நினைவு நாரில் கனவுப்பூக்கள்!

175 views
Skip to first unread message

Chandar Subramanian

unread,
Nov 30, 2011, 7:49:08 PM11/30/11
to santhav...@googlegroups.com

நினைவு நாரில் கனவுப்பூக்கள்!

 
சில்லெறிந்து நொண்டியிட்டுச்
 சிறுவரங்கு தாவுவார்!
மல்லிவிற்க என்னைமட்டும்
 மாட்டிவிட்ட பாவியார்?
 
நூலெடுத்து பள்ளிசெல்லும்
 நூறுமங்கை ஓங்குவர்!
நூலெடுத்துப் பூத்தொடுத்து
 நொந்துளத்துள் ஏங்குவேன்!
 
கல்விகற்கும் மாணவர்கள்
 கண்டுகொள்வர் சாத்திரம்!
முல்லைமல்லி கூவுகின்ற
 முறையெனக்கு மாத்திரம்!
 
மாலைதன்னில் நார்தொடுக்கும்
 மலரனைத்தும் ஓர்குலம்!
சாலைதன்னில் பூவிரிக்கும்
 சிறுமிமட்டும் ஓர்புறம்!
 
பூவளித்துக் கோவிலுக்குள்
 புண்ணியத்தைத் தேடுவர்!
பூவளிக்கும் என்தொழிலைப்
 பேரமாக்கிச் சாடுவர்!
 
பூக்குமுன்னர் தோளிலாடப்
 பூவைநாடும் ஆண்டவா!
பூக்குமுன்னர் வாடிநிற்கும்
 பூவைஉன்னை வேண்டவா? 
 
நல்லமுல்லை சேர்த்ததாலே
 நாரு(ம்)மணம் வீசிடும்!
கல்வியில்லை என்பதாலே
 காலமென்னை ஏசிடும்!
 
சோலைதந்த மலரெனக்குச்
 சொந்தமாகிப் போனது!
காலையென்ன? மாலையென்ன?
 கனவுவாழ்க்கை ஆனது!
 
போதையிலே தந்தையெனைப்
 போட்டுடைத்துப் போனதால்
பாதையிலே பூவிரிக்கும்
 பாடெனதாய் ஆனதோ?
 
பூத்தொடுக்கும் என்கரத்தில்
 புண்படிந்து போகுமோ?
காத்திருந்தும் வந்திடாது
 கல்விகானல் ஆகுமோ?
 
நினைவுநாரில் கனவுகட்டும்
 நிலைமைஎன்று மாறுமோ?
கனவுமாறிக் காட்சியாகிக்
 காணு(ம்)நெஞ்சம் ஆறுமோ?


--
அன்புடன்
சந்தர் சுப்ரமணியன்
www.MovingMoon.com

Pas Pasupathy

unread,
Nov 30, 2011, 8:05:13 PM11/30/11
to santhav...@googlegroups.com
அருமை!

2011/11/30 Chandar Subramanian <chandarsu...@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta



--

Subbaier Ramasami

unread,
Nov 30, 2011, 8:38:57 PM11/30/11
to santhav...@googlegroups.com
நினைவு நாரில் வாழ்வினை
நிகழ்த்துகின்ற பெண்மகள்
கனவு கூடக் காவியம்
கவிதை நல்ல ஓவியம்!
 
இலந்தை 
 
 


 
2011/12/1 Chandar Subramanian <chandarsu...@gmail.com>

Narayan Swaminathan

unread,
Nov 30, 2011, 9:13:06 PM11/30/11
to santhav...@googlegroups.com
சிறப்பான  கருத்துகள்,  சொல்லாட்சி, ஓட்டத்தோடு மிளிரும் அழகான கவிதை.

வாழ்த்துகள், பாராட்டுகள்.

சுவாமிநாதன்
லாஸ் ஏஞ்சலஸ்

2011/11/30 Chandar Subramanian <chandarsu...@gmail.com>

karthik emaya

unread,
Nov 30, 2011, 9:28:18 PM11/30/11
to santhav...@googlegroups.com
பூவளித்துக் கோவிலுக்குள் 
 புண்ணியத்தைத் தேடுவர்!
பூவளிக்கும் என்தொழிலைப் 
 பேரமாக்கிச் சாடுவர்!////////////////

எழுந்தவுடன் ஒரு நல்ல கவிதையை சுவாசித்து விட்டேன் ...

இன்றைய பொழுது அமோகமாக நடந்தேறும் ...
மெல்லிய வரிகள் ... ஆழமான சிந்தனை ....

இவண் ,
கார்த்திகேயன் .இ
9618950500

Siva Siva

unread,
Nov 30, 2011, 10:05:44 PM11/30/11
to santhav...@googlegroups.com
அழகிய கருத்து. அருமையான நடை!  6 மா + கூவிளம் என்ற எழுசீர் அமைப்பு என்று கருதுகிறேன்.
வாழ்க!

2011/11/30 Chandar Subramanian <chandarsu...@gmail.com>

நினைவு நாரில் கனவுப்பூக்கள்!

 
சில்லெறிந்து நொண்டியிட்டுச்
 சிறுவரங்கு தாவுவார்!
மல்லிவிற்க என்னைமட்டும்
 மாட்டிவிட்ட பாவியார்?

அங்கு*த்* தாவுவார்
 
நூலெடுத்து பள்ளிசெல்லும்
 நூறுமங்கை ஓங்குவர்!
நூலெடுத்துப் பூத்தொடுத்து
 நொந்துளத்துள் ஏங்குவேன்!

எடுத்து*ப்* பள்ளி
ஓங்குவார் என்று இருந்தால் இன்னும் ஒலி சிறக்கும் என்று தோன்றுகிறது.

 
 
கல்விகற்கும் மாணவர்கள்
 கண்டுகொள்வர் சாத்திரம்!
முல்லைமல்லி கூவுகின்ற
 முறையெனக்கு மாத்திரம்!
 
மாலைதன்னில் நார்தொடுக்கும்
 மலரனைத்தும் ஓர்குலம்!
சாலைதன்னில் பூவிரிக்கும்
 சிறுமிமட்டும் ஓர்புறம்!
 
பூவளித்துக் கோவிலுக்குள்
 புண்ணியத்தைத் தேடுவர்!
பூவளிக்கும் என்தொழிலைப்
 பேரமாக்கிச் சாடுவர்!

தேடுவார், சாடுவார் - இன்னும் ஒலி சிறக்கும் என்று தோன்றுகிறது.

 
பூக்குமுன்னர் தோளிலாடப்
 பூவைநாடும் ஆண்டவா!
பூக்குமுன்னர் வாடிநிற்கும்
 பூவைஉன்னை வேண்டவா? 

முன்னர்*த்* தோளில்
 
 
நல்லமுல்லை சேர்த்ததாலே
 நாரு(ம்)மணம் வீசிடும்!
கல்வியில்லை என்பதாலே
 காலமென்னை ஏசிடும்!

நாரும் மணம் வீசிடும்  - மா மா கூவிளம் என்ற அமைப்பு இங்கே பிறழ்கிறது. ஒலி மாறுகிறது.
நாரும் வாசம் வீசுமே
ஏசிடும் - ஏசுமே

 
சோலைதந்த மலரெனக்குச்
 சொந்தமாகிப் போனது!
காலையென்ன? மாலையென்ன?
 கனவுவாழ்க்கை ஆனது!
 
போதையிலே தந்தையெனைப்
 போட்டுடைத்துப் போனதால்
பாதையிலே பூவிரிக்கும்
 பாடெனதாய் ஆனதோ?

போதையிலே தந்தையெனைப் போட்டுடைத்துப் போனதால் - இதன் பொருள் எனக்குப் புரியவில்லை. ஒருவேளை புடைத்துவிட்டுப் போனார் என்ற பொருளா?

போதையிலே, பாதையிலே - இவ்விரண்டிடங்களிலும் மா மா அமைந்தால் ஒலி சிறக்கும் என்று தோன்றுகிறது. போதை தன்னில், பாதை தன்னில்.

பாதையிலே பூவிரிக்கும் பாடெனதாய் ஆனதோ -- பாதை தன்னில் பூக்க டையைப் பரப்பும் கோலம் ஆனதோ?


Kaviyogi Vedham

unread,
Dec 1, 2011, 12:02:54 AM12/1/11
to santhav...@googlegroups.com
ஆகா!..ஒர் சிறுமியின் ஏக்கத்தை என்ன அழகாய்ப் பதிவு செய்துவிட்டீர்!..படிக்கும் சிறுமிகளை இம்மாதிரி வேலை வாங்கும் கொடுமை இங்கே என்றுதான் ஒழியுமோ?
யோகியார்

2011/12/1 Chandar Subramanian <chandarsu...@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta



--
Can YU Pl. SEE MY NEW BloG and comment on the contents?
யோகியார். வேதம்.(Yogiyar vedham).
Thalaivar,
Sidhdhar Babaji YogaSram, 2/682,
 10th cross st,Renga Reddy garden, Neelankarai, Chennai-600115
அனைவரும் வாழ்க வளமுடன் நம் குரு சித்தர் பாபாஜி அருளால்!
சித்தர் ஸ்ரீ லஹரி பாபாஜி யோகாஸ்ரமம்,2/682Renga Reddy Garden நீலாங்கரை,(Opp. Hotchips new HOTEL)-சென்னை-600115(போன் 64565979)-
*****************************
 

Siva Siva

unread,
Dec 1, 2011, 12:09:28 AM12/1/11
to santhav...@googlegroups.com
அவர்களை வேலை வாங்கும் கொடுமை? அவர்கள் வேலை செய்து பிழைக்குமாறு வருத்தும் வறுமை?

2011/12/1 Kaviyogi Vedham <kaviyog...@gmail.com>

Dr Subramanian

unread,
Dec 1, 2011, 1:06:32 AM12/1/11
to santhav...@googlegroups.com
பள்ளி செல்லும் சிறுமிகளைப் பார்த்துப் பூ விற்கும் சிறுமி ஏக்கப்படவே வேண்டாம்.

பள்ளிச் சிறுமிகள் சிறகொடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டவர்கள்;வாழ்க்கைக்கு உதவாத பாடதிட்டம், வசதிக்கு வந்து போகும் ஆசிரியப் பணியாளர்கள், கற்பனைக்கும், வினாத்தொடுக்கும் ஆர்வத்துக்கும் எமனாகிப் போன  தேர்வு முறைகள், பூக்கூடையைவிட அதிகம் சுமை கொண்ட ஏட்டுச் சுரைக்காய் மூட்டைக் கூடுகள்; எதற்காக இதனைப் படிக்கிறோம் என்று யாரும் எடுத்துச் சொல்ல முடியாத பல பாடப் பகுதிகள், தொலைநோக்குப் பார்வையற்ற கல்வி முறைத் திட்டங்கள்... இன்னும் இப்படிப் பல; இது தவிர சுகாதாரமற்ற பள்ளிச் சூழல், சில இடங்களில் பள்ளியறைகளே கொள்ளியறைகளாகித் தீப்பிடித்த அவலங்கள்;

இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல், இப்போது மாணவியருக்குப் பேசவும், உரையாடவும், எழுதவும் புதிய முறைகளில் மென்திறப் பயிற்சி (soft skill) கொடுக்கிறோம் என்று அவர்கள் மாலை விளையாட்டு நேரங்களையும் பள்ளிகள் களவு கொண்டுவிட்டன.

வாழ்க்கைப் பாடங்களை வீதியிலேயே கற்றுக் கொள்கின்ற பூச் சிறுமியைப் பற்றி எனக்கு அக்கறையும் அனுதாபமும் இருக்கின்றதைப் போல, பள்ளியில் அடைபடும் சிறுமியரைப் பற்றியும் அதிகமாகவே இருக்கின்றது.

வவேசு

2011/12/1 Kaviyogi Vedham <kaviyog...@gmail.com>



--
Dr.V.V.Subramanian
Director,Phycospectrum Environmental Research Centre (PERC)
( A Unit of Phycospectrum Inc:)
52A,AK Block,7th Main Road,
Annanagar. Chennai, 600040
Land: 044-26208896
Mobile: 9381044470

akila ramasami

unread,
Dec 1, 2011, 1:24:16 AM12/1/11
to santhav...@googlegroups.com
கவிதை அருமை..
என் பெண்ணுக்கும் அர்த்தம் சொல்லி படித்துக் காட்டினேன்..
அகிலா ராமசாமி
 

 
2011/12/1 Chandar Subramanian <chandarsu...@gmail.com>

Chandar Subramanian

unread,
Dec 1, 2011, 8:22:30 PM12/1/11
to santhav...@googlegroups.com
கவிதையால் என்னை வாழ்த்திய திரு இலந்தையாருக்கும், கவிதையில் வந்த ஒற்றுப் பிழைகளை குறிப்பிட்ட திரு சிவசிவா அவர்களுக்கும் கருத்திட்ட எல்லோருக்கும் நன்றி.
 
திரு வாவேசு அவர்கள் குறிப்பிட்டபடி வசதியான சிறுவர்களை விட வசதியற்ற சிறுவர்கள் வாழ்க்கையின் போக்கை நன்கு உணர்கின்றனர் என்பது உண்மை. எனினும் பூ விற்கும் ஒரு சிறுமியின் ஒரு கண நேர நினைவை இந்த கவிதையின் சூழலாக அமைத்துத் தந்துள்ளேன். சூழற்கவிதை (situational poem) எனும்விதமாக இக்கவிதையைக் கொள்ளவும். கருத்துக்கு மிக்க நன்றி.
 


 
2011/12/1 akila ramasami <akilac...@gmail.com>

வித்யாசாகர்

unread,
Dec 2, 2011, 12:58:21 AM12/2/11
to santhav...@googlegroups.com
பூ வாங்கக் கேட்கும் சிறுமியின் குரலின் ஈரம் நம் விழியை நனைப்பதைவிட, இயன்றவரை அதுபோன்ற ஏழைமக்களுக்கு நம்மால் ஆன உதவியைச் செய்து அக்குழந்தைகளுக்கும் கல்வியை தருவோமென்று சிந்திக்கத் தக்க அழுத்தமான வரிகள். அவசியத்திற்குட்ப்பட்ட கவிதை. தங்களின் சமூகப் பார்வைக் கவிதைகளில் தெறிப்பதில் காலத்திற்குமான படைப்புக்கள் மிஞ்சட்டும் ஐயா. அருமை!

வித்யாசாகர்

2011/12/2 Chandar Subramanian <chandarsu...@gmail.com>



--
வித்யாசாகர்
------------------------------------------------------------------------
வலைதளம்: www.vidhyasaagar.com/about/
தொலைபேசி எண்: +965 67077302, +919790855594
விலாசம்:
11, சூர்யா தோட்டம், குதிரை குத்தி தாழை
மாதவரம் பால்பண்ணை, சென்னை, தமிழ்நாடு - 51
இயற்கையை காப்போம்; இயற்கை நம்மைக் காக்கும்!!

Chandar Subramanian

unread,
Dec 2, 2011, 8:12:36 PM12/2/11
to santhav...@googlegroups.com

திரு சிவசிவா எழுப்பிய ஒரு வினாவுக்கு விடையளிக்க மறந்து விட்டேன்.

