தாயுமானவர் பாடல்களில் தாயும் சேயும்

3,180 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Mar 3, 2019, 9:16:35 AM3/3/19
to Santhavasantham
தமிழ்ப் பேரா. கண்மணி கணேசன்

23.2.2019 சனிக்கிழமை அன்று யென்னார்க்கே ரவீந்திரன் திலகவதி வித்தியாசாலையில் நடைபெற்ற பள்ளிகளுக்கிடையிலான  தாயுமானவர் பாடல்கள் மனனப் போட்டியில் 200பள்ளிமாணவர் பங்கேற்ற போது ஆற்றிய சிற்றுரையின் சாரம்.

தாயுமானவர் பாடல்களில் தாயும் சேயும்


முன்னுரை:

இற்றைக்கு சுமார் நானூறு ஆண்டுகட்கு முன்னர் தோன்றி; தமிழக மக்களுக்குத் தன் அனுபவத்தைக் கூறும் வழிகாட்டியாகத் தாயுமானவரின்  பாடல்கள் அமைந்துள்ளன. இறைப்பொருளின் பெருமையைக் கூறும் வழிபாட்டுப் பாடல்களும் உள்ளன. பகுத்தறிவோடு வினாத்தொடுக்கும் சீர்திருத்தப் பாடல்களும் உள்ளன. இப்பாடல்களில் இடம் பெறும் உவமைகள் இலக்கிய நயம் சேர்ப்பதோடன்றி; கருத்துப் புலப்பாட்டிற்கும் பயனாகின்றன. தாய் சேய் உறவை அவர் உவமையாகப் பல இடங்களில் கையாளுகிறார். அவ்வுவமை தரும் இலக்கிய இன்பமே இக்கட்டுரையில் இடம் பெறுகிறது.


பசுவும் கன்றும் :

“கன்றினுக்குச் சேதா கனிந்திரங்கல் போலெனக்கு

என்று இரங்குவாய் கருணை எந்தாய் பராபரமே “ எனும் கண்ணியில்  

சேதா என்பது ஈன்றணிமை வாய்ந்த பசுவைக் குறிக்கிறது. கன்றை ஈன்று தாய்மையில் திளைக்கும் பசு இங்கு இறைவனுக்கு உவமை ஆகிறது. பசுவின் கனிவிலும், இரக்கத்திலும் திளைக்கும் கன்று பத்தனுக்கு உவமை ஆகிறது. இறைவனின் கருணைக்காக ஏங்கும் அடியவர் குரலாக இங்கே தாயுமானவரின் குரல் ஒலிக்கிறது. அவரது பத்திமை இறைவனைத் தாயாக நோக்கும் அதே நேரத்தில் தந்தையாகவும் நோக்குகிறது. மொத்தத்தில் இறைப்பொருளின் கருணைக்கு  பெற்றோரின் கருணையை ஈடாக்கிப் பாடியுள்ளார்.


கன்றை உதை காலி:

“என்றும் அடைந்தோர்கட்கு இரங்கார் குறிப்பனைத்தும்

கன்றை உதை காலி கதை காண் பராபரமே“ எனும் போது ஈன்று போதுமான காலம் கழிந்தபின் தன் கன்றின் நலன் நோக்கி அதை உதைக்கும் பசுவின் செயல் உவமையாகிறது. பசுவிற்குக் கன்றின் மேல் உள்ள தாய்ப்பாசத்தில் குறை ஏதும் இல்லை எனினும்; தேவை கருதித் தன் கன்று தானாக மேய்ந்து பழக ஏதுவாக அதை உதைத்துத் தள்ளுகிறது. அதுபோலத் தான் என்றும் இறைப்பொருளை அடைந்தவர் பலரையும் அவன் இரங்கி ஆட்கொள்ளாது இருக்கிறான் என்பது கருத்தாக அமைந்துள்ளது.


துள்ளும் இளங்கன்று:

“உள்ளம் அறியாது ஒருவர் ஒன்றை உன்னிப் பேசில் ஐயோ

துள்ளி இளங்கன்றாய்த் துடிப்பேன் பராபரமே“ என்ற பாடலில் தாயுமானவரின் மென்மையான மனநிலை புலனாகிறது. மூடப் பழக்கங்களை ஒழிக்கவும், இறைப்பொருளைக் குறைவற எல்லோரும் உணரவும் தாயுமானவர் தன் கருத்துக்களைத் துணிந்து அக்காலத்தில் சொன்னது ஒரு புரட்சி என்றே சொல்லத்தக்கது. ஆயினும் முன்னிலையார் தாயுமானவரின் உள்ளக்

கிடக்கையைப் புரிந்து கொள்ளாமல் ஏதாவது அழுத்திப் பேசினால்; நிலையில்லாமல் துள்ளும் இளங்கன்று போல அவரது மனம் துடித்துத் துன்புறுகிறது என்கிறார். இளங்கன்று துள்ளுவது இயற்கை; அப்போது கன்றின் மனம் துன்புறுவதில்லை. ஆனால் தாயுமானவரின் மனம் கன்று போல் துள்ளும் போது அத்துள்ளலுக்குத் துன்பம் அடிப்படையாகிறது என வேற்றுமைப் பொருள் அமைந்து அழகூட்டுகிறது.


