வணக்கம் கணக்கில. இவ்விழையில் சந்தவசந்தக் கவிஞர்கள்
தாங்கள் இயற்றியவையோ, அன்றேல் படித்தோ, கேட்டோ
சுவைத்த தமிழ்த்தாய் வாழ்த்துக்களை இங்கே பகிர்ந்துகொள்ள
வேண்டுகிறேன்.
தமிழின் முதல் தமிழ்த்தாய் வாழ்த்து பூவராகரின் நிலமடந்தையாக
தமிழகத்தை, தமிழை வாழ்த்தி, அடுத்த பாட்டில் கலைமகளாக
வில்லிபாரதத்தில் (14-ஆம் நூற்றாண்டு) பாடுவது. பின்னர்
உலகம் அறிந்தது கற்பனைக்களஞ்சியம் சிவப்பிரகாசரின்
தம்பி கருணைப்பிரகாசர் சீகாளத்திப் புராணத்தில் தமிழன்னையை
வணங்குதல். 19-ஆம் நூற்ராண்டில் வண்ணச்சரபம் தண்டபாணி
சுவாமிகள் பாடல்கள் பல தமிழ்த்தாய் மேல் உள்ளன.
மனோன்மணீயத்தில் கருணைப்பிரகாசர் பாடலைக் காட்டி
கொற்றவையாக [1], அவளின் அமிசமான சரசுவதியாய்
பெ. சுந்தரனார் பாடிய பாடல் தமிழ்நாட்டரசாங்கத்தின்
அதிகார பூர்வமான தமிழ்த்தாய் வாழ்த்தாக இலங்குகிறது.
உலகெங்கும் தமிழ்ச் சங்கங்களிலும், தமிழ்ப் பள்ளிகளிலும்
நிகழ்ச்சிகளின் முதல் பாடலாக, மோகன ராகத்தில்
எம்எஸ்வி - ராமமூர்த்தி இசைகட்டியபடி பாடப்படும் தமிழ்த்தாய்
வாழ்த்திது.
முதலில், கவிஞர் சவகர்லால் இயற்றிய தமிழ்த்தாய் வாழ்த்தை
இங்கே அளிக்க வேண்டுகோள். இதுவரை பாடியிராவிட்டால்,
ஒன்றோ, பஞ்சகமோ, பதிகமோ அளிக்க சவகர்லால் ஐயாவைக்
கோருகிறேன். எனக்குத் தெரிந்த சில தமிழ்த்தாய் வாழ்த்துக்களை இங்கே
அளிக்கவும் விருப்பம்.
கவிஞர்கள் ஜவஹர்லால், இலந்தையார், கவியோகி, அனந்த், பசுபதி, ஹரிகி,
சிவ. சூரி, கிரிகாசன், வித்தியாசாகர், கலாம், தங்கமணி அம்மா,
மதுரபாரதி, சௌந்தர், குமார், நிரஞ்சன், இன்னும் இங்கிருப்போர்
தமிழ்த்தாய் வாழ்த்துக்களை அளிக்கவேண்டுகிறேன்.
நன்றி,
நா. கணேசன்
குறிப்பு [1]: கொற்றவை வணக்கம் பாரதத்தில் அரதப் பழசு.
பாவை, தையல், கன்னி என்னும் சின்னஞ்சிறுபெண் அவள்.
மீனாட்சி ஆட்சியால் பாண்டிநாட்டுக்கு கன்னிநாடு என்று ஒரு
பெயருண்டு. கொற்றி/துர்க்கை வணக்கம் சைவர், சமணர், வைணவர்
எல்லாருக்கும் உண்டு. பாகவதம் விளக்குகிறது. பாவைப்
பாடல்கள் அவற்றாலெழுந்தவை. கொற்றவை வாழ்த்தே
தமிழ்த்தாய் வாழ்த்து. மகரத்துக்குத் தமிழ்ப் பெயர் தை.
இதை எந்தை, முந்தை, நுந்தை/உந்தை, ... இவற்றில் காணலாகும்.
மகர விடங்கர் - கொற்றவை சம்பந்தத்தை தமிழ்ப் பல்கலை
நிறுவிய வ. ஐ. சுப்பிரமணியம் ஐயா அஞ்சலி மலரில்
(கேரள/மத்திய அரசுகள் வெளியிட்டது) எழுதினேன்.
அதை பிடிஎப் கோப்பாக இங்கே பெறலாம்:
http://groups.google.com/group/tiruvalluvar/msg/b6747e262b8bfff9
சின்னஞ்சிறு பெண்போலே - சீர்காழி பாடுகிறார்:
http://www.youtube.com/watch?v=eoldjJS1OWI
தமிழின் சுவை
தமிழே இனிதாம் தமிழேஅழகாம்
தமிழே பெருநிதியாம்
தமிழே யுன்னைப் பாடப் பாடத்
தருமே மிக மகிழ்வாம்
தமிழே இதமாம் தமிழே சுகமாம்
தமிழே முழு நினைவாம்
தமிழின் தாகம் பருகத் தண்மை
தருமே மனதிடையாம்
அலையே கடலில்புரளும் அதுபோல்
அகிலம் முழுவதிலும்
கலையே கொண்டு தமிழே புரள்வாய்
கவிதை ஊற்றாவாய்
சிலையே அசையாநிற்கும் நிலைஏன்,
சிந்தைகொள் தமிழின்
நிலையே நினதில் பெரிதும் அழகால்
நினவை இழந்தாயோ?
மலையே நீயும் உயர்விற் பெரிதாய்
மனதில் கர்வமுறாய்
இலையே தமிழுக் கிணைநீ என்றே
இன்று மலைத்தாயோ
தொலைவும் காணாத் தொன்மைத் தமிழின்
தோற்றம் காணுகையில்
அலையும் வானச் சுடரும் நிலவும்
அதன்பின் அணியாமோ?
