ஆறுமுகம் - சண்முகம்

186 views
Skip to first unread message

செல்வா

unread,
Oct 21, 2009, 2:33:25 PM10/21/09
to சந்தவசந்தம்
ஒரு கேள்வி: ஆறுமுகம் என்பதும் சண்முகம் என்பதும் ஒரு பொருள் தருமா?

ஆறுமுகத்தின் பொருளாழம் வேறல்லவா?
சண்முகம் என்பது ஆறுமுகம் என்னும்
சொல்லின் மொழிபெயர்ப்பு என நினைக்கிறேன்.
ஆறுமுகம் என்னும் சொல்லின் முழுப்பொருள்
சண்முகம் என்பது தருமா? தராது என
நினைக்கிறேன் (ஏன் அப்படி நினைக்கின்றேன்
என்று பின்னர் கூறுகிறேன்).

முருகன் அன்பர்கள் பலர் இக்குழுவில் இருப்பதால்
வளமான ஒரு உரையாடல் நிகழ இடம் நல்வாய்ப்பு
இருக்கின்றது.

அன்புடன்
செல்வா

Hari Krishnan

unread,
Oct 22, 2009, 4:33:53 AM10/22/09
to santhav...@googlegroups.com


2009/10/22 செல்வா <c.r.sel...@gmail.com>

ஒரு கேள்வி: ஆறுமுகம் என்பதும் சண்முகம் என்பதும் ஒரு பொருள் தருமா?

எனக்குத் தெரிந்தவரையில் இரண்டும் ஒரேபொருள் கொண்ட பெயர்கள்தாம்.

பாம்பன் சுவாமிகள் இயற்றிய குமாரஸ்தவத்தை இடுகிறேன்:

ஓம் சண்முக பதயே நமோ நம!
ஓம் ஷண்மத பதயே நமோ நம!
ஓம் ஷட்க்ரீவ பதயே நமோ நம!
ஓம் ஷட்க்ரீட பதயே நமோ நம!
ஓம் ஷட்கோண பதயே நமோ நம!
ஓம் ஷட்கோச பதயே நமோ நம!
ஓம் நவநிதி  பதயே நமோ நம!
ஓம் சுபநிதி  பதயே நமோ நம!
ஓம் நரபதி பதயே நமோ நம!
ஓம் சுரபதி பதயே நமோ நம!
ஓம் நடச்சிவ பதயே நமோ நம!
ஓம் ஷடக்ஷர பதயே நமோ நம!
ஓம் கவிராஜ பதயே நமோ நம!
ஓம் தபராஜ பதயே நமோ நம!
ஓம் இகபர பதயே நமோ நம!
ஓம் புகழ்முநி பதயே நமோ நம!
ஓம் ஜயஜய பதயே நமோ நம!
ஓம் நயநய பதயே நமோ நம!
ஓம் மஞ்சுள பதயே நமோ நம!
ஓம் குஞ்சரி பதயே நமோ நம!
ஓம் வல்லீ பதயே நமோ நம!
ஓம் மல்ல பதயே நமோ நம!
ஓம் அஸ்த்ர பதயே நமோ நம!
ஓம் சஸ்த்ர பதயே நமோ நம!
ஓம் ஷஷ்டி பதயே நமோ நம!
ஓம் இஷ்டி பதயே நமோ நம!
ஓம் அபேத பதயே நமோ நம!
ஓம் கபோத பதயே நமோ நம!
ஓம் வியூஹ பதயே நமோ நம!
ஓம் மயூர பதயே நமோ நம!
ஓம் பூத பதயே நமோ நம!
ஓம் வேத பதயே நமோ நம!
ஓம் புராண பதயே நமோ நம!
ஓம் ப்ராண பதயே நமோ நம!
ஓம் பக்த பதயே நமோ நம!
ஓம் முக்த பதயே நமோ நம!
ஓம் அகார பதயே நமோ நம!
ஓம் உகார பதயே நமோ நம!
ஓம் மகார பதயே நமோ நம!
ஓம் விகாச பதயே நமோ நம!
ஓம் ஆதி பதயே நமோ நம!
ஓம் பூதி பதயே நமோ நம!
ஓம் அமார பதயே நமோ நம!
ஓம் குமார பதயே நமோ நம!

