கங்கை இருக்கும் இடங்கள்

11 views
Skip to first unread message

NATARAJAN RAMASESHAN

unread,
Nov 20, 2025, 4:15:20 AM (6 days ago) Nov 20
to santhav...@googlegroups.com

19/11:2025, கார்த்திகை அமாவாசை அன்று திருவிசநல்லூர் ஶ்ரீதர ஐயாவாள் மடத்திற்குச் சென்று வழிபட்டு, அங்குக் கிணற்றில் வரும் கங்கை நீரில் குளிக்கும் பேறு பெற்றேன்.
அப்போது இயற்றிய வெண்பா :

.              கங்கை இருக்கும் இடங்கள்

காசி நகரிருப்பாள்,கண்ணுதலோன் நம்சிவன்
வீசுவிரி செஞ்சடை வீற்றிருப்பாள் - பேசுபுகழ்
ஐயாவாள் வாழ்மனையின் அக்கிணற்றில் கங்கையவள்
மெய்யாய் இருப்பாள் விழைந்து!

                                      —தில்லைவேந்தன்.

Lalitha & Suryanarayanan

unread,
Nov 20, 2025, 5:02:18 AM (5 days ago) Nov 20
to santhav...@googlegroups.com
அருமை!

சிவசூரி.

Arasi Palaniappan

unread,
Nov 20, 2025, 5:03:38 AM (5 days ago) Nov 20
to சந்தவசந்தம்
அருமை 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2Bzg0hhL%2BLv0S3jm6KhPMZZXrhQiJ3KfGqJwjrvR100FDUg3_A%40mail.gmail.com.

NATARAJAN RAMASESHAN

unread,
Nov 20, 2025, 5:05:18 AM (5 days ago) Nov 20
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி திரு சிவசூரி அவர்களே 

                 —தில்லைவேந்தன்

NATARAJAN RAMASESHAN

unread,
Nov 20, 2025, 5:09:16 AM (5 days ago) Nov 20
to santhav...@googlegroups.com
நன்றி திரு பழனியப்பன் 

     — தில்லைவேந்தன்

On Thu, Nov 20, 2025 at 3:33 PM Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:
அருமை 

இமயவரம்பன்

unread,
Nov 20, 2025, 6:47:54 AM (5 days ago) Nov 20
to santhav...@googlegroups.com

சொல்லருந் தொல்புகழ்சேர் கங்கைத் தொழுதேத்தும்

தில்லைமன் வெண்பா சிறப்பு.

NATARAJAN RAMASESHAN

unread,
Nov 20, 2025, 7:36:10 AM (5 days ago) Nov 20
to santhav...@googlegroups.com
நன்றி திரு இமயவரம்பன் 

        — தில்லைவேந்தன்

Ram Ramakrishnan

unread,
Nov 20, 2025, 8:45:48 AM (5 days ago) Nov 20
to santhav...@googlegroups.com
மிக அருமை, வேந்தரே.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Nov 20, 2025, at 18:06, NATARAJAN RAMASESHAN <chrome...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

NATARAJAN RAMASESHAN

unread,
Nov 20, 2025, 9:12:37 AM (5 days ago) Nov 20
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி திரு ராம்கிராம்

        — தில்லைவேந்தன்

Kaviyogi Vedham

unread,
Nov 20, 2025, 10:27:37 AM (5 days ago) Nov 20
to santhav...@googlegroups.com
venba arputham thillai,
 yogiyar

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

NATARAJAN RAMASESHAN

unread,
Nov 20, 2025, 10:56:25 AM (5 days ago) Nov 20
to santhav...@googlegroups.com
நன்றி யோகியார் 

  —தில்லைவேந்தன்

On Thu, Nov 20, 2025 at 8:57 PM Kaviyogi Vedham <kaviyog...@gmail.com> wrote:
venba arputham thillai,
 yogiyar

VETTAI ANANTHANARAYANAN

unread,
Nov 21, 2025, 11:33:03 PM (4 days ago) Nov 21
to santhav...@googlegroups.com
பதிவுக்கு மிக்க நன்றி.     ஆழிக் கிணறு உள்ள மடத்திற்கு மனைவியுடன்  சென்றிருக்கிறேன்.