போதையிலே தந்தையெனைப் போட்டுடைத்துப் போனதால் - இதன் பொருள் எனக்குப் புரியவில்லை. ஒருவேளை புடைத்துவிட்டுப் போனார் என்ற பொருளா?

மதுப்புட்டியை மகளாக ஏகதேசமாகப் பொருள்கொண்டு அமைத்த பாடல் இது.
 


 
2011/12/1 Siva Siva <naya...@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

Chandar Subramanian

unread,
Dec 2, 2011, 8:15:43 PM12/2/11
to santhav...@googlegroups.com

மழலையர் கவிதைகள்

 
1. கடற்கரை
 
என்றும் பல்லைக் காட்டிடும்
.. என்றன் செல்லப் பொம்மையே!
உன்றன் காதைத் தீட்டியே
.. உரைப்ப தெல்லாம் கேட்டிடு!
சென்ற வாரம் விடுமுறை!
.. சித்தி யோடு கடற்கரை
சென்று வந்த கதையெலாம்
.. சொல்ல வேண்டும் உன்னிடம்!
 
பிள்ளை யோடு பெரியரும்
.. பிரிய மாகக் கரைவரும்
வெள்ளை வண்ண அலைகளை
.. வியந்து நின்று பார்த்தனர்!
அள்ளி அள்ளி நீரினால்
.. அடித்துக் கொள்ளும் போக்கிலே
கொள்ளை இன்பம் கொண்டனர்!
.. கூடிக் குளித்து மகிழ்ந்தனர்!
 
தோலை நீக்கிப் பழமதைச்
.. சுவைக்கும் வேளை அலைகளென்
காலை அரித்து மணலினைக்
.. கடலெ டுத்துச் சென்றது!
கோலைத் தேடும் பாட்டிபோல்
.. குலைந்து நானும் விழுந்திட
நீலச் சட்டை யாவிலும்
.. நிறைய ஈரம் ஆனதே!
 
கெஞ்சி நின்ற பொம்மையே!
.. கோபம் என்ன? நீரினால்
பஞ்சு கொண்ட உன்னுடல்
.. பாழ டைந்துப் போய்விடும்!
மஞ்சள் வண்ணம் யாவுமே
.. மறைந்து போகும் என்பதால்
அஞ்சி அன்று கடற்கரை
.. அழைத்துச் செல்ல வில்லைநான்!
 
2. ஊட்டி
 
ஊட்டிக்கு நானும் ஒருநாள் வந்தேன்,
.. வெய்யில் விடுமுறையில்!
போட்டிக்கு நிற்கும் வீரர் போலே
.. புகையாய் மேகங்கள்!
வீட்டுக்குப் போக வேகங் காட்டி
.. விரையும் காகங்கள்!
பாட்டுக்குத் தாளம் போட்டு நிற்கும்
.. பற்கள் குளிர்மழையில்!
 
யானைக்கும் இறக்கை வைத்தாற் போலே
.. எத்தனை மேகங்கள்?
வானுக்கும் இன்று விடுமுறை தானா?
.. வருதே வலமிங்கே!
தேன்விற்கும் கடையைத் தேடிப் பூவைச்
.. சேரும் வண்டிங்கே!
மானுக்குக் கொஞ்சம் குளிரெடுக்காதா?
.. மாற்றாய் உடையெங்கே?
 
3. குடை
 
கொட்டும் மழையில் குடையை ஏந்திக்
கூடம் செல்கின்றேன்! - பள்ளிக் கூடம் செல்கின்றேன்!
சொட்டும் துளிகள் தோளை நனைக்கும்
தொல்லை இலையென்றேன் - மழையால் தொல்லை இலையென்றேன்!
 
வட்டத் துணியின் வண்ணக் குடையில்
வளைந்த பிடியுண்டு! - குடையில் வளைந்த பிடியுண்டு!
இட்டப் படிநான் ஆட்டக் குடையில்
இனிப்பாய் நீர்சிந்தும்! - தலைமேல் இனிப்பாய் நீர்சிந்தும்!

sk natarajan

unread,
Dec 2, 2011, 8:43:37 PM12/2/11
to santhavasantham, Chandar Subramanian
அருமை

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.com/  
குழுமம்    :  தமிழ் சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்



2011/12/1 Chandar Subramanian <chandarsu...@gmail.com>

நினைவு நாரில் கனவுப்பூக்கள்!

akila ramasami

unread,
Dec 3, 2011, 2:50:44 AM12/3/11
to santhav...@googlegroups.com
.. கோபம் என்ன? நீரினால்
பஞ்சு கொண்ட உன்னுடல்
.. பாழ டைந்துப் போய்விடும்!
மஞ்சள் வண்ணம் யாவுமே
.. மறைந்து போகும் என்பதால்
அஞ்சி அன்று கடற்கரை
.. அழைத்துச் செல்ல வில்லைநான்!
 
சமாதானம் சொல்லும் விதம் அழகோ அழகு..
அன்புடன்
அகிலா ராமசாமி
 

 

2011/12/3 Chandar Subramanian <chandarsu...@gmail.com>

thangamani

unread,
Dec 3, 2011, 6:40:24 AM12/3/11
to சந்தவசந்தம்
சந்தரின் பார்வையில் படுபவையெல்லாம்
முத்தான கவிதைகளாய் மிளிர்கின்றன!
இரசிப்பதோடு சிந்திக்க வைக்கும் கவிதைகள்!
மழலையர் கவிதைகள் அழகு!
நாமும் குழந்தையாக மாறிடுவோம்!
பாராட்டுகள் சந்தர்!

அன்புடன்,
தங்கமணி.

On Dec 1, 5:49 am, Chandar Subramanian <chandarsubraman...@gmail.com>
wrote:
> *நினைவு நாரில் கனவுப்பூக்கள்!*

Chandar Subramanian

unread,
Dec 3, 2011, 8:08:05 PM12/3/11
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி அம்மா. எல்லோரும் குழந்தைகள் தாம். வாழ்க்கை என்னும் பொம்மையை வைத்துக்கொண்டு விளையாடிக் கொண்டிருக்கின்றோம், என்ன செய்வதென்று தெரியாமலே!
 


 
2011/12/3 thangamani <tvthan...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

Siva Siva

unread,
Dec 3, 2011, 8:16:47 PM12/3/11
to santhav...@googlegroups.com
அழகிய குழந்தைப்பாடல். வாழ்க!

2011/12/2 Chandar Subramanian <chandarsu...@gmail.com>

/நீலச் சட்டை யாவிலும்.. நிறைய ஈரம் ஆனதே! /

யாவிலும்?
"நீலச் சட்டை எங்கணும்.. நிறைய ஈரம் ஆனதே" என்பது பொருந்துமோ?
 
 
கெஞ்சி நின்ற பொம்மையே!
.. கோபம் என்ன? நீரினால்
பஞ்சு கொண்ட உன்னுடல்
.. பாழ டைந்துப் போய்விடும்!
மஞ்சள் வண்ணம் யாவுமே
.. மறைந்து போகும் என்பதால்
அஞ்சி அன்று கடற்கரை
.. அழைத்துச் செல்ல வில்லைநான்!

/கெஞ்சி நின்ற பொம்மையே!
.. கோபம் என்ன? நீரினால் /

மோனை அமைந்தால் இன்னும் இவ்வடி சிறக்கும்.
உதாரணமாக:
"கொஞ்சு வேனே உன்னைநான்;
.. கோபம் ஏனோ? நீரினால்"

 

Chandar Subramanian

unread,
Dec 4, 2011, 7:11:41 PM12/4/11
to santhav...@googlegroups.com

கருத்துகளுக்கு மிக்க நன்றி.
1)


/நீலச் சட்டை யாவிலும்.. நிறைய ஈரம் ஆனதே! /
யாவிலும்?
"நீலச் சட்டை எங்கணும்.. நிறைய ஈரம் ஆனதே" என்பது பொருந்துமோ?

நீங்கள் குறிப்பிட்ட சொல் பொருந்துகிறது. ஆயினும் மழலைப் பாடல் என்பதால் அப்படியே விட்டுவிடுகிறேன்.

2)

/கெஞ்சி நின்ற பொம்மையே!
.. கோபம் என்ன? நீரினால் /
மோனை அமைந்தால் இன்னும் இவ்வடி சிறக்கும்.

சூழலைச் சொல்லவேண்டியிருந்ததால் கொஞ்சி என்ற வார்த்தையைவிட கெஞ்சி என்பது பொருத்தமாக இருக்கும் என்றே விட்டுவிட்டேன்.

3)

.. கோபம் ஏனோ? நீரினால்"
'என்ன' என்னும் பயன்பாடு அந்த விருத்தத்தின் மற்ற அடிகளின் அதே சீரில் அமைந்திருந்ததால் பயன்படுத்தினேன். 'என்ன' 'ஏதோ' என்ற சொற்களின் பயன்பாட்டில் வேறுபாடேதும் உண்டா?


 
2011/12/4 Siva Siva <naya...@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

Chandar Subramanian

unread,
Dec 4, 2011, 7:15:44 PM12/4/11
to santhav...@googlegroups.com

ஒரு போன்சாய் மரத்தின் புலம்பல்...

 
சொல்லாய்ச் சுருங்கிய காவியம்நான்! - நீர்த்
.. துளியாய் ஒடுங்கிய நீள்கடல்நான்!
புல்லாய்ப் பிறழிய மூங்கில்நான்! - சிறு
.. போன்சாய் வடிவில் பெருமரம்நான்!
 
தோப்பைத் துறந்த குறுமுனிநான்! - சிறு
.. தொட்டி உலகதன் சோதனைநான்!
மூப்பில் குறுகும் முரண்மரம்நான்! - என்
.. முகத்தை மறந்த முகவரிநான்!
 
உள்ளத் தெழுந்திடும் ஆசையினால் - என்
.. உருவைக் குறைக்க நினைத்தவர்யார்?
கள்ளத் தனமிது! காழ்ப்புடனே - என்
.. காயத் தழகைக் கரைத்தவர்யார்?
 
தொப்புள் கொடியை அறுத்தவர்யார்? - மண்
.. தொடர்வேர் அறுத்த சிறுமகன்யார்?
தப்பாய் உருவை எனக்களித்து - அதைச்
.. சாதனை என்று நினைப்பதுயார்?
 
புதுமை படைக்கும் துணிவிருப்பின் - உம்
.. புறத்தார் கரத்தை உடைத்தெடுங்கள்!
நிதம்உம் நகங்கள் பிரித்தெடுங்கள்! - அதில்
.. நிம்மதி பெற்று நெகிழ்ந்திருங்கள்!
 
இயற்கை அமைத்த உலகமிது! - பங்(கு)
.. இணையாய் எனக்கும் இருக்கிறது!
செயற்கை அழகால் எனைச்சிதைக்கும் - விதி
.. செய்து தருபவர் யாருமக்கு?
 
தென்றலின் ஓவியம் தீட்டிவிட - என்
.. தூரிகை என்னும் கிளையுமிலை!
அன்னையின் தோளைத் தழுவிடவோ - என்
.. ஆசையின் நீளமவ் வேருமிலை!
 
பொய்யாய் உருவம் வளர்கிறது! - எனைப்
.. போன்றே அதுவும் தெரிகிறது!
மெய்யாய் உணர்வே இருக்கிறது! - வேர்
.. மேனி குறுகிக் கிடக்கிறது!
 
ஆசை அறுத்திடும் போதனையை - மரம்
.. அமைத்த நிழலில் அவன்பெற்றான்!
காசினி இன்னமும் கற்கவிலை! - என்
.. காலம் முழுதும் அதற்குவிலை! 

akila ramasami

unread,
Dec 5, 2011, 3:15:33 AM12/5/11
to santhav...@googlegroups.com
தொப்புள் கொடியை அறுத்தவர்யார்? - மண்
.. தொடர்வேர் அறுத்த சிறுமகன்யார்?
தப்பாய் உருவை எனக்களித்து - அதைச்
.. சாதனை என்று நினைப்பதுயார்?
வலியையும் வேதனையும் அழகாக சொல்லி விட்டீர்கள்.
அன்புடன்
அகிலா ராமசாமி
 


 
2011/12/5 Chandar Subramanian <chandarsu...@gmail.com>

sk natarajan

unread,
Dec 5, 2011, 8:38:29 AM12/5/11
to santhavasantham, Chandar Subramanian
அருமை  ஐயா

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.com/  
குழுமம்    :  தமிழ் சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்



2011/12/5 Chandar Subramanian <chandarsu...@gmail.com>

ஒரு போன்சாய் மரத்தின் புலம்பல்...

Chandar Subramanian

unread,
Dec 6, 2011, 7:38:08 PM12/6/11
to santhav...@googlegroups.com

சோர்வறு நெஞ்சே!

 
நாள்களை விழுங்கி நடக்கும் உடலம்!
தோள்களில் தொங்கித் தொடரும் சூன்யம்!
தோற்றம் எங்கே? தொடுமிலக் கெங்கே?
சாற்றும் நிலையில் சான்றுகள் இல்லை!
விரித்த கண்ணிலும் வெறுமைச் சித்திரம்!
கரிய இரவின் கற்பனை வெளிச்சம்!
உடலோ லுயிரும் உணர்விவை மூன்றும்
கடக்கும் திசைகள் காட்சிகள் வேறு!
நொடிகளை நகர்த்தும் நுட்பம் ஒன்றே
மடிதவழ் நாள்முதல் மனது கற்றது!
உயிரின் இலக்கென ஒன்றே உண்டாம்,
துயிலோ டுயிர்ப்பின் தொடர்கதை மீட்டல்!
உணர்வ தென்றும் உழலும் இயல்பால்
கணம்கணம் நெஞ்சைக் கணக்கச் செய்யும்!
உயிரின் வழிசெல் உடலை உணர்வோ
அயரா தசைத்தும் அலைத்தும் பிரிக்கும்!
மாறா தோங்கும் மாண்புடை உயிரும்
ஆறாய் உணர்வா லாடும் உடலும்
கூறாய் இருநிலை கொள்ளும் உணர்வும்
வேறாய்ச் செல்லும்; விளைவுகள் வெவ்வேறே!
உயிரின் பாதை உணர்ந்து நெஞ்சம்
அயரா துடலை அதன்கண் செலுத்த
மூன்றின் முன்னர் முழுமை இலக்கு
தோன்றும் ஒன்றாய்! சோர்வறு நெஞ்சே!

sk natarajan

unread,
Dec 6, 2011, 7:53:02 PM12/6/11
to santhav...@googlegroups.com
மூன்றின் முன்னர்
இதன்  பொருள்  என்ன  ஐயா

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.com/  
குழுமம்    :  தமிழ் சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்



2011/12/7 Chandar Subramanian <chandarsu...@gmail.com>

Chandar Subramanian

unread,
Dec 6, 2011, 7:55:08 PM12/6/11
to santhav...@googlegroups.com
பாடலில் சொல்லப்படும் உயிர், உடல் மற்றும் உணர்வு என்னும் மூன்றும்.