தமிழும் வடமொழியும் கலந்து இயற்றப்பட்டுள்ள துதி.  ஆறு என்ற பொருள் தரும் பெயர்களை தடித்த எழுத்துகளில் காட்டியுள்ளேன்.  
 

ஆறுமுகத்தின் பொருளாழம் வேறல்லவா?

நினைக்கிறேன் (ஏன் அப்படி நினைக்கின்றேன்
என்று பின்னர் கூறுகிறேன்).


நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை முதலில் சொல்வது அல்லவா அறிவுப் பகிர்வு!  மற்றவர்கள என்ன சொல்கிறார்கள் என்று பார்த்த பிறகு சொல்கிறேன் என்பதை நான் நல்லவிதத்திலேயே, ஒரு தூண்டில் வாதம் என்று கொள்கிறேன்.  

ஷண்முகமும் ஆறுமுகமும் ஒரேபொருளைத் தருவன.  இதற்கு திருப்புகழிலிருந்தும் மற்ற முருகன் துதிகளிலிருந்தும் எடுத்துக்காட்டு தரமுடியும்.


--
அன்புடன்,
ஹரிகி.

nahupoliyan

unread,
Oct 22, 2009, 7:22:02 AM10/22/09
to சந்தவசந்தம்
1.
மகாகவி காளிதாசனின் குமாரசம்பவத்திlee ஒரு காட்சி:

குமாரன் பிறந்துவிட்டான். வேண்டித்தவங்கிடந்த பிள்ளை.
சீராட்டலுக்குக்கேட்கவேண்டுமா!
அப்பனும் அம்மையும் ஆனந்தப் புன்னகையுடன் நோக்க, எதிரே குதித்தாடிச்
சுற்றிவரும் செல்லக்குழந்தை,

சட்டென்று நின்று , குட்டிப்பயல், எனக்கும் 1,2,எண்ணத்தெரியுமே என்று
காட்டுவது போல்,

தன் முகம் ஒவ்வொன்றையும் அடுத்தடுத்து முன் நீட்டி,

"ஒண்ணூ! ஒம்போதூ! ரெண்டு! பத்து! அஞ்சு! ஏழு!" என
எண்ணிக்காட்டுகிறானாம்!

"eko nava dvau dasa pancha sapthe'thi ajiigaNan aathmukhaan prasaarya"

2.
His genesis itself shows him as KaartikEya, with the six krttikaas as
his joint mothers whence he is also referred to as "saaN maatura",
'six-mothered'. Compare Dvai-matura, tha last-as-of-date avataar, the
great Mahabharata-maker, Sri Krishna!

nb
********************************************************************

Dr Subramanian

unread,
Oct 22, 2009, 7:51:55 AM10/22/09
to santhav...@googlegroups.com
Dwai Mathura is name given to Lord Ganesa too ( parvathi and Ganga)
any others in the list
vavesu

2009/10/22 nahupoliyan <n.balasu...@gmail.com>

செல்வா

unread,
Oct 22, 2009, 10:03:54 AM10/22/09
to சந்தவசந்தம்
நன்றி அரி கிருட்டினன் அவர்க்ளே.

> நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை முதலில் சொல்வது அல்லவா அறிவுப் பகிர்வு!

முருகன் மீது பத்தி உள்ளோர் இருக்கும் அவையாதலால், முந்திரிக்கொட்டை
போல்,அதிகப்பிரசஙகித்தனமாக முதலில் ஏதும் சொல்ல வேண்டாமே என
நினைத்தேன். மேலும் எப்பொழுதிலிருந்து ஆறுமுகம் - சண்முகம் என்னும்
சொற்கள் தமிழ்-சமசுக்கிருதம் ஆகிய மொழிகளில் வழக்கில் இருந்து
வந்திருக்கின்றன என்பதனையும் அறியேன்.