தாயும் பிள்ளையும்:

“தாயிருந்தும் பிள்ளை தளர்ந்தாற் போல் எவ்விடத்தும்

நீ இருந்தும் நான் தளர்ந்து நின்றேன் பராபரமே “ எனும் அடிகள் நம் கண்முன் உலகாயதத்தைக் கொண்டு வருகிறது. தாய் அருகில் இருந்தாலும்; அவள் வேறு வேலையில் ஈடுபடுவதையும், பிறரோடு பேசுவதையும், சிரிப்பதையும், பொறுக்காத பிள்ளை கொஞ்சிக் கொஞ்சி அழுவதுண்டு. இறைவனோ எங்கும் நீக்கமற நிறைந்து இருக்கிறான். இது நன்றே புரிந்திருந்தும்; இறையுடன் ஒன்ற வேண்டித் தாயுமானவர் கெஞ்சி நிற்கிறார். இது குழந்தை பெற்றவளிடம் உரிமையோடு   சிணுங்குவது போன்ற மனநிலை ஆகும். பிள்ளை தளர்வதும், தாயுமானவர் தளர்வதும் ஒன்றற்கொன்று இணையாகத் தோன்றும் அழகிய உவமை ஆகும்.


குற்றம் பொறுக்கும் தாய்:

“எத்தன்மைக் குற்றம் இயற்றிடினும் தாய் பொறுக்கும்

அத்தன்மை நின் அருளும் அன்றோ பராபரமே“ என்ற மெய்யுணர்வுப் பாடல்  தாயின் நிலையைப் பரம்பொருள் நிலைக்கு இணையாக உயர்த்தும் உவமை ஆகும். குழந்தை செய்யும் குற்றம் எத்தன்மைத்தாயினும் பெற்றவள் பொறுத்துக் கொள்வாள். அவளைப் போலவே இறைவனும் அடியவர்க்கு அவரது பிழை பொறுத்து அருள் செய்பவன் ஆவான் என்கிறார். தவறிழைத்த பிள்ளை ஆயினும் தாய் தன் பாசத்தால் பிள்ளையை அடுத்தவர் யாரிடமும் விட்டுக் கொடுக்க மாட்டாள். அவள் பிள்ளையைக் கண்டித்தாலும், தண்டித்தாலும் அது மூன்றாம் நபருக்குத் தெரியாமலே நடக்கும். அதுபோல இறைவனும் தன்னை அண்டும் மெய்யன்பரைக் குழந்தையாக ஏற்றுக் கொண்டு அவர்க்கு மட்டுமே புரியுமாறு கண்டித்தும், தண்டித்தும் அருள் செய்கிறான் என்று பொருள் விரிகிறது.


ஈன்ற தாயும் அழும் குழவியும்:

“அரிசினத்தால் ஈன்றதாய் அகற்றிடினும் மற்றவள்தன்

அருள்நினைந்தே அழும்குழவி அதுவேபோன் றிருந்தேனே“

எனுங்கால்; ‘மிகுந்த சினம் காரணமாகப் பெற்ற தாய் குழந்தையைத் தவிர்த்தாலும், ஒறுத்தாலும்; மீண்டும் குழந்தை தாயின் அன்பை நினைத்தே அழுவதைப் போல; தானும் இறைவனை எண்ணி எண்ணி ஏங்குவ’தாகப் பாடுகிறார். பெற்றவள் தன்னை ஒதுக்குவதால் பிள்ளை ஒதுங்கிச் செல்வது இல்லை. மாறாக அழுது கொண்டேனும் மீண்டும் மீண்டும் அவளை நாடிச் செல்லும். சூழலும், உலக நடப்பும்  தனக்கெதிராக இருப்பினும் மெய்யன்பராகிய தாயுமானவர்க்கு அது ஒரு பொருட்டல்ல; குழந்தை தாயைத் தேடுவது போல் இறைவனையே எண்ணிப் பக்தி செலுத்துவதாகக் கூறுமிடத்து அவரது தன்னுணர்வு விளக்கம் பெறுகிறது.


தொட்டிலுக்குள் சேய்:

“கெட்டி என்றுன் அன்பர் மலம்கெட்டு அயர்ந்தோர் பூரணமாம்

தொட்டிலுக்குள் சேய்போல் துயின்றார் பராபரமே” என்ற பராபரக் கண்ணிப் பாடல் மெய்யடியார் எவர்க்கும் பொருந்தும் பாடலாகும்.

தொட்டிலுக்குள் துயிலும் சேய் பாதுகாப்பாக உணரும். அதுமட்டுமல்ல; தாய் குழந்தை தூங்குவதற்காகத் தொட்டிலை ஆட்டித் தாலாட்டுவாள். அது மிகுந்த சுகத்தையும், நிறைவையும் அளிப்பதால் குழந்தை; நிம்மதியாகக் கண்ணயரும்.     

