கவியரங்கம்- 60

324 views
Skip to first unread message

Subbaier Ramasami

unread,
Aug 25, 2025, 12:29:38 AMAug 25
to santhavasantham
அடுத்த கவியரங்கம் நடத்த ஏற்பாடு நடக்கிறது.

தலைப்பு: போராடவா இந்தப் போது!   

அழைப்பாகவும் வினாவாகவும் கொள்ளலாம்.

சத்தம் சங்கடப்படுத்தும். சாந்தம் சங்கடத்தைப் படுத்தும்

தலைமை: இலந்தை
நாள் 10-11-2025

கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் பெயர் கொடுக்கலாம்

இலந்தை

Siva Siva

unread,
Aug 25, 2025, 8:25:10 AMAug 25
to santhav...@googlegroups.com
For some reason, Google decided to send your post to the promotions folder!

As different countries use different date formats, what is the date - in dd-mon-yyyy format - using 3 letters for the month name?

Thanks,
V. Subramanian

Ram Ramakrishnan

unread,
Aug 25, 2025, 8:58:52 AMAug 25
to santhav...@googlegroups.com
தலைவருக்கு மரியாதையுடன் வணக்கம் உரித்தாகுக.

அடியேனின் பெயரை இணைக்க வேண்டுகிறேன். வரும் 17ம் திகதி இந்தியா செல்லவிருப்பதால் அடியேனை எவ்வளவு சீக்கிரமாய் அழைக்க முடியுமோ அவ்வாறே செய்ய வேண்டுகிறேன்.

கவிதையைத் துரிதப் படுத்துவேன்.

முதல் மூன்று இடங்களில் அழைக்க இயலவில்லை யெனில் 19ம் திகதிக்குப்பின் அழைக்க வேண்டுகிறேன்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Aug 25, 2025, at 00:29, Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBCeY-1OCz2XQ3-LDh9kdsdLymPw%2BE1wBvO5dBqHkrFgYA%40mail.gmail.com.

Subbaier Ramasami

unread,
Aug 25, 2025, 10:20:07 AMAug 25
to santhav...@googlegroups.com
THE DATE IS 10TH SEP 2025

RAMASAMI

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Subbaier Ramasami

unread,
Aug 25, 2025, 10:30:10 AMAug 25
to santhav...@googlegroups.com
நீங்கள் ஆரம்பத்திலேயே அழைக்கப்படுவீர்கள்.

நாம் பலவகைப் பாக்களில் பாவினங்களிலும் கவியரங்கம் நடத்தியிருக்கிறோம்.  கலிவெண்பாவில் நடத்தியதாக நினைவில்லை. கலிவெண்பாவில் நடத்தியிருக்கிறோமா என நினைவில்லை.  கலிவெண்பா கைவந்து விட்டால் கவிதை ஜம்மென்று குதிபோட்டு ஓடும். இரணடாம் அடி இறுதியில் எதுகை இல்லாமல் பாரதியியின் குயில் பாட்டுப் போல நடக்கலாம்.   

நான் கவிதை எழுதத் தொடங்கிய நாள்களில் பெரும்பாலும் கலிவெண்பாவில் எழுதியிருக்கிறேன். அக்கவிதைகள் என்னை முன்னிறுத்தின. நான் எழுதியுள்ள பிச்சைக்காரன் கவிதை அந்த வகையைச் சார்ந்தது.

எனவே மீண்டும் ஒருமுறை நினைவூட்டல்

தலைப்பு:    போராடவா இந்தப் போது!   வினாவாகவோ அழைப்பாகவோ இருக்கலாம்
நாள் 10 செப்டெம்பர் 2025
தலைவர்: இலந்தை.

கவியரங்கில் கலந்துகொள்ள விரும்புகிறவர்கள் பெயர் கொடுக்கலாம்.   எவரையும் பெயர் குறிக்காமல் நம் போராட்டத்தைத் தொடங்கலாம்

Ram Ramakrishnan

unread,
Aug 25, 2025, 11:21:59 AMAug 25
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, தலைவரே.

கலிவெண்பா வகைப் பாக்கள் இயற்றும் எண்ணம் எனக்கும் உதித்தது. உங்கள் இடுகையில் அதனைக் காண்பதில் மெத்த மகிழ்ச்சி.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Aug 25, 2025, at 10:30, Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:



Vivek Bharathi

unread,
Aug 25, 2025, 2:52:24 PMAug 25
to சந்தவசந்தம்
அடடா! நற்செய்தி! நல்ல பாவகை! நானும் பங்கேற்கிறேன்! 

சந்தங்கள் குதிபோடும் சங்கதிகள் சதிராடும் 
சிந்தைப்போல் துள்ளல்கள் சிறப்பாக வந்திருக்கும் 
வெண்டளையுங் கலித்தளையும் விரவி நடந்துசுவைக் 
கொண்டலென மழைதூறும் கொண்டாட்டம் மிகவாகும்
பாச்சொல்லும் வேகமும் பரபரப்பைக் கிளப்பிமிக 
ஆச்சர்யம் சேர்த்திருக்கும் அணையுடைத்த வெள்ளமொன்று 
எதுகைக் கரையிடையே ஏகாந்த மாயோடி
புதுமைத் துடிப்புடனே பூரிப்பாய் எழுந்துவரும்! 
"காலை இளம்பரிதி" காட்டிநம் பாரதியார் 
கோலமுறப் பாடிய குயில்பாட்டை ஒருமூச்சில் 
மனப்பாடம் செய்திடவும் மனம்பாடம் படித்திடவும் 
தினப்பாடமாய் நாளும் தேர்ந்திடவும் உகந்தவகை!
எண்ணங்கள் சொல்ல, ஏதேதோ கதையெழுத 
வண்ணங்கள் பாட, வகைவகையாய் உரைசொல்ல
பட்டியல்கள் போட, பாராட்ட, எள்ளவென 
முட்டிவரும் சொல்குதிரை முகவாயில் கடிவாளம் 
இட்டுவிடாப் பா!எங்கள் இலந்தைக்கு மிகப்பிடித்த!
கலிப்பாவில் அரங்கேறும் கவியரங்கின் ஓரமிந்தத்
துளிப்பாவலன் பாடித் தோன்றிடவும் விழைந்தேனே!! 


Siva Siva

unread,
Aug 26, 2025, 10:06:14 AMAug 26
to santhav...@googlegroups.com
இந்த அரங்கில் பாடல் கலிவெண்பாவில்தான் இருக்கவேண்டுமா?

வி. சுப்பிரமணியன்

Govindaraju Arunachalam

unread,
Aug 26, 2025, 10:47:50 AMAug 26
to santhav...@googlegroups.com
வணக்கம். அடியேன் கவியரங்கில் பங்கேற்க ஆர்வமாக உள்ளேன். கலிவெண்பாவில் கவி புனைவது என்பது கரும்பு தின்பது போன்றது. முழுக்க முழுக்க இந்தக் கவியரங்கம் இப் பாவகையில் அமையட்டும்.

-கருவூர் இனியன்.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.


--
rgds,
 
Dr. A. GOVINDARAJU,
Retired Principal - National Awardee,

Subbaier Ramasami

unread,
Aug 26, 2025, 6:27:47 PMAug 26
to santhav...@googlegroups.com
அது ஒரு வாய்ப்பு. பயன்படுத்தாமலும் பாடலாம்

Siva Siva

unread,
Aug 26, 2025, 9:01:30 PMAug 26
to santhav...@googlegroups.com
Thanks for the clarification.

V. Subramanian

Subbaier Ramasami

unread,
Aug 28, 2025, 8:07:16 AMAug 28
to santhavasantham
கவியரங்கில் கலந்துகொள்ள இதுவரை பெயர் கொடுத்தவர்கள்

கவிஞர்கப் ள்
ராம் ராமகிருஷ்ணன்
இலந்தை
இனியன்
விவேக் பாரதி

கலந்து கொள்ள விரும்புகிறவர்கள்  பெயர் விரைவில் கொடுக்கவும். 

இலந்தை

Siva Siva

unread,
Aug 28, 2025, 9:56:51 AMAug 28
to santhav...@googlegroups.com
என் பெயரையும் சேர்த்துக்கொள்க.

வி. சுப்பிரமணியன்
On Thu, Aug 28, 2025 at 8:07 AM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:
கவியரங்கில் கலந்துகொள்ள இதுவரை பெயர் கொடுத்தவர்கள்

கவிஞர்கள்

அஶோக்

unread,
Aug 28, 2025, 8:55:23 PMAug 28
to சந்தவசந்தம்
இலந்தையாரே,

வணக்கம்!

வெகுநாட்கள் சந்தவசந்தத்தின் பக்கமே வராதிருந்துவிட்டேன்.

இன்று சிவாவுடன் வெகு நாட்களுக்குப் பிறகுப் பேசிக்கொண்டிருந்தபோது இந்தக் கவியரங்கைப் பற்றிக் கேள்வியுற்றேன். அடியேனும் பங்கேற்க விழைகிறேன்.. தலைப்பு என்னையும் அழைப்பதைப்போல உணர்கிறேன்..

அன்பன்
அஶோக் சுப்பிரமணியம்

NATARAJAN RAMASESHAN

unread,
Aug 28, 2025, 9:20:37 PMAug 28
to santhav...@googlegroups.com
அடியேனும் பங்கேற்க விழைகிறேன்
நன்றி 
                  —தில்லைவேந்தன்

இமயவரம்பன்

unread,
Aug 28, 2025, 11:11:29 PMAug 28
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
என் பெயரையும் சேர்த்துக் கொள்ள வேண்டுகிறேன்.
நன்றி 

On Aug 28, 2025, at 9:20 PM, NATARAJAN RAMASESHAN <chrome...@gmail.com> wrote:


அடியேனும் பங்கேற்க விழைகிறேன்
நன்றி 
                  —தில்லைவேந்தன்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

GOPAL Vis

unread,
Aug 30, 2025, 6:49:42 AMAug 30
to santhav...@googlegroups.com
அடியேனும் அரங்கத்தில் கலந்து கொள்கிறேன்.
கோபால்.

Kaviyogi Vedham

unread,
Aug 30, 2025, 11:02:11 AMAug 30
to santhav...@googlegroups.com
i will  also  do  same, but my   name shd be  after  11th,
   yogiyar

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

M. Viswanathan

unread,
Aug 30, 2025, 9:18:50 PMAug 30
to Santhavasantham
அன்புக் கவிவேழம் அவர்களுக்கு நமஸ்காரம்.

அடியேன் நிறைவாகக் கலந்து கொள்கிறேன். (அடிக்கடி ஊருக்குச் சென்று வருவதால் இந்த வேண்டுதல். இன்று சிருங்கேரிக்குச் சென்று கொண்டிருக்கிறேன்.) நன்றி.

அன்பன்,
மீ.விசுவநாதன்
29.8.2025 19.29 pm

KKSR

unread,
Sep 2, 2025, 1:38:03 PMSep 2
to santhav...@googlegroups.com
அடியேனும் ஆஜர்!

~ சுரேஜமீ


---------------------------------------------------------------------------------------------------
This email transmission is confidential and intended for the addressee only. It may contain privileged and confidential information. If you are not the person or organisation to whom it is addressed, you must not copy, distribute, or take any action in reliance upon it. If you have received this message in error, please notify the sender immediately.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/E0F44942-84C6-4C97-B286-DEB6381E4028%40gmail.com.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Subbaier Ramasami

unread,
Sep 9, 2025, 6:14:37 PMSep 9
to santhavasantham

கவியரங்கம் -60

தோரணவாயில்

9-11-2025

இறைவணக்கம்

ஐங்கரனே, ஆனைமுக ஆண்டவனே, அன்பரிடம்
தங்கருணை காட்டும் தயாபரனே, அன்றொருநாள்
கொம்பொடித்து ஏட்டினிலே குத்தாட்டம் போட்டவனே
செம்மை எழுத்தாளத் தேரில் அமர்ந்தவனே
தம்பி இடத்தே தனிக்கவனம் கொண்டவனே
அம்பிகை மைந்தனே, ஆதரிக்கும் அற்புதனே
தும்பிக்கை யானுன்னைத் தோத்திரங்கள் செய்பவரின்
நம்பிக்கை நாயகனே, ஞான விநாயகனே
உன்னை நினைக்காமல் ஒன்றைத் தொடங்குபவர்
என்ன பெரியவர் என்றாலும் அன்னாரின்
பாதையில் கல்போட்டுபார்த்திருக்கும் நீதிபதி
ஏதம் தவிர்க்கின்ற ஏந்தலே, என்னரசே
போதம் கொடுக்கின்ற புண்ணியனே, பூரணனே
காதங்கள் தாம்கடந்து கைலை  மலைவரையில்
பாட்டிக்கு வேகப் பயணம்கொடுத்தவனே
ஏட்டை எடுத்து எழுதத் தொடங்குங்கால்
வாட்டமே இன்றி வளரட்டும் கற்பனைகள்
காட்டுவாய் நல்ல கவி.

தோரணவாயில்

நாளை கவியரங்க நாள்தொடக்கம், ஐயன்மீர்
தோளை நிமிர்த்திச் சுடர்தூக்கி வாருங்கள்
ஓவ்வோர் அசைவினையும் உற்றுநான் பார்க்கின்றேன்
செவ்வி உடைய சிறந்த கவிஞர்களே
பாதையெனில் ஏதோ பழுதிருக்கத் தான்செய்யும்
சாதனைகள் செய்யத் தடுக்கியே வீழாமல்
போராடி வெல்லப் புறப்பட்டு வாருங்கள்
வேரோடிப் பார்க்கும் விழுதுகளால் ஆலமரம்
காலத்தை வென்று களம்பரப்பி நிற்கிறது
காலை எழுமுன் கடலும் அலைவீசி
ஓலமிட்டுப் பாய்ந்தழகாய் ஒய்யாரம் கொள்கிறது

ஓடும் கணத்தில் ஒருபயணம், ஓயாமல்
ஏடும் எழுத்தும் இயங்கி இருக்கட்டும்
வார்த்தை அணிவகுப்பு வாகாய் நடக்கட்டும்
நேர்த்தியே காண்போம் நிதம்.