தமிழில் ஆறு என்னும் சொல் எண்ணிக்கையத் தவிர பிற பொருள்களையும்
சுட்டும். ஆறு என்பது வழி. ஆறலைக் கள்வன் என்பது வழிபறிக் கள்வன்.
ஆகாறு போகாறு என்பன வரும் வழி போகும் வழி. இவ்வாறு செய்,
எவ்வாறு செய்ய? என்பனவும் "வழி"யை உணர்த்துவன.
பிறவிப்பிணி தீர வழியளிப்பவன் ஆறுமுகன். பிறவிப்பிணியை
அறுத்து ஆறளிப்ப்வன் முருகன. ஆறாப்புண் என்பது தீராப் புண்.
தீராதா நோயால் அல்லலுறுவோர் படுவது ஆறாட்டம். சூடு
தணிந்து சூடு தீர்வது (தண்மை பெருவது) ஆறுதல்.
துன்பம் தணிய கூறும் அன்புமொழிகள் ஆறுதலாகக் கூறுதல்.

அருளுள்ளம் கொண்ட ஒருவன் உதவிகள் வழங்குவான் என பரிசில்கள்
பெற்ற புலவன் மற்றவர்களுக்கு வழிகாட்டுவது ஆற்றுப்படை. திருமுருகாற்றுப்
படை நூலே எடுத்துக்காட்டு. ஆமாறு என்றால் உதவி என்று பொருள்.
ஆறு என்பதற்கு முறை, முறைமை
சீர்மை, ஒழுக்கம், செந்நெறி.. எனப் பல பொருள்கள் உண்டு.
வரலாறு என்பது order of events. வழக்காறும் வழுகாறும் தெரியாதவர்கள்
என்றால் எது முறை, வழக்கம், வழிவழியாய் வரும் நல்லாறு என்றும்,
எது பிழையான பாதை, கெடுதி தரும் தீய நெறி என்றும் அறியாதவர்கள்
என்று பொருள். இலக்கண வழுவில்லாமல் சீராக அமைந்ததை வழாறு
என்பர்.

முகம் என்பதும் துறைமுகம் என்பது போல உள்வாங்க (கரையேற)
அல்லது வெளிச்செல்ல, (விடுபாட்டுத்) திறவு.
முகப்பது என்பது திறந்தா வாயால் ("கொள்"கலம், ஏனம், பாத்திரம்)
கொள்வது. முகத்தல் அளவை என்று கேள்விப்பட்டிருக்கலாம்.
நாம் முகம் என்பது புலன் உணர்வுகளால் உள்வாங்கும்
"கருவி" உள்ள (புற உலகத்தை உணரும் "திறவு"கோலாகாக) விளங்கும்
தலையின் "முன்" புறம். முன்னுவது முகம் (முன்னுவது
என்பது எண்ணுவது, அளந்தறிவது, உய்த்தறிவது என்றெல்லாமும்
பொருள் கொள்ளும்). முகம் என்பது வேறு சில நுட்பப்பொருளும்
கொள்ளும்.

சுருக்கமாக ஆறுமுகம் என்பது பிறவிக் கடலாகிய பிணிதீர வழி
தரும் திறவாம் அவன் முருகன். ஆறுமுகன் வழி நல்குவோன்.

ஆகவே ஆறுமுகன் என்பதும் சண்முகன் என்பதும் ஒரே பொருள்
தராது என்பது என் கருத்து. குற்றம் குறைகள் இருப்பின்
பெரியோர்கள் பொருத்தருள்க.

அன்புடன்
செல்வா

On Oct 22, 4:33 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2009/10/22 செல்வா <c.r.selvaku...@gmail.com>


>
> > ஒரு கேள்வி: ஆறுமுகம் என்பதும் சண்முகம் என்பதும் ஒரு பொருள் தருமா?
>
> எனக்குத் தெரிந்தவரையில் இரண்டும் ஒரேபொருள் கொண்ட பெயர்கள்தாம்.
>
> பாம்பன் சுவாமிகள் இயற்றிய குமாரஸ்தவத்தை இடுகிறேன்:
>

> *ஓம் சண்முக பதயே நமோ நம!