2011/12/7 sk natarajan <sknatar...@gmail.com>

sk natarajan

unread,
Dec 6, 2011, 7:59:46 PM12/6/11
to santhav...@googlegroups.com
அருமையான  கவிதை  ஐயா

Chandar Subramanian

unread,
Dec 8, 2011, 9:06:10 PM12/8/11
to santhav...@googlegroups.com

பாரத விடியலில் பாரதி
(காவடிச் சிந்து)

 
1) தேசீயம்
 
நாடெனும் நினைவுகொன்றுக் காடுறை விலங்குபோன்று
.. நாணமின்றி வாழ்ந்துவந்த போது! - அன்று
.. நாயகமாய் அடிமையெனும் தீது!
சாடிடும் கவிதைகொண்டு மூடிய தளைகள்வென்று
.. சாதனைகள் செய்பவர்தாம் ஏது? - அதைத்
.. தத்தெடுத்தோன் பாரதியென் றொது!
ஏடிடும் எழுத்துகண்டு கூடிடும் உணர்ச்சிஎன்ற
.. எண்ணமுடை வெள்ளையரின் ஆட்சி! - அதில்
.. எழுந்ததுகாண் பாரதியின் மாட்சி!
சூடுடை உரைகள்கொண்டு மூடிடும் இருளைவென்று
.. தோற்றுவித்தான் விடியலெனும் காட்சி! - நாம்
.. துய்க்குமிந்த விடுதலையே சாட்சி!
 
 
2) சமூகம்
 
ஆதியை மறந்துழன்றுச் சாதியால் பிரிந்துநின்ற
.. ஆணவத்தில் அன்றுலகின் போக்கு! - அது
.. ஆண்டவனின் ஆணையெனும் சாக்கு!
நீதியை நிறுத்துகின்ற போதனை சமைத்துநின்ற
.. நீசர்களை இரையிட்டான் தீக்கு! - அவன்
.. நேசமென்னும் நிச்சயத்தின் வாக்கு!
வீதியில் நடக்குமிந்த வேதனை துடைக்கவந்த
.. வித்தகஞ்செய் பாரதியின் பாப்பூ! - அதை
.. விளைவிக்கும் அன்புமரப் பூப்பு!
சோதியைப் பரப்பியெங்கும் மோதிடும் இருள்விரட்டத்
.. தொடங்கியதே சமத்துவத்தின் மீட்பு! - அவன்
.. துண்டமிலா மானுடத்தின் காப்பு!
 
 
3) பெண்ணியம்

 
பெண்களைப் பிரித்துவைக்கும் வன்மையைத் தரித்துநின்ற
.. பேய்களவை வாழ்ந்துவந்த காலம்! - அன்று
.. பேரொலியாய்ப் பெண்மையிடும் ஓலம்!
கண்களாய் இணைந்திருந்தும் பெண்களைத் தனித்தழிக்கும்
.. காரணத்தைக் கேட்டவன்றன் சீலம்! - அது
.. கால்பதித்தப் பாதைசெல்லும் ஞாலம்!
கண்ணனை நினைத்திருந்த பெண்ணவள் உளம்நுழைந்துக்
.. கண்டெடுத்தான் பாஞ்சாலிப் பாட்டு! - பெண்
.. காழ்ப்புமிகு கயவருக்கு வேட்டு!
விண்ணினை உடைத்துநின்ற உண்மையை உணர்த்துகின்ற
.. விதத்தமையும் சக்திசிவக் கூட்டு! - பெண்மை
.. விளக்குமவன் கவிதைவிளை யாட்டு!

Dr Subramanian

unread,
Dec 8, 2011, 9:16:49 PM12/8/11
to santhav...@googlegroups.com

அன்பு சந்தர்
வரிகளில் மோனை அமைந்ததைப் போல், அசையும் ஒத்திருத்தல் நலம் ."எழுந்தது காண்" "விதத்தமையும்"  போன்ற இடங்கள் இதனால் கொஞ்சம் நடை ஓட்டத்தைத் தடை செய்கின்றது.கவனிக்கவும்.
வவேசு

2011/12/9 Chandar Subramanian <chandarsu...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta



--

வித்யாசாகர்

unread,
Dec 8, 2011, 11:46:14 PM12/8/11
to santhav...@googlegroups.com
//ஆதியை மறந்துழன்றுச் சாதியால் பிரிந்துநின்ற
.. ஆணவத்தில் அன்றுலகின் போக்கு! - அது
.. ஆண்டவனின் ஆணையெனும் சாக்கு//

//நீதியை நிறுத்துகின்ற போதனை சமைத்துநின்ற

.. நீசர்களை இரையிட்டான் தீக்கு! - அவன்
.. நேசமென்னும் நிச்சயத்தின் வாக்கு//

//கண்களாய் இணைந்திருந்தும்
பெண்களைத் தனித்தழிக்கும்//

மிக சக்திமிகுந்த வரிகள் அய்யா. உங்கள் கவிதைகளைப் படிப்பது கூட அக்கவிதைக்குத் தக்க ஒரு பாடம் படித்ததற்குச் சமம்தான். அதனால்தான் தனித்துக் கிடைக்கும், புத்தி ஏற்கும் நேரத்தில் மட்டுமே படிக்க வாய்ப்பேற்கிறேன். ஆயினும் தங்களின் இந்த தலைப்பினை மட்டும் அவ்வப்பொழுது காண்கையில் மீண்டும் மீண்டும் படித்துக் கொள்வேன். // நினைவு நாரில் கனவுப்பூக்கள்// கவித்துவம் நிறைந்த தலைப்பு.

தங்களுக்கு நீண்ட ஆயுள் கிடைத்து' நல்ல பல வளங்களும் வந்து சேரட்டும், போதுமான உடல்நலம் நிறைவாய் வாய்க்கட்டும், தமிழுக்கு அரியப் பல அரும்பாக்கள் உங்களாலும் கிடைக்கப் பெறட்டும். இறைநிலை அதற்கு துணை இருக்கட்டும்!

நன்றியும் வணக்கமும்.. நிறைய மதிப்பும் அய்யா!!


வித்யாசாகர்


2011/12/9 Chandar Subramanian <chandarsu...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta



--

Kaviyogi Vedham

unread,
Dec 9, 2011, 6:37:17 AM12/9/11
to santhav...@googlegroups.com
போன்சாய்..
உன் அழகிய பாடல்..
ரொம்ப அற்புதம்..
 இந்தப் புதிய தலைப்பில் போன வருடமே(என் நண்பன் நாகராஜன் வீட்டில் 3 போன்சாய்த் தொட்டிகளைப்பார்த்து வருந்தி எழுத நினைத்து மறந்தே போன தலைப்பு இது)
 ரொம்ப அற்புதமா.ய் வரிகளைக் குறுக்கி..இல்லை இல்லை செதுக்கியுள்ளாய்!..
 நினைத்து நினைத்து மகிழ்ந்தேன்..வாழ்க நீ!..உன் கவி..
யோகியார்

Chandar Subramanian

unread,
Dec 11, 2011, 7:31:31 PM12/11/11
to santhav...@googlegroups.com

பாரதி என்னும் ஜீவநதி

 
கல்லில் துளிர்த்த நீர்முத்து - அவன்
.. கற்பனைத் திறத்தில் ஓர்சித்து!
சொல்லாய்த் துளிகள் படர்ந்துவரும்! - அதன்
.. தொகையாய் ஊற்று தொடர்ந்துவரும்!
நில்லாப் பொழிவாய்ப் பாவோடும்! - அது
.. நிலத்தை அளக்கும் நீரோடை!
எல்லாக் கவியும் மேவும்புவி! - அதில்
.. எங்கும் பாரதி ஜீவநதி!
 
நிதமும் கோடி சமைக்கின்றான் - அவன்
.. நினைப்பில் கவிதை அமைக்கின்றான்!
விதமாய் இன்பம் விளைக்கின்றான் - அதன்
.. விளைவில் மகிழ்ந்து திளைக்கின்றான்!
பதமாய்ப் பக்தி படைக்கின்றான்! - மிகப்
.. பரிவாய்த் துயரம் துடைக்கின்றான்!
இதயக் கூட்டைக் குடைகின்றான்! - எனை
.. என்னுள் வைத்தே உடைக்கின்றான்!
 
இசைஆர் வீணை தானென்றான் - மதி
.. இசையாப் போதில் வீணென்றான்!
விசையால் நெஞ்சை மீட்டுகிறான்! - புது
.. விதமாய்த் திறனை ஊட்டுகிறான்!
பசியால் அறிவை ஏற்கின்றான்! - விதை
.. பார்த்துப் பார்த்துச் சேர்க்கின்றான்!
அசைவில் ஆயிரம் ஊன்றுகிறான்! - இவன்
.. 'அவனோ' எனும்போல் தோன்றுகிறான்! 
 
மூச்சை நிறுத்த விழைகின்றான்! - அது
.. மோகம் தடுக்கும் வழியென்றான்!
பேச்சார் தேகம் வீணென்றான்! - அதில்
.. பொய்யாய்ச் சிந்தனை ஏனென்றான்!
வீச்சில் விந்தை புரிகின்றான்! - புது
.. விதமாய் விதைகள் தருகின்றான்!
பூச்சும் திரையும் ஒழியென்றான்! நம்
.. புலனில் தூய்மை வழியென்றான்!
 
வற்றிக் கிடந்த தமிழதிலே - அவன்
.. வழங்கிச் சென்றான் அமுதமழை!
தொற்றித் தொடரும் தொடர்கதையாம்! - அதன்
.. தோற்றம் கண்ட இவன்விதையாம்!
கற்றும் கரையாப் பெருஞ்செல்வம்! - அது
.. காற்றில் வளரும் தீவெள்ளம்!
முற்றுப் பெறாத நாதகதி! - அவன்
.. முடியாப் பொருள்ஆர் ஜீவநதி!

Ganapathy SankaraSubramanian

unread,
Dec 11, 2011, 10:19:56 PM12/11/11
to santhav...@googlegroups.com
அன்புள்ள திரு.சந்தர் சுப்பிரமணியன் அவர்களுக்கு,

பாரதி எனும் ஜீவ நதி மிகவும் அற்புதமான கவிதை.இனி உங்களைச் சந்த
சுப்பிரமனியன் என்று அழைக்கலம் என்று நினைக்கிறேன்.
அன்புடன்,
கோ.கணபதி

On 12/12/11, Chandar Subramanian <chandarsu...@gmail.com> wrote:
> *பாரதி என்னும் ஜீவநதி*

துரை.ந.உ

unread,
Dec 11, 2011, 10:28:58 PM12/11/11
to santhav...@googlegroups.com

வாழ்க ஐயா ........
ஒவ்வோர் எழுத்தும் பாடம் எனக்கு ....

2011/12/12 Ganapathy SankaraSubramanian <ganapathysank...@gmail.com>



--
 இனியொரு விதி செய்வோம்
                 - ”இனியாவது செய்வோம்” -
                           .துரை.ந.உ         
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.com
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.com
படம்         : ‘எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.com/
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.com/
ஹைகூ   : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவு        : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதை        : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
குழுமம்:'தமிழ்த்தென்றல்':http://groups.google.co.in/group/thamizhthendral

Kaviyogi Vedham

unread,
Dec 11, 2011, 10:30:10 PM12/11/11
to santhav...@googlegroups.com, Venkateswaran T A
மிக மிக அற்புதமான வரிகள் உடைய நற்கவிதை மகுடம் இது சந்தர். சப்பாஷ்!
இதை நேற்று வானவில் பாரதி அரங்கில் படித்தாயோ..?
 யோகியார்

2011/12/12 Chandar Subramanian <chandarsu...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta



--
Can YU Pl. SEE MY NEW BloG and comment on the contents?
யோகியார். வேதம்.(Yogiyar vedham).
Thalaivar,
Sidhdhar Babaji YogaSram, 2/682,
 10th cross st,Renga Reddy garden, Neelankarai, Chennai-600115
அனைவரும் வாழ்க வளமுடன் நம் குரு சித்தர் பாபாஜி அருளால்!
சித்தர் ஸ்ரீ லஹரி பாபாஜி யோகாஸ்ரமம்,2/682Renga Reddy Garden நீலாங்கரை,(Opp. Hotchips new HOTEL)-சென்னை-600115(போன் 64565979)-
*****************************
 

Chandar Subramanian

unread,
Dec 12, 2011, 8:23:19 PM12/12/11
to santhav...@googlegroups.com
வாழ்த்துக்கு மிக்க நன்றி. இது மத்திய கைலாஷ் கோயிலில் சென்ற வாரம், திரு பாரதி சுராஜ் அவர்களின் தலைமையில் நடந்த அரங்கில் பாடியது.
 


 
2011/12/12 Kaviyogi Vedham <kaviyog...@gmail.com>

Kaviyogi Vedham

unread,
Dec 12, 2011, 11:40:27 PM12/12/11
to santhav...@googlegroups.com
நன்றி சந்தர்..
 யோகியார்

2011/12/13 Chandar Subramanian <chandarsu...@gmail.com>

Chandar Subramanian

unread,
Dec 13, 2011, 7:35:26 PM12/13/11
to santhav...@googlegroups.com

குன்றிலே விளக்கெரிந்தால்!

 
மன்றிலே நிழலைக் காட்டி
.. மயக்கிடும் நடிகர் கூட்டம்!
சென்றவர் படத்தைப் பாலால்
.. திருமுழுக் காட்டும் போதும்
நின்றழும் குழவிக் கூட்ட
.. நெஞ்சிலே ஈரம் இல்லை!
குன்றிலே விளக்கெ ரிந்தால்
.. குடிசையின் இருளா மாறும்?
 
நன்றிசொல் தொண்டன் ஆகி
.. நாயகன் கட்சிக் கூட்டம்
சென்றொரு துண்டைத் தோளில்
.. சேர்த்தவர் காலில் வீழ்வோன்,
கன்றெனத் தன்னைப் பெற்றோன் 
.. காலடி மறந்த தேனோ?
குன்றிலே விளக்கெ ரிந்தால்
.. குடிசையின் இருளா மாறும்?
 
முன்றிலை மூடி விட்டு
.. முகத்திரை அணிந்து நெஞ்சுள்
அன்றென அறிந்தும் வஞ்சம்
.. அளித்தஅச் செல்வத் தாலே
அன்னவன் அமையும் கோவில்
.. ஆக்கிடும் எண்ணம் ஏனோ?
குன்றிலே விளக்கெ ரிந்தால்
.. குடிசையின் இருளா மாறும்?
 
தன்னுளத் துயர்வு வேண்டின்
.. தானெனும் அகந்தை மாய்க்க!
பொன்வளம் பதவி போகம்
.. புகழெனும் மாயை எல்லாம்
முன்னுளோர் நோக்கும் நோக்கின்
.. முறையெழும் எண்ணத் தாலே!
குன்றிலே விளக்கெ ரிந்தால்
.. குடிசையின் இருளா மாறும்?
 
வன்மனம் காட்டும் போக்கில்
.. வாழ்ந்திடும் வாழ்க்கை கொண்டு
தன்னிமை மூடிக் கொண்டு
.. தான் தரும் தத்து வத்தை
முன்னுளோர் எற்க வேண்டி
.. முறையிடல் தகுந்த தன்று!
குன்றிலே விளக்கெ ரிந்தால்
.. குடிசையின் இருளா மாறும்?