தன்னைப் பற்றி மட்டுமல்லாது பிற மெய்யடியவர் பற்றியும் புனையும் தாயுமானவர்; அவர்களது ஆணவம், கன்மம், மாயை முதலிய மலங்கள் கெட்டு; புலனின்பங்களை விடுத்து; இறைப்பொருளோடு ஒன்றுங்கால்; அப்பேரானந்தம் ஒரு முழுமையை உணரச் செய்கிறது என்கிறார். அவ்வுணர்வு தொட்டிலுக்குள் துயிலும் சேயின் அமைதி போன்றது என்கிறார்.

ஐம்புலன்களை அடக்குவது என்பது அடியவர் தம் ஆன்மீகப் பயணத்தின் முதற்படி. அதில் வெற்றி பெற்றோரே சிற்றின்பத்தை விடுத்து இறைநாட்டம் கொள்வர். அடுத்த நிலையில் அவர்கள் மும்மலங்கள் அழிய; மெய்யுணர்வு பெறுவர். அந்நிலைக்கே தொட்டிலில் துயிலும் குழந்தை உவமை ஆகிறது. இங்கு குழந்தையின் உணர்வும் மெய்யடியார் உணர்வும் ஒன்றிற்கொன்று சமம் என்னும் மனப்புல உருக்காட்சி அமைந்து அழகூட்டுகிறது.


அன்னை இலாச் சேயும், அகத்தில் தாயும்:

“அன்னை இலாச் சேய்போல் அலக்கண் உற்றேன் கண்ணார

என் அகத்தில் தாய்போல இருக்கும் பராபரமே“

எங்கும் நிறைந்திருக்கும் இறைவன் நம்முள்ளும் இருக்கிறான். தாயுமானவர் தன்னுள் இருக்கும் இறைவனை உணர்கிறார். அவ்வுணர்வு மனதில் தாயைத் தாங்கிக் கொண்டிருப்பது போல் உள்ளது. ஆனாலும் உலகாயதத்தில் உழலும் போது தாயில்லாச் சேய் போல் துன்புறுவதாகப் பாடியுள்ளார். மனக்கண்ணில் தாயின் இருப்பு தெரியினும் அன்றாடச் சிக்கல்கள் அவரைத் தாயற்ற குழந்தை போலத் துன்புற வைக்கின்றன என்பது பொருள்.


தாயே அனைய அருள்:

“நீயே நான் என்று நினைப்பும் மறப்பும் அறத்

தாயே அனைய அருள் தந்தாய் பராபரமே“

ஜீவாத்மாவும், பரமாத்மாவும் ஒன்று எனும் அத்துவிதக் கொள்கையின்  அடிப்படையில் அமைந்துள்ள பாடல் இது. அன்றாட வாழ்வில் அக்கொள்கையை  எப்போதும் நினைத்துப் பார்ப்பதுமில்லை. நினைக்க வேண்டிய தேவை இல்லாதபடி வாழ்க்கை முறையும் அமைந்துள்ளது. அந்தக் கொள்கை வாழ்வோடு ஒன்றிவிட்டதால் மறப்பது என்பதும் இல்லை. இந்தப் பக்குவநிலை இறைவனின் தாயனைய அருளால் கிடைத்ததாகும் என்கிறார்.  


முடிவுரை:

தாயுமானவர் பாடல்கள் எளிமையாக இறைவனைப் புரிய வைக்கின்றன. அந்த எளிமைக்குக் காரணமாக அமைவது அவர் கையாளும் உவமைகள் ஆகும். தாய் சேய் உறவுநிலை அவரது பாடல்களில் பேரிடம் வகிக்கிறது.  

kanmani

    

                                           

N. Ganesan

unread,
Mar 3, 2019, 9:18:52 AM3/3/19
to Santhavasantham
On Sat, Mar 2, 2019 at 10:14 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
அருமையான பாடல் இசையினியன். 

நான் ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு முன்னால் பேசியதால் அவர்கள் அறிந்து கொள்ளத்தக்க வகையில் என்னால் விளக்கம் சொல்ல இயலும் பாடல்களை மட்டுமே தேர்ந்தெடுத்தேன். 
யோகாசனாலயா அமைப்பினர் பத்தாண்டுகளாக இப்போட்டியைப் பள்ளி மாணவர்க்கு இடையே நடத்தி வருகின்றனர். 
சென்ற ஆண்டும் விருதுநகரில் நடைபெற்ற இதே நிகழ்ச்சியில் பங்கேற்றேன். 
மாணவருலகிற்கு நடுவில் இருக்கும் இன்பமான வாய்ப்பு எனக்கு அவ்வப்போது கிடைக்கிறது. 
கண்மணி 


கன்றும் சேயும், அருமையான தொகுப்பு. தமிழ் முனைவர்கள் பலரும் உங்களைப் போல எழுத முன்வந்தால், தமிழின் ஆழம் இணையத்தில் மிகும்.

