ஓர் ஐயம்

305 views
Skip to first unread message

devraj

unread,
Sep 29, 2013, 11:50:12 PM9/29/13
to santhav...@googlegroups.com
’சுரபுன்னை’ பொருள் என்ன ?
அது வினைத் தொகையா ?


தேவ்

Kaviyogi Vedham

unread,
Sep 30, 2013, 2:30:33 AM9/30/13
to santhavasantham
அது ஒருவகைப் புன்னை மரம் எனக்கேள்வி.பெயர்ச்சொல்லே.அது
யோகியார் 

வாழ்க அனைவரும் வளமுடனே 
என் குருஜி லஹரி பாபாஜி
ஆசியினால்.
கவியோகி வேதம்(kaviyogi vedham)-
PL. visit my blog(for my poems etc)at http;//kaviyogi-vedham.blogspot.com/
kaviyogi vedham(yogiyaar)தலைவர்..
Founder, Sree Laharibabaji yogasram,
2/682, 10th cross St,...Renga reddy garden,
Neelankarai, Chennai-600115
 Present camp..Bangalore till oct13.. so present ..
cel. no.09686679017


2013/9/29 devraj <rde...@gmail.com>
’சுரபுன்னை’ பொருள் என்ன ?
அது வினைத் தொகையா ?


தேவ்

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

Iyappan Krishnan

unread,
Sep 30, 2013, 3:27:07 AM9/30/13
to சந்தவசந்தம்
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B4%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D


Inline image 1


சுரபுன்னை எப்படி வினைத் தொகையாகும்?  யானறிந்த வரையில் பெயர்ச் சொல்லே அது.

Iyappan Krishnan

*>*<*
"பொல்லாங்கு சொல்பவர்கள், தன்முதுகை பார்ப்பதில்லை
நல்லோர்கள் அவர் பேச்சை எந்நாளும் கேட்பதில்லை "
*>*<*
Dont argue with ppl who say "World is flat" but advise them not to reach the edge of the world
*>*<*
**

dheeban

unread,
Sep 30, 2013, 5:43:37 AM9/30/13
to santhav...@googlegroups.com
சுரபுன்னை ஒரு வகை மரம். ( பெயர் சொல்லே !)
சிதம்பரத்தில் பிச்சாவரம் போய் இருக்கிறீர்களா ?
கடல் நீர் உட் புகுந்து இருக்கும் பகுதியில்
இவ்வகை மரங்கள் உள்ளன.
இப் பெயர் சங்க இலக்கியங்களில் குறிப் பிடப் படுகிறது.

Subbaier Ramasami

unread,
Sep 30, 2013, 7:01:10 AM9/30/13
to சந்தவசந்தம்
வினைத்தொகையும் கூட பெயர்சொல்லோடு தொடர்புடையதுதானே!

கருத்து முற்றுப்பெறாத ஒரு வினை பெயர்ச்சொல்லைத் தழுவி வருவது பெயரெச்சம். காலம் கரந்த பெயரெச்சம் வினைத்தொகை.

புன்னை என்று ஒரு மரம் இருக்கிறது. அந்த வகையைச் சார்ந்த இன்னொன்றை வேறுபடுத்திக் காட்டச் சுரபுன்னை வந்திருக்கிறது. எனவே இது இடுகுறிப்பெயரல்ல. காரணப்பெயர். ஆனால் வினைத்தொகை அல்ல

கூந்தல் பனை கூழைப்பனை என்று வருவதுபோல சுர புன்னை வந்துள்ளது. சுர  என்பதற்கு என்ன பொருள் என்று பார்க்க வேண்டும்


இலந்தை


2013/9/30 Kaviyogi Vedham <kaviyog...@gmail.com>

Siva Siva

unread,
Sep 30, 2013, 8:03:34 AM9/30/13
to santhavasantham
சுரத்தல் / சுரம் என்ற சொற்களோடு தொடர்பு உண்டோ?

தேவாரப் பாடல்களிலும் சுரபுன்னை குறிப்பிடப்பெறுகின்றது.


1.38.2
உரவெங் கரியின் னுரிபோர்த்த
பரமன் னுறையும் பதியென்பர்
குரவஞ் சுரபுன் னையும்வன்னி
மருவும் மயிலா டுதுறையே.


குறிப்புரையில்: சுரபுன்னை - இது இக்காலத்து நாகலிங்கப்பூ என வழங்குகிறது.




2013/9/29 devraj <rde...@gmail.com>

Subbaier Ramasami

unread,
Sep 30, 2013, 8:13:19 AM9/30/13
to சந்தவசந்தம்
நாகலிங்கப்பூ சிவனோடு தொடர்புடையது. எனவே தேவர்களோடு தொடர்புடையது. சுரர் என்றார் தேவர்கள். அசுரர் அதற்கு எதிர்மறை. அதனால்  தெய்வ மரம் என்பதைக்குறிக்க சுரபுன்னை என்று பெயர் வந்திருக்கலாம். எனவே இதை  வேற்றுமைத்தொகையாகக் கருத வாய்ப்புண்டு.

இலந்தை


2013/9/30 Siva Siva <naya...@gmail.com>

N. Ganesan

unread,
Sep 30, 2013, 8:13:41 AM9/30/13
to santhav...@googlegroups.com


On Monday, September 30, 2013 5:03:34 AM UTC-7, siva siva wrote:
சுரத்தல் / சுரம் என்ற சொற்களோடு தொடர்பு உண்டோ?

தேவாரப் பாடல்களிலும் சுரபுன்னை குறிப்பிடப்பெறுகின்றது.


1.38.2
உரவெங் கரியின் னுரிபோர்த்த
பரமன் னுறையும் பதியென்பர்
குரவஞ் சுரபுன் னையும்வன்னி
மருவும் மயிலா டுதுறையே.


குறிப்புரையில்: சுரபுன்னை - இது இக்காலத்து நாகலிங்கப்பூ என வழங்குகிறது.



நாகலிங்கப் பூ  மரம் என்பது பிரேசில் நாட்டில் இருந்து வந்த மரம்.
cannon ball tree எனப்படுவது. இந்தியாவுக்கு காலனி ஆட்சிக் காலத்தில்
வந்தது.

நா. கணேசன்

Iyappan Krishnan

unread,
Sep 30, 2013, 8:14:21 AM9/30/13
to சந்தவசந்தம்
சுரம், (p. 482) [ curm, ] s. Desert, jungle, காடு. 2. A parched, barren tract of land, பாலைநிலம். (See பாலை.) 3. A narrow and difficult path, அருநெறி. 4. A way in general, வழி. 5. Palm-wine, toddy, கள். 6. Salt, உப்பு. 7. [prov. impr. for சுரை.] The quick of a finger or toe nail, the part that adheres to the flesh, நகத்தடி. 8. The hollow part of a horn, a quill, or of bones, உட்டொளை- In this meaning the word is applied to the hollow of a tooth, of a tree or branch, and to the openings of an &AE;olian harp.  


N. Ganesan

unread,
Sep 30, 2013, 8:15:44 AM9/30/13
to santhav...@googlegroups.com
On Monday, September 30, 2013 5:03:34 AM UTC-7, siva siva wrote:
சுரத்தல் / சுரம் என்ற சொற்களோடு தொடர்பு உண்டோ?


ஆம். சிவ சிவா.

நா. கணேசன்

 
தேவாரப் பாடல்களிலும் சுரபுன்னை குறிப்பிடப்பெறுகின்றது.

Subbaier Ramasami

unread,
Sep 30, 2013, 8:21:21 AM9/30/13
to சந்தவசந்தம்
தேவாரப்பாடலிலே  குரவஞ்சுரம் என வந்திருப்பதால் வன்மையான சுரம் என்றும் பொருள்கொண்டு பாலை நிலத்தோடு தொடர்பு படுத்திப்பார்க்கலாம். 

இலந்தை


2013/9/30 N. Ganesan <naa.g...@gmail.com>

N. Ganesan

unread,
Sep 30, 2013, 8:23:25 AM9/30/13
to santhav...@googlegroups.com


On Monday, September 30, 2013 4:01:10 AM UTC-7, Ram wrote:
வினைத்தொகையும் கூட பெயர்சொல்லோடு தொடர்புடையதுதானே!

கருத்து முற்றுப்பெறாத ஒரு வினை பெயர்ச்சொல்லைத் தழுவி வருவது பெயரெச்சம். காலம் கரந்த பெயரெச்சம் வினைத்தொகை.

புன்னை என்று ஒரு மரம் இருக்கிறது. அந்த வகையைச் சார்ந்த இன்னொன்றை வேறுபடுத்திக் காட்டச் சுரபுன்னை வந்திருக்கிறது. எனவே இது இடுகுறிப்பெயரல்ல. காரணப்பெயர். ஆனால் வினைத்தொகை அல்ல

கூந்தல் பனை கூழைப்பனை என்று வருவதுபோல சுர புன்னை வந்துள்ளது. சுர  என்பதற்கு என்ன பொருள் என்று பார்க்க வேண்டும்



சுரபுன்னை என்பது வினைத்தொகை. திருக்குறளில் ஆபயன் என்னும் தொடர்போல். ஒற்று மிகுதலில்லை என்பதைக் கவனிக்க வேண்டும்.

இரண்டு அடிப்படையான பொருள்களில் சங்க இலக்கியம்  சுர- என்னும் சொல்லை ஆள்கிறது.
(1) அனுகரண ஓசை (மொழியியலில் ideophone. ஆப்பிரிக்க மொழிகளின்
இலக்கணத்தில் இருந்து உருவானது. த்ராவிட, துர்க்மேனிய, ஜப்பான் மொழிகளிலும்
இவற்றின் சொல்லாக்கம் மிகுதி). சுரசுர/சரசர.
இதிருந்து சுரம் > ஸ்வரம் (வடமொழியில்) என்னும் சொல் தோன்றுகிறது.

(2) சுள்-/சுட்-/சுர்- ‘வெம்மை’ என்ற பொருளில். சுரம் பாலை நிலம்.
உ-ம்: சுரம்போக்கு ‘elopement'. சுரம் - தமிழ்ச்சொல்லின் இரு வேர்களின் விளக்கம்:

ஓசை என்னும் பொருளில் வையை நதிக்கரை (மருதத் திணை)
மரங்களில் ஒன்றாக சுரபுன்னை சங்க இலக்கியம் பாடுகிறது.
நெய்தல் திணையிலும் வளரும் மரம் இது. இதன் தாவரவியற் பெயர்:
Long-leaved two-sepalled gamboge, m. tr., Ochrocarpus longifolius;
சுரபுன்னை அல்லது சுரபுன்னாகம் - ஒலிக்கும் புன்னை. hissing-sound tree.
நாகம் என்பதும் உண்டு. சுரம் - ஓசை. புன்னாகம்
(புன்னை மரங்களில் நாகம் போல் ஒலிக்கும்).

ஆபயன் (வினைத்தொகை குறளில்) - ஆப்பயன் வேறுபாடுபோல்,
சுரபுன்னை - வினைத்தொகை, சுரம் எழுப்புகிற புன்னை.
(சுரப்புன்னை என்றில்லை என்பது ஓர்க.)

நா. கணேசன் 

devraj

unread,
Sep 30, 2013, 8:24:55 AM9/30/13
to santhav...@googlegroups.com
On Monday, 30 September 2013 17:33:34 UTC+5:30, siva siva wrote:
உரவெங் கரியின் னுரிபோர்த்த
பரமன் னுறையும் பதியென்பர்
குரவஞ் சுரபுன் னையும்வன்னி
மருவும் மயிலா டுதுறையே.


குறிப்புரையில்: சுரபுன்னை - இது இக்காலத்து நாகலிங்கப்பூ என வழங்குகிறது.


சுரமகளிர் கற்பகப்பூஞ் 
                        சோலைகளின் மருங்கிருந்து
கரமலரின் அமுதூட்டுங் 
                        கனிவாய்மென் கிள்ளையுடன்
விரவுநறுங் குழலலைய 
                       விமானங்கள் விரைந்தேறிப்
பரவியஏழ் இசையமுதஞ் 
                       செவிமடுத்துப் பருகினார்.  
               [ஆனாய நாயனார் புராணம்]


தேவ்

Pas Pasupathy

unread,
Sep 30, 2013, 8:25:17 AM9/30/13
to santhav...@googlegroups.com
"சுரபுன்னை" என்பது, பாலைவனத்தில் வளர்கிற தாவரம். "சுரம்" என்ற சொல்லே பாலைவனத்தைக் குறிக்கும். அப்படியிருக்கும்போது வைகையீல் அது எப்படி வந்தது?"என்பது அவைநாயகனின் கேள்வி. புன்னை என்பது வேறு. சுரபுன்னை என்பது வேறு. சுரபுன்னை மாங்க்ரோஸ் வகையைச் சார்ந்தது என்றார் அவைநாயகன்.