பிரம்மாக்கள்

கவிஞர்களே, நீங்களெலாம் காலத்து நெஞ்சத்

தவிசமர்ந்து வார்த்தைச் சதிராடும் வித்தகர்கள்

மூங்கில் குழாயில் முகிழ்த்த துவாரங்கள்

ஏங்கி வரும்காற்றின் எண்ணப் பிழிவதனை

வாங்கி இசையாய் வடிக்கும் பிரம்மாக்கள்

தூங்கும் திரியில் சுடரேற்றும் தீபங்கள்

எண்ண முகிற்கூட்டின் ஏகாந்தப் பள்ளியறை

நண்ணி உயிர்த்த நளினக் குழவிகளை

சொல்லென்னும் தொட்டிலிலே தூங்கவைக்கும் தாதியர்கள்

உள்ளத்துச் சந்தையெழு ஓயாத பேரத்தில்

பிள்ளை வியப்பெயதும் பேரின்ப ஞானியர்கள்

பார்க்கும் கணத்தின் பசுமையினை, சொற்கூட்டில்

சேர்க்கும் தொழில்செய்யும் தேர்ச்சியினைக் கொண்டவர்கள்

தேங்குகிற நீர்நிலையில் தேடியெதை யோஎழுத

ஏங்குகிற நல்ல எழுத்தாணிப் பூச்சிகள்

கால வெளியினிலே கால்பாவி நின்றாலும்

காலத்தை வெல்லும் கவிதை படைப்பவர்கள்

காசுக் கடிமையாய்க் கால்மாறிப் போகாமல்

நேசத்தைச் சத்தியத்தில் நிற்கவைத்து வாழியவே!

பஞ்சபூதப் பயணம்

வான்வெளியில் சுற்றிவந்து வட்டமிடும் கோள்களிடை
ஏன் மோதல் இல்லை எதுவோ தடுக்கிறது
காற்றந்த வான்வெளியில் கட்டுக்குள் மாட்டாமல்
ஆற்றலைக் காட்டி அலைந்து திரிகிறது
மூச்சை இழுத்து முடுக்கி விடும்போது
வீச்சில் அதனோடு வெப்பம் விளையாடும்
வெப்பம் தருந்தீயை வீழ்நீர் அணைக்கிறது
அப்புவைத் தீயோ அணைத்துக் குடிக்கிறது
எல்லாமும் மண்ணுக்குள் எக்காளம் போட்டாலும்
நல்லாத்தான் ஞாலம் நடக்கிறது, மோதலிலே
காலமும் ஏதோ கணக்கில் விரைகிறது
போலித் தனத்தின் புரட்டினிலே நாடுகளில்
காலித் தனத்தின் களியாட்டம் காண்கின்றோம்
போராட்டம் இன்றிப் பொழுது நகர்வதில்லை
தேரோட்டம் நாளைத் தினத்தில் தொடங்கட்டும்
வாருங்கள், வந்து வடத்தைப் பிடியுங்கள்
சேருங்கள் , தேர்ந்திழுப்போம் தேர்.!

 

நாளை தலைமைக் கவிதை

இலந்தை

On Sun, Aug 24, 2025 at 11:29 PM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:

Ram Ramakrishnan

unread,
Sep 9, 2025, 6:57:42 PMSep 9
to santhav...@googlegroups.com
தோரணவாயில் அலங்காரத்தில் அதி அற்புதமாக விளங்குகின்றது.



அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Sep 9, 2025, at 18:14, Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Arasi Palaniappan

unread,
Sep 9, 2025, 8:20:25 PMSep 9
to சந்தவசந்தம்
தோரண வாயில் தொடக்கம் மிகுதுலக்கம் 
வாரணத்தோன் கொள்ளும் வணக்கம் அருமை
அறைகூவிப் போருக்(கு)  அழைக்கின்ற போதே
பறையொலிப்புக் கேட்கிறது! பாக்கள் படைதிரண்டு
போராடப் போகின்ற பூரிப்பைக் காண்கின்றேன்
போராடு வோம்இந்தப் போது!

என்னையும் பட்டியலில் சேர்த்து, நிறைவாக அழைக்க வேண்டுகிறேன். நன்றி

அரசி. பழனியப்பன்



--

Siva Siva

unread,
Sep 9, 2025, 8:45:58 PMSep 9
to santhav...@googlegroups.com
பிரவாகம் பெருக்கெடுத்து ஓடுகின்றது!
மிக அழகு!

வி. சுப்பிரமணியன்
On Tue, Sep 9, 2025 at 6:14 PM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:

கவியரங்கம் -60

தோரணவாயில்

,,,

Subbaier Ramasami

unread,
Sep 9, 2025, 8:47:39 PMSep 9
to santhav...@googlegroups.com
கவிஞர் அரசி பழனியப்பன் அவர்களின் பஃறொடை வெண்பா அருமை. கலிவெண்பா 12 அடிகளுக்கு மேல் வரும்
இலந்தை

Subbaier Ramasami

unread,
Sep 9, 2025, 8:48:33 PMSep 9
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி

On Tue, Sep 9, 2025 at 7:45 PM Siva Siva <naya...@gmail.com> wrote:
பிரவாகம் பெருக்கெடுத்து ஓடுகின்றது!
மிக அழகு!

இமயவரம்பன்

unread,
Sep 9, 2025, 8:53:56 PMSep 9
to santhav...@googlegroups.com, santhavasantham
> எல்லாமும் மண்ணுக்குள் எக்காளம் போட்டாலும்
> நல்லாத்தான் ஞாலம் நடக்கிறது


மிக அருமை, தலைவரே!

K.R. Kumar

unread,
Sep 9, 2025, 8:59:18 PMSep 9
to santhav...@googlegroups.com
இலந்தையாரே!

ஆரம்பமே அசத்தல் ! அற்புதம் !!

தொடருங்கள் !! இரசித்துக்கொன்டிருக்கிறோம்.!!

குமார்(சிங்கை)

--

Arasi Palaniappan

unread,
Sep 9, 2025, 9:05:22 PMSep 9
to சந்தவசந்தம்
அறிவுறுத்தியமைக்கு நன்றி ஐயா! அவ்வண்ணமே அமைப்பேன். மகிழ்ச்சி. நன்றி 🙏

Govindaraju Arunachalam

unread,
Sep 9, 2025, 10:52:32 PMSep 9
to santhav...@googlegroups.com

இலந்தையாரின் தோரணவாயில் கவிக்குப் பின்னூட்டம்

 

தோரண வாயிலில் தூங்கும் கவிப்பூக்கள்

காரண மின்றிக் களிப்பைத் தருவதால்

வானில் பறக்கும் வகையில் எழுந்துநான்

ஊனில் உயிரில் உவகை அடைகின்றேன்

ஆடிப் பெருக்கென ஆங்கோர் கவிபெருக்கு

கூடிக் களிந்துநாம் கும்மாளம் போடலாம்

காதல் மடந்தை களிகூர் உரைபோல

நோதல் இலாமல் நவிலும் இலந்தை

அடுக்கிய சொற்கள் அழகான கோலம்

மிடுக்காய் நடந்து மிளிர்கின்ற காலம்

உணர்ச்சிப் பெருக்கில் உருவாகும் கோபம்

உணர்த்து மறங்கள் ஒருகோடி யாகும்

இலந்தை இயக்கிடும் இன்கவித் தேரே

உலகை வலம்வரும் ஊர்ந்து.

Subbaier Ramasami

unread,
Sep 10, 2025, 8:28:10 AMSep 10
to santhav...@googlegroups.com
இனியனார் பாடல் இடையெழுந்த திங்கே
தனிமகிழ்ச்சி நல்கும் தமிழ். 

இலந்தை


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Subbaier Ramasami

unread,
Sep 10, 2025, 8:29:42 AMSep 10
to santhavasantham
தலைமைக் கவிதை

போராடவா இந்தப் போது?

 

காலைப் பனிநெருப்பு கச்சிதமாய் நீர்கிழித்து
வேலைப்போ ராட்டத்தில் விம்மி எழுகிறது
நீலக் கடலோர் நெருப்புவண்ணத் திற்குளித்து
கோலம் பிதிர்ந்து குதித்துப் புரள்கிறது
நாள்தொடங்கும் போதேயோர் நாடகமா?
ஆள்கின்ற காலத்தின் ஆட்ட அதிசயமா?
ஆகம் கிழிந்தே அலையும் முகிலொன்று
பாகம் பிளந்து பகைதேடிச் செல்கிறது
செங்கொண்டைச் சேவல் சிறகடித்துத் தன்னுடைய
பங்கிற்குச் சத்தம் படைத்துக் களிக்கிறது
சேவலுக்கு ஏனித் திமிர்தனக்கு முன்கதிரைக்
கூவி வரவேற்கும் கும்மாளி பாரென்றே
காகம் குரலில் கனமேற்றித் தீர்க்கிறது
சோகமுடன் குஞ்சொன்று தூக்கத்தில் வாய்திறக்க
ஏதும் கொடுக்க இயலாத தாய்க்காகம்
நீதமாய்க் கூட்டை நெருக்கிவைத்துத் தன்குஞ்சு
வீழ்ந்து  விடாவண்ணம் வேண்டியது செய்கிறது
சூழ்ந்த பரவசமா, தொல்லைக்குக் கட்டியமா
என்றே இயற்கை எதிர்நீச்சல் தானடிக்க
அன்று விடியலை அண்ணாந்து பார்த்திருந்தேன்
போராட்டத் தில் தான்  பொழுது புலர்கிறதா?
பாராட்டுக் காகப் படையின் வெளிப்பாடா?

செங்கதிர்க் கோளச் சிவப்பு வெளுப்பாகித்
தங்கொதிப்பில் ஏறித் தகிக்கத் தொடங்கிவிட
கோபச் சிவப்பு கொதிப்பு நிலைகடந்து
சோபை வெளுப்பிடத்தே தூக்கிக் கொடுத்துவிட
சுற்றுமுற்றும் நான் பார்த்தேன். துள்ளிக் குதித்தபடி
ஒற்றைச் சிறுபையன் ஓடோடி என்னருகில்
வந்தான், மகிழ்வோடே, “மாமாநான் நேற்றுமுதல்
இந்தக் கணக்கோ டெதிர்நீச்சல் போட்டுவந்தேன்
சிக்கலோ சிக்கல், சிறிதுநே ரத்தின் முன்
அக்கணக்கைத் தீர்த்துவிட்டேன்  அப்பப்பா ஆனந்தம்
என்றுரைத்துச் சென்றான்,  எதிர்நீச்சில் போட்டிங்கே
வென்று விடுகின்ற விம்மிதத்தின் ஆனந்தம்
மிக்க எளிதாக வெல்லுவதை விஞ்சிவிடும்
தக்கதென்றே நாமதனைத் தாங்கிக் கொளவேண்டும்
போராட்டத் தாலே புளகம் நமைச்சேர
நீரோட்டத் தோடுசற்றே நீச்சல் அடித்திடலாம்
மற்றவரை வீழ்த்தித்தான் வாழுவது தேவையில்லை
எற்றுவதை எற்றிடலாம், எற்றாமல் பற்றுவதோ
வேதனை தாராத வெற்றி விளைக்குமெனில்
சாதனை ஆகவதைத் தாங்குவதும் நல்லதுதான்
போராட்டம் இல்லாமல் போவதில்லை நம்வாழ்வு
நீரோட்டம் விட்டிந்த நீநிலத்திற் சேர்வதற்குக்
கர்ப்பச் சிறையிருந்து கட்டுக ளைத்தறித்தே
அர்ப்பணிப்பாய் மண்ணில் அவதரிக்கும் ஓர்குழந்தை
சாதகப் பாதை தவழ்ந்து வருகிறதா?
பாதகங்கள் ஒன்றிரண்டா? பாரில்  நுழைந்ததின்பின்
போராட்டம் எண்ணிப் புழுங்கி அழுகிறதே
சீராட்டல் கூடத் திணறத்தான் வைக்கிறது.
வெற்றிக் கனிகையில் வீழுமா என்றேநாம்
பற்று மிகக்கொண்டு பாடு படுகின்றோம்
பாடு படும்போது பற்றுபகை யாகாமல்
ஈடு கொடுப்பதுதான் என்றைக்கும் உத்தமமாம்
சின்னக் குழந்தை சிறுநடை போடுதற்கும்
அன்னை இடுப்பிருந்தே ஆர்ப்பாட்டம் செய்வதற்கும்
தன்னை முதன்மையெனத் தான்நிறுத்தப் பார்ப்பதற்கும்
பின்னர்க் கவனத்தில் பீடுகொள முந்துதற்கும்
பள்ளிப் படிப்பிற்கும், பாராட்டுத் தான்வேண்டி
துள்ளியே போராடித் தூண்டில் விடுவதற்கும்
பாலப் பருவத்துப் பாதுகாப்புக் குறைய
ஆலவட்டம் போடுதற்கும், யார்பின்னோ ஓடுதற்கும்
ஒவ்வொரு நாளினிலும் ஒவ்வொன்றுக் காகநம்
செவ்வி விடுத்துத் திரிந்திங்கே ஓடுதற்கும்
தன்பிறப்புத் தந்த தடையால் அரசியலின்
பின்புலம் சிக்கும் பிடியில் அகப்பட்டே
ஏறி யிறங்கியே ஏமாற்றுக் காளாகி
மாறிமா றிப்பாதை வந்து பிரிவதற்கும்
பெற்றோரின் ஆசைப் பிடியாலே தன்னாசை
முற்றும் தளர்ந்து முறிபட்டுப் போகாமல்
என்னென்ன வோ செய்தே ஏமாற்றம் கொள்வதற்கும்
தன்னைப் புதுக்கிச் சதிராட்டம் போடுதற்கும்
ஓடி உலைந்தே உரசலில் சூடேறிச்
சாடித் தளர்ந்து தயவை எதிர்பார்த்து
தன்னை வெளிக்காட்டும் சங்கடத்தில் வீழுதற்கும்
கன்னல் மொழிபேசிக் காதலிலே வீழ்ந்துவிட
ஒன்றா இரண்டா உளைச்சல்கள்,மின்மினியை
மின்னல் எனநினைத்து வீறுகள் கொள்வதற்கும்
தன்குடும்பம் காக்கத் தலையெடுத்து விட்டாலும்
காசுபணம் சேர்க்கக் கயமைகளில் வீழாமல்
தூசுகளைத் தட்டித் துலங்க முயல்வதற்கும்
தங்க, உயர, தளர்ந்து விடாதிருக்கச்
சிங்கம் சிறுநரியாய் சீரழிந்து போகாமல்
வீறுகொள, மேன்மேலும் வெற்றிக்கு நெஞ்சோடு
மாறுகொள, ஏறும் வயதோடு மல்லாடப்
போராட்டம் வாழ்வில் பொழுதெல்லாம் போராட்டம்
ஏராட்டம் மண்ணில் எழுந்தால் பயிர்விளைம்
இங்கே தனிமனிதர்க் கென்றில்லை, நாடுகளில்
அங்கங்கே ஆளும் அடம்பிடிப்போர் வீம்பால்
திறம்பும் அவலங்கள் சேர்வனவால். நெஞ்சில்
அறம்பாடத் தோன்றும் அடக்குகிறேன் , என்செய்ய?
ஆன்மீகப் போராட்டம், ஆளுமைக்குப் போராட்டம்
தான்மீறும் சாதிகளின் சச்சரவுப் போராட்டம்
என்செய்வோம், இந்த இழுபறியில் நாம்கூடப்
புன்மைகளைத் தீர்ப்பதற்குப் போராடத் தான்வேண்டும்
இந்த நிலைமாறி இன்பமாய் வாழுதற்கே
அந்தக் கடவுளைத்தான் யாம்வேண்டிப் பார்க்கின்றோம்
ஆயுதங்கள் ஏந்தி அவர்கள் இருக்கின்றார்
ஞாயம் அறிந்தவர்கள் நல்லதுதான் செய்வார்கள்
சண்டைகளே இன்றிச் சமாதானம் ஓங்கட்டும்
கண்டுரைப்போம் நேயக் கவி!

