இன்று ஏகாதஶி!

8 views
Skip to first unread message

Parthasarathy S

unread,
Feb 26, 2026, 8:01:41 PMFeb 26
to santhav...@googlegroups.com

இன்று 27-02-26- ஏகாதஶி! அடியேன் எம்பெருமானுக்கிடும் அறுசீர் விருத்தம்!

 

யையுடையேய் தரணியிலே தெரிவதெலாம்

                              தவழுமிடம் நினதுமடி அரிவரெவர்?

 

மயலறுத்து மனிதகுலம் மகிழ்ந்திடவே

                              மறையளித்தாய் முகுந்தனுனை மறத்தலுமேன்?

 

நவையறுத்த குணமுடைத்த நினதருளால்

                              நடையறிந்து நடப்பதற்கு நலனிடுவாய்

 

சுவையறிந்து சுகம்பெறவே சுழலுமெனை

                              சுருதிவழி சிறையறுப்பாய் சிரீதரனே!

 

  _புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்_


--
S. Parthasarathy

+91 98441 24542/9980794542

Parthasarathy S

unread,
Feb 26, 2026, 8:06:30 PMFeb 26
to santhav...@googlegroups.com
அடியேன், 

சுழலுமெனைச் சுருதிவழி என்று வாசிக்கவும்.


தாஸன்

--
S. Parthasarathy
Director - Finance
Good Earth - building sustainable communities
www.goodearthhomes.net
+91 98441 24542

Parthasarathy S

unread,
Feb 26, 2026, 8:26:51 PMFeb 26
to santhav...@googlegroups.com

இன்று 27-02-26- ஏகாதஶி! அடியேன் எம்பெருமானுக்கிடும் அறுசீர் விருத்தம்! எழுத்துப்பிழையைச்சரிசெய்து மீள்பதிவிட்டுளேன்.

 

யையுடையேய் தரணியிலே தெரிவதெலாம்

                              தவழுமிடம் நினதுமடி அறிவரெவர்?

 

மயலறுத்து மனிதகுலம் மகிழ்ந்திடவே

                              மறையளித்தாய் முகுந்தனுனை மறத்தலுமேன்?

 

நவையறுத்த குணமுடைத்த நினதருளால்

                              நடையறிந்து நடப்பதற்கு நலனிடுவாய்

 

சுவையறிந்து சுகம்பெறவே சுழலுமெனைச்

                              சுருதிவழிச் சிறையறுப்பாய் சிரீதரனே!

 

  _புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதிபெங்களூர்_

Parthasarathy S

unread,
Mar 15, 2026, 10:23:20 AMMar 15
to santhav...@googlegroups.com
_இன்று 15-03-26 ஏகாதஶி, எம்பெருமானுக்காய் அடியேன் இட்ட எண்சீர் விருத்தம். உங்கள் அனுபவத்திற்காக.

வெண்ணைக்காய் அழுதவெங்கள் வேணு கோபாலா!
                     விருந்தெல்லம் விடுத்தன்று வீதி சேர்ந்திட்டாய்!
மண்ணைத்தான் தின்றதுமே மாதா வுன்வாயில்*
                     மன்னுலகேழ் கண்டிடவே! மாற்று வேறுண்டோ?
வண்ணத்தில் வடிவுகொளும் வாழ்வு தந்திட்டு*
                     வாயிலெம்மை விழுங்குவரை வாட வைப்பாயோ!
எண்ணத்தில் உன்னுருவை எட்ட முயன்றதையே
                       எந்தவொரு அன்னைக்குக் காட்டி யருள்வாயோ!



_*புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்*_

Parthasarathy S

unread,
Apr 12, 2026, 11:14:54 PMApr 12
to santhav...@googlegroups.com
_இன்று 13.04.26 ஏகாதஶிக்கு அடியேனின் எண்சீர் விருத்தம்.  இன்று உங்கள் அனுபவத்திற்கு,_

தொடர்வினையில் தோய்ந்திருக்கும் எண்ணம் மாற்றித்
               தெவிட்டாத உன்னருளைத் தருவாய் கண்ணா!
படருமிந்தப் பருவரல்கள் போக்கத் தானே
              பக்கமெல்லாம் நிறைந்தாய்யென் நீல மேகா!
அடல்கருடன் மீதமர்ந்துன் ஆற்றல் கூட்டி
             அம்மடுவில் ஆனைக்கோர் அருளீந் தாயே
தடம்புரளா தெனைநிறுத்தத் தாவி வந்தால்
              தனியரசே தகவுடையோய் தாழ்வென் றாமோ?

( பருவரல் -துன்பம்)

புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்

(for better reading in mobile read horizontally)
--
S. Parthasarathy
 98441 24542/9980794542

Parthasarathy S

unread,
Apr 27, 2026, 11:19:41 AMApr 27
to santhav...@googlegroups.com
ன்று 27.04.26 ஏகாதஶிக்கு அடியேனின் எண்சீர் விருத்தம்.   உங்கள் அனுபவத்திற்கு,_  *

*
கன்றெ டுத்துக் காயு குத்த
                     கண்ணா காளி யன்தன் உச்சி
இன்பு கொண்டு ஆட்ட மிட்ட
                    ஈசா ஆயர் ஆனி ரைக்கோர்
குன்றெ டுத்துக் காத்த கோவே
                   கொண்டல் வண்ணா கோதை நாதா
அன்பு கொண்ட னைத்தும் இட்டேன்
                    ஆத  ரித்துக் காப்பாய் ஆணே!


புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்                     for better reading in moble read horizontally

Parthasarathy S

unread,
May 13, 2026, 12:06:53 AM (3 days ago) May 13
to santhav...@googlegroups.com
_13.05.26 – ஏகாதசியை முன்னிட்டு அடியேனின் எண்சீர் ஆசிரிய விருத்தப் பா! உங்கள் அனுபவத்திற்கு!_

ஈரேழு புவனத்தில்  இயங்குமுயிர் எல்லாம்
                                இன்பமுற அவற்றுள்ளே இறையுமெங்கள் இறையே!
காரான  கமலமகள் கற்பகத்தை நெஞ்சில்*
                                கரவாது  நொடிப்போதும்  கருத்திடுமெம்  காப்பே!
வேரான வேதங்கள் விரித்தாயே மூச்சாய்*
                                 விருந்தாக விடையதிலே வைத்தாயே விமலா!
நேரான நிறைமாந்தர் நீரெனவே நாடும்
                                 நிமலாவுன் நிறைகுணமே நீடருளும் நாடே!


_புதுஅக்ரஹாரம்
எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்_
If you are in mobile read horizontally
Reply all
Reply to author
Forward
0 new messages