Re: "ஆய கலைகள்" என்பதில் "ஆய" என்பதன் பொருள் என்ன ?

1,295 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Sep 1, 2013, 5:50:07 PM9/1/13
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, Santhavasantham, thami...@googlegroups.com


On Sunday, September 1, 2013 7:07:13 AM UTC-7, Sanathani wrote:
"ஆய கலைகள்" என்பதில் "ஆய" என்பதன் பொருள் என்ன ?

ஆ- என்பதில் தோன்றுவது போலுள்ளது. ஆ- ஆகும்:ஆம், பார்க்கலாகும்:பார்க்கலாம் 

"ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய வுணர்விக்கும் என்னம்மை -- தூய 
உருப்பளிங்கு போல்வாள்என் உள்ளத்தி னுள்ளே
இருப்பளிங்கு வாரா திடர்."

--கம்ப நாடர்


”கலைகள் ஆய 64-ஐயும்” எனக் கூட்டுக.
கலைகள் ஆகிய 64 எனப் பொருள்.

ஆய = ஆகிய. இரண்டு உதாரணங்கள் தருகிறேன்.
இன்னும் ஏராளமானவை தமிழில் உள.

திருஎறும்பியூர்

பாடல் எண் : 1

பன்னியசெந் தமிழறியேன் கவியேன் மாட்டேன்
    எண்ணோடு பண்ணிறைந்த கலைக ளாய
தன்னையுந்
தன் திறத்தறியாப் பொறியி லேனைத்
     தன்திறமும் அறிவித்து நெறியுங் காட்டி
அன்னையையும் அத்தனையும் போல அன்பாய்
     அடைந்தேனைத் தொடர்ந்தென்னை யாளாக் கொண்ட
தென்எறும்பி யூர்மலைமேல் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.

பண்டு ஆய நான்மறையும் பால் அணுகா; மால், அயனும்,
கண்டாரும் இல்லை; கடையேனைத் தொண்டு ஆகக்
கொண்டருளும் கோகழி எம் கோமாற்கு, நெஞ்சமே!
உண்டாமோ கைம்மாறு? உரை.

நா. கணேசன்

Hari Krishnan

unread,
Sep 2, 2013, 10:45:06 PM9/2/13
to mintamil, vallamai, Santhavasantham, தமிழாயம்”

2013/9/3 Krishna Moorthi <tnkdc...@gmail.com>
ஆக மொத்தம் நாம எதிர்பாக்கும் ஆய கலைகள் என்பதற்கு இப்படித்தான் கம்பர் பதில் தெரிகிறது.

இந்த அன்பருடன் சேர்த்து, பிறருக்கும்.  ஆய கலைகள் அறுபத்து நான்கு என்ற தொடர், ‘ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்/ஏய உணர்விக்கும் என்னம்மை’ என்ற காளமேகத்தின் பாடலில் வருவது.

எனவே, பாடலில் உள்ளதை, கலைகள் ஆயவை அறுபத்து நான்கு என்று அன்வயப்படுத்திக் கொள்ள வேண்டும்.  கலைகளாக ஆகியவை என்பது பொருள்.


--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

Hari Krishnan

unread,
Sep 3, 2013, 12:01:28 AM9/3/13
to vallamai, mintamil, Santhavasantham, தமிழாயம்”

2013/9/3 என். சொக்கன் <ncho...@gmail.com>
அண்ணா,

கம்பர் என்று எழுத வந்து காளமேகத்தின் பெயரைக் குறிப்பிட்டுவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். கம்பரின் சரஸ்வதி அந்தாதியில் வரும் வெண்பா அது. பின்னர் பி. சுசீலாவின் அருமையான குரலில் ஏ. ஆர். ரஹ்மான் இசையில் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது:

எஸ்ஸு.  காளமேகம் பாட்டு--

வெள்ளைக் கலைஉடுத்து வெள்ளைப் பணிபூண்டு
வெள்ளைக் கமலத்தில் வீற்றிருப்பாள் - வெள்ளை
அரியா சனத்தில் அரசரேடு என்னைச்
சரியா சனம்வைத்த தாய்.

ஆயகலைகள் அறுபத்து நான்கினையும், கம்பர் பாட்டுதான்.  கவனப் பிழை.  ஒரு பக்கத்தில் வேலையையும் மறுபக்கத்தில் இங்கேயும் மாற்றி மாற்றி செய்துகொண்டிருந்தால் தவறு ஏற்பட்டுவிடுகிறது.  இருந்தாலும் தப்பு தப்புதான்.  சுட்டியதற்கு நன்றி சொக்கன்.
Message has been deleted

N. Ganesan

unread,
Sep 6, 2013, 10:22:58 AM9/6/13
to santhav...@googlegroups.com, thami...@googlegroups.com
On Thursday, September 5, 2013 10:43:44 AM UTC-7, DEV RAJ wrote:
ஆகும் - ஆம்
போகும் - போம்


இவை போன்றவற்றின் தாது ஓரெழுத்துநெடில்.

