தமிழாய்வுக் கட்டுரைகளைத் தினமணியில் வெளியிடலாம்

15 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Sep 15, 2013, 9:36:43 AM9/15/13
to vall...@googlegroups.com, Santhavasantham, thami...@googlegroups.com, tamil_...@googlegroups.com, panb...@googlegroups.com, housto...@googlegroups.com
இன்று படித்த வலைப்பதிவு இடுகை. 

தினமணிக்கு மாணவர்கள், ஆய்வர்கள் கட்டுரை அனுப்பிப் பயன்கொள்க.

நா. கணேசன்

---------------------

தினமணியின் எதிர்பார்ப்பை ஈடுசெய்ய தமிழாய்வோரே இல்லையா ?

Posted on by Sankara RamaSamy with No comments



"சங்கப்பலகை' - என்ற இப்புதிய பகுதிக்கு, தமிழ் இலக்கியத்தை முதன்மைப் பாடமாக (இளங்கலை, முதுகலை, இளம் முனைவர், முனைவர்) எடுத்துப் படிக்கும் மாணவர்களிடமிருந்து ஆய்வுக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த ஆய்வுக் கட்டுரைகள் இந்த சங்கப்பலகையில் ஏறும் தகுதிபெறும்.

மாணவர் பெயர், முழு முகவரி, தொ.பே.எண், படிக்கும் கல்லூரி / பல்கலைக்கழகத்தின் பெயர், அடையாள அட்டையின் நகல் ஆகியவற்றை இணைத்து மூன்று பக்கங்களுக்கு மிகாமல் (500 சொற்களுக்குள்) எழுதி அனுப்பவும். கட்டுரைக்கான அடிக்குறிப்புகள் (புஃட்நோட்), மற்றும் கட்டுரை தொடர்பான ஆதாரங்கள் (படங்கள், கல்வெட்டு, செப்பேடு போன்றவை) இணைக்க வேண்டும்.

மின்னஞ்சலில் அனுப்புவோர் WORD மற்றும் PDF ஃபைல் இணைத்து அனுப்ப வேண்டும்.
-ஆசிரியர்

தமிழ்மணி-தினமணி-15-09-2013-

Subbaier Ramasami

unread,
Sep 15, 2013, 9:49:02 AM9/15/13
to சந்தவசந்தம்
இது மாணவ ஆய்வர்கள், முனைவர்களைப்  பற்றி மட்டுமே குறிப்பிடுகிறது. ஆனால்  ணவர்கள் அல்லாத ஆய்வர்கள் இதில் தம் கட்டுயைரை இடமுடியாதுபோல் தெரிகிறதே!

இலந்தை


2013/9/15 N. Ganesan <naa.g...@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

N. Ganesan

unread,
Sep 15, 2013, 9:59:46 AM9/15/13
to santhav...@googlegroups.com


On Sunday, September 15, 2013 6:49:02 AM UTC-7, Ram wrote:
இது மாணவ ஆய்வர்கள், முனைவர்களைப்  பற்றி மட்டுமே குறிப்பிடுகிறது. ஆனால்  ணவர்கள் அல்லாத ஆய்வர்கள் இதில் தம் கட்டுயைரை இடமுடியாதுபோல் தெரிகிறதே!

இலந்தை



டெல்லி தினமணி ஆசிரியர் முனைவர் பாகி இங்குள்ளார். அவரிடமோ, தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதனிடமோ
கேட்கலாம். இது மாணவர் பகுதி. மூத்த ஆய்வாளர்கள் கட்டுரை வைத்தியநாதன் போன்றோர் கொள்கைகளுக்கு
ஏற்றாற்போல இருந்தால் வெளிவரும் என நினைக்கிறேன். வேறு ஆய்விதழ்களிலும், பத்திரிகைகளிலும் 
வெளியிடவும் இடம் இன்றைய விரிந்த உலகம் ஆய்வாளர்களுக்கு அளிக்கிறது.

ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடப் பல இடங்கள் இணையத்திலும், அச்சிலும் உள. 8 கோடிப் பேரில்
ஆய்வர்கள் தான் தமிழில் எழுத மிகக் குறைவு. அக் குறை நீக்கத் தமிழ்த்தாய் அருள வேணும்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Sep 15, 2013, 10:41:51 AM9/15/13
to santhav...@googlegroups.com
அன்பு இலந்தை,

ஐராவதம் மகாதேவன் ஏ. என். சிவராமனுக்குப் பின் தினமணி ஆசிரியராக ஆனபோது
தரமிக்க தமிழாராய்ச்சிகளைத் தரும் இதழாகவும், தமிழ் வளர்க்கும் பத்திரிகை எனப்
பல்துறை ஆய்வாளர்கள் பாராட்டும் இதழாக உயர்ந்தது. திருப்பூர் கிருஷ்ணன்
ஐராவதத்திடம் உதவி ஆசிரியராக இருந்தவர். அவர் ஐராவதம் பற்றி எழுதிய கட்டுரையில்
விரிவாக எழுதியுள்ளார். அக் கட்டுரை படித்துள்ளீர்களா? 

இப்போது அவ்வாறு இருக்கிறதா? என அறியேன். தினமணி இதழின் போக்கு பற்றி
இணையத்தில் படித்துள்ளேன். 

சிறந்த ஆராய்ச்சிகள் வெளியிடும் இணைய ஆய்விதழ்கள் தோன்ற வேண்டும்.
இன்றைய காலத்தின் தேவை.

அன்புடன்,
நா. கணேசன்
Reply all
Reply to author
Forward
0 new messages