பொங்கும்தமிழோ புதுமை நதியின்
புனலாய் குதிபோட
தங்கும் எண்ணம் சற்று மின்றித்
தளளவென் றோடும்
எங்கும் தண்மை இன்பம் பரவ
இசையென் றொலிகூட்டும்
சங்கம்வளரின் பத்தெள் தமிழே
சரிநிகர் எதுவுண்டோ?
வெங்கண் கொண்டே வினைகள் செய்வோர்
விளை துன்பந் தானும்
மங்கும் வகையில் மலையின்அருவி
மடிபோற் தமிழ்பொங்கும்
கங்குல்வானிற் கதிரோன் போலக்
கண்முன் ஒளிவெள்ளம்
எங்கும் பொங்கப் பிரவா கிக்கும்
இனிமைத் தமிழ் என்பேன்
**********
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
நா. கணேசன்
On May 23, 9:51 pm, Kavingar Jawaharlal
<kavingar.jawahar...@gmail.com> wrote:
> கொட்டு முரசே!
>
> கோலநெடு வான்பரப்பில் நீந்து மதியாய்-வண்ணக்
> கோவைதனைப் பூமியிலே காட்டுங் கதிராய்க்
> காலமெனுந் தேவமகள் சூடு மணியாய்-எங்கள்
> கன்னிமொழி வாழ்கவெனக் கொட்டு முரசே!
>
> ஞாலமெனுஞ் சோலையிலே பூத்த மலராய்-அந்த
> நாறுமலர்த் தேனினிமை காட்டுஞ் சுவையாய்
> சீலமெனும் போர்வையிலே போர்த்த பொருளாய்-நிற்கும்
> செல்வமகள் வாழ்கவெனக் கொட்டு முரசே!
>
> பூமியிலே வான்படைத்துக் காட்டுந் திருவாய்ச்-செல்வம்
> பொங்கிவர நல்லறத்தைக் கூட்டுந் துணையாய்க்
> கோமகளாய்ச் சீர்படைத்தே ஆண்ட தமிழே-இந்தக்
> குவலயத்தை ஆள்கவெனக் கொட்டு முரசே!
>
> பாடுங்குயி லோசையிலே தேருஞ் சுவையாய்-அதன்
> பண்ணினிமை கண்டுணர்ந்து போற்று முணர்வாய்
> ஆடுமயி லாடுமெழில் நாடும் நலமாய்- எங்கள்
> அழகுமொழி வாழ்கவெனக் கொட்டு முரசே!
>
> எட்டிவரு வேலதனைத் தட்டிப் பிடித்தே -மார்பில்
> இட்டதொரு வேலதனைக் கட்டிப் பறித்தே
> விட்டெறியும் வீரமறங் கட்டி வளர்த்த -எங்கள்
> வீரமகள் வாழ்கவெனக் கொட்டு முரசே!
>
> 2012/5/24 Kavingar Jawaharlal <kavingar.jawahar...@gmail.com>
>
>
>
>
>
>
>
>
>
> > நன்றி.மகிழ்ச்சி.
>
> > 2012/5/23 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>
>
> >> மிகவும் அருமையான விருத்தங்கள். பத்துச் சிறப்போடு சேர்ந்த ஒன்றாக இருக்கும்
> >> தமிழைப் புகழ்ந்த விதம் அழகு.
>
> >> அனந்த்
>
> >> 2012/5/23 Kavingar Jawaharlal <kavingar.jawahar...@gmail.com>
> > *பொற்கிழிக்கவிஞர்*
> > *டாக்டர். ச.சவகர்லால்*
> > கைபேசி : *+91- 9790846119*
> > kavingar-jawaharlal.blogspot.com
> > kaviingar.jawahar...@gmail.com
>
> --
> *பொற்கிழிக்கவிஞர்*
> *டாக்டர். ச.சவகர்லால்*
> கைபேசி : *+91- 9790846119*
> kavingar-jawaharlal.blogspot.com
> kaviingar.jawahar...@gmail.com

அன்பின் கவிஞர் சவகர்லால் ஐயா,
வணக்கம் கணக்கில. இவ்விழையில் சந்தவசந்தக் கவிஞர்கள்
தாங்கள் இயற்றியவையோ, அன்றேல் படித்தோ, கேட்டோ
சுவைத்த தமிழ்த்தாய் வாழ்த்துக்களை இங்கே பகிர்ந்துகொள்ள
வேண்டுகிறேன்.
தமிழின் முதல் தமிழ்த்தாய் வாழ்த்து பூவராகரின் நிலமடந்தையாக
தமிழகத்தை, தமிழை வாழ்த்தி, அடுத்த பாட்டில் கலைமகளாக
வில்லிபாரதத்தில் (14-ஆம் நூற்றாண்டு) பாடுவது. பின்னர்
உலகம் அறிந்தது கற்பனைக்க்களஞ்சியம் சிவப்பிரகாசரின்
தம்பி கருணைப்பிரகாசர் சீகாளத்திப் புராணத்தில் தமிழன்னையை
வணங்குதல். 19-ஆம் நூற்ராண்டில் வண்ணச்சரபம் தண்டபாணி
சுவாமிகள் பாடல்கள் பல தமிழ்த்தாய் மேல் உள்ளன.
மனோன்மணீயத்தில் கருணைப்பிரகாசர் பாடலைக் காட்டி
கொற்றவையாக [1], அவளின் அமிசமான சரசுவதியாய்
பெ. சுந்தரனார் பாடிய பாடல் தமிழ்நாட்டரசாங்கத்தின்
அதிகார பூர்வமான தமிழ்த்தாய் வாழ்த்தாக இலங்குகிறது.