> ஓம் குமார பதயே நமோ நம!*

K.R. Kumar

unread,
Oct 22, 2009, 10:19:27 AM10/22/09
to santhav...@googlegroups.com
அன்புள்ள ஐயா,

//ஆகவே ஆறுமுகன் என்பதும் சண்முகன் என்பதும் ஒரே பொருள்

தராது என்பது என் கருத்து. குற்றம் குறைகள் இருப்பின்
பெரியோர்கள் பொருத்தருள்க//

இதுதான் சரி-மற்றையது தவறு என்று சொல்லாமல் இப்படிச் சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

ஆறுமுகன் என்ற சொல்லுக்கு பல பொருள்கள், விளக்கங்கள் உள்ளன.

ஆறு என்பதற்கு 6 என்ற எண்ணிக்கையாகப் பொருள் கொள்ளும்போது சண்முகன்(6 எண்ணிக்கையுடைய முகங்களை உடையவன் ) என்பது பொருத்தமே. இதுதான் நேரடியான பொருள்.

மற்றவையெல்லாம் அவரவருடைய “வித்வத்” தைப் பொருத்தது. வியாக்கியானக்காரர்கள் வியாக்கியானம் செய்வதைப் போல.

அன்புடன்,

குமார்(சிங்கை)


2009/10/22 செல்வா <c.r.sel...@gmail.com>
நன்றி அரி கிருட்டினன் அவர்க்ளே.

Kaviyogi Vedham

unread,
Oct 22, 2009, 10:39:13 AM10/22/09
to santhav...@googlegroups.com
ஆகா! என்ன அழகாய், அருமையாய் என் நண்பர் நகுபோலியனார் கருத்துச் சொன்னார்! ரொம்பவும் நெகிழ்ச்சியாய் இருந்தது படித்ததும்... இதுவே அவரது உண்மை முகம்.. வாழ்க நண்பர்!..தொடரட்டும் இதுபோலவே!,
 யோகியார்

2009/10/22 nahupoliyan <n.balasu...@gmail.com>
1.
மகாகவி காளிதாசனின் குமாரசம்பவத்திலே ஒரு காட்சி:
--
yogiyaar
அனைவரும் வாழ்க வளமுடன் நம் குரு சித்தர் பாபாஜி அருளால்!

SUBBAIER RAMASAMI

unread,
Oct 22, 2009, 10:57:10 AM10/22/09
to santhav...@googlegroups.com

சண்முகமும் ஆறுமுகமும் ஒன்றல்ல.

 

ஷண்முகமும் ஆறுமுகமும் ஒன்று.

 

ஆறு முகத்தில்  ஆறுதல் என்ற பொருளோ ஆறு, வழிகாட்டி என்ற பொருளோ வர வாய்ப்பில்லை. ஆறுகின்ற முகம் ஆறும் முகம் ஆறிய முகம் என்று வேண்டுமானால் வினைத்தொகையாகக் கொண்டாலும் அது அந்த முகத்துக்கு ஏற்றப்பட்டு அது அந்த முகத்தின் செயலாகக்காட்டுப்படுவதால் சிலாக்கியமில்லை. எனவே ஆறுமுகமும் ஷண்முகமும் ஒன்றுதான் என்பது என்கருத்து

 