தாயுமானவர் (1706 - 1744) - விசயரகுநாத சொக்கலிங்க நாயக்கர் அரசவையில் தலைமைக் கணக்கராக வீற்றிருந்தவர். இதனை கே. கே. பிள்ளை தம் நூலில் குறித்துள்ளார். 
டச்சுக்காரர்களின் ஆட்சி தமிழ்நாட்டில் ஏற்படாமல் தடுத்தவர்களில் தலையாயவர் தாயுமானவ சுவாமிகள். இலங்கையில் காலூன்றிய டச்சுக்காரர் அரசாங்கம் அவ்வப்போது
தென் தமிழகத்தின் திருக்கோவில்களைக் கொள்ளையடித்து நகைகளை எடுத்துச் சென்றது. முதன்முதல் கீர்த்தனை வடிவைத்தந்தவர் சீகாழி முத்துத்தாண்டவர், அவருடைய
சில கீர்த்தனங்கள் கிடைத்துள்ளன. அதன் பின், தேதியிட்ட கீர்த்தனம் காவை வடமலையப்ப பிள்ளையன் அவர்கள் டச்சுக்காரர்கள் கடலில் எறிந்த திருச்செந்தூர்
முருகன் விக்கிரகத்தி மீட்டு பிரதிஷ்டை செய்த திருநாளில் வென்றிமாலைக் கவிராஜர் பாடியது ஆகும். மு. அருணாசலம் ஐயா (திருச்சிற்றம்பலம், மாயவரம்) 1654 என்று
வாழ்நாள் பூராவும் எழுதினார்கள். அது பிழை. தேதியைக் கணக்கிட்டால் 1653 என்று தெரிகிறது. தமிழின் மூத்த கீர்த்தனங்களுள் ஒன்றும், தேதியிட்ட கீர்த்தனமும் ஆகும்.

காவை வடமலையப்ப பிள்ளையன், அவர் மகன் திருமலைக்கொழுந்துபிள்ளையன், அவர்மகன் இரசை வடமலையப்பபிள்ளையன் (தாத்தா பேர் பேரனுக்கு.) ...
போலவே கேடிலியப்பபிள்ளையன் (மரைக்காடு > திருமறைக்காடு. அண்மையில் கஜ புயலில், இந்த மரைகள் மிகப் பாதிக்கப்பட்டன என்றார்கள்.) திருமகன்
தாயுமானவர். தென்தமிழும், வடமொழியும் நன்கறிந்த மேதை. சைவ சித்தாந்தத்திற்கும், அத்வைதத்திற்கும் சமரசம் கண்ட ஞானி. கேரளாவில்
டச்சு ஆட்சி ஏற்பட்டது போல, https://en.wikipedia.org/wiki/Dutch_Malabar  தமிழ்நாட்டில் நிகழவிடாமல் நாயக்கமன்னர்களை அறிவுறுத்தித் தடுத்தார் தாயுமானவர்.
ராமநாதபுரம் மாவட்டத்து மறவப் படையை, தமிழ்நாட்டு இளைஞர்களை ஊக்குவித்து டச்சுக்காரர்கள் ராமேசுவரம் கோயிலை சிதைத்துலக் கொள்ளையடிக்காமல்
செய்தவர் தாயுமானவ சுவாமிகள் தாம். கடைசிகாலத்தில் துறவி ஆகி, இராமநாதபுரம், இலட்சுமிபுரத்தில் வாழ்ந்தார்கள். அவரது சமாதி அங்குள்ளது.
20-ஆம் நூற்றாண்டில் மிகக் கிலமாகக் கிடந்தது தாயுமானவர் சமாதி. அதை நல்ல நிலைக்கு தனவந்தர்களிடம் பணம்திரட்டி புனருத்தாரணம் செய்தவர்
சுவாமி சித்பவானந்தர் ஆவார், இன்றும் ராமகிருஷ்ண தபோவனம் மேற்பார்வையில் தாயுமானார் சமாதி உள்ளது என நினைக்கிறேன். ஊரில் கேட்கணும்.
தாயுமாணவர் பாடல்கள் முழுதும் பல பதிப்புகள் ராமகிருஷ்ண தபோவனம் அச்சாக்கியது. கன்னியாகுமரியில் விவேகானந்தருக்கும், திருவள்ளுவருக்கும்
நினைவாலயங்கள் வரவேண்டும் என முதலில் பல ஆண்டுகள் வலியுறுத்தியவர் சித்பவானந்தர் ஆவார். 
etc.,

நா. கணேசன்
[1] 1653-ல் வென்றிமாலைக் கவிராசர் செய்த கீர்த்தனம்: மறவன்புலவு க. சச்சிதானந்தனுக்கு எழுதிய மடல்,

 

On Sun, 3 Mar 2019 9:29 am இசையினியன், <pitchaim...@gmail.com> wrote:
பெற்றவட்கே தெரியுமந்த வருத்தம் பிள்ளை
பெறாப்பேதை யறிவாளோ பேரா னந்தம்
உற்றவர்க்கே கண்ணீர்கம் பலையுண் டாகும்
உறாதவரே கல்நெஞ்ச முடைய ராவார். 1.


என்ற சிறப்பான பாடலையும் இணைத்து இருக்கலாம்.

N. Ganesan

unread,
Mar 4, 2019, 10:23:44 AM3/4/19
to Santhavasantham, sirpi balasubramaniam
On Sat, Mar 2, 2019 at 10:14 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
அருமையான பாடல் இசையினியன். 