Siva Siva

unread,
Sep 10, 2025, 11:07:10 AMSep 10
to santhav...@googlegroups.com
காலை வர்ணனை அருமை.

ஆன்மீகப் போராட்டம், ஆளுமைக்குப் போராட்டம்
தான்மீறும் சாதிகளின் சச்சரவுப் போராட்டம்
என்செய்வோம், இந்த இழுபறியில் நாம்கூடப்
புன்மைகளைத் தீர்ப்பதற்குப் போராடத் தான்வேண்டும் /

முள்ளை முள்ளால் எடுக்கும் முயற்சி!

வி. சுப்பிரமணியன்

... ...

Kaviyogi Vedham

unread,
Sep 10, 2025, 11:25:40 AMSep 10
to santhav...@googlegroups.com
பலே   பலே,  இனியன்
  யோகியார்

Ram Ramakrishnan

unread,
Sep 10, 2025, 11:30:16 AMSep 10
to santhav...@googlegroups.com
/காசுபணம் சேர்க்கக் கயமைகளில் வீழாமல்

தூசுகளைத் தட்டித் துலங்க முயல்வதற்கும்
தங்க, உயர, தளர்ந்து விடாதிருக்கச்
சிங்கம் சிறுநரியாய் சீரழிந்து போகாமல்
வீறுகொள, மேன்மேலும் வெற்றிக்கு நெஞ்சோடு
மாறுகொள, ஏறும் வயதோடு மல்லாடப்
போராட்டம் வாழ்வில் பொழுதெல்லாம் போராட்டம்/

யதார்த்மான வரிகள்.

அற்புதத் தலைமைக் கவிதை, தலைவரே.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Sep 10, 2025, at 11:07, Siva Siva <naya...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Subbaier Ramasami

unread,
Sep 10, 2025, 11:37:22 AMSep 10
to santhav...@googlegroups.com
கவியரங்கம் -60 
முதல் அழைப்பு

முதல் அழைப்பு

-          கவிஞர் ராம்ராமகிருஷ்ணன்

வேண்டும் அரங்கென்று மேனாள் உரைத்தவராம்
பாண்டித்யம் நற்றமிழில் பாடப் படைத்தவராம்
எந்தவகைப் பாட்டும் எழுதத் தெரிந்தவராம்
சிந்தைத் தெளிவில் திறம்காட்டும் வித்தகராம்
எந்தப் பொழுதினிலும் இன்முகம் காட்டுவராம்
சொந்தத் திறத்தால்பா ச் சோதி படைப்பவராம்
பாராட்டும் உள்ளம் படைத்தவராம் நற்பாடல்
ஏராள மாக எழுதிக் குவிப்பவராம்
வேற்றுமை காட்டா விழைவுகள் கொண்டவராம்
ஊற்றாக பொங்கிப்பா ஓட விடுபவராம்
அற்புத மாய்ப்பா அரங்கில் அளித்திடுக
நற்கவிராம்  ராமகிருஷ் ணன்



Ram Ramakrishnan

unread,
Sep 10, 2025, 11:56:52 AMSep 10
to santhav...@googlegroups.com
சந்தவசந்தக் கவியரங்கம்

செப்டெம்பர் 10, 2025

தலைப்பு:  போராட வாயிந்தப் போது

கவியரங்கத் தலைமை: கவிவேழம் திருமிகு. இலந்தை ராமசாமி

படைப்பு : ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)


இறைவணக்கம்

நேரிசை வெண்பா


வாரணனே ஐங்கரனே காரியத்தின் காரணனுன்

பூரண ஆசிபெறப் போற்றிநின்றேன் - போரிட

வல்லயிந்தப் போதென்ற சொல்லமைத்த என்கவிக்கு

நல்வாழ்த்துன் வாயால் நவில்.


தலைவர் வணக்கம்

எழுசீர்ச் சந்த விருத்தம்

னான தான தான தான தான தான தானனா

கலைந்தி ருந்த மஞ்சு யாவு மொன்று கின்ற நாளிதே

மலர்ந்த மல்லி வாடை யன்ன மட்டி லாம கிழ்ச்சியே

புலர்ந்த காலை யின்று பாட வந்தி டென்ற ழைப்பினால்  

இலந்தை ராம சாமி யென்ற ஏந்த லைவ ணங்கினேன்.


மஞ்சு – மேகம்

ஏந்தல் – தலைவர், உயர்ந்தவர், அரசன்


போரிட வாயிந்தப் போது - கவிதை 



நேரிசைக் கலிவெண்பா

 

வாழ்க்கையதும் போர்க்களமே வாழ்பவரும் போராளி

தாழ்வடைதல் சின்னேரம் சாத்தியமே - காழ்ப்பைப்

புறந்தள்ளித் தோல்வியினைப் போற்றா தமைந்திட்(டு)

“இறந்தெழும் புள்”ளாயின் ஏற்றம் – மறவற்க

வீழ்ச்சி யெனுஞ்சொல் விரும்பா தொழித்திடின்

வாழ்க்கைப் பரிணாமம் மாண்புறும் - ஊழ்வினையை

உப்பக்கம் காண்பவர் முட்புதரில் ஓடிடினும்

தப்பாமல் சென்றடைவர் தன்னிலக்கை - வெப்போ

குளிரோ கரைபுரளக் கோடுதரும் நீரோ

இளிவரல் என்பதிவர்க் கில்லை - வளிக்காற்றில்

முத்தெடுப்போர் ஆழ்கடலில் மூழ்குதல் போராட்டம்

வித்தையற்றோர் போராட்டம் வீணன்றோ மொத்தத்தில்

மண்ணுக்குப் போராட்டம் மாநிலத்தில் போராட்டம்

விண்செல்லப் போராட்டம் வேர்விட்ட - பண்டை

மதத்திடையே போராட்டம் மாண்பற்ற மாக்கள்

விதைக்கும் சதியாற்போ ராட்டம் - விதிக்கும்

வரியதனால் போராட்டம் வாட்ட நிலையில்

புரிதலிலாப் போராட்டம் புஞ்சும் - நரிக்கூட்டத்

தீவிர வாதிகளின் திட்டத்தால் போராட்டம்

நாவடக் கார்சொல்லால் போராட்டம் - நோவுமனம்

நற்கல்வி வேண்டுவதை நாட்டினர் ஏற்றிருக்கப்

பொற்பிலாப் பொய்ம்மையினால் போராட்டம் - செற்றம்

உலகிற் பரந்திருத்தல் உண்மையே. நோக்கில்

பலவாகிப் போராட்டம் பாங்கின்  - நிலைகுலைக்கும்.

காப்புவரி ஏற்றத்தால் கைப்புமனப் போராட்டம்

“ஏய்ப்பவர்” என்றழைத்தல் இன்சொல்லோ? - ஈர்ப்பெவர்க்கும்

இல்லாத போராட்ட மீதாகும் பொல்லாப்பில்

வல்லரசு வஞ்சனையை மண்டுவதேன்? - நல்லுறவைப்

பேணும் அமைதிக்காம் பீடுடைய நோபெலெனும்

மாண்பிற் பரிசினைத் தான்பெறவே - சீண்டி

அகங்காரம் மேவ அகிலத்தில் பொய்ம்மை

மிகவாக்கும் அற்பமதா மேன்மை? – செகத்தில்

உழவினார்க் கைம்மடங்கின் ஓருயிரும் நிற்கா;

தழைத்துழவு காக்கும் தரணி – தொழிலுக்கு

முன்னோடி யாதலினால் அன்னியர் காலூன்றி

இந்நாட்டைச் சீர்குலைக்கும் தந்திரத்தை – எந்நாளும்

ஏற்காத கோட்பாடே இந்தியாவின் கொள்கையிதை

மாற்றத் துணிவோரும் மாற்றலரே – தூற்றியவர்

காப்புவரிக் கட்டமைத்துப் போராடும் போக்கெடுப்பின்

சீர்ப்பாதை ஒன்றினைத் தேர்ந்தெடுப்போம் – ஆர்ப்பரிப்போர்

பாதையதும் ஏற்றத்தின் பாற்படா தாகையினால்

ஏதமிலா  நம்வழியில் சாதிப்போம் – நீதியுடன்

வேர்வையினைச் சிந்தி விகசித்து முன்னேற

ஆர்வமுடன் ஒன்றிணைவோம் அன்புவழிச் – சார்ந்திடுவோம்

நார்சேர் மலர்போல நன்காற்ற வல்லாரே                                              

ஓர்மைக்காம் செய்திகளை ஊருரைப்பர் – சீரொழித்துச்

சார்புற்றுப் பேசுவதால் சச்சரவே மூண்டிடும்

நேர்மையினைப் பேச்சில் நிரப்பிட்டுச் – சீர்மையால்

தீர்வதுண்டால் செகமெங்கும் சேமமுறும்

போரிட வல்லயிந்தப் போது.

 

இறந்தெழும் புள் – பீனிக்ஸ் (Phoenix) பறவை

இளிவரல் – இழிவு, இகழ்ச்சி

வெப்பு – வெம்மை, வெப்பம்

வளிக்காற்று – சூறாவளியைக் குறித்தது. ஒருபொருட்பன்மொழி என்றும் கொள்ளலாம்.

வித்தையற்றோர் – திறமையில்லாதவர், அறிவில்லாதவர்

புஞ்சும் – ஒன்றுசேரும்

செற்றம் – சினம், கோபம்

காப்புவரி – இறக்குமதி வரி - Tariff

ஓர்மைக்காம் – ஒற்றுமைக்காம்

விகசித்து முன்னேற– பிரகாசமான எதிர்காலம் நோக்கி மேம்பட - 2047 இலக்கான இந்தியாவின் “விக்சித் பாரதம்” கோட்பாடு பற்றியது.


முடிவுரை:

எட்டடித் தரவு கொச்சகக் கலிப்பா

தனிமனிதன், சமுதாயம், தரமேற்றப் போராட்டம்

மனிதகுலம் மேம்படவே மதமொழிக்கப் போராட்டம்

நனிசிறப்பா மிவையேற்போம் நலிந்தோரின் வளர்ச்சிக்காய்;

துனிமேவுஞ் செறுநரான தொடர்பறுத்த அண்டையர்கள்

இனவெறியில் போராடின் இதற்கடியும் கொடுத்திடுவோம்

வினையாக்கி வர்த்தகத்தில் வெறுப்புணர்வை மிகவாக்கித்

தனதுநலக் குறியொன்றில் தரணிமோதும் நாடுகளின்

புனைவேடப் போராட்டப் புடைசார்தல் ஒழித்திடுவோம்.


துனிமேவும் – வெறுப்பினின் பாற்படும்

செறுநர் – பகைவர்.

அண்டையர்கள் – அண்டை நாடுகள்

நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா

ஆர்ப்பாட்டம் அறைகூவல் அணிவகுப்பென் றிவையோடே

கீர்த்திபெறக் குறுக்குவழி, கிளர்ச்சியுடன் நரித்தனத்தில்

பார்முழுதும் பகைவளர்த்துப் பதவிதந்த தலைக்கனத்தில்

போர்முனைவோர் இனங்காண்போம், போரொழிக்கும் நிலையேற்போம்..