உலகெங்கும் தமிழ்ச் சங்கங்களிலும், தமிழ்ப் பள்ளிகளிலும்
நிகழ்ச்சிகளின் முதல் பாடலாக, மோகன ராகத்தில்
எம்எஸ்வி - ராமமூர்த்தி இசைகட்டியபடி பாடப்படும் தமிழ்த்தாய்
வாழ்த்திது.
எனக்குத் தெரிந்த சில தமிழ்த்தாய் வாழ்த்துக்களை இங்கே
அளிக்கவும் விருப்பம்.
முதலில், கவிஞர் சவகர்லால் இயற்றிய தமிழ்த்தாய் வாழ்த்தை
இங்கே அளிக்க வேண்டுகோள். இதுவரை பாட்டியிராவிட்டால்,
ஒன்றோ, பஞ்சகமோ, பதிகமோ அளிக்க சவகர்லால் ஐயாவைக்
கோருகிறேன்
கவிஞர்கள் ஜவஹர்லால், இலந்தையார், கவியோகி, அனந்த், பசுபதி, ஹரிகி,
சிவ. சூரி, கிரிகாசன், வித்தியாசாகர், கலாம், தங்கமணி அம்மா,
மதுரபாரதி, சௌந்தர், குமார், நிரஞ்சன், இன்னும் இங்கிருப்போர்
தமிழ்த்தாய் வாழ்த்துக்களை அளிக்கவேண்டுகிறேன்.
நன்றி,
நா. கணேசன்
குறிப்பு [1]: கொற்றவை வணக்கம் பாரதத்தில் அரதப் பழசு.
பாவை, தையல், கன்னி என்னும் சின்னஞ்சிறுபெண் அவள்.
மீனாட்சி ஆட்சியால் பாண்டிநாட்டுக்கு கன்னிநாடு என்று ஒரு
பெயருண்டு. கொற்றி/துர்க்கை வணக்கம் சைவர், சமணர், வைணவர்
எல்லாருக்கும் உண்டு. பாகவதம் விளக்குகிறது. பாவைப்
பாடல்கள் அவற்றாலெழுந்தவை. கொற்றவை வாழ்த்தே
தமிழ்த்தாய் வாழ்த்து. மகரத்துக்குத் தமிழ்ப் பெயர் தை.
இதை எந்தை, முந்தை, நுந்தை/உந்தை, ... இவற்றில் காணலாகும்.
மகர விடங்கர் - கொற்றவை சம்பந்தத்தை தமிழ்ப் பல்கலை
நிறுவிய வ. ஐ. சுப்பிரமணியம் ஐயா அஞ்சலி மலரில்
(கேரள/மத்திய அரசுகள் வெளியிட்டது) எழுதினேன்.
அதை பிடிஎப் கோப்பாக இங்கே பெறலாம்:
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
2012-05-25
திருத்தமிழ்
கற்க!
(மாலைமாற்று)
-----------------
மேருவன
சீர்வருவ கற்க தேந்தமிழ்
வால்விடைய ரேதே
தேரே
யடைவில்வாழ் மிதந்தே கற்க
வருவர்சீ னவருமே!
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
தாவத் தவித்திடும் முல்லைக்குத் தேரினைத்
. . தந்த தெவருடைக் கை? -- மொழிக்
காவலர் காமுறும் தொன்மை இலக்கணக்
. . காப்பிய நாயகி கை. (2)
அன்பும் இறையும் இரண்டிலை ஒன்றென
. . ஆய்வுகள் செய்தவர் யார் ? -- திரு
மந்திரம் ஓதிய மாமுனி முத்தமிழ்
. . மாதவள் செல்வ மகன். (3)
கறையான் அரித்த சுவடிகள் தேடிக்
. . களைத்த தெவருடைக் கால்? -- நான்
மறையென மாண்புறு முப்பால் வழங்கிய
. . வண்டமிழ் அன்னையின் கால். (4)
பண்ணிசை கூத்தியல் யாப்பியல் நல்கிப்
. . பகுத்தது யார் அறிவு? -- எந்த
மண்ணும் அறிந்திடாச் சந்தம் நிறைதமிழ்
. . மாதாவின் கூர் அறிவு. (5)
யாவரும் எம்மவர் யாதுமே நம்நகர்
. . என்றசொல் யாருடைச் சொல்? -- சங்கப்
பாவலர் பாட்டிசைப் பாணரைப் பெற்றவள்
. . பைந்தமிழ் அன்னையின் சொல். (6)
தமிழ்த்தாய்
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
தமிழ்த்தாய்
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
குடிபடை வீரம் காதல்
..குடிகொளும் பக்தி நேயம்
...கொண்டிடும் பாங்கு சாற்றும்
படிபுகழ் காவி யங்கள்
..பனுவலின் உன்ன தங்கள்
...பைந்தமிழ்ப் பாவ ளங்கள்
பொடியணி ஈச னாரும்
..புனிதமாம் சங்க மாய்ந்த
...பொற்பெனப் பல்வி தத்தில்
முடியுடை மூவர் செங்கோல்
..முறையினிற் போற்றிக் காத்த
...முத்தமிழ் வாழ்க மாதோ!
அன்புடன்,
தங்கமணி.
On May 28, 4:23 pm, Pas Pasupathy <pas.pasupa...@gmail.com> wrote:
> இத்தகைய அருமையான கவிதைகளை எழுதும் ஒருவர் இக்குழுவில் இருக்கிறார் என்பதை
> நினைக்கவே பெருமை பொங்குகிறது.