Dr Subramanian

unread,
Dec 13, 2011, 8:03:39 PM12/13/11
to santhav...@googlegroups.com

குன்றிலே விளக்கெ ரிந்தால்
.. குடிசையின் இருளா மாறும்?
 என்பது ஒரு சிறந்த சிந்தனை ஓட்டம். முழுக் கவிதையுமே அழகு.
வவேசு
2011/12/14 Chandar Subramanian <chandarsu...@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta



--

Kaviyogi Vedham

unread,
Dec 13, 2011, 10:31:15 PM12/13/11
to santhav...@googlegroups.com
ஆம்.. ஒரு நல்ல கவி படித்த நிறைவு..வாழ்க!
யோகியார்

2011/12/14 Dr Subramanian <vav...@gmail.com>



--

Balasubramanian N.

unread,
Dec 14, 2011, 2:55:53 PM12/14/11
to santhav...@googlegroups.com
ஐயா, உமக்குக் கவிஞப் பட்டம் பெறவேண்டும் என்றோராசையுண்டோ? எனில் -
இனிக் கவிதையெழுதவேண்டாம். ....... ஆம்! அவசியமில்லை - இந்த ஒரு கவிதையாலேயே மா....பெருங்....கவிப்பட்டம் சூடிவிட்டீர்!
 
நகுபோலியன்
[ மிச்சத்தைப் பின் சொல்வேன் அடுத்த மெயிலில்! ]
11/12/13 Chandar Subramanian <chandarsu...@gmail.com>

Kaviyogi Vedham

unread,
Dec 14, 2011, 11:10:08 PM12/14/11
to santhav...@googlegroups.com
ஓ..பயந்துவிட்டேன் பாலு சார்!
யோகியார்
2011/12/15 Balasubramanian N. <n.balasu...@gmail.com>
ஐயா, உமக்குக் கவிஞப் பட்டம் பெறவேண்டும் என்றோராசையுண்டோ? எனில் -
இனிக் கவிதையெழுதவேண்டாம். ......!
 
நகுபோலியன்

kargil jay

unread,
Dec 15, 2011, 7:53:17 AM12/15/11
to சந்தவசந்தம்
முத்தான கவிதை சந்தர்.
நன்றி
கார்கில் ஜெய்

On Nov 30, 7:49 pm, Chandar Subramanian <chandarsubraman...@gmail.com>
wrote:
*நினைவு நாரில் கனவுப்பூக்கள்!*

VETTAI ANANTHANARAYANAN

unread,
Dec 15, 2011, 12:07:12 PM12/15/11
to santhav...@googlegroups.com
சந்தரின் கவிதைகள் அனைத்துமே நன்முத்துக்கள். என்னை மிகவும் கவர்ந்த கவிஞர்களுள் இவரொருவர்.  

அனந்த்  

2011/12/14 Dr Subramanian <vav...@gmail.com>

Chandar Subramanian

unread,
Dec 15, 2011, 7:59:36 PM12/15/11
to santhav...@googlegroups.com
கருத்திட்ட அனைவருக்கும் என் நன்றி.

2011/12/15 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

Chandar Subramanian

unread,
Dec 15, 2011, 8:00:27 PM12/15/11
to santhav...@googlegroups.com

பைந்தமிழ்ப் பூவனம்

 
ஊதுமிதழ் நாட்டியத்தில் ஒலிகொடுக்கும் வேய்ங்குழல்!
போதிலமர் வண்டினங்கள் புகுந்தருந்தும் தேன்துளி!
ஆதிமுதல் மானுடத்தின் அகமுரைக்கும் சாதனம்!
மூதுலகின் மொழிவகையில் முகிழ்த்தெழுந்த பூந்தமிழ்!
 
பாலமன்ன காலிணைக்கும் பைந்தமிழின் பாவளம்,
சீலமுள்ள பாவலர்கள் சேர்த்துவைக்கும் சீதனம்!
ஞாலமுள்ள நாள்வரைக்கும் நாநடத்தும் நாட்டியம்!
காலவெள்ளம் கண்டெடுத்த கானகத்துப் பூவனம்!
 
பூவினங்கள் காய்கனிகள் போதிலுறை தூய்மது
காவியங்கள் காப்பியங்கள் கவிதைபாடல் ஆனவே!
நாவிலின்பம் நெஞ்சிலின்பம் நாம்நினைக்கும் போதெலாம்
மேவுமின்பம் யாவுமீயும் மேன்மைகொண்ட தீந்தமிழ்!
 
கம்பனென்ன கீரனென்ன கால்கடந்த வள்ளுவம்
அம்மைசொன்ன காரிகையோ டர்த்தமுள்ள மேகலை
செம்மைகொண்ட பண்ணிசையால் செய்புகழும் யாவுமே
எம்பியெம்பி வான்நிமிர்ந்த ஏற்றமுடை கானகம்!
 
ஆத்தியென்னும் பேரெடுத்தங் காடிநிற்கும் பூங்கொடி!
சாத்திரத்தின் சாற்றையுடல் தாங்கிநிற்கும் நாலடி!
பூத்திருக்கும் சோலையெங்கும் போதவிழ்க்கும் நல்வழி!
யாத்திருக்கும் இலக்கியங்கள் யாவுமிங்கு சொல்வழி!

Subbaier Ramasami

unread,
Dec 16, 2011, 12:51:04 AM12/16/11
to santhav...@googlegroups.com
அருமையான சந்தம். ஆற்றொழுக்கான நடை. வாழ்க!

2011/12/16 Chandar Subramanian <chandarsu...@gmail.com>

Chandar Subramanian

unread,
Dec 17, 2011, 7:47:24 PM12/17/11
to santhav...@googlegroups.com
வாழ்த்துக்கு மிக்க நன்றி.

2011/12/16 Subbaier Ramasami <elan...@gmail.com>

Chandar Subramanian

unread,
Dec 17, 2011, 7:49:45 PM12/17/11
to santhav...@googlegroups.com

மழலையர் சிரிப்பு!

 
 
சின்னச் சிரிப்பில் ஒருகவிதை - புதுச்
.. சிந்தாய் மலரும் தருணமிது!
கன்னம் குழியக் கவியமுது - நம்
.. கண்ணில் படிந்து வழிகிறது!
 
 
வெள்ளை மனத்தின் விடியல்கள் - அவை
.. விடிந்தும் நிலவே தவழ்கிறது!
கள்ளின் சுவைசேர் கனியமுது! - அதில் 
.. களித்துக் கருக்கல் கரைகிறது!
 
 
தொற்றிப் படரும் துளிர்சிரிப்பு! - மனம்
.. தொட்டுச் சுகத்தைச் சுகிக்கிறது!
முற்றும் துறந்தும் முனிவருளம் - இதன்
.. மொட்டுச் சிரிப்பால் முகிழ்க்கிறது!
 
 
இதழில் இழையும் சிரிப்பதனால் - நம்
.. இதயம் இனிதாய் இசைக்கிறது!
அதரம் பொழியும் அசைவுகளால் - வாய்
.. அரங்கில் பரதம் நடக்கிறது!
 
 
குட்டிக் குமுதம் விரிகிறது! - குழல்
.. குழையும் இசையைப் பொழிகிறது!
பட்டு பனியால் நனைகிறது! - மனம்
.. பாட்டில் பரவசம் அடைகிறது!

akila ramasami

unread,
Dec 18, 2011, 10:33:26 PM12/18/11
to santhav...@googlegroups.com
இதழில் இழையும் சிரிப்பதனால் - நம்
.. இதயம் இனிதாய் இசைக்கிறது!
அதரம் பொழியும் அசைவுகளால் - வாய்
.. அரங்கில் பரதம் நடக்கிறது!
 
 
 என்னை மிகவும் கவர்ந்த வரிகள்..

மழலை சிரிப்பு..மனதை கவர்ந்தது....
அன்புடன்
அகிலா ராமசாமி
 
 
2011/12/18 Chandar Subramanian <chandarsu...@gmail.com>

Kaviyogi Vedham

unread,
Dec 19, 2011, 8:01:05 AM12/19/11
to santhav...@googlegroups.com
ரொம்ப ரொம்ப அழகு..,வாழ்க
யோகியார்

2011/12/18 Chandar Subramanian <chandarsu...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta



--

Chandar Subramanian

unread,
Dec 19, 2011, 7:37:22 PM12/19/11
to santhav...@googlegroups.com

நிர்வாணம்

 
 
எத்தனை ஆடைகொண்டேன்? - இந்த வாழ்வெலாம்
.. என்னுரு நான்மறைத்தேன்!
நித்தமும் நூறுகொண்டேன்! - நீள் பொய்களால்
.. நிசமதை நான்சிதைத்தேன்!
சத்தியம் வெற்றிடந்தான்! - சதி செய்ததைச்
.. சாத்திடத் தாளுமுண்டோ?
மொத்தமாய் அஃதிருப்பின் - மூடுமென்
.. முயற்சியில் ஏதுபயன்? 
 
 
 
பட்டப் பகலினிலே - பாதை தெரிந்திடப்
.. பாவை விளக்கெதற்கோ?
சொட்டும் மதுக்கனியின் - தோட்டம் அருகிருந்தும்
.. சோற்றுப் பசியெதற்கோ?
எட்டும் தொலைவிருந்தும் - எழ மனமிலை,
.. ஏணிகள் என்னசெய்யும்?
வெட்டி எறிந்துநின்றேன் - ஒவ்வொன்றாய்!
.. வெற்றுடை ஏதுக்கிங்கே?
 
 
 
காமம் கழிகிறதே! - கண்ட பதவிகண்
.. காதல் ஒழிகிறதே!
நாமம் குறைந்துளத்தே - நான் என்னும்
.. நாட்டம் தொலைகிறதே!
சேமம் தருவதற்காய்ச் - சேர்த்த பெருநிதி
.. செலவினில் தீர்கிறதே!
ஆமென் உயிர்கலந்த - அந்த உறவுகள்
.. அனைத்தும் விலகிடுதே!
 
 
 
போகம் புளிக்கின்றதே! - பொய் வாழ்வதன்
.. புதிர்கள் புரிகின்றதே!
தேகம் சுடுகின்றதே! - தீயால் உடல்
.. தீர்ந்துத் தொலைகின்றதே!
ஆகம் அதுவெடிக்க - அகம் விடுத்தென்
.. ஆன்மம் எழுகின்றதே!
ஏகம் உனையடைய - இப்பிறப்பினில்
.. எதற்கினி ஆடையிங்கே?
(ஆகம் = மார்பு/மனம்)

Kaviyogi Vedham

unread,
Dec 19, 2011, 10:47:24 PM12/19/11
to santhav...@googlegroups.com
ஆகா..உயர் ஆன்மத் தாகம் மின்னலிடும் அழகிய கவி இதுவே,
 யோகியார்

2011/12/20 Chandar Subramanian <chandarsu...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta



--

Ganapathy SankaraSubramanian

unread,
Dec 21, 2011, 2:58:37 AM12/21/11
to santhav...@googlegroups.com
உங்கள் கவிதை" குன்றிலிட்ட விளக்கு" நிசத்தில் கலங்கரை விளக்கம்
தான்.சமுக அவலம் களையும் முனைப்பு எனும் உணர்வுதளத்தில் அற்புதப் பயணம்.
உங்கள் கவிதை"நிர்வாணம் அந்தர்முகியாய்ச் செய்யும் பயணம்.
எதுகை, மோனை கொண்டு சொல்லும் விதம் மிகவும் அருமை.கவிதைகளை மனனம் செய்து கொண்டேன்.
கோ.கணபதி

On 12/20/11, Kaviyogi Vedham <kaviyog...@gmail.com> wrote:
> ஆகா..உயர் ஆன்மத் தாகம் மின்னலிடும் அழகிய கவி இதுவே,
> யோகியார்
>
> 2011/12/20 Chandar Subramanian <chandarsu...@gmail.com>
>

>> *நிர்வாணம்*

Chandar Subramanian

unread,
Dec 21, 2011, 7:35:55 PM12/21/11
to santhav...@googlegroups.com
கருத்துகளுக்கு மிக்க நன்றி.

2011/12/21 Ganapathy SankaraSubramanian <ganapathysank...@gmail.com>

Chandar Subramanian

unread,
Dec 21, 2011, 7:37:07 PM12/21/11
to santhav...@googlegroups.com

நம்பினார் கெடுவதில்லை!

 
காற்றிலே அலையும் பூச்சி
.. காதலாய்ப் பயிரில் ஏறிச்
சாற்றினை உரிய மிஞ்சும்
.. தாளதே தமக்கென் றாலும்
சோற்றினைப் பின்னர் நாடும்
.. சோர்விலா உழவர் நெல்லின்
நாற்றினை நட்டுச் செல்வர்!
.. நம்பினார் கெடுவ தில்லை!
 
காவெனக் கரையுங் காகம்
.. கரையிலா நேரம் பார்த்துத்
தாவிடும் தவளை சேற்றின்
.. தளத்திலே அமர்ந்துப் பூச்சி
மேவிடும் தூரம் நோக்கி
.. மெல்லவே வாய் திறந்து
நாவினை நீட்டப் பார்க்கும்!
.. நம்பினார் கெடுவ தில்லை!
 
பஞ்சிலே கூடு கட்டி
.. பருந்துகள் தாக்கா வண்ணம்
குஞ்சினை இருத்திக் காகம்
.. கொஞ்சிடும் மூக்கால்! பின்னர்த்
துஞ்சிடும் நேரம் பார்த்துத்
.. துணிவுடன் இரைக்காய்ச் செல்லும்
நெஞ்சிடை நிலைக்கும் எண்ணம்,
.. நம்பினார் கெடுவ தில்லை!
 
வல்லிய தாயும் நாகம்
.. வயிற்றெழும் பசியைப் போக்க
அல்வணக் காகம் இல்லா
.. அஃதொரு நொடிக்காய் ஏங்கும்!
மெல்லுடற் குஞ்சு வாழும்
.. மேலுள கிளையை நோக்கி
நல்லிரை அஃதென் றெண்ணும்!  
.. நம்பினார் கெடுவ தில்லை!
 
இம்மிதான் அசைவென் றாலும்
.. எத்தொலை வென்ற போதும்
தம்மிரு கண்க ளாலே
.. தரைநகர் பொருளை நோக்கும்
அம்முறை அறிந்த தாலே
.. அலையுமப் பாம்பை உண்ண
நம்பியே பறக்கும் செம்புள்!
.. நம்பினார் கெடுவ தில்லை!
 
கோடென மெலிந்த நூலைக்
.. கொண்டொரு வலையைச் செய்து
வேடனும் அடர்ந்த காட்டில்
.. விரித்தெதிர் பார்த்தி ருந்தால்
ஊடுள நெல்லை உண்ணும்
.. உணர்வினால் மயங்கி மண்ணை
நாடிடும் புள்ளும் கையில்!
.. நம்பினார் கெடுவ தில்லை!
 