இமயவரம்பன்

unread,
Sep 10, 2025, 12:14:35 PMSep 10
to santhav...@googlegroups.com
போராட்டமில்லாத சமாதானப் போக்கே சரி என்று மனித நேயத்தைப் போற்றும் இலந்தையார் கவிதை இனிப்பு.

இமயவரம்பன்

unread,
Sep 10, 2025, 12:29:34 PMSep 10
to santhav...@googlegroups.com
மிகச் சிறப்பான அழைப்புக் கவிதை! இலந்தையார் பாராட்டிச் சொன்ன அத்தனையும் திரு.ராம்கிராம் அவர்களுக்கு மிகவும் பொருந்தும்.

GOPAL Vis

unread,
Sep 10, 2025, 12:36:59 PMSep 10
to santhav...@googlegroups.com
அந்தக் கடவுளைத்தான் யாம்வேண்டிப் பார்க்கின்றோம்
ஆயுதங்கள் ஏந்தி அவர்கள் இருக்கின்றார்
ஞாயம் அறிந்தவர்கள் நல்லதுதான் செய்வார்கள்

அருமை!

காராகப் பொழியும் கவிவேழம் போலெழுதப்
போராடி னாலும் பொலிவென்றும் - வாராது!
நேரம்வீண் ஆக்கியபின் நெஞ்சுக்குச் சொல்லிவைத்தேன்
ஓரம் உனக்கங்(கு) ஒதுங்கு!
கோபால்.

On Wed, Sep 10, 2025 at 5:59 PM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:
தலைமைக் கவிதை

போராடவா இந்தப் போது?

 

காலைப் பனிநெருப்பு கச்சிதமாய் நீர்கிழித்து
வேலைப்போ ராட்டத்தில் விம்மி எழுகிறது
நீலக் கடலோர் நெருப்புவண்ணத் திற்குளித்து
கோலம் பிதிர்ந்து குதித்துப் புரள்கிறது
நாள்தொடங்கும் போதேயோர் நாடகமா?
ஆள்கின்ற காலத்தின் ஆட்ட அதிசயமா?

. . . . . . . . .

இமயவரம்பன்

unread,
Sep 10, 2025, 12:44:57 PMSep 10
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
இனியனார் கவினுற வடித்த கலிவெண்பா சிறப்பு! 

GOPAL Vis

unread,
Sep 10, 2025, 12:47:16 PMSep 10
to santhav...@googlegroups.com

வாழ்க்கையதும் போர்க்களமே வாழ்பவரும் போராளி

தாழ்வடைதல் சின்னேரம் சாத்தியமே - காழ்ப்பைப்

புறந்தள்ளித் தோல்வியினைப் போற்றா தமைந்திட்(டு)

“இறந்தெழும் புள்”ளாயின் ஏற்றம்


 அற்புதம்! சாத்தியமா?


சீர்ப்பாதை ஒன்றினைத் தேர்ந்தெடுப்போம் – ஆர்ப்பரிப்போர்

பாதையதும் ஏற்றத்தின் பாற்படா தாகையினால்

ஏதமிலா  நம்வழியில் சாதிப்போம் – நீதியுடன்

வேர்வையினைச் சிந்தி விகசித்து முன்னேற

ஆர்வமுடன் ஒன்றிணைவோம் அன்புவழிச் – சார்ந்திடுவோம்


அருமை!

கோபால்.

On Wed, Sep 10, 2025 at 9:26 PM Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:
சந்தவசந்தக் கவியரங்கம்

செப்டெம்பர் 10, 2025

தலைப்பு:  போராட வாயிந்தப் போது

கவியரங்கத் தலைமை: கவிவேழம் திருமிகு. இலந்தை ராமசாமி

படைப்பு : ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

போரிட வாயிந்தப் போது - கவிதை 



நேரிசைக் கலிவெண்பா

 

வாழ்க்கையதும் போர்க்களமே வாழ்பவரும் போராளி

தாழ்வடைதல் சின்னேரம் சாத்தியமே - காழ்ப்பைப்

புறந்தள்ளித் தோல்வியினைப் போற்றா தமைந்திட்(டு)

“இறந்தெழும் புள்”ளாயின் ஏற்றம்

 

. . . . .

 

. . . . . . . . .  .சீர்மையால்

Ram Ramakrishnan

unread,
Sep 10, 2025, 12:48:56 PMSep 10
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. கோபால்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Sep 10, 2025, at 12:47, GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Subbaier Ramasami

unread,
Sep 10, 2025, 12:57:52 PMSep 10
to santhav...@googlegroups.com
வண்ணத்தில் மாசிறப்பு  மாண்புக் கவிதைதரும்
எண்ணத்தில் பேரெடுபபு, ஏற்பாகப்- பண்ணொத்திப்
பாடுவதில்  நல்லதொரு பங்களிப்பு  என்றிங்கே
போடுவது கோபால்  புகழ்.

இலந்தை

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

GOPAL Vis

unread,
Sep 10, 2025, 1:11:52 PMSep 10
to santhav...@googlegroups.com

இமயவரம்பன்

unread,
Sep 10, 2025, 2:08:02 PMSep 10
to santhav...@googlegroups.com
மிக அருமை, திரு. ராம்கிராம்!

ஓர்மையால் ஒல்கா உரத்தால் நடுநின்ற

நீர்மையால் நெஞ்சை நெகிழ்த்திடுமாம் - சார்பற்ற

பார்வையே சீரென் றிராம்கிராம் பாவலர்

சோர்வற் றுரைத்தசெஞ் சொல்.


- இமயவரம்பன்

Ram Ramakrishnan

unread,
Sep 10, 2025, 2:33:36 PMSep 10
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. இமயவரம்பன்.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Sep 10, 2025, at 14:08, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:

மிக அருமை, திரு. ராம்கிராம்!
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Sep 10, 2025, 6:18:31 PMSep 10
to santhav...@googlegroups.com
ராம் ராம் !!

Nice.

V. Subramanian

Siva Siva

unread,
Sep 10, 2025, 6:28:22 PMSep 10
to santhav...@googlegroups.com
ஆங்காங்கே அரிய சொற்கள் விரவி வரும் இனிய பாடல்.

1)
சில இடங்களில் உடம்படுமெய் கவனிக்க.
இ / ஈ / ஐ - என்ற ஒலிகளில் முதற்சொல் முடிந்தால்தான் ய் உடம்படுமெய் தோன்றும். (ஏ - flexible)

2)
நிற்கா /
நில்லா?

ஏற்காத  /
இக்காலத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வடிவமா?
ஏலாத / ஏற்பில்லா

வி. சுப்பிரமணியன்

On Wed, Sep 10, 2025 at 11:56 AM Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:
சந்தவசந்தக் கவியரங்கம்

செப்டெம்பர் 10, 2025

தலைப்பு:  போராட வாயிந்தப் போது

கவியரங்கத் தலைமை: கவிவேழம் திருமிகு. இலந்தை ராமசாமி

படைப்பு : ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)


இறைவணக்கம்

நேரிசை வெண்பா


வாரணனே ஐங்கரனே காரியத்தின் காரணனுன்

பூரண ஆசிபெறப் போற்றிநின்றேன் - போரிட

வல்லயிந்தப் போதென்ற சொல்லமைத்த என்கவிக்கு

நல்வாழ்த்துன் வாயால் நவில்.

...

Ram Ramakrishnan

unread,
Sep 10, 2025, 6:51:02 PMSep 10
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. சிவசிவா.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Sep 10, 2025, at 18:28, Siva Siva <naya...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Arasi Palaniappan

unread,
Sep 10, 2025, 10:57:44 PMSep 10
to சந்தவசந்தம்
உயர்திரு ராம்கிராம் அவர்களின் உயர்கவிப் பனுவலுக்குப் பாராட்டு 

நேராம் இசைகூடு நேர்த்திக் கலிவெண்பா 
சீராக்கித் தந்தீர் சிறப்பேதான் - போராட்ட
நீரோட்டம் நாணாள் நிகழ்வால் நெகிழ்வித்தீர்!
தார்சூட்டும் இன்பத் தமிழ்!

வணங்கி வாழ்த்தும் 
அரசி பழனியப்பன் 

Ram Ramakrishnan

unread,
Sep 10, 2025, 11:02:58 PMSep 10
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, அருமையான வாழ்த்திற்கு, திரு. பழனியப்பன்.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Sep 10, 2025, at 22:57, Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:



Ramamoorthy Ramachandran

unread,
Sep 11, 2025, 1:26:19 AMSep 11
to santhav...@googlegroups.com
வணக்கம்!  

அழைப்புக் கவிதையிலே அடியேனின் உள்ளத்தைக் 
குழைத்துப் பருகிடும்நும் கொற்றத்தைப் போற்றுகிறேன்!
மழைக்குக்  குடையாகும் மாதவனாம்  கண்ணன்போல்
விழைவை நிறைவாக்கும்  வெற்றிசேர் இலந்தை தாம் 
கவித்தலைமை  ஏற்றுள்ள கவியரங்கில் என்றென்றும்  
தவித்தவாய்த்  தாகத்தைத் தாமாகத் தீர்த்திடுமோர் 
நன்மருந்தாய்  நான்விரும்பும் போராட்ட நாட்டத்தை, 
வன்பொருளை,  மாநிலத்தார் மடங்கி கவிழ்ந்திறங்கும் 
துன்பியலைச்  சொல்லித் துணைதேடி வானகத்தை 
அடியோடு மாற்றியே அனைவர்க்கும் நன்மைவிளை 
துடிப்பினையே பாடல்களில் தொகுத்து வழங்கவொரு 
வாய்ப்பை  அளித்திட்டீர் !  வருவேன் வரிசையிலே 
தாய்போன்றீர் நும்முடைய தனியாணை பெற்றுடனே 
வாய்க்கும்  ஒருவாய்ப்பில்  மகிழ்ச்சியுடன் வந்திங்கே 
ஆய்ந்த அறிஞர்முன் அடியேனின்  எண்ணத்தை 
ஏயும்வகை  தருவேனி யான்!

- திருச்சி புலவர் இராமமூர்த்தி 
( 13,14  செப்டெம்பர் பேராசிரியர் இராதாகிருஷ்ணன் 
நூற்றாண்டு விழாவில் திருச்சியில்,  பேசியபின் எந்நாளில் 
அழைத்தாலும்  வருவேன் ) நன்றி!


NATARAJAN RAMASESHAN

unread,
Sep 11, 2025, 2:27:54 AMSep 11
to santhav...@googlegroups.com
“இறந்தெழும் புள்ளாயின் ஏற்றம்”  — சிறந்த கருத்து

வாழ்க்கைப் போராட்டங்களை வரிசையிட்டு ,வழியும் கூறும் வண்ணமிகு பாங்கு பாராட்டுக்குரியது.
அன்பு நண்பர் ராம்கிராம் அவர்களின் பாடல் ஆழமும் அழகும் கொண்ட கடலைப் போன்று கவிதையலை வீசுகின்றது. 
நல்ல கருத்து - நளினமான நடை
அன்புடன் வாழ்த்திப் பாராட்டி மகிழ்கிறேன்

                    —தில்லைவேந்தன்

On Wed, Sep 10, 2025 at 9:26 PM Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:

NATARAJAN RAMASESHAN

unread,
Sep 11, 2025, 2:34:05 AMSep 11
to santhav...@googlegroups.com
கவிவேழம் கவிதைப் பெருக்கில் நனைந்தேன்
குற்றால அருவியின் குளிர்நடையையும், நயாகராவின் நனிவிரைவுப் பாய்ச்சலையும் ஒருசேரப் பார்த்து வியந்தேன்.அற்புதம்

KKSR

unread,
Sep 11, 2025, 2:44:20 AMSep 11
to santhav...@googlegroups.com
ஆஹா!

தோரண வாயிலில்தான் தோகையைப்போல் சொல்விரிய
ஆரணம் காட்டி அருமையாய் ஈர்த்தெம்மைத்
தாமதம் இன்றித் தமிழ்பாடச் சொல்கின்றீர்!
சாமரம் வீசுமிந்தச் சந்த வசந்தத்தில்
யானும் இடம்பெற்றேன் ஆனைமுகன் காக்க!
அனைவரும் தத்தம் அருங்கவியைச் சாற்றக்
கணைகளால் கண்டங்கள் தானதிர்ந்து வாழ்வெனும்
சாகரத்தில் வாழுமுறை தானறிந்து இன்பத்தின்
தாகத்தை சற்றே உணரட்டும்! வேறென்ன
வேண்டுமிங்கே? வண்டமிழ் ஓசையினால் மேதினியிற்
தாண்டவம் ஆடட்டும் சக்தியொரு பாகத்தான்!
வேண்டிடுவோம் நாமும் விழைந்து!

~ சுரேஜமீ
11/09/2025 காலை 10:43






---------------------------------------------------------------------------------------------------
This email transmission is confidential and intended for the addressee only. It may contain privileged and confidential information. If you are not the person or organisation to whom it is addressed, you must not copy, distribute, or take any action in reliance upon it. If you have received this message in error, please notify the sender immediately.


On Wed, Sep 10, 2025 at 2:14 AM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:

கவியரங்கம் -60

தோரணவாயில்

9-11-2025

இறைவணக்கம்

ஐங்கரனே, ஆனைமுக ஆண்டவனே, அன்பரிடம்
தங்கருணை காட்டும் தயாபரனே, அன்றொருநாள்
கொம்பொடித்து ஏட்டினிலே குத்தாட்டம் போட்டவனே
செம்மை எழுத்தாளத் தேரில் அமர்ந்தவனே
தம்பி இடத்தே தனிக்கவனம் கொண்டவனே
அம்பிகை மைந்தனே, ஆதரிக்கும் அற்புதனே
தும்பிக்கை யானுன்னைத் தோத்திரங்கள் செய்பவரின்
நம்பிக்கை நாயகனே, ஞான விநாயகனே
உன்னை நினைக்காமல் ஒன்றைத் தொடங்குபவர்
என்ன பெரியவர் என்றாலும் அன்னாரின்
பாதையில் கல்போட்டுபார்த்திருக்கும் நீதிபதி
ஏதம் தவிர்க்கின்ற ஏந்தலே, என்னரசே
போதம் கொடுக்கின்ற புண்ணியனே, பூரணனே
காதங்கள் தாம்கடந்து கைலை  மலைவரையில்
பாட்டிக்கு வேகப் பயணம்கொடுத்தவனே
ஏட்டை எடுத்து எழுதத் தொடங்குங்கால்
வாட்டமே இன்றி வளரட்டும் கற்பனைகள்
காட்டுவாய் நல்ல கவி.

