இன்று சனிப் பிரதோஷச் சிறப்பு நன்னாள்.
திருச்சிற்றம்பலம்

..அனந்த் 5-8-2017<> குடி கொண்டதுவே <>
பஞ்சினின் மென்தாள் பாவையொடு
.. பரமன் பனிவரை மீதினிலே
குஞ்சர முகத்தோன் குமரனுடன்
.. கூடி நடத்திடும் குடித்தனத்தை
நெஞ்சினில் இருத்த நினைத்தேன்நான்
.. நிகழ்ந்த தேதென அறிவீரோ?
தஞ்சமென் றெனது நெஞ்சமவன்
.. தாளின் கீழ்குடி கொண்டதுவே!
****
தாடரும் தண்மை இதத்தினிலே
.. தாபம் தணிந்தவென் நெஞ்சினிலே
ஆடிடக் கண்டேன் அரன்குடும்பம்
.. அனைத்தும் அவனுடன் சேர்ந்(து)அந்த
நாடகம் அதனின் அழகையென்னால்
.. நவிலல் எங்ஙனம்? அவருடனே
கூடியென் நெஞ்சும் குதித்திடக்கை
.. கூடும் நாள்வரக் காத்திருப்பேன்.
(தாடரும் = தாள்தரும்)
****
நாடொறும் இந்த வகையாக
.. நானென் நனவிலும் கனவிலுமாய்
ஆடலின் அரசே! உன்னைநினைத்(து)
.. அரற்றல் கண்டினி மேலுமிங்ஙன்
வாடிட லாகா வழியொன்றை
.. வகுத்தல் எளி(து)இனி வெளியிலுனைத்
தேடிட வேண்டா(து) என்னுள்ளே
.. திகழும் உன்னுரு தெரியவைப்பாய்.
****
இன்று பிரதோஷ நன்னாள்.
திருச்சிற்றம்பலம்
<> வேடம் <>
ஏதங்கள் என்னை எடுத்து விழுங்கிடும்
வேதனையில் யான்விடும் ஓலமுன் – காதினுக்கு
எட்டினால் ஈசன்நீ எல்லார்முன் ஆடுமந்த
நட்டந்தான் நட்டமா மோ? 1
(ஏதம் – துன்பம், நோய்)
....................
மேன்மேலும் கூட்டும் வினைகள் விளைவிக்கும்
நானாம் அகந்தை நசித்திடக் – கோனுன்றன்
தாளென் அகத்துள்ளே தங்கவைப்பின் வாழுகின்ற
நாளெல்லாம் நன்னாளா மே. 10
அனந்த் 21-7-2017
(அந்தாதி வெண்பாப் பதிகம்)
இன்று சனிப் பிரதோஷச் சிறப்பு நன்னாள்.
திருச்சிற்றம்பலம்
இன்று சனிப் பிரதோஷச் சிறப்பு நன்னாள்.
திருச்சிற்றம்பலம்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
--
தாடரும் தண்மை இதத்தினிலே
.. தாபம் தணிந்தவென் நெஞ்சினிலே// - இவ்வரி ‘சித்தம் குளிர கதிர் அத்தம் வைத்து’ என்று பகவான் இரமண மஹர்ஷியின் அக்ஷரமணமாலை கண்ணியில் வருவது நினுவூட்டுகிறது
தாடரும் தண்மை இதத்தினிலே
.. தாபம் தணிந்தவென் நெஞ்சினிலே
ஆடிடக் கண்டேன் அரன்குடும்பம்
.. அனைத்தும் அவனுடன் சேர்ந்(து)அந்த
நாடகம் அதனின் அழகினைநான்
.. நவிலல் எங்ஙனம்? அவருடனே
கூடியென் நெஞ்சும் குதித்திடக்கை
.. கூடும் நாள்வரக் காத்திருப்பேன்.
மீண்டும் என் நன்றி.
அனந்த்
--
இன்று மீண்டும் சனிப்பிரதோஷச் சிறப்பு நன்னாள்
திருச்சிற்றம்பலம்
<> திருவடிப் பெருமை <>

நின்னடி காண நெடுமால் இயன்றிலன் நேயமுடன்
பன்னெடுங் காலம் பரவினர் கண்டிலர் பத்திசெய்த
சின்னவொர் பாலனின் சீவன் பறிக்கச் சினந்துவந்த
வன்னெமன் கண்டனன் மன்னவ! நீசெயும் மாயமென்னே.
*****

மாயை விலக்கும் மருந்தெனச் சாற்றுமுன் மாவடிக்கீழ்
தோயும் சுரர்தம் முடியெனச் சொல்வர் துதிப்பதற்கு
வாயில் புனலொடு வந்தவொர் வேடன் மிதியடியைத்
தாய்மக வின்மிதி தாங்குவ தொப்பத் தரித்ததென்னே!
*****

காலற்குன் காலுமந்தக் காமற்குக் கண்ணும்விண்
பாலலைந் தோர்க்குனது புன்சிரிப்பும் – சாலப்
பரிந்தளித்தாய் நீஎனக்குப் பாருள் இரக்கத்
திரிகையிலுன் தாள்தூசி தா.
( விண்பால்… புன்சிரிப்பும்- திரிபுர சம்ஹாரத்தைக் குறிப்பது; பரிந்தளித்தாய் – தண்டித்தருளுவதைக் குறித்தது; தாள்தூசி- புணர்ந்தபின், தாட்டூசி.)
*****

அடியார் எனும்சிலர் ஐயனே! உன்னை
அடிப்பார் செருப்பால்கல் வில்லால் – அடியேன்நான்
உன்னை அடியேன் உவந்துன் அடியிணையை
என்னுள்ளே வைப்பேன், இரு.
..அனந்த் 19-8-2017
இன்று சனிப் பிரதோஷச் சிறப்பு நன்னாள்.
திருச்சிற்றம்பலம்
<> குடி கொண்டதுவே <>
பஞ்சினின் மென்தாள் பாவையொடு
.. பரமன் பனிவரை மீதினிலே
குஞ்சர முகத்தோன் குமரனுடன்
.. கூடி நடத்திடும் குடித்தனத்தை
நெஞ்சினில் இருத்த நினைத்தேன்நான்
.. நிகழ்ந்த தேதென அறிவீரோ?
தஞ்சமென் றெனது நெஞ்சமவன்
.. தாளின் கீழ்க்குடி கொண்டதுவே!
****
தாடரும் தண்மை இதத்தினிலே
.. தாபம் தணிந்தவென் நெஞ்சினிலே
ஆடிடக் கண்டேன் அரன்குடும்பம்
.. அனைத்தும் அவனுடன் சேர்ந்(து)அந்த
நாடகம் அதனின் அழகையென்னால்
.. நவிலல் எங்ஙனம்? அவருடனே
கூடியென் நெஞ்சும் குதித்திடக்கை
.. கூடும் நாள்வரக் காத்திருப்பேன்.
(தாடரும் = தாள்தரும்)
****
நாடொறும் இந்த வகையாக
.. நானென் நனவிலும் கனவிலுமாய்
ஆடலின் அரசே! உன்னைநினைத்(து)
.. அரற்றல் கண்டினி மேலுமிங்ஙன்
வாடிட லாகா வழியொன்றை
.. வகுத்தல் எளி(து)இனி வெளியிலுனைத்
தேடிட வேண்டா(து) என்னுள்ளே
.. திகழும் உன்னுரு தெரியவைப்பாய்.
****
..அனந்த் 5-8-2017
இன்று மீண்டும் சனிப்பிரதோஷச் சிறப்பு நன்னாள்
திருச்சிற்றம்பலம்
<> திருவடிப் பெருமை <>
நின்னடி காண நெடுமால் இயன்றிலன் நேயமுடன்
பன்னெடுங் காலம் பரவினர் கண்டிலர் பத்திசெய்த
சின்னவொர் பாலனின் சீவன் பறிக்கச் சினந்துவந்த
வன்னெமன் கண்டனன் மன்னவ! நீசெயும் மாயமென்னே.
*****
மாயை விலக்கும் மருந்தெனச் சாற்றுமுன் மாவடிக்கீழ்
தோயும் சுரர்தம் முடியெனச் சொல்வர் துதிப்பதற்கு
வாயில் புனலொடு வந்தவொர் வேடன் மிதியடியைத்
தாய்மக வின்மிதி தாங்குவ தொப்பத் தரித்ததென்னே!
*****
காலற்குன் காலுமந்தக் காமற்குக் கண்ணும்விண்
பாலலைந் தோர்க்குனது புன்சிரிப்பும் – சாலப்
பரிந்தளித்தாய் நீஎனக்குப் பாருள் இரக்கத்
திரிகையிலுன் தாள்தூசி தா.
( விண்பால்… புன்சிரிப்பும்- திரிபுர சம்ஹாரத்தைக் குறிப்பது; பரிந்தளித்தாய் – தண்டித்தருளுவதைக் குறித்தது; தாள்தூசி- புணர்ந்தபின், தாட்டூசி.)
*****
அடியார் எனும்சிலர் ஐயனே! உன்னை
प्रदोषस्तवम् - பிரதோஷப் பாடல் [19 ஆகஸ்டு 2017]
[பாவினம்: இந்த்ரவஜ்ரம்; ஒவ்வோர் அடியிலும் ஒற்று நீங்கலாக 11 எழுத்துகள்;
(தமிழ் போல் அடியெதுகை முயற்சி.)]
क्वाहो शिव त्वं तव किं स्वरूपं ?
श्वाहं न जाने तव पादगन्धम् | 1
मोहान्धकारे चिरमेव मग्नः
नाहं तु जाने तव दृष्टिकान्तिम् | 2
काकोस्म्यपक्षः प्ररुदन् प्रजल्पन्
मूकोस्म्यहं ते लघुनामगाने | 3
वृक्षस्तु सम्यक् चरति स्वधर्मं
कुक्षिप्रवृत्तिः भुवि मे प्रधानम् | 4
शीलाः स्तुवन्ति प्रणमन्ति च त्वां
कालव्ययो मे सहजप्रभावः | 5
क्षुद्दाह शान्त्यै पशुवच्चरामि
विद्या विहीनः परतत्व मूढः | 6
शम्भोzसि नित्यं नटने रमन् त्वं
दंभाव भागिन् कुरु मे च किञ्चित् | 7
हे पार्वतीशिन् करुणाभिधान
पापात् अविद्यात् मम देहि मुक्तिम् | 8
அடியார் எனும்சிலர் ஐயனே! உன்னை
அடிப்பார் செருப்பால்கல் வில்லால் – அடியேன்நான்
உன்னை அடியேன் உவந்துன் அடியிணையை
என்னுள்ளே வைப்பேன், இரு................................அருமையான கவிதை.
அன்பன்,
மீ.விசுவநாதன்
இன்று பிரதோஷ நன்னாள்.
திருச்சிற்றம்பலம்
<> தவறாமோ? <>
வான்கொண்ட தேவர்களும் மறைகண்ட முனிவரும்
.. மாலுமய னாரு மறியாத்
தேன்கண்ட பாதமலர் சிரம்கொண்ட அடியவர்
.. தினமெலாம் காணு(ம்) விதமாய்
மான்கொண்ட கரமுமொரு மழுக்கொண்ட கரத்தொடு
.. மன்றில்நீ ஆடு மெழிலை
ஏன்கண்டு களிக்கின்றாய் எனக்கேட்க லாகுமோ?
.. இதுவுமொர் களியுன் றனுக்கோ? 1.
கார்கொண்ட குழலியின் கைகொண்ட தேவன்நீ
.. கயிலையின் மேல தெனவோர்
சீர்கொண்ட தில்லையாம் பேர்கொண்ட ஊரதில்
.. சித்தெனும் வத்து வடிவில்
நேர்கொண்ட ஞானியர் அகங்கண்டு மகிழ்வதை
.. நேரிலே எவரும் காணத்
தார்கொண்ட தாளொடு சதிர்கொண்டு நடித்தல்நான்
.. தரிசனம் செய்தல் தவறோ?
(சித்= மெய்யறிவு, பரம்பொருள்; வத்து= வஸ்து, இங்கு, பருப்பொருள்; சிதம்பரத்தில் சிதாகாசமாகவும், நடராச வடிவாகவும் ஐயன் காட்சி தருவதைக் குறிப்பது. நேர் = உண்மை; தகுதி) 2.
சூல்கொண்ட தாய்தரு ஊண்கொண்டு வளர்ந்தொரு
.. துயரிலா திருக்கும் கருப்போல்
கோல்கொண்டு நோய்பல குடிகொண்ட எனக்கும்நீ
.. குறைவிலா தருள்வை எனவுன்
பால்கொண்ட நம்பலால் நீகொண்ட பாலன்நான்
.. பாங்குடன் கனக சபையில்
கால்கொண்டு தாண்டவம் களிகொண்டு நீசெயல்
.. காண்பதோர் பெரிய தவறோ?
(நம்பல் = நம்பிக்கை; பாங்கு= அழகு, ஒழுங்கு) 3.
ஊன்கொண்ட உடலமிஃ(து) உயிர்கொண்ட போதிலே
.. உன்நினைப் பென்னு மொன்றை
நான்கொண்டு வந்திலேன் நீகொண்டு வைத்தனை
.. நன்(கு)இதை அறிவை முன்னம்
தேன்மண்டு கூந்தலாள் துணைகொண்டிவ் வெளியனைத்
.. தில்லையில் ஆண்ட பாங்கைக்
கூன்கொண்ட பிறையினை முடிகொண்ட கூத்தனே
.. கூறுவாய் உலகி னுக்கே. 4.
கான்கொண்டு சென்றிடக் கோல்கொண்டென் மேனியைக்
.. கடத்திடும் வேளை நெருங்கி
ஊன்கொண்ட உருவமும் நான்கொண்ட தம்பமும்
.. உதவிடாப் போதில் ’இவனை
வான்கொண்டு வா’வென நீதண்ட னுப்பிட
.. மார்க்கமொன் றுள்ள தெனவே
நான்கண்டு கொண்டனன் நீநடம் ஆடலை
.. நாடொறும் காணல் அதுவே.
(தம்பம் = வீண்/தற்பெருமை; தண்டு = சிவிகை) 5.
அனந்த் 3-9-2017
(எழுசீர் ஆசிரிய விருத்தம். படம்: ‘நடராசப் பெருமான்’ திருவாவடுதுறை ஆதீன வெளியீடு, 2001)
அனந்த் 3-9-2017
.. உன்நினைப் பென்னு மொன்றை
நான்கொண்டு வந்திலேன் நீகொண்டு வைத்தனை'
' ’இவனை
வான்கொண்டு வா’வென நீதண்ட னுப்பிட
.. மார்க்கமொன் றுள்ள தெனவே
நான்கண்டு கொண்டனன் நீநடம் ஆடலை
.. நாடொறும் காணல் அதுவே. '
நான் மிகவும் ரசித்த வரிகள். அருமை, அனந்த்.
சங்கரன்

பாரானை விண்ணானைப் பற்றினோர் தம்குறையைப்
பாரானை முக்கட் பரமனைச் –சீர்க்கொன்றைத்
தாரானைத் தன்னடிசேர் அன்பர்க்கு மீள்பிறவி
தாரானை யாரேத்தா தார்?
வார்கடல் சூழுலகின் மையமெனக் காட்சிதரும்
பேரூரென் றூரார்சொல் தில்லையிலே – பேராளன்
தானந்தம் ஆதியிலாத் தன்மையன் என்றுணர்வோர்
ஆனந்தம் கூறவல்லார் ஆர்?
ஓரடியை மண்ணில்வைத் தோரடியை மேற்றூக்கிச்
சீராக ஆடும் சிதம்பரத்தான் – பேர்சொல்லி
ஆறாய்க்கண் நீர்சொரிய அங்கம் புளகிக்கும்
பேறடைந்தார்க் கார்நிகரா வார்?
ஆரார் அவன்பேர் அறையார் அவனழகைப்
பாராதார் யாரே? பதம்பணிந்து – ஏறேறி
ஊரார்முன் ஊரும் ஒருவனைத் தில்லையெனும்
ஊரானை ஓராதார் ஆர்?
பேரானைத் தோலுடுத்தும் பேயானைப் பித்தனெனும்
பேரானைத் தன்னிலையில் பேரானை – தேராரைச்
சேரானைச் செல்வி சிவகாமி நேயனெனுஞ்
சீரானை உன்துணையாய்த் தேர்.
(தேரார் – தெளிந்த அறிவில்லாதார், பகைவர். படம்: திரு. கணபதி ஸ்தபதி, ’நடராசப் பெருமான்’ திருவாவடுதுறை ஆதீன வெளியீடு, 2001)
.. அனந்த் 17-9-2017
இன்று பிரதோஷ நன்னாள்
இன்று பிரதோஷ நன்னாள்
<> துணையாய்த் தேர் <>
பாரானை விண்ணானைப் பற்றினோர் தம்குறையைப்
பாரானை முக்கட் பரமனைச் –சீர்க்கொன்றைத்
தாரானைத் தன்னடிசேர் அன்பர்க்கு மீள்பிறவி
தாரானை யாரேத்தா தார்?
. . . .
நீங்கள் சொல்வது பொருந்தாமல் போக வாய்ப்பில்லை. இந்த இழை பெரும்பாலும் தில்லைக்கானது. மேலும் ஐந்தாம் சீரில் நான் மோனை அமைத்திருக்கிறேன். ஆகவே சொக்கன் தில்லை ஐயனே ஆனான்!
நன்றியுடன் கோபால்.
இன்று பிரதோஷ நன்னாள்
<> துணையாய்த் தேர் <>
பாரானை விண்ணானைப் பற்றினோர் தம்குறையைப்
அன்பரே அநந்த்,
<> பூத உடல் <>

நீரில் மிதந்து கருவாகி
.. நிலத்தில் விழுந்து காற்றிழுத்துப்
பாரில் திரிந்து பல்லோரும்
.. பாவி யென்னும் படியாய்வாழ்ந்(து)
ஊரின் வெளியே தீயில்புகும்
.. உடலம் இதனைக் கொண்டுன்னை
நேரில் காணல் எனும்விந்தை
.. நிகழ வைத்தல் நின்கடனே
எல்லாம் அறிந்த வல்லோன்நீ
.. எனக்கோர் உடலம் தந்தசெயற்
குள்ளே ஒளிந்த காரணத்தை
.. உணரா திருந்திந் நாள்வரையில்
பொல்லா நினைப்போ(டு) உரை,செயலைப்
.. புரிந்து வந்தோன் எனஅறிந்தும்
நல்லோய் எனையும் நின்னடியை
.. நாட வைத்தல் நின்கடனே
குழியில் விழுந்து தவிப்பவனின்
.. கூச்சல் கேட்டுக் கைதரல்போல்
அழிவை நோக்கி விரையுமென்னை
.. அன்பின் வடிவே நீதடுத்துன்
எழிலைக் காட்டி ஈர்த்துன்றன்
.. இணையடி தன்னைச் சார்வதற்கு
வழியைக் குறித்துன் அடியவனாய்
.. வாழ வைத்தல் நின்கடனே.
காற்றும் நீரும் நெருப்புமிவன்
.. கயவன் நல்லோன் எனப்பாரா(து)
ஊற்றம் தருமாப் போலாகும்
.. உன்றன் கருணை எனப்பெரியோர்
சாற்றல் கேட்(டு)இன்(று) உன்கமலச்
.. சரணம் நாடி வந்தேனைத்
தூற்றா தென்றன் மனமாசைத்
.. தொலைத்துக் காட்டல் நின்கடனே
நாட்டம் எல்லாம் என்றனுக்கு
.. நலிவைக் கொடுக்கும் நினைவுகளில்
தேட்டம் எல்லாம் என்றனுக்குச்
.. சீரைக் கெடுக்கும் செல்வத்தில்
வாட்ட மடைந்தேன் இவற்றாலே
.. வழியொன் றிதுவென் றுன்னடியார்
கூட்டம் சொல்கேட்(டு) உன்முன்கை
.. கூப்பி நின்றேன் ஏற்பாயே.
(காற்றிழுத்து - காற்றைச் சுவாசித்து)
.. அனந்த்
2/3-10-2017
இன்று பிரதோஷ நன்னாள்
முன்னிடுகையின் தலைப்பு விட்டுப் போனது:
இன்று பிரதோஷ நன்னாள்
திருச்சிற்றம்பலம்
.. கயவன் நல்லோன் எனப்பாரா(து)
ஊற்றம் தருமாப் போலாகும்
.. உன்றன் கருணை எனப்பெரியோர்
சாற்றல் கேட்(டு)இன்(று) உன்கமலச்
.. சரணம் நாடி வந்தேனைத்
தூற்றா தென்றன் மனமாசைத்
.. தொலைத்துக் காட்டல் நின்கடனே"...........உள்ளம் தொட்ட வரிகள்.
அன்பன்,
காற்றும் நீரும் நெருப்புமிவன்
.. கயவன் நல்லோன் எனப்பாரா(து)
ஊற்றம் தருமாப் போலாகும்
.. உன்றன் கருணை எனப்பெரியோர்
சாற்றல் கேட்(டு)இன்(று) உன்கமலச்
.. சரணம் நாடி வந்தேனைத்
தூற்றா தென்றன் மனமாசைத்
.. தொலைத்துக் காட்டல் நின்கடனே
mika abaramana song.
yogiyar
<> பூத உடல் <>
முன்னிடுகையின் தலைப்பு விட்டுப் போனது:
இன்று பிரதோஷ நன்னாள்
திருச்சிற்றம்பலம்
2017-10-02 21:53 GMT-04:00 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>:
<> பூத உடல் <>
எழிலைக் காட்டி ஈர்த்துன்றன்
.. இருதாள் தம்மைச் சார்வதற்கு
எண்ணத் தகுமோ இவண்? (1)மண்ணினால் ஆன மதியேனை மெய்ப்பொருளாய்பிரதோஷப் பாடல் [3 அக்ட் 2017]புல்லர்க்கும் தெய்வம்எல்லாமே நீயென்(று) இயம்பினர் முற்றுணர்ந்தோர் !கல்லாத நானும் கடவுளா? - சொல்லாயோ
என்னுள்நீ உண்டென்றால் ஏழு திரையிட்டே
உன்னை மறைக்கா(து) ஒளிமயமாய் - முன்னெழுந்து
பொங்கிப் பெருமிதமாய்ப் புல்லர்க்கும் தெய்வமென
இங்குப் பறைசாற்ற ஏகு! (8)
நல்வாழ்த்துகளுடன்,
இன்று பிரதோஷ நன்னாள்
திருச்சிற்றம்பலம்

நின்னடி காண நெடுமால் இயன்றிலன் நேயமுடன்
பன்னெடுங் காலம் பரவினர் கண்டிலர் பத்திசெய்த
சின்னவொர் பாலனின் சீவன் பறிக்கச் சினந்துவந்த
வன்னெமன் கண்டனன் மன்னவ! நீசெயும் மாயமென்னே.
மாயை விலக்கும் மருந்தெனச் சாற்றுமுன் மாவடிக்கீழ்
தோயும் சுரர்தம் முடியெனச் சொல்வர் துதிப்பதற்கு
வாயில் புனலொடு வந்தவொர் வேடன் மிதியடியைத்
தாய்மக வின்மிதி தாங்குவ தொப்பத் தரித்ததென்னே!
காலற்குன் காலுமந்தக் காமற்குக் கண்ணும்விண்
பாலலைந் தோர்க்குனது புன்சிரிப்பும் – சாலப்
பரிந்தளித்தாய் நீஎனக்குப் பாரெல்லாம் ஏற்றில்
திரிந்திடுமுன் தாட்டூசி தா.
(விண்பால் அலைந்தோர் = விண்ணில் மூன்று கோட்டைகளில் (திரிபுரம்) அலைந்த அசுரர்கள்; பரிந்தளித்தாய் – தண்டித்தருளுவதைக் குறித்தது; தாட்டூசி = தாள்தூசி.)
அனந்த் 17-10-2017
. . . . . .வேடன் மிதியடியைத்
தாய்மக வின்மிதி தாங்குவ தொப்பத் தரித்ததென்னே! அற்புதம்!
கால்காண மாலற்குத் தந்திலைநீ! கண்ணப்பன்
கால்கண்ணில் தாங்கிக் கனிந்ததென்னே! - கால்தூக்கிக்
கால்வைத்து நீயாடக் காணத்தா! யானுய்வேன்
கால்மண்ணால் நீதொட்டக் கால்!
நல்வாழ்த்துகளுடன்
கோபால்.
இன்று பிரதோஷ நன்னாள்
திருச்சிற்றம்பலம்
நின்னடி காண நெடுமால் இயன்றிலன் நேயமுடன்
பன்னெடுங் காலம் பரவினர் கண்டிலர் பத்திசெய்த
சின்னவொர் பாலனின் சீவன் பறிக்கச் சினந்துவந்த
வன்னெமன் கண்டனன் மன்னவ! நீசெயும் மாயமென்னே.
இன்று பிரதோஷ நன்னாள்
திருச்சிற்றம்பலம்
நின்னடி காண நெடுமால் இயன்றிலன் நேயமுடன்
பன்னெடுங் காலம் பரவினர் கண்டிலர் பத்திசெய்த
சின்னவொர் பாலனின் சீவன் பறிக்கச் சினந்துவந்த
வன்னெமன் கண்டனன் மன்னவ! நீசெயும் மாயமென்னே.
மாயை விலக்கும் மருந்தெனச் சாற்றுமுன் மாவடிக்கீழ்
தோயும் சுரர்தம் முடியெனச் சொல்வர் துதிப்பதற்கு
வாயில் புனலொடு வந்தவொர் வேடன் மிதியடியைத்
தாய்மக வின்மிதி தாங்குவ தொப்பத் தரித்ததென்னே!
சந்த ஓசையோடு, - குறிப்பாக, ஈற்று இரு சீர்களில் விளம்- கனி ஓசையுடன், நன்கு அமைந்த பாடல்.
அனந்த்
> வாமபா கமிணைத்தவன் – வகையுளியத் தவிர்த்தால் ஓசை சிறக்கும்.
> மாலனை வேதனை எத்தும் மாபரம் பொருளானவன் –
எத்தும் (எவ்விதத்திலும்) – சுந்தரரின் எத்தான் மறவாதே நினைவுக்கு வந்தது. எத்தும் விஞ்சும் என்பது போல இருக்க வேண்டுமோ?
இன்று பிரதோஷ நன்னாள்.
திருச்சிற்றம்பலம்

<> தொலைவு உளதோ? <>
கடவுளை நீங்கள் அடைவதற்குக்
.. காண்பீர் இதுவோர் வழிஎன்பார்
கடந்து செல்லத் தொலைவின்றிக்
.. கணமும் பிரியா வணமாய்என்
உடனி ருக்கும் நடத்தரசை
.. ஒன்றத் தொலைவென் றேதுளது?
கடல்மீன் தாகத் தால்வாடக்
.. கண்டார் உளரோ சொல்வீரே!**
******
கல்லி னுள்ளே மரத்துள்ளே
.. கடலுள் ஐந்து பூதத்துள்
எல்லாப் பொருள்கள் தம்முள்ளும்
.. இயல்பாய் நிற்கும் பேருணர்வு,
நல்லோர் உள்ளக் குகையினுள்ளே
.. நாளும் ஒளிரும் விளக்(கு)இங்கே
தில்லைப் பதியின் நாயகனாய்த்
.. திகழும் அழகைக் காண்பீரே.
******
வில்வம் திகழும் அணிசடையில்
.. வீழும் புனலும் நிலவொளியும்
சொல்லற் கரிய எழில்பொதிந்த
..சுடர்செம் பவளத் திருமுகத்தில்
மெல்ல அரும்பும் புன்னகையும்
.. வேதத் தொலியாய்க் காலெழுப்பும்
சல்சல் ஒலியும் சேரநமைச்
.. சேர்ப்பான் மெய்ம்மைச் சிவத்துள்ளே.
(** இந்த உவமை பரமஹம்ஸ யோகானந்தா அவர்களின் ஆங்கில உரையொன்றில் கண்டது.)
இன்று பிரதோஷ நன்னாள்.
திருச்சிற்றம்பலம்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
> கோபால்.> தங்கள் தமிழ்ப் பாடல் மூலத்தை விடச் சிறப்பாக இருக்கிறது. நல்வாழ்த்துகளுடன்,
இன்று பிரதோஷ நன்னாள்.
திருச்சிற்றம்பலம்

<> மறக் கருணை <>
(வாய்பாடு: மா மா காய் மா மா காய்)
அழித்தல் உன்றன் தொழிலென்றிங்(கு)
.. அனைவர் சொல்லக் கேட்டுள்ளேன்
விழிப்பில் தொடங்கித் தொலைவிண்ணில்
.. மீன்கள் மறையும் வேளைவரை
பழிக்கும் செயலே புரியுமென்றன்
.. பாவச் சுமையை நீதயைசெய்(து)
அழிக்கின் உலகோர்க் குன்தொழிலுள்
.. அடங்கும் கருணை விளங்கிடுமே.
***********
தோன்றல் நிலைத்தல் அழிதலெனும்
.. சுழலில் சிக்கி மாயையுள்வேர்
ஊன்றி அவருள் உறைமெய்யை
.. உணரா தென்றும் உழல்வதுபோல்
தோன்ற வைக்கும் உன்ஜாலம்
.. தெரிந்தோர்க் குண்டோ பிறப்பிறப்பு?
ஆன்ற அந்த அறிவையெனக்(கு)
.. அருளும் நாளும் எந்நாளோ?
***********
ஒட்டி உன்னோ டுறைமங்கை
.. உன்றன் இடக்கை ஏந்தியதீச்
சட்டி தன்னை விடுத்துச்செந்
.. தாமரை தாங்கி நிற்கையிலுன்
இட்டம் போல அழிக்கும்வினை
.. எவ்வா றாற்று வாய்அறியேன்
நட்டம் பயிலும் நாத!உனை
.. நன்க றிந்தார் எவருளரே!
***********
செய்தற் கான தொழிலொன்றைச்
.. சீராய் இறுதி வரைஆற்றல்
வையத் தோர்க்கு வழங்கும்நல்
.. வார்த்தை; இங்கு நீஎன்னை
உய்விப் பதற்குத் தொடங்கிவைத்த
.. உன்றன் தொழிலை முடித்திலையேல்
ஐய! எனக்குக் கதிதரஇங்(கு)
.. ஆருள் ளார்?யான் என்செய்வேன்?
***********
(வாய்பாடு: காய் மா காய் மா மா காய்)
அளித்தாலும் என்னை அழித்தாலும்
.. அருள்தந் தாலும் தராயெனினும்
களித்தாடும் ஞான நடத்தோய்!உன்
.. கழலின் நிழல்விட் டகலாமல்
விளிப்பேனுன் தேனார் திருநாமம்
.. வினையேன் பாலுன் திருவிழிகள்
துளியேனும் வீழும் வரைஎன்னைத்
.. துரத்த முயலல் ஆகாதே.
(படம்: “நடராசப் பெருமான்”, திருவாவடுதுறை ஆதீன வெளியீடு, 2001)
.. அனந்த் 15-11-2017
இன்று பிரதோஷ நன்னாள்.
திருச்சிற்றம்பலம்
இன்று பிரதோஷ நன்னாள்.
இன்று பிரதோஷ நன்னாள்.
திருச்சிற்றம்பலம்
<> மறக் கருணை <>
(வாய்பாடு: மா மா காய் மா மா காய்)
அழித்தல் உன்றன் தொழிலென்றிங்(கு)
.. அனைவர் சொல்லக் கேட்டுள்ளேன்
விழிப்பில் தொடங்கித் தொலைவிண்ணில்
.. மீன்கள் மறையும் வேளைவரை
-
--
சில குறிப்புகள்:
வாவென் றுனையழைக்க மட்டுந்தான் வாய்தந்தாய்; ஆயினுமென்
ஈற்றுச் சீரில் மோனையமைந்தால் சிறக்கும்
நாவென்ன நான்முகனின் நாயகியே நட்டமிடும் நல்லிடமா?
நாயகியே – நாயகியாள் எனலாம் (1)
சிற்பரமாய்த் துய்த்தவர்கள் சீவன் கரைந்துன்னில் சேர்ந்தார்கள்
கரைந்துன்னில் – கரைந்துன்னுள்? (2)
ஏதம் மலிந்தேனுக்(கு) என்று புரியும் இறைவடிவே?
புரியும் - புரிவாய்? (3)
தமிழ்திருந்திப் பேசுவரை தாமதித்தால் ஆகாது! தப்புகளே
பேசுவரை தாமதித்தால் – பேசுவதைத் தாமதித்தல்
குமிந்துருவாய் வந்தேனின் கூச்சலெலாம் கூப்பாடே! கூசாதே!
எல்லாச் சீர்களும் நெடிலாய் அமைவதைத் தவிர்க்கலாம்.; ஈற்றுச் சீரில் விளங்காய் வருதல் நன்று.
அனந்த்
இன்று பிரதோஷ நன்னாள்.
திருச்சிற்றம்பலம்
<> எது தவம்? <>

உம்பர் உலகை அடைவனென
.. உஞற்றும் தவமும் உலகுதரும்
இன்பம் பலவும் பெறுதற்கென்(று)
.. இயற்றும் தவமும் தவமல்ல
துன்பம் மலிந்த பிறப்பிறப்புச்
... சுழலை விடுத்துக் கதியடையச்
செம்பொற் சுடராய்த் திகழ்வோன்தாள்
.. தேடல் ஒன்றே தவமாமே.
தவத்தின் உண்மைப் பயனடைந்தோர்
..தம்முள் உறையும் பரமறிவார்
அவத்தை விழிப்பு கனவுள்ளும்
.. ஆழ்ந்த சுழுத்தி அதனுள்ளும்
சிவத்தி னின்று தாமகலாச்
.. சித்தில் நிலைப்பார் சுழன்றுவரும்
பவத்தை வென்றோர் அவர்பெருமை
.. சாற்றல் எவர்க்கே சாத்தியமே.

கோவணம் தரித்துப் பெருந்துன்பம்
.. கொளினும் உடலைக் குறியாது
யாவரும் வியக்க அருணையிலே
.. அமர்ந்த முனிவர் ஆர்நானென்(று)
ஓவா துள்ளே தேடெனவே
.. உபதே சித்து வானுறையும்
தேவரும் அறியா அறிவொளியில்
... திளைத்தார் அதுமெய்த் தவமாமே.
... அனந்த் 1-12-2017
இன்று பிரதோஷ நன்னாள்.
திருச்சிற்றம்பலம்
<> மறக் கருணை <>
<> மறக் கருணை <>
இன்று பிரதோஷ நன்னாள்.
திருச்சிற்றம்பலம்
<> எது தவம்? <>
Nice.In the context of உனைத்தினம் தொழுதிலன் song, I was recently thinking about what Thavam is!
On Thu, Nov 30, 2017 at 8:12 PM VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:
இன்று பிரதோஷ நன்னாள்.
திருச்சிற்றம்பலம்
<> எது தவம்? <>
உம்பர் உலகை அடைவனென
முற்றெதுகை வெள்ளமும் தொடர்ந்து ஓடுகிறது!
>> காரிருளில் மின்னுபவன் கலையொன்று மிளிர்ந்திடவே கூட்டியவ! -- கலைதலைமேல் ஒளிவீசக் கூட்டியவ என்னலாம் (அது ஏகாரத்தைத் தவிர்க்கும், மற்றவற்றைச் சிவன் ஏந்திய அங்கங்களைச் சொன்னது போல மதியின் இடத்தையும் தெளிவாக்கும்.
பன்னிருகை *யானுடனும் பார்த்திருக்கத் தூக்கிவைத்த>> அன்னைசிவ *காமியுமங் கானைமுகத் *தானுடனும்
>> உன்னொருகால் இன்றொரு*க்கால் ஓய்வெடுத்தால் தாங்கிடத்தம் - ஒற்றுமிகை
>> பொன்னிதனிப் போக்கெடுத்துப் புண்ணியத்தைத் தேடிவரும்
தென்னகத்துத் திருவூராம் தில்லைதனில் - தில்லையருகில் காவிரி ஓடுகிறதா?
அனந்த்---------