தூளென அண்டம் தன்னில்
.. தோன்றியே மறையும் போதும்
ஆளுவம் உலகை என்னும்
.. ஆசையால் அடுத்த காலை
வேளைநம் கண்கள் மீண்டும்
.. விழித்திடும், இன்று போலே
நாளையும் விரியும் என்று
.. நம்பினார் கெடுவ தில்லை!

akila ramasami

unread,
Dec 21, 2011, 11:11:56 PM12/21/11
to santhav...@googlegroups.com

நம்பினார் கெடுவதில்லை!...
 
பயந்தே வாழ்ந்தாலும் நம்பினார் கெடுவதில்லை..
ஒரு திகில் படம் பார்த்தேன் உங்கள் கவிதையில்..
அன்புடன்
அகிலா ராமசாமி.
 

2011/12/22 Chandar Subramanian <chandarsu...@gmail.com>

Chandar Subramanian

unread,
Dec 23, 2011, 7:25:12 PM12/23/11
to santhav...@googlegroups.com
கருத்துக்கு நன்றி.

2011/12/22 akila ramasami <akilac...@gmail.com>

Chandar Subramanian

unread,
Dec 23, 2011, 7:26:48 PM12/23/11
to santhav...@googlegroups.com

கவிதைக் கையூட்டு!
(கிளிக்கண்ணி)

 
கற்பனை மத்தெடுத்துக் காலம் கரைத்துநின்றேன்!
பிற்பகல் போனதடி! - கிளியே
பின்னுமவன் காணவில்லை!
 
காணாப் பொழுதவனைக் கண்ணில் சிறைபிடித்தேன்!
ஞானப் பொழுததுவே! - கிளியே
நல்லவன் ஆகிநின்றான்!
 
சுமையாய் அவன்மீது சொக்கும் விழிவிலக்க
இமைநான் படபடத்தேன்! - கிளியே
என்னவன் ஏன்பறந்தான்?
 
சொப்பனம் கண்டிருந்தும் சொக்கிச் சுகித்திருந்தும்
தப்பிதம் செய்யவில்லை! - கிளியே
தண்டனை ஏதுக்கடி?
 
காக்கும் எனைவிடுத்துக் காமத் துழல்பவனாய்
நோக்கும் உலகுரைக்கும்! - கிளியே
நொந்திடும் என்மனதும்!
 
முன்னர் அவன்நிற்பான்! முறையோ எனுங்கேள்வி
என்னுள் எழுந்துநிற்கும்! - கிளியே
இயம்பா(து) இதழ்தவிக்கும்!
 
சொல்லுக தாமதமேன்? சொற்கள் வருமுன்பே,
மெல்ல இதழ்பதிப்பான்! - கிளியே
மேற்சொலல் ஏதங்கே?
 
கண்ணுள் சிறைபிடித்தாய்! காலம் கடந்ததென
என்னைப் பழித்திடுவான்! - கிளியே
ஏய்ப்பதில் எத்தனடி!
 
என்னுள் இருந்திருந்தும் இத்தனை நாழிகையாய்
முன்னர் வரவிலைஏன்? - கிளியே
மொழிவேன் ஒருவழியாய்!
 
எதற்கும் விடையளியா தென்னை மயக்கிஅவன்
கதைப்பான், கவிபடிப்பான்! - கிளியே
கவிதையும் கையூட்டோ?

Chandar Subramanian

unread,
Dec 25, 2011, 7:27:39 PM12/25/11
to santhav...@googlegroups.com

இருட்டில் வெளிச்சம்

 
கொஞ்சும் அவரெழிற் கோலம் நிறைந்துக்
.. குழையும் கனவுலகில்
நெஞ்சம் நெகிழும் நிமிடம் இமையை
.. நீயேன் பிரிக்கின்றாய்? - தோழி
.. நின்றேன் முறைக்கின்றாய்?
 
கனவென் றெதையோ கற்பனை செய்துன்
.. காலம் கழிக்கின்றாய்!
நனவில் அவர்முன் நடப்பார் என்றும்
.. ஞானம் படிக்கின்றாய்! - தலைவி
.. நன்றாய் நடிக்கின்றாய்!
 
இருட்டுப் பொழுதில் இணைப்பின் றவரை
.. இழந்து தவிக்கின்றேன்!
கருப்புத் தருணம் கண்ணில் முகமும்
.. கலந்து பிரிந்ததுவே! - தோழி
.. கண்ணுள் அவருருவே!
 
காட்சி அறியாக் கருக்கல் பொழுதில்
.. காண வழியுண்டோ?
காட்டி மறைந்தார் முகத்தை எனதினம்
.. கரைதலும் வீணன்றோ? - தலைவி
.. கானலில் நீரென்றோ?
 
அகலின் ஒளியால் அடர்ந்த இருளும்
.. அகலும் அறியாயோ?
பகரும் மொழியாய்ப் பார்வை மனத்தின்
.. பாசம் விளக்குதற்கே! - தோழி
.. பகலில் விளக்கெதற்கோ?
 
எண்ணும் கணமவர் எங்கும் இருப்பார்
.. எனத்தான் உரைக்கின்றாய்!
இன்னும் அவர்முன் இலையெனும் போதும்
.. இதையே மொழிகின்றாய்! - தலைவி
.. இதையேன் மெய்யென்றாய்?
 
உண்மை மனத்தின் உறையும் நினைவின்
.. உணர்வுகள் பொய்யாமோ?
கண்ணில் தெரிந்திடும் காட்சியும் பார்வையும்
.. காதலும் மெய்யென்றால் - தோழி
.. காதலன் மெய்யன்றோ?
 
மெய்யென் றவரை மிகையாய் மொழியும் 
.. முறையேன் புரியவிலை!
பொய்யென என்னுரை பொய்க்கச் செய்யும்
.. புலமை அவர்க்கிலையோ? - தலைவி
.. புதிர்தான் அவர்நிலையோ?
 
சினக்கும் முறையும் தொடரும் பகையும்
.. சிறியோர் வழக்கன்றோ?
உனக்கும் தெரிவார் ஒருவர் அவர்தம்
.. உணர்வில் உறைந்துவிடு! - தோழி
.. உள்ளம் திறந்துவிடு!

RAJAGOPALAN APPAN

unread,
Dec 26, 2011, 9:26:13 AM12/26/11
to santhav...@googlegroups.com

நல்ல சிந்தனை.
'கோலம் நிறைந்துக் குழையும் கனவுலகில்'என்பதில்,ஒற்றை நீக்கிவிடவும். 'நிறைந்து குழையும்' என்பதே சரியாக அமையும். 'இருட்டுப் பொழுதில் இணைப்பின்றவரை இழந்து தவிக்கின்றேன்' என்பதில், 'இணைப்பின்றவரை' என்பதைக் கொஞ்சம் மாற்றியமைக்கலாம்.

அ.ரா.

2011/12/26 Chandar Subramanian <chandarsu...@gmail.com>

Chandar Subramanian

unread,
Dec 26, 2011, 6:58:44 PM12/26/11
to santhav...@googlegroups.com
திருத்தங்களுக்கு நன்றி.


2011/12/26 RAJAGOPALAN APPAN <appan.ra...@gmail.com>

Kaviyogi Vedham

unread,
Dec 27, 2011, 12:23:45 AM12/27/11
to santhav...@googlegroups.com
பலே பலே.சந்தமும் கருத்தும் இயல்பாக வருகிறதே1.வாழ்க,
 யோகியார்

2011/12/26 Chandar Subramanian <chandarsu...@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

Kaviyogi Vedham

unread,
Dec 27, 2011, 12:26:49 AM12/27/11
to santhav...@googlegroups.com
ரொம்ப அருமை-----..எனின்,
 தலைவன் முருகன் அல்லது கண்ணன் எனும் கற்பனை தோன்ற சேர்த்திருப்பின்,
 யான் நம் இதழுக்குச் சேர்க்கின்றேன். அடுத்த இச்சூவில்...ஷண்முககவசம்
யோகியார்

2011/12/24 Chandar Subramanian <chandarsu...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

Chandar Subramanian

unread,
Dec 27, 2011, 7:28:13 PM12/27/11
to santhav...@googlegroups.com
கருத்துகளுக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

2011/12/27 Kaviyogi Vedham <kaviyog...@gmail.com>

Chandar Subramanian

unread,
Dec 27, 2011, 7:29:34 PM12/27/11
to santhav...@googlegroups.com

தனிமரம்

 
தாங்கக் கரையோரம்
 தளும்புர தண்ணிபோல
ஏங்குதே மனசதுக்கு
 இன்னும்நீ சொல்லலையே!
 
ஒட்டுகிற போதுமட்டும்
 ஒண்ணொண்ணா சொல்லிவச்சே!
வெட்டிகிட்டு போனதையேன்
 வெளக்காம வுட்டுபுட்டே?
 
கட்டிகிட்டே கண்ணாலம்!
 காடுதாண்டி பொண்ணெடுத்தே!
தொட்டுகிட்ட பொம்பளைநான்!
 சொல்லாம வுட்டுபுட்டே!
 
கண்ணால களவாடி
 கல்லுலேதான் நாருரிச்சே!
பொண்ணான எம்மனச
 பூவாக்கி செறை புடிச்சே!
 
பூவாக போனபின்னும்
 புதுமால கெடைக்கலையே!
ஆவாத அதைநெனச்சி
 அடிநெஞ்சு துடிக்குதைய்யா! (10)
 
நெல்லடிக்கும் களத்துலதான்
 நெஞ்சுகுழி பாத்துநின்னே!
கல்லடிச்சே! கண்ணடிச்சே!
 காத்தடிக்க கண்ணும் வச்சே!
 
உன்ன வெச்சே நெஞ்சுக்குள்ள!
 உசுரைமொத்தம் உறிஞ்சிகிட்டே!
தின்னுபுட்ட என்மனச!
 தித்திப்புல நான் தெகச்சேன்!
 
அண்ட கொத்தும் சாக்குலநீ
 அத்தனையும் பண்ணிபுட்டே!
மண்ண கொத்தி போடாம
 மனச இல்ல கொத்திபுட்டே?
 
கொத்துபட்ட நெஞ்சுக்குள்ள
 கோடைமழை பெய்யரச்ச
வத்திவச்சே! வெடிய வச்சே!
 வானவில்ல வளைச்சு வச்சே!
 
வானவில்ல நான் படுக்க
 வக்கணையா ஆட்டிவச்சே!
தோணலையே கண்தொறந்தா
 சோதனையா போகுமுன்னு! (20)
 
கனவுலேதான் நான் புகஞ்சேன்!
 காத்தூதி குளிர்காஞ்சே!
தெனவொனக்கு! நீசிரிச்சே!
 தெரியாம நான்சிரிச்சேன்!
 
சிரிப்பாலே மயக்கிபுட்டே!
 சில்லறையா ஆக்கிபுட்டே!
நெருப்பாத்தான் நானிருந்தேன்!
 நீரூத்தி அணச்சிபுட்டே!
 
தீக்குச்சி ஒன்னுகொடுத்து
 தேனுவெல்லம் வாங்கிகிட்டே!
தீத்துபுட்ட என்கணக்க!
 தீயுமில்ல! தேனுமில்ல!
 
விரிஞ்சபூ சந்தையிலே
 விக்காது! விலையேது?
தெரிஞ்சும் உன்ன நெருங்கவிட்டேன்!
 தீயிலில்ல தெனங்குளிச்சேன்!
 
சாவியா நா போனமுன்னா
 தண்ணிமடை மாத்திகிட்டே?
தூவுமோ மானமுன்னு
 தொயரத்துலே நாங்கெடக்கேன்! (30)
 
கண்ணுகொத்தி பாம்பு ரெண்டு
 கடிச்சி பல்லு பதிஞ்சிருக்கு! 
என்னொடம்பு இளச்சிருக்கு!
 இன்னுங்கூட வெஷமிருக்கு!
 
பாம்புகண்டா பயமெதுக்கு?
 பல்லுலத்தான் வெஷமிருக்கும்!
ஆம்பளங்க ஆச பட்டா
 ஆயிசுக்கும் வெஷமிருக்கும்!
 
பட்டுத்தான் தெரிஞ்சிகிட்டேன்!
 பட்டமரம் ஆயிநிக்கேன்!
சுட்டுத்தான் புரிஞ்சிகிட்டேன்!
 சூனியத்த அனுபவிக்கேன்!
 
கேப்பாரும் யாருமில்ல!
 கேள்வி இல்லே! பதிலுமில்லே!
தோப்புமில்ல! தொரவுமில்ல!
 தொணைக்கி இல்லா தனிமரம் நான்!
 
மங்காத்தா கோவிலுலே
 மஞ்சகட்டி வுட்டுபுட்டேன்!
அங்காச்சும் கொணங்காட்டு!
 அட, இனிமே நான்எதுக்கு! (40)

Kaviyogi Vedham

unread,
Dec 27, 2011, 11:35:10 PM12/27/11
to santhav...@googlegroups.com
ஆகா! ரொம்ப அழகு.. உன் நாடோடிப்பாடல்.. கைவிட்ட பெண்ணைப்பற்றி, அந்த ஏக்கம், புலம்பல் வரிகள் எல்லாமே நெஞ்சைப்பிழிந்தன. வாழ்க!
யோகியார்

2011/12/28 Chandar Subramanian <chandarsu...@gmail.com>

Chandar Subramanian

unread,
Dec 29, 2011, 7:28:12 PM12/29/11
to santhav...@googlegroups.com
எண்ணின் வேந்தன் இராமானுஜன்
ஸ்ரீனிவாஸ ராமானுஜன் (22 December 1887 – 26 April 1920)
 
சூத்திரத்தில் எண்களினைத் தொகுத்துக் காட்டும்
.. சூக்குமத்தை அறிந்தவன்தான்! தொடரும் பேரெண்
சாத்திரத்தில் தனிஆளாய்த் தரணி போற்றும்
.. சாதனைகள் புரிந்தவன்தான்! சான்றை எண்ணும்
மாத்திரத்தில் நிரூபணமாய் மன்றில் வைக்கும்
.. மந்திரத்தை அறிந்தவன்தான்! மனதால் எண்கள்
யாத்திரையைக் குறியீடாய் யாத்துக் காட்டும்
.. இயல்பறிந்த கவிஞன்தான்! எண்ணின் கம்பன்!
 
ஈரோட்டில் அவதரித்த எண்ணின் வேந்தன்!
.. ஈறிலியை அறிந்ததனின் எல்லை கண்டோன்!
ஓரேட்டில் பலதேற்றம் ஒளித்து வைத்தே
.. உயராய்வுப் பொருளாக உலகுக் கீந்தோன்!
'கார்'ஓட்டும் தருணத்தும் காரின் எண்ணார்
.. கணிதத்தின் சிறப்பதனைக் களித்த நெஞ்சன்!
பாராட்டைப் பெற்றவன்தான், பாரில் யாரும்
.. பாராத பெருஞ்செல்வம் படைத்துச் சென்றான்!
 
