இன்று 27-02-26- ஏகாதஶி! அடியேன் எம்பெருமானுக்கிடும் அறுசீர் விருத்தம்!
தயையுடையேய் தரணியிலே தெரிவதெலாம்
தவழுமிடம் நினதுமடி அரிவரெவர்?
மயலறுத்து மனிதகுலம் மகிழ்ந்திடவே
மறையளித்தாய் முகுந்தனுனை மறத்தலுமேன்?
நவையறுத்த குணமுடைத்த நினதருளால்
நடையறிந்து நடப்பதற்கு நலனிடுவாய்
சுவையறிந்து சுகம்பெறவே சுழலுமெனை
சுருதிவழி சிறையறுப்பாய் சிரீதரனே!
_புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்_
சுழலுமெனைச் சுருதிவழி என்று வாசிக்கவும்.
தாஸன்
இன்று 27-02-26- ஏகாதஶி! அடியேன் எம்பெருமானுக்கிடும் அறுசீர் விருத்தம்! எழுத்துப்பிழையைச்சரிசெய்து மீள்பதிவிட்டுளேன்.
தயையுடையேய் தரணியிலே தெரிவதெலாம்
தவழுமிடம் நினதுமடி அறிவரெவர்?
மயலறுத்து மனிதகுலம் மகிழ்ந்திடவே
மறையளித்தாய் முகுந்தனுனை மறத்தலுமேன்?
நவையறுத்த குணமுடைத்த நினதருளால்
நடையறிந்து நடப்பதற்கு நலனிடுவாய்
சுவையறிந்து சுகம்பெறவே சுழலுமெனைச்
சுருதிவழிச் சிறையறுப்பாய் சிரீதரனே!
_புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்_