நான் ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு முன்னால் பேசியதால் அவர்கள் அறிந்து கொள்ளத்தக்க வகையில் என்னால் விளக்கம் சொல்ல இயலும் பாடல்களை மட்டுமே தேர்ந்தெடுத்தேன். 
யோகாசனாலயா அமைப்பினர் பத்தாண்டுகளாக இப்போட்டியைப் பள்ளி மாணவர்க்கு இடையே நடத்தி வருகின்றனர். 
சென்ற ஆண்டும் விருதுநகரில் நடைபெற்ற இதே நிகழ்ச்சியில் பங்கேற்றேன். 
மாணவருலகிற்கு நடுவில் இருக்கும் இன்பமான வாய்ப்பு எனக்கு அவ்வப்போது கிடைக்கிறது. 
கண்மணி 


தாயுமானவருக்குப் பின்வந்தவர் குணங்குடி மஸ்தான் சாகிபு.  பல்லாண்டுகள் இளையவர்.  குணங்குடி ராமநாதபுரம் அருகே உள்ள ஊர். எனவே, தாயுமானவரைச் சந்தித்திருக்கலாம். 
ஸ்ரீ தாயுமான சுவாமிகள் தபோவனம் (வெளிப்பட்டினம், இராமநாதபுரம்),    திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தின் கிளையாக செயல்படுகிறது.  அங்கே, தாயுமானவர் காலம்: 1707 - 1783 எனக் குறிப்பிடுகின்றனர்.
விஜயரகுநாத சொக்கலிங்க நாயக்கர் காலத்தில் அவர் அரச பதவியில் இருந்தவர் (கே. கே. பிள்ளை, தமிழக வரலாறு.)  

தாயுமான சுவாமிகளின் தாக்கம் குணங்குடி மஸ்தான் சாயபு பாடல்களிலும், வள்ளலார் பாடல்களிலும், பாரதிதாசன் பாடல்களிலும் பரக்கக் காணலாம். தமிழை எளிமைப்படுத்தியவர்களில் முக்கியமானவர் தாயுமானார்.
வேதாந்த தத்துவத்தை உலகியல் வாழ்க்கையில் நேரில் காணும் உவமைகள் பலவற்றால் விளக்கியவர் தாயுமான சுவாமிகள் ஆவார். அருளைய அடிகள் பாடல் காண்க.

அருளையவடிகள் பாடியது

 

உலகினுக் கணியா மிராமநா தபுரத்

      துயர்நறை வாவியின் குணபால்

மலர்நிறை வனத்திற் சிவத்துறு நிட்டை

      மருவிமெய் யொருவிவே தாந்தத்

திலகிய பொருளால் வானமாய் நிறைவு

      மெந்தையே எனதுபந் தமும்போய்

நிலையுற நினது திருவரு ளளிப்பாய்

      நின்மலா னந்தமே போற்றி


குணங்குடி மஸ்தான் மீதான தாயுமானவ அடிகளின் தாக்கம்,

விகடன் பத்திரிகை தாயுமானவர் அடிகளை நோக்கவரிகளாகக் கொண்டது. 

"தாயுமானவ கவசம் தான்எல்லோரும் இன்புற்றிருக்க நினைத்தவாறே இருந்த போது அந்தஎல்லோரிலும் நல்ல உள்ளங்கள் ஏராளம் இருந்தன அல்லவாஅந்த உள்ளங்களின் ஆசீர்வாதம்தொடர்ந்து அதற்கு இருந்து வந்ததல்லவாஅந்த தெய்வ சக்தி தீய சக்திகளைத் துரத்தி விட்டதுவிகடன் பிழைத்தது!

விகடனை வாழ வைத்த அந்த தாயுமானவ கவசம் தன்னை அணிந்து கொள்ளும் தமிழர்களையும்  காப்பாற்றும் என்பதில் சந்தேகம் என்ன?

 

 தாயு

திருப்பராய்த்துறை சுவாமி சித்பவானந்தர் தாயுமானவர் பாடல்களை அருமையாகத் தனது நூல்களில் விளக்கியுள்ளார்அவர் நடத்தி வந்த அந்தர்யோகத்திலும் தாயுமானவரின் பாடலின்விளக்கவுரை தவறாமல் இடம் பெறும்.

தாயுமானவரின் சிந்தனை உயரிய சிந்தனைஅதன் அகலமும் நீளமும் ஆழமும் தொடர்ந்துபடித்தால் மட்டுமே புரியும்உணர முடியும்அதன் பயன் எல்லையற்றது!

பொருளில்லா அடுக்கு மொழிகளில் தடுக்கி விழுந்து ஏமாறும் தமிழர்களுக்குப் பொருளுடன் கூடியஅடுக்கு மொழிகள் ஏராளம் தாயுமானவ கவசத்தில் உண்டு."