ஆயுலெலாம் அறிஞர்கள் ஆய்ந்து சேர்க்கும்
.. அத்தனையும் ஐந்தாண்டில் அளித்த ஞானி!
நோயதனால் உடல்நலிந்து நொடித்த போதும்
.. நுணங்குதற்காய்ப் பொருள்படைத்தான் நூறு நூறாய்!
பாயொளியாய் எண்கணிதப் பாதை யெங்கும்
.. பரந்திருந்த இருளகற்றிப் பார்க்கச் செய்தான்!
ஆயபெரும் அறிஞனவன் அவனைப் போற்றி
.. அகிலமெலாம் போற்றுகின்ற அழகைப் பாரீர்!

akila ramasami

unread,
Dec 29, 2011, 11:16:13 PM12/29/11
to santhav...@googlegroups.com
எண்ணின் வேந்தன் இராமானுஜன்
அருமையான கவிதை..
இப்போதுதான் செய்தித் தாளில் படித்தேன் .." The man who knew infinity" a hollywood film based on sir Ramanujam is going to be produced..
akila
2011/12/30 Chandar Subramanian <chandarsu...@gmail.com>

Chandar Subramanian

unread,
Dec 31, 2011, 8:58:07 PM12/31/11
to santhav...@googlegroups.com

வருக புத்தாண்டே வருக!

 
ஆண்டு முகிழ்த்தெழும் நாளிதுதான்!
.. அடுத்த மலரிதழ் திறக்கிறது!
நீண்ட நெடும்பெரும் காலமதில்
.. நினைவின் புதுக்கரு பிறக்கிறது!
தாண்டிக் கடந்திடும் வேளையிலே
.. சகித்தப் பெருஞ்சுமை மறக்கிறது!
மீண்டும் புதுச்சிற கேற்றுணர்வும்
.. மிகையாய் மகிழ்ச்சியில் பறக்கிறது!
 
இன்பக் கதிரவன் வான்வெளியில்
.. இனிதாய்ப் புதுநடை நடத்திடுவான்!
துன்பம் எனுமொரு நீர்க்குமிழி
.. தொடுக்கும் தடைகளை உடைத்திடுவான்!
முன்னர் விரிந்திடும் போருலகை
.. முனைந்து முழுதாய்க் கடந்திடுவோம்!
அன்பின் அடிப்படை நாமறிவோம்!
.. அதனால் அமைதியை அடைந்திடுவோம்!

Kaviyogi Vedham

unread,
Jan 1, 2012, 12:43:37 AM1/1/12
to santhav...@googlegroups.com
பலே புத்தாண்டு..பாரு பாரு உனக்கு எங்க சந்தர் கையால் ஒரு வாழ்த்து கிடைத்தாயிற்று.ஒழுங்கா எங்க எல்லோருக்கும் பல வரங்கச்ள் கொடுத்துவிடு,
 யோகியார்

2012/1/1 Chandar Subramanian <chandarsu...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

Chandar Subramanian

unread,
Jan 2, 2012, 7:23:04 PM1/2/12
to santhav...@googlegroups.com

காலக்கொடி

எல்லாம் நிலைத்தெதும் இயங்கா தாயும்
நில்லாப் பொருளாய் நீண்டிடும் காலம்;
ஒற்றைக் கோடாய் ஒருதுளிக் கீற்றாய்
வற்றா தோடும் வழக்குடை ஆறு!
நிகழ்வைக் கொல்லும் நிரந்தரக் கூற்றன்!
அகழ்ந்திடற் கரிய ஆழப் பெருங்கடல்!
திருப்பம் இல்லாத் திசைசெலும் தெருவில்
விருப்பும் வெறுப்பும் விலக்கிய பயணம்!
உயிருள பொருளை உரசும் போக்கில்
வயதெனும் மாற்றம் வழங்கும் மாயன்!
கழித்தல் அறியாக் கணக்கியல் மூலம்!
ஒழிப்பில் பிறப்பாய் உயிரின் தோற்றம்!
நீற்றுப் போகும் நிகழ்வை நினைவாய்
ஆற்றுப் படுத்தும் அற்புதப் பாணன்!
முப்பரி மாணம் முழுதையும் அசைத்துச்
செப்படி வித்தை செய்திடும் காலன்!
நான்காம் கோணம் நடக்கும் விதத்தால்
மூன்றில் மாற்றம் முடித லானது!
கணங்கள் முகிழ்க்கும் காலக் கொடியில்
நிணங்கொள் காயம் நிழற்கனி ஆமே!

Dr Subramanian

unread,
Jan 2, 2012, 8:46:06 PM1/2/12
to santhav...@googlegroups.com
கற்பனைக் கம்பத்தில் காலக் கொடியினை
ஏற்றத் துணிந்த எங்கள் குமரா!
சொற்பதச் சுகத்தின் சூட்டையும் சுகத்தையும்
அற்புதமாக அரங்கேற்றி யுள்ளனை!
நிகழ்வுகள் காட்டும் நிலையாமை தன்னை
நீற்றுப் போன ஆற்றுப் பெருக்கினை
இலங்கு கவியில் ஏற்றிய வரியெலாம்
இலக்கிய வெளிதனில் என்றும் நிலைக்கும்

வவேசு



2012/1/3 Chandar Subramanian <chandarsu...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta



--
Dr.V.V.Subramanian
Director,Phycospectrum Environmental Research Centre (PERC)
( A Unit of Phycospectrum Inc:)
52A,AK Block,7th Main Road,
Annanagar. Chennai, 600040
Land: 044-26208896
Mobile: 9381044470

Chandar Subramanian

unread,
Jan 3, 2012, 8:03:33 PM1/3/12
to santhav...@googlegroups.com
கருத்துக்கு மிக்க நன்றி.

2012/1/3 Dr Subramanian <vav...@gmail.com>

Chandar Subramanian

unread,
Jan 4, 2012, 7:41:52 PM1/4/12
to santhav...@googlegroups.com
கணினி
 
ஒற்றைச் சன்னல் அதன்வழியாய்
.. உலகைக் காட்டும் புதுக்கருவி!
சுற்றி இருக்கும் சூழலதைச்
.. சுருக்கிக் காட்டும் தொலைநோக்கி!
கற்றுக் கொடுக்கும் பணிக்காகக்
.. காசே கேட்காப் பேராசன்!
வெற்றுத் திரையில் விதவிதமாய்
.. விந்தை செய்யும் மாயாவி! (1)
 
தொடுதல் மொழியை அறிந்தஇனம்!
.. தொய்யா துழைக்கும் பணியாளன்!
விடையை அறிய விழைவோர்க்கு
.. விளக்கம் சொல்லும் வேதாந்தி!
மடையே இல்லாப் பெருவெள்ளம்!
.. மனத்தின் போக்கில் வழிநீளும்!
கடைதான்! இருந்தும் காசில்லை!
.. காட்சிப் பொருளே வியாபாரம்! (2)
 
பூச்சியம் ஒன்றைப் பேருணவாய்ப்
.. புசித்து வாழும் புதுப்பிறவி!
பேச்சும் கண்ணும் தொடுகுணமும்
.. பெருசெவி இவைகொண் டிருந்தாலும்
மூச்சால் இழுத்து நறுமணத்தை
.. முகரும் விதமோர் நாசியிலை!
வீச்சால் உயர்ந்தும், புலனைந்தும்
.. விளங்கா ததனால் குறைப்பிறவி! (3)
 
உயிரே இல்லா உயிர்நண்பன்!
.. உள்ளம் உரைக்கும் படிநடக்கும்!
துயிலில் மூழ்கி இருந்தாலும்
.. தொடுமோர் நொடியில் தொடங்கிவிடும்!
அயலார் விரல்கள் அலையுமெனின்
.. அறிந்தே மறையும் கற்புடையாள்!
இயலா திலையே இதனிடத்தில்,
.. இருந்தும் அடக்கம் இதனியல்பே! (4)
 
விரல்தான் உழுது விதையிடுமோ?
.. வெள்ளைத் திரைதான் வேரேற்கும்
கரிசல் மண்ணார் வயல்வெளியோ?
.. காட்சிப் பொருள்தான் காய்ப்பாமோ?
அரிவாட் கண்கள் அவைநோக்கி
.. அறிந்து கொள்ளல் அறுவடையோ?
புரியும் நொடிதான் பசியாறிப்
.. புத்துணர் வேற்கும் பொழுதாமோ? (5)
 
இலையோ உளதோ எனுமாறாய்
.. இருக்கும், செல்லும்; இறையிதுவோ?
எலியோ டிருக்கும் கணபதியோ?
.. எதிலும் முதலாய் அமைகிறதே!
வலையை விரித்து நமைப்பிடிக்கும்
.. வழக்கம் கொண்ட வேடவனோ?
கலியோ? உலகம், பேரண்டம்
.. கையில் சுருங்கிப் போகிறதே! (6)

Kaviyogi Vedham

unread,
Jan 5, 2012, 1:25:49 AM1/5/12
to santhav...@googlegroups.com
2ஆகா.. இதைவிட வியப்பாய், கவிச் செறிவாய் யாராலும் எழுதமுடியாது கணினி பற்றி.வாழ்க,
 யோகியார்

2012/1/5 Chandar Subramanian <chandarsu...@gmail.com>

Siva Siva

unread,
Jan 5, 2012, 8:27:18 AM1/5/12
to santhav...@googlegroups.com
/துளிர்சிரிப்பு! - மனம்
.. தொட்டுச் சுகத்தைச் சுகிக்கிறது! /

பொருள் எனக்குத் தெளிவாகவில்லை. எது சுகிக்கிறது?

2011/12/17 Chandar Subramanian <chandarsu...@gmail.com>

மழலையர் சிரிப்பு!

 
 
சின்னச் சிரிப்பில் ஒருகவிதை - புதுச்
.. சிந்தாய் மலரும் தருணமிது!
கன்னம் குழியக் கவியமுது - நம்
.. கண்ணில் படிந்து வழிகிறது!
 
 
வெள்ளை மனத்தின் விடியல்கள் - அவை
.. விடிந்தும் நிலவே தவழ்கிறது!
கள்ளின் சுவைசேர் கனியமுது! - அதில் 
.. களித்துக் கருக்கல் கரைகிறது!
 
 
தொற்றிப் படரும் துளிர்சிரிப்பு! - மனம்
.. தொட்டுச் சுகத்தைச் சுகிக்கிறது!
முற்றும் துறந்தும் முனிவருளம் - இதன்
.. மொட்டுச் சிரிப்பால் முகிழ்க்கிறது!
 
 
இதழில் இழையும் சிரிப்பதனால் - நம்
.. இதயம் இனிதாய் இசைக்கிறது!
அதரம் பொழியும் அசைவுகளால் - வாய்
.. அரங்கில் பரதம் நடக்கிறது!
 
 
குட்டிக் குமுதம் விரிகிறது! - குழல்
.. குழையும் இசையைப் பொழிகிறது!
பட்டு பனியால் நனைகிறது! - மனம்
.. பாட்டில் பரவசம் அடைகிறது!

Chandar Subramanian

unread,
Jan 5, 2012, 8:16:14 PM1/5/12
to santhav...@googlegroups.com
தொற்றிப் படரும் சிரிப்பை, மனம் தொட்டு இன்பம் சுகிக்கிறது.

2012/1/5 Siva Siva <naya...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

Chandar Subramanian

unread,
Jan 6, 2012, 7:43:53 PM1/6/12
to santhav...@googlegroups.com
பன்முக தெய்வதம்
 
பாரதி...
 
தெய்வதத்தின் பன்முகத்தைச் தெளிந்துறவிற் கண்டவன்!
.. சேவகனாய்க் காதலனாய்ச் சீர்தொகுத்துத் தந்தவன்!
செய்கைகளே வேள்வியெனும் சித்தாந்தம் என்றவன்!
.. சித்திலெலாம் அவனுருவைச் சித்தரித்துக் கொண்டவன்!
மெய்யறிவைப் பாவிலேற்றி மெய்சிலிர்க்கச் செய்தவன்!
.. மேன்மையுடை தெய்வதத்தை மானுடத்தில் கண்டவன்!
பெய்யமுதைப் பாடல்வழி பெற்றுலகுக் கீந்தவன்!
.. பேரின்பப் புதிரவிழ்க்கும் பெருங்கவிதை நெய்தவன்! (1)
 
பாரதி கண்ட தெய்வதம்...
 
போர்த்தொடுக்கும் போதிலங்கு தேர்நடத்தித் தந்தவன்!
.. பொய்யுளத்தின் நீள்கருவப் பூண்டழியச் செய்பவன்!
கார்மழையில் ஓர்குடையாய்க் காத்துநிற்கும் காவலன்!
.. கள்ளநெஞ்சர் சொல்லுரைக்கக் காய்த்தழிக்கும் தோழனாம்!
நீர்வழியில் நாளழுகி நிலைத்துநின்ற பாசியை
.. நீக்குகின்ற வெள்ளமாகி நெஞ்சைவென்று நின்றவன்!
பார்மடியில் நானுறங்கப் பாசமுள்ள பூமியாய்ப்
.. பலகதைகள் சொல்லியென்னுட் பாவுகின்ற தாயவன்! (2)
 
கோத்தபொய்கள் வந்துலகைக் குலைத்துநிற்கும் போதிலே
.. கொள்கையென்ற வாளெடுத்துக் கொன்றுநிற்கும் கூற்றுவன்!
சாத்திரங்கள் கோடிதந்த சத்தியத்தின் மூலவன்!
.. தாதுவாகி அண்டரண்டம் தாம்சமைத்த தந்தையன்!
காத்துநிற்கும் ஓர்தலைவன்! காணுலகின் காவலன்!
.. கண்ணனென்றும் ஈசனென்றும் கண்ணெதிரில் நிற்பவன்!
சூத்திரங்கள் செய்துநம்மை சொக்கவைக்கும் மாயவன்!
.. சோம்பலின்றி வீடுவாசல் சுத்தமாக்கும் சேவகன்! (3)
 
வித்தையொன்றும் நானறியா துழன்றுநின்ற போதிலும்
.. வேதநுட்பம் கற்றுவிக்கும் வித்தகஞ்செய் வேந்தவன்!
நித்தமன்னம் தேடிஏவல் செய்துநின்ற என்னிடம்
.. நிகரிலாத செல்வமதை நீட்டுகின்ற மன்னவன்!
புத்தியென்னுள் ஆழ்ந்துறைந்துப் பூக்கவைக்கும் பாவினைப்
.. புத்தகத்தின் தாளிலேற்றிப் போற்றுகின்ற மாணவன்!
அத்தனையும் ஆக்கியவை ஆண்டபின்னர் அந்தியில்
.. அழிக்குமந்த அற்புதத்தை அறிந்துநிற்கும் சற்குரு! (4)
 
கன்னமதில் முத்தமிடக் கள்வெறியை ஈந்தவன்!
.. கண்ணிரண்டின் பாவையெனக் காணுமுயிர்ச் சேயவன்!
பின்னலினைப் பற்றியென்றன் பின்மறையும் மாயவன்!
.. பேதையென்றன் கைப்பிடித்துப் பேசிநிற்கும் என்மகன்!
முன்னிரவில் செண்பகக்கான் வெண்ணிலவில் ஓடைநீர்
.. மேவுகரை வாவெனவாய் வேண்டிநிற்கும் காதலன்!
என்னுளத்தின் உட்பொறியை ஈந்தியக்கி ஆள்பவன்!
.. யாதுமாகி நிற்குமவன் யாவருக்கும் தெய்வமே! (5)

Siva Siva

unread,
Jan 6, 2012, 9:21:20 PM1/6/12
to santhav...@googlegroups.com
/நித்தமன்னம் தேடிஏவல் செய்துநின்ற என்னிடம்
.. நிகரிலாத செல்வமதை நீட்டுகின்ற மன்னவன்! /

அழகிய வரிகள்.