திருவிசநல்லூர் ஸ்ரீதர ஐயாவாள் இப்போது பிரபலமாய் உள்ள சம்பிரதாய பஜனை வழிபாட்டுக்கு அடித்தளமிட்டவர்.  செங்கோட்டை ஆவுடையக்காள் என்னும் இளம் பெண்ணுக்கு  ஞான தீட்சை அளித்தவர். அக்காளின் ஆத்மானுபவப் பாடல்கள்  அற்புதமானவை.  



--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

NATARAJAN RAMASESHAN

unread,
Nov 21, 2025, 11:35:14 PM (4 days ago) Nov 21
to santhav...@googlegroups.com
பேராசிரியர் அனந்த் அவர்களுக்கு நன்றி 

                        —தில்லைவேந்தன்

Kaviyogi Vedham

unread,
Nov 22, 2025, 10:48:46 AM (3 days ago) Nov 22
to santhav...@googlegroups.com
சந்தோஷம்    பார்த்து.
 யோகியார்

VETTAI ANANTHANARAYANAN

unread,
Nov 22, 2025, 10:43:18 PM (3 days ago) Nov 22
to santhav...@googlegroups.com

 

<> ஆர்த்திஹரத் துதி <>

 

(இது, திருவிசைநல்லூர் ஸ்ரீதர வெங்கடேசாச்சாரியர் சமஸ்கிருதத்தில் அருளிய ஆர்த்திஹர ஸ்தோத்ரம்” என்னும் துதியின் தமிழாக்கம். பிழையிருப்பின் பொறுத்தருவும்.)

 

 

தண்ணமு தாம்உன் தயைசொரி பார்வைஇத் தாரணியில்

புண்படும் பேதைபால் வீழ்ந்திடச் செய்தியேல் புண்ணிய!என்

திண்ணிய துன்பெலாம் தீர்க்கும் திறனுன் திருவருளுக்(கு)

உண்டெனக் கண்டிடு வேன்உயர் சங்கர! உண்மையிலே  (1)

 

நொந்த மனத்தடி யேன்நின் நலங்கள் நுவன்றுனதாள்

வந்தடைந் தும்என் வருத்தம் இனியும் விலக்கிலையே

அந்த கனுக்கொரு அந்தக! யானிங் கவதியுறல்

எந்த வகைநின் இயல்புக் குகந்த தியம்பிடுமே!   (2)

 

தேவ! நினையுளில் சிந்திப் வர்களைச் சிந்திப்பவர்

பாவம் சிதைந்து பதவி புகழ்பெறல் பார்த்ததுண்டே

ஆவி துடிக்க அரனே எனவிங்(கு) அலறிஉன்னைக்

கூவி அழைத்துமே துன்புறல் எங்ஙனோ கூறும்ஐயே! (3)

 

சாற்றிடத் தக்க குணங்களைக் கொள்ளாச் சழக்கனெனத்

தூற்றிநீ என்றனைத் தள்ளல் முறையோ? சொல்லிடில்யான்

ஆற்றிடுஞ் செய்கையை ஐய!நீ உள்ளிருந்(து) ஆக்குவதால்

ஈற்றில் உனைவிட்(டு) எவரைக் குறைசொல ஏலுமிங்கே? (4)

 

அறிவிலா அற்பருள் யான்முதல் உன்றன் அருள்பெறற்குச்

சிறிதும் அருகதை யில்லேன் எனவே தெரிந்திருந்தும்

மறைநூல் சொலவொணா மாண்பினோய் உன்னை வலித்திழுக்கும்

பொறையுண் டெளியனின் புன்மைக் கெனநான் புரிந்துளனே! (5)

 

புகலும் அறிவின் பொலிவுநீ ஈசன்நீ பூரணன்நீ

இகழும் கடையனேன் ஈனரில் ஈனனேன் இவ்வுலகில்

நிகழ்த்தும் நெறியிலாச் செய்கையை நீயோர் பொருட்டெனநின்

அகத்தில் நினைத்திடில் யாரிடம் சென்றிங்(கு) அரற்றுவனே  (6)

 