இலந்தை


2009/10/22 Kaviyogi Vedham <kaviyog...@gmail.com>

Kaviyogi Vedham

unread,
Oct 22, 2009, 11:06:20 AM10/22/09
to santhav...@googlegroups.com
சரி..சரி.. செல்வா! உங்கள் வித்வம் அறிந்தோம்..குமார் சொன்னதுபோல..அவ்வலவும் அந்த ஆறுமுகம்
என்பதற்குப்பொருந்துமா என்பது சந்தேகமே..வாரியார் ஒரு கிராமத்தில் போய்ச் சொன்னாராம்.
சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்.. என்பதற்கு. (கந்த)சஷ்டியில் விரதம் இருந்தால் கருப்பையில்(அகப்பை) குழந்தை வரும் என்பதைத்தான் பெரியோர்கள் பூடகமாய்ப் பழமொழி சொன்னார்கள் என்றார்(அதாவது இவரது வித்வத்தைக்காட்டினார்.!)- கேட்டதும் அந்த கடலூர்க் கிராமத்தான்(வயது 86 இருக்குமாம்))-சட்டென்று எழுந்து சொன்னானாம்.. “ஏதுக்குங்க இவ்வளோ நொணாங்காட்டியா(அதாவது ‘ரீல்?) நீளமா சொல்றீங்க..இது எங்க கிராமத்துப் பழைய300-400 வருஷத்துப்பழமொழிங்க!. நாங்க கிராமத்துப்பழசுங்க எதச் சொன்னாலும் நேரடியாத்தாங்க சொல்லுவோம்..உங்க நகரத்தார் மாதிரி சுத்திவளச்சுப்பேசத்தெரியாதுங்க எங்களுக்கு..சட்டியப்போய் சஷ்டி என்குரீங்க!. ஆப்பை ந்னு நாங்க சொன்னாக்க நீங்க கருப்பைன்னு சுத்திவளச்சு ஏதோ சொல்றீங்க!. வெறும் சட்டியில ஒண்ணும் இல்லாதப்போ ஆப்பையிலே எப்படி வரும் னு தாங்க நாங்க பொருள் கொள்ளுவோம்..வெறும்
 வெள்ளை மனசுங்க எங்களுக்கு.. உங்களப்போல தலையில கருப்புச்சாயம் பூசத்தெரியாதுங்க..போவியளா!..என்னென்னமோ சப்பக்கட்டு கட்டிக்கிட்டு...”- என்று கோபமாய்ச் சொல்லிக்கொண்டே கந்தபுராணச் சொற்பொழிவைக் கேட்க மறுத்துவிட்டுச் சென்றானாம்.
..
 இதை யான் 1980 என்று நினைக்கிறேன்.. குமுதத்தில்(அவன் தான் இம்மாதிரிநாரதர்..வேலை, சிண்டு முடிதல் எல்லாம் தைர்யமாய்ச் செய்பவன்)படித்திருக்கிறேன்...நன்றாக இது ஞாபகம் உளது. இது பற்றி
 ஆபீஸில் சொல்லப்போக எனக்கும் ஒரு வாரியார் பக்த(செல்லப்பா)னுக்கும் கைகலப்பே வந்துவிட்டது.
 என்றால் பாருங்களேன்..உண்மை!
 ..அதுபோல் நீங்களும் வித்வத்தை சதுர்யத்தைக்காட்டலாம்..இதற்குப்பதில்
 நீங்கள் ஆறுதலை வளர் முருகா!. என்றால் கிட்டத்தட்ட சரியாக இருந்திருக்கும்..ஆனால் ஆறுமுகம்.. என்பதற்கு எப்படி வளைத்தாலும் ஆறு(6)- முகம், ஆறுகின்ற(சூடு ஆறும்) முகம், அல்லது வழி..என்றுதான்
பொருள் கொள்ளணுமே தவிர ரொம்ப ரீல் விட்டால் நம்ம தமிழ்--முருகனே அசந்துபோய் நிற்பான்! சரியா?
 யோகியார்
2009/10/22 செல்வா <c.r.sel...@gmail.com>
நன்றி அரி கிருட்டினன் அவர்க்ளே.

SubramaniyanGanesan Swaminathan

unread,
Oct 22, 2009, 11:06:49 AM10/22/09
to santhav...@googlegroups.com
சண்முகம் என்றால் நன்முகம் என்று பொருள் உதாரணத்திற்கு சன்மார்க்கம் என்றால் நல்வழி
அதுமாதிரி ஷண்முகம் என்றால் ஆறுமுகம் என்று பொருள் .சா கா ஸ்வாமிநாதன் .

2009/10/22 செல்வா <c.r.sel...@gmail.com>
ஒரு கேள்வி: ஆறுமுகம் என்பதும் சண்முகம் என்பதும் ஒரு பொருள் தருமா?

