அத்தினபுரத்தில் உள்ள பெரிய மாளிகைகளுக்குச் செல்லாமல் அங்குள்ள விதுரனின் எளிய மனைக்குச் செல்லுமாறு சூர்தாஸ் உத்தவருக்கு ஒரு பாடலில் சொல்லும் கருத்தையொட்டி, மனத்தை விளித்து எழுதிய வெண்பா :
காணாய்நீ அன்பில் கனிந்து!
அத்தினபு ரத்தில் அழகாய் அரண்மனைகள்
மெத்தவும் பொன்னாய் வியக்கவைக்கும் - அத்தனையும்
வீணே, மனமே! விதுரன் அவன்குடில்
காணாய்நீ அன்பில் கனிந்து!
-- தில்லைவேந்தன்.
...