>
> வாழ்க!
>
> 2012/5/28 Lalitha & Suryanarayanan <lallis...@gmail.com>
>
>
>
>
>
>
>
> > *தமிழ்த்தாய் *
> ...
>
> read more »
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
தமிழ்த்தாய்
மிக அருமை! இன்றைய தண்டியலங்கார உரையில் காட்டாகக் கொடுக்கப் படவேண்டிய பாடல்.( சிங்கையில் தமிழ்ப் பேராசிரியர் திரு சுப. திண்ணப்பன் அவர்களிடம் சீனப் பெண்மணிகள் தமிழ் கற்றனர் என்று என்றோ படித்தது நினைவுக்கு வந்தது.)2012/5/26 Siva Siva <naya...@gmail.com>2012-05-25
திருத்தமிழ் கற்க! (மாலைமாற்று)
-----------------
மேருவன சீர்வருவ கற்க தேந்தமிழ் வால்விடைய ரேதே
தேரே யடைவில்வாழ் மிதந்தே கற்க வருவர்சீ னவருமே!
பதம்
பிரித்து:
மேரு
அன சீர் வருவ;
கற்க,
தேம்
தமிழ்;
வால்
விடையரே தே,
தேர்;
ஏய்;
அடைவில்
வாழ் மிதந்தே;
கற்க
வருவர் சீனவருமே.
அன்புள்ள சிவ சூரி,
அழகு! அற்புதம் !! அன்பு !!!
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
இத்தகைய அருமையான கவிதைகளை எழுதும் ஒருவர் இக்குழுவில் இருக்கிறார் என்பதை நினைக்கவே பெருமை பொங்குகிறது.வாழ்க!
--
--
திருவெழுகூற் றிருக்கை செய்த ளித்துச்
சீருடனே ஆடுமோகை சிறப்பைக் கண்டு
--> முதல் அரையடியை இவ்வாறு பிரிக்கவேண்டுமோ? - "திருவெழு கூற்றிருக்கை செய்த ளித்துச்"
(அன்றேல் 2ம் சீர் மாச்சீராவதால், 3ம் சீர் நிரையசையில் தொடங்கவேண்டும் என்று எண்ணுகீறேன்).
மண்சீர் தமிழ் மணக்கும் பதின்மூன்றுஎண்சீர் விருத்தம் இனிது2012/5/28 Lalitha & Suryanarayanan <lall...@gmail.com>
தமிழ்த்தாய்
--
சந்தவசந்தக் குழுவின் முதல் கவியரங்கத்தில் நான் இட்ட ஒரு பாடலை இந்தத் தொகுப்பிற்காக மீண்டும் கீழே தந்துள்ளேன். அதற்கு முன்னுரையாக இன்றெழுதிய பாடல் ஒன்றை முதலில் இட்டுள்ளேன்:
..அனந்த் 28-5-2012
<> தமிழ்த்தாய் வாழ்த்து <>
எத்தனை கவிஞரும் எத்தனை அறிஞரும் அன்னையுன் எழிலை எண்ணி
.. எழுதியும் பாடியும் ஏத்திய பின்னரும் இன்னுமுன் ஏற்ற மெல்லாம்
சித்திரித் திலரெனும் சீர்த்தியைக் கொண்டனை; சிந்தனை செய்யுங் காலை
.. திறந்தவான் வெளியெனத் திகழுமுன் சிறப்பெலாம் சிக்குமோ எழுதுகோலில்?
முத்தமிழ்க் கடலிலே மூழ்கிய புலவர்கள் முதிர்ந்தபல் கோடி முத்தை
.. மொண்டெமக் களித்ததால்
விளைந்ததோர் களிப்பினில் மிதந்துன திளமை போற்றி
இத்தினம் தன்னிலிவ் வெளியனேன் இயற்றுமிச் சிறியதோர் கவிதை என்னும்
… இன்மலர் தன்னைநீ இகழ்ந்திடா(து)
ஏற்றெனக் கின்னருள் புரிகுவாயே.
*
எனக்குள்ஒரு புனலாய்ச்சிறு நதியாய்அலை கடலாய்
.... இழைந்தோடுநல் லமுதேஇயல் இசைநாடகத் தமிழே!
மணக்கும்புது மலரேஎழிற் பொழிலேகவின் வனமே
.... வருடும்மிளந் துளிரேஉயர் பொதிகைவளர் மொழியே!
நினைக்கும்பொழு(து) எளிதேமனம் நிறைந்தென்கரம் வழியே
.... நெடுநாள்நிலை கவியாய்உரு வெடுக்கும்என துயிரே!
உனைக்கும்பிட உனைஏத்திட உயரும்உன(து) அடியேன்
.... ஒருநாளொரு பொழுதாகிலும் மறவேன்உன தருளே!
*
எனக்குள்ளொரு துணையாய்ப்புது உறவாய்ப்பெரு நிதியாய்
.... இணையும்படி இனிதெய்திய பலதோழர்கள் உலகம்
அனைத்தும்நிறை கவிபாடுநர் அவரோடள வளவி
.... அடையும்சுகம் அடடா!அது பெரிதேமிக அரிதே!
வனைக்கும்பல கவியோவிய மடலாம்அவை மனத்தில்
.... வளர்க்கும்உணர் வதனால்வரு நெகிழ்வால்நம துடலம்
நனைக்கும்விழி மழையேதமிழ் புரக்கும்புனல் புவியில்
.... நமக்கென்றொரு இடமேபெற வழிகாட்டிடும் அதுவே!
*
எனக்குள்ஒரு நிலவாயெரி கதிராயகல் விளக்காய்
.... இருள்நீக்கிடும் ஒளியேபழ மறையேஎன(து) இறையே!