தோரணவாயில்

நாளை கவியரங்க நாள்தொடக்கம், ஐயன்மீர்
தோளை நிமிர்த்திச் சுடர்தூக்கி வாருங்கள்
ஓவ்வோர் அசைவினையும் உற்றுநான் பார்க்கின்றேன்
செவ்வி உடைய சிறந்த கவிஞர்களே
பாதையெனில் ஏதோ பழுதிருக்கத் தான்செய்யும்
சாதனைகள் செய்யத் தடுக்கியே வீழாமல்
போராடி வெல்லப் புறப்பட்டு வாருங்கள்
வேரோடிப் பார்க்கும் விழுதுகளால் ஆலமரம்
காலத்தை வென்று களம்பரப்பி நிற்கிறது
காலை எழுமுன் கடலும் அலைவீசி
ஓலமிட்டுப் பாய்ந்தழகாய் ஒய்யாரம் கொள்கிறது

ஓடும் கணத்தில் ஒருபயணம், ஓயாமல்
ஏடும் எழுத்தும் இயங்கி இருக்கட்டும்
வார்த்தை அணிவகுப்பு வாகாய் நடக்கட்டும்
நேர்த்தியே காண்போம் நிதம்.

பிரம்மாக்கள்

கவிஞர்களே, நீங்களெலாம் காலத்து நெஞ்சத்

தவிசமர்ந்து வார்த்தைச் சதிராடும் வித்தகர்கள்

மூங்கில் குழாயில் முகிழ்த்த துவாரங்கள்

ஏங்கி வரும்காற்றின் எண்ணப் பிழிவதனை

வாங்கி இசையாய் வடிக்கும் பிரம்மாக்கள்

தூங்கும் திரியில் சுடரேற்றும் தீபங்கள்

எண்ண முகிற்கூட்டின் ஏகாந்தப் பள்ளியறை

நண்ணி உயிர்த்த நளினக் குழவிகளை

சொல்லென்னும் தொட்டிலிலே தூங்கவைக்கும் தாதியர்கள்

உள்ளத்துச் சந்தையெழு ஓயாத பேரத்தில்

பிள்ளை வியப்பெயதும் பேரின்ப ஞானியர்கள்

பார்க்கும் கணத்தின் பசுமையினை, சொற்கூட்டில்

சேர்க்கும் தொழில்செய்யும் தேர்ச்சியினைக் கொண்டவர்கள்

தேங்குகிற நீர்நிலையில் தேடியெதை யோஎழுத

ஏங்குகிற நல்ல எழுத்தாணிப் பூச்சிகள்

கால வெளியினிலே கால்பாவி நின்றாலும்

காலத்தை வெல்லும் கவிதை படைப்பவர்கள்

காசுக் கடிமையாய்க் கால்மாறிப் போகாமல்

நேசத்தைச் சத்தியத்தில் நிற்கவைத்து வாழியவே!

பஞ்சபூதப் பயணம்

வான்வெளியில் சுற்றிவந்து வட்டமிடும் கோள்களிடை
ஏன் மோதல் இல்லை எதுவோ தடுக்கிறது
காற்றந்த வான்வெளியில் கட்டுக்குள் மாட்டாமல்
ஆற்றலைக் காட்டி அலைந்து திரிகிறது
மூச்சை இழுத்து முடுக்கி விடும்போது
வீச்சில் அதனோடு வெப்பம் விளையாடும்
வெப்பம் தருந்தீயை வீழ்நீர் அணைக்கிறது
அப்புவைத் தீயோ அணைத்துக் குடிக்கிறது
எல்லாமும் மண்ணுக்குள் எக்காளம் போட்டாலும்
நல்லாத்தான் ஞாலம் நடக்கிறது, மோதலிலே
காலமும் ஏதோ கணக்கில் விரைகிறது
போலித் தனத்தின் புரட்டினிலே நாடுகளில்
காலித் தனத்தின் களியாட்டம் காண்கின்றோம்
போராட்டம் இன்றிப் பொழுது நகர்வதில்லை
தேரோட்டம் நாளைத் தினத்தில் தொடங்கட்டும்
வாருங்கள், வந்து வடத்தைப் பிடியுங்கள்
சேருங்கள் , தேர்ந்திழுப்போம் தேர்.!

 

நாளை தலைமைக் கவிதை

இலந்தை

On Sun, Aug 24, 2025 at 11:29 PM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:
அடுத்த கவியரங்கம் நடத்த ஏற்பாடு நடக்கிறது.

தலைப்பு: போராடவா இந்தப் போது!   

அழைப்பாகவும் வினாவாகவும் கொள்ளலாம்.

சத்தம் சங்கடப்படுத்தும். சாந்தம் சங்கடத்தைப் படுத்தும்

தலைமை: இலந்தை
நாள் 10-11-2025

கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் பெயர் கொடுக்கலாம்

இலந்தை

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

KKSR

unread,
Sep 11, 2025, 3:16:14 AMSep 11
to santhav...@googlegroups.com
தலைமைக் கவிதனிலே தன்னை மறந்தேன்
அலைபாயும் உள்ளம் அணைத்து!

அருமை மாமா!

அன்புடன்
சுரேஜமீ
11/09/2025 காலை 11:15


---------------------------------------------------------------------------------------------------
This email transmission is confidential and intended for the addressee only. It may contain privileged and confidential information. If you are not the person or organisation to whom it is addressed, you must not copy, distribute, or take any action in reliance upon it. If you have received this message in error, please notify the sender immediately.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

KKSR

unread,
Sep 11, 2025, 3:32:01 AMSep 11
to santhav...@googlegroups.com
அருமை ராம்கிராம் அண்ணலே!

எத்தனை போராட்ட்ம்? ஏனெதற்கு என்றறியா
அத்தனையும் வெல்ல அருங்கவிதை - முத்துகளைக்
கோத்த இராம்கிராம் அண்ணலை, சென்னிகுவித்
தேத்தி மகிழ்கிறேன் நின்று!

~சுரேஜமீ
11/09/2025 காலை 11:30


---------------------------------------------------------------------------------------------------
This email transmission is confidential and intended for the addressee only. It may contain privileged and confidential information. If you are not the person or organisation to whom it is addressed, you must not copy, distribute, or take any action in reliance upon it. If you have received this message in error, please notify the sender immediately.

Ram Ramakrishnan

unread,
Sep 11, 2025, 8:24:37 AMSep 11
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி வெண்பா வேந்தரே.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Sep 11, 2025, at 02:27, NATARAJAN RAMASESHAN <chrome...@gmail.com> wrote:



Ram Ramakrishnan

unread,
Sep 11, 2025, 8:25:51 AMSep 11
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, அருமைத் தம்பியரே.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Sep 11, 2025, at 03:32, KKSR <aur...@gmail.com> wrote:



Subbaier Ramasami

unread,
Sep 11, 2025, 9:33:04 AMSep 11
to santhav...@googlegroups.com

"

வாழ்க்கையதும் போர்க்களமே வாழ்பவரும் போராளி

தாழ்வடைதல் சின்னேரம் சாத்தியமே - காழ்ப்பைப்

புறந்தள்ளித் தோல்வியினைப் போற்றா தமைந்திட்(டு)

“இறந்தெழும் புள்”ளாயின் ஏற்

றம "

நல்ல தொடக்கம் நயமான சொற்கூட்டம்
வெல்லத் தமிழில் விளையாட்டு- பல்விதமாய்
பண்டைத் தமிழ்தொட்டு பன்னுதமிழ் சேர்த்திழைத்து

தண்டமிழை ராம்தந்தா ராம்.


இலந்தை.




On Wed, Sep 10, 2025 at 10:56 AM Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:
சந்தவசந்தக் கவியரங்கம்

செப்டெம்பர் 10, 2025

தலைப்பு:  போராட வாயிந்தப் போது

Subbaier Ramasami

unread,
Sep 11, 2025, 9:36:41 AMSep 11
to santhavasantham
பின்னூட்டம் ஒவ்வொன்றும் பேசி மகிழும்வகை
இன்னூட்ட மாய்த்தந்தார் எல்லோரும்- என்னூட்டம்
நல்லூட்டம ஆகவே நாலுபவுண்ட் டேறியது
சொல்லூட்டம் என்றும் சுகம்

இலந்தை

Subbaier Ramasami

unread,
Sep 11, 2025, 9:43:56 AMSep 11
to santhavasantham
இரண்டாம் அழைப்பு.

கவிஞர் இனியன்

மனத்துக் கினியன் , நற்கவிதை
     வாக்கிற் கினியன், கவிஞர்தம்
இனத்துக் கினியன், மாணவர்கள்
     இதத்துக்கினியன், சொல்லிலுள 
கனத்தை அறிந்து கச்சிதமாய்க்
      கணிக்கும் இனியன் இவ்வரங்கில்
புனையும் கவிதைப் பொலிவினிலே
      புளகம் பெரிதாய்ப் பெறுவோமே!

இலந்தை

அற்புதமாய்ப் பாடும் அருமை இனியனார்
சொற்பதத்தில் காண்போம் சுகம்

இலந்தை

Ram Ramakrishnan

unread,
Sep 11, 2025, 12:25:07 PMSep 11
to santhav...@googlegroups.com
அன்பான பாராட்டுக்கென் சிரம் தாழ்ந்து நன்றி கூறுகின்றேன் தலைவரே.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Govindaraju Arunachalam

unread,
Sep 11, 2025, 12:47:12 PMSep 11
to santhav...@googlegroups.com

சந்தவசந்தக் கவியரங்கம் 60

தலைப்பு:  போராட வாயிந்தப் போது

கவியரங்கத் தலைமை: கவிவேழம் இலந்தை ராமசாமி

படைப்பு : கருவூர் இனியன்

 

போராட வாஇந்தப் போதென எண்ணுக

சீராகப் பாட்டினைச் செய்கெனச் சொல்லிய

பாராளு கின்ற படைத்தலைவர் வாழிய

ஊராண்டு பல்லாண் டுவப்புடனே வாழிய           

ஒன்றுக்கும் ஆகாத ஓர்கவி யாத்துநான்

மன்றில் படைக்கின்றேன் மன்னிக்க வேண்டுவனே

போராடத் தானோ புவியில் உயிரினத்தைப்

பேரா இயற்கை பெரிதாய்ப் படைத்ததோ!

வாழும் தகுதி வளமாய் இலையென்றால்

வீழும் நிலைதான் விரையுமாம் வாழ்வில்

தகுதி உடைத்து தரணியில் வாழும்

செகத்துளார் ஏற்றிடும் செய்தி இதுதானே

தானே வருமா தகுதி எவருக்கும்

நானே விடுக்கின்ற நல்வினா இஃதென்பேன்

போராட வாவென்று  போகின்ற போக்கிலே

சீராக ஓர்செய்தி செப்பினார் நம்தலைவர்

சிங்கம் சிறுநரியாய்ச் சீரழிந்து போகாமல்

பொங்கி எழுச்சியுற்றுப் போராட வேண்டுமென்றார்

போராடும் பண்பு புழுவுக்கும் உண்டன்றோ

வேரோடும் மாமரத்தின் வேதனை எத்துணை

போராடி யல்லவோ பெற்றோம் விடுதலை

போராட்டம் இன்றேல் புகழும் இலையே

அறத்தின் வழியில் அமைந்திட வேண்டும்

புறத்தில் தடம்மாறிப் போதல் கொடுமை

பொதுநலம் காத்திடப் பொங்கிட வேண்டும்

சுயநலம் காக்கச் சுருங்குதல் பாவம்

ஒதுங்கி இருத்தல் ஒருவகைக் குற்றம்

பதுங்கி இருப்பதும் பாதக மாகும்

அறிவே சிறந்ததோர் ஆயுத மாகும்

அறிந்தவர் யாவரும் ஆமெனச் சொல்வர்

அனைவரும் இன்றே அதனை எடுத்து

வினைசெய வாரீர் விரைந்து.

Siva Siva

unread,
Sep 11, 2025, 10:12:36 PMSep 11
to santhav...@googlegroups.com

அறத்தின் வழியில் அமைந்திட வேண்டும் /

அறிவே சிறந்ததோர் ஆயுத மாகும்   /

நல்ல கருத்துகள்.
வாழ்க.

வி. சுப்பிரமணியன்

KKSR

unread,
Sep 11, 2025, 10:32:04 PMSep 11
to santhav...@googlegroups.com
எப்படிப் பாடினரோ அப்படிப் பாடினரே
செப்பு மொழியெலாம் சிந்தும் கருணையினால்
இப்ப்டிச் சொல்லும் இனிய்னென் அண்ணல்தான்
தப்பெவர் செய்யினும் தட்டியே கேட்டிடுவார்
இங்கவர் வார்த்தையில்தான் ஏற்றதோர் வாழ்வியலை
பொங்கி உரைத்தாரே போற்றுவம் யாமிதனை
தங்கமாய் வீசியொளி தாரிணி வாழ்வதற்கு
அங்கமாய் எதுவேண்டும்? அஃதினைப் பார்ப்போமா?