லட்சுமிபுரத்தில் தாயுமான சுவாமிகளுக்கு சமாதி நல்ல முறையில் நிறுவி, தினமும் 3 கால பூஜைக்கு வழிவகுத்தவர்சித்பவாநந்த அடிகள். பொள்ளாச்சியில் இருந்து அவரும்,
மட்டக்களப்பில் இருந்து விபுலானந்த அடிகளும், கல்கத்தா வேளூர் (பேலூர்) மடத்திற்குப் போய், ராமகிருஷ்ணரின் நேரடி சீடர்களிடம்  இந்து சமய நூல்களும், வடமொழியும் கற்று
இராமகிருஷ்ணர் இயக்கத்தை தமிழகத்திலும், ஈழத்திலும் பரப்பியவர்கள். அதனால் தான் விபுலானந்த அடிகள் பொள்ளாச்சி தோட்டம் வந்து தங்கியிருக்கிறார்
(இதை எனக்குச் சொன்னவர்: கவிஞர் கம்பராமன் ஐயா.) 

NG
 

On Sun, 3 Mar 2019 9:29 am இசையினியன், <pitchaim...@gmail.com> wrote:
பெற்றவட்கே தெரியுமந்த வருத்தம் பிள்ளை
பெறாப்பேதை யறிவாளோ பேரா னந்தம்
உற்றவர்க்கே கண்ணீர்கம் பலையுண் டாகும்
உறாதவரே கல்நெஞ்ச முடைய ராவார். 1.


என்ற சிறப்பான பாடலையும் இணைத்து இருக்கலாம்.

-- 

RAJAGOPALAN APPAN

unread,
Mar 4, 2019, 10:43:28 AM3/4/19
to santhav...@googlegroups.com
'ஈன்ற தாயும் அழும் குழவியும்' 
என்ற தலைப்பின்கீழ் காட்டப்பட்டுள்ள 'அரிசினத்தால் ஈன்ற தாய் அகற்றி டுனும் மற்ற வள்தன் அருள் நினைந்தே அழுங்குழவி... ' என்ற பாடல் தாயுமானவருடைய பாடலல்லவே. அது குலசேகர ஆழ்வாருடைய பெருமாள் திருமொழியில் 'தருதுயரம் தடாயேல் உன்சரணல்லால் சரணில்லை' என்று தொடங்கும் பாடல் வரிகளாயிற்றே.

அ.ரா

--
குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhav...@googlegroups.com
குழுவிலிருந்து விலக:
santhavasanth...@googlegroups.com.
குழுமத்தைக் காண: https://groups.google.com/d/forum/santhavasantham
மேல் விவரங்களுக்கு:
https://groups.google.com/d/optout
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/santhavasantham.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Mar 5, 2019, 2:59:07 AM3/5/19
to Santhavasantham, Theodore Baskaran, sirpi balasubramaniam, housto...@googlegroups.com
On Sat, Mar 2, 2019 at 5:39 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
                     23.2.2019 சனிக்கிழமை அன்று யென்னார்க்கே ரவீந்திரன் திலகவதி வித்தியாசாலையில் நடைபெற்ற பள்ளிகளுக்கிடையிலான  தாயுமானவர் பாடல்கள் மனனப் போட்டியில் 200பள்ளிமாணவர் பங்கேற்ற போது ஆற்றிய சிற்றுரையின் சாரம்.

தாயுமானவர் பாடல்களில் தாயும் சேயும்


முன்னுரை:

இற்றைக்கு சுமார் நானூறு ஆண்டுகட்கு முன்னர் தோன்றி; தமிழக மக்களுக்குத் தன் அனுபவத்தைக் கூறும் வழிகாட்டியாகத் தாயுமானவரின்  பாடல்கள் அமைந்துள்ளன. இறைப்பொருளின் பெருமையைக் கூறும் வழிபாட்டுப் பாடல்களும் உள்ளன. பகுத்தறிவோடு வினாத்தொடுக்கும் சீர்திருத்தப் பாடல்களும் உள்ளன. இப்பாடல்களில் இடம் பெறும் உவமைகள் இலக்கிய நயம் சேர்ப்பதோடன்றி; கருத்துப் புலப்பாட்டிற்கும் பயனாகின்றன. தாய் சேய் உறவை அவர் உவமையாகப் பல இடங்களில் கையாளுகிறார். அவ்வுவமை தரும் இலக்கிய இன்பமே இக்கட்டுரையில் இடம் பெறுகிறது.



தாயுமானவர் காலம்: 1707 - 1783.
ஸ்ரீ தாயுமான சுவாமிகள் தபோவனம், இராமநாதபுரம்.
DSC08648.JPG

2017-ல் நடந்த குடமுழுக்கு. கங்கை அமரன் இன்னிசையுடன்.

 


கன்றை உதை காலி:

“என்றும் அடைந்தோர்கட்கு இரங்கார் குறிப்பனைத்தும்

கன்றை உதை காலி கதை காண் பராபரமே“ எனும் போது ஈன்று போதுமான காலம் கழிந்தபின் தன் கன்றின் நலன் நோக்கி அதை உதைக்கும் பசுவின் செயல் உவமையாகிறது. பசுவிற்குக் கன்றின் மேல் உள்ள தாய்ப்பாசத்தில் குறை ஏதும் இல்லை எனினும்; தேவை கருதித் தன் கன்று தானாக மேய்ந்து பழக ஏதுவாக அதை உதைத்துத் தள்ளுகிறது. அதுபோலத் தான் என்றும் இறைப்பொருளை அடைந்தவர் பலரையும் அவன் இரங்கி ஆட்கொள்ளாது இருக்கிறான் என்பது கருத்தாக அமைந்துள்ளது.