Hari Krishnan

unread,
Oct 22, 2009, 11:16:48 AM10/22/09
to santhav...@googlegroups.com
2009/10/22 செல்வா <c.r.sel...@gmail.com>
நன்றி அரி கிருட்டினன் அவர்க்ளே.


> நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை முதலில் சொல்வது அல்லவா அறிவுப் பகிர்வு!

முருகன் மீது பத்தி உள்ளோர் இருக்கும் அவையாதலால், முந்திரிக்கொட்டை
போல்,அதிகப்பிரசஙகித்தனமாக முதலில் ஏதும் சொல்ல வேண்டாமே என
நினைத்தேன். மேலும் எப்பொழுதிலிருந்து ஆறுமுகம் - சண்முகம் என்னும்
சொற்கள் தமிழ்-சமசுக்கிருதம் ஆகிய மொழிகளில் வழக்கில் இருந்து
வந்திருக்கின்றன என்பதனையும் அறியேன்.

அபிநவ கிருபாநந்த Warrior செல்வா அவர்களே,

நான் பலமுறை நாகரிகமாகச் சொல்லிவிட்டேன்.  வெளிப்படையாகச் சொன்னால்தான் புரியும் என்றால் அதையும் செய்கிறேன்.  என் பெயரை நான் எழுதுவதுபோல் எழுத உங்களுக்குச் சம்மதமில்லாவிட்டால் என்னைப் பெயர்சொல்லி அழைப்பதையோ குறிப்பிடுவதையோ தவிர்க்கவும்.  இல்லையென்றால் நான் உங்களை ஸெல்வா என்று அழைக்க நேரிடும்.  எனக்கு அதுதான் சரியென்று படுகின்றது என்று வைத்துக் கொள்ளுங்களேன். :-))

நீங்கள் அளித்துள்ள விளக்கம் பிரமாதமாக இருக்கிறது.  பிரமாதம் என்ற சொல்லுக்கு உண்மையான பொருள் என்னவென்று தெரியவேண்டுமென்றால் கந்தர் அலங்காரத்தில் மரணப் பிரமாதம் நமக்கில்லை என்று வரும் பாடலை எடுத்து, பொருளைத் தெரிந்துகொள்ளவும்.  

நன்றி.  (உடல்நிலை சரியாக இல்லை.  குளிரும் ஜுரமும் இரண்டு நாளாகப் படுத்திக் கொண்டிருக்கின்றன.  ஏதோ அவசரத்துக்கு இதைத் தட்டிப் போட்டுவிட்டேன்.)

Kaviyogi Vedham

unread,
Oct 22, 2009, 12:32:39 PM10/22/09
to santhav...@googlegroups.com
சாமீ!. நீங்களும் ஒரு சொல்லையே வளைக்கிறீங்களே..ஷண் என்பதற்கும், சன் என்பதற்கும் வித்யாசம் தெரியாதவங்களா நாங்க?..சன் என்றிருந்தால் நீங்க சொன்னமாதிரி சன்மார்க்கம் என்று கொள்ளலாம்.நன்முகம் என்னலாம்..இது ஷட் என்ற வடமொழிப்பதத்திலிருந்து வந்தது.
 ஹரியைக்கேட்டால் இதுபோன்ற சொல்லுக்கு ‘தத்பவம்’ (திரிபு)என்று இலக்கணம் சொல்வார்..
சரியா?
 யோகியார்


 
2009/10/22 SubramaniyanGanesan Swaminathan <madrasi...@gmail.com>

செல்வா

unread,
Oct 22, 2009, 1:16:21 PM10/22/09
to சந்தவசந்தம்
அவையோர்களே,

வணக்கம். உங்கள் கருத்துகளுக்கு நன்றி.

குற்றம் இருப்பின் மன்னிக்க.

என் கட்டளை இடுவது.
கேள்வி அவன் அருள்.