மனக்கோவிலில் புகுவாய்அதில் உனைக்காட்டியென் உளநோய்
..... மறைந்தேகிடத் தருவாய்உன தருளானநல் மருந்தே
கனக்கும்பவச் சுமைதாங்கிட இயலாமலுன் கழலே
.... கதியேஎன வருமேழையின் கவல்தீர்த்திடும் நிழலே
தனக்குள்உனைத் தெளிவாயெவன் அறிவானவன் அகத்தே
.... தழைக்கும்சுக நிலையேஎனைத் தலையாட்கொளும் பரமே!
*****2012/5/22 naa.g...@gmail.com <naa.g...@gmail.com>
கவிஞர்கள் ஜவஹர்லால், இலந்தையார், கவியோகி, அனந்த், பசுபதி, ஹரிகி,
சிவ. சூரி, கிரிகாசன், வித்தியாசாகர், கலாம், தங்கமணி அம்மா,
மதுரபாரதி, சௌந்தர், குமார், நிரஞ்சன், இன்னும் இங்கிருப்போர்
தமிழ்த்தாய் வாழ்த்துக்களை அளிக்கவேண்டுகிறேன்.
நன்றி,
நா. கணேசன்
--
2012-05-28
தேர்
ஆணை துதைந்த தமிழ்!
(மாலைமாற்று)
-----------------
வாகா
வாய்தேர்வா யாணை துதைந்த
தமிழாவா
வாழா
மிததந்தை துணையா வார்தேய்
வாகாவா
பதம்
பிரித்து:
வாகு
ஆவாய்;
தேர்வாய்
ஆணை துதைந்த தமிழ்;
ஆ ஆ
ஆழா
மித;
தந்தை
துணை ஆவார்;
தேய்வு
ஆகா;
வா!
உரைநடை:
வா!
தேர்வாய்
ஆணை (/ஆண்
ஐ) துதைந்த
தமிழ்;
தந்தை
துணை ஆவார்;
ஆ ஆ ஆழா
மித;
தேய்வு
ஆகா;
வாகு
ஆவாய்!
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
2012-05-25
திருத்தமிழ் கற்க! (மாலைமாற்று)
-----------------
மேருவன சீர்வருவ கற்க தேந்தமிழ் வால்விடைய ரேதே
தேரே யடைவில்வாழ் மிதந்தே கற்க வருவர்சீ னவருமே!
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
சென்ற வருடம் நமது இணையத்தில் இட்டிருந்த ஒரு வாழ்த்துப் பாடலைச் சற்று மாற்றம் செய்து இங்கே இடுகின்றேன்.
1)
கூடல் திருநகரில் கூடிக் களித்திருந்த
பாடற் தொழில்செய்யும் பைந்தமிழ்ச் சங்கத்தார்
ஏடில் இருந்தம்மை ஈதென்ன விந்தையின்றே
ஈடில் மொழியம்மை இன்னமுத ஊற்றம்மை
கேடில் விழுச்செல்வம் கேளாது தந்தம்மை
வாடும் பயிர்க்கெல்லாம் வான்மழை போலம்மை
கூடிக் களித்தே கணேசனார் மூலமெனைப்
பாடிடச் சொன்னாயோ பாட்டேலோர் எம்பாவாய்.
2)
அன்னை இடம்வைத்த ஆலங் குடியானை
மின்னும் பிறையானை விண்ணின் நதியானை
முன்னைப் பழம்பொருளை முத்துக் கவித்தமிழில்
கன்னற் கிணையான கள்ளின் சுவையாகத்
தன்னிகர் இல்லாத தன்மைத்தாய்த் தந்தாரே
மன்னும் உலகிற்கே மாணிக்க வாசகர்
என்றாலும் போதாமல் இன்னும் கவிகேட்டாய்
என்நண்பர் மூலந்தான் இன்றேலோர் எம்பாவாய்.
3)
உற்றம் உறவெல்லாம் உன்னோடு தானென்று
பெற்றங்கள் மேய்த்தானைப் பற்றித்தான் பாடல்கள்
வற்றாத ஊற்றாக வஞ்சிக் கொடியாளே
கற்றாரும் மற்றாரும் எற்றைக்கும் இன்புறவே
அற்றைக்கே தந்தாளே ஆண்டாளை எண்ணாயோ
கற்றைக் குழல்முடியாய் கன்னித் தமிழுன்னைப்
பற்றித்தான் பாடல்கள் போதெல்லாம் செய்யென்று
சற்றுத்தான் கேட்டாயோ தாயேலோர் எம்பாவாய்.
4)
வங்கித் தொழிலென்னும் வேலையில் ஓய்வுபெற்றுத்
தங்கத் தமிழுன்னைத் தான்பாடி நிற்கின்றேன்
பொங்கும் உணர்வோடு புத்தம் புதிதாக
மங்காத மாக்கவிதை மண்ணில்நான் செய்திடவே
இங்கென்னைக் காப்பதுவே இன்றுமுதல் உன்கடனாம்
தங்குதடை இல்லாமல் தாரணியில் சீருடனே
எங்கெங்கு சென்றாலும் ஏற்றங்கள் தந்திடுக
சங்கத் தமிழன் எனக்கேலோர் எம்பாவாய்.
.சிவ சூரியநாராயணன்.
*
தமிழ்த்தாய்
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
சென்ற வருடம் நமது இணையத்தில் இட்டிருந்த ஒரு வாழ்த்துப் பாடலைச் சற்று மாற்றம் செய்து இங்கே இடுகின்றேன்.
*
நன்றி. இயற்றிடும் என்று மாற்றியுள்ளேன்.