பூ.சா.கோ.கலை அறிவியல் கல்லூரி தமிழ்ப்பேராசிரியர் கந்த சுப்பிரமணியம், "கடலில் கலக்காத வைகை இராமநாதபுரம் கண்மாய் வரை ஓடுகிறது. அங்கே சுரபுன்னை இருந்திருக்கலாம்" என்றார். தங்கவேல் சரவணன் இன்னொரு விளக்கம் சொன்னார். "சுரர்' என்பது தேவர்களைக் குறிக்கும். தேவ லோகத்தவர்களும் பயன்படுத்தும் புன்னை என்ற பொருளில் புன்னைக்குத் தரப்பட்ட அடைமொழி சுரபுன்னை என்றும் கொள்ளலாம்" என்றார்.

From :


2013/9/30 Subbaier Ramasami <elan...@gmail.com>

Iyappan Krishnan

unread,
Sep 30, 2013, 8:26:44 AM9/30/13
to சந்தவசந்தம்
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B4%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D

வழைமரம் (சுரபுன்னை)  பற்றிச் சங்கப்பாடல்கள் தரும் செய்திகள்
  • ஆய் அண்டிரனின் குடிப்பூ வழை. [2]
  • குறிஞ்சி நில மகளிர் குவித்து விளையாடியதாகக் கூறப்பட்டுள்ள 99 மலர்களில் ஒன்று வழை. [3]
  • வையை ஆறு அடித்துக்கொண்டுவந்த மலர்களில் ஒன்று. [4]
  • நல்ல நீரோட்டமுள்ள நிலத்தில் வழை வளரும். [5]
  • கழை என்னும் பெருமூங்கில், ஆசினிப்பலா போன்ற மரங்களுடன் சேர்ந்து வளரும். [6]
  • குமணன் ஆண்ட முதிரமலையில் கழை வளர்ந்திருந்த்து. [7]
  • தொண்டைநாட்டு மலைகளில் செழித்திருந்த்து. [8]
  • யானை விரும்பும் தழைமரம். [9]
  • மூங்கில் நெல் அரிசி போட்டுக் குறமகள் வழை வளர்ந்த மலைச்சாரல் மணக்கும்படி சோறு ஆக்கினாள். [10]
  • வழை வளர்ந்த காடு நீர்வளம் மிக்கது ஆகையால் பாலைநிலமாக மாறுவதில்லை. [11]
  • வழைக்காட்டில் வருடை மான்களை மலைமக்கள் வளர்ப்பர். [12]
பண்புப்பெயர்
வழைச்சு என்னும் சொல் ‘குழகுழத்’ தன்மையைக் குறிக்கும். [13]



Iyappan Krishnan

*>*<*
"பொல்லாங்கு சொல்பவர்கள், தன்முதுகை பார்ப்பதில்லை
நல்லோர்கள் அவர் பேச்சை எந்நாளும் கேட்பதில்லை "
*>*<*
Dont argue with ppl who say "World is flat" but advise them not to reach the edge of the world
*>*<*
**


2013/9/30 devraj <rde...@gmail.com>

devraj

unread,
Sep 30, 2013, 8:42:11 AM9/30/13
to santhav...@googlegroups.com
On Monday, 30 September 2013 17:55:17 UTC+5:30, பசுபதி wrote:
"சுரபுன்னை" என்பது, பாலைவனத்தில் வளர்கிற தாவரம். "சுரம்" என்ற சொல்லே பாலைவனத்தைக் குறிக்கும். அப்படியிருக்கும்போது வைகையீல் அது எப்படி வந்தது?

                     பரிபாடல் 

11. வையை

மழை பொழிய வையையின் நீர் பெருகி ஓடுதல்


புரை கெழு சையம் பொழி மழை தாழ,
நெரிதரூஉம் வையைப் புனல்.
வரையன புன்னாகமும்,
கரையன சுரபுன்னையும்,
வண்டு அறைஇய சண்பக நிரை, தண் பதம்
மனைமாமரம் வாள்வீரம்,
சினை வளர் வேங்கை, கணவிரி காந்தள்,
தாய தோன்றி தீயென மலரா....... 


தேவ்

N. Ganesan

unread,
Sep 30, 2013, 8:44:21 AM9/30/13
to santhav...@googlegroups.com


On Monday, September 30, 2013 5:21:21 AM UTC-7, Ram wrote:
தேவாரப்பாடலிலே  குரவஞ்சுரம் என வந்திருப்பதால் வன்மையான சுரம் என்றும் பொருள்கொண்டு பாலை நிலத்தோடு தொடர்பு படுத்திப்பார்க்கலாம். 

இலந்தை



சுரபுன்னாகம் - சுரசுர என்னும் hissing-ஐக் குறிக்கிற வினைத்தொகை. சுரசுர என்னும் அனுகரணவோசை.
அனுகரணவோசை - மொழியியலில் ideophone எனப்படுகிறது. 1930-களில் this linguistic phenomenon was
discovered. Dr. Jean-Luc Chevillard has written two papers listing all ideophones from Tamil Lexicon and describing
this phenomenon. Many words in the Indian linguistic area can be described as originating from ideophones.
மேலும் நல்ல நீர்வளம் கொண்ட மருதம், நதிகள் கடலில் கலக்கும் நெய்தல் திணைகளில் வளரும் மரம்.
எனவே தான், சுரம் என்பது பாலை நிலத்தைக் குறிப்பதன்று. மேலும் பாலைனில மரம் எனில்
சுரப்புன்னை என்று தமிழில் பதிவாகும் (ஒற்று மிகும்).
 
அனுகரணவோசைச் சொற்கள் தரும் இந்தியாவில் வழங்கும் சொற்களும், அனுகரணஒலிக்குறிப்புகள் பற்றியும்
நிறைய இந்த நூற்றாண்டில் ஆராயலாம். உ-ம்:

(1) சுரம் (> ஸ்வரம்) - சுரசுர என்னும் ideophone. சுரம் > ஸ்வரம்.

இதனின்றும் வேறான சொல்:
(2) சுரம் சுள்-/சுட்-/சுர்- என்னும் பாலைநிலம். சுரம் > ஜுரம் > ஜ்வரம்.

devraj

unread,
Sep 30, 2013, 8:45:20 AM9/30/13
to santhav...@googlegroups.com
On Monday, 30 September 2013 15:13:37 UTC+5:30, மகுடதீபன் wrote:
சுரபுன்னை ஒரு வகை மரம். ( பெயர் சொல்லே !)

சுரபுன்னை -



தேவ்

N. Ganesan

unread,
Sep 30, 2013, 8:47:38 AM9/30/13
to santhav...@googlegroups.com


On Monday, September 30, 2013 5:21:21 AM UTC-7, Ram wrote:
தேவாரப்பாடலிலே  குரவஞ்சுரம் என வந்திருப்பதால் வன்மையான சுரம் என்றும் பொருள்கொண்டு பாலை நிலத்தோடு தொடர்பு படுத்திப்பார்க்கலாம். 


தேவாரப் பாடலில் மருத நிலத்தின் நீர்வளமும், நீர்வளத்தால் விளையும் மரங்களும் பேசப்படுகின்றன.
குரவஞ்சுரபுன்னை 
குரவம் = குரா மரம்.
சுரபுன்னை = சுரபுன்னாகம் (அனுகரணவோசை தரும் வினைத்தொகை. சுரம் என்னும் பாலைநிலமன்று.)

நா. கணேசன்

N. Ganesan

unread,
Sep 30, 2013, 8:50:38 AM9/30/13
to santhav...@googlegroups.com


On Monday, September 30, 2013 5:25:17 AM UTC-7, பசுபதி wrote:
"சுரபுன்னை" என்பது, பாலைவனத்தில் வளர்கிற தாவரம். "சுரம்" என்ற சொல்லே பாலைவனத்தைக் குறிக்கும். அப்படியிருக்கும்போது வைகையீல் அது எப்படி வந்தது?"என்பது அவைநாயகனின் கேள்வி. புன்னை என்பது வேறு. சுரபுன்னை என்பது வேறு. சுரபுன்னை மாங்க்ரோஸ் வகையைச் சார்ந்தது என்றார் அவைநாயகன்.

பூ.சா.கோ.கலை அறிவியல் கல்லூரி தமிழ்ப்பேராசிரியர் கந்த சுப்பிரமணியம், "கடலில் கலக்காத வைகை இராமநாதபுரம் கண்மாய் வரை ஓடுகிறது. அங்கே சுரபுன்னை இருந்திருக்கலாம்" என்றார். தங்கவேல் சரவணன் இன்னொரு விளக்கம் சொன்னார். "சுரர்' என்பது தேவர்களைக் குறிக்கும். தேவ லோகத்தவர்களும் பயன்படுத்தும் புன்னை என்ற பொருளில் புன்னைக்குத் தரப்பட்ட அடைமொழி சுரபுன்னை என்றும் கொள்ளலாம்" என்றார்.


தமிழின் மரம், செடி, உயிரிகள், விலங்குகள், பறவை, மீன்கள், ... ஆய்வுகள் தொடக்க நிலையில் தான் உள்ளன
என்பதைக் காட்டும் நல்ல பதிவு. மரபின்மைந்தன் முத்தையா (கோவை) சுரபுன்னை - அனுகரண ஓசை
தரும் வினைத்தொகை பதிவு எழுதி அனுப்புவேன்.

நா. கணேசன்

 

Siva Siva

unread,
Sep 30, 2013, 8:53:32 AM9/30/13
to santhavasantham
Thanks for the link to that interesting discussion.

Happened to come across this song of Sambandar - that is for kEdaram - that is in the Himalayas.


2.114.8
அரவமுந்நீர் அணியிலங்கைக் கோனையரு வரைதனால்
வெருவவூன்றி விரலா லடர்த்தார்க் கிடமென்பரால்
குரவங்கோங்கங் குளிர்பிண்டி ஞாழல்சுர புன்னைமேல்
கிரமமாக வரிவண்டு பண்செய்யுங் கேதாரமே.

FYI



2013/9/30 Pas Pasupathy <pas.pa...@gmail.com>

Subbaier Ramasami

unread,
Sep 30, 2013, 8:59:30 AM9/30/13
to சந்தவசந்தம்
ஆபயன்  என்பது ஆகும் பயன் ஆகிய பயன், ஆகின்ற பயன் என முக்காலங்களையும் குறிக்கும் எனவே வினைத்தொகை.சுர  என்பது வினையேயல்ல. எனவே வினைத்தொகை என்ற பேச்சுக்கு இடமில்லை. சுரம் என்பதைச் சுடுகின்ற சுடும் சுட்ட என்ற பொருளில் கருதினால் வினைத்தொகையாகும் வெம்மை என்ற பண்பைக்கொண்டு பார்த்தால் வினைத்தொகை ஆகாது. வலி மிகவில்லை என்பதை மட்டும் கொண்டு 
வினைத்தொகை என்று சொல்லும் வழக்கமில்லை.

சரி அந்த விவாதத்தை விட்டுவிட்டு சுரபுன்னை என்னும் மரம் எதுவெனப் பார்ப்போம்.

