கவியரங்கம் -62 வெண்பா வித்தகம்

11 views
Skip to first unread message

Ram Ramakrishnan

unread,
Jun 30, 2026, 7:01:04 AM (3 days ago) Jun 30
to santhavasantham
கவியரங்கம் -62  வெண்பா வித்தகம்


1. கண்ணெல்லாம் ஆகுமோ கண்

விரிந்த உலகின்கண் வேறாம் பொருட்கண்
விரைவாரும் ஒண்கண் விழையார் - இருமையினை
நண்ணாதே உண்ணோக்கி நல்லொளிகாண் கண்ணல்லால்
கண்ணெல்லாம் ஆகுமோ கண்.

2. பொந்துக்குள் இன்னுமோர் பொந்து

சிந்தைதனில் எண்ணங்கள் சேர்ந்து பெருகிடில்
முந்தையவை மீதெனவே மொய்த்திடுமே – விந்தையிலை
அந்தரங்கம் ஆழ்ந்தறியார் ஆட்படுதல் கோனாக்கும்
பொந்துக்குள் இன்னுமோர் பொந்து.

3. நேசமாய் வந்த நெருப்பு

ஆசையிலே நீராடி அன்பென்னும் பூச்சூடி
வாசமிகு மங்கையவள் வந்தடையப் - பேசிலனும்
ஓசையின்றிக் கைபற்ற ஓங்கியறை விட்டவளே
நேசமாய் வந்த நெருப்பு.

4. காதுக்கு வேண்டாம் கதவு

ஏதேதோ பொய்ச்செய்தி எந்நாளும் ஊர்ப்பரப்பித்
தீதிலுழல் ஊடகத்தைத் தீண்டாமல்நாதன்றன்
பாதத்தைப் போற்றும் பணியில் மனமிருத்தக்
காதுக்கு வேண்டும் கதவு.

5. போதிலே பூத்ததிப் போது - இன்னிசை வெண்பா

வேதத்தின் மெய்ப்பொருளே வேட்கையுடன் உன்னருளால்
தீதிலா நெஞ்சில் செறிவில் தொழுதிட
ஆதியோ டந்தமிலா ஆண்டவனும் ஆட்கொண்ட
போதிலே பூத்ததிப் போது.

6. பள்ளியாம் பாதையும் பார்

உள்ள விருள்நீக்கி உண்மை விளக்கேற்றும்
வெள்ளிச் சுடரறிவே விண்மீனாம்வள்ளலென
அள்ளி யறிவளித்துக் கிள்ளிக் களையெடுக்கும்
பள்ளியாம் பாதையும் பார்.

7. பார்ப்பாரே பார்ப்பாரே பார்

ஆரவா ரஞ்செய்வர் அன்பிலார்; நேர்வழியில்
நேராரப் பார்ப்பார் நெஞ்சினியர்;- தீராது
சேர்ப்பார் இழிமக்கள்சீர்மல்கு மொண்பொருளைப்
பார்ப்பாரே பார்ப்பாரே பார்.

(ஆராவரம் செய்பவர் அன்பிலாதார்.
நேர்வழியில், நிறைந்த நற்குணம் பார்ப்பார் இனிய குணமுடையோர். தீராதன (தீச்செயல்கள்) சேர்ப்பார் இழிமக்கள். மேன்மைத்தாம் உள்ளொளியைக் காண்பாரே உயர்ந்த ஞானிகள்)

8. குறுக்குத் தெருவில் குடி

மாடிவீ டொன்றிற்காய் மாளிகையை நாடாதே;
தேடுவையேல் துன்பமிகும் சிந்தையினில்; – வாடி
உறுப்புத் தளர்ந்திடினும் உற்றாரோ டேற்பாய்
குறுக்குத் தெருவில் குடி.

9. முதலைத் தொடரும் முடிவு

சோம்பலைப் பேணாமல் தேம்பித் திரியாமல்
ஆம்பல் மலராய் அகமலர்ந்(து) - ஓம்பிச்
சிதல மடையாத சிந்தையர் தம்மின்
முதலைத் தொடரும் முடிவு.

10. வானம் இறங்கி வரும்

கானல் தணிந்து கருகிவரும் கார்மேகம்
மானார் பொழில்தழுவும் மாண்பினில் — ஆனந்தத்
தேனாக்கும் அம்புவியில் தென்றலுலாச் சோலையினில்
வானம் இறங்கி வரும்.

