சந்தக் கட்டளைக் கலித்துறை
தானன தானன தானன தானன தானதனா
|
|
வான்மழை யாலுறும் வாட்டமும் ஆக்கிடும் வாழ்க்கையிலே ஆன்றது வாந்தொழில் ஆரிடர் ஆயசம் ஆர்த்திடினும் ஊன்றிட வேயது ஓதனம் ஆகிடல் ஓர்தலினால் தேனவர் ஏரினர் தேசுடை ஆனவர் சேதனரே.
ஆன்றது – மாட்சிமைக்குரியது., ஆரிடர் – பெருந்துன்பம்., ஆயசம் – ஆயாசம் இன்பதன் இடைக்குறை – சோர்வு, ஆர்த்திடல் – ஊட்டுதல், நுகர்வித்தல்., ஓதனம் – உணவு, ஆகிடல் – ஆக்கிடல் என்பதன் இடைக்குறை., ஓர்தல் – உணர்தல், ஏரினர் – உழவர்., தேசு – அழகு, ஒளி, காந்தி., சேதனர் – அறிவு மிக்கவர்.,
|
|
போதியின் நீழலில் வாதில ராகினர் பூட்கையிலே ஆதியில் மண்ணுளர் அல்லலின் ஆதரம் ஆங்கறிந்தார் வேதமொ டப்பெரு வேள்விய தைச்செய வேண்டிலரே சாதியை ஓட்டியர் சற்குரு வாகினர் சத்தியமே.
வாதிலர் – தர்க்கம் செய்யாதார் பூட்கை – லட்சியம், ஆதரம் – ஆதாரம் என்பதன் இடக்குறை சற்குரு - ஞானாசாரியன்
|
]
|
|
|
ஏடகம் ஏந்தியர் என்றொரு நாளிலும் ஏக்கையிலர் பீடுறு நெஞ்சினர் பேதைமை ஏற்றிடர் பேரியலர் வாடிடும் மெய்யினை எண்ணிலர் செய்கையில் மேன்மையினர் தேடிடு வாரவர் தேற்றமும் நாட்டுளர் தேருதற்கே.
ஏடகம் – ஏடு, புத்தகம்., ஏக்கையிலர்இகழ்ச்சியில்லாதவர் பேதைமை – அறிவற்றதன்மை., பேரியலர் – பெருந்தன்மை யுடையவர் தேற்றம் – தெளிவு, உறுதிப்பாடு.
|
|
மாமலை மாய்த்திட வாளுளி ஏந்தியர் வாஞ்சையினர் ஓமிடி தல்லகம் ஒன்றிலர் தூய்மையின் ஊற்றவரே நேமக மாயவர் காமரு மூர்த்தமும் நேரிடுவார் பூமியில் மாண்பினர் போற்றிட ஆக்குவர் பூஜியரே.
மாய்த்திட – தகர்த்திட., வாளுளி – வாள் போன்ற கூர்மை கொண்ட உளி., வாஞ்சையினர் – அன்புகொண்டவர்கள்., ஓமிடிதல் – கேடுறல்., நேமகம் – நியமம்., காமரு – விரும்பத்தக்க., மூர்த்தம்- சிலைவடிவம் நேரிடுவார் – சம்பவிப்பார்., பூஜியர் – பூஜிக்கத் தகுந்தவர். அன்பன் ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்) 05/06/2026
|
|
|
அலசடி- துன்பம், வருத்தம் மலமனம் - மும்மலத்தைக் குறித்தது அலகிலன் - அளவிட முடியாதவன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்) 02/06/2026
|
|
|
|
|
On Jun 5, 2026, at 17:56, Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:
கருமமே கண்ணாயினார்சந்தக் கட்டளைக் கலித்துறை
தானன தானன தானன தானன தானதனா
<image.png>
வான்மழை யாலுறும் வாட்டமும் ஆக்கிடும் வாழ்க்கையிலே
ஆன்றது வாந்தொழில் ஆரிடர் ஆயசம் ஆர்த்திடினும்
ஊன்றிட வேயது ஓதனம் ஆகிடல் ஓர்தலினால்
தேனவர் ஏரினர் தேசுடை ஆனவர் சேதனரே.
ஆன்றது – மாட்சிமைக்குரியது., ஆரிடர் – பெருந்துன்பம்.,
ஆயசம் – ஆயாசம் இன்பதன் இடைக்குறை – சோர்வு, ஆர்த்திடல் – ஊட்டுதல், நுகர்வித்தல்., ஓதனம் – உணவு, ஆகிடல் – ஆக்கிடல் என்பதன் இடைக்குறை., ஓர்தல் – உணர்தல், ஏரினர் – உழவர்., தேசு – அழகு, ஒளி, காந்தி., சேதனர் – அறிவு மிக்கவர்.,
போதியின் நீழலில் வாதில ராகினர் பூட்கையிலே
ஆதியில் மண்ணுளர் அல்லலின் ஆதரம் ஆங்கறிந்தார்
வேதமொ டப்பெரு வேள்விய தைச்செய வேண்டிலரே
சாதியை ஓட்டியர் சற்குரு வாகினர் சத்தியமே.
வாதிலர் – தர்க்கம் செய்யாதார்
பூட்கை – லட்சியம், ஆதரம் – ஆதாரம் என்பதன் இடக்குறை
சற்குரு - ஞானாசாரியன்
]
<image.png>
<image.png>
ஏடகம் ஏந்தியர் என்றொரு நாளிலும் ஏக்கையிலர்
பீடுறு நெஞ்சினர் பேதைமை ஏற்றிடர் பேரியலர்வாடிடும் மெய்யினை எண்ணிலர் செய்கையில் மேன்மையினர்தேடிடு வாரவர் தேற்றமும் நாட்டுளர் தேருதற்கே.
ஏடகம் – ஏடு, புத்தகம்., ஏக்கையிலர்இகழ்ச்சியில்லாதவர்
பேதைமை – அறிவற்றதன்மை., பேரியலர் – பெருந்தன்மை யுடையவர்
தேற்றம் – தெளிவு, உறுதிப்பாடு.
மாமலை மாய்த்திட வாளுளி ஏந்தியர் வாஞ்சையினர்
ஓமிடி தல்லகம் ஒன்றிலர் தூய்மையின் ஊற்றவரே
நேமக மாயவர் காமரு மூர்த்தமும் நேரிடுவார்
பூமியில் மாண்பினர் போற்றிட ஆக்குவர் பூஜியரே.
மாய்த்திட – தகர்த்திட., வாளுளி – வாள் போன்ற கூர்மை கொண்ட உளி., வாஞ்சையினர் – அன்புகொண்டவர்கள்., ஓமிடிதல் – கேடுறல்.,
நேமகம் – நியமம்., காமரு – விரும்பத்தக்க., மூர்த்தம்- சிலைவடிவம்
நேரிடுவார் – சம்பவிப்பார்., பூஜியர் – பூஜிக்கத் தகுந்தவர்.
அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)
05/06/2026
<image.png>