குறிஞ்சிப்பாடலில் வரும் 99 பூக்களில் புன்னை இரண்டு இடங்களில் பேசப்படுகிறது. 
1  வழை  2  புன்னை

இரண்டிற்கும்
http://ayurvedamaruthuvam.forumta.net/t1657-99 இந்தத் தளத்தில் படங்கள் போட்டிருக்கிறார்கள். என்னால் அதில் உள்நுழைந்து படங்களைக் காணக்கூடவில்லை. உறுப்பினர்கள் படங்களைக் காணலாமாம்


இலந்தை


2013/9/30 N. Ganesan <naa.g...@gmail.com>


N. Ganesan

unread,
Sep 30, 2013, 9:04:51 AM9/30/13
to santhav...@googlegroups.com


On Monday, September 30, 2013 5:59:30 AM UTC-7, Ram wrote:
ஆபயன்  என்பது ஆகும் பயன் ஆகிய பயன், ஆகின்ற பயன் என முக்காலங்களையும் குறிக்கும் எனவே வினைத்தொகை.சுர  என்பது வினையேயல்ல. எனவே வினைத்தொகை என்ற பேச்சுக்கு இடமில்லை. சுரம் என்பதைச் சுடுகின்ற சுடும் சுட்ட என்ற பொருளில் கருதினால் வினைத்தொகையாகும் வெம்மை என்ற பண்பைக்கொண்டு பார்த்தால் வினைத்தொகை ஆகாது. வலி மிகவில்லை என்பதை மட்டும் கொண்டு 
வினைத்தொகை என்று சொல்லும் வழக்கமில்லை.

சரி அந்த விவாதத்தை விட்டுவிட்டு சுரபுன்னை என்னும் மரம் எதுவெனப் பார்ப்போம்.


சுரபுன்னை என்ற சொல்லில் இருப்பது சுரசுர என்னும் அனுகரணவோசையால் எழும் சொல் சுர-.
இதற்கும், சுள்-(சுள்ளி),/சுடு-/சுர- (சுருக், சூரியன் > ஸூர்ய) - வெம்மை பொருட்சொற்களுக்கும் தொடர்பில்லை.

இரண்டு வெவ்வேறான் பொருள்கள்.

நா. கணேசன்
 
குறிஞ்சிப்பாடலில் வரும் 99 பூக்களில் புன்னை இரண்டு இடங்களில் பேசப்படுகிறது. 

Subbaier Ramasami

unread,
Sep 30, 2013, 9:29:46 AM9/30/13
to சந்தவசந்தம்
நான் linguistics அறிஞனில்லை.  ஆனால் சுரம் என்ற சொல்லுக்கு வெம்மைத் தன்மையுண்டு என்று தெரியும். அதற்கு சுடுதலை இணைக்க முடியும்.

இலந்தை 

N. Ganesan

unread,
Sep 30, 2013, 9:34:57 AM9/30/13
to santhav...@googlegroups.com
On Monday, September 30, 2013 5:53:32 AM UTC-7, siva siva wrote:
Thanks for the link to that interesting discussion.

Happened to come across this song of Sambandar - that is for kEdaram - that is in the Himalayas.


2.114.8
அரவமுந்நீர் அணியிலங்கைக் கோனையரு வரைதனால்
வெருவவூன்றி விரலா லடர்த்தார்க் கிடமென்பரால்
குரவங்கோங்கங் குளிர்பிண்டி ஞாழல்சுர புன்னைமேல்
கிரமமாக வரிவண்டு பண்செய்யுங் கேதாரமே.

FYI


Yes. there are many tropical forests with rich water resources with surapunnAga trees.
This sura- prefix in surapunnai/surapunnAgam is not from deserts "sura".
Two totally different words but with same sound, called homophones.

குழகுழ என்னும் அனுகரணச்சொல் தருவது குழைத்தல் என்னும் வினை. 
குழவி (, < குழை- எனும் வினை). அதுபோல், சுரசுர எனும் அனுகரண
ஒலிக்குறிப்பு தருவது சுர- என்னும் வினைச்சொல். அதிலிருந்து,
சுரபுன்னை ‘hissing punnaaga'. Also, the word, suram in Tamil, Prakrit etc.,
which becomes svara in Sanskrit. We need to check any cognate for svara in IE languages.

N. Ganesan

N. Ganesan

unread,
Sep 30, 2013, 9:36:36 AM9/30/13
to santhav...@googlegroups.com


On Monday, September 30, 2013 6:29:46 AM UTC-7, Ram wrote:
நான் linguistics அறிஞனில்லை.  ஆனால் சுரம் என்ற சொல்லுக்கு வெம்மைத் தன்மையுண்டு என்று தெரியும். அதற்கு சுடுதலை இணைக்க முடியும்.


ஆம். அதிலிருந்து பிறக்கும் தமிழ்ச்சொல்: சூரியன் (> ஸூர்ய).

சுள்-(சுள்ளி),/சுடு-/சுர- (சுருக், சூரியன் > ஸூர்ய) -
 
இலந்தை 


devraj

unread,
Sep 30, 2013, 10:31:16 AM9/30/13
to santhav...@googlegroups.com
On Monday, 30 September 2013 18:59:46 UTC+5:30, Ram wrote:
நான் linguistics அறிஞனில்லை.  ஆனால் சுரம் என்ற சொல்லுக்கு வெம்மைத் தன்மையுண்டு என்று தெரியும். அதற்கு சுடுதலை இணைக்க முடியும்.


சுரத்தால் என்பதற்கு ஒலி எழுப்புதல் என்று பொருள்
சொல்கிறார் டாக்டர் நா.கணேசன்; அது ஏற்புடையதா 
என்று சொல்லுங்கள் , ஐயா.

சுரபுன்னை அல்லது சுரபுன்னாகம் - ஒலிக்கும் புன்னை

On Monday, 30 September 2013 17:53:25 UTC+5:30, N. Ganesan wrote:
சுரபுன்னை என்பது வினைத்தொகை. 
ஓசை என்னும் பொருளில் வையை நதிக்கரை (மருதத் திணை)
மரங்களில் ஒன்றாக சுரபுன்னை சங்க இலக்கியம் பாடுகிறது.
நெய்தல் திணையிலும் வளரும் மரம் இது. இதன் தாவரவியற் பெயர்:
Long-leaved two-sepalled gamboge, m. tr., Ochrocarpus longifolius;
சுரபுன்னை அல்லது சுரபுன்னாகம் - ஒலிக்கும் புன்னை. hissing-sound tree.
நாகம் என்பதும் உண்டு. சுரம் - ஓசை. புன்னாகம்
(புன்னை மரங்களில் நாகம் போல் ஒலிக்கும்).



தேவ் 

N. Ganesan

unread,
Sep 30, 2013, 10:39:53 AM9/30/13
to santhav...@googlegroups.com


On Monday, September 30, 2013 7:31:16 AM UTC-7, devraj wrote:
On Monday, 30 September 2013 18:59:46 UTC+5:30, Ram wrote:
நான் linguistics அறிஞனில்லை.  ஆனால் சுரம் என்ற சொல்லுக்கு வெம்மைத் தன்மையுண்டு என்று தெரியும். அதற்கு சுடுதலை இணைக்க முடியும்.


சுரத்தால் என்பதற்கு ஒலி எழுப்புதல் என்று பொருள்
சொல்கிறார் டாக்டர் நா.கணேசன்; அது ஏற்புடையதா 
என்று சொல்லுங்கள் , ஐயா.


சுரைதல் - ஒலி எழுப்புதல். சுரசுர என்னும் தொடர் தரும் வினைச்சொல்.
இதிலிருந்து வரும் பெயர்ச்சொற்கள் சுரை, சுரம் (ஸ்வரம்).
(Cf. குழைதல் - குழகுழ என்னும் தொடரால் வரும் வினைச்சொல்.
இதிலிருந்து குழகளிறு, குழவி, ...)
 
குழகளிறும் சுரபுன்னாகமும்:

நா. கணேசன்

Iyappan Krishnan

unread,
Sep 30, 2013, 10:51:38 AM9/30/13
to சந்தவசந்தம்

குழவு, (p. 335) [ kuẕvu, ] adj. Young, youthful, juvenile, இளம், --Note. The வு is sometimes drop ped in combination.

குழக்கன்று, s. A young calf, இளங் கன்று.
குழமகன், s. A male infant, குழந்தை. 2. A doll, குழந்தைப்பிரதிமை. 3. A poem in praise of a male infant, ஓர்பிரபந்தம்.
குழவி, s. An infant, a babe, குழந்தை. 2. The young of the elephant, camel, buffalo, the fabulous wild cow, deer, hog, red monkey; also of animals that live on the branches of trees--as mon keys, squirrels, chameleons and some other lizards, sloths, &c., விலங்கின்பிள்ளை. 3. A sapling, a sucker, the young of trees and some vegetables. (See மரக்கன்று.) 4. The roller in a pair of grinding stones; lit. the little or young one, அம் மிக்குழவி. 5. Early part of life, youth hood, juvenility, இளமை. 6. The young moon, வாலசந்திரன். 7. Greatness, பெரு மை.

குழ குழக்கும் இதுக்கும் எப்படி வருகிறது  சம்பந்தம் ? புரியவில்லை. 

Siva Siva

unread,
Sep 30, 2013, 10:55:04 AM9/30/13
to santhavasantham
இழை தடம் மாறிச்செல்கின்றதோ?

சுரபுன்னையை நேரில் பார்த்துள்ளவர்கள் அதன் படத்தை இடலாமே!

sankara dass nagoji

unread,
Sep 30, 2013, 11:14:08 AM9/30/13
to santhav...@googlegroups.com
யானறிந்து, நேரில் பார்த்து, விசில் அடித்த  அளவில்.
புன்னை மரத்தின் காய் சுண்டைக்காயை விட சற்றுப் பெரியதாக உருண்டையாக கோலி போல் இருக்கும்.
அது உதிரும் போது, காம்பும் காயும் இணையும் பகுதி சற்று மெல்லியதாக இருக்கும். அந்தப்
பகுதி வெய்யிலில் காய்ந்து ஓட்டை ஆகி விடும். நாங்கள் அதை எடுத்து விசில் அடிக்க
உபயோகப் படுத்துவோம். (ஆற்றங்கரையில் இருக்கும் சிறு சங்கும் விசிலடிக்க உதவும்.)
புன்னைக் காய் உதிர்ந்து சமயத்தில் அதன் கிளைகளிலேயே சிக்கி இருக்கும். காற்று
வேகமாக அடிக்கும் போது, நிஜமாகவே மரம் உய்ங்ங்.. என்று விசில்-சத்தம்-சுரம் கொடுப்பது
போல் இருக்கும். ஓட்டையின் அளவுக்கு ஏற்ப சத்தம் மாறும்.

- சங்கர தாஸ்


On Monday, September 30, 2013 9:20:12 AM UTC+5:30, devraj wrote:
’சுரபுன்னை’ பொருள் என்ன ?
அது வினைத் தொகையா ?


தேவ்

Subbaier Ramasami

unread,
Sep 30, 2013, 11:49:29 AM9/30/13
to சந்தவசந்தம்
தொடங்கிய நிலையிலிருந்து விவாதம் வேறு எங்கோ போகிறது. 

என்ன பொருளில் சுரம் என்ற சொல்லை எடுத்துக்கொள்கிறோம் என்பதைக் கொண்டு வினைத்தொகையாகவோ வேற்றுமைத்தொகையாகவோ பண்புத்தொகையாகவோ கொள்ளலாம் என்று முடிவுசெய்து இந்த விவாதத்தை நிறைவு செய்கிறோம்.

 ஏற்கனவே எங்காவது  கேட்கப்பட்டு விவாதிக்கப்பட்டிருந்தால் இங்கே மீண்டும் விவாதத்தைக் கிளப்புவதற்காகக் கேள்வியை எழுப்பாதீர்கள்.  கேட்கப்படுபவை அறியாவினாவாக இருக்கட்டும். அறிவினா வேண்டாம்

இலந்தை


2013/9/30 sankara dass nagoji <nag...@gmail.com>

--

Subbaier Ramasami

unread,
Sep 30, 2013, 6:54:43 PM9/30/13
to சந்தவசந்தம்
நீங்கள் எழுதியிருப்பதில் எந்த மாற்றுக்கருஹ்ட்தும் இல்லை. தகவல் கொடுத்திருக்கிறீர்கள்.

ஏற்கனவே வேறு தளங்களில் விவாதிக்கப்பட்டதை வம்புக்காக இங்கே கொடுப்பதை நாம் அனுமதிக்க முடியாது.

நமது முதல்கட்ட நடவடிக்கையாக அப்படி எதாவது எழுப்பப்பட்டால் அது உங்களுக்குத் தெரியவந்தால் தயவு செய்து பின்னூட்டம் கொடுக்காதீர்கள். 


நான் வேறு தளங்களுக்குச் செல்வதில்லையாகையால் எனக்கு அது தெரியவராது.  