11. கண்ணைமூ டிக்கொண்டு காண்

ஊணில் உறைபவனவ் வுள்ளமர்ந்த மெய்ப்பொருள்
பேணும் தொழிலிலுமப் பேரொளிசேணுலவி
எண்பொருளன் எங்குநிறை ஈசனுன்னுள் தோன்றிடவே
கண்ணைமூ டிக்கொண்டு காண்.

12. மறதியும் கூட வரம்

தீராப் பிணிகளும் தீயவர் நட்பும்தன்
பேராப் பெருமிதப் பேதைமையும் — சேரா
வுறவின் துயரும் உடைக்க மனத்தில்
மறதியும் கூட வரம்.

13. நெருப்பை அணைக்காத நீர்

ஒருதலைக் காதல் ஒறுத்தார் உறவு
இருமனப் பெண்டிர் இவர்கள் - கருதின்
மருளுறு நெஞ்சின் மகிழ்வற்ற வாழ்வு
நெருப்பை அணைக்காத நீர்.

14கொஞ்சமே னும்மிதைக் கொள்

வஞ்ச மனத்தை வளர்க்காதே நல்லறத்தில்
தஞ்சமெனக் கொள்ளத் தலைப்படுவாய்- விஞ்சிடவே
பஞ்செனும் மென்மைகொளின் பந்தங்கள் உன்வசமாம்
கொஞ்சமே னும்மிதைக் கொள்.

15. நட்டத்தில் உச்ச நடம்

அட்டியிலாச் சூது மழித்திடவே வாழ்வழியும்;
திட்டமிட் டாற்றாதேல் சீர்குலைக்கும் - உட்புகுந்த
மட்டற்ற ஆசை மயக்கிடச் செய்வினையால்
நட்டத்தில் உச்ச நடம்.

அட்டி- தடை, தாமதம்

16.  நீயென்றேன் நீயென்றாய் நீ

நானென்ற பேதைமை நாடிலனேல், நெஞ்சிலவன்
தானென்ற பேரொளி தங்கிடுமே! - வானெங்கும்
நீயென்று கண்டநிலை நின்றவிடத் தற்பரமே!
நீயென்றேன் நீயென்றாய் நீ.

17. புன்னகை யார்க்கும் பொது

வன்சொல் தவிர்த்திட்டு வாய்மையைப் போற்றிடு;
மென்சொல் உரைத்தலே மேன்மைத்தாம்;- இன்முகத்தில்
மின்னுகின்ற புன்முறுவல் விந்தைதரும் நற்பலனே
புன்னகை யார்க்கும் பொது.

18. கட்டுக்குள் மாட்டாத கட்டு

மட்டின்றி யோடிடும் மாந்தர்தம் நெஞ்சமும்
வெட்டெனப் பேசுவதில் வெஞ்சினமும் - சுட்டெரித்துக்
கொட்டமிடும் தொல்வினையில் கூற்றனையத் தீவினையும்
கட்டுக்குள் மாட்டாத கட்டு.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)



Arasi Palaniappan

unread,
Jun 30, 2026, 7:14:38 AM (3 days ago) Jun 30
to சந்தவசந்தம்
அருமை அண்ணலே!

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAENLqthXaHCVNRfF1CmCRCHujceeo90HQKKHP_f_ixxTMDv-PQ%40mail.gmail.com.

Govindaraju Arunachalam

unread,
Jun 30, 2026, 7:24:25 AM (3 days ago) Jun 30
to santhav...@googlegroups.com

இராம் இராமகிருஷ்ணன் பதிவுக்கு என் பின்னூட்டம்.

 

ஒண்பொருளை பார்ப்பாரே பார்ப்பார்

   ஓங்கி உரைத்தார்கள் நன்றே

எண்ணுகின்ற வழிதனிலே அறத்தை

   ஏற்கின்ற பாங்குடையார்; ஆமாம்!