2012/1/6 Chandar Subramanian <chandarsu...@gmail.com>

பன்முக தெய்வதம்
 
பாரதி...
 
தெய்வதத்தின் பன்முகத்தைச் தெளிந்துறவிற் கண்டவன்!
.. சேவகனாய்க் காதலனாய்ச் சீர்தொகுத்துத் தந்தவன்!
செய்கைகளே வேள்வியெனும் சித்தாந்தம் என்றவன்!
.. சித்திலெலாம் அவனுருவைச் சித்தரித்துக் கொண்டவன்!
மெய்யறிவைப் பாவிலேற்றி மெய்சிலிர்க்கச் செய்தவன்!
.. மேன்மையுடை தெய்வதத்தை மானுடத்தில் கண்டவன்!
பெய்யமுதைப் பாடல்வழி பெற்றுலகுக் கீந்தவன்!
.. பேரின்பப் புதிரவிழ்க்கும் பெருங்கவிதை நெய்தவன்! (1)
 
பாரதி கண்ட தெய்வதம்...
 
போர்த்தொடுக்கும் போதிலங்கு தேர்நடத்தித் தந்தவன்!
.. பொய்யுளத்தின் நீள்கருவப் பூண்டழியச் செய்பவன்!
கார்மழையில் ஓர்குடையாய்க் காத்துநிற்கும் காவலன்!
.. கள்ளநெஞ்சர் சொல்லுரைக்கக் காய்த்தழிக்கும் தோழனாம்!
நீர்வழியில் நாளழுகி நிலைத்துநின்ற பாசியை
.. நீக்குகின்ற வெள்ளமாகி நெஞ்சைவென்று நின்றவன்!
பார்மடியில் நானுறங்கப் பாசமுள்ள பூமியாய்ப்
.. பலகதைகள் சொல்லியென்னுட் பாவுகின்ற தாயவன்! (2)

போர் தொடுக்கும் என்று 'த்' மிகாது வரும் என்று எண்ணுகிறேன்.

கார்மழை - கார்ப்பருவ மழை என்ற பொருளிலா?

காய்த்தழிக்கும் தோழனாம் - காய்த்தழிக்கும்? காய்ந்தழிக்கும்?

 

Kaviyogi Vedham

unread,
Jan 7, 2012, 8:50:20 AM1/7/12
to santhav...@googlegroups.com
சபாஷ்..என்னை இன்று கவர்ந்த அழகிய பாடல். வாழ்க,
 யோகியார்

2012/1/7 Siva Siva <naya...@gmail.com>

Chandar Subramanian

unread,
Jan 7, 2012, 8:00:17 PM1/7/12
to santhav...@googlegroups.com

வாழ்த்துக்கு நன்றி.

1)


போர் தொடுக்கும் என்று 'த்' மிகாது வரும் என்று எண்ணுகிறேன்.

குறிப்புக்கு நன்றி.

2)


கார்மழை - கார்ப்பருவ மழை என்ற பொருளிலா?

ஆம்.

3)

காய்த்தழிக்கும் தோழனாம் - காய்த்தழிக்கும்? காய்ந்தழிக்கும்?
'இடிக்கும் கேளிர்' எனும் பொருளில் அமைத்தேன். "காய்ந்தழிக்கும்" என்றே வரவேண்டும் என நினைக்கிறேன்.
 


 
2012/1/7 Kaviyogi Vedham <kaviyog...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

Chandar Subramanian

unread,
Jan 9, 2012, 7:40:34 PM1/9/12
to santhav...@googlegroups.com

எந்நாளோ?

 
பாசியிற் பழகும் தண்ணீர்
.. பருகுதற் காகா தென்றும்!
தூசிமேற் படிந்த ஆடி
.. துல்லியம் இழந்து நிற்கும்!
மாசுடை மனங்கள் தோறும்
.. மாண்பது மலிவாய்ப் போகும்!
ஆசுடை களைகள் சேர
.. அணிதமிழ் அழியும் அன்றோ!
(ஆசு=குற்றம்)
 
எழுத்திலே இணையும் மாசாய்
.. இலக்கணப் பிழைகள் எங்கும்!
வழக்கிலே தொலைந்த போன
.. வல்லினப் புணர்ச்சி ஒற்று!
பழக்கமென் றதனைச் சேர்க்காப்
.. பாதையில் பயணம் செய்தால்
இழப்பது தமிழை அன்றோ?
.. என்றினி மாற்றம் காண்போம்?
 
சொற்களா தமிழில் இல்லை?
.. தொல்தமிழ் மறுத்து நின்றோம்!
மற்றைய மொழியின் சொற்கள்
.. மலிந்துநம் மக்கள் பேச்சில்
விற்பனம் செய்து நிற்க,
.. விலைக்குநாம் தமிழை விற்றோம்!
பற்றிலை! அதனா லன்றோ
.. படர்ந்ததிப் பாசி எங்கும்?
 
தொடையமை செய்யுள் யாப்பைத்
.. தொல்தமிழ் தந்த போதும்
தடையது சிந்தைக் கென்றே
.. தள்ளிடும் நிலையை ஏற்றோம்!
மடையது வெள்ளங் காக்கும்
.. மகத்துவம் அறியாப் போக்கில்
உடைந்தது தமிழின் வாழ்வே!
.. உணர்ந்திடும் நாளெந் நாளோ?
 
வள்ளுவன் இளங்கோ கம்பன்
.. வடித்தநற் கன்னல் சாறு!
தெள்ளிய பாலில் தேனார்
.. திருப்புகழ்! அருட்பா என்றாய்க்
கள்ளொடு பூத்து நின்ற
.. கவிமலர் வனத்தில் இன்று
முள்ளுடை மரங்கள் ஆட்சி!
.. முடியுமக் காலம் என்றோ!

Siva Siva

unread,
Jan 9, 2012, 9:29:45 PM1/9/12
to santhav...@googlegroups.com
நல்ல பாடல்.

/சொற்களா தமிழில் இல்லை?
.. தொல்தமிழ் மறுத்து நின்றோம்! /

'மறந்து' என்னாமல் 'மறுத்து' என்றது பொருத்தம்!

/மற்றைய மொழியின் சொற்கள்
.. மலிந்துநம் மக்கள் பேச்சில் /

'மலிந்து' என்பது சரியே. பலரும் பிற சொற்களை 'வலிந்து' கையாள்வதால் இந்நிலை.


2012/1/9 Chandar Subramanian <chandarsu...@gmail.com>

Hari Krishnan

unread,
Jan 9, 2012, 9:38:48 PM1/9/12
to santhav...@googlegroups.com


2012/1/10 Chandar Subramanian <chandarsu...@gmail.com>

பாசியிற் பழகும் தண்ணீர்
.. பருகுதற் காகா தென்றும்!

தண்ணீர், பாசியோடு பழகுவதில்லை; மாறாக, பாசி, தண்ணீரை வந்தடைகிறது.  (தண்ணீர் இருந்த இடத்தில் இருந்தபடி இருக்கிறது; பாசி, தண்ணீரை வந்தடைகிறது.)   எனவே

பாசியே படர்ந்த தண்ணீர்

பாசியால் படர்ந்த தண்ணீர்....

என்பனவற்றைப் போல (கவிஞருக்குப் பொருத்தமாகத் தோன்றுதெதுவோ அவ்விதம்)  மாற்றினால் பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன்.

பெரிய மனுஷத் தோரணையில் சொல்வதாக தயவுசெய்து கருதவேண்டாம்.  எழுதி முடித்தபின் (நாம் எழுதியதென்ற உணர்வைக் களைந்ததன்பின்) ஒருமுறைக்குப் பத்துமுறை வாசித்துப் பாருங்கள்.  ஒரே கருத்து திரும்பத் திரும்ப வேறுவேறு வடிவங்களில் இடம்பெற்றிருந்தால், அவ்விதம் இடம்பெறுதல் அவசியம்தானா என்று யோசித்து, வேண்டாமெனத் தோன்றுவனவற்றை (ஈவிரக்கம் காட்டாமல்!) வெட்டித் தள்ளினால், கவிதையின் அடர்த்தி கூடும் என்பதும் என்னுடைய இன்னொரு கருத்து.

‘எழுதித் தேர்ந்த விதியின் கை‘ போல, எழுதிக் காய்த்த கையுடையார் இருக்கும் இடத்தில் மூச்சுவிட்டாலும், ஓசை கேட்காமல் விடவேண்டும்.  பெரியவர்கள் என்னுடைய பெரிய மனுஷத்தனத்தைப் பொறுப்பார்களாக.

--
அன்புடன்,
ஹரிகி.

Kaviyogi Vedham

unread,
Jan 10, 2012, 8:29:24 AM1/10/12
to santhav...@googlegroups.com
ஆகா..பாட்டும் அழகு.. ஹரியும் அழகு.அவ்விதமே செய்யலாமே... சந்தர் கருத்தை ரசித்தேன்.
 யோகியார்

2012/1/10 Hari Krishnan <hari.har...@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta



--

Chandar Subramanian

unread,
Jan 10, 2012, 8:20:00 PM1/10/12
to santhav...@googlegroups.com

'பாசியிற் பழகும் தண்ணீர்' என்பது குறித்த உங்களின் கருத்துக்கு நன்றி. சரிசெய்கிறேன்.

இரண்டாவது கருத்தில் நீங்கள் கூற வருவது முதல் விருத்தத்தையா? அல்லது ஒரே சொல்லை மீண்டும் மீண்டும் கையாள்வதையா? விவரம் மேலும் இருந்தால் நல்லது.

இந்த மாத 'ரசனை' இதழை நேற்றுதான் கிடைக்கப் பெற்றேன். அதில் வைரமுத்து அவர்களின் ஒரு கவிதை இதோ!
"ஜாமங்கள் கழிந்த பின்னால் சந்திரன் எஞ்சி நிற்கும்!
ஈமங்கள் முடிந்த பின்னால் ஈரங்கள் எஞ்சி நிற்கும்!
நாமங்கள் முடிந்த பின்னால் ஞானங்கள் எஞ்சி நிற்கும்!
காமங்கள் கழிந்த பின்னும் காதலே எஞ்சி நிற்கும்!"
 


 
2012/1/10 Hari Krishnan <hari.har...@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

Chandar Subramanian

unread,
Jan 12, 2012, 7:45:37 PM1/12/12
to santhav...@googlegroups.com
பொருதும் பூதங்கள்!
 
பூதம் ஐந்தும் பொருது முடித்திடச்
சேதம் எங்கும்! சிதைந்த துலகம்!
வானும் தீயும் ஒருபுறம் அமைய
ஏனைய மூன்றும் எதிராய்ப் போயின!
தன்னைக் குடித்துத் தழைக்கும் மரங்கள்
முன்னர்க் கண்டு முரண்டது நீரும்!
தாயாய் மண்ணைத் தழுவிய வேரைப்
பேயாய்ப் புரட்டிப் போட்டது காற்றும்!
மண்ணும் காற்றும் மழையென நீரும்
அண்டும் பொருள்களை ஆட்டி வைத்தன!
எங்கோ வானின் இடுப்பில் அமர்ந்து
பொங்கும் தீயும் புகைப்படம் எடுத்தது!
மிரட்டும் சோதரர் மூவரைக் கண்டே
அரண்டது வானும்! அடைத்தது விழியை!
இயல்பைத் துறந்த இயற்கையின் போக்கில்
துயிலின் மௌனம் தொலைந்து போனது!
கள்வெறி கொண்ட காற்றுத் தூரிகை
கொள்ளிடம் தோறும் குலைக்கும் ஓவியம்!
செந்நீர் எங்கும்! சேதங்கள் எங்கும்!
மண்ணில் காணா மடமை மிகுந்தது!
மழையின் போக்கில் மடிந்தன மரங்கள்!
குழைந்தது மண்ணும்! குவிந்தன பிணங்கள்!
காக்கும் படையே கலகம் செய்ததன்
தாக்கம் பூமியைத் தகர்த்து நின்றது!
கண்ணைத் திறந்துக் கனன்றது வானும்!
பொன்னாய்ப் பொலிந்தது புதிய சூரியன்!
வெப்பைக் கண்டு வியர்த்தன மூன்றும்!
தப்பிச் செய்த தவறுகள் தெரிந்தன!
மெல்ல ஆங்கே மௌனம் திரும்ப
தொல்லை யாவும் தொலைந்து போயின;
நொந்த மானுடம் நிம்மதி அடைய
ஐந்தும் இணைந்தன! அமைதி யாங்குமே!

Lalitha & Suryanarayanan

unread,
Jan 12, 2012, 10:46:12 PM1/12/12
to santhav...@googlegroups.com
சொற்பதம்  கூட்டிச் சுந்தர மாக 
அற்புதக் கவிதை ஆயிரம் கோடி
தினம்தினம் செய்யும் செந்தமிழ்க் கவிஞா, 
மனத்தைக் கவர்ந்தாய் மணக்கும் கவியால்;
வானின் இடுப்பில் தானமர்  மின்னல்
கண்டதும் அருமை விண்டதும் அருமை :
பொங்கும் தீயின் புகைப்படக் காட்சி
மங்காப் புகழை வாரித் தருமே!


சிவ.சூரி

2012/1/13 Chandar Subramanian <chandarsu...@gmail.com>

Ka Thamizhamallan

unread,
Jan 15, 2012, 12:21:44 AM1/15/12
to santhav...@googlegroups.com
சந்தர் எழுதிய இருபாக்களும் மிகவும் நன்றாக உள்ளன.
மொழிக்கலப்பைக் கண்டித்தது நன்று.
முனைவர் க.தமிழமல்லன்

13 ஜனவரி, 2012 9:16 முற்பகல் அன்று, Lalitha & Suryanarayanan <lall...@gmail.com> எழுதியது:

Chandar Subramanian

unread,
Jan 15, 2012, 7:18:58 PM1/15/12
to santhav...@googlegroups.com
கருத்திட்ட திரு சூரி, திரு தமிழமல்லன் ஆகியோருக்கு என் நன்றி.