கன்றை உதை காலி. இவ்வகைக் கன்றுக்கு "நுந்துகன்று" எனப் பெயர்.

கவிஞர் சு. பசுபதி அவர்கள் பிள்ளையவர்கள் நினைவுதினத்தில்
அவரது தலைமாணாக்கர் உவேசா எழுதிய திருவாசகப்பாடலில்
அரிய சொல்லைப் பற்றிய செய்தியைப் பதிவிட்டுள்ளார்.

நுந்துகன்று:

“நோயுற்று மூத்துநா னுந்துகன்றா யிங்கிருந்து
நாயுற்ற செல்வ நயந்தறியா வண்ணமெல்லாம்
தாயுற்று வந்தென்னை யாண்டுகொண்ட தன்கருணைத்
தேயுற்ற செல்வற்கே சென்றூதாய் கோத்தும்பீ” 

நுந்து கன்று என்பது தாய்ப்பசுவால் வலுக்கட்டாயமாக
(உ-ம்: உதைத்து) வெளியே தள்ளப்படும் கன்று. A calf weaned away by its mother cow.
அதுபோல் என்னை விட்டுவிடாதே என சிவபிரானிடம் வேண்டுகிறது திருவாசகம்.   
நுந்துதல் > உந்துதல். உந்தி கையாலோ, காலாலோ தள்ளப்படும் பந்து. “உந்தீ! பற!”.
நீர் > ஈரம், நுண்ணி > உண்ணி (கிருஷ்ணன் குழந்தை - குருவாயூர்) ... நுந்து > உந்து.
நுந்தாவிளக்கு - தூண்டாவிளக்கு.

நுந்துகன்று என்னும் மாணிக்கவாசகர் பயன்படுத்தும் சொல்லைப்போல
பலசொற்கள் படைக்கலாம் என தோன்றுகிறது. 
நுந்துகன்று = நுந்தப்பெற்றகன்று =  A calf weaned away by its mother cow.

சுற்றுப்புறச் சூழல், இயற்கை பற்றி ஆங்கிலம், தமிழில் எழுதும்
நண்பர் எஸ். டி பாஸ்கரன் ஒருமுறை ‘domesticated animal' தமிழில்
எப்படிச் சொல்வது எனக் கேட்டிருந்தார்:

நுந்துகன்று - நுந்தப்பெறும்கன்று
அதுபோல,
படிவிலங்கு - (படியவைக்கப்படும் விலங்கு) - tamed animal
பயில்விலங்கு - பயிற்றப்படும் விலங்கு - trained animal
வளர்விலங்கு - (மனிதனால்) வளர்க்கப்பெறும் விலங்கு - domesticated animal.

நுந்துகன்று = calf that is weaned (away from its mother)
படிவிலங்கு = animal that is tamed
பயில்விலங்கு = animal that is trained
வளர்விலங்கு = animal that is domesticated

நா. கணேசன்

என் சரித்திரம், உவேசா

வியாழன், 1 பிப்ரவரி, 2018

978. மீனாட்சிசுந்தரம் பிள்ளை - 4

‘நுந்து கன்று’
உ.வே.சாமிநாதையர்



பிப்ரவரி 1. மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் நினைவு தினம்.

அவருடைய கடைசி நாள்களில் நடந்த ஒரு நிகழ்வை உருக்கத்துடன் உரைக்கிறார் உ.வே.சா.
======

மார்கழி பிறந்தது; அது போய்த் தையும் பிறந்தது; ஒரு வழியும்
பிறக்கவில்லை. ஆசிரியர் நிலை வரவர அதிகமான பயத்திற்குக்
காரணமாயிற்று. தேவாரத்தில் அவர் அப்போது விளக்கிய விஷயங்கள் சில.

ஒருநாள் திருவாசகம் வாசித்து வந்தேன். இலக்கியச் சுவையோடு,
சிவபெருமான் திருவருட் பெருமையை எடுத்துரைத்துக் கேட்போரை
உருகச்செய்யும் பத்திச் சுவையும் நிரம்பியுள்ள அதனை ஆசிரியர் கேட்டு
வரும்போது இடையே கண்ணீர் விடுவார். அந்தத் தெய்விக நூற் செய்யுட்கள் அவர் உள்ளத்தை உருக்கினவென்பதை நாங்கள் அறிந்து கொண்டோம்.

சிவபெருமான் திருவடியை எப்பொழுதும் மறவாத உள்ளத்தினராக இருந்தாலும் அந்நினைவு மற்றச் சமயங்களில் மற்ற நினைவுகளுக்கிடையே தலைமை பெற்று நின்றது. அப்பொழுதோ அந்நினைவையன்றி வேறொன்றும் அவர் உள்ளத்தில்
இடம்பெறவில்லை.

திருவாசகத்தில் திருக்கோத்தும்பியென்னும் பகுதியைப் படித்தேன்.