சுயநலம் காக்கச் சுருங்குதல் பாவம்

ஒதுங்கி இருத்தல் ஒருவகைக் குற்றம்

பதுங்கி இருப்பதும் பாதக மாகும்

அறிவே சிறந்ததோர் ஆயுத மாகும்

வேறென்ன வேணடுமிங்கே? எண்ணிட நன்மைதான்!
சாறாய்ப் பிழிந்தெடுத்து சத்தியம் சாற்றினரே!
தூறினை வாரியுளச் சேற்றினை நீக்கிடவே
கூறிதைக் கொண்டுவிட்டால் நன்று!

வாழ்த்துகள் அண்ணா!

அன்புடன்
சுரேஜமீ
12/09/2025 காலை 06:30 



---------------------------------------------------------------------------------------------------
This email transmission is confidential and intended for the addressee only. It may contain privileged and confidential information. If you are not the person or organisation to whom it is addressed, you must not copy, distribute, or take any action in reliance upon it. If you have received this message in error, please notify the sender immediately.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

NATARAJAN RAMASESHAN

unread,
Sep 11, 2025, 10:50:47 PMSep 11
to santhav...@googlegroups.com

//போராடும் பண்பு புழுவுக்கும் உண்டன்றோ

வேரோடும் மாமரத்தின் வேதனை எத்துணை

போராடி யல்லவோ பெற்றோம் விடுதலை

போராட்டம் இன்றேல் புகழும் இலையே//


மிகச் சிறப்பான அவர்கள்

இனியனார் கவிதை என்றும் இனியது


             —தில்லைவேந்தன்.


Arasi Palaniappan

unread,
Sep 12, 2025, 1:02:54 AMSep 12
to சந்தவசந்தம்
இனியனார் கவிதைக்குப் பின்னூட்டம் 

அனாயாச மாக அளந்தடிகள் கொண்ட 
இனியனார் பாடல் இனிமை - "தனியே 
ஒதுங்குவதும் அன்றேல் பதுங்கவும் வேண்டா "
பதிந்தசெய்தி போற்றப் படும் 

அன்புடன் 
அரசி. பழனியப்பன் 

Govindaraju Arunachalam

unread,
Sep 12, 2025, 1:47:26 AMSep 12
to santhav...@googlegroups.com

அணிநலம் ததும்ப அழைப்புக் கவி விடுத்த அரங்கத் தலைவர்  இலந்தையாருக்கும், என் கவிதையைக் கண்ணுற்றுப் பாராட்டிய பாவலர் சிவசிவா, தில்லைவேந்தன் மற்றும் பாவடிவில் பாராட்டி உரைத்த பெருமக்கள் அரசி. பழனியப்பன், சுரேஜமீ ஆகியோருக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

 

-கருவூர் இனியன்.

Govindaraju Arunachalam

unread,
Sep 12, 2025, 2:29:54 AMSep 12
to santhav...@googlegroups.com

எப்படித்தான் எழுதினாரோ. நேரிசைக் கலிவெண்பா எழுத ஒரு தனித்திறன் வேண்டும். பாவலர் இராம்கிராம் அவர்களுக்குப் பாராட்டுகள்.   –கருவூர் இனியன்.


On Wed, Sep 10, 2025 at 9:26 PM Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:
சந்தவசந்தக் கவியரங்கம்

செப்டெம்பர் 10, 2025

தலைப்பு:  போராட வாயிந்தப் போது

கவியரங்கத் தலைமை: கவிவேழம் திருமிகு. இலந்தை ராமசாமி

படைப்பு : ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)


இறைவணக்கம்

நேரிசை வெண்பா


வாரணனே ஐங்கரனே காரியத்தின் காரணனுன்

பூரண ஆசிபெறப் போற்றிநின்றேன் - போரிட

வல்லயிந்தப் போதென்ற சொல்லமைத்த என்கவிக்கு

நல்வாழ்த்துன் வாயால் நவில்.


தலைவர் வணக்கம்

எழுசீர்ச் சந்த விருத்தம்

னான தான தான தான தான தான தானனா

கலைந்தி ருந்த மஞ்சு யாவு மொன்று கின்ற நாளிதே

மலர்ந்த மல்லி வாடை யன்ன மட்டி லாம கிழ்ச்சியே

புலர்ந்த காலை யின்று பாட வந்தி டென்ற ழைப்பினால்  

இலந்தை ராம சாமி யென்ற ஏந்த லைவ ணங்கினேன்.


மஞ்சு – மேகம்

ஏந்தல் – தலைவர், உயர்ந்தவர், அரசன்


போரிட வாயிந்தப் போது - கவிதை 



நேரிசைக் கலிவெண்பா

 

வாழ்க்கையதும் போர்க்களமே வாழ்பவரும் போராளி

தாழ்வடைதல் சின்னேரம் சாத்தியமே - காழ்ப்பைப்

புறந்தள்ளித் தோல்வியினைப் போற்றா தமைந்திட்(டு)

“இறந்தெழும் புள்”ளாயின் ஏற்றம் – மறவற்க

அன்பன்

ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)


அற்புதத் தலைமைக் கவிதை, தலைவரே.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)
On Sep 10, 2025, at 11:07, Siva Siva <naya...@gmail.com> wrote:


காலை வர்ணனை அருமை.

ஆன்மீகப் போராட்டம், ஆளுமைக்குப் போராட்டம்
தான்மீறும் சாதிகளின் சச்சரவுப் போராட்டம்
என்செய்வோம், இந்த இழுபறியில் நாம்கூடப்
புன்மைகளைத் தீர்ப்பதற்குப் போராடத் தான்வேண்டும் /

முள்ளை முள்ளால் எடுக்கும் முயற்சி!

வி. சுப்பிரமணியன்
On Wed, Sep 10, 2025 at 8:29 AM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:
தலைமைக் கவிதை

போராடவா இந்தப் போது?

 

காலைப் பனிநெருப்பு கச்சிதமாய் நீர்கிழித்து
வேலைப்போ ராட்டத்தில் விம்மி எழுகிறது
நீலக் கடலோர் நெருப்புவண்ணத் திற்குளித்து
கோலம் பிதிர்ந்து குதித்துப் புரள்கிறது
நாள்தொடங்கும் போதேயோர் நாடகமா?
ஆள்கின்ற காலத்தின் ஆட்ட அதிசயமா?
ஆகம் கிழிந்தே அலையும் முகிலொன்று
பாகம் பிளந்து பகைதேடிச் செல்கிறது
செங்கொண்டைச் சேவல் சிறகடித்துத் தன்னுடைய
பங்கிற்குச் சத்தம் படைத்துக் களிக்கிறது
சேவலுக்கு ஏனித் திமிர்தனக்கு முன்கதிரைக்
கூவி வரவேற்கும் கும்மாளி பாரென்றே
காகம் குரலில் கனமேற்றித் தீர்க்கிறது
சோகமுடன் குஞ்சொன்று தூக்கத்தில் வாய்திறக்க
ஏதும் கொடுக்க இயலாத தாய்க்காகம்
நீதமாய்க் கூட்டை நெருக்கிவைத்துத் தன்குஞ்சு
வீழ்ந்து  விடாவண்ணம் வேண்டியது செய்கிறது
சூழ்ந்த பரவசமா, தொல்லைக்குக் கட்டியமா
என்றே இயற்கை எதிர்நீச்சல் தானடிக்க
அன்று விடியலை அண்ணாந்து பார்த்திருந்தேன்
போராட்டத் தில் தான்  பொழுது புலர்கிறதா?
பாராட்டுக் காகப் படையின் வெளிப்பாடா?

... ...


ஆன்மீகப் போராட்டம், ஆளுமைக்குப் போராட்டம்
தான்மீறும் சாதிகளின் சச்சரவுப் போராட்டம்
என்செய்வோம், இந்த இழுபறியில் நாம்கூடப்

புன்மைகளைத் தீர்ப்பதற்குப் போராடத் தான்வேண்டும்
இந்த நிலைமாறி இன்பமாய் வாழுதற்கே
அந்தக் கடவுளைத்தான் யாம்வேண்டிப் பார்க்கின்றோம்
ஆயுதங்கள் ஏந்தி அவர்கள் இருக்கின்றார்
ஞாயம் அறிந்தவர்கள் நல்லதுதான் செய்வார்கள்
சண்டைகளே இன்றிச் சமாதானம் ஓங்கட்டும்

கண்டுரைப்போம் நேயக் கவி!


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.


--
rgds,
 
Dr. A. GOVINDARAJU,
Retired Principal - National Awardee,

GOPAL Vis

unread,
Sep 12, 2025, 4:07:10 AMSep 12
to santhav...@googlegroups.com
கவிஞர் இனியனின் கவிதையில் சிந்திக்க வேண்டிய கருத்துகள் பல உள்ளன. ஆதாரமான கேள்வி இது:

போராடத் தானோ புவியில் உயிரினத்தைப்

பேரா இயற்கை பெரிதாய்ப் படைத்ததோ!


ஆம் என்றே எண்ணத் தோன்றுகிறது. 


எல்லாம் பொதுவாய் இருந்தும் எனக்கெனும்
பொல்லாக் குணத்தாற்றான் போராட்டம்! - கல்லா
விலங்குகள் கற்று விளங்கிடும் மக்கள்
நலஞ்சுடும் தன்னலம் நஞ்சு!

அறிவே சிறந்ததோர் ஆயுத மாகும்

அறிவே எதிர்த்திடும் ஆயுத மானால்
நெறியே பகைதான் நிலத்தில் - செறியக்
கொடுத்தவன் ஏனிக் கொடுமை திணித்தான்?
தொடுப்பமா போரவன்மீ து?

கோபால்.

On Thu, Sep 11, 2025 at 10:17 PM Govindaraju Arunachalam <agrp...@gmail.com> wrote:

சந்தவசந்தக் கவியரங்கம் 60

தலைப்பு:  போராட வாயிந்தப் போது

கவியரங்கத் தலைமை: கவிவேழம் இலந்தை ராமசாமி

படைப்பு : கருவூர் இனியன்

 

போராட வாஇந்தப் போதென எண்ணுக

. . . . . 

போராடத் தானோ புவியில் உயிரினத்தைப்

பேரா இயற்கை பெரிதாய்ப் படைத்ததோ!

. . . . 

போராடும் பண்பு புழுவுக்கும் உண்டன்றோ

வேரோடும் மாமரத்தின் வேதனை எத்துணை

போராடி யல்லவோ பெற்றோம் விடுதலை

போராட்டம் இன்றேல் புகழும் இலையே

அறத்தின் வழியில் அமைந்திட வேண்டும்

புறத்தில் தடம்மாறிப் போதல் கொடுமை

பொதுநலம் காத்திடப் பொங்கிட வேண்டும்

சுயநலம் காக்கச் சுருங்குதல் பாவம்

ஒதுங்கி இருத்தல் ஒருவகைக் குற்றம்

பதுங்கி இருப்பதும் பாதக மாகும்

அறிவே சிறந்ததோர் ஆயுத மாகும்

அறிந்தவர் யாவரும் ஆமெனச் சொல்வர்

. . . . . .


Ram Ramakrishnan

unread,
Sep 12, 2025, 8:27:54 AMSep 12
to santhav...@googlegroups.com
நனி நன்றி, இனியனாரே.

தங்களது மேன்மைத்தாம் கவிதைக்குப் பின்னூட்டம்:

அருமைத்தாம் சிந்தனையி லாக்கிய பாடல்
விரும்பினேன் உள்ளம் வியந்து.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Sep 12, 2025, at 02:29, Govindaraju Arunachalam <agrp...@gmail.com> wrote:



Kaviyogi Vedham

unread,
Sep 12, 2025, 11:17:57 AMSep 12
to santhav...@googlegroups.com
இனியன்  கவிதையில் நல்ல கருத்தோட்டம். வாழ்க,
   யோகியார்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Subbaier Ramasami

unread,
Sep 12, 2025, 4:14:25 PMSep 12
to santhav...@googlegroups.com
வினைசெய வாரீர் விரைந்தெனச் சொல்லி
நனிவிரைவுக்கோர் நாற்றினை நட்டார்


 

என்னுடை விருப்பம் போல

எல்லாமே நடக்கும் என்றால்

தன்னலச் சீழ் பிடித்துத்

தாயகம் சீர் குலைப்போர்

மென்னியைத் திருகிப் போட்டு

வேடிக்கை பார்த்திருப்பேன்

என்னடா பேயாட்டங்கள் ,

இதுவா என் அன்னை பூமி?

 

ஒருவனின் குடும்பம் ஓங்க

ஊரினை எரிப்போன், இங்கே

பெரியவன் என்றால் அந்தப்

பேயினைப் பிய்த்துப் போட

வருகிற பாபம் இல்லை

வயிற்றிலே சோறு போட

எரிகிற நெருப்பு வேண்டும்

எரிக்கவும் தெரிய வேண்டும்.

 

பொய்யிலே உண்மைச் சாயம்

பூசினால் அதனைக் கண்டு

கையினைக் கூப்பு கின்ற

கண்ணியம் உள்ள மட்டும்

உய்வகை இல்லை, பேசும்

ஊமையால் பலனொன் றில்லை.

நையவே புடைக்க வேண்டும்

நைக்கவும் தெரிய வேண்டும்.

 

வாசனை தூவி நாற்றம்

வருவதைக் குறைத்துவிட்டால்

ஊசிய பண்டம் தின்ன

உதவுமா? கற்புச் சேலை

வேசிகள் கட்டிக் கொண்டால்

வீழ்ந்துநாம் வணங்கு கின்றோம்

காசிலே தானே இன்னும்

கடவுளைக் காணுகின்றோம்.

 

மாற்றங்கள் வேண்டும், ஆமாம்

வருவதும் விரைவில் வேண்டும்

சீற்றங்கள் வேண்டும், ஆமாம்

சீக்கிரம் பொங்க வேண்டும்

நூற்றிலே ஒருவர் நெஞ்சில்

நொண்டுதல் நீக்கி விட்டால்

ஏற்றங்கள் சேரும், ஆமாம்,

இந்தியா வாழ்ந்து போகும்.