  

-கருவூர் இனியன்,


On Tue, Jun 30, 2026 at 4:31 PM Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:
கவியரங்கம் -62  வெண்பா வித்தகம்


1. கண்ணெல்லாம் ஆகுமோ கண்

விரிந்த உலகின்கண் வேறாம் பொருட்கண்
விரைவாரும் ஒண்கண் விழையார் - இருமையினை
நண்ணாதே உண்ணோக்கி நல்லொளிகாண் கண்ணல்லால்
கண்ணெல்லாம் ஆகுமோ கண்.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAENLqthXaHCVNRfF1CmCRCHujceeo90HQKKHP_f_ixxTMDv-PQ%40mail.gmail.com.


--
rgds,
 
Dr. A. GOVINDARAJU,
Retired Principal - National Awardee,

Ram Ramakrishnan

unread,
Jun 30, 2026, 8:10:31 AM (3 days ago) Jun 30
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. பழனியப்பன்.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jun 30, 2026, at 07:14, Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:



Siva Siva

unread,
Jun 30, 2026, 9:28:56 AM (3 days ago) Jun 30
to santhav...@googlegroups.com
ராம் ராமகிருஷ்ணன் பாடல்களுக்குப் பிற்கருத்து.

இனிய பாடல்கள்.

சில கருத்துகளைக் கீழ்க்காண்க.

வி. சுப்பிரமணியன்

On Tue, Jun 30, 2026 at 7:01 AM Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:
கவியரங்கம் -62  வெண்பா வித்தகம்


1. கண்ணெல்லாம் ஆகுமோ கண்

விரிந்த உலகின்கண் வேறாம் பொருட்கண்
விரைவாரும் ஒண்கண் விழையார் - இருமையினை
நண்ணாதே உண்ணோக்கி நல்லொளிகாண் கண்ணல்லால்
கண்ணெல்லாம் ஆகுமோ கண்.

==> / கண்ணல்லால் கண்ணெல்லாம் /
கண்ணல்லாக் கண்ணெல்லாம் ?

 
2. பொந்துக்குள் இன்னுமோர் பொந்து

சிந்தைதனில் எண்ணங்கள் சேர்ந்து பெருகிடில்
முந்தையவை மீதெனவே மொய்த்திடுமே – விந்தையிலை
அந்தரங்கம் ஆழ்ந்தறியார் ஆட்படுதல் கோனாக்கும்
பொந்துக்குள் இன்னுமோர் பொந்து.

3. நேசமாய் வந்த நெருப்பு

ஆசையிலே நீராடி அன்பென்னும் பூச்சூடி
வாசமிகு மங்கையவள் வந்தடையப் - பேசிலனும்
ஓசையின்றிக் கைபற்ற ஓங்கியறை விட்டவளே
நேசமாய் வந்த நெருப்பு.

==> இப்பாடலில் சொல்ல வரும் கருத்து எனக்குத் தெளிவாகவில்லை.
 

4. காதுக்கு வேண்டாம் கதவு

ஏதேதோ பொய்ச்செய்தி எந்நாளும் ஊர்ப்பரப்பித்
தீதிலுழல் ஊடகத்தைத் தீண்டாமல்நாதன்றன்
பாதத்தைப் போற்றும் பணியில் மனமிருத்தக்
காதுக்கு வேண்டும் கதவு.

==>  / தீண்டாமல் /

காது என்ற காரணத்தால், தீண்டாமல் என்பது பொருந்துமா?
சேராமல்?
==> /  உறவு இருமனப் /
புணர்ச்சியைக் கவனிக்க.


14கொஞ்சமே னும்மிதைக் கொள்

வஞ்ச மனத்தை வளர்க்காதே நல்லறத்தில்
தஞ்சமெனக் கொள்ளத் தலைப்படுவாய்- விஞ்சிடவே
பஞ்செனும் மென்மைகொளின் பந்தங்கள் உன்வசமாம்
கொஞ்சமே னும்மிதைக் கொள்.

15. நட்டத்தில் உச்ச நடம்

அட்டியிலாச் சூது மழித்திடவே வாழ்வழியும்;
திட்டமிட் டாற்றாதேல் சீர்குலைக்கும் - உட்புகுந்த
மட்டற்ற ஆசை மயக்கிடச் செய்வினையால்
நட்டத்தில் உச்ச நடம்.

அட்டி- தடை, தாமதம்

==> /  திட்டமிட் டாற்றாதேல் சீர்குலைக்கும் / = ?
திட்டமிட் டாற்றாயேல் ?