இலந்தை


2013/9/30 sankara dass nagoji <nag...@gmail.com>
யானறிந்து, நேரில் பார்த்து, விசில் அடித்த  அளவில்.

--

devraj

unread,
Oct 1, 2013, 1:11:12 AM10/1/13
to santhav...@googlegroups.com
On Monday, 30 September 2013 21:19:29 UTC+5:30, Ram wrote:
  கேட்கப்படுபவை அறியாவினாவாக இருக்கட்டும். அறிவினா வேண்டாம்

சுரத்தல் , சுரைதல் போன்றவற்றுக்கு ஒலி எழுப்புதல் எனும் பொருள்
இருக்கிறதா? இது அறியாமையால் எழுப்பப்படும் வினா. தமிழறிஞர்கள்
நிறைந்த இந்த அவையில் கேட்காமல் வேறு எங்கு கேட்பது ?
தமிழிலக்கியத்தின் பரப்பு மிகவும் பெரியது. அனைத்தும்
இணையத்தில் ஏறவில்லை. இணையத்தில் பார்த்துத் தெரிந்து
கொள்ள இயலாமை காரணமாக இங்கு கேட்க நேர்கிறது.
இதை விளக்கவல்ல லிங்க் இருந்தால் அன்பர்கள் யாராவது 
கொடுத்து உதவலாம்

அன்புடன்
தேவ்

N. Ganesan

unread,
Oct 1, 2013, 9:36:53 AM10/1/13
to santhav...@googlegroups.com
சுரசுர என்னும் அனுகரணஓசையில் இருந்து எழும் வினைச்சொல்
கன்னடத்தில் இன்றும் இருக்கிறது. தமிழில் குழைகிற கன்று
குழகன்று என்றும், சுரைகிற புன்னை என்பதால் சுரபுன்னை
இருக்குமாப்போல. சம்ஸ்கிருதம் சுரையும் புன்னை - ஒலிக்கும்
புன்னை என்பதை சுர-பர்ணிகா என மாற்றுகிறது. அதாவது
ஒலிக்கும் இலைகள் கொண்ட புன்னைநாகம் மரம்.
தமிழில் ஒருகருத்தை வலுச்சேர்த்த இருமுறை சொற்களில்
வரும். கங்காணி (கண்காணி), போஸ்ட்கம்பம், ... என்றெல்லாம்
சொல்தல் இதனாற்றான். அதுபோல் hissing Punnai tree என்று
சுரைகிற புன்னை நாகம் என்பதை சுரபுன்னாகம் (சுருக்கமாக,
சுரபுன்னை) என்கிறது இலக்கியம். வடமொழியிலும் தமிழ்ப்
பெயர் புன்னாகம் என்று கடன்பெறுகிறது. hissing ஒலி எழுப்புவதால்
உட்டுளை கொண்டவற்றுக்கு சுரை என்றே பெயர் - இது சுரசுர
என்னும் ஒலிக்குறிப்பு தோற்றுவிப்பது. நிரஞ்சன் பாரதியின்
கேள்விக்கு இன்றும் வழக்கத்தில் உள்ள சுரை என்பதனைத்
துடுப்பாட்டத்தில் பயன்படும் கை க்ளவ்ஸ்க்கு பயன்படுத்தாலாம்
என்று பரிந்துரைத்தேன்.

கவிஞர் வைரமுத்துவின் புகழ்பெற்ற மதுரை மீதான பாடலில்,
நதிக்கரையில் உள்ள சுரபுன்னை பற்றிய வரிகள்:

மல்லிகை மௌவல் அரவிந்தம் - வாய்
        மலரும் கழுநீர் சுரபுன்னை
குல்லை வகுளம் குருக்கத்தி - இவை
        கொள்ளை அடித்த வையைநதி
            நாளும் ஓடிய நதிமதுரை - நீர்
            நாட்டிய மாடிய பதிமதுரை

முழுப்பாடலும் இங்கே,

மருதம், நெய்தல் போன்ற நீர்வளம் மிக்க நிலங்களில் வளர்வது.
எனவே, சுரபுன்னையில் சுரம் - பாலை என்னும் பொருளில்லை.
சுரைகிற புன்னை, குழைகிற குழைந்தை (குழமகள்), .... என்று
பொருள் கொள்ளவேண்டும்.

அனுகரண ஓசைகளில் இருந்து தொல்தமிழில் சொற்கள்
பிறக்குமா? என்னும் உங்கள் கேள்விக்கு விடை:
ஏராளமான சொற்கள் தமிழில்/திராவிட மொழிகளில் அவ்வாறு
தோன்றியுள்ளன.

(1) குழ- என்னும் பெயர்/வினைச் சொற்கள் குழகுழ/கொழுகொழு (குழகளிறு)
(2) மழ- என்னும் பெயர்/வினைச் சொற்கள் மழமழ/மொழுமொழு (மழகன்று)
(3) சுர- என்னும் பெயர்/வினைச் சொற்கள் சுரசுர/சொரசொர (சுரபுன்னை). 
[தெலுங்கில் சொரமு - ஒலி. தமிழில் சுரம். ஆங்கிலத்தின் supine 'தூக்கம்’, 
இந்தச் சொல்லை ஸ்வப்னம் என்று வடமொழி மாற்றுகிறது.
அதுபோல், சுரம் > ஸ்வரம் என வடசொல் ஆக்குகிறது.]
(4) வழு- என்னும் பெயர்/வினைச் சொற்கள் வழுவழு
(5) குர-  பெயர்/வினைச் சொற்கள் குரகுர (உ-ம்: குரைகடல் என்னும் வினைத்தொகை) 
- இயற்கையாக உருவான அனுகரணவோசைகளில் இருந்தும் 
உருவான பெயர்/வினைச் சொற்கள் நிறைய உள்ளன.

முக்கிய உதாரணம்: பழந்தமிழர் படைத்த கடவுள்களில் ஒன்று:
கமகம- தரும் சொல் கமம். தொல்காப்பியத்தில் ’கமம் நிறைந்து இயலும்’
என்பதில் “குழம்பு கமகம என மணக்கிறது” என்னும் அனுகரணச்சொல்லில்
இருந்து உருவானது. எனவேதான், காமம், காமவேள், அணங்கன்/அனங்கன்
என்னும் தமிழ்ச்சொற்களைக் கொண்ட இறை தமிழர்கள் உருவாக்கியது
என்று இந்தியவியல் நிபுணர்கள் புத்தகங்கள் எழுதுகிறார்கள். அணங்கு
என வருணன், சிவன், பார்வதி போல, அனங்கன் (அ) காமனும் அழைக்கப்படுகிறான்.
பார்வதியாக தமிழணங்கை வழிபடுகிறார் பெ. சுந்தரனார். அணுங்கு அனுங்கு
என்றாகிறது பழைய இலக்கியங்களில். அணு, அனங்கன்/அணங்கன் என்பதற்கான
மூல வினைச்சொற்கள் இவை. காமன் ஆகிய அணங்கவேளின் ஹோளி பண்டிகை,

அன்புடன்,
நா. கணேசன்


இராம்குமார் முகவை

unread,
Oct 1, 2013, 12:40:24 PM10/1/13
to santhav...@googlegroups.com
பாலை நிலத்தில் சுரபுன்னை விளையும். சரி. அதற்கும் இராமநாதபுரம் என்னும் முகவையில் வையை ஓடுவதற்கும் என்ன தொடர்பு. ஆறில்லா ஊருக்குத் தான் அழகு பாழ்!

முகவை இராம்குமார்.


2013/9/30 Pas Pasupathy <pas.pa...@gmail.com>

Subbaier Ramasami

unread,
Oct 1, 2013, 2:20:30 PM10/1/13
to சந்தவசந்தம்
இராம்குமார். கீழ்க்கண்டவாறு மட்டுறுத்துனர் எழுதிய பிறகு அதைத் தொடருதல் சரியல்ல.


என்ன பொருளில் சுரம் என்ற சொல்லை எடுத்துக்கொள்கிறோம் என்பதைக் கொண்டு வினைத்தொகையாகவோ வேற்றுமைத்தொகையாகவோ பண்புத்தொகையாகவோ கொள்ளலாம் என்று முடிவுசெய்து இந்த விவாதத்தை நிறைவு செய்கிறோம்.

இலந்தை


2013/10/1 இராம்குமார் முகவை <mugav...@gmail.com>

devraj

unread,
Oct 20, 2013, 5:13:59 AM10/20/13
to santhav...@googlegroups.com
இலக்கியத்தில் ‘வெறுங்கை வேடன்’
எங்கு இடம் பெறுகிறது ?

பொருள் என்ன ?

அறியா வினா என உறுதியளிக்கிறேன்


தேவ்

Subbaier Ramasami

unread,
Oct 20, 2013, 9:33:17 AM10/20/13
to சந்தவசந்தம்
வெறுங்கை வேடன் வேங்க டேசன்
குறங்கைத் தாண்டிய குளிர்நெடுங் கையன்
இலக்கியச் சான்றிங்கு  எடுத்துக் கொடுக்க
நலமாய் அருள்க நாளிரு மூன்றிலே!

இலந்தை


2013/10/20 devraj <rde...@gmail.com>

--

Siva Siva

unread,
Oct 20, 2013, 10:36:32 AM10/20/13
to santhavasantham
தேடியதில் பல இடங்களில் திருப்பதி இறைவனைக் குறிக்கும் என்று இச்சொற்றொடரைப் பலரும் மேற்கோளாகக் காட்டுகின்றனர். ஆனால், இலக்கியத்தில் நேரடியாகக் காணும் இடம் சிக்கவில்லை!

அது நிற்க.

ஏழுமலையான் ஒரு கையில் சக்கரம் ஏந்தியுள்ளார் அன்றோ? அது ஆயுதம் இல்லையா? இன்னொரு கையில் சங்கும் உள்ளதே. அப்படி இருக்க அவரை 'வெறுங்கை' என்று எப்படிச் சொல்ல இயலும்?

ஒருவேளை மாணி உருவில் மாவலிபாற் சென்று இரந்ததைச் சுட்டும் தொடரோ? (வெறுங்கை - வறுமை; வேடன் - வேடத்தை உடையவன்);

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2013/10/20 devraj <rde...@gmail.com>

devraj

unread,
Oct 20, 2013, 11:35:04 AM10/20/13
to santhav...@googlegroups.com
On Sunday, 20 October 2013 19:03:17 UTC+5:30, Ram wrote:
வெறுங்கை வேடன் வேங்க டேசன்
குறங்கைத் தாண்டிய குளிர்நெடுங் கையன்
இலக்கியச் சான்றிங்கு  எடுத்துக் கொடுக்க
நலமாய் அருள்க நாளிரு மூன்றிலே!

குறங்கைத் தாண்டிய குளிர்நெடுங் கையன் - ஆகா !
மிக அருமையான பாடலுக்கு மிக்க நன்றி, ஐயா


தேவ் 

Pas Pasupathy

unread,
Oct 20, 2013, 11:41:04 AM10/20/13
to santhav...@googlegroups.com
சங்கும், சக்கரமும் “கைகளில்” இல்லை ;  ”தோள்களில் ” மேல் தாம் உள்ளன என்பர்.

அதனால், மூலச் சிலையில் இரு கைகள் தாம்; இரண்டும் வெறுங்கைகள் தாம் என்பர்.
அதனால், அந்தச் சொற்றொடர் எழுந்திருக்கலாம்.


2013/10/20 Siva Siva <naya...@gmail.com>

-- 

devraj

unread,
Oct 20, 2013, 11:46:18 AM10/20/13
to santhav...@googlegroups.com
On Sunday, 20 October 2013 21:11:04 UTC+5:30, பசுபதி wrote:
சங்கும், சக்கரமும் “கைகளில்” இல்லை ;  ”தோள்களில் ” மேல் தாம் உள்ளன என்பர்.

சங்கும், சக்கரமும் ஸ்ரீ ராமாநுஜரால் பிற்காலத்தில்
பொருத்தப்பட்டவை என்பது வரலாறு


தேவ் 

Subbaier Ramasami

unread,
Oct 21, 2013, 3:02:19 PM10/21/13
to சந்தவசந்தம்
சங்கும் சக்கரமும் கைகளில் ஏன்இ வடவேங்கடத்தான் நின்றதாக சிலப்பதிகாரம் சொல்கிறது.