இலந்தை

 



--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Subbaier Ramasami

unread,
Sep 12, 2025, 4:36:19 PMSep 12
to santhav...@googlegroups.com
மூன்றாம் அழைப்பு

கவிஞர் இமய வரம்பன்

 உரைசெயும் ஆற்றலர்  ஆய்வதன் இமயம்- இங்கே
உணர்வினை ஏற்றிநற் கவிதரும்  சமயம்
சரிவர வெளிப்புறத்  தவறுகள் சுட்டி-  தருக
தந்தன தானென சொற்களைக் கொட்டி
இரக்கமும் வேண்டும் கவிஞனுக் கென்றே-அன்று
இசைதனன் பாரதி கவிதையில் நன்றே
கருத்துச் சுடர்ப்பொறி கவிதையில் சேர்த்து- இங்கே
கவிதை பொழிகயெம் மனங்களை ஈர்த்து

இமய வரம்பன் எழுச்சிக் கவிதை
தமிழில் கொடுக்கும் தரம்

இலந்தை


இமயவரம்பன்

unread,
Sep 12, 2025, 5:12:41 PMSep 12
to santhav...@googlegroups.com
"ஒதுங்கி இருத்தல் ஒருவகைக் குற்றம்
பதுங்கி இருப்பதும் பாதக மாகும்”

மிக அருமையான வரிகள்! இனியனார் கவிதை இனிப்பு!

இமயவரம்பன்

unread,
Sep 12, 2025, 5:52:02 PMSep 12
to santhav...@googlegroups.com
அழகிய கவிதையோடு என்னை அன்புடன் அழைத்தமைக்குக் கவிவேழம் இலந்தையார் அவர்களுக்கு மிக்க நன்றி!

---------------------------------------------------------------------

சந்த வசந்தக் கவியரங்கம் - 60

தலைப்பு -  போராடவா இந்தப் போது?

கவியரங்கத் தலைமை: கவிவேழம் திரு. இலந்தை ராமசாமி

நாள்: 12-செப்-2025


கடவுள் வாழ்த்து

(நேரிசை வெண்பா)

காரானை வெந்துயரம் காய்ந்தானைத் தண்டுளவத்  

தாரானை யார்க்கும் தலையானை - ஏராரும்

நாரா யணனை நமக்கரித்தென் நன்னெஞ்சே

பேரா யிரம்பரவிப் பேசு. 


[காரானை = கரிய யானை (கஜேந்திரன்) அல்லது மேகம் போன்றவனை; 

தண்டுளவம் = தண் + துளவம்; 

நமக்கரித்து = நமஸ்கரித்து என்னும் சமஸ்கிருதச் சொல்லின் தமிழாக்கம்]


தலைவர் வணக்கம்

(நேரிசை வெண்பா)

வாராகி பேரோதி வாழ்வார் கனிவார்ந்த 

காராகித் தண்ணார் கவிபொழிவார் - சீராரும்

தேராய் அவைநடத்திச் சென்றருள்வார் தெற்கிலந்தை

ஊரார் அவர்சொல் உயர்வு.


அவையடக்கம்

(நேரிசை வெண்பா)

சீரார்ந்த பாவலர்தம் செஞ்சொற் சிறப்பெதுவும்

சேராத புன்கவிதை செப்பினேன் - காராற

ஓராழித் தேரூரும் ஒண்கதிர்க்கு மின்மினிதான்

நேராகும் என்றே நினைத்து.


(கார் ஆற = இருள் ஒழிய)


போராடவா இந்தப் போது?

(கலிவெண்பா)


வாரார் கடலுலகில் வானார் வளமனைத்தும்

கோராமல் நல்கிக் குறைதீர்த் தருள்புரியும்

ஏரார் இயற்கையுடன் ஒன்றிணைந்த வாழ்வினிலே

ஓராங்(கு) உலகத்தோ டொட்ட ஒழுகுமொரு    (4) 

நேரான நீதி நெறிநின்று நீணிலத்தின்

வேராம் விழுமியங்கள் மேன்மை யுறப்பேணி

ஆரார்க்கும் அன்புற் றருளி அறிவென்னும் 

ஆரா அமுதம் அருந்திக் களியாதே,   (8)  

பாராருக் கேதும் பயனில் உயிர்வாழ்வில்  

சீரார் பொழுதெல்லாம் தீதாய்க் கழிந்தொழியக்

காராரும் வான்கீழ்க் கணக்கில் படிறியற்றிப்

போரார் பகைவளர்க்கும் பொய்யார்ந்த என்மனமே!   (12) 

பேராரும் வள்ளுவனார் பேசும் குறள்நெறியும்

ஏரார்ந்த இன்பம் இயம்புதிரு மந்திரமும்

பாராளன் கீதையெனப் பார்த்தற்(கு) உரைமொழியும் 

ஓராழ் பொருணர்த்த ஓதித் தெளிந்திந்தப்   (16)     

பாரார் வெளிமுழுதும் ஓர்படித்தாப் பார்க்குமொரு

சீரார்ந்த நோக்கில் திசையெங்கும் காட்சிதரும்

ஆரா ஒளியால் அனைத்துலகும் பேருறவென்(று)

ஓரான்ற உண்மை உணர்ந்திக் கணத்தூன்றி   (20)    

நாரார் மலர்போல் நவையில் நினைப்புடனும்,

ஈரார் உணர்வுடனும், ஏகாக் கிரத்துடனும்,

ஆரார் எதிர்த்தும் அசையா உரத்துடனும் 

பேரா மலைபோலே பீடோ டுயர்ந்(து)இடர்க்கண்   (24)    

சோரா(து) இருந்து, துணிவில் குறைவொன்றும்

வாரா திருந்து, மறுவார் பொறிவழியே

சாரா திருந்து, தரணி மிசைப்பேதம் 

பாரா திருந்து, பரவசப் பேரின்ப   (28)    

நீராட வா?அன்றி நேற்றுனக்கு நேர்ந்ததையும்

நேரா ததையும் நினைந்து நினைந்துநிதம்

ஆராய்ந் தலசி அயர்ந்து புலனழிந்து     

பேராக் கவல்பிணிக்கப் பேதுற் றலமந்து   (32) 

கூரார்ந்த வாள்போல் கொடிதான நாள்தோறும்

ஆராப் பொருள்வேட்கை ஆழ்த்தக் கிடந்துழலும்

பேரா குலக்குழியின் மீண்டு பிழைத்தெழும்ப

ஓரா(று) அதைத்தேடி ஓவா துயிர்வாடிக்   (36)   

காரார் நினைவோடு கட்டாப் புலனோடு

தீராப் பகையோடு தீயார் மொழியோடு

தேரா மதியோடு தேயாத் துயரோடு

போராட வாஇந்தப் போது?   (40)    



(வாரார் = நீண்ட; வானார் = பெரிய; ஓராங்கு = ஒருசேர; 

ஆரார்க்கும் = யார் யார்க்கும்/பகைவர்க்கும்; பாராருக்கு = உலக மக்களுக்கு; படிறு = வஞ்சனை;

ஓர் படித்தாப் பார்க்கும் = ஒரே பார்வையாகப் பார்க்கும்; 

நவையில் = குற்றமற்ற; ஈரார் = ஈரம் மிகுந்த; ஏகாக்கிரம் = ஒன்றிய கவனம்; 

மறு = குற்றம்; புலனழிந்து = அறிவு மயங்கி; கவல் = கவலை; பேராகுலம் = மனக்கலக்கம்;

ஓர் ஆறு = ஒரு வழி; காரார் நினைவு = இருள்சூழ்ந்த எதிர்மறை எண்ணங்கள்;

கட்டா = அடக்காத; தேரா = ஆய்ந்துநோக்காத)


  • இமயவரம்பன்

Siva Siva

unread,
Sep 12, 2025, 8:34:07 PMSep 12
to santhav...@googlegroups.com
சிறந்த பாடல்.
இத்தனை அடிகளிலும் ஒரே எதுகை!

போராட வாவிந்தப் போது - என்ற சொற்றொடர் பாடலின் கடைசியில்தான் இருக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லையே.
மனத்தைக் கேட்ட இருவினாக்களில் பின்னர்க் கேட்டதை முதலில் வைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருக்குமோ என்று தோன்றுகின்றது.

வி. சுப்பிரமணியன்

On Fri, Sep 12, 2025 at 5:52 PM இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:
அழகிய கவிதையோடு என்னை அன்புடன் அழைத்தமைக்குக் கவிவேழம் இலந்தையார் அவர்களுக்கு மிக்க நன்றி!

---------------------------------------------------------------------

சந்த வசந்தக் கவியரங்கம் - 60

தலைப்பு -  போராடவா இந்தப் போது?

கவியரங்கத் தலைமை: கவிவேழம் திரு. இலந்தை ராமசாமி

நாள்: 12-செப்-2025

...


போராடவா இந்தப் போது?

(கலிவெண்பா)


....

போரார் பகைவளர்க்கும் பொய்யார்ந்த என்மனமே!   (12) 

...

இமயவரம்பன்

unread,
Sep 12, 2025, 9:15:02 PMSep 12
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக்க நன்றி! தாங்கள் சொல்வது போல் இரு வினாக்களையும் முன்னால் வைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

> On Sep 12, 2025, at 8:34 PM, Siva Siva <naya...@gmail.com> wrote:
>
> 

KKSR

unread,
Sep 12, 2025, 10:32:45 PMSep 12
to santhav...@googlegroups.com
எனதருமை இளவல் இமயவரம்பர் தன்னையைணர் கவிதைதனைச் சிறப்பாக வைத்த விதம் சற்றே உள்ளிருக்கும் ஆன்மாவை ஆட்டும் வல்லமை பெற்றது என்பதை மறுக்க முடியுமோ?

ஏற்றதோர் கருத்தை எடுத்தியம்பும் இமயமிவர்
காற்றைப் புயலாக்கி கவிதையை வடித்தவிதம்
ஆற்றொழுக்காய் அடுக்குகின்ற வார்த்தைநயம் அவர்நெஞ்சில்
வீற்றிருக்கும் நிமலனவன் விண்டதுவோ? எண்ணுவிரே!

வாழ்த்துகள் இமயவரம்பரே!

அன்புடன்
சுரேஜமீ
13.09.2025 காலை 06:32

Sent from Mobile


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Ram Ramakrishnan

unread,
Sep 12, 2025, 10:33:29 PMSep 12
to santhav...@googlegroups.com
மிக அருமையான கவிதை, திரு. இமயவரம்பன்.

ஓரெதுகைப் பாடலால் உள்ளத்தில் கேள்விகளை

நீர்மையான சொற்கோத்து நெஞ்சை நிரப்பிவிட்டீர்

“தேர்ந்தறிந்து தீதறுக்க தேட்முடன் நற்செயலில்

சீர்தூக்கிச் செய்வினைகள் பேருறவைச் சேர்ந்திடிடும்

பாரி லுறுபகையும் கூர்மழுங்கிப் பொய்த்திடும்”

ஊர்மக்க ளோர்குடும்ப மொன்றாகின் கண்டறிதல்

“போரிட வல்லயிந்தப் போது”


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Ram Ramakrishnan

unread,
Sep 12, 2025, 10:41:14 PMSep 12
to santhav...@googlegroups.com
திருத்தம் - ஒன்றாகின் - என்றாகின்
திருத்திய வடிவம்:

ஓரெதுகைப் பாடலால் உள்ளத்தில் கேள்விகளை

நீர்மையான சொற்கோத்து நெஞ்சை நிரப்பிவிட்டீர்

“தேர்ந்தறிந்து தீதறுக்க தேட்முடன் நற்செயலில்

சீர்தூக்கிச் செய்வினைகள் பேருறவைச் சேர்ந்திடிடும்

பாரி லுறுபகையும் கூர்மழுங்கிப் பொய்த்திடும்”

ஊர்மக்க ளோர்குடும்ப மென்றாகின் கண்டறிதல்

“போரிட வல்லயிந்தப் போது”


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)


இமயவரம்பன்

unread,
Sep 12, 2025, 10:42:45 PMSep 12
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
பொன்னனைய சொல்லால் என்னைப் புகழ்ந்துரைத்த என்னினிய அண்ணல் சுரேஜமீ அவர்களுக்கு மிக்க நன்றி!

> On Sep 12, 2025, at 10:32 PM, KKSR <aur...@gmail.com> wrote:
>
> 

இமயவரம்பன்

unread,
Sep 12, 2025, 10:49:10 PMSep 12
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
என்கவியை வாழ்த்திடவோர் இன்கவியை இங்குரைத்த 
ஒண்கவிஞர் நண்பர்  திரு. இராம்கிராம் அவர்களுக்கு மிக்க நன்றி! 

On Sep 12, 2025, at 10:41 PM, Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:



VETTAI ANANTHANARAYANAN

unread,
Sep 12, 2025, 10:59:13 PMSep 12
to santhav...@googlegroups.com
கலிவெண்பாவிற்குரிய ஓசை நயத்தோடும் யாப்பழகோடும், ஒரே எதுகை கொண்டதாய் ஆற்றொழுக்கான நடையில் அமைத்த பாடல் மிக அருமை.
அனந்த்
On Fri, Sep 12, 2025 at 5:52 PM இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:
அழகிய கவிதையோடு என்னை அன்புடன் அழைத்தமைக்குக் கவிவேழம் இலந்தையார் அவர்களுக்கு மிக்க நன்றி!

---------------------------------------------------------------------

சந்த வசந்தக் கவியரங்கம் - 60

தலைப்பு -  போராடவா இந்தப் போது?