16.  நீயென்றேன் நீயென்றாய் நீ

நானென்ற பேதைமை நாடிலனேல், நெஞ்சிலவன்
தானென்ற பேரொளி தங்கிடுமே! - வானெங்கும்
நீயென்று கண்டநிலை நின்றவிடத் தற்பரமே!
நீயென்றேன் நீயென்றாய் நீ.

17. புன்னகை யார்க்கும் பொது

வன்சொல் தவிர்த்திட்டு வாய்மையைப் போற்றிடு;
மென்சொல் உரைத்தலே மேன்மைத்தாம்;- இன்முகத்தில்
மின்னுகின்ற புன்முறுவல் விந்தைதரும் நற்பலனே
புன்னகை யார்க்கும் பொது.

18. கட்டுக்குள் மாட்டாத கட்டு

மட்டின்றி யோடிடும் மாந்தர்தம் நெஞ்சமும்
வெட்டெனப் பேசுவதில் வெஞ்சினமும் - சுட்டெரித்துக்
கொட்டமிடும் தொல்வினையில் கூற்றனையத் தீவினையும்
கட்டுக்குள் மாட்டாத கட்டு.

==> /   கூற்றனையத் தீவினையும் /
 கூற்று அனைய தீவினையும் ?
 கூற்று அனை அத் தீவினையும் ?

Ram Ramakrishnan

unread,
Jun 30, 2026, 9:59:00 AM (3 days ago) Jun 30
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. சிவசிவா.

சுட்டிய திருத்தங்கள் ஏற்புடையனவே.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jun 30, 2026, at 09:28, Siva Siva <naya...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Jun 30, 2026, 10:37:56 AM (3 days ago) Jun 30
to சந்தவசந்தம்
வன்சொல் தவிர்த்திட்டு வாய்மையைப் போற்றிடு
அற்புதமான வரி


On Tuesday, June 30, 2026 at 4:31:04 PM UTC+5:30 Ram Ramakrishnan wrote:
கவியரங்கம் -62  வெண்பா வித்தகம்


1. 
வன்சொல் தவிர்த்திட்டு வாய்மையைப் போற்றிடு;
மென்சொல் உரைத்தலே மேன்மைத்தாம்;- இன்முகத்தில்
மின்னுகின்ற புன்முறுவல் விந்தைதரும் நற்பலனே
புன்னகை யார்க்கும் பொது.


Ram Ramakrishnan

unread,
Jun 30, 2026, 11:13:43 AM (3 days ago) Jun 30
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. தங்கவேல் 


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jun 30, 2026, at 10:37, தங்கவேல் காஞ்சிபுரம் <k.thanga...@gmail.com> wrote:

வன்சொல் தவிர்த்திட்டு வாய்மையைப் போற்றிடு
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Ram Ramakrishnan

unread,
Jun 30, 2026, 3:35:07 PM (3 days ago) Jun 30
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, இனியனாரே.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)


Subbaier Ramasami

unread,
Jun 30, 2026, 7:41:17 PM (3 days ago) Jun 30
to santhav...@googlegroups.com
விடுபட்ட வெண்பா

கட்டுக்குள் மாட்டாத கட்டு

 

ஆல மரத்தின் அழகு விழுதுகளைக்

கோலமார் ஊஞ்சலெனக் கூட்டியே- வாலைப்பெண்

இட்டம்போல் ஆட எகிறிக் குதிக்குமே

கட்டுக்குள் மாட்டாத கட்டு.

On Tue, Jun 30, 2026 at 7:01 AM Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:

Sai Ganesan H

unread,
Jun 30, 2026, 11:38:23 PM (3 days ago) Jun 30
to santhav...@googlegroups.com
வணக்கம். தங்களின் வெண்பாக்கள் அனைத்தும் அருமை. நான் மிகவும் ரசித்தவை : 
நேசமாய வந்த நெருப்பு, குறுக்குத் தெருவில் குடி, முதலைத் தொடரும் முடிவு, நீயென்றேன்…., புன்னகை யார்க்கும் பொது. 


—- சத்ய வேழன் H சாயி கணேசன் 

Ram Ramakrishnan

unread,
Jul 1, 2026, 8:18:16 AM (2 days ago) Jul 1
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. சத்யவேழன்.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jun 30, 2026, at 23:38, Sai Ganesan H <saisree...@gmail.com> wrote:


Reply all
Reply to author
Forward
0 new messages