தினமணி கவிதைமணியில் “திருமணம்” பற்றி நான் எழுதிய கவிதை பிரசுரமாகியுள்ளது
கவிதை இதோ -
இருமனம் இணைந்ததை
இருமனச் சொந்தங்கள்
ஊருக்கே அறிவித்தல்
திருமணம்
அன்பெனும் பெருவெளியில்
அச்சங்கள் ஏதுமின்றி
ஈருடல் தொலைதல்
திருமணம்
தாயாகிக் கனியவும்
தந்தையாகி முதிரவும்
ஈருயிர் தயாராதல்
திருமணம்
ஒருவர் குறையை
இன்னொருவர் அறிந்து
குறைக்க முயலுதல்
திருமணம்
ஒருவர் நிறையை
இன்னொருவர் மதித்து
கூட்ட நினைத்தல்
திருமணம்
ஒருவர் அருமையை
இன்னொருவர் புரிந்து
சேர்ந்து வாழ்தல்
திருமணம்
ஒருவர் வெறுமையை
இன்னொருவர் உணர்ந்து
இட்டு நிரப்புதல்
திருமணம்
ஒருவர் சோகங்கண்டு
இன்னொருவர் கண்கள்
கண்ணீர் உகுத்தல்
திருமணம்
ஒருவர் இன்பங்கண்டு
இன்னொருவர் இதழ்கள்
புன்னகை மிகுத்தல்
திருமணம்
தோற்றம் பலநூறு
மாற்றம் கண்டாலும்
அன்பைப் பொழிதல்
திருமணம்
உயிர் இருக்கையில்
இன்னோர் உயிரை
இரவலாய்ப் பெறுதல்
திருமணம்
இதயம் இரண்டாகி
விட்டுக் கொடுத்தலில்
இன்பம் காணுதல்
திருமணம்
வயது முதிர்ந்தாலும்
ஒருவர் மீதொருவர்
பைத்தியமாய் இருத்தல்
திருமணம்
நீ இன்னொருவர்
சொந்தமானாலும் நீ
எப்போதும் நீயாயிருத்தல்
திருமணம்
சுட்டி இதோ --> http://www.dinamani.com/…/%E0%AE%A4%E0%A…/article3106909.ece
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
பெற்ற மனம்
பெண்ணின் மணமென்னும் போதினிலே – அந்தப்
பெற்றோரின் உள்ளம் கலங்குவதேன்?
கண்ணின் மணியாய் வளர்ந்தவளோ – தாலி
கட்டி யவனுடன் செல்வதனால்.
மைந்தன் திருமணம் ஆனபின்பும் – தாய்
தந்தையர் நெஞ்சம் கலங்குவதேன்?
மந்திரம் போட்டவள் சொற்படியே – பிள்ளை
வாழ்ந்திடச் செல்லும் தனிக்குடியால்.
உள்ளம் இரண்டையும் ஒன்றிணைக்கும் – இந்த
உன்னதக் கல்யாண தீபவொளி
தள்ளாடும் பெற்றோரை ஆழ்த்திடுமோ – ஒரு
தாபத் தனிமை இருட்டினிலே ?
-பசுபதி, கனடா