ஆ- என்னும் தாதில் பிறப்பவை: ஆம்:ஆகும்.
போ -> போம்:போகும்
சா -> சாம்:சாகும்.
வே -> வேம்:வேகும்.
நோ -> நோம்:நோகும்
ஈ -> ஈம்:ஈகும்

ஓரெழுத்துநெடிற்பின் கப்பிரத்தியம் சேரும். சேராமலும் இயங்கும்.

நா. கணேசன்
 
வேகும் - வேம்: 


தொடர்பான பழைய மடலாடல் ஒன்று:

On Tuesday, September 3, 2013 7:00:11 PM UTC-7, வேந்தன் அரசு wrote:



3 செப்டம்பர், 2013 12:11 AM அன்று, Bhuvan Vellore <bhuvane...@gmail.com> எழுதியது:
அன்புடையோரே, வணக்கம். 

ஆயம் என்ற சொல்லுக்கு சங்கம், குழுமம், conclave of illustrious/learned personages என்ற பொருள் உண்டு. எண்பேராயம் என்ற சொல் அந்தப் பொருளில் உண்டு அல்லவா?

ஆக கற்றோர் கூடிய ஆயத்தில் அறிஞன் எனப் போற்றப்படுபவன் சாதாரணமாக அறிந்திருக்க வேண்டிய கலைகள் அறுபத்திநான்கு.
வாத்ஸ்யாயனர் தந்த காமசூத்திரத்திலும் பொது இடங்களில், மக்கள் கூட்டங்களில் விரும்பப்படுபவன் அறிந்திருக்க வேண்டிய கலைகள் அறுபத்தி நான்கு என்று வரும்.

ஆக, ஆயத்தில் (கற்றோர் மத்தியில்) accomplished persons அறிந்திருக்கும் கலைகளாக அங்கீகரிக்கப்பட்ட கலைகள் அறுபத்தி நான்கு எனக் கொள்ளலாம் அல்லவா?

Perhaps, this term was coined to collectively represent those arts expected to be mastered by those present in an assembly of learned people.

PhD படிக்க coursework பண்ணவேண்டும். அதை PhDக்கான coursework என்று சொல்லாமல் PhD coursework என்று சொல்கிறோமல்லவா? அது போல ஆயத்துக்கான கலைகள் என்பதை ஆய கலைகள் என்று சொல்கிறோம் போலும்.


வேந்தன்> ஆயக்கலைகள் என்றால் நீங்க சொல்லுவது பொருந்தலாம்

அவர்கள் ஆய கலைகள் என்றுதான் கேட்டார்கள்


ஆ- என்னும் தாது தரும் ஆய (பொருள்: ஆகிய) என்னும் சொல் 
‘ஆய கலைகள் 64’ என்னும் கம்பர் பாடிய கடவுள் வாழ்த்தில்.
இது வினைச்சொல்.

பெயர்ச்சொல் ஆயம் என்றால் ஆயக்கலைகள் என்று நீங்கள்
சொல்வதுபோல் ஆகணும்.

இதற்கு சிறந்த உதாரணங்கள் சமண இலக்கியங்களில் இருந்து
பானுகுமார் எழுதியுள்ளார். வள்ளுவர் குறளில் ஆபயன் = ஆகின்ற பயன் = விளையுள் (மகசூல்).
இளங்கோ அடிகளின் சிலம்பில், ஆப்பயன் = ஆனைந்து.  (ஆவின் பால் முதலியன)

குறள் உரை மாறுபாடு பரிமேலகழரால் நேர்வது இந்த ஒற்று இல்லாமையை அவர் கண்டுகொள்ளாததால் 
தான். ஆப்பயன், ஆபயன் - மாறாட்டு பற்றி விரிவாக குழும மடல்களில் இருக்கிறது.

ஆம்: ஆகும், ஆய:ஆகிய - இந்த க சேரும் கப்பிரத்தியம்
பாலன்: பாலகன், தீபா:தீபிகா என்று வடமொழியில் இயங்குகிறதா?

நா. கணேசன்

Balasubramanian N.

unread,
Sep 7, 2013, 2:23:26 PM9/7/13
to santhav...@googlegroups.com

"ஆம் -ஆகும், ஆய-ஆகிய" – வுக்கும்

 "பால-பாலக, தீபா - தீபிகா" வுக்கும் இடையே தொடர்பே இல்லை.

 

பின்னது, பெயர்ச்சொல்லுடன் (அ)க / (இ)கா விகுதிசேர்க்கும் வடமொழியிலக்கணம்.

 

முந்தையது "ஆ" எனும் வினைச்சொல் வேரின் "ஆகு" எனும் மாற்றுருவத்தால் விளைவதாகும்:- ஆ- ஆகிற but ஆகிய/ஆய ஆகும்/ஆம் ஆகாது ஆகட்டும் ஆவன.

 

மேலும் இவ்வகையில்: போ => போகிற, போகும், போகாது, போயின, போந்த, போன:  சா:- சாகிற, சாகாத, சாவு:

வே வேகிற, வேகும் வெந்த :  

நோ => நோகிற, நோகும், நொந்த
 


2013/9/6 N. Ganesan <naa.g...@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

Reply all
Reply to author
Forward
0 new messages