எத்தனை கவிஞரும் எத்தனை அறிஞரும் அன்னையுன் எழிலை எண்ணி
.. எழுதியும் பாடியும் ஏத்திய பின்னரும் இன்னுமுன் ஏற்ற மெல்லாம்
சித்திரித் திலரெனும் சீர்த்தியைக் கொண்டனை; சிந்தனை செய்யுங் காலை
.. திறந்தவான் வெளியெனத் திகழுமுன் சிறப்பெலாம் சிக்குமோ எழுதுகோலில்?
முத்தமிழ்க் கடலிலே மூழ்கிய புலவர்கள் முதிர்ந்தபல் கோடி முத்தை
.. மொண்டெமக் களித்ததால்
விளைந்ததோர் களிப்பினில் மிதந்துன திளமை போற்றி
இத்தினம் தன்னிலிவ் வெளியனேன் இயற்றிடும் சிறியதோர் கவிதை என்னும்
… இம்மலர் தன்னைநீ இகழ்ந்திடா(து) ஏற்றெனக் கின்னருள் புரிகுவாயே.இனிய பாடல்கள்.
/இயற்றுமிச் சிறியதோர் கவிதை என்னும்… இம்மலர் தன்னை/
'இ' என்று சுட்டு இருமுறை வருகிறதோ?
'இயற்றிய' என்று இருக்கலாமோ?
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
2012/5/28 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>
>> இன்மலர் தன்னைநீ இகழ்ந்திடா(து) ஏற்றெனக் கின்னருள் புரிகுவாயே.
”இம்மலர் தன்னைநீ இகழ்ந்திடா(து) ஏற்றெனக் கின்னருள் புரிகுவாயே.” - என்று திருத்திப் படிக்கவும்
அனந்த்
*
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
வெள்ளியாய் மிளிர்கவே!
கொடிமுல்லைச்
சிந்தும் குளிர்மணத்தைக் கூட்டி
அடிவானம் தீட்டு மழகெழிலைச் சேர்த்துப்
படிக்கின்றச் செம்மரபுப் பாட்டே! தமிழே!
விடிவெள்ளி போல்மிளிர்க வே!
என்னில் உறைந்தவளே!
தமிழே!
அன்பைப் பொழிந்திடும் அன்னை யுருவெனும் அற்புதமாய்;
கன்னல் சிரிப்புடன் பிள்ளை வடிவெனும்
கற்பகமாய்;
பொன்னின் நிறத்துடன் நித்தம் எழுந்திடும் பொற்கதிராய்;
என்னி
லுறைந்தெனை யென்றும் வளர்த்திடும் எந்தமிழே!
விண்ணி லுலவிடும் தண்மை
யுருவெனும் வெண்ணிலவாய்;
கண்ணைச் சுழற்றியே கன்னம் சிவந்திடும்
கன்னிகையாய்:
மண்ணில் பொழிந்திடும் கொண்டல் அனையநற் பண்ணிசையாய்;
எண்ணம்
நிறைந்தெனை என்றும் வளர்த்திடும் இன்தமிழே!
துள்ளி யெழுந்திடும் பொங்கு திரைக்கடல்
சூழ்வதுபோல்;
அள்ளித் தருந்தமிழ் ஆற்றல் வளர்த்திடும் ஆர்வமுடன்;
தெள்ள
முதச்சுவை பொங்க நறுங்கவி செய்திடவே,
உள்ள முறைந்தெனை யென்றும்
உயர்த்திடும் ஒண்டமிழே!
தமிழ்த் தாயே!
பரிவே!
தனையே தருமுயர் தாயின் பரிவே!
நினைவே நெருப்பின் நிழலாய் எரிய,
வனைந்து வளர்க்கும் வளமை வடிவே;
பனித்துளித் பூத்தப் பசுமைப் படர்வே!
கனிமலைத் தேறல் கனிவே! புலவர்
புனைகவிச் சாரல் பொழிவே! புவியில்
எனையே உயர்த்தும் எழிலே! தமிழே!
வண்டமிழே
வாழியவே!
மலர்க்காவாய், மனம்நாடும்
மழலைத் தேனாய்,
.....வஞ்சியர்கள் நாடுகின்ற வண்ணப் பூவாய்,
புலர்காலைக்
காட்சியெனும் பனிப்பூப் போர்த்த
.....பூமியதன் புத்தமிழ்த மாட்சி
மையாய்,
சிலிர்த்திருக்க சிந்தையள்ளும் தென்றல் காற்றாய்,
.....தித்திக்கும்
தேன்பாகாய் நாவில் ஊறி,
வலிமையுடன் வந்தெதிர்க்கும் பகைவர்
தம்மை
.....வகுந்தெடுக்கும் வண்டமிழே வாழ்க தாயே!
தமிழ் அழலே
எழுகவே!
கனலாய்நிதந் துயிலில்வருங் கனவாய்நம
துணர்வில்
தினமும்நமை யழிக்கும்பகைச் சினமாய்நம தெதிரில்
மனிதந்தகர்
நலிவாங்கொடு வழியையழித் திடவே
அனலாய்க்கலந் துறையுந்தமி ழழலேயென
எழுவாய்!
தமிழவளும் ஓங்குகவே!
ஆன்றதோர்
தமிழன்பால் அறிவுசால் நன்னெறியால்
தேன்கனி நிகர்ப்பண்ணால்
சிறந்தநற் பாவலர்காள்;
வான்புகழ்க் கவிச்சொல்லால் வளமொடு
பாடுகின்றீர்
சான்றுடைத் தமிழவளும் சழக்கற ஓங்கிடவே!
ஆழ்கடல் அலைவீச்சை
அழித்திடும் ஆர்ப்பரிப்பை
சூழ்ந்திடும் செருபகையைத் தருக்கரின்
தாக்குதலை
வாழ்தமிழ் எதிர்த்தழகாய் வளர்ந்ததைப் பாடுகின்றீர்
தாழ்விலாத்
தமிழவளும் தளர்வற ஓங்கிடவே!
கவியெனச்
செதுக்கினையே
எண்ணக் கடலது என்று மிரைந்திட
வண்ணக்
கலையினில் மல்லைச் சிலையினில்
கண்ணன் குழலினில் கன்னற் சுவையினில்
விண்ணும்
கிறுக்கிடும் மின்னல் கொடியினில்
கண்கள் தொடுவதைக் கைகள் சடுதியில்
பண்கள்
புனைந்திடப் பாட்டும் இசைத்திட
மண்ணில் கவியென என்னைச் செதுக்கவே
என்னி
லுறைந்தவ ளே!
என்னை உயர்த்தும் எழிலே!
தமிழே!
கன்றிவிட்ட உள்ளத்தில் காராழிப்
பேரலைபோல்
பின்னல்கள் சிக்கலெனப் பீடிக்கும் ஆசையற
இன்றிங்கே நானறிந்தேன்;
என்றென்றும் எந்தமிழே
என்னை உயர்த்து மெழில்!
புன்மையெனுந் தீயதனில்
புத்தழகுப் பொய்யதனில்
நன்மையென நான்மயங்கி நாடோறும் வீழ்ந்துழல,
முன்னவரின்
நற்செயலால் முத்தமிழே காவலென
என்னை உயர்த்து மெழில்!
இன்னல்கள்
ஆர்ப்பரிக்கும் இப்பிறப்பாம் ஆழியிலே,
என்னுள்ளம் ஓயா தெரிகையிலே,
நான்வணங்கும்
உன்னதமா யென்னுள்ளே உட்போந்த செந்தமிழே
என்னை உயர்த்து
மெழில்.
என்னென்றும் ஏதென்றும் எங்கெங்கோ கூர்ந்தாய்ந்தே
அன்பதனை
ஆற்றலினை அங்கெங்கோ தேடுகையில்
தன்னறிவாய் சத்தியத்தைத் தந்துவிட்ட
தீந்தமிழே
என்னை உயர்த்து மெழில்.
என்னில் கண்டதைத்
தந்தவளே!
என்வாழ்விலே விளைந்திட்டநல்
ஏற்றங்களும்
என்தாழ்விலே முளைத்திட்டசொற் றூற்றல்களும்
என்னாற்றலால்
தான்வந்ததாய் அன்றெண்ணினேன்!
பைந்தமிழ்
அன்னையி னருளதால்
தெளிகிறேன்,
கண்டதைத் தந்ததுங் கன்னலாந் தமிழே!
செய்ந்நன்றி மறப்பேனோ தமிழே!
என்வாழ்வும் என்வளமும் எனதுயிரும்,
.....என்மெய்யும் உன்னருளா
லியங்குதடி!
என்னுள்ளில் நீயிருந்தே இயக்குகிறாய்;
.....எந்நாளுந் தேந்தமிழே
இயங்குகிறேன்!
என்னெண்ணம் அத்தனையுந் தமிழதுவாய்,
.....இன்றிங்கே ஆனதுவும்
உனதுயர்வால்!
என்வாழ்க்கை இன்றிருக்கும் இயல்பினுக்கே,
.....என்நன்றி
சொல்லுவனோ
தமிழணங்கே!
===================
அன்பன்
இராஜ.தியாகராஜன்
அருமையான தமிழ்த்தாய் போற்றிப் பாடல்கள். சங்க இலக்கியத்தில்
முக்கியமானது அகவல் யாப்பே.
ஆசிரியப்பாவில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒன்று எழுத விண்ணப்பிக்கிறேன்.
ஸ்ரீரங்கம் மோகனரங்கனார்,
... இன்னும் பலர் பங்கு பெற வேண்டுகிறேன். வசனகவிதையாக நிரஞ்சன் பாரதி
எழுதலாமே.
பாற்கரன் முத்துசாமி, ... எல்லோரும் எழுதுங்கள்.
அன்புடன்
நா. கணேசன்
அன்புள்ள சூரி,
உங்களுடைய அருமையான கவிதைப் பூங்கொத்தை இப்போதுதான் முழுமையாகப் படித்தேன். தங்கு தடையின்றிப் பொங்கிவரும் கற்பனைப் பிரவாகம் கவிதை உருக்கொள்ள வைப்பதில் நீர் கைவந்தவர் என்பதற்கு மேலுமொரு சான்று. வாழ்த்துகள்!
…அனந்த் 31-5-2012
தமிழ்த்தாய்
1)
எங்களது செந்தமிழின் எழிலைக் கொஞ்சம்
எடுத்துரைக்கும் எண்ணமுடன் இங்கே வந்தேன்!
சிவ சூரியநாராயணன்.
On Jun 1, 2:41 am, Kavingar Jawaharlal <kavingar.jawahar...@gmail.com>
wrote:
> நல்ல பாடல்கள் .
>
ஆம் ஐயா. இவ்விழையில் வந்துள்ள பாடல்களைத் தமிழ்த்தாய் உவந்தேற்பாள்.
அன்புடன்
நா. கணேசன்
> 2012/6/1 RAJAGOPALAN APPAN <appan.rajagopa...@gmail.com>
>
>
>
>
>
>
>
>
>
> > வாழ்க தமிழ் மொழி
>
> > நெற்றித் திலகமென நீயணிந்த முப்பாலும்
> > பொற்பாதச் சிலம்பும் புனைமகுடம் கம்பன்செய்
> > சொற்கோலம் என்றமர்ந்த செந்தமிழே நின்னழகு
> > நிற்குமென் நெஞ்சில் நிலைத்து.
>
> > எண்ண மெல்லாம் என்னை யன்றி ஏது மற்ற நாளிவர்ந்து
> > அன்னை யென்று நின்றே என்னை யாத ரித்து மாற்றினை!
> > எண்ணி லாத நூல்க ளாயி லக்கி யங்கள் காட்டிநீயே
> > கன்னி யாக மாறி நின்று காத லின்ப மூட்டினை!
>
> > மேக வண்ணன் ஆதி நாதன் மண்ணி லன்று தித்துராம(ன்)
> > ஆக வந்த காதை சொன்ன கம்ப செல்வ முன்னதே!
> > சோக முற்று ராச மன்றில் சிலம்பு சூளு ரைத்துநீதி
> > தாக முற்றே ஊரெ ரித்த பெண்மை யுந்தன் பெண்மையே!
>
> > வேத நூல டக்க மிங்கும் வேண்டு மென்றி யற்றிவைத்து
> > ஓது கின்ற பாசு ரங்க ளோசை யின்ப முன்னதே!
> > சோதி மிக்க பாட லால்சு டர்ந்தொ ளிர்ந்த பாரதிக்கு,
> > யாது மாகி நின்ற சக்தி உன்னை யன்றி வேறுயார்?
>
> > பத்து எட்டு கீழ்க்க ணக்கு மென்ற மொத்த நூல்களோடு
> > சித்தர் மூலர் ஞான மென்று சேர்ந்த சொத்து மெத்தனை?
> > ஒத்த தென்றே ஒன்றி லாவு யர்வு கொண்டு நின்றனை
> > நித்த மாய்ச்சி றந்தி ருந்து வாழ்க வாழ்க வாழ்கவே!
>
> > சென்னை பாரதி கலைக்கழகம் 58ம் ஆண்டு விழாவில் பாடியது.
>
> > அ.ரா
> > Visit arajagopalan.blogspot.com
>
> > 2012/5/31 naa.gane...@gmail.com <naa.gane...@gmail.com>
> *பொற்கிழிக்கவிஞர்*
> *டாக்டர். ச.சவகர்லால்*
> கைபேசி : *+91- 9790846119*
> kavingar-jawaharlal.blogspot.com
> kaviingar.jawahar...@gmail.com
In the lower socioeconomic strata, where learning English is aspirational, the language is trickling down quickly. Neighborhood private schools have unstated admission requirements: at 3 and 4, the child is required to be toilet-trained and speak English.
Parents who stretch their family budgets to get their children into “English medium” schools see that the language has obvious economic benefits in an increasingly globalized world. Higher up the economic ladder, though, it is a matter of convenience.
Rimjhim Chakraborty is 9. Her mother, Pinky, a realtor, speaks Sindhi, a language from the northwest. Rimjhim’s father, Apurba, who heads sourcing for a sporting goods multinational, is fluent in both Punjabi and Bengali. Rimjhim, despite learning Hindi at school, refuses to answer when spoken to in anything other than English. So that is the language that rules the Chakraborty household.
That is unfortunate, says her mother, who wants to make an effort to teach Rimjhim an Indian language. But “between her math homework, sports, a little bit of PlayStation and television, where is the time?” Ms. Chakraborty asks.
She ends up scolding Rimjhim in Sindhi. “Not the best introduction to a language,” she admits.
Then she makes a dire prediction: “At the rate we are going, all Indian languages will die.”
தமிழ்த்தாய் வாழ்த்து:
-----------------------
வைய மீன்ற தொன்மக்கள் உளத்தினைக்
கையி னாலுரை காலம் இரிந்திடப்
பைய நாவை அசைத்த பசுந்தமிழ்
ஐயை தாள்தலைக் கொண்டு பணிகுவாம்
பள்ளியகரம் நீ. கந்தசாமிப்பிள்ளையவர்கள்
கரந்தைத் தமிழ்ச் சங்கம் (நிறுவுநர்)
பாரதத்தின் பழமையை அறிய இரண்டு செம்மொழிகள்தான் முக்கியமானவை:
(1) தமிழ் (2) சம்ஸ்க்ருதம். பல நூறு மடங்கு பழைய இலக்கியங்களை
சம்ஸ்க்ருதம் கொண்டுள்ளது. பல மதங்களின் ஆராய்ச்சிக்கும், இந்தியாவின்
கணிதம், விஞ்ஞானம், ... ஆராயவும் அவை துணைவருகின்றன. இந்தியாவின்
பழைய பல்துறைகளை ஆராயவும், இந்தியாவின் தாக்கம் மத்திய ஆசியாவிலும்,
தென்கிழக்கு ஆசியாவிலும், சீனாவிலும், திபெத்திலும் என்று
பார்க்கப்பயன்படுகிறது.
அவ்வளவு விரிவான நூல்கள் பழமையுடன் இல்லாவிடினும், ஆரியமொழி
இலக்கியங்களுக்கு இணையாக செந்தமிழ் இலக்கியங்கள் வைக்கப்படுவது,
ஆரியத்தில் இந்தியாவின் பழமை பற்றிச் சொல்லாத விஷயங்கள் செந்தமிழிலே
சொல்லப்படுவது தமிழின் முக்கியமான தனிச்சிறப்புகளில் ஒன்று.
சிந்து சமவெளி நாகரீகத்தின் பல கூறுகளை ஆராயத் தமிழ் இலக்கியங்கள்
உதவுகின்றன. அதைத் தமிழின் இன்றியமையாத தனிச்சிறப்புகளின் ஒன்றெனச்
சாற்றலாம்.
நா. கணேசன்