2012/1/15 Ka Thamizhamallan <vtth...@gmail.com>

Chandar Subramanian

unread,
Jan 15, 2012, 7:20:44 PM1/15/12
to santhav...@googlegroups.com
ஆதவன் அந்தாதி
 
சோதி போலெழும் தீச்சுடர்
மோதுங் காலிருள் மூப்புறும்!
சூதின் லீலைகள் தோற்றிட
ஆதி மூலவ! ஆள்கவே! (1)
 
ஆளும் மாயைகள் அற்றிட
நாளும் பாயொளி நல்கிடும்!
நீளும் தீயவை நீக்கிட
கோள மாயெழும் கூற்றமே! (2)
 
கூற்றம் போலிருள் கொன்றிடும்
ஆற்ற லாலதன் ஆளுமை
சாற்றும் ஞாலமும்! தாய்முறை
ஏற்ற தாலொளி ஈனுமே! (3)
 
ஈனும் பொன்னொளி ஈந்தியே 
தான மென்பதன் தத்துவ
ஞான மொன்றினை நல்கிடும்
வான மண்டல மையமே! (4)
 
மைய ஊற்றென வான்மிசை
வையம் மாற்றிடும் வேலையைப்
பைய ஆற்றிடும் பானுவைத்
தையில் போற்றுவம் தாயதே! (5)
 
தாயின் அண்மையைச் சார்ந்திடும்
சேயின் துன்பெலாம் தீர்ந்திடும்!
தூய மண்மிசை சூதெலாம்
ஓய வெண்கதிர் ஓங்கவே! (6)
 
ஓங்கும் வானவன் ஊர்ந்திடத்
தூங்கும் மானுடர்ச் சோர்வெலாம்
நீங்கும் காணது நீங்கிடின்
யாங்கும் மேனிலை ஆகுமே! (7)
 
ஆகும் யாதிலும் ஆதியாய்ப்
போகப் பாதைஈன் பூதியாய்த்
தேக சோதியின் சீருடை
ஏக மூதுவ ஏந்தலே! (8)
 
ஏந்தும் தீச்சுடர் யாங்ஙனும்
போந்த பூச்சரம் போல்விழ
நீந்தும் நீச்சலில் நீழலை
மாந்தும் மாச்சுடர் வாழ்கவே! (மாந்துதல் = உண்ணுதல்) (9)
 
வாழ்க சூரிய! வாழ்கவே!
ஆழ்க வீரிய அஞ்சனம்! (அஞ்சனம் = இருள்/அஞ்ஞானம்)
வீழ்க காரிருள்! விண்ணெலாம்
சூழ்க பேரொளிச் சோதியே! (10)
 
குறிப்பு: அடிகளுக்கிடையே ஒன்றாம் இரண்டாம் சீரில் எதுகையும், அடிதோறும் ஒன்றாம் மூன்றாம் சீர்களில் மோனையும் வருமாறு அமைக்கப்பட்ட வஞ்சி விருத்த அந்தாதி.

Ganapathy SankaraSubramanian

unread,
Jan 15, 2012, 10:26:32 PM1/15/12
to santhav...@googlegroups.com
தங்களின் தமிழ் ஆதவன்
பொங்கியெழ கவிதைப்
பொங்கல் பொங்கியது.
அன்புடன்
கோ.கணபதி

On 1/16/12, Chandar Subramanian <chandarsu...@gmail.com> wrote:
> *ஆதவன் அந்தாதி *

> *குறிப்பு*: அடிகளுக்கிடையே ஒன்றாம் இரண்டாம் சீரில் எதுகையும், அடிதோறும்


> ஒன்றாம் மூன்றாம் சீர்களில் மோனையும் வருமாறு அமைக்கப்பட்ட வஞ்சி விருத்த
> அந்தாதி.
>
>
> --
> அன்புடன்
> சந்தர் சுப்ரமணியன்
> www.MovingMoon.com
>

Siva Siva

unread,
Jan 16, 2012, 7:41:58 AM1/16/12
to santhav...@googlegroups.com
/அடிகளுக்கிடையே ஒன்றாம் இரண்டாம் சீரில் எதுகையும், அடிதோறும் ஒன்றாம் மூன்றாம் சீர்களில் மோனையும் வருமாறு அமைக்கப்பட்ட வஞ்சி விருத்த அந்தாதி. /

நல்ல அமைப்பு. பாராட்டுகிறேன்.

சில பாடல்கள் ஆதவனை முன்னிலையில் விளிக்கப், பிற பாடல்கள் படர்க்கையில் சொல்வன போல் தோன்றுகிறதே.
மற்ற ஐயங்களைக் கீழ்க்காண்க.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

2012/1/15 Chandar Subramanian <chandarsu...@gmail.com>

ஆதவன் அந்தாதி
 
சோதி போலெழும் தீச்சுடர்
மோதுங் காலிருள் மூப்புறும்!
சூதின் லீலைகள் தோற்றிட
ஆதி மூலவ! ஆள்கவே! (1)

இருள் மூப்புறும்?
'இருள் முற்றுறும்' என்பது இன்னும் பொருந்துமோ?

 
ஆளும் மாயைகள் அற்றிட
நாளும் பாயொளி நல்கிடும்!
நீளும் தீயவை நீக்கிட
கோள மாயெழும் கூற்றமே! (2)
 
கூற்றம் போலிருள் கொன்றிடும்
ஆற்ற லாலதன் ஆளுமை
சாற்றும் ஞாலமும்! தாய்முறை
ஏற்ற தாலொளி ஈனுமே! (3)
 

ஒளி ஈனும்? ஒளி ஈயும்? இவ்விடத்தில் இரண்டுமே சரியோ?

 
ஈனும் பொன்னொளி ஈந்தியே 
தான மென்பதன் தத்துவ
ஞான மொன்றினை நல்கிடும்
வான மண்டல மையமே! (4)

/ ஈனும் பொன்னொளி ஈந்தியே /
ஈந்தியே = ?
ஒருவேளை ஏந்தியே என்று சொல்லவந்தீர்களோ?

 
மைய ஊற்றென வான்மிசை
வையம் மாற்றிடும் வேலையைப்
பைய ஆற்றிடும் பானுவைத்
தையில் போற்றுவம் தாயதே! (5)
 
தாயின் அண்மையைச் சார்ந்திடும்
சேயின் துன்பெலாம் தீர்ந்திடும்!
தூய மண்மிசை சூதெலாம்
ஓய வெண்கதிர் ஓங்கவே! (6)

'மண்மிசை*ச்* சூதெலாம்' என்று வல்லொற்று மிகவேண்டுமோ?
 
 
ஓங்கும் வானவன் ஊர்ந்திடத்
தூங்கும் மானுடர்ச் சோர்வெலாம்
நீங்கும் காணது நீங்கிடின்
யாங்கும் மேனிலை ஆகுமே! (7)

/மானுடர்ச் சோர்வெலாம் /
வல்ல்லொற்று மிகாமல் 'மானுடர்* சோர்வெலாம்' என்று வரவேண்டுமோ?

(சம்பந்தர் தேவாரம் - 2.69.2 - "..... நெஞ்சில் நினைத்தெழு வார்துயர் தீர்ப்பார்  .....")
 
 
ஆகும் யாதிலும் ஆதியாய்ப்
போகப் பாதைஈன் பூதியாய்த்
தேக சோதியின் சீருடை
ஏக மூதுவ ஏந்தலே! (8)

'ஏக மூதுவ' = ?
 
 
ஏந்தும் தீச்சுடர் யாங்ஙனும்
போந்த பூச்சரம் போல்விழ
நீந்தும் நீச்சலில் நீழலை
மாந்தும் மாச்சுடர் வாழ்கவே! (மாந்துதல் = உண்ணுதல்) (9)

யாங்ஙனும் = ? (யாங்கணும்?)

மாச்சுடர்? மாசுடர்?
(மாகடல் என்று திருமுறைகளில் பல பாடல்களில் காண்கிறேன்).



Ka Thamizhamallan

unread,
Jan 16, 2012, 11:34:58 AM1/16/12
to santhav...@googlegroups.com
அன்பு நண்பர் சந்தர் அவர்களுக்கு வணக்கம்.
அந்தாதி என்னும் அடிதொடக்கியில் நீங்கள் புதுமை செய்திருக்கிறீர்கள். இனிப்புதிய இலக்கணம் அமைக்கவேண்டும்.அந்தாதியை வெண்பாவில் அல்லது கட்டளைக்கலித்துறையில் தானே எழுத வேண்டும்.வஞ்சியில் எழுத இடந்தரும் இலக்கணம் எதுவென்று சொல்லுங்களேன்.

முனைவர் க.தமிழமல்லன்

16 ஜனவரி, 2012 6:11 பிற்பகல் அன்று, Siva Siva <naya...@gmail.com> எழுதியது:

Siva Siva

unread,
Jan 16, 2012, 12:32:20 PM1/16/12
to santhav...@googlegroups.com
நூலின் பெயரில் அந்தாதி என்று இருப்பவை வெண்பாக்களும் கட்டளைக் கலித்துறைகளுமே போல்.

ஆனால் அந்தாதிச்செய்யுள் அமைப்பைப் பல பாடல்களிலும் காண்கிறோமே.

********************

http://www.tamilvu.org/courses/degree/c012/c0124/html/c01246l1.htm

6.1.2 அந்தாதி முறைப்பாடல்கள்

மாணிக்கவாசகர் திருவாசகத்தில் திருச்சதகம், நீத்தல் விண்ணப்பம், கோயில் மூத்த திருப்பதிகம். கோயில் திருப்பதிகம், குழைத்த பத்து, யாத்திரைப் பத்து ஆகிய பகுதிகளை அந்தாதி முறையில் பாடியுள்ளார். திருமூலர், திருமந்திரத்தில் பல பாடல்களை அந்தாதியாக அமைத்துள்ளார். நம்மாழ்வார் பாடிய திருவாய்மொழி ஆயிரம் பாடல்களும் அந்தாதித் தொடையால் அமைந்துள்ளன.

சிற்றிலக்கிய வகைகளில் இரட்டைமணிமாலை, அட்டமங்கலம், நவமணிமாலை, ஒருபா ஒருபது, இருபா இருபது, மும்மணிக்கோவை, மும்மணி மாலை, நான்மணி மாலை, கலம்பகம் ஆகியன அந்தாதித்து முடியும் நிலையைத் தம் இலக்கணமாகக் கொண்டு உள்ளன.

********************

சம்பந்தரின் 2.74 ("பூமகனூர்..." என்று தொடங்கும்) பதிகத்திலும் அந்தாதி அமைப்பைக் காணலாம்.

http://www.ifpindia.org/ecrire/upload/digital_database/Site/Digital_Tevaram/U_TEV/DM2_74.HTM


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்


2012/1/16 Ka Thamizhamallan <vtth...@gmail.com>

Pas Pasupathy

unread,
Jan 16, 2012, 4:19:04 PM1/16/12
to santhav...@googlegroups.com
பாரதி ' கண்ணன் திருவடி' என்ற பாடலில் எட்டு வஞ்சித் துறை பாடல்களை
அந்தாதி முறையில் பாடியுள்ளார்.

2012/1/16 Siva Siva <naya...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta



--

Chandar Subramanian

unread,
Jan 16, 2012, 7:54:25 PM1/16/12
to santhav...@googlegroups.com

1)
இருள் மூப்புறும்?
'இருள் முற்றுறும்' என்பது இன்னும் பொருந்துமோ?

முற்றுறும் என்பது நேரடிப்பொருள். மூப்புறும் என்றால் அழிவதற்கான காலம் வந்ததாகப் பொருள்கொள்ளலாம். (வானோங்கிய புகழ் என்பது போல!)

2)

ஒளி ஈனும்? ஒளி ஈயும்? இவ்விடத்தில் இரண்டுமே சரியோ?
ஆம். இரண்டும் சரியே. சூரியன் ஒளியை ஈன்று பின்னர் அதை மற்ற
பொருள்களுக்கு ஈவதாகக்(!!) கொள்ளலாம்.
 
3)
/ ஈனும் பொன்னொளி ஈந்தியே /
ஈந்தியே = ?
ஒருவேளை ஏந்தியே என்று சொல்லவந்தீர்களோ?
ஈந்துவக்கும் / ஈந்தான் என்பன போன்று வழக்கில்லையா? விளக்கவும்.
 
 
4)

'மண்மிசை*ச்* சூதெலாம்' என்று வல்லொற்று மிகவேண்டுமோ?
 
தெரியவில்லை. தேடியதில் கிடைத்தது...
 
வரை நிரை அருவியின் மதம் மிசை சொரிவன
புரை நிரை களிறொடு புனை மணி இயல் தேர்
விரை நிரை இவுளியொடு இளையவர் விரவுபு
குரை நிரை குளிர் புனல் ஆற்றினது ஒருபால். 123 (சீவக சிந்தாமணி)
 

5)


/மானுடர்ச் சோர்வெலாம் /

வல்லொற்று மிகாமல் 'மானுடர்* சோர்வெலாம்' என்று வரவேண்டுமோ?
"அரசன் மானுடர் சோர்வெலாம் நீக்கவே' எனும் வரியை எப்படி பொருள் கொள்வது? அரசன் நீக்கினானா அல்லது மானுடன் நீக்கினானா? இத்தகைய பயன்பாட்டில் ச் மிகும் போது சோர்வு மானுடர்க்குரியது என்பது விளங்குவது போல் எனக்குத் தோன்றுகிறது. தவறெனின் விளக்கவும்.

6)


'ஏக மூதுவ' = ?

ஒன்றான, மூதையனான

7)


யாங்ஙனும் = ? (யாங்கணும்?)

நீங்கள் சுட்டியது சரியே.

8)

மாச்சுடர்? மாசுடர்?
(மாகடல் என்று திருமுறைகளில் பல பாடல்களில் காண்கிறேன்).
"குண்டலம்இரண்டும், அக் கோளின் மாச் சுடர்"
மாச்சுடர் - மிக்க ஒளியுடன் கூடிய
http://www.tamilvu.org/slet/l3100/l3750sog.jsp?x=5329
 
 


 
2012/1/16 Siva Siva <naya...@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

Chandar Subramanian

unread,
Jan 16, 2012, 8:03:29 PM1/16/12
to santhav...@googlegroups.com

திருவாளர்கள் தமிழ மல்லன், சிவ சிவா, பசுபதியார் ஆகியோர்களின் அந்தாதி அமைப்பு குறித்த கருத்துகளுக்கு நன்றி. இப்பாடலில் அந்தாதி முறை அமைக்க, பாரதியின் 'கண்ணன் திருவடி' என்னும் பாடலே என்னைத் தூண்டியது.  'அந்தாதி' என நூற்பெயராகக் கொள்ள வேண்டுமெனின், அதில் வெண்பா அல்லது கட்டளைக் கலித்துறைப் பாடல்கள் மட்டுமே அமைய வேண்டுமா? விளக்கவும். திரு சிவ சிவா குறிப்பிட்டபடி, சில 'ஒருபா ஒரு பஃது' வகைத் தொகுப்புகளிலும் அந்தாதி முறை கடைபிடிக்கப் பட்டுள்ளது. ஆயினும் நூற்பெயர் அந்தாதி என்று அமையப் பெறவில்லை.

தவிர, அந்தாதி அமைப்பை வெறும் அழகுக்காக நான் ஹைக்கூ வகைக் கவிதைகளிலும், அகவலின் ஊடே கண்ணிகளிலும் அமைத்துப் பாடியுள்ளேன். இத்தகைய மரபு இல்லையா என்பது குறித்தும் விளக்கவும்.
 
 


 
2012/1/16 Ka Thamizhamallan <vtth...@gmail.com>

Pas Pasupathy

unread,
Jan 16, 2012, 9:54:50 PM1/16/12
to santhav...@googlegroups.com
எல்லா வகைப் பாடல்களையும் அந்தாதி முறையில் அமைக்கலாம்....
இக்காலத்தில்....என்பது என் கருத்து. 

2012/1/16 Chandar Subramanian <chandarsu...@gmail.com>



--
It is loading more messages.
0 new messages