“நோயுற்று மூத்துநா னுந்துகன்றா யிங்கிருந்து
நாயுற்ற செல்வ நயந்தறியா வண்ணமெல்லாம்
தாயுற்று வந்தென்னை யாண்டுகொண்ட தன்கருணைத்
தேயுற்ற செல்வற்கே சென்றூதாய் கோத்தும்பீ”

என்ற செய்யுளை வாசித்தேன், ‘நுந்து கன்றாய்’ என்பதற்குப் பொருள்
விளங்கவில்லை. சந்தேகம் கேட்கும் பொருட்டுத் தலை நிமிர்ந்து ஆசிரியரைப் பார்த்தேன். அவர் கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. “நுந்து கன்றாய் என்பதற்கு அர்த்தம் என்ன?” என்று கேட்டேன். அவரால் பேச முடியவில்லை. நாக்குக் குழறியது; தொண்டை அடைத்தது. “வெறுத்துச் செலுத்தப்பட்ட கன்றைப்போல” என்று அந்தக் குழறலோடே சொன்னார். அந்த நிலையில் அவரைப் பார்க்கும்போது எனக்கும் கண்ணீர் பெருகியது. தளர்ச்சியால் பேச முடியாமல் இருந்த ஆசிரியர் அந்தப் பாட்டில் உருகிப்போய் அவசமுற்றிருந்தார்.

“நோயுற்று மூத்துநா னுந்துகன்றா யிங்கிருந்து”

என்ற அடி அவர் உள்ளத்தைப் பிணித்து அன்புணர்ச்சியை
எழுப்பிவிட்டது. மாணிக்கவாசகரது அவ்வாக்கு என் ஆசிரியருடைய நிலைக்கு மிகவும் பொருத்தமாக இருந்தது. நோயுற்று மூத்துநின்ற அவருடைய உள்ளக்கருத்தை அந்தச்செய்யுள் தெரிவித்தமையால் அவர் உருகிப் போனார்.

“தாயுற்று வந்தென்னை யாண்டுகொண்ட தன்கருணைத்
தேயுற்ற செல்வற்கே சென்றூதாய் கோத்தும்பீ”

என்ற அடிகளில் மாணிக்கவாசகர் சிவபெருமான் தமக்கு அருளிய
பெருங்கருணைத் திறத்தைப் பாராட்டுகிறார். அவரை ஆண்டு கொண்ட
வண்ணம் தம்மையும் ஆண்டு கொள்வாரோ என்ற ஏக்கமும் ஆசிரியர்
உள்ளத்தே எழுந்தது போலும்! அவர் அப்பொழுது இவ்வுலகில் இருந்தாலும் இந்நினைவுகள் எல்லாம் சேர்ந்து அதனை மறக்கச் செய்துவிட்டன. “இவர் இப்போது நம்மோடு பேசவில்லை. ஆண்டவனோடு பேசுகிறார். இவர் தம் உள்ளமாகிய கோத்தும்பியை மாணிக்கவாசகரைப் போலச் சிவ பெருமான் திருவடி மலரில் ஊதும்படி விட்டிருக்கிறார்” என்ற உண்மையை அப்போது தெளிவாக நான் அறிந்து கொள்ளவில்லை. சிலநேரம் மௌனம் நிலவியது.

அவர் திருவாசகத்தில் ஒன்றி உருகினார்: நான் அவர் நிலைகண்டு
உருகினேன். பின்பு மீண்டும் தொடர்ந்து படிக்கலானேன்.

தொடர்புள்ள பதிவுகள்: 

மீனாட்சிசுந்தரம் பிள்ளை

N. Ganesan

unread,
Mar 16, 2019, 12:07:52 PM3/16/19
to Santhavasantham
On Mon, Mar 4, 2019 at 8:43 AM RAJAGOPALAN APPAN <appan.ra...@gmail.com> wrote:
'ஈன்ற தாயும் அழும் குழவியும்' 
என்ற தலைப்பின்கீழ் காட்டப்பட்டுள்ள 'அரிசினத்தால் ஈன்ற தாய் அகற்றி டுனும் மற்ற வள்தன் அருள் நினைந்தே அழுங்குழவி... ' என்ற பாடல் தாயுமானவருடைய பாடலல்லவே. அது குலசேகர ஆழ்வாருடைய பெருமாள் திருமொழியில் 'தருதுயரம் தடாயேல் உன்சரணல்லால் சரணில்லை' என்று தொடங்கும் பாடல் வரிகளாயிற்றே.

அ.ரா.

ஆம். சேரர் தலைநகர் வஞ்சி மாநகரத்தில் இருக்கும் வித்துவக்கோட்டு அம்மானைப் பாடியது.
இன்றும் கரூரில் வித்துவக்கோட்டு அக்கிரகாரம் என்று குறிப்பிடுதலை ரா.ரா, மு.ரா.,
சங்க காலச் சேரர் தலைநகர் இந்த ஊர் தான் என நூல்கள் எழுதியபோது குறிப்பிட்ட பத்துப் பாசுரங்களில் உள்ளது.

மு.ரா., ரா.ரா., நூல்களின் பின்னர் தொல்லியலும் கரூர் தான் வஞ்சி என நிரூபித்துவிட்ட்டது.

நா. கணேசன்
Reply all
Reply to author
Forward
0 new messages