய்திருக்கிறார்:

கரையாய் காக்கைப்பிள்ளாய்,- கரு
மாமுகில் போல்நிறத்தன்,
உரையார் தொல்புக ழுத்தம னைவரக்,
கரையாய் காக்கைப்பிள்ளாய்.
Reply all
Reply to author
Forward
0 new messages