அண்டினோர் துன்பம் அகற்றிடும் வல்லவன் ஆகவுனைக்

கண்டுநான் வந்தனன் கொஞ்சமும் என்னைக் கடைக்கணியேல்

தொண்டரைக் காப்போன் துயரினைத் தீர்ப்பவன் தூயனென

அண்டமும் போற்றல் அடுக்குமோ? தீனனை ஆதரியே! (7)

 

இயலா(து) 'அரண்'என்(று) இயம்பும் ஒருவனை இங்குநமை

நயந்தே 'அரன்'என் றழைத்தான் எனப்பல நன்மைகளைப்

பயக்கும் உனையான் பரம சிவஎனப் பல்வகையாய்

அயர்ந்திங் கழைத்தும் அருளாத தேனென்(று) அறைகுவையே! (8)

 

பரமனே நின்பதம் பற்றினால் தீர்ந்திடும் பாழ்துயரென்(று)

உரைத்தது கேட்டுயான் ஓடிவந் தேன்இங்(கு) உன்னிடம்யான்

அரவணி வோயுனக்(கு) ஆங்கவர் மேலுள ஆதுரத்தின்

உரத்தினை உன்னி உதவிடு வாயெனக்(கு) உன்னருளே! (9) 

 

அனந்த்  ஆகஸ்ட் 2014 

ஐயாவாள் அவர்களின் சரித்திரத்தை அறிய: https://sanskritdocuments.org/doc_shiva/Artihara.html

NATARAJAN RAMASESHAN

unread,
Nov 22, 2025, 11:36:47 PM (3 days ago) Nov 22
to santhav...@googlegroups.com
அருமை பேராசிரியர் அனந்த் 

Arasi Palaniappan

unread,
Nov 23, 2025, 12:24:34 AM (3 days ago) Nov 23
to சந்தவசந்தம்
இராஜ
பாட்டையில் கட்டளைப் பாட்டு, மொழிபெயர்த்து 
வேட்டையார் தந்த விருந்து!

அற்புதம்!

Siva Siva

unread,
Nov 23, 2025, 1:54:45 AM (3 days ago) Nov 23
to santhav...@googlegroups.com
Nice.

சில கருத்துகளைக் கீழ்க் காண்க.

வி. சுப்பிரமணியன்


On Sun, Nov 23, 2025 at 12:24 AM Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:
இராஜ
பாட்டையில் கட்டளைப் பாட்டு, மொழிபெயர்த்து 
வேட்டையார் தந்த விருந்து!

அற்புதம்!

On Sun, 23 Nov 2025, 9:13 am VETTAI ANANTHANARAYANAN, <gan...@gmail.com> wrote:

 

<> ஆர்த்திஹரத் துதி <>

 

(இது, திருவிசைநல்லூர் ஸ்ரீதர வெங்கடேசாச்சாரியர் சமஸ்கிருதத்தில் அருளிய ஆர்த்திஹர ஸ்தோத்ரம்” என்னும் துதியின் தமிழாக்கம். பிழையிருப்பின் பொறுத்தருவும்.)

 

 

தண்ணமு தாம்உன் தயைசொரி பார்வைஇத் தாரணியில்

புண்படும் பேதைபால் வீழ்ந்திடச் செய்தியேல் புண்ணிய!என்

திண்ணிய துன்பெலாம் தீர்க்கும் திறனுன் திருவருளுக்(கு)

உண்டெனக் கண்டிடு வேன்உயர் சங்கர! உண்மையிலே  (1)

 

நொந்த மனத்தடி யேன்நின் நலங்கள் நுவன்றுனதாள்

வந்தடைந் தும்என் வருத்தம் இனியும் விலக்கிலையே

அந்த கனுக்கொரு அந்தக! யானிங் கவதியுறல்

எந்த வகைநின் இயல்புக் குகந்த தியம்பிடுமே!   (2)


==>  ஒரு அந்தக -- Here ஒரு  may or may not be ok.
==> நின், உன = என்று ஒருமையில் சொல்லி ஈற்றில் இயம்பிடும் என்றது ஒருமைபன்மை மயக்கம்?



Reply all
Reply to author
Forward
0 new messages