அன்புடன்
செல்வா

On Oct 22, 11:06 am, Kaviyogi Vedham <kaviyogi.ved...@gmail.com>
wrote:

> 2009/10/22 செல்வா <c.r.selvaku...@gmail.com>...
>
> read more »

> > பொருள் கொள்ளும்). முகம் என்பது வேறு சில- Hide quoted text -
>
> - Show quoted text -

சௌந்தர்

unread,
Oct 22, 2009, 8:38:38 PM10/22/09
to சந்தவசந்தம்
ஐந்து வருடங்களுக்கு முன்னர் சந்தவசந்தம் யாஹுகுழுமத்தில் சில அம்மானைப்
பாடல்கள் எழுதியதுண்டு. அந்தத் தொகுப்பிலிருந்து இந்த ஒரு பாடலை
மீண்டும் இடுகிறேன்.
கந்த சஷ்டி தினத்திற்குப் பொருத்தமான பாடல்.

ஆறுதலை அளிக்கும் ஆறுதலைக் கடவுள் பற்றியது.

ஆறு சடைக்கரந்தான் அப்பனவன் ஆங்கவரோ
ஆறுமுகம் தாம்கொண்டார் அழகுடன்காண் அம்மானை.
ஆறுமுகம் தாம்கொண்டார் அழகுடனே ஆமாயின்
ஆறுவகை எம்முகமாய் அருளிடுவார் அம்மானை?
. . ஆறுதலை ஆறுதலை அளித்திடுமே அம்மானை!

சௌந்தர்

செல்வா

unread,
Oct 23, 2009, 8:12:30 AM10/23/09
to சந்தவசந்தம்
அருமையான பாடல், சௌந்தர்!

தலையானா ஆறுதலை அளித்திடுவான் முருகன்.

அன்புடன்
செல்வா

Pas Pasupathy

unread,
Oct 23, 2009, 1:31:10 PM10/23/09
to santhav...@googlegroups.com

செல்வா

unread,
Oct 23, 2009, 2:58:22 PM10/23/09
to சந்தவசந்தம்
அன்புள்ள பேரா.பசுபதி,

மிக அருமை! சுவைபட உரையாடலாக எழுதியுள்ளீர்கள்.
பூரணன், முதல் பூரண எண் எல்லாம் அருமை.

"இந்தப் பாடலை இட்டுக் குணசாகரர்
“ இஃது எல்லாக் குற்றமும் தீர்ந்த செய்யுள் ”
என்று சொல்கிறார்!" என்றும், எப்படி முதன்மை பெற்ற
பாட்டு என்று நீங்கள் பஞ்ச் லைன் எல்லாம்
போட்டும் அசத்தினீர்கள் என்று வியக்கின்றேன்!

அன்புடன்
செல்வா


On Oct 23, 1:31 pm, Pas Pasupathy <pas.pasupa...@gmail.com> wrote:
> 'ஆறடி ஆறுமுகன்'
>

>  http://www.thinnai.com/?module=displaystory&story_id=60905213&format=...

செல்வா

unread,
Oct 23, 2009, 9:32:27 PM10/23/09
to சந்தவசந்தம்
> நான் பலமுறை நாகரிகமாகச் சொல்லிவிட்டேன். வெளிப்படையாகச் சொன்னால்தான்
> புரியும் என்றால் அதையும் செய்கிறேன். என் பெயரை நான் எழுதுவதுபோல் எழுத
> உங்களுக்குச் சம்மதமில்லாவிட்டால் என்னைப் பெயர்சொல்லி அழைப்பதையோ
> குறிப்பிடுவதையோ தவிர்க்கவும். இல்லையென்றால் நான் உங்களை ஸெல்வா என்று அழைக்க
> நேரிடும். எனக்கு அதுதான் சரியென்று படுகின்றது என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

Hari Krishnan,

I hope you'll have kindness in your heart to forgive me.

I remember that you had said okay to address you as I did,
in one of the previous mails in min tamil group. I searched
for it and couldn't find it. In any case, I'll refrain
from addressing you by name in Tamil. About your
threat, you're welcome to address me as you see fit.
I didn't come into this world with any name and I'm
called by different names, anyways.

Sincerely
Selva

On Oct 22, 11:16 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com>


wrote:
> 2009/10/22 செல்வா <c.r.selvaku...@gmail.com>
>

Reply all
Reply to author
Forward
0 new messages