கவியரங்கத் தலைமை: கவிவேழம் திரு. இலந்தை ராமசாமி

நாள்: 12-செப்-2025


கடவுள் வாழ்த்து

(நேரிசை வெண்பா)

காரானை வெந்துயரம் காய்ந்தானைத் தண்டுளவத்  

தாரானை யார்க்கும் தலையானை - ஏராரும்

நாரா யணனை நமக்கரித்தென் நன்னெஞ்சே

பேரா யிரம்பரவிப் பேசு. 



போராடவா இந்தப் போது?

(கலிவெண்பா)


வாரார் கடலுலகில் வானார் வளமனைத்தும்

கோராமல் நல்கிக் குறைதீர்த் தருள்புரியும்

ஏரார் இயற்கையுடன் ஒன்றிணைந்த வாழ்வினிலே

ஓராங்(கு) உலகத்தோ டொட்ட ஒழுகுமொரு    (4) 

நேரான நீதி நெறிநின்று நீணிலத்தின்

வேராம் விழுமியங்கள் மேன்மை யுறப்பேணி

ஆரார்க்கும் அன்புற் றருளி அறிவென்னும் 

ஆரா அமுதம் அருந்திக் களியாதே,   (8)  

  • இமயவரம்பன்




--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

இமயவரம்பன்

unread,
Sep 12, 2025, 11:19:27 PMSep 12
to santhav...@googlegroups.com
அன்பான வாழ்த்துக்கு மிக்க நன்றி திரு. அனந்த்!

ஓர் எதுகைக் கலிவெண்பாவாகத் திருமங்கை ஆழ்வார் அருளிச்செய்த 'கார் ஆர் வரை’ எனத் தொடங்கும் சிறிய திருமடல் என்னும் பனுவலின் யாப்பமைப்பால் ஈர்க்கப்பட்டு அடியேன் எழுதிய கவிதை இது என்பதைப் பணிவுடன் இங்கே தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

NATARAJAN RAMASESHAN

unread,
Sep 12, 2025, 11:21:33 PMSep 12
to santhav...@googlegroups.com
சொல்லழகும், கருத்தாழமும் கொண்ட கலிவெண்பா
மிகவும் அருமை இமயவரம்பரே 

                   — தில்லைவேந்தன்


இமயவரம்பன்

unread,
Sep 12, 2025, 11:23:37 PMSep 12
to santhav...@googlegroups.com
அன்பான பாராட்டுக்கு மிக்க நன்றி, தில்லைவேந்தரே!

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Arasi Palaniappan

unread,
Sep 13, 2025, 12:01:45 AMSep 13
to சந்தவசந்தம்
கவிஞர் திரு இமயவரம்பன் அவர்கள் கவிதைக்குப் பின்னூட்டம் 

அற்புதம்!

ஓரெதுகை கொண்டே ஒருசீர் அருவியென
நீரோட்டம் பாய நிகழ்த்துகவி-சீரோட்டம்!
போராட்டம் காணவே பொங்கி எழ வைக்கின்ற
வேரோட்ட எண்ணம் வியப்பு!

அன்புடன் வாழ்த்தும்
அரசி. பழனியப்பன்


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

GOPAL Vis

unread,
Sep 13, 2025, 1:50:47 AMSep 13
to santhav...@googlegroups.com

இனியன் அவர்களின் பாடல் வேழத்தின் உத்வேகத்தை உசுப்பி விட்டதோ!! 

தன்னலச் சீழ் பிடித்துத்

தாயகம் சீர் குலைப்போர்

மென்னியைத் திருகிப் போட்டு

வேடிக்கை பார்த்திருப்பேன்

அப்பா! ஒளிந்து கொண்டிருக்கும் ஆதங்கம் சினமாய் வெடித்தது போலும்!!


நூற்றிலே ஒருவர் நெஞ்சில்

நொண்டுதல் நீக்கி விட்டால்

ஏற்றங்கள் சேரும்ஆமாம்,

இந்தியா வாழ்ந்து போகும்.

இந்தியா வாழ்ந்தி ருக்கும் என்னலாமோ?

கோபால்.


On Sat, Sep 13, 2025 at 1:44 AM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:
வினைசெய வாரீர் விரைந்தெனச் சொல்லி
நனிவிரைவுக்கோர் நாற்றினை நட்டார்


 

என்னுடை விருப்பம் போல

. . . .

என்னடா பேயாட்டங்கள் ,

இதுவா என் அன்னை பூமி?

 

ஒருவனின் குடும்பம் ஓங்க

ஊரினை எரிப்போன், இங்கே

பெரியவன் என்றால் அந்தப்

பேயினைப் பிய்த்துப் போட

வருகிற பாபம் இல்லை

. . . . 

 

பொய்யிலே உண்மைச் சாயம்

பூசினால் அதனைக் கண்டு

. . . .

நையவே புடைக்க வேண்டும்

நைக்கவும் தெரிய வேண்டும்.

 

. . . . 

 

. . . . . 

இலந்தை

 



On Thu, Sep 11, 2025 at 11:47 AM Govindaraju Arunachalam <agrp...@gmail.com> wrote:

சந்தவசந்தக் கவியரங்கம் 60

தலைப்பு:  போராட வாயிந்தப் போது

கவியரங்கத் தலைமை: கவிவேழம் இலந்தை ராமசாமி

படைப்பு : கருவூர் இனியன்

 

போராட வாஇந்தப் போதென எண்ணுக

சீராகப் பாட்டினைச் செய்கெனச் சொல்லிய

. . . . . 

GOPAL Vis

unread,
Sep 13, 2025, 2:21:24 AMSep 13
to santhav...@googlegroups.com
அற்புதமான ஓரெதுகை(/இன்னிசை)க் கலிவெண்பா!! பாராட்டுகள். புலமைத் திறம் பளிச்சிடும் பாடல். வாழ்த்துகள், திரு இமயவரம்பன்!

காராரும் வான்கீழ்க் கணக்கில் படிறியற்றிப்

போரார் பகைவளர்க்கும் பொய்யார்ந்த என்மனமே! 


என்று தீவழி சாரும் மனத்தை வெகுண்டழைத்து


ஈரார் உணர்வுடனும், ஏகாக் கிரத்துடனும்,

ஆரார் எதிர்த்தும் அசையா உரத்துடனும் 

. . . . . . . .பரவசப் பேரின்ப   )    

நீராட வா?


என்று பொலபொலென ஆசிகள் கொட்டி, வளம்பெற்று நல்வழி திரும்ப  அழைப்பதும்,


அன்றி நேற்றுனக்கு நேர்ந்ததையும்

நேரா ததையும் நினைந்து நினைந்துநிதம்

ஆராய்ந் தலசி அயர்ந்து புலனழிந்து     

. . . . . . 

தேரா மதியோடு தேயாத் துயரோடு

போராட வாஇந்தப் போது? 


என்று விரக்தியாய்ச் சாடி, தேரா மனத்தைப் போராடிக் கெட்டுப்போ என்று முனிந்து பேசுவதும் , அப்பப்பா! அருமை!

வாழ்த்திய வேகத்திலேயே சாடுகிற  பேச்சு! நீண்டு தொடர் வாக்கியங்கள்!  உணர்வைத் தொடும் சொற்றொடர்கள்! வியக்கிறேன்!


ஓராழ் பொருணர்த்த ஓதித் தெளிந்திந்தப்   (16)     - typo?


கோபால்.


On Sat, Sep 13, 2025 at 3:22 AM இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:
அழகிய கவிதையோடு என்னை அன்புடன் அழைத்தமைக்குக் கவிவேழம் இலந்தையார் அவர்களுக்கு மிக்க நன்றி!

---------------------------------------------------------------------

சந்த வசந்தக் கவியரங்கம் - 60

தலைப்பு -  போராடவா இந்தப் போது?

கவியரங்கத் தலைமை: கவிவேழம் திரு. இலந்தை ராமசாமி

நாள்: 12-செப்-2025


. . . . 


போராடவா இந்தப் போது?

(கலிவெண்பா)


வாரார் கடலுலகில் வானார் வளமனைத்தும்

கோராமல் நல்கிக் குறைதீர்த் தருள்புரியும்

. . . . 

Arasi Palaniappan

unread,
Sep 13, 2025, 2:23:45 AMSep 13
to சந்தவசந்தம்
அற்புதப் பின்னூட்டம் 

Govindaraju Arunachalam

unread,
Sep 13, 2025, 4:34:09 AMSep 13
to santhav...@googlegroups.com

இமயவரம்பன் யாத்த கவிதையை முக்காலும் படித்து வியந்தேன். எக்காலம் இப்படி எழுதுவது என நினைந்தேன்.

என்னைக் கவர்ந்த அடிகள் இவை.

நாரா யணனை நமக்கரித்தென் நன்னெஞ்சே

பேரா யிரம்பரவிப் பேசு. 

 

ஓராழித் தேரூரும் ஒண்கதிர்க்கு மின்மினிதான்

நேராகும் என்றே நினைத்து.

 

-கருவூர் இனியன்.

 

 


K.R. Kumar

unread,
Sep 13, 2025, 4:43:49 AMSep 13
to santhav...@googlegroups.com
அற்புதம் !! 

மிகச் சிறப்பான "எதுகை" அமைப்பு. MIND BLOWING

வாழ்க! வளத்துடன்!!

குமார்(சிங்கை)




--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

இமயவரம்பன்

unread,
Sep 13, 2025, 5:47:54 AMSep 13
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
ஆராத அன்பளித்தார் சீர்ப்பழனி யப்பரொரு
பாராட்டு வெண்பா பகர்ந்து.

மிக்க நன்றி, திரு. பழனியப்பன்!

இமயவரம்பன்

unread,
Sep 13, 2025, 6:18:35 AMSep 13
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
எனது கவிதையை ஆழ்ந்து நோக்கி அருமையான பின்னூட்டம் அளித்தமைக்கு மிக்க நன்றி, திரு. கோபால்!

“ஓராழ் பொருளுணர்த்த ஓதித் தெளிந்திந்தப்
பாரார் வெளிமுழுதும் ஓர்படித்தாப் பார்க்கும்” என்னும் அடிகளில் நான் சொல்லவந்த கருத்து இதுவே:

ஓராழ் பொருளுணர்த்த - இந்த நூல்களெல்லாம் ஆழமான கருத்துகளைப் பயிற்றுவிக்க

ஓதித் தெளிந்து - அவற்றைக் கற்றுத் தெளிவடைந்து அதனால் பிறக்கின்ற ஞானத்தைக் கொண்டு

இந்தப் பாரார் வெளிமுழுதும் ஓர்படித்தாப் பார்க்கும் - “இந்தப் பூமண்டலம் முழுவதும் ஒரே பார்வையாகப்” பார்க்கும்

இக்கருத்தைத் தெளிவுற உணர்த்த முடியாத எனது சிற்றறிவை மன்னித்து அருள்க!

இவ்வரிகளின் கருத்தோடு இக்கவிதையில் நான் சொல்ல முயன்ற மொத்தக் கருத்து:

இயற்கையோடும் உலகத்தினரோடும் ஒன்றுபட்டு உலக நலன் காத்து அன்பில் சிறந்து வாழாமல், பயனற்ற வாழ்க்கை வாழ்ந்து பகை வளர்க்கும் என் மனமே! இந்தக் கணமானது, ஆன்றோர் அளித்த நூல்களைக் கற்றுத் தெளிந்து அதனால் உலகம் முழுவதும் உனக்கு உறவாகக் கண்டு,  பேதங்கள் அற்று மகிழ்ந்து இருப்பதற்கா? அல்லது மருட்டும் நினைவுகளுடன் பகைமை உணர்வுடனும் போராடிச் சோர்ந்து போவதற்கா? - இதைச் சிந்தை செய்வாய்!

குறிப்பு:
 பாரார் வெளிமுழுதும் ஓர்படித்தாப் பார்க்கும்” என்னும் வரி தாயுமானவரின் இப்பாடல் வரிகளைத் தழுவி எழுதப்பட்டது:


“அண்ட பகிரண்டம் அனைத்தும் ஒரு படித்தாக்

கண்டவர் கண்ட திருக்காட்சியை”


மேலும், “இந்தப் பூமண்டலம் முழுவதும் ஒரே பார்வையாக”

என்னும் சொற்றொடர், தாயுமானவர் பாடலின் தாக்கத்தில் பாரதியே தனது கட்டுரை ஒன்றில் எழுதிய வாக்கியம்! 

இமயவரம்பன்

unread,
Sep 13, 2025, 6:23:25 AMSep 13
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மனத்திற்கு இனிய வாழ்த்துரை அளித்த இனியனாருக்கு மிக்க நன்றி!

நான் மிகவும் விரும்பி எழுதிய வரிகளும் இவையே! கவிதையை ரசித்துப் படித்தமைக்கு மீண்டும் நன்றி!

இமயவரம்பன்

unread,
Sep 13, 2025, 6:30:27 AMSep 13
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
அன்பான வாழ்த்துக்கு மிக்க நன்றி, திரு. குமார்!

திருமங்கை ஆழ்வார் அருளிச்செய்த “சிறிய திருமடல்” என்னும் பனுவலை இருபது வருடங்களுக்கு முன் படித்தபோது இதுபோல் ஒருநாள் எழுத முயலமாட்டோமா என்னும் ஏக்கம் பிறந்தது. இலந்தையார் அளித்த தலைப்பை ஈற்றடியாகக் கொண்டு அமைத்த இந்தக் கலிவெண்பாவால் அந்த விருப்பம் இன்று நிறைவேறியது எனக்கு மிக்க மனநிறைவைத் தருகிறது.

GOPAL Vis

unread,
Sep 13, 2025, 8:09:32 AMSep 13
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு இமயவரம்பன்.
ஒரு சிறிய தட்டச்சுப் பிழையைச் (பொருணர்த்த சுட்டினேன். பரிசாக அருமையான விளக்கங்களைப் பெற்றேன். உங்கள் சிந்தனையும் அதையொத்த சொல்லாட்சியும் அருமை!
கோபால்.
It is loading more messages.
0 new messages