வீங்குநீ ரருவி வேங்கட மென்னும்
ஓங்குயர் மலையத் துச்சி மீமிசை
விரிகதிர் ஞாயிறுந் திங்களும் விளங்கி
இருமருங் கோங்கிய இடைநிலைத் தானத்து
மின்னுக்கோடி யுடுத்து விளங்குவிற் பூண்டு
45

நன்னிற மேகம் நின்றது போலப்
பகையணங் காழியும் பால்வெண் சங்கமும்
தகைபெறு தாமரைக் கையி னேந்தி
நலங்கிளர் ஆரம் மார்பிற் பூண்டு
பொலம்பூ வாடையிற் பொலிந்து தோன்றிய
50

செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்
என்கண் காட்டென் றென்னுளங் கவற்ற
வந்தேன் குடமலை மாங்காட் டுள்ளேன்
தென்னவன் நாட்டுச் சிறப்புஞ் செய்கையும்
கண்மணி குளிர்ப்பக் கண்டே   -- சிலப்பதிகாரம்   காடுகாண்காதை


2013/10/20 devraj <rde...@gmail.com>

--

devraj

unread,
Oct 22, 2013, 11:24:57 AM10/22/13
to santhav...@googlegroups.com
வெறுங்கை வேடன் என்பதை இணையத்தில்
முதலில் சொன்னது யார் ? பலரும் அதையே
பேசுகிறார்கள் - ஒத்தி ஒட்டுகிறார்கள். 
இலக்கியத்தில் எங்கே இன்னும்
தெரியவில்லை :))


சந்த வசந்தம் போன்ற குழுமங்களாவது
இத்தகைய ஆதாரமற்ற சொற்கள் புழங்குவதை 
எடுத்துக்காட்ட வேண்டும்


தேவ்

Subbaier Ramasami

unread,
Oct 22, 2013, 11:33:44 AM10/22/13
to சந்தவசந்தம்
நானும் தேடிப்பார்த்துவிட்டேன்.  கிடைக்கவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம். 

இலந்தை

எனக்கு ஒரு பொருள் தெரிகிறது. பணம் இல்லாமல் வெறுங்கையனாகக் குபேரனிடம் பணம் கடன் வாங்கியதாகவும் இன்னும் அந்தப் பணத்தைத் திருப்பிக்கொடுத்துக்கொண்டிருப்பதாகவும் ஒரு கதையுண்டு. எனவே எவ்வளவு பணம் வந்தாலும் அவன் வெறுங்கையன்தானே!

கரத்தில் எதையும் வைத்துக்கொள்ளாமல் பக்தர்களுக்கு அள்ளி அள்ளிக் கொடுப்பதாலும் அவன் வெறுங்கையன்தான்


2013/10/22 devraj <rde...@gmail.com>

devraj

unread,
Oct 22, 2013, 12:03:33 PM10/22/13
to santhav...@googlegroups.com
On Tuesday, 22 October 2013 21:03:44 UTC+5:30, Ram wrote:
பணம் இல்லாமல் வெறுங்கையனாகக் குபேரனிடம் பணம் கடன் வாங்கியதாகவும் இன்னும் அந்தப் பணத்தைத் திருப்பிக்கொடுத்துக்கொண்டிருப்பதாகவும் ஒரு கதையுண்டு. எனவே எவ்வளவு பணம் வந்தாலும் அவன் வெறுங்கையன்தானே!
கரத்தில் எதையும் வைத்துக்கொள்ளாமல் பக்தர்களுக்கு அள்ளி அள்ளிக் கொடுப்பதாலும் அவன் வெறுங்கையன்தான்


மொத்தத்தில் தமிழ் இலக்கியத்தில் அச்சொல்
இல்லை. சரிதானா  ?
அச்சொல் நாலாயிரத்திலும் இல்லை


தேவ்
 

Pas Pasupathy

unread,
Oct 22, 2013, 1:06:39 PM10/22/13
to santhav...@googlegroups.com
>>மொத்தத்தில் தமிழ் இலக்கியத்தில் அச்சொல்
>>இல்லை. சரிதானா  ?

அப்படி முடிவு செய்ய முடியாது. இணையத்தில் இல்லாத நூல்கள், புராணங்கள் பல உள்ளன.
எங்கேனும் இருக்கலாம்.  எந்த நூல்களில் இல்லை என்று தான் நாம் சொல்ல முடியும். 


2013/10/22 devraj <rde...@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

Vis Gop

unread,
Oct 22, 2013, 2:32:24 PM10/22/13
to santhav...@googlegroups.com
இலக்கியத்தில் இடம் பெற்றது பெறாதது பற்றி எனக்குத் தெரியவில்லை. ஆனால் "வெறுங்கை வேடன்" என்ற சொல்லைக் கண்ணனுக்குப் பொறுத்த முடியும் என்று நினைக்கிறேன். "வெறுங்கை", "வேடன்" - இரு சொற்களுமே சாதாரணப் புழக்கத்தில் இருப்பதால் ஆதாரம் தேவையில்லை எனவும் நினைக்கிறேன். கண்ணன் இடைக்குலம் வந்த பிறகு அவன் பல அசுரர்களை வேட்டையாடி இருக்கிறான் - பூதனை, சகடாசுரன், காளிங்கன், . . . ., பின்னர் மதுராவிலே குவலயாபீடம், கம்சன் உட்பட - அவன் ஆயுதம் இல்லாமலே - மற்போரிட்டு வென்றிருக்கிறான். அவன் அரசனான பின்னரும், மன்னன் சத்ராஜித்தின் சமந்தக மணி விஷயத்தில், ஜாம்பவானிடம் ஒரு மண்டலம் மற்போரிட்டு, மணியை மீட்டதுடன், ஜாம்பவதியையும் பரிசாய்ப் பெற்றிருக்கிறான். அந்தச் சொற்றொடர் கண்ணனை - அதன் மூலம் திருமாலை - குறிக்குமானால் [கோவிந்தன் போல்] - சொல்லப்படும் சூழலுக்கு(context)ப் பொருந்துமானால் - "மற்போரில் வல்லவன்" என்ற பொருளில் ஏற்றுக்கொள்ளலாமே!

நல்வாழ்த்துக்களுடன்,
கோபால்.


2013/10/22 devraj <rde...@gmail.com>

Vis Gop

unread,
Oct 22, 2013, 3:44:52 PM10/22/13
to santhav...@googlegroups.com
Wish to add this to my previous mail. The following is the 66th in the Sri Krishna's 108 naamaavaLi.

मुष्टिकासुर चाणूर मल्ल युद्ध विशारदाय नमः
mustikasura-canura-malla-yuddha-visarada... namah


நல்வாழ்த்துக்களுடன்,
கோபால்.


2013/10/22 Vis Gop <vis...@gmail.com>

Subbaier Ramasami

unread,
Oct 22, 2013, 4:27:00 PM10/22/13
to சந்தவசந்தம்
வெறுங்கை வேடன்  பெயர்ப் பொருத்தம் பற்றி ஐயமில்லை. ஆனால் நான் சங்க இலக்கியம் முழுதும் தேடிப்பார்த்துவிட்டேன், இச்சொற்றொடர் இல்லை. நாலாயிர திவ்யப்பிரபந்தத்திலும் இல்லை. தனிப்பாடலில் எங்கேனும் இருக்க வாய்ப்புண்டு. அலச வேண்டும்.
முதன் முதல் இந்தப்பெயரை இணையத்தில் கொணர்ந்தவர் அது எந்த இலக்கியத்திதில் இருக்கிறது என்று கொணர்ந்திருந்தால் தெளிவாக இருந்திருக்கும். அவர் ஏதோ போகிறபோக்கில் எழுத அதை அப்படியே பலர் நகல் எடுத்து.விட்டார்கள். 

இணையத்தில் ஒரு செய்தியை அப்படியே நம்பிவிடமுடியாது என்பதற்கு இது ஒரு உதாரணம்.

இலந்தை



2013/10/22 Vis Gop <vis...@gmail.com>

Pas Pasupathy

unread,
Oct 22, 2013, 4:44:27 PM10/22/13
to santhav...@googlegroups.com
இது பற்றிப் பல சர்ச்சைகள் எழுந்துள்ளன. மேலும் தொடரலாம்! :-))

 சிலம்பு சொன்ன உருவம் இப்போதும் உள்ளதா?  என்று நமக்கு உறுதியாய்ச் சொல்ல முடியாது. காலப் போக்கில் பல தெய்வ உருவங்கள்/ வழிபாடுகள் மறைதலும், மாறுவதும் இயற்கை.  ”தற்கால”த் ( 12 -ஆம் நூற்றாண்டுக்குப் பின் )  திருப்பதி சிலையைப் பற்றித்தான் சற்றேனும் உறுதியாய்ப் பேசமுடியும். ஓர் ஆதாரம் --நேரில் பார்த்த ஒருவர் சொன்னதை -- தருகிறேன். 

“ பொதுவாகவே திருமாலுக்கு நான்கு கைகள். இரண்டு கையில் சங்கு சக்கரமும், இன்னும் இரண்டு கைகள் எக்ஸ்ட்ராவாகவும் இருக்கும். ஆனால், திருப்பதி பெருமாளுக்கு இரண்டே இரண்டு கைகள் தான். அந்த இரண்டு கைகளிலும் சங்கு சக்கரம் இல்லை. சங்கு சக்கரம்   தோள்பட்டையில்தான் தொற்றிக் கொண்டிருக்கிறது. “
--- அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார், “ இந்துமதம் எங்கே போகிறது?” 2005 நக்கீரன் வெளியீடு (இ.எ.போ) பக்கம் 284. 

ராமானுஜர் காலத்தில் எப்படிச் சங்கு, சக்கரம் வந்தது என்பது வரலாறு. பல நூல்களில் 
உள்ளன. படிக்கலாம். ( Another Book  : Sri Venkateswara, P. Sitapathi, Bharatiya Vidya Bhavan, 1963 ) 

“ ...... இந்தக் காரணத்தாலேயே ..ஸ்ரீராமானுஜருக்கு “ அப்பனுக்கு சங்காழி தந்தவர் “ என்ற பட்டப் பெயர் உண்டானது . “   ( இ.எ.போ, பக்கம் 274 ) 

வேங்கடவன்  பல தெய்வ அம்சங்களை உள்ளடக்கிய ஒரு மூர்த்தி என்பதே மெய்.
இதைப் பற்றிய ஒரு பழைய மடல்:


அதனால் , வேங்கடவன் சிலை சற்று வித்தியாசமாய் இருப்பது இயற்கையே.

2013/10/21 Subbaier Ramasami <elan...@gmail.com>

--

devraj

unread,
Oct 22, 2013, 10:25:15 PM10/22/13
to santhav...@googlegroups.com
On Wednesday, 23 October 2013 00:02:24 UTC+5:30, visgop wrote:
இலக்கியத்தில் இடம் பெற்றது பெறாதது பற்றி எனக்குத் தெரியவில்லை. ஆனால் "வெறுங்கை வேடன்" என்ற சொல்லைக் கண்ணனுக்குப் பொறுத்த முடியும் என்று நினைக்கிறேன். "வெறுங்கை", "வேடன்" - இரு சொற்களுமே சாதாரணப் புழக்கத்தில் இருப்பதால் ஆதாரம் தேவையில்லை எனவும் நினைக்கிறேன். கண்ணன் இடைக்குலம் வந்த பிறகு அவன் பல அசுரர்களை வேட்டையாடி இருக்கிறான் - பூதனை, சகடாசுரன், காளிங்கன், . . . ., பின்னர் மதுராவிலே குவலயாபீடம், கம்சன் உட்பட - அவன் ஆயுதம் இல்லாமலே - மற்போரிட்டு வென்றிருக்கிறான். அவன் அரசனான பின்னரும், மன்னன் சத்ராஜித்தின் சமந்தக மணி விஷயத்தில், ஜாம்பவானிடம் ஒரு மண்டலம் மற்போரிட்டு, மணியை மீட்டதுடன், ஜாம்பவதியையும் பரிசாய்ப் பெற்றிருக்கிறான். அந்தச் சொற்றொடர் கண்ணனை - அதன் மூலம் திருமாலை - குறிக்குமானால் [கோவிந்தன் போல்] - சொல்லப்படும் சூழலுக்கு(context)ப் பொருந்துமானால் - "மற்போரில் வல்லவன்" என்ற பொருளில் ஏற்றுக்கொள்ளலாமே!


ஆம் ஐயா
மாலவனுக்கு எல்லாப் பெயர்களுமே பொருந்துவன. 

‘வெறுங்கை வேடன்’ வேங்கடவனைக் குறிப்பதாக
இலக்கியத்தில் சொல்லப்படுகிறதா என்பதே கேள்வி. 
அருளிச் செயலிலும், தொல் இலக்கியத்திலும் 
நிச்சயமாக இல்லை


தேவ்

Hari Krishnan

unread,
Oct 23, 2013, 12:02:31 AM10/23/13
to santhavasantham

2013/10/23 devraj <rde...@gmail.com>

‘வெறுங்கை வேடன்’ வேங்கடவனைக் குறிப்பதாக
இலக்கியத்தில் சொல்லப்படுகிறதா என்பதே கேள்வி. 

எடுத்துக் காட்டுக்காக, ‘வெறுங்கை வேடன்’ என்று கூகிளில் தேடிப் பாருங்கள்.  சில உதாரணங்கள்:

எந்த சாத்வீக, சாந்தமான தெய்வத்தின் திருவுருச்சிலையிலும்கூட கையில் ஏதாவது ஒரு ஆயுதம் இருக்கும். ஆனால், ஏழுமலையான் கரத்தில் எந்த ஆயுதமும் கிடையாது. அவர் நிராயுதபாணி. அதனால்தான் தமிழிலக்கியத்தில் நம் முன்னோர்களால் ‘வெறுங்கை வேடன்’ என்று போற்றப்பட்டார். பிரிட்டிஷார்களான சர் தாமஸ் மன்றோ, கர்னல் ஜியோ ஸ்டிராட்டன் போன்றோர் ஏழுமலையானின் பக்தர்கள் ஆவர். 
Read more: http://www.brahminsnet.com/forums/showthread.php/5340-Thiruppathi-facts?s=04343c0e567ad3c0f5f6437cee83d7d5#ixzz2iVazCuDp


எந்த சாத்வீக, சாந்தமான தெய்வத்தின் திருவுருச்சிலையிலும்கூட கையில் ஏதாவது ஒரு ஆயுதம் இருக்கும். ஆனால், ஏழுமலையான் கரத்தில் எந்த ஆயுதமும் கிடையாது. அவர் நிராயுதபாணி. அதனால்தான் தமிழிலக்கியத்தில் நம் முன்னோர்களால் ‘வெறுங்கை வேடன்’ என்று போற்றப்பட்டார்.


எந்த சாத்வீக, சாந்தமான தெய்வத்தின் திருவுருவச்சிலையிலும் கையில்
ஒரு ஆயுதமாகிலும் இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருவுருவச்சலையில் எந்த ஆயுதமும் கிடையாது. அவர் நிராயுதபாணி. அதனால்தான் தமிழ் இலக்கியத்தில் நம் முன்னோர்களால், வெறுங்கை வேடன் என்று அழைக்கப்பட்டார்.


எந்த சாத்வீக, சாந்தமான தெய்வத்தின் திருவுருவச்சிலையிலும் கையில் ஒரு ஆயுதமும் இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருவுருவச்சிலையில் எந்த ஆயுதமும் கிடையாது. அவர் நிராயுதபாணி, அதானால்தான் தமிழ் இலக்கியத்தில் நம் முன்னோர்களால் வெறுங்கை வேடன் என்று அழைக்கப்பட்டார். 



வெறுங்கை வேடன் 
எந்த சாத்வீக, சாந்தமான தெவத்தின் திருவுருவச்சிலையிலும் கையில் ஒரு ஆயுதமாகிலும் இருக்கும். ஆனால், ஏழுமலையான் திருவுருவச்சலையில் எந்த ஆயுதமும் கிடையாது. 
அவர் நிராயுதபாணி. அதனால்தான் தமிழ் இலக்கியத்தில் நம் முன்னோர்களால், ‘வெறுங்கை வேடன்’ என்று அழைக்கப்பட்டார்.


 எந்த சாத்வீக, சாந்தமான தெய்வத்தின் திருவுருவச்சிலையிலும் கையில் ஒரு ஆயுதமாகிலும் இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருவுருவச்சலையில் எந்த ஆயுதமும் கிடையாது. அவர் நிராயுதபாணி. அதனால்தான் தமிழ் இலக்கியத்தில் நம் முன்னோர்களால், வெறுங்கை வேடன் என்று அழைக்கப்பட்டார்.


எந்த சாத்வீக, சாந்தமான தெய்வத்தின் திருவுருவச்சிலையிலும் கையில் ஒரு ஆயுதமாகிலும் இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருவுருவச்சலையில் எந்த ஆயுதமும் கிடையாது. அவர் நிராயுதபாணி. அதனால்தான் தமிழ் இலக்கியத்தில் நம் முன்னோர்களால், வெறுங்கை வேடன் என்று அழைக்கப்பட்டார்.
 

இவை, கிடைத்த முடிவுகளில் ஒரு கைப்பிடிக்கும் குறைவு.  ஆனால் தவறாமல் ஒவ்வொரு பதிவிலும் 
ஒரு நீண்ட பட்டியல் தரப்பட்டுள்ளது.  அதில் 19ம் பத்தியாக மட்டும்தான் இந்த விவரம் காணப்படுகிறது; வாக்கிய அமைப்பும் ஒரே மாதிரியாக இருக்கிறது.  ஆகவே, இவை எல்லாமே ஒத்தி ஒட்டல்கள் என்பது வெளிப்படை.  கண்ணை மூடிக் கொண்டு சகட்டு மேனிக்கு“தமிழ் இலக்கியத்தில் நம் முன்னோர்களால் வெறுங்கை வேடன் என்று அழைக்கப்பட்டார்” என்று ஒத்தி ஒட்டியவர்களில் பலர், இந்த வாசகத்தைக் குறைந்த பட்சம் படித்துப் பார்த்த பிறகாவது ஒத்தி ஒட்டியிருப்பார்களா என்பதே ஐயத்துக்குரியது.

இவர் ஒருவர்தான் (எனக்குக் கிடைத்த முடிவுகளில்) தன் சொந்த வாக்கியங்களால் இந்த விவரத்தை எழுதியிருப்பவர்


அதே மாதிரி வெறுங்கை வேடன் என்பது திருவேங்கடமுடையானின் பவித்ரமான பழைய பெயர்.வேடன் என்பவன் உயிர்களைப் பறிப்பவன், அதாவது சம்காரத் தொழில் செய்பவர் சிவன், திருவேங்கடமுடையான் உயிர்களைப் பறித்து, ஆன்மாக்களுக்கு மோட்சம் கொடுக்கிறார்.
எந்த ஓர் இந்துக் கடவுளுக்கும் கையில் ஏதாவது ஓர் ஆயுதம் சிலையில் வடிக்கப் பெற்றிருக்கும்.எந்த சாத்வீக சாந்தமான தெய்வத்தின் சிலையிலும் ஓர் அயுதம் இருக்கும். ஆனால் திருவேங்கடமுடையானின் சிலையில் எந்த ஆயுதமும் கிடையாது. நிராயுதபாணி. ஆகவே திருவேங்கடமுடையானுக்குப் பழைய தமிழ் இலக்கியத்தில் வெறுங்கை வேடன் என்று பெயர். 

ஆனால், இவரும் சான்றளிக்கவில்லை.  எந்த இடத்திலிருந்து எடுக்கப்பட்டது என்ற குறைந்த பட்ச விவரத்தைக் கூட சொல்லாமல் ஒத்தி ஒட்டும் கலாசாரத்தைத் தோற்றுவித்த  ‘கனவான்’ தன் தாக்கத்தை வீரிய மிகுந்ததாகத்தான் ஏற்படுத்தியிருக்கிறார்!

--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

Ramamoorthy Ramachandran

unread,
Oct 23, 2013, 8:21:00 PM10/23/13
to santhav...@googlegroups.com
வணக்கம்  நிராயுத பாணி = வெறுங்கை ''வீரமும் களத்தே  போட்டு வெறுங்கையோ  டிலங்கை  புக்கான் '' என்று  கம்பன் பாட்டில் உள்ளது
இறைவனாகிய 'வேடன்' நிராயுத பாணியாக நின்று  நம் ஆன்மாவைச் சூழ்ந்த ஆசாபாசங்களை  அழித்து ஆட்கொண்டவன் என்று பொருள் கொள்ளலாமோ? ஹரிகியின் பொருள் ஏற்புடையதே என்பது என் கருத்து. ''வெறுங்கை வேடன் '' என்ற தொடரைத் தந்தவர்  பாராட்டுக்குரியவர். அவர் வாழ்க. அன்புடன் 
புலவர் இரா இராமமூர்த்தி 


2013/10/23 Hari Krishnan <hari.har...@gmail.com>

--

devraj

unread,
Oct 26, 2013, 12:39:11 PM10/26/13
to santhav...@googlegroups.com
முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய முதல்வோனே !


இதில் சொல்லப்படும் செய்தி என்ன ?
விநாயகர் முத்தமிழை மலையில் எழுதினாரா ?
இலக்கியம் என்ன கூறுகிறது ?


தேவ்

Siva Siva

unread,
Oct 26, 2013, 12:45:24 PM10/26/13
to santhavasantham
As seen elsewhere:

விளக்கக் குறிப்புகள்

. முத்தமிழடைவினை முற்படு கிரிதனில் முற்பட எழுதிய.....

பொரி, அவல், பழம் முதலிவற்றைப் படைத்து, விநாயகரைத் துதித்து, வியாச முனிவர் கூறிவர மேரு மலையை ஏடாகவும், தமது தந்தமே எழுத்தாணியாகவும் கொண்டு, விநாயகர் பாரதத்தை எழுதினார் என்பது புராணம்.

(நீடாழி யுலகத்து மறைநாலொ டைந்தென்று நிலைநிற்கவே
வாடாத தவவாய்மை முனிராஜன் மாபார தஞ்சொன்ன நான்
ஏடாக மாமேரு வெற்பாக வங்கூ ரெழுத்தானிதன்
கோடாக எழுதும் பிரானைப் பணிந்தன்பு கூர்வாமரோ)---வில்லி பாரதம்.

(பாரதத்தை மேரு வெளீ வெளீ திகழ்
கோடொ டித்த நாளில் வரைஇ வரைஇ பவர்
பானி றக்க ணேசர் குவா குவா கனர் இளையோனே)-- திருப்புகழ் (சீர்சிறக்கும்).

(பருகிடு பெருவயி றுடையவர் பழமொழி
எழுதிய கணபதி மிளையோனே)--- திருப்புகழ் ( ஒருபதுமிரு). 



2013/10/26 devraj <rde...@gmail.com>

Subbaier Ramasami

unread,
Oct 26, 2013, 5:33:54 PM10/26/13
to சந்தவசந்தம்
அருமையான விளக்கம்

இலந்தை


2013/10/26 Siva Siva <naya...@gmail.com>

VETTAI ANANTHANARAYANAN

unread,
Oct 26, 2013, 8:29:32 PM10/26/13
to சந்தவசந்தம்

திருப்புகழுக்கு தணிகைமணி செங்கல்வராய பிள்ளை தந்துள்ள உரை சிறந்ததெனக் கருதப்படுகிறது. அங்குக் காணும் விளக்கம்:
முத்தமிழையெல்லாம் மலைகளில் முற்பட்டதான மேரு மலையில் முதன்முதலிற் பொருந்த எழுதிய முதல்வோனே.


.. முத்தமிழ் அடைவினை..  என்பதற்கு வேறு வகையான விளக்கம்:  http://dheivamurasu.org/?p=29
 
அனந்த்

2013/10/26 Siva Siva <naya...@gmail.com>
As seen elsewhere:

Arunachalam Sabapathy

unread,
Oct 27, 2013, 2:28:59 AM10/27/13
to santhav...@googlegroups.com
முத்தமிழ் அடைவு= மகாபாரதம் என்றும் கொள்ள இடமுண்டு.
இயல் இசை நாடகம் கலந்த பாரதம்
முத்தமிழ் அடைவு=அறம் பொருள் இன்பம் அதன் பயனாகிய வீடுபேறு தரும் பாரதம்
பாரதம் எழுதியவர் கணபதிதானே.


2013/10/27 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

devraj

unread,
Oct 27, 2013, 3:26:35 AM10/27/13
to santhav...@googlegroups.com
On Sunday, 27 October 2013 05:59:32 UTC+5:30, ananth wrote:
.. முத்தமிழ் அடைவினை..  என்பதற்கு வேறு வகையான விளக்கம்:  http://dheivamurasu.org/?p=29 


அரிய தகவல்கள் அடங்கிய பதிவைத் தந்தமைக்கு நன்றி, ஐயா. 

”எனவே ஏதோ ஒரு முத்தமிழ் அடைவினை விநாயகர் எழுதியதற்காகவே, அதை எண்ணியே, அதிரா அடிகள் அவரை வணங்குகிறேன் 
என்று கூறினார் என்று கொள்வதே அறிவுக்குப் பொருந்திய ஒன்று. மகாபாரதம் முத்தமிழ் அடைவு என்று எண்ணிப் பார்க்கவும் இயலாது.”
என்று அப்பதிவு சொல்வதையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும்


தேவ்

devraj

unread,
Nov 22, 2013, 6:07:41 AM11/22/13
to santhav...@googlegroups.com
நடலை , நடலம்

சங்க இலக்கியத்திலோ, சிலம்பிலோ இச்சொற்கள்
உள்ளனவா ?

பிற்கால இலக்கியத்தில் மட்டும் மிகுதியாக
இடம்பெறக் காரணம் என்ன ?

பிற்காலத்தில் உருப்பெற்ற சொல்லா ?

அறிஞர்கள் விளக்கியருள வேண்டுகிறேன்

தேவ்

Pas Pasupathy

unread,
Nov 23, 2013, 8:24:14 AM11/23/13
to santhav...@googlegroups.com
நடலைப்பட் டெல்லா நின்பூழ் (கலித்தொகை. 95, 33)


2013/11/22 devraj <rde...@gmail.com>

--

N. Ganesan

unread,
Nov 23, 2013, 8:26:25 AM11/23/13
to santhav...@googlegroups.com

On Saturday, October 26, 2013 5:29:32 PM UTC-7, ananth wrote:

திருப்புகழுக்கு தணிகைமணி செங்கல்வராய பிள்ளை தந்துள்ள உரை சிறந்ததெனக் கருதப்படுகிறது. அங்குக் காணும் விளக்கம்:
முத்தமிழையெல்லாம் மலைகளில் முற்பட்டதான மேரு மலையில் முதன்முதலிற் பொருந்த எழுதிய முதல்வோனே.


.. முத்தமிழ் அடைவினை..  என்பதற்கு வேறு வகையான விளக்கம்:  http://dheivamurasu.org/?p=29
 
அனந்த்

செந்தமிழின் சிறப்புக்குக் காரணம் கணபதி என்கிறார் அருணகிரியார்.

வாரியார் சாமிகள் உரை:
முத்தமிழ் அடைவினை-மூன்று தமிழின் முறையினை, முற்படு கிரிதனில்-
கிரிகளுக்கெல்லாம் முதன்மையானதாகிய மகாமேருகிரியில், முற்பட எழுதிய- 
எல்லா மொழிகளுக்கும் முதன்மையுற எழுதிய, முதல்வோனே-எல்லாத் தேவர்களுக்கும் முதன்மையானவரே! 

திருப்புகழின் முழு உரையும் படிக்கலாம்.

நா. கணேசன்

devraj

unread,
Nov 23, 2013, 10:46:43 PM11/23/13
to santhav...@googlegroups.com
On Saturday, 23 November 2013 18:54:14 UTC+5:30, பசுபதி wrote:
நடலைப்பட் டெல்லா நின்பூழ் (கலித்தொகை. 95, 33)
 

நன்றி ஐயா


தேவ் 

RAJAGOPALAN APPAN

unread,
Nov 24, 2013, 6:37:14 AM11/24/13
to santhav...@googlegroups.com

...நயந்த நண்பி னன்னர் நோக்கி
உடையழி காலை யுதவிய கைபோல்
நடலை தீர்த்தல் னண்பன தியல்பென...

என்று பெருங்கதையில் நரவாணகாண்டத்தில் வருகிறது.

அ.ரா



2013/11/22 devraj <rde...@gmail.com>

Nagoji

unread,
Nov 30, 2013, 8:12:34 AM11/30/13
to santhav...@googlegroups.com
காஞ்சி காமாட்சி அம்மன் கதையில், அன்னை, அய்யனை அணைக்கிறாள்.

அணைமாது - வினைத்தொகை.
இதை அணைந்த/அணைகிற/அணையும் என்று எடுத்துக் கொள்ள
வேண்டுமா அல்லது அணைத்த/அணைக்கிற/அணைக்கும் என்று
எடுத்துக் கொள்ள வேண்டுமா?

அணைதல்/அணைத்தல், வளைதல்/வளைத்தல் - இதற்கு இலக்கணப்
பெயர் என்ன? தன்வினை-பிறவினை போல் இது இல்லை.

- சங்கர தாஸ்

devraj

unread,
Jan 3, 2014, 10:57:27 PM1/3/14
to santhav...@googlegroups.com
On Sunday, 24 November 2013 17:07:14 UTC+5:30, Rajagopalan wrote:

...நயந்த நண்பி னன்னர் நோக்கி
உடையழி காலை யுதவிய கைபோல்
நடலை தீர்த்தல் னண்பன தியல்பென...

என்று பெருங்கதையில் நரவாணகாண்டத்தில் வருகிறது.


மிக்க நன்றி,ஐயா

தேவ்
 
 

devraj

unread,
Jan 3, 2014, 10:59:28 PM1/3/14
to santhav...@googlegroups.com
தமிழில் உள்ள விகுதிகள் மொத்தம் எத்தனை ?
அவை யாவை ? இலக்கண நூல்கள் விகுதி குறித்து 
என்ன கூறுகின்றன ? 

அறிஞர்கள் அருள் கூர்ந்து விளக்கியருள வேண்டும்


தேவ்

Nagoji

unread,
Jan 4, 2014, 12:25:16 AM1/4/14
to santhav...@googlegroups.com

devraj

unread,
Jan 4, 2014, 3:28:01 AM1/4/14
to santhav...@googlegroups.com
On Saturday, 4 January 2014 10:55:16 UTC+5:30, sankara dass nagoji wrote:


நன்றி, ஐயா.
இதில் விகுதிகள் முழுவதும் சொல்லப்படவில்லை.
அடுத்த பகுதி இடைநிலையைச் சொல்வதாக 
அமைகிறது


தேவ்




Nagoji

unread,
Jan 5, 2014, 2:13:39 AM1/5/14
to santhav...@googlegroups.com
வினைமுற்று
அன்,ஆன் - ஆண்பால்
அள்,ஆள் - பெண்பால்
அர்,ஆர் - பலர்பால்
து,று - ஒன்றன்பால்
அ - பலவின்பால்
ஆ -பலவின்பால் எதிர்மறை

அல், அன், என், ஏன் - தன்மை ஒருமை
அம்,ஆம், ஏம்,கும், ஓம்,டும்,தும், றும் - தன்மை பன்மை

இ,ஆய்,ஐ - முன்னிலை ஒருமை
ஈர்,மின்,உம்,இர் - முன்னிலை பன்மை

க,இய,இயர்,அல் - வியங்கோள்

பெயரெச்சம்
பேசிய - அ
பேசும் - உம்

வினையெச்சம்
வினையெச்ச வாய்பாடுகள்
செய்து, செய்பு, செய்யா, செய்யூ, செய்யன, செய, செயின், செய்யிய, செய்யியர், வான், பான்,பாக்கு

எழுந்து - உ
பார்க்கச் சென்றான் - அ
ஆடி மகிழ் - இ
வந்தால் - ஆல்
காணின் - இன்
எனச் சொன்னான்

வினா - ஆ, ஓ, ஏ
அவனா, அவனோ, அவனே

பண்புப் பெயர் - மை, ஐ, சி, பு, கு, றி, று, அம், அர்
செம்மை, தொல்லை, மாட்சி, மாண்பு, நன்கு, நன்று, நன்றி, நலம், நன்னர்

தொழிற்பெயர்
அசைதல்- தல்
உண்ணல் - அல்
ஆட்டம் - அம்
கொலை - ஐ
அழுகை - கை
பார்வை - வை
போக்கு - கு
துறவு - உ
மறதி - தி
உணர்ச்சி - சி
தோல்வி - வி
கடவுள் -உள்
சாக்காடு - காடு
கோட்பாடு - பாடு
தோற்றரவு - அரவு
வாரானை - ஆனை
பொறுமை - மை
பாய்த்து - து
தழால் - ஆல்
வெகுளி - இ

வேற்றுமை உருபுகளும் சொல்லுருபுகளும் சொல்லின் கடையில் வரும்.

ஆல், ஓடு, ஒடு, உடன்
கு, ஆக,பொருட்டு
இன்,இல்,இன்று,விட,காட்டிலும்
அது,ஆது,அ,உடைய
கண்,இல், இடம்,உள்,மேல்
ஆ - கண்ணா!

பெயர்ச்சொல் பொது விகுதிகள்
(இடுகுறிக்கு  இலக்கணம் இல்லை - ஆனால் அவை ஒரு ஒழுங்கில் அமைந்துள்ளன)

அம் (மரம்)
ஊர்,குடி,பதி,பட்டினம்,பாக்கம்,காடு,கா,குளம்,மலை,கோடு
கட்டி - இ
தீ - ஈ
மன்னை - ஐ
மாடு - உ
பலா - ஆ
தே - ஏ

அ,ஊ,எ,ஓ,ஒ, ஔ - இவற்றில் முடியும் பெயர்கள் இருப்பதாகத் தெரியவில்லை. இருப்பினும் சிலவே.

- sankara dass

devraj

unread,
Jan 5, 2014, 4:33:58 AM1/5/14
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி ஐயா.

மகிழ்நன் -
விகுதி என்ன ?



தேவ்

Siva Siva

unread,
Jan 5, 2014, 8:37:02 AM1/5/14
to santhavasantham
/ தமிழில் உள்ள விகுதிகள் மொத்தம் எத்தனை ?
அவை யாவை ? இலக்கண நூல்கள் விகுதி குறித்து 
என்ன கூறுகின்றன ? /

இந்த வினா எந்தச் சூழ்நிலையில் எழுந்தது?
இதற்கு விடை காண நீங்கள் ஏற்கெனவே பார்த்த நூல்கள் எவை?

-------
ஆறுமுக நாவலரின் இல்க்கணச் சுருக்கத்திலிருந்து:

விகுதி
51.
விகுதிகளாவன, பகுபதங்களின் இறுதியிலே இடைப்பதங்களாகும்.
---

52. பெயர் விகுதிகள், அன், ஆன், மன்,மான், ன், அள்,ஆள், , ள், அர், ஆர், மார், கள், ர், து, , வை, வ், தை, கை, பி, முன், அல், என்னும் இருபத்து மூன்றும் பிறவுமாம்.
உதாரணம். குழையன், வாகத்தான், வடமன், கோமான், பிறன், குழையள், வானத்தாள், அரசி, பறள், குழையர், வானத்தார், தேவிமார், கோக்கள், பிறர், அது, குநற்தாளன, அவை, எந்தை, எங்கை, எம்பி, எம்முன், தோன்றல்.
----

53. தொழிற்பெயர்விகுதிகள், தல், அல், அம், , கை,வை, கு, பு, , தி, சி, வி, உள், காடு, பாடு, அரவு, ஆனை, மை, து என்னும் பத்தொன்பதும் பிறவுமாம்.
உதாரணம். நடத்தல், ஆடல், வாட்டம், கொலை, நடக்கை, பார்வை, போக்கு, நடப்பு, வரவு, மறதி, புணர்ச்சி, புலவி, விக்குள், சாக்காடு, கோட்பாடு, தோற்றரவு, வாரானை, நடவாமை, பாய்த்து என வரும்.
மை விகுதி, செய்தமை, செய்கின்றமை, என இறந்த காலவிடை நிலை, நிகழ்காலவிடை நிலைகளோடு கூடியும் வரும்.
துவ்விகுதி, அவர் செய்தது, செய்கின்றது. செய்வது என முக்கால விடைநிலைகளோடு கூடியும் வரும்.
----

54. பண்புப் பெயர்விகுதிகள், மை, , சி, பு, , கு, றி, று, அம், நர், என்னும் பத்தும் பிறவுமாம்.
உதாரணம். நன்மை, தொல்லை, மாட்சி, மான்பு, மழவு, நன்கு, நன்றி, நன்று, நலம், நன்னர் என வருமு;.
---

55. தெரிநிலை வினைமுற்று விகுதிகள், அன், ஆன், அள், ஆள், அர், ஆர், , மார், , , கு, டு, து, று, என், ஏன், அல், அம், ஆம், எம், ஏம், ஒம், கும், டுமு;, தும், றும், , ஆய், , இர், ஈர், , இய, இயர், ஆல், ஏல், மின், உம் என்னும் முப்பெத்தெட்டும் பிறவுமாம்.
உதாரணம்.
நடந்தனன், நடந்தான், நடந்தனள், நடந்தாள், நடந்தனர், நடந்தார், நடப்ப, நடமார், நடந்தன, நடவா, உண்கு, உண்டு, நடந்தது, கூயிற்று, நடந்தெனன், நடந்தேன், நடப்பல், நடப்பம், நடப்பாம், நடப்பெம், நடப்பேம், நடப்போம், உண்கும், உண்டும், வருதும், சேறும், நடந்தனை, நடந்தாய், நடத்தி, நடந்தனிர், நடந்தீர், வாழ்க, வாழிய, வாழியர், மாறல், அழேல், நடமின், உண்ணும்.
---

56. குறிப்பு வினைமுற்று விகுதிகள், அன், ஆன், அள், ஆள், அர், ஆர், ,
டு, து, று, என், ஏன், அம், ஆம், எம், ஏம், ஒம், , ஆய், , இர், ஈர், என்னும் இருபத்திரண்டும் பிறவுமாம்.
உதாரணம்.
கரியன், கரியான், கரியள், கரியாள், கரியர், கரியார், கரியன, குநற்தட்டு, கரிது, குழையிற்று, கரியென், கரியேன், கரியம், கரியாம், கரியெம், கரியேம், கரியோம், கரியை, கரியாய், வில்லி, கரியிர், கரியீர்.
---

57. தெரிநிலை வினைப் பெயரெச்ச விகுதிகள், , உம், என்னும் இரண்டுமாம்.
உதாரணம்.
செய்த, செய்கின்ற, செய்யும்.
குறிப்பு வினைப்பெயரெச்சவிகுதி, அ ஒன்றேயாம். உம், விகுதி, இடைநிலையேலாது, தானே எதிர்காலங்காட்டலாற் குறிப்பு வினைப் பெயரெச்சத்துக்கு வாராது.
உதாரணம். கரிய
---

58. தெரிநிலைவினை வினையெச்ச விகுதிகள், , , ய், பு, , , என, , இன், ஆல், கால், ஏல், எனின், ஆயின், ஏனும், கு, இய, இயர், வான், பான், பாக்கு, கடை, வழி, இடத்து, உம், மல், மை, மே என்னும் இருபத்தெட்டும் பிறவுமாம். இவற்றுள், இறுதியிற்கூறிய மல், மை, மே என்னும் மூன்று விகுதிகளும் எதிர்மறையில் வரும்.
உதாரணம்.
நடந்து, ஒடி, போய், உண்குபு, உண்ணா, உண்ணுh, உண்ணென, உண்ண, உண்ணின், உண்டால், உண்டகடகால், உண்டானேல், உண்டானெனின், உண்டானாயின், உண்டானெனும், உணற்கு, உண்ணிய, உண்ணியர், வருவான், உண்பான், உண்பாக்கு, செய்தக்கடை, செய்தவழி, செய்தவிடத்து, காண்டலும், உண்ணாமல், உண்ணாமை, உண்ணாமே.
குறிப்பு வினை வினையெச்ச விகுதிகள், , றி, து, ஆல், மல், கடை, வழி, இடத்து, என்னும் எட்டும் பிறவுமாம்.
உதாரணம்.
மெல்ல, அன்றி, அல்லது, அல்லால், அல்லாமல், அல்லாக்கடை, அல்லாவழி, அல்லாவிடத்து.
----

59. பிறவினை விகுதிகள், வி, பி, கு, சு, டு. து, பு, று என்னம் எட்டுமாம்.
உதாரணம்.
செய்வி, நடப்பி, போக்கு, பாய்ச்சு, உருட்டு, நடத்து, எழுப்பு, துயிற்று.
---

60. , , அம் என்னும் மூன்று விகுதிகளும், வினைமுதற்பொருளையுஞ் செயற்படு பொருளையும் கருவிப்பொருளையும் உணர்த்தும்.
உதாரணம்.
1.
அலரி, பறவை, எச்சம், என்பன வினைமுதற்பொருளை உணர்த்தின. இவை முறையே, அலர்வது, பறப்பது, எஞ்சுவது, எனப் பொருள் படும்.
2.
ஊருணி, தொடை, தேட்டம், என்பன செயற்படு பொருளை உணர்த்தின. இவை முறையே, ஊராலுண்ணப் படுவது, தொடுக்கப்படுவது, தேடபபடுவது எஎனப்பொருள்படும்.
3.
மண்வெட்டி, பார்வை, நோக்கம், என்பன, கருவிப்பொருளை, உணர்த்தின. இவை முறையே, டண்வெட்டற்கருவி, பார்த்தற் கருவி, நோக்கற்கருவி எனப் பொருள்படும்.
----

61. இதுவரையுங் கூறிய விகுதிகளேயன்றிப் பிற விகுதிகளும் உண்டு. அவை வருமாறு:-
விடு, ஒழி, விகுதிகள், துணிவுப்பொருளை உணர்த்தும்.
உதாரணம்.
வந்துவிட்டான், கெட்டொழிந்தான், என வரும்.
கொள்விகுதி, தற்பொருட்டுப் பொருள் உணர்த்தும்.
உதாரணம்.
அடித்துக்கொண்டான்.
படு, உண், விகுதிகள் செயப்பாட்டு வினைப்பொருள் உணர்த்தும்.
உதாரணம்.
கட்டப்பட்டான், கட்டுண்டான்.
மை விகுதி தன்மைப்பொருள் உணர்த்தும்.
உதாரணம்.
பொன்மை, ஆண்மை
இரு, இடு, என்பன, தமக்கென வேறுபொருள் இன்றிப் பகுதிப்பொருள் இன்றிப் பகுதிப்பொருள் விகுதியாய் வரும்.
உதாரணம். எழுந்திருக்கின்றான், உரைத்திடுக்கின்றான்.

==========================


2014/1/3 devraj <rde...@gmail.com>



--
http://nayanmars.netne.net/
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

devraj

unread,
Jan 5, 2014, 9:54:49 AM1/5/14
to santhav...@googlegroups.com
நன்றி ஐயா


On Sunday, 5 January 2014 19:07:02 UTC+5:30, siva siva wrote:
இந்த வினா எந்தச் சூழ்நிலையில் எழுந்தது?
இதற்கு விடை காண நீங்கள் ஏற்கெனவே பார்த்த நூல்கள் எவை?


உரு என்னும் பகுதியை நம் என்னும் இன்னொரு விகுதியோடு 
சேர்த்துப் பார்த்தால் 'உருநம்'  எனும் சொல் கிடைக்கும் என ஓர்
அறிஞர் எழுதினார். உண்மையில் அப்படி ஒரு சொல் உள்ளதா 
தெரியவில்லை.

அடுத்து 'நம்' எனும் விகுதி உண்டா என்று தேடும் முயற்சி.
நன்னூலில் 140ம் நூற்பா கண்ணில் பட்டது - 

அன் ஆன் அள் ஆள் அர் ஆர் பம் மார்
அஆ குடு துறு என் ஏன் அல் அன்
அம் ஆம் எம் ஏம் ஒமோடு உம்மூர்
கடதற ஐ ஆய் இம்மின் இர் ஈர்
ஈயர் கயவும் என்பவும் பிறவும்
வினையின் விகுதி பெயரினும் சிலவே. (13)



>>> பண்புப் பெயர்விகுதிகள்மைசிபுகுறிறுஅம்நர்என்னும் பத்தும் பிறவுமாம்.<<<

ஒருகால் பண்புப் பெயர் விகுதியுள் ஒன்றாக  இருக்கலாம்


தேவ்



Nagoji

unread,
Jan 6, 2014, 1:37:40 AM1/6/14
to santhav...@googlegroups.com
மகிழ்நன் - மகிழ்+ந்+அன்
ந் என்பது சாரியையா எழுத்துப்பேறா என்பதில் எனக்கு ஓர் ஐயம்.

- sdn

2014/1/5 devraj <rde...@gmail.com>

devraj

unread,
Jan 6, 2014, 3:35:04 AM1/6/14
to santhav...@googlegroups.com
On Monday, 6 January 2014 12:07:40 UTC+5:30, sankara dass nagoji wrote:
மகிழ்நன் - மகிழ்+ந்+அன்
ந் என்பது சாரியையா எழுத்துப்பேறா என்பதில் எனக்கு ஓர் ஐயம்.


நர் விகுதி இலக்கணச்  சுருக்கத்தில் இருப்பதாக ஐயா அவர்கள்
எடுத்துக்காட்டியுள்ளார் -

Nagoji

unread,
Jan 6, 2014, 5:56:29 AM1/6/14
to santhav...@googlegroups.com
I do not think nan is paNbu peyar vikuthi. Also makiz is not a paNbu peyar pakuthi.

- sdn

2014/1/6 devraj <rde...@gmail.com>

Nagoji

unread,
Jan 6, 2014, 6:32:07 AM1/6/14
to santhav...@googlegroups.com
One more thing. nar is a vikuthi in words such as OTTunar, peRunar etc. May be to make it male singular, this "nan" is coined?

- sdn


2014/1/6 Nagoji <nag...@gmail.com>

devraj

unread,
Jan 6, 2014, 7:50:16 AM1/6/14
to santhav...@googlegroups.com
பூங் கண் மகளிர் புனை நலம் சிதைக்கும்
மாய மகிழ்நன் பரத்தைமை
நோவென், தோழி! கடன் நமக்கு எனவே.......
                                              - கலித்தொகை

On Monday, 6 January 2014 16:26:29 UTC+5:30, sankara dass nagoji wrote:
I do not think nan is paNbu peyar vikuthi. Also makiz is not a paNbu peyar pakuthi.

Yes, I accept.


On Monday, 6 January 2014 17:02:07 UTC+5:30, sankara dass nagoji wrote:
One more thing. nar is a vikuthi in words such as OTTunar, peRunar etc. May be to make it male singular, this "nan" is coined? 

Yes



dev 

devraj

unread,
Jan 6, 2014, 8:48:53 AM1/6/14
to santhav...@googlegroups.com
பூங் கண் மகளிர் புனை நலம் சிதைக்கும்
மாய மகிழ்நன் பரத்தைமை
நோவென், தோழி! கடன் நமக்கு எனவே....
                                           - கலித்தொகை

நிலை மொழி இறுதியின் ழகர மெய்யும் வருமொழி முதலின் நகர மெய்யும் 
புணர்கையில் ணகர மெய்யாக மாறும் -

வாழ் + நர் = வாணர் 
வாழ் + நாள் = வாணாள்

மகிழ்நன் மகிணன் என ஏன் ஆகவில்லை என்பதும் ஓர் ஐயம்;
பிற்கால மாற்றமோ ?


தேவ்

devraj

unread,
Jan 6, 2014, 9:28:49 AM1/6/14
to santhav...@googlegroups.com
On Monday, 6 January 2014 19:18:53 UTC+5:30, devraj wrote:
நிலை மொழி இறுதியின் ழகர மெய்யும் வருமொழி முதலின் நகர மெய்யும் 
புணர்கையில் ணகர மெய்யாக மாறும் -
வாழ் + நர் = வாணர் 
வாழ் + நாள் = வாணாள்


மன்னிக்கவும். உயிர்மெய் என இருக்கவேண்டும் 


தேவ்
Reply all
Reply to author
Forward
0 new messages