புத்தபகவானுடைய வாய்மொழிகள் அடங்கிய “தம்மபதம்” என்னும் நூலைத் “தம்மபத வெண்பா” வாகத் தமிழாக்கம் செய்யும் போது எனக்கும் இக்கேள்வி எழுந்தது.
தம்மபதத்தில் “ப்ரமாதம்” என்பது விழிப்பின்மை என்னும் பொருளிலேயே வருகிறது. சமஸ்கிருத அகராதியிலும் கீழ்க்கண்ட விளக்கங்களையே காண்கிறேன்:
प्रमादः pramādaḥ 1 Carelessness, negligence, inattention, inadvertence, oversight; विजिगीषुमिवानयप्रमादौ Ki.13.29; ज्ञातुं प्रमादस्खलितं न शक्यम् Ś.6.25; विद्यां प्रमादगुणितामिव चिन्तयामि Ch. P.1. -2Intoxication, drunkenness. -3 (a) Fainting, swoon. (b) Insanity, madness. -4 A mistake, blunder, mistaken judgment; Pt.1.39. -5 An accident, mishap, calamity, danger; अहो प्रमादः MāI.3; U.3
மேலும் ஆய்ந்து பார்த்ததில், ப்ரமாதம் என்னும் சமஸ்கிருதச் சொல்லுக்கு வேர்ச்சொல் “மதம்” (பித்து அல்லது மயக்கம்) என்று தெரியவந்தது. மதம் பிடித்த யானையும் மிகுந்த வலிமையுடன் செயற்கரிய செயல்கள் செய்வதைப் பார்க்கிறோம். அதனால் சிறப்பான செயல்கள் நடைபெறும்போது எதிர்மறைச் சொல்லான மதத்தைப் பயன்படுத்தி “ப்ர” என்னும் அடைமொழியைச் சேர்த்து “ப்ரமாதம்” என்கிறோம்.
இதேபோல், ஒருவரின் வேகத்தின் சிறப்பைச் சொல்லும்போது “அசுரன்” என்னும் எதிர்மறைச் சொல்லைப் பயன்படுத்தி “அசுர வேகம்” என்று சொல்வதில்லையா? அதுபோல் தான் இதுவும் என்று நினைக்கிறேன்.
ஆங்கிலத்திலும் இதுபோல் “insane performance” என்று சொல்வதையும் காணலாம்